என் மலர்
நீங்கள் தேடியது "relief supplies"
- சரக்கு மற்றும் மீட்புப் பணியாளர்கள் ஆப்கானிஸ்தானுக்குள் செல்ல தலிபான் அரசு அனுமதிக்கவில்லை.
- பாகிஸ்தானின் சமீபத்திய தொடர் நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேலும் சிக்கலாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் கடந்த சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான இந்த நில நடுக்கத்தால் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் உயிரிழந்தனர். பல்வேறு கிராமங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரை மட்டமாகின. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் ஆவார்கள். அங்கு மீட்புப்பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் மீண்டும் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஆப்கானிஸ்தானில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற ஒரு அரசு மருத்துவமனை மட்டுமே உள்ளது.
பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவுமாறு உலக நாடுகளை தலிபான் அரசு கேட்டுக் கொண்டது. இதையடுத்து பல்வேறு நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் மீட்பு குழுக்களை அனுப்பி வருகிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி, உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலக சுகாதார அமைப்பு உறுதியளித்து உள்ளன.
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் அன்வாருல் ஹக்கக்கர் அத்தியாவசிய உதவிகளுடன் மீட்பு மற்றும் நிவாரண குழுக்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்புவதாக அறிவித்தார். அவர்கள் காபூல் வழியாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைய அனுமதி வழங்க மறுக்கப்பட்டது. சரக்கு மற்றும் மீட்புப் பணியாளர்கள் ஆப்கானிஸ்தா னுக்குள் செல்ல தலிபான் அரசு அனுமதிக்கவில்லை.
இதுகுறித்து இரு நாட்டு தரப்பில் இருந்தும் அதிகார பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே தற்போது நிலவும் பதற்றம்தான் பாகிஸ்தானின் உதவியை தலிபான் அரசு நிராகரித்ததற்கு முக்கியக் காரணம் என்று தெரிகிறது.
சட்ட விரோதமாக பாகிஸ்தானில் குடியேறிய ஆப்கானிஸ்தானை சேர்ந்த அனைவரையும் நாடு கடத்துவது, ஆப்கானியர்களுக்கான விசா கொள்கை மற்றும் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பாகிஸ்தானின் சமீபத்திய தொடர் நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேலும் சிக்கலாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- மனிதாபிமான உதவியாக நிவாரணப் பொருட்கள் இன்று அனுப்பப்பட்டது.
- முதல் தொகுப்பில் அத்தியாவசிய மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் படைக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகிறது. பாலஸ்தீன மக்களின் வசிப்பிடமான காசா பகுதியில் நடத்தி வரும் தொடர் தாக்குதல் காரணமாக மக்கள் போதிய உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஐ.நா.வின் நிவாரணப் பணிகள் முகமை மூலம் பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா சார்பில் மனிதாபிமான உதவியாக நிவாரணப் பொருட்கள் இன்று அனுப்பப்பட்டது. 30 டன் மருந்துகள், உணவுப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
பாலஸ்தீனத்துக்கு இன்று அனுப்பப்பட்டுள்ள முதல் தொகுப்பில் அத்தியாவசிய மருந்துகள், அறுவைச் சிகிச்சைக்கான மருந்து மற்றும் உபகரணங்கள், பல் மருத்துவம் சம்பந்தப்பட்ட பொருட்கள், பொது மருத்துவ சிகிச்சைக்கு தேவைப்படும் பொருள்கள், கலோரி அதிகம் நிறைந்த பிஸ்கட்டுகள் ஆகியவை அடங்கும்.
இந்த தகவலை வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
- லாரி டிரைவர் பலி, போலீஸ்காரர் உள்பட 15 பேர் காயம் அடைந்தனர்.
- நிவாரண பொருட்கள் ஏற்றிய லாரிகள் வேறு பாதையில் திரும்பி விடப்பட்டன.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள குர்ரம் மாவட்டத்தில் இரு பிரிவு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. வன்முறை பாதிக்கப்பட்ட குர்ரம் மாவட்டத்திற்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தால் பகுதியில் இருந்து குர்ரமுக்கு நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரிகள் அணிவகுத்து சென்றன. அப்போது ஓச்சிட் என்ற பகுதியில் மர்ம நபர்கள், லாரிகள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். இதில் ஒரு லாரி டிரைவர் பலியானார். ஒரு போலீஸ்காரர் உள்பட 15 பேர் காயம் அடைந்தனர்.
இதேபோல் பாகன், மண்டோரி, டாட் கமர் மற்றும் சார் கேல் உள்பட பல இடங்களிலும் தாக்குதல் நடந்தது. இதையடுத்து நிவாரண பொருட்கள் ஏற்றிய லாரிகள் வேறு பாதையில் திரும்பி விடப்பட்டன.
இந்த தாக்குதலுக்கு கைபர் பக்துன்க்வா மாகாண முதல்-மந்திரி லி அமின் கந்தாபூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைதியைக் குலைக்கும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மேற்பனைக்காடு கிராமத்தை சேர்ந்த வடிவேல்& கலைச்செல்வி தம்பதியரின் மகன் நீலகண்டன். விவசாய கூலி வேலை செய்து வருகிறார். கஜா புயலால் இவர் வசிக்கும் குடிசை வீடு மிகுந்த சேதத்துக்குள்ளானது.
இது குறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர். தாசில்தார் ஆகியோரிடம் மனு அளித்துள்ளார். இந்த நிலையில் அவர் வசிக்கும் பகுதியில் கான்கிரீட் வீடு உள்ளவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வருவாய் துறையினர் வழங்கியுள்ளனர். ஆனால் மிகுந்த சேதத்துக்குள்ளான நீலகண்டன் குடும்பத்தினருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்காமல் வருவாய்த்துறையினர் இழுத்தடித்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த நீலகண்டன் தனது வீட்டு ரேசன்கடை அருகே இருந்த டிரான்ஸ்பாரத்தில் ஏறி தனக்கு நிவாரணப் பொருட்கள் வழங்ககோரி கோஷமிட்டவாரே மின்சாரம் பாயும் மின்கம்பியை பிடித்து விட்டார். இதில் நீலகண்டன் உடல் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.
அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக நீலகண்டனை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது நீலகண்டன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புயல் நிவாரண பொருட்கள் வழங்காததை கண்டித்து வாலிபர் மின் கம்பியை பிடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் கடந்த மாதம் 15-ந்தேதி அதிகாலை கஜா புயல் வீசியதில் தென்னை மரங்கள்,வாழை மரங்கள், மா, பலா, வேப்ப மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மின் வயர்கள் அறுத்து விழுந்தது. இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதியுற்றனர்.
ஜெனரேட்டர் மூலம் மேல் நிலை நீர் தேக்கதொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது.
இந்நிலையில் பேராவூரணியை அடுத்த கொரட்டூர் பகுதியில் கடந்த 4 நாட்களாக குடிதண்ணீர் கிடைக்காமல் அவதியுற்றனர். இதைத்தொடர்ந்து நேற்று காலகம் ஆவுடையார் கோயில் சாலையில் கொரட்டூர் கடைத்தெருவில் பொதுமக்கள் திரண்டு சாலைமறியல் செய்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் அஷ்ரப் அலி உள்ளிட்டோர் போராட்டம் நடத்தியவர்களிடம் குடிதண்ணீர் கிடைக்க உடனடியாக ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
பேராவூரணி அருகே பழுக்காடு கிராமத்தில் ஆதிதிராவிடர் தெருவில் 21 குடும்பங்கள் தொகுப்பு வீடுகளில் வசித்து வருகின்றனர். கஜா புயலில் பாதிக்கப்பட்டதால் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், தனிப்பட்ட நபர்கள் மூலம் நிவாரண பொருட்களை வழங்கினர்.இந்நிலையில் தமிழக அரசின் 27 பொருட்கள் அடங்கிய பெட்டகம் வழங்குவதாக கிராம நிர்வாக அலுவலர் பழுக்காடு ஆதிதிராவிடர் தெருவில் கணக்கெடுத்து சென்றனர்.
தற்போது தொகுப்பு வீடுகளுக்கு நிவாரணம் கிடையாது என்பது மக்களுக்கு தெரியவந்துள்ளது, இதனையடுத்து அப்பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு ரெட்ட வயல் கடைவீதியில் காலகம் ஆவுடையார்கோயில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் பேராவூரணி சப்-இன்ஸ் பெக்டர் கார்த்திக்,வருவாய் ஆய்வாளர் பாண்டியராஜன் இருவரும் சம்பவ இடம் சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டம் நடத்திய மக்கள் இன்னும் எங்கள் பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை, அனைவருக்கும் நிவாரணம் வழங்கிட வேண்டும் என கூறினர். அதிகாரிகள் அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. #tamilnews
தமிழகத்தில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக, டெல்லியில் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டன. நிவாரண பொருட்கள் சேகரிப்பு பணியை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பானுமதி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து துணிமணிகள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவுப்பொருட்கள் என மொத்தம் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேர்ந்தன. இந்த பொருட்கள் அட்டைப்பெட்டிகளில் வைக்கப்பட்டு நேற்று மாலை டெல்லி தமிழ்நாடு அரசு இல்ல முதன்மை உறைவிட ஆணையர் முருகானந்தம் தலைமையிலான அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் அந்த பொருட்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடந்தன. சென்னையில் ஐகோர்ட்டு வக்கீல் சங்க நிர்வாகிகள் அவற்றை பெற்று, புயல் பாதித்த மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்புவார்கள் என தெரிவிக்கப்பட்டது.
கஜா புயலால் நாகப்பட்டிணம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு தரப்பினரும் நிவாரண பொருள்களை அனுப்பி வருகின்றனர்.
இதையடுத்து அமைச்சர் கடம்பூர் ராஜூ சார்பில் துணிகள், அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, பாய், போர்வை, பிஸ்கட், ரஸ்க், தண்ணீர் பாட்டில்கள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட ரூ. 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
கோவில்பட்டி எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு இருந்து லாரி மூலம் நிவாரணப் பொருள்களுடன் சென்றது. இங்கிருந்து செல்லும் நிவாரண பொருள்கள் தஞ்சாவூர், பேராவூரணி பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அப்பகுதியில் உள்ள மக்களுக்கு வழங்கப்படுவுள்ளதாக அ.தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
நிகழ்ச்சியில் நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைப் பாண்டியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், ஜெமினி, சிறுபான்மையோர் பிரிவு திவான்பாட்ஷா, நிர்வாகிகள் போடுசாமி, பாலமுருகன், பழனிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Minister #KadamburRaju

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயலுக்கு இன்று கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில், தமிழகத்திற்கு ரெயில் மூலம் அனுப்பப்படும் புயல் நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
கேரளாவில் மழை வெள்ளத்தின்போது நிவாரணப் பொருட்களுக்கான சரக்கு கட்டணத்திற்கு விலக்கு அளித்ததுபோல், தமிழகத்திற்கு கஜா புயல் நிவாரணத்திற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆட்சியர்களுக்கு நன்கொடையாளர்கள் அனுப்பும் பொருட்களுக்கு சரக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். #GajaCyclone #EdappadiPalaniswami #RailwayMinister
ஈரோடு மாவட்ட கூட்டுறவுத் துறை சார்பில் கேரளா மாநிலத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ரூ.10 லட்சத்து 71 ஆயிரத்து 966 மதிப்பீட்டிலான உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டது.
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்திற்கு லாரியில் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது. அந்த வாகனத்தை ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் எஸ்.பார்த்திபன் அனுப்பி வைத்தார்.
ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலக துணைப்பதிவாளர்- பணியாளர் அலுவலர் மீனா அருள், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைப்பதிவாளர்- முதன்மை வருவாய் அலுவலர் அழகிரி, ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க துணைப் பதிவாளர்- மேலாண்மை இயக்குனர் கந்தராஜா மற்றும் கூட்டுறவுதுறை அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
நடிகர் விஜய் உத்தரவின் பேரில் விஜய் பங்களிப்புடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் பத்தன் திட்டா மாவட்டத்திற்கு ரூ.9 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வழங்கப்பட்டது.
இதில் கோவை மாவட்ட தலைவர் சம்பத் குமார், ராஜ்குமார், மைக்கேல், விஜய் ராஜ், சரவணன், ஸ்டீல் சேவியர், சத்தியமூர்த்தி, சேவியர் பாண்டி, சிவராஜ், ரமேஷ், மாநகர தலைவர் பாபு, விஜய் கோபால், தொண்டரணி தலைவர் விக்கி, மேற்கு நகர அக்பர், குணா, மகேஷ், ஆர்.எஸ்.புரம் அப்பாஸ், முத்துவேல்,
செயற்குழு உறுப்பினர் செந்தில், முஸ்தபா, பாபு, ராஜகோபால், உக்கடம் பகுதி ஞானசேகர், கெம்பட்டி காலனி சந்ரு, சுந்தராபுரம் விக்னேஷ், ரமேஷ், டவுன்ஹால் சதிஷ், நாடார் வீதி கார்த்தி, புலியகுளம் ஜான் டேவிட், மேட்டுப்பாளையம் நகர தலைவர் ரங்கராஜ், முகமது அலி, மேட்டுப்பாளையம் தொண்டரணி அண்ணாமலை, காளிசாமி, காரமடை ஒன்றிய கருப்புசாமி, வீரப்பன், சுபாஷ், முருகேஷ், காரமடை நகர பாத்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கேரள மாநிலத்தில் தொடர் மழையின் காரணமாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உதவிடும் வகையில் நிவாரணம் வழங்கலாம்.
மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிதியுதவி மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கிட ஏதுவாக சிவகங்கை மாவட்டத்திலுள்ள கொடையாளர்கள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் ஆகியோரிடம் நிதியுதவி, உணவு தானியப் பொருட்கள், மருத்துவப்பொருட்கள் மற்றும் ஆடைகள் பெறப்படுகின்றன.
கொடுக்கக்கூடிய நபர்கள் தாராளமாக முன்வந்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அலுவலகத்தில் வழங்கலாம்.
மேலும் தகவல் தெரிவிக்க கைப்பேசி எண்: 9445008149 மற்றும் 1077 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் வரலாறு காணாத கனமழையின் காரணமாக பல மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த தொடர் கனமழையின் காரணமாக தங்கள் வீடு உள்ளிட்ட உடைமைகளை இழந்து வாடும் கேரள மாநில மக்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் உணவு, பால், குடிநீர் உள்ளிட்ட நிவாரணபொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் பெரம்பலூர் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில், பல்வேறு வணிக சங்கங்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட அரிசி, சர்க்கரை, குடிநீர், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான 10 டன் நிவாரண பொருட்களை லாரியில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா நேற்று கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
இதில் மாவட்ட நியமன அலுவலர் (உணவு பாதுகாப்புத்துறை) சவுமியா சுந்தரி, மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் சண்முகநாதன், செயலாளர் இளங்கோவன், இணைச் செயலாளர் ரவிசுந்தரம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.