என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Race"

    • மாணவர்களுக்கு அழைப்பு
    • கலெக்டர் தகவல்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டிகள் வருகிற 7-ந்தேதி காலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.

    இந்த போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள்மற்றும் பொதுமக்கள் இன்று முதல் 7 -ந்தேதி காலை போட்டி தொடங்குவதற்குமுன்பு வரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலகத்தில் வழங்கப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பிறப்பு சான்று, ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை இணைத்து அதே அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். குறித்த நேரத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

    25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிமுதல் மாவட்ட விளையாட்டு அரங்கம் வரையிலும், 17 வயது முதல் 25 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்குகாஞ்சி ரோடு சந்திப்பு முதல் அவலூர்பேட்டை ரோடு பிரிவு வழியாக விளையாட்டு அரங்கம் வரையிலும், 25 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 17 வயது முதல் 25 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு திருவண்ணாமலை பஸ் நிலையம் முதல் (அவலூர்பேட்டை ரோடு பிரிவு) மாவட்ட விளையாட்டு அரங்கம் வரையிலும்போட்டிகள் நடைபெறும்.

    போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 5 ஆயிரம் ரூபாயும், 2-வது பரிசாக 3 ஆயிரம் ரூபாயும், 3-வது பரிசாக 2 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். 4 முதல் 10 ஆம் இடம் வரை பிடிக்கும் வீரர்களுக்கு தலா ரூ.1000 பரிசாக வழங்கப்படும்.

    போட்டிகள் குறித்து கூடுதல் விவரங்களை பெற 74017 03484 என்ற எண்ணில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரை தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

    • காவலர்களிடம் தகவல் தெரிவித்த பிறகே இவ்வாறு செய்தேன்.
    • காரில் வந்து பரிசு பெற்ற சம்பவம் சமூக பேசுபொருளாகி இருக்கிறது.

    பிரிட்டனில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் நண்பரின் காரை பயன்படுத்தியதை ஒப்புக்கொண்ட வீரருக்கு தடை விதிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. கடந்த ஏப்ரல் 7-ம் தேதி நடைபெற்ற 50 மைல் மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் ஜோசியா சக்ரெவ்ஸ்கி கலந்து கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்தார்.

    இந்த நிலையில், பந்தயத்தின் போது அவர் தனது நண்பரின் காரில் சிறிது தூரம் கடந்து வந்ததை ஒப்புக் கொண்டுள்ளார். ஓட்டப்பந்தயத்தின் போது தனக்கு காயம் ஏற்பட்டதால், காவலர்களிடம் தகவல் தெரிவித்த பிறகே இவ்வாறு செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

    ஓட்டப்பந்தயத்தின் போது காரில் பயணித்து வெற்றி பெற்றதற்காக இவர் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்க 12 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான உத்தரவை பிரிட்டனை சேர்ந்த விளையாட்டு ஒழுங்குமுறை கூட்டமைப்பு பிறப்பித்து இருக்கிறது. ஓட்டப் பந்தயத்தின் போது காரில் வந்து பரிசு பெற்ற சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. 

    • புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வெட்டிவயல் கருங்குழிகாடு கிராமத்தில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
    • இதில் புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்திலிருந்து 87 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

    அறந்தாங்கி

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வெட்டிவயல் கருங்குழிகாடு கிராமத்தில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

    இதில் புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்திலிருந்து 87 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

    3 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் பெரியமாடு பிரிவில் 13 ஜோடி மாடுகளும், நடுமாடு பிரிவில் 34 ஜோடி மாடுகளும், பூஞ்சிட்டு பிரிவில் 40 ஜோடி மாடுகளும் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.

    போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுகளுக்கு 2 லட்சம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது.

    மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப் பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

    சாலையின் இருபுறத்திலும் ரசிகர்கள் திரண்டிருந்து போட்டியை கண்டு ரசித்தனர்.அறந்தாங்கி காவல்த்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • ஆண்கள் பிரிவில் 16 அணிகளும், பெண்கள் பிரிவில் 12 அணிகளும் கலந்து கொள்கின்றன.
    • காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் நடைபெறுகிறது.

    சென்னை:

    மெரீனா பீச் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் இந்தியன் பீச் வாலிபால் புரோ டூர் பந்தயம் சென்னையில் நடத்தப்படுகிறது.

    அகில இந்திய அளவிலான பீச் வாலிபால் போட்டியான இந்த போட்டிகள் நாளை (8-ந் தேதி) முதல் 10-ந் தேதி வரை நீலாங்கரை கடற்கரையில் நடக்கிறது.

    இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, புதுச்சேரி, கோவா, டாமன் டையூ ஆகிய மாநிலங்களில் இருந்து 28 அணிகள் பங்கேற்கின்றன. ஆண்கள் பிரிவில் 16 அணிகளும், பெண்கள் பிரிவில் 12 அணிகளும் கலந்து கொள்கின்றன.

    லீக் மற்றும் நாக் அவுட் முறையில் பீச் வாலிபால் போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் ஆண்களுக்கான பரிசு தொகை ரூ.1 லட்சம் ஆகும். பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்படுகிறது. போட்டிகள் பகலிலும், இரவிலும் நடக்கிறது. காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் நடைபெறு கிறது.

    மேற்கண்ட தகவலை மெரீனா பீச் ஸ்போர்ட்ஸ் கிளப் பொதுச் செயலாளர் ஏ.ஜே.மார்ட்டின் சுதாகர் தெரிவித்துள்ளார்.

    • ஒரு ரூபாய் கட்டினால் 20 ரூபாய் வழங்குவதாக தெரிவித்து இருந்தனர்.
    • பவன் கல்யாணை ஆதரித்வர்கள் கோடிக்கணக்கில் பணங்களை அள்ளிச் சென்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி 100 முதல் 120 இடங்களில் வெற்றி பெறுவார் என புரோக்கர்கள் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பந்தயம் கட்டினர்.

    இதற்கு ஒரு ரூபாய் கட்டினால் 20 ரூபாய் வழங்குவதாக தெரிவித்து இருந்தனர்.

    50 முதல் 60 இடங்களை பெறுவார் எனவும் 68 முதல் 78 இடங்கள் வருவார் என மொத்தம் ரூ. 2 ஆயிரம் கோடியை தாண்டி பந்தயம் சென்றது. ஆனால் பா.ஜ.க. காங்கிரஸ் கட்சிகளின் வெற்றி தோல்வி குறித்து யாரும் பந்தயம் கட்ட வில்லை.

    இதேபோல் பிதாபுரத்தில் பவன் கல்யாண் வெற்றி பெறுவார் எனவும் தோல்வி அடைவார் எனவும் ரூ. 200 கோடிக்கு மேல் பந்தயம் கட்டினா். பவன் கல்யாணை ஆதரித்து பணம் கட்டியவர்கள் கோடிக்கணக்கில் பணங்களை அள்ளிச் சென்றனர்.

    ஆனால் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை நம்பி பணம் கட்டியவர்கள் ரூ. 2 ஆயிரம் கோடி வரை பணத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

    • அஜித் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தின் நடித்து வருகிறார்.
    • ஆசிய ஃபார்முலா BMW சாம்பியன்ஷிப் ஆகிய ரேஸிங் போட்டியில் கலந்துள்ளார்.

    நடிகர் அஜித் நடிப்பு மட்டும் அல்லாமல் அவருக்கு கார் மற்றும் பைக் ரேசிங்கில் மிகப்பெரியளவில் ஆர்வம் இருக்கிறது என நமக்கு தெரிந்த விஷயமாகும். திரைப்படம் நடித்து அதன் இடையே பைக்கை எடுத்துக் கொண்டு நண்பர்களுடன் அவருக்கு பிடித்த இடத்திற்கு செல்லும் பழக்கமுடையர் நடிகர் அஜித் குமார்.

    இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் ரேஸ் டிராக்கில் களம் இறங்கப் போகிறார். தி ஃபெடரேஷன் ஆஃப் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆஃப் இந்தியா அஜித் 2024 ஆம் ஆண்டு நடக்க இருக்க யுரோப்பியன் ஜிடி4 சாம்பியன்ஷிப் ரேஸிங் ஈவண்டின் கலந்துக்கொள்ள திட்டமிட்டுள்ளார் என தெரிவித்துள்ளனர்.

    அஜித் குமார் இதற்குமுன் நடந்த தேசிய மோட்டார்சைக்கிள் ரேஸிங் சாம்பியன்ஷிப் மற்றும் பிரிட்டிஷ் ஃபார்முலா 3 சாம்பியன்ஷிப், ஆசிய ஃபார்முலா BMW சாம்பியன்ஷிப் ஆகிய ரேஸிங் போட்டியில் கலந்துள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.

    அஜித் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தின் நடித்து வருகிறார். விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இப்படத்த்ல் திரிஷா, அர்ஜூன், ரெஜினா மற்றும் ஆரவ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தாண்டு இறுதியில் திரைப்படம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தஞ்சாவூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்களுக்கு மட்டும் ஆட்கள் தேர்வு நடைபெறும்.
    • தொடர்ந்து 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் நடத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 35 பணியிடங்களுக்கு (34 ஆண் மற்றும் 1 பெண்) தஞ்சாவூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட வர்களுக்கு மட்டும் ஆட்கள் தேர்வு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன.

    அதன்படி இன்று தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா அறிவுறுத்தலின்பேரில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெ ற்றது.

    இதற்கு ஏ.டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன், நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, ஊர்க்காவல் படை துணை மண்டலத் தளபதி டாக்டர் மங்களேஸ்வரி, ஊர்க்காவல் படை ஏரியா கமாண்டர் சுரேஷ், ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கி ஆட்கள் தேர்வு நடத்தினர்.

    இத்தேர்வில் தஞ்சாவூர், கும்பகோணம். பட்டுக்கோட்டை பகுதிகளை சேர்ந்த 324 ஆண்கள், 1 பெண் என மொத்தம் 325 பேர் கலந்து கொண்டனர்.

    அவர்களின் சான்றி தழ்கள் சரிபார்க்கப்பட்டன.

    இதையடுத்து உயரம், மா ர்பளவு சரிபார்க்கப்பட்டது.

    தொடர்ந்து 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் நடத்தப்பட்டது.

    இந்த தேர்வுகள் அனை த்தும் முடிந்த பின்னர் இதிலிருந்து 35 பேர் ஊர் காவல் படைக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    தேர்வு செய்யப்படும் ஊர் காவல் படையினர் போலீசாருடன் இணைந்து பணியாற்றுவர்.

    • சிங்கம்புணரியில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • சிவகங்கை, தேனி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 51 ஜோடி மாடுகள் கலந்துகொண்டன.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் இருந்து திருப்பத்தூர் சாலையில் இளங்கோ தேவர் நினைவு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இதில் சிவகங்கை, தேனி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 51 ஜோடி மாடுகள் கலந்துகொண்டன.

    பெரிய மாடு 19 ஜோடிகள் ஒரு பிரிவாகவும் சிறிய மாடு 32 ஜோடிகள் 2 பிரிவுகளாகவும் மொத்தம் 3 பந்தயங்களாக நடத்தப்பட்டன.

    பெரிய மாடு பந்தய எல்லையாக சிங்கம்புணரியில் இருந்து சிலநீர்பட்டி பாலம் வரை 8 மைல் தூரமும், சிறிய மாடு பந்தய எல்லையாக சிங்கம்புணரியில் இருந்து எஸ்.வி.மங்கலம் வரை 6 மைல் தூரமும் நிர்ணம் செய்யப்பட்டு இருந்தது.

    எல்லையை நோக்கி பெரிய மற்றும சிறிய மாடுகள் சீறிப்பாய்ந்து சென்றன. பந்தயத்தை சிங்கம்புணரி, காளாப்பூர், எஸ்.வி.மங்கலம் பொதுமக்கள் அதிகாலையிலேயே சாலையின் இருபுறமும் நின்று கண்டு ரசித்தனர்.

    பந்தயத்தில் வெற்றிபெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு இளங்கோ தேவர் நினைவுகுழு மற்றும் வண்டிபந்தய இளைஞர்கள் குழு சார்பில் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

    பெரிய மாடுகளுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ. 12ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.9 ஆயிரம், 4-ம் பரிசாக ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டது.

    சின்ன மாடு பந்தயத்தில் 2 பிரிவுகளாக பந்தயம் நடந்த காரணத்தால் முதல் பரிசு ரூ. 12 ஆயிரத்தை 2 பேருக்கும், 2-ம் பரிசு ரூ.9ஆயிரம் 2 பேருக்கும், 3-ம் பரிசு ரூ.6 ஆயிரம் 2 பேருக்கும், 4-ம் பரிசு ரூ.4 ஆயிரம் 2 பேருக்கும் என மொத்தம் 12 பேருக்கு வழங்கப்பட்டது.

    • மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடந்தது.
    • விழாவிற்கான ஏற்பாடு களை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். கீழச்சேவல் பட்டி போலீசார் பாது காப்பு ஏற்பாடுகளை செய்தி ருந்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்ட திருப்பத்தூர் தாலுகா அருகே உள்ள விராமதி ஊராட்சியில் கோவில் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பந்தையை மாடுகளுடன் சாரதிகளும் பங்கேற்றனர். இதில் பெரிய மாடு, நடுமாடு, சிறிய மாடு, பந்தயம் என 3 பந்தயமாக விராமதியிலிருந்து நெடுமறம் ஊர் எல்லை வரை சென்று திரும்ப வேண்டும் என விழா குழு கமிட்டியிணரால் நிர்ணயம் செய்யப்பட்டது.

    3 கட்டங்களாக நடத்த ப்பட்ட எல்கை பந்தயத்தில் பெரிய மாடுகள் பங்கேற்ற போட்டியில் முதல் பரிசினை நல்லாங்குடி அமராவதி புதூர் முத்தையா சேர்வை, வேலு கிருஷ்ணன் அம்பலம் ஆகியோர் பெற்றனர்.2-ம் பரிசை கானாடுகாத்தான் ஆர்.எஸ். கோழி கடையும், 3-ம் பரிசை பாஸ்கரன் மகேஸ்வரியும் ,4-ம் பரிசை மாவூர் ஏஆர்.ராமச்சந்திரன் பெற்றனர்.

    நடுமாடு முதல் பரிசு பரளி யாழினி பெரிய கருப்பன், 2-ம் பரிசு நல்லாங்குடி அமராவதி புதூர் வேலுகிருஷ்ணன் அம்பலம், முத்தையா சேர்வை, 3-ம் பரிசு நெய் வாசல் சாத்தி க்கோட்டை பெரியசாமி கருப்பையா சேர்வை, 4-ம் பரிசு காரைக்குடி மகிழ்மித்திரன் ஆகியோர் பெற்றனர். சின்ன மாடு பந்தயத்தில் முதல் பரிசு நல்லாம்பட்டி ஆர்விபி நித்திஷ் மங்கை, 2-ம் பரிசு ஓனாங்குடி எல்லா புகழும் இறைவனுக்கே அப்துல்லா, ஆர்.ஆர். சின்னம்மாள் வளையவயல், 3-ம் பரிசு கம்பம் வக்கீல் போது ராஜா, கூடலூர் அச்சரம் பட்டி மாதவ கோனார், நான்காம் பரிசு பில்லமங்கலம் வாசுதேவன் ஆகியோர் பெற்றனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். கீழச்சேவல் பட்டி போலீசார் பாது காப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • மாடு, குதிரை வண்டி எல்கை பந்தையம் நடைபெற்றது
    • சந்தனக்காப்பு உற்சவத்தை முன்னிட்டு

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா எட்டியத்தளி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீரமுனி ஆண்டவர் ஆலயத்தில் ஆண்டுதோறும் சந்தனக்காப்பு உற்சவத்தை முன்னிட்டு மாட்டு வண்டி குதிரை வண்டி எல்கை பந்தையம் நடைபெறுவது வழக்கம்.

    நேற்று நடைபெற்ற மாட்டுவண்டி, குதிரைவண்டி எல்கை பந்தையத்தில் சென்னை, கோவை, ஈரோடு, திருச்சி, தஞ்சை, சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 43 ஜோடி மாடுகள் மற்றும் 36 குதிரைகள் கலந்து கொண்டன.

    மூன்று பிரிவுகளாக நடைபெற்ற எல்கை பந்தையத்தில் நடுமாடு பிரிவில் 16 ஜோடிகளும், பூஞ்சிட்டு மாடு பிரிவில் 27 ஜோடி மாடுகளும், நடு குதிரை பிரிவில் 36 குதிரைகளும் பந்தையத்தில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. பந்தையத்தில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை பிடித்த மாடு மற்றும் குதிரைகளுக்கு ரூ.2 லட்சம் ரொக்கப்பணமும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.

    மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு, சிறப்பு பரிசு மற்றும் கேடயங்கள் கொடுத்து கெளரவிக்கப்பட்டது. பந்தையத்தைக்கான அப்பகுதியைச் சுற்றியுள்ள ஏராளமான ரசிகர்கள், பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டிருந்து கண்டு ரசித்தனர்.

    • தேவகோட்டை அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • 2 பிரிவுகளாக தேவகோட்டை- புதுவயல் சாலையில் நடைபெற்றது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே தாழையூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி முளைப்பாரி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்.

    அதேபோல் இந்த ஆண்டும் நடந்த ஆடி திருவிழாவில் அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று தினமும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு முளைக்கொட்டுதல் நடந்தது. நேற்று காலை கூத்தாடி முத்துபெரியநாயகி கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து இரவு முளைப்பாரி ஊர்வலம் அம்மன் கோவிலில் வந்தடைந்தது. இரவு கலைநிகழ்ச்சி நடந்தது. ஆடி திருவிழாவையொட்டி இன்று காலை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. 2 பிரிவுகளாக தேவகோட்டை- புதுவயல் சாலையில் நடைபெற்றது. இதில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 25 மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டுவண்டி பந்தயத்தில் முதலாவதாக தேவகோட்டை பிரசாத் மொபைல், 2-வதாக நல்லாங்குடி முத்தையா சேர்வை, 3-வதாக கல்லூரணி பாலாஜி, 4-வதாக சாத்தம்பத்தி சரவணன் மாடுகள் வெற்றி பெற்றன.சின்ன மாட்டுவண்டி பந்தயத்தில் முதலாவது காரைக்குடி கருப்பண்ண சேர்வை, 2-வதாக சாத்திக்கோட்டை கருப்பையா சேர்வை, 3-வதாக கண்டதேவி மருதுபிரதர்ஸ், 4-வதாக மயிலாடுவயல் செல்வராஜ் எஸ்.பி.பட்டணம் உமர் மாடுகள் வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற மாடுகளுக்கு மாலை, வேட்டி, துண்டுகள், ரொக்க பரிசுகள், வெற்றி கோப்பைகளும் வழங்கப்பட்டன. இந்த பந்தயத்தை சாலையின் இருபுறமும் திரளான பொதுமக்கள் கூடி நின்று கண்டுகளித்தனர்.

    • அம்பையில் மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது
    • பந்தயம் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்தது

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பையில் மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு இடங்களில் இருந்து மாட்டுவண்டி வீரர்கள் கலந்துகொண்டனர்.

    அம்பையில் உள்ள ஒரு பள்ளியில் தொடங்கி, காக்கநல்லூர் விலக்கு வரை மொத்தம் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்த இந்த பந்தயத்தில் நடுக்கல்லூர் வேதக்கோவில் தெருவை சேர்ந்த மகாராஜன் (வயது 42) என்ற வீரரும் கலந்து கொண்டு வரிசையில் நின்றார்.

    பந்தயம் தொடங்கிய சிறிது தூரத்திலேயே மகாராஜனின் மாட்டு வண்டி நிலைதடுமாறியது. இதில் அவர் கீழே விழுந்தார். கண் இமைக்கும் நேரத்தில் பின்னால் தறிக்கட்டு ஓடிய காளைகள் அவர் மீது ஏறி ஓடியது. உடனே அவரை மீட்டு அம்பை மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    ×