என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rail"

    • ரெயில்களை கண்ணாடி மூலம் கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • உலகின் மிகப்பெரிய சாதனையாக மாறும்.

    துபாய்:

    இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்லும் மக்கள் பெரும்பாலும் விமான போக்குவரத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விமானத்தில் செல்ல குறைந்தது 4 மணி நேரம் ஆகும். இரு நாடுகளுக்கும் போக்குவரத்து சேவை இன்னும் அதிகமாகவே தேவைப்படுகிறது.

    இந்தநிலையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகம்-இந்தியா இடையே கடலுக்கு அடியில் ரெயில் சேவை தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரக தேசிய ஆலோசனை குழு புதிய திட்டம் ஒன்றை பரீசிலனையில் வைத்துள்ளது. அதன்படி துபாய் மற்றும் மும்பை இடையே கடலுக்கு அடியில் செல்லும் ரெயில் பாதையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.


    இந்த ரெயில் பாதை உருவாக்கப்பட்டால் அதில் ஓடும் ரெயில் மணிக்கு 600 முதல் 1000 கி.மீ. வேகம் வரை இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    துபாயில் இருந்து 2 ஆயிரம் கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள மும்பைக்கு, விமானங்களும், கப்பல்களும் இயக்கப்பட்டு வரும் நிலையில், புதிதாக அதில் கடலுக்கு அடியில் ரெயில் போக்குவரத்தும் இணையவுள்ளது.

    இந்த ரெயில் சேவை தொடங்கப்பட்டால் துபாயில் இருந்து இந்தியாவின் மும்பைக்கு 2 மணி நேரத்தில் சென்றடைய முடியும்.

    இந்த பாதை கடலுக்கு அடியில் அமைக்க வேண்டியது இருப்பதால் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கும். இதில் நிறைய சவால்களும் உள்ளன.

    ரெயில் வேகமாக பயணிக்கும் போது ரெயில் பாதையில் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்க வேண்டும். இந்த பாதையில் ரெயில் பயணிக்கும் போது கடலின் அடியில் உள்ள ரம்மியமான காட்சிகளை பயணிகள் பார்க்கும் வகையில் ரெயில்களை கண்ணாடி மூலம் கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும் இந்த ரெயில்கள் பயணிகள் போக்குவரத்திற்கு மட்டுமின்றி இரு நாடுகளுக்கும் இடையேயான சரக்கு போக்குவரத்துக்கும் பயன்படும்.

    துபாய் மற்றும் இந்தியா இடையே விரைவாக சரக்கு போக்குவரத்தை கையாள முடியும். இது கச்சா எண்ணை உள்ளிட்ட முக்கியமான மூலப்பொருட்களை துபாயில் இருந்து இந்தியாவிற்குள் இறக்குமதி செய்ய புதிய மற்றும் குறைந்த செலவிலான வழியை ஏற்படுத்தும்.

    இந்த திட்டத்திற்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு தேவைப்படும். இதை திட்ட ரீதியாக தயார் செய்துவிட்டார்கள்.

    இதற்கான ஒப்புதலும் நிதியும் ஒதுக்கப்பட்டு இந்தியா-துபாய் இடையே கடலுக்கு அடியில் போக்குவரத்து பாதை அமைக்கப்பட்டால் நிச்சயம் இது உலகின் மிகப்பெரிய சாதனையாக மாறும்.

    பின்னர் பல முக்கிய நகரங்களை இதேபோன்று இணைப்பதற்கான முயற்சிகளும் நடைபெறும். இந்த திட்டம் 2030-ம் ஆண்டுக்குள் பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பொள்ளாச்சி, உடுமலை, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, நெல்லை வழியாக திருச்செந்தூருக்கு தினசரி ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
    • திருச்செந்தூர் செல்லும் ரெயில் வருகிற 18,19 மற்றும் 21, 22 ஆகிய தேதிகளில் கோவில்பட்டி வரை மட்டுமே இயக்கப்படும்.

    திருப்பூர்:

    உடுமலை வழியாக திருச்செந்தூர் செல்லும் ரெயில் வருகிற 18, 19, 21, 22ஆகிய தேதிகளில் கோவில்பட்டிவரை மட்டுமே இயக்கப்படும் என்று தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, நெல்லை வழியாக திருச்செந்தூருக்கு தினசரி ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் பாலக்காட்டில் இருந்து புறப்பட்டு காலை 7.10 மணிக்கு உடுமலை ரெயில் நிலையத்திற்கு வந்து செல்லும். இந்த ரெயிலில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகிய கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம் மற்றும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்தநிலையில் ரெயில்பாதை பராமரிப்பு பணிகளுக்காக, திருச்செந்தூர் செல்லும் ரெயில் வருகிற 18,19 மற்றும் 21, 22 ஆகிய தேதிகளில் கோவில்பட்டி வரை மட்டுமே இயக்கப்படும்.இந்த தகவலை தென்னக ரெயில்வே மதுரை கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • செவ்வாய்க்கிழமை தவிர, வாரத்தின் 6நாட்கள் கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்படுகிறது.
    • முன்பதிவு இருக்கை எண்ணிக்கை 2,108 ஆக இருந்தது.

    திருப்பூர்:

    மங்களூருவில் இருந்து கச்சிக்குடாவுக்கு இயக்கப்படும் ெரயிலில் கூடுதலாக ஒரு ஏ.சி., பெட்டி இணைக்கப்படுகிறது.புதன், சனிக்கிழமை தோறும் கர்நாடகமாநிலம், மங்களூருவில் இருந்து புறப்படும் ரெயில் மறுநாள் தெலுங்கானா மாநிலம் கச்சிகுடாவுக்கு செல்லும்.இந்த ெரயிலில் தற்போது, 22 பெட்டிகள் உள்ளது. தற்போது கூடுதலாக ஒரு ஏ.சி., பெட்டி இணைக்கப்படுகிறது.இதே போல், மறுமார்க்கமாக கச்சிக்குடாவில் இருந்து மங்களூருவரும் ரெயிலிலும் ஒருஏ.சி., பெட்டி இணைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோவையில் இருந்து திருப்பூர் வழியாக மயிலாடுதுறைக்கு இயக்கப்படும் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ெரயிலில் இரண்டு முன்பதிவு பெட்டி சேர்க்கப்பட்டுள்ளது.

    செவ்வாய்க்கிழமை தவிர, வாரத்தின் 6நாட்கள் கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்படுகிறது. 21 பெட்டிகளுடன் பயணித்து வந்த நிலையில், கடந்த வாரம் முதல் கூடுதலாக இரண்டு முன்பதிவு பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. முன்பதிவில் புதிய இலக்கை ஜனசதாப்தி ரயில் எட்டியுள்ளது.

    முன்பதிவு இருக்கை எண்ணிக்கை 2,108 ஆக இருந்தது. கூடுதலாக இரண்டு பெட்டி சேர்த்து 21 பெட்டியானதால், முன்பதிவு இருக்கை எண்ணிக்கை 2,320 ஆக அதிகரித்துள்ளது. தெற்கு ரயில்வேயில் இவ்வளவு முன்பதிவு இருக்கைகளுடன் இயங்கும் ஒரே ெரயில் ஜனசதாப்தி மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல்மூட்டைகளை சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர்.
    • அதனை தொடர்ந்து நெல் அரவைக்காக சரக்கு ரெயிலில் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் அசேஷம், ஆதனூர், தெற்குநத்தம், இடையர்நத்தம் ஆகிய ஊர்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்ட 2 ஆயிரம் டன் நெல் 157 லாரிகளில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல்மூட்டைகளை சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். அதனை தொடர்ந்து நெல் அரவைக்காக சரக்கு ரெயிலில் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • பழங்கால தொடர்புகளை மீட்டெடுக்கும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இன்று (16-ம் தேதி) முதல் டிசம்பர் 19-ம் தேதி வரை நடக்க உள்ளது.
    • மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    தமிழகம் உடனான பழங்கால தொடர்புகளை மீட்டெடுக்கும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இன்று (16-ம் தேதி) முதல் டிசம்பர் 19-ம் தேதி வரை நடக்க உள்ளது.

    அப்போது இலக்கியம், பழங்கால நூல்கள், தத்துவம், ஆன்மீகம், இசை நடனம், நாடகம், யோகா, ஆயுர்வேதம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், நவீன கண்டுபிடிப்புகள், வர்த்தகம் உள்பட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக கருத்தரங்கு, விவாதம் போன்றவை நடக்க உள்ளது. அடுத்தபடியாக தமிழகத்தின் கலை, கலாச்சாரம், உணவு வகைகள், கைத்தறி- கைவினை பொருட்கள் அடங்கிய பொருட்காட்சி நடக்கிறது.

    இது தவிர பரதநாட்டியம், கர்நாடக இசை, தமிழ் நாட்டுப்புற இசை, நாதஸ்வர கச்சேரி, தேவாரம் போன்ற கலாச்சார நிகழ்ச்சிகளும் நடக்கும். இதனைத் தொடர்ந்து தமிழிசை வடிவில் திருவாசகம், கம்பராமாயண உரை, வில்லுப்பாட்டு, பொம்ம லாட்டம், சிலம்பாட்டம், காவடி ஆட்டம், கரகம், பட்டிமன்றம், நாட்டுப்புற தமிழ் நடனங்கள், பொய்க்கால் குதிரை, தப்பாட்டம் போன்றவை அரங்கேற உள்ளது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து மாண வர்கள், ஆசிரியர்கள், இலக்கியவாதிகள், கலாச்சார வல்லுநர்கள், தொழில் முனைவோர், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் செல்ல உள்ளனர். அவர்களின் வசதிக்காக இன்று (16-ந்தேதி), 23, 30 டிசம்பர் 7, 14 ஆகிய நாட்களில் ராமேசுவரம்-பனாரஸ் விரைவு ெரயிலில் (22535) 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்படட உள்ளது.அதேபோல நவம்பர் 27, டிசம்பர் 4, 11, 18 ஆகிய நாட்களில் பனாரஸ்-ராமேசுவரம் விரைவு ெரயிலில் 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • செங்கோட்டை-மயிலாடுதுறை ரெயில் பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
    • மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

     மதுரை

    செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரெயிலின் பயண நேரத்தை குறைப்பது என்று ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. அதன்படி நாளை மறுநாள் (19-ந் தேதி) முதல் செங்கோட்டையில் இருந்து புறப்படும் ரெயில் திண்டுக்கல், வையம்பட்டி, மணப்பாறை, திருச்சியில் இருந்து முறையே நண்பகல் 12.10, 12.42, 12.53, 13.45 மணிக்கு பதிலாக, 11.30, 12.02, 12.13, 13.20 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் மயிலாடுதுறைக்கு மாலை 5.10 மணிக்கு பதிலாக மாலை 4.25 மணிக்கு, 45 நிமிடங்கள் முன்பாகவே செல்லும்.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு வசதியாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது,
    • இரவு 11.15 மணிக்கு கோட்டயத்தில் இருந்து புறப்பட்டு எர்ணாகுளம், அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7.23 மணிக்கு சேலம் வந்தடையும்.

    சேலம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு வசதியாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக கோட்டயத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது, அதன்படி செகந்திராபாத்-கோட்டயம் சிறப்பு ரெயில் (வண்டி எண்-07125) வருகிற 27-ந் தேதி மாலை 6.50 மணிக்கு செகந்திராபாத் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நெல்லூர், கூடூர், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக 28-ந் தேதி (திங்கட்கிழமை) மதியம் 12.22 மணிக்கு சேலம் வந்தடையும்.

    பின்னர் இங்கிருந்து 12.25 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், அலுவா, எர்ணாகுளம் வழியாக இரவு 9 மணிக்கு கோட்டயம் சென்றடையும்.

    இதேபோல் மறு மார்க்கத்தில் கோட்டயம்-செகந்திராபாத் சிறப்பு ரெயில் (வண்டி எண்-07126) வருகிற 28-ந் தேதி இரவு 11.15 மணிக்கு கோட்டயத்தில் இருந்து புறப்பட்டு எர்ணாகுளம், அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7.23 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 7.25 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர் வழியாக வருகிற 30-ந் தேதி காலை 4 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும். இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    • ராமேசுவரத்தில் இருந்து மதுரை, பழனி வழியாக பாலக்காடுக்கு ெரயில் விட வேண்டும்.
    • ராமேசுவரத்துக்கு வருகை தரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ராமேசுவரம்

    உலகப் புகழ்பெற்ற ராமேசுவரத்தில் 12 ஜோதி லிங்கத்தில் ஒரு ஜோதிலிங்கம் ராமநாதசுவாமி கோவிலில் அமைந்திருப்பது ராமேசுவரத்துக்கு பெருமையாகும்.

    இதனால் உலகம் நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்தும் சிவஸ்தலமான ராமேசுவரம் ராமநா தசுவாமி கோவிலில் வழிபாடு செய்வதற்கு தினமும் குறைந்தபட்சம் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    பெரும்பாலான தமிழகப் பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் ராமேசுவரத்தில் சுவாமி தரிசனம் செய்து விட்டு ஆன்மீகப் பயணமாக மற்ற தலங்களான பழனி, திருச்செந்தூர், பொள்ளாச்சி மாசாணி யம்மன் கோவில், பாலக்காடு பகவதி அம்மன் கோவில்களுக்கு செல்கின்றனர்.

    ஆனால் ராமேசுவரம் வந்து மீண்டும் இந்த புனித தலங்களுக்கு செல்வதற்கு நேரடியாக ரெயில் போக்குவரத்து இல்லை. பஸ்களில் செல்ல வேண்டும் இதற்கு அதிக கட்டணம், அதிக பயண நேரம் ஆவதால் அதைத்தவிர்த்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பிச் செல்கின்றனர்.

    எனவே ராமேசுவரத்தை மையப்படுத்தி மீட்டர் கேஜ் ரெயில் பாதையாக இருந்தபோது ராமேசுவரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு பாலக்காடு, திருச்சியை இணைக்கும் வகையில் பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் மானாமதுரையில் இருந்து திருச்சிக்கும், மதுரை, பழனி, பொள்ளாச்சி வழியாக பாலக்காடுக்கும் பிரிந்து சென்றது.

    இந்த ரெயில் தினமும் இயக்கப்பட்டு வந்தது. இதனால் பக்தர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும், வர்த்தகர்களுக்கும் வசதியாக இருந்தது. இந்த ரெயில்கள் இயக்கப்பட்டபோது ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டம் ஆகிய பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் எந்தவித சிரமமின்றி பழனிக்கு சென்று வந்தனர்.

    தற்போது அகல ரெயில் பாதையாக மாற்றிய பிறகு இந்த ரெயில் போக்குவரத்து நிறுத்தப்ப ட்டது. இதனால் பயணிகள் பழனி, பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவில், பாலக்காடு பகவதி அம்மன் கோவில்களுக்கு செல்வதை குறைத்துக் கொண்டனர்.

    பயணிகள் மற்றும் பக்தர்களின் நலன் கருதி ரெயில்வே நிர்வாகம் மீட்டர் கேஜ் பாதையாக இருந்தபோது இயக்கப்பட்ட பாலக்காடு,திருச்சி பயணிகள் ரெயிலை முன் பதிவு வசதியுடன் இயக்கு வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமேசுவரத்துக்கு வருகை தரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • தஞ்சை தொம்பன்குடிசை அருகே உள்ள ரெயில்வே தண்டவாளம் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • ரெயில் விஜய் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மானோஜிப்பட்டி வனதுர்க்கா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் விஜய் (வயது 25 ). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் தஞ்சை தொம்பன்குடிசை அருகே உள்ள ரெயில்வே தண்டவாளம் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தனது செல்போனில் ஹெட்போனை இணைத்து கொண்டு பேசியப்படியே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது வந்த ரெயில் விஜய் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.இது குறித்து தஞ்சை ரெயில்வே இருப்பு பாதை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிவ வடிவேல் உத்தரவுப்படி சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, தனிப்பிரிவு சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் சுரேஷ், தலைமை காவலர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரெயில் மோதி பலியானார்.
    • இச்சம்பம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கூத்தி யார்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் காசி விசுவநாதன்(26), கட்டிட தொழிலாளி.

    இவர் இரவு நேரத்தில் வயலில் தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது அப்பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடக்க முற்பட்டபோது காசி விசுவநாதன் மீது அந்த வழியாக வந்த ரெயில் மோதியது.

    இதில் அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த நிலையில் காசி விஸ்வநாதன் நீண்டநேர மாகியும் வீடு திரும்பாததால் காலையில் உறவினர்கள் தேடிப்பார்த்தனர். அப்போது காசி விசுவநாதன் தண்டவாளத்தில் உடல் சிதறி இறந்து கிடந்தது தெரியவந்தது. மதுரை ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரத பரிசோத னைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மதுரை-விழுப்புரம் ெரயில் வழக்கம் போல இயங்கும்.
    • இந்த தகவலை மதுரை கோட்ட ெரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    மதுரை

    தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை-விழுப்புரம் ெரயில் இன்று (10-ந் தேதி) முதல் வருகிற 15-ந் தேதி வரை திண்டுக்கல்லில் இருந்து இயக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் அங்கு பராமரிப்பு பணிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எனவே மதுரை-விழுப்புரம் ெரயில் வழக்கம் போல் இயங்கும் என்று மதுரை கோட்ட ெரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    • ஒரு மணி நேரம் தாமதமாக டெமு ரெயில் சென்றது
    • என்ஜின் கோளாறு காரணமாக

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை வழியாக விருதுநகர் செல்லும் பயணிகள் ரெயில் என்ஜின் கோளாறு காரணமாக நேற்று புதுக்கோட்டையில் இருந்து ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. திருச்சியில் இருந்து புதுக்கோட்டை, காரைக்குடி வழியாக விருதுநகருக்கு டெமு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் புதுக்கோட்டையில் இருந்து தினமும் மாலை 4.50 மணிக்குப் புறப்படும். இந்நிலையில், நேற்று திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்த டெமு ரெயில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. என்ஜின் கோளாறு சரி செய்யப்பட்டு ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால், பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.

    ×