என் மலர்
நீங்கள் தேடியது "program"
- இரும்புதலை ஊராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி.
- ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி ஊழியர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கினார்.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், இரும்புதலை ஊராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சீருடைகள் மற்றும் புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர் மங்கையர்கரசி, ஊராட்சி செயலாளர் ஜெகத்குரு மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஓஎச்டி ஆப்ரேட்டர்கள், மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- நீட் மற்றும் ஐ.ஐ.டி.க்கான பயிற்சி வகுப்பு ஒப்பந்த நிகழ்ச்சி நடந்தது.
- சிவகாசி மற்றும் சுற்றியுள்ள மாணவர்கள் பயன் பெறுவார்கள்.
சிவகாசி
சிவகாசி அரசன் மாடல் பள்ளியில் நீட் மற்றும் ஐ.ஐ.டி.க்கான பயிற்சி வகுப்பு ஒப்பந்த நிகழ்ச்சி நடந்தது. அரசன் மாடல் பள்ளியும், தனியார் நிறுவனமும் இணைந்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பள்ளி தாளாளர் அசோகன் எம்.எல்.ஏ. முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் அறிவரசு, தனியார் நிறுவன அதிகாரிகள் தினேஷ்குமார், ரவி, சுப்பிரமணியன், சிவஜோதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அசோகன் எம்.எல்.ஏ. பேசுகையில், இந்த ஒப்பந்தம் மூலம் இனி வரும் காலங்களில் அரசன் மாடல் பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாமல், சிவகாசி மற்றும் சிவகாசி மற்றும் சுற்றியுள்ள மாணவர்கள் பயன் பெறுவார்கள்.
- மீனவ கிராமங்களில் இருந்து எடுத்துவரப்படும் சீர்வரிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
- மீன்வளம் பெருக வேண்டிய மீனவர்களுக்கு கடலில் எந்த ஆபத்து வரக்கூடாது.
நாகப்பட்டினம்:
உலக புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் என்றழைக்கப்படும் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் தர்கா, 466 வது ஆண்டு கந்துாரி விழா, கடந்த 24 ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. 14 நாட்கள் நடைபெற்ற கந்தூரி விழாவில் சந்தனம் அரைக்கும் வைபவமும் அதனைத் தொடர்ந்து கடந்த2 ம் தேதி சந்தனக்கூடு விழாவும், 3:ம் தேதி அதிகாலை பெரிய ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெற்றது.
இதில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து கந்தூரி விழாவின் கடைசி நாளான நேற்று கொடி இறக்கப்பட்டு கந்தூரி விழா நிறைவுப் பெற்றது. இந்த நிலையில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக 400 ஆண்டுகளாக பாரம்பரிய முறைப்படி மீனவ கிராமங்களில் இருந்து எடுத்துவரப்படும் சீர்வரிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
பழம், இனிப்பு மலர்களை பட்டினச்சேரி கிராம மீனவ பஞ்சாயத்தர்கள் தாம்பூலத்தில் வைத்து மேளதாளத்துடன் சீர்வரிசையாக எடுத்து வந்தனர். அவர்களை அவர்களை நாகூர் தர்கா நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து மீன்வளம் பெருக வேண்டிய மீனவர்களுக்கு கடலில் எந்த ஆபத்து வரக்கூடாது என்றும் துவா ஓதப்பட்டது. நாகூர் ஆண்டவர் காலடியில் மலர்கள் தூவி ஆயிரந்தோனி என மீனவ மக்கள் பிரார்தனை செய்தனர்.
இது குறித்து நாகூர் தர்கா நிர்வாகி கூறும் போது நாகூர் ஆண்டவரை முதன்முதலாக நாகூருக்கு வரவழைத்து தங்குவதற்கு இடம் கொடுத்து அரவணைத்தது மீனவ மக்கள் என்றும் அதனை போற்றும் விதமாகவும் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடை பெறுவதாக தெரிவித்தார். நாகூர் தர்காவில் இந்து முறைப்படி மீனவ மக்கள் தாம்பூல சீர்வரிசை எடுத்து வந்து பிரார்த்தனையில் ஈடுப்பட்டது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும் இந்து, முஸ்லிம் ஒற்றுமையை வலியுத்தும் விதமாகவும் இருந்தது அனைவரும் மத்தியிலும் வரவேற்பையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
- மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
- நிர்வாக அலுவலர் ஜெயசுதா விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி புதுநகரில் உள்ள அப்துல் கலாம் பப்ளிக் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி மற்றும் 74-வது குடியரசு தினவிழா நடந்தது. பள்ளியின் சேர்மன் முகைதீன் முசாபர் அலி தலைமை தாங்கினார்.
மலேசியா தொழில் அதிபர் சீனிவாசன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பேசினார். பள்ளி வளாகத்தில் சீனிவாசன் மற்றும் குடும்பத்தினர் இணைந்து மரக்கன்றுகளை நட்டனர். பள்ளி முதல்வர் ஜேம்ஸ் ஜெயராஜ் வரவேற்றார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. துணை முதல்வர்கள் கவிதா, அனில் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பிரிட்டோ நன்றி கூறினார்.
நிர்வாக அலுவலர் ஜெயசுதா விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
- சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் மர கன்றுகள் நடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- தெற்கு மவுண்ட் ரோட்டில் உள்ள ஓடையில் அமலை செடிகள் அகற்றப்பட்டது.
நெல்லை:
நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நீர்நிலைகள் மற்றும் மழை நீர் வடிகால்கள் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணியை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் நெல்லை மாநகராட்சி டவுன் மண்டலத்துக்கு உட்பட்ட 22-வது வார்டு அபிராமி நகர் பூங்காவில் கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின் பேரில் உதவி கமிஷனர் வெங்கட்ராமன் மேற்பார்வையில் "பொது இடங்களில் பெருமளவில் மரம் நடுதல்" என்ற தலைப்பில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் மர கன்றுகள் நடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர், பரப்புரையாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். மேலும் அந்த வார்டு பகுதியில் வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டு பூங்காவில் நடப்பட்டுள்ள 5 செடிகளுக்கும் தினமும் தண்ணீர் ஊற்றி பராமரிப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து தெற்கு மவுண்ட் ரோட்டில் உள்ள ஓடையில் படர்ந்திருந்த அமலை செடிகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. சிறிய பொக்லைன் மூலமாக நடந்த இப்பணியின் மூலம் சுமார் 3 டன் குப்பைகள் அகற்றப்பட்டது.
- ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடந்தது
- சுத்தம் மற்றும் பாதுகாப்பு குறித்து அறிவுறுத்தல்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும் இன்னர்வீல் ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்திய உயர்கல்வி வகுப்பு மாணவிகளுக்கான "சுத்தம் மற்றும் பாதுகாப்பு" விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவை பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் கவிஞர் தங்கம் மூர்த்தி சிறப்புரையாற்றி தொடங்கி வைத்தார். பெண் குழந்தைகளுக்கு சுத்தம் மற்றும் பாதுகாப்பு பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியின் உதவி விரிவுரையாளர் டாக்டர் தமிழரசி விளக்கங்கள் மற்றும் மாணவிகளின் பல்வேறு விதமான கேள்விகளுக்கு பதிலளித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்நிகழ்வில் இன்னர்வீல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் அருணோதயம் ஜெயராமன் மற்றும் செயலாளர் சாந்தி சுப்ரமணியன் முன்னிலை வகிக்க முன்னாள் இன்னர்வீல் சங்கத்தின் தலைவர் அனுராதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னதாக பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல் வரவேற்புரை வழங்க ஆசிரியர் உதயகுமார் நன்றி கூறினார்.
- மௌண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளி ஆசிரியர் முதலிடம்
- 28 பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
புதுக்கோட்டை,
காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் சிக்ஷா திட்டத்தில் மாநில அளவில் சோலார் எனர்ஜி மெட்டிரியல் பற்றி அறிவியல் ஆராய்ச்சி துறையில் நிகழும் முன்னேற்றங்கள், நடைபெற்று வரும் ஆராய்ச்சிகள் பற்றி இரண்டு நாட்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது. மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் சிக்ஷா திட்டத்தில் பள்ளி ஆசிரியர் களுக்கு இடையே சோலார் எனர்ஜி மெட்டிரியல் பற்றி வினா விடை போட்டிகளும் நடத்தப்பட்டது . இதில் மாநில அளவில் 28 பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் மௌண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளி ஆசிரியர் சி. மாணிக்கம் ரெட்டி கலந்து கொண்டு வினா விடை போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற ஆசிரியர் அவர்களை பள்ளியின் தலைவர் டாக்டர் ஜோனத்தன் ஜெயபரதன் , இணைத் தலைவர் ஏஞ்சலின் ஜோனத்தன், பள்ளி முதல் வர் டாக்டர் ஜலஜா குமாரி ஆகியோர் பாராட்டினார்கள்.
- கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்.
- மன்னர் காலத்து ஓவிய பலகை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை சமஸ்தானம் தொண்டைமான் மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டது. அவர்களது காலத்தில் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டன. அவை தற்போது அரசு அலுவலகங்களாக பல இடங்களில் இயங்கி வருகின்றன. புதுக்கோட்டையில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் அரசு அலுவலகங்கள் இயங்கி வந்தன.இதனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடமாற்றம் செய்த போது செட்டில்மென்ட் அலுவலகத்தில் இருந்து மன்னர் காலத்து பழமையான செப்பேடு, மன்னர் அரசின் முத்திரை பதித்த ஓவிய பலகை ஆகியவை எடுக்கப்பட்டது. அதனை அப்போது மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். அந்த 2 அரிய பொருட்களையும் கலெக்டர் கவிதாராமு புதுக்கோட்டை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கிரிசாமியிடம் வழங்கினார். அப்போது ெதால்லியல் ஆய்வு கள தலைவரும், ஆய்வாளருமான கரூர் ராஜேந்திரன் உடனிருந்தார்.
- திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் டி.டி. காமராஜ் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
- 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தாராபுரம்:
தாராபுரத்தில் இன்று அண்ணா நினைவு நாளை ஒட்டி அவரது உருவப்படத்திற்குஅ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் டி.டி. காமராஜ் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சிக்கு சன்சீட்ஸ் ஜவகர் தலைமை தாங்கினார். தண்டபாணி, ஜாபர் சாதிக் ,பாவா, அம்மன் பாலு, மகேஷ் , மைதீன் , செய்யது,சுதாரவிஉட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
- ஆஸ்திரேலிய தமிழ் நண்பர்கள் உதவி
- தெருக்களில் குப்பைகள் கொட்ட கூடாது என்று அறிவுறுத்தல்
கந்தர்வகோட்டை,
கந்தர்வகோட்டை ஊராட்சியில் குப்பைகளை சேகரித்து தூய்மை காவலர்களிடம் வழங்குவதற்கு ஏதுவாக ஆஸ்திரேலியா நாட்டில் வாழும் தமிழக நண்பர்கள் குழு சார்பில் பிளாஸ்டிக் கூடைகள் வழங்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி யாதவர் தெருவில் 50 குடும்பங்களுக்கு இல்லங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை தூய்மை காவலர்களிடம் வழங்குவதற்கு ஏதுவாக, ஆஸ்திரேலியா நாட்டின் தமிழக நண்பர் குழு சார்பில் சுமார் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் கூடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கூடைகளை திமுக நகரச் செயலாளர் ராஜா குடும்பத் தலைவிகளிடம் வழங்கி குப்பைகளை சாலைகளிலோ அல்லது பொது இடத்தில் கொட்டாமல், கூடைகளில் சேகரித்து தெருவிற்கு வாகனங்களில் வரும் தூய்மை காவலர்களிடம் வழங்கி ஊராட்சியை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர் வினோதா சாமிநாதன், சமூக ஆர்வலர் அறம் வளர் நம்பி, பாமக ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் இலவச மருத்துவ முகாம், உதவி உபகரணங்கள், தேசிய அடையாள அட்டை வழங்கும் விழா மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் பன்னீர்செல்வம், மாற்றுத்திறனாளிகள் நல மாவட்ட அலுவலர் திருமுருக தட்சணாமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை) ஜெயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் பள்ளிக்கல்வி ஆய்வாளர் செல்வகுமார், வட்டார கல்வி அலுவலர்கள் மதலைராஜ், ராசாத்தி, அரசு மாதிரி பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார், பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியை எழிலரசி மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள், மருத்துவர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
- தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
- உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம் வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூா்:
தஞ்சாவூர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் மாபெரும் தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.
அப்போது அவர் பேசியதாவது :-
தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி பல்வேறு கல்லூரி சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முன்னிலையில் நடை பெற்றது.
இந்நிகழ்ச்சியில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் தமிழ்நாடு நவீனமடைந்த கதை என்ற தலைப்பிலும், கவிஞர் நந்தலாலா அகப்பொறியின் திறவுகோல்- கேள்விகளின் சிறப்பு என்ற தலைப்பிலும் சொற்பொழிவு ஆற்றினா ர்கள்.
உலகின் பல்வேறு பகுதிகளில் செழித்தோங்கிய பண்பாடுகளில் தமிழர் பண்பாடு மிகவும் தொன்மையானது.
நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு, குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவதென்பது ஆரோக்கியமான எதிர்காலச் சமூகக் கட்டமைப்பின் ஒரு முக்கியமான பகுதியாகும்.
எனவே தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழர் மரபும்- நாகரிகமும் தமிழ்நாட்டில் சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூகப் பொருளாதார முன்னேற்றம், திசைதோறும் திராவிடம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தோற்றமும் தொழில் முனைவுக்கான முன்னெடுப்புகள், வளரச்சியும், கணினி தமிழ் வளர்ச்சியும் தமிழ்நாட்டில் சுற்றுலா வாய்ப்புகள், நூற்றாண்டு கண்ட ஊடகங்களின் சவால்களும், கல்விப் புரட்சி மற்றும் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்படுத்தும் முறைகள் ஆகிய தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
ஆகவே நீங்கள் அனைவரும் தமிழின் பெருமைகள் கேட்டறிந்தும், மேலும், இந்நிகழ்ச்சியில் உங்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம் வழங்க ப்பட்டுள்ளது.இதனை மாணவர்கள் தவறாது படித்து பயன் பெறுவதோடு மட்டும ல்லாமல் சக மாணவர்கள் மற்றும் நண்பர்களிடமும் கொண்டு சேர்த்து விழிப்புணர்வு உள்ள சமூகத்தை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கவிஞர்கள் மனுஷ்யபுத்திரன், நந்தலாலா, முனைவர் செந்தமிழ் குமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இலக்கியா, தாசில்தார் சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.