என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "released"

    • கைது செய்யபட்டு மாலை 6 மணியாகியும் எங்களை விடுவிக்காதது ஏன்? என போலீசாருடன் அண்ணாமலை வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
    • கைது செய்யப்பட்டதும் சிலரைப் போல நெஞ்சு வலி என நாங்கள் நாடகமா போடுகிறோம்?

    டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் எனக்கூறி போராட முயன்ற தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களை சென்னையில் தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

    கைது செய்யப்பட்டு மாலை 6 மணி ஆகியும் பாஜகவினரை விடுவிக்காததால், அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    எங்கள் பொறுமையை சோதிக்காதீர்கள். டாஸ்மாக் அலுவலகத்தையே மூடிய பிறகு எங்களால் என்ன பிரச்சனை ஏற்பட போகிறது ?

    மாலை 6 மணியாகியும் எங்களை விடுவிக்காதது ஏன் ?

    கொல்கத்தா நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும். 3 விமானங்களை விட்டுவிட்டேன்" என்றார்.

    டாஸ்மாக் ஊழலை கண்டித்து போராட முயன்ற தமிழிசை உள்ளிட்டோர் கைது செய்து சென்னை வளசரவாக்கம் தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்ட நிலையில் போலீசாருடன் வாக்குவாதம் நடந்து வருகிறது.

    அப்போது தமிழிசை கூறுகையில், " மாலை 6 மணிக்கு மேலாகியும் தங்களை விடுவிக்க மறுப்பது ஏன்?

    கைது செய்யப்பட்டதும் சிலரைப் போல நெஞ்சு வலி என நாங்கள் நாடகமா போடுகிறோம்?

    இரவு 7 மணி ஆகியும் எங்களை விடுவிக்க மறுப்பது ஏன்? நாங்கள் என்ன பயங்கரவாதிகளா?" என்று ஆதங்கமாக பேசினார்.

    இந்நிலையில், சென்னை அக்கரை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கைது செய்து அடைக்கப்பட்டிருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுவிக்கப்பட்டுள்ளார்.

    • தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஜனநாயகத்தின் மாண்பை குலைக்கும் வகையில் திமுக., அரசு செயல்பட்டு வருகிறது.
    • பாஜக தொண்டா்கள் கைது செய்யப்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

    திருப்பூர்,அக்.22-

    இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஜனநாயகத்தின் மாண்பை குலைக்கும் வகையில் திமுக., அரசு செயல்பட்டு வருகிறது. அரசும், அரசு ஊழியா்களும், ஆளும்கட்சியும் சா்வாதிகார மனப்பான்மையில் செயல்படுகின்றனா். பாஜக., மாநிலத்தலைவா் அண்ணாமலை வீட்டின் முன்பாக நிறுவப்பட்ட கொடிக் கம்பம் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டுள்ளது. இதனை எதிா்த்து ஜனநாயக ரீதியில் போராடிய பாஜக., நிா்வாகிகள், தொண்டா்கள் என 110 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். என் மண், எண் மக்கள் நடைப்பயணத்தின் இணை அமைப்பாளா் அமா்பிரசாத் ரெட்டி தற்போது கைது செய்யப்பட்டுள்ளாா். பாஜக தொண்டா்கள் கைது செய்யப்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

    கைது செய்யப்பட்டுள்ளவா்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விடுதலைக்குப் பின் அசாஞ்சே என்ன செய்கிறார் என்ற தகவல் ஏதும் பொது வெளியில் தெரியாமல் இருந்தது
    • சிறையில் இருந்தபோது அசாஞ்சே தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டிருந்தார்.

    அமெரிக்க ராணுவத்தின் முறைகேடுகளையும் ரகசியங்களையும் தனது விக்கிலீக்ஸ் நிறுவனம் மூலம் அம்பலப்படுத்தியதற்காக  கடந்த  2010 முதல் 14 ஆண்டுகள் தாய்நாட்டையும் குடும்பத்தையும் விட்டுப் பிரிந்து சிறைகளில் வாழ்ந்தவர் 53 வயதாகும் ஜூலியன் அசாஞ்சே . லண்டன் சிறையில் இருந்த அவர் சமீபத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு அமெரிக்க நீதிமன்றத்தின் முன் ஆஜரான நிலையில் அவர் விடுவிக்கப்பட்டார்.

    ஏற்கனவே போதுமான சிறைவாசத்தை அசாஞ்சே லண்டனில் அனுபவித்த நிலையில் சுதந்திர மனிதனாக அமெரிக்க நீதிமன்றத்தில் இருந்து வெளியில் நடந்து வந்தார். அசாஞ்சேவுக்கு உலகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்கள் மற்றும் பத்திரிகை சுதந்திரத்துக்காக குரல் கொடுப்பவர்கள் வாழ்த்துக்களை குவித்தனர். அனைத்து சர்ச்சைகளும் முடிந்து தனது தாய்நாடான ஆஸ்திரேலியாவுக்கு அசாஞ்சே உடனடியாக திரும்பிச் சென்றார்.

     

    விடுதலைக்குப் பின் அசாஞ்சே என்ன செய்கிறார் என்ற தகவல் ஏதும் பொது வெளியில் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் அசாஞ்சேவின் மனைவி ஸ்டெல்லா அசாஞ்சே கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் கடற்கரையில் இருக்கும் வெகேஷன் புகைப்படங்களை பகிர்த்துள்ளார்.

     

     

    முன்னதாக லண்டன் சிறையில் இருந்தபோது அசாஞ்சே தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தில் விடுதலையாகி வந்த பிறகு ஒவ்வொரு நாளும் கடலில் நீந்தி ஆனந்திக்க வேண்டும் என்று குறிப்பிட்டிந்ததாக அறிய முயந்தது. அதை நினைவாக்கும் விதமாகவே தனது சுதந்திரத்தை அசாஞ்சே கொண்டாடி வருகிறார். 

    • முத்தூர் கிராமத்தில் கரடி அட்டகாசம் செய்து வந்தது.
    • கூண்டில் சிக்கிய கரடியை வனப்பகுதியில் விட்டனர்.

    களக்காடு:

    நெல்லை அருகே உள்ள முத்தூர் கிராமத்தில் கரடி அட்டகாசம் செய்து வந்தது. அந்த கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையொட்டி முத்தூரில் சுற்றித்திரிந்த கரடியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. இந்த கூண்டில் நேற்று கரடி சிக்கியது.

    கூண்டில் சிக்கிய கரடியை நெல்லை வனச்சரகர் சரவணகுமார், வனவர் அழகர்சாமி ஆகியோரின் தலைமையிலான வனத்துறையை சார்ந்த குழுவும், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக மருத்துவர் மனோகரன் தலைமையிலான மருத்துவக் குழுவும் இணைந்து கரடியை களக்காடு சரணாலயம் முத்தலாறு வனப்பகுதியில் உதவி உயிரின பாதுகாவலர் பயிற்சி மற்றும் களக்காடு வனப்பணியாளர்களின் முன்னிலையில் பாதுகாப்பாக விடப்பட்டது.

    • ஆசனூர் வனக்கோட்ட துணை இயக்குனர் தேவேந்திர குமார் முன்னிலையில் மயக்க ஊசி செலுத்தப்பட்டு வேறு கூண்டுக்கு மாற்றப்பட்டது. அப்போது அந்த சிறுத்தை எதிர்பாராத விதமாக தப்பி ஓடியது.
    • சிறுத்தையை வேனில் ஏற்றி பவானிசாகர் வன சரகத்துக்குட்பட்ட அடர்ந்த வனப்பகுதியான தெங்குமரஹடா மங்கள பட்டி கொண்டு சென்றனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி, ஆசனூர் மற்றும் சுற்று வட்டார வனப்பகுதிகளில் யானை, கரடி, புலி, சிறுத்தை என ஏராளமான வன விலங்குகள் உள்ளன.

    இந்த வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் புலி, சிறுத்தைகள் விவசாய தோட்டத்தில் புகுந்து ஆடு, மாடுகளை வேட்டை யாடி வருகிறது.

    மேலும் சிறுத்தைகள் வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராங்களில் புகுந்து கால்நடைகளை அடித்து கொன்று விட்டு அருகே உள்ள கல்கு வாரியில் பதுங்கி கொள்வது தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதையடுத்து தாளவாடி அடுத்த ஓசூர் கிராமத்தின் அருகே உள்ள கல்குவாரில் பதுங்கிய சிறுத்தையை பிடிக்க வனத்துறை கடந்த 10 நாட்களுக்கு முன்பு கூண்டு வைத்தனர். கூண்டில் இறைச்சியை கட்டி வைத்து வந்தனர். ஆனால் சிறுத்தை சிக்காமல் இருந்து வந்தது.

    இந்த நிலையில் போக்கு காட்டி வந்த அந்த சிறுத்தை கூண்டில் சிக்கிக் கொண்டது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆசனூர் வனக்கோட்ட துணை இயக்குனர் தேவேந்திர குமார் முன்னிலையில் மயக்க ஊசி செலுத்தப்பட்டு வேறு கூண்டுக்கு மாற்றப்பட்டது. அப்போது அந்த சிறுத்தை எதிர்பாராத விதமாக தப்பி ஓடியது.

    சிறுத்தை ஓடுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் செய்வது அறியாமல் தலைதெறிக்க ஓடினார்கள்.

    தொடர்ந்து வனத்துறையினர் தப்பிய சிறுத்தையை அந்த பகுதியில் உள்ள கல்குவாரியில் தேடினர். அப்போது கல்குவாரி கல்லுக்கு அடியில் சிறுத்தை படுத்து கிடந்தது தெரிய வந்தது.

    பின்னர் மயக்க ஊசி செலுத்தி அந்த சிறுத்தையை பிடித்தனர். பின்னர் சிறுத்தையை சாக்கு பையில் மூட்டைகட்டி மீண்டும் கூண்டில் அடைத்தனர்.

    இதையடுத்து நேற்று இரவு சிறுத்தையை வேனில் ஏற்றி பவானிசாகர் வன சரகத்துக்குட்பட்ட அடர்ந்த வனப்பகுதியான தெங்குமரஹடா மங்கள பட்டி கொண்டு சென்றனர். அங்கு கூண்டு திறந்து விடப்பட்டது.

    இதையடுத்து அந்த சிறுத்தை அடர்ந்த வனப்பகுதிக்கு சென்றது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.

    உலகிலேயே மிகச்சிறிய அளவில் 245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை, தற்போது 2 கிலோ 200 கிராம் எடைக்கு தேறி உள்ளது.
    நியூயார்க்:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், சான்டியோகோ நகரில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு கர்ப்பிணி பெண் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரின் வயிற்றில் வளரும் கருவுக்கு 23 வாரங்கள் 3 நாட்கள் மட்டுமே ஆகி இருந்தது. ஆனால் அந்த கரு, ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் எடுக்காவிட்டால் தாயின் உயிருக்கும் ஆபத்து என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதையடுத்து, அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில் இருந்து பெண் குழந்தை எடுக்கப்பட்டது. அப்போது குழந்தையின் எடை 245 கிராம் மட்டுமே இருந்தது. இதனால் அந்த குழந்தை பிறந்த ஒரு மணிநேரத்தில் இறந்துவிடும் என்று மருத்துவர்கள் கூறினர்.

    ஆனால், மருத்துவர்களே வியக்கும் வகையில், அந்த குழந்தை தனது உயிரை தக்க வைக்க தொடர்ந்து போராடியது. இதையடுத்து, மருத்துவர்களும், செவிலியர்களும் குழந்தையை எப்படியாவது காப்பாற்றி ஆக வேண்டும் என்கிற முனைப்புடன் செயல்பட தொடங்கினர். அவர்கள் இரவு, பகல் பாராமல் கண்ணும் கருத்துமாக குழந்தையை பார்த்துக்கொண்டனர்.

    இதன் பலனாக ஏறக்குறைய 6 மாத காலத்துக்கு பிறகு தற்போது அந்த குழந்தை உடல் நலம் தேறி, நலமுடன் இருக்கிறது. பிறக்கும்போது, வெறும் 245 கிராம் எடையில் இருந்த அந்த குழந்தை தற்போது 2 கிலோ 200 கிராம் எடைக்கு தேறி உள்ளது.

    இதையடுத்து இந்த மாத தொடக்கத்தில் தாயும், சேயும் பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். குழந்தையை தாயுடன் அனுப்பி வைக்கும்போது, அந்த குழந்தையை கவனித்துவந்த செவிலியர்கள் பலர் கண்ணீர் விட்டு அழுதனர்.
    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியானது. மொத்த தேர்ச்சி 95.2 சதவீதமாகும். #SSLC #SSLCResult
    சென்னை:

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 14-ந் தேதி தொடங்கி 29-ந் தேதியுடன் முடிவடைந்தது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ- மாணவிகள் எழுதினார்கள்.

    ரேங்க் பட்டியல் முறையை கல்வித்துறை ரத்து செய்து, தேர்ச்சி சதவீதத்தை மட்டுமே வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தான், இந்த ஆண்டும் தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது.

    தேர்வு முடிவுகளை மாணவ-மாணவிகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து பார்க்கலாம்.

    பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும் பள்ளி மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது கொடுத்திருந்த செல்போன் எண்ணுக்கும் மதிப்பெண் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.



    தற்போது வெளியான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 95.2% பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

    இதில் 93.3% மாணவர்களும் 97%  மாணவிகளும் தேர்ச்சியடைந்துள்ளனர்.

    இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகள் 3.7 அதிகம் தேர்ச்சியடைந்துள்ளனர். #SSLC #SSLCResult
    நடிகர் பிரகாஷ்ராஜ் மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவர் பெங்களூருவில் தான் வெற்றி பெற்றால் என்ன செய்வேன் என்பது குறித்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். #LokSabhaElections2019 #PrakashRaj
    பெங்களூரு:

    மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் நடிகர் பிரகாஷ்ராஜ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அங்கன்வாடி மையங்கள் பகல் நேர குழந்தைகள் காப்பகங்களாக மாற்றப்படும். அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். அரசு பள்ளிகளை மூடுவதை தடுப்போம். மூடப்பட்ட அரசு பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுப்போம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணிபாதுகாப்பு வழங்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். பாராளுமன்ற, சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை ஆதரிப்போம். உலர்ந்த இலைகள் மற்றும் குப்பைகளை தீவைத்து எரிக்க தடை விதிக்கப்படும். ஏரிகள் பாதுகாக்கப்படும், ஏரிகளை ஆக்கிரமிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #PrakashRaj


    கதிராமங்கலம் வழக்கை விசாரித்த கும்பகோணம் கோர்ட்டு நீதிபதி குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார். #ProfessorJayaraman #ONGC
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அமைத்திருந்த குழாய் பழுதடைந்தது.

    இந்த பழுதை நீக்க அந்த நிறுவனத்தினர் தனது ஊழியர்களுடன் சென்றனர். அங்கு மீத்தேன் திட்ட எதிர்ப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் ஓ.என்.ஜி.சி. ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து வருவாய்த்துறையினர் திருவிடைமருதூர் போலீஸ் நிலையத்தில் பேராசிரியர் ஜெயராமன், வக்கீல் கரிகாலன், ராஜி, தர்மராஜ், விஜயராகவன், சீனிவாசன், சேதுராஜா, கொளஞ்சிநாதன், கருணாநிதி, பிரபு ஆகிய 10 பேர் மீது ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் ஊழியர்களை பணி செய்யாமல் தடுத்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி புகார் அளித்தனர்.

    இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

    வழக்கை விசாரித்த கும்பகோணம் கோர்ட்டு நீதிபதி சண்முகப்பிரியா குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு கூறினார்.  #ProfessorJayaraman #ONGC


    இலங்கை சிறையில் இருந்த ராமேசுவரம் மீனவர்கள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் விரைவில் சொந்த ஊர் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து கடந்த 13-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஒரு படகையும், அதில் இருந்த 11 மீனவர்களையும் நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். பின்னர் அவர்கள் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் நேற்று அவர்கள் அனைவரும் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நல்லெண்ண அடிப்படையில் 11 மீனவர்களையும் நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    ஏற்கனவே விடுதலை செய்யப்பட்ட 17 மீனவர்கள் இந்திய தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பில் உள்ளனர். தற்போது விடுவிக்கப்பட்டுள்ள 11 பேரையும் சேர்த்து 28 பேர் அங்கு உள்ளனர். அவர்கள் விரைவில் சொந்த ஊர் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கேமரூனின் தென்மேற்கு பிராந்தியத்தில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட பயணிகள் 36 பேரும் விடுவிக்கப்பட்டனர். #CameroonAdduction
    யாவுண்டே:

    மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனின் தென்மேற்கு பிராந்தியத்தில், பியூவா-கும்பா நெடுஞ்சாலையில் சென்ற பயணிகள் பேருந்தை, ஆயுதம் தாங்கிய கும்பல் தடுத்து நிறுத்தியது. அதில் 36 பயணிகள் இருந்தனர். அவர்களின் அடையாள அட்டைகளை பறித்த அந்த கும்பல், அனைவரையும் கீழே இறக்கி, துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கடத்திச் சென்றது. பேருந்து டிரைவரை, கும்பா பேருந்து நிலையத்திற்கு திரும்பி செல்லும்படி, அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் மிரட்டி அனுப்பி உள்ளனர்.

    பேருந்து டிரைவர் கொடுத்த தகலின் அடிப்படையில் கடத்தப்பட்ட பயணிகளை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்குச் சென்று, நெடுஞ்சாலையில் போக்குவரத்தை தடை செய்து அனைத்து வாகனங்களையும் சோதனையிட்டனர். ஆனால், கடத்தப்பட்டவர்கள் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில், கடத்தப்பட்ட 36 பேரும் மறுநாள், அதாவது நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர். நீண்டதூரம் தங்களை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் அழைத்துச் சென்றதாகவும், தங்களிடம் இருந்த பணம், செல்போன்கள் மற்றும் பொருட்களை பறித்துக்கொண்டு பின்னர் விடுவித்ததாகவும் பயணிகள் தெரிவித்தனர்.

    பயணிகள் விடுவிக்கப்பட்டு ஊர் திரும்பியதையடுத்து, கும்பாவில் உள்ளூர் மக்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கற்ற ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, கடத்தல் சம்பவங்களை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    ஆங்கிலம் பேசும் மக்கள் அதிகம் வாழும் தென்மேற்கு மற்றும் வடமேற்கு பிராந்தியங்களை தனி சுதந்திர நாடாக அறிவிக்க வலியுறுத்தி, பிரிவினைவாத அமைப்புகள் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவர்களை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் காரணமாக அரசுப் படைகளுக்கும், பிரிவினைவாத அமைப்புகளுக்குமிடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது.

    இந்த பிராந்தியங்களில் ஆட்கடத்தல் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதற்கு ஆயுதம் தாங்கிய பிரிவினைவாதிகள் தான் காரணம் என அரசு குற்றம்சாட்டுகிறது. ஆனால், தங்கள் சுதந்திரப் போராட்டத்தை சர்வதேச அளவில் களங்கப்படுத்தும் வகையில், அரசாங்கத்தால் இந்த கடத்தல் சம்பவம் திட்டமிட்டு நடத்தப்படுவதாக பிரிவினைவாதிகள் கூறுகின்றனர். #CameroonAdduction
    வெனிசுலாவில் நாடாளுமன்ற சபாநாயகர் ஜூவான் கெய்டோ கைது செய்யப்பட்டதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. #Venezuela #AssemblyPresident #JuanGuaido
    கராக்கஸ்:

    வெனிசுலா நாடாளுமன்றத்தில் முழுவதுமாக எதிர்க்கட்சியினர் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அவர்கள் நிகோலஸ் மதுரோ 2-வது முறையாக அதிபர் ஆவதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். எனினும் அவர் கடந்த 10-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு முன்னிலையில் 2-வது முறையாக அந்நாட்டின் அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் எதிர்க்கட்சிகள் நிகோலஸ் மதுரோ பதவி விலக வேண்டும் என்றும், புதிய தேர்தலை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையில் நாடாளுமன்ற சபாநாயகரான ஜூவான் கெய்டோ, தான் அதிபர் ஆவதற்கு தயாராகி வருவதாக அறிவித்தார்.

    இந்த நிலையில், தலைநகர் கராக்கசில் நடைபெறும் பேரணியில் பங்கேற்பதற்காக ஜூவான் கெய்டோ நேற்று முன்தினம் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது பாதுகாப்புபடை வீரர்கள் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்கு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

    இது எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் செயல் எனக் கூறி அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. #Venezuela #AssemblyPresident #JuanGuaido
    ×