என் மலர்
நீங்கள் தேடியது "Resignation"
- அது நடந்து 36 வருடங்கள் கடந்துவிட்டன, இப்போது நிறைய விஷயங்கள் மாறிவிட்டன.
- இது ஒரு தீவிரமான விஷயம் எனக் கூறிய ஐஸ்லாந்தின் பிரதமர் கிறிஸ்ட்ரூன் ப்ரோஸ்டாட்டிர் தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் பிரதமர் கிறிஸ்ட்ரூன் ப்ரோஸ்டாட்டிர் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. இவரது அமைச்சரவையில் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்தவர் ஆஸ்தில்டர் லோவா தோர்ஸ்டாட்டிர் (58 வயது).
ஆஸ்தில்டர் சமீபத்தில் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தனது இள வயது அனுபவங்கள் குறித்து பேசியிருந்தார். அப்போது தனது 22 ஆவது வயதில், 16 வயது மாணவர் ஒருவருடன் உடலுறவு வைத்து குழந்தை பெற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
ஆஸ்தில்டர் பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அந்நாட்டில் கடும் கண்டனங்களை குவித்தது. இதனால் ஆஸ்தில்டர் வகித்து வந்த அமைச்சர் பதவிக்கே நெருக்கடி வந்தது. இந்த சர்ச்சை தொடர்பாக பிரதமர் கிறிஸ்ட்ரூன், நேற்று முன் தினம் இரவு ஆஸ்தில்டரை அலுவலகத்துக்கு வரழைத்து பேசினார். இதன்பிறகு ஆஸ்தில்டர் தனது அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

தனது ராஜினாமாவுக்கு பின் பேசிய அவர், "அது நடந்து 36 வருடங்கள் கடந்துவிட்டன, இப்போது நிறைய விஷயங்கள் மாறிவிட்டன. இன்று இந்தப் பிரச்சினைகளை நான் நிச்சயமாக வித்தியாசமாகக் கையாண்டிருப்பேன். அப்போது அதற்கான முதிர்ச்சி என்னிடம் இல்லை" என்று கூறினார்.
இதற்கிடையே இது ஒரு தீவிரமான விஷயம் எனக் கூறிய ஐஸ்லாந்தின் பிரதமர் கிறிஸ்ட்ரூன் ப்ரோஸ்டாட்டிர், "இது மிகவும் தனிப்பட்ட விஷயம், சம்பந்தப்பட்ட நபருக்கு மரியாதை அளிக்கும் விதமாக, இந்த விஷயத்தில் நான் மேலும் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன்" என்று தெரிவித்தார்.
- உத்தரகண்ட் "பஹாடிகளுக்கு" மட்டுமே உருவாக்கப்பட்டதா என்று அகர்வால் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
- எனது மாநிலம் வளர்ச்சியடைந்து முன்னேற வேண்டும் என்று நான் எப்போதும் விரும்புகிறேன்.
பாஜக ஆளும் உத்தரகாண்ட் நிதியமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவரது இல்லத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது கண்ணீர் விட்டு அழுதார்.
கடந்த பிப்ரவரி மாதம் மாநில சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அவர் தெரிவித்த கருத்துகளைச் சுற்றியுள்ள சர்ச்சையை காரணம் காட்டி, பதவி விலகுவதாக கூறி, முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் தனது ராஜினாமாவை அவர் சமர்ப்பித்தார். நாடாளுமன்ற விவகாரத் துறையையும் பிரேம்சந்த் நிர்வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் போது காங்கிரஸ் எம்.எல்.ஏ மதன் பிஷ்ட்டின் கருத்துக்கு பிரேம்சந்த் பதிலளித்தபோது சர்ச்சை வெடித்தது. உத்தரகண்ட் "பஹாடிகளுக்கு" மட்டுமே உருவாக்கப்பட்டதா என்று பிரேம்சந்த் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
மேலும் சூடான விவாதத்தின் போது நாடாளுமன்றத்திற்குப் புறம்பான மொழியைப் பயன்படுத்தினார். அவரது கருத்துக்கு பரவலான எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக பஹாடி மலைவாழ் மக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. மேலும் எதிர்க்கட்சிகளும் கடுமையான விமர்சனங்களைப் முன் வைத்தன.
தற்போது ராஜினாமா குறித்து செய்தியாளர்களிடம் அழுதபடி பேசிய பிரேம்சந்த் , எனது வார்த்தைகளுக்கும் அவற்றின் தாக்கத்திற்கும் நான் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன்.
எனது மாநிலம் வளர்ச்சியடைந்து முன்னேற வேண்டும் என்று நான் எப்போதும் விரும்புகிறேன். எனது பங்களிப்பு என்னவாக இருந்தாலும், அதை நான் செய்வேன். எனவே, இன்று, எனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன் என்று தெரிவித்தார்.
- மாநகராட்சி நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் மக்களை திரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக என அ.தி.மு.க. குழு தலைவர் சோலைராஜா பேட்டியளித்துள்ளார்.
- உள்ளாட்சித் தினமான இன்று மதுரை மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மாநகர சபா குழு கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
மதுரை
உள்ளாட்சித் தினமான இன்று மதுரை மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மாநகர சபா குழு கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் மாநகர சபை குழு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கவுன்சிலர்கள் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
இது தொடர்பாக மதுரை மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் குழு தலைவர் சோலைராஜா கூறியதாவது:-
மதுரை மாநகராட்சியில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 15 பேர் உள்ளோம். இன்று உள்ளாட்சித் தினத்தில் மாநகர சபை குழு கூட்டம் நடத்த அரசு அறிவித்துள்ளது. இதற்காக ஒவ்வொரு வார்டுகளிலும் கவுன்சிலர் தலைமையில் 10 பேர் குழு பட்டியல் கேட்கப்பட்டன.
நாங்கள் அந்தந்த வார்டுகளில் உள்ள தன்னார்வலர்கள் மற்றும் சேவை மனப்பான்மை கொண்டவரை இந்த பட்டியலில் உறுப்பினராக சேர்த்து ஒப்புதலுக்காக அனுப்பினோம். ஆனால் நாங்கள் அளித்த அந்த 10 பேர் குழு வில் 5 பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். மீதம் 5 பேர் தி.மு.க.வை சேர்ந்த வட்ட செயலாளர், ஏற்கனவே கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் மற்றும் தி.மு.க.வினர் சேர்க்கப்பட்டுள்ளனர். நாங்கள் இவர்களுடன் சேர்ந்து எப்படி செயல்படமுடியும்?
எங்கள் வார்டுகளில் எந்த பணியும் செய்யாமல் திட்டமிட்டு புறக்கணிப்பு செய்கின்றனர். இப்போது ஏற்படுத்தப்பட்டுள்ள மாநகர சபை குழுவிலும் எங்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு திமுகவினரே சேர்க்கப்பட்டுள்ளனர். இது எப்படி நியாயமாகும்.
ஏற்கனவே மதுரை மாநகராட்சி நிர்வாகம் செயல்படாமல் முடங்கி இருக்கின்றது. வார்டுகளில் எந்த பணியும் நடக்கவில்லை. ஒவ்வொரு மாமன்ற கூட்டத்தின் போதும் மக்கள் பிரச்சினைகளை பற்றி பேசுகிறோம். ஆனால் அதற்கு முறைப்படியான எந்த தீர்வும் கிடைக்கவில்லை.
தெருவிளக்கு, பாதாள சாக்கடை, சாலை வசதி உள்ளிட்ட மக்களின் அடிப்படை வசதிகளை தீர்க்க பலமுறை கோரிக்கை விடுத்தும் எங்களது கோரிக்கைகளை கேட்க மறுக்கிறார்கள். இப்படி செயல்படாத மாநக ராட்சியில் கவுன்சிலராக இருப்பதைவிட இந்த பதவியை ராஜினாமா செய்யும் சூழ்நிலைதான் உருவாகப்போகிறது.
எனவே அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 15 பேரும் ராஜினாமா செய்வதை தவிர வேறு வழியில்லை. மக்களுக்கு சேவை செய்ய முடியாத பதவியில் எதற்காக இருக்க வேண்டும்?
தி.மு.க.வினர் தொடர்ந்து பழிவாங்கும் போக்கில் நிர்வாகத்தை நடத்தி வருகிறார்கள். இதனை மதுரை மக்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். வார்டுகளில் எந்த பணியும் நடக்கவில்லை. பணியே நடக்காத வார்டுக்கு குழு ஒரு கேடா? செயல்படாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் மக்களை திரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
முன்னதாக மதுரை மாநகராட்சி ஆணையாளரை நாங்கள் சந்தித்து பேச உள்ளோம்.அவரிடம் நாங்கள் அளித்த மாநகர சபா குழு பட்டியலின்படி மாநகர சபை குழு கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவோம்.எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் இந்த கூட்டத்தில் நாங்கள் பங்கேற்க மாட்டோம்.கூட்டத்தையும் நடத்த விட மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 15 பேரும் உடனிருந்தனர்.
- வைகோவின் பேச்சாற்றல் 4 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்ததே தவிர தற்போது எதுவும் இல்லை.
- தற்போது நான் அரசியல் வாழ்க்கையில் இருந்து ஒதுங்குகிறேனே தவிர பொது வாழ்க்கையில் இருந்து ஒதுங்கவில்லை.
திருப்பூர்:
ம.தி.மு.க.வில் இருந்து விலகுவதாக அறிவித்த அவைத்தலைவர் துரைச்சாமி திருப்பூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ம.தி.மு.க. இனி தனியாக வளர்வதற்கு வாய்ப்பில்லை. ஏற்கனவே நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் கருணாநிதியின் முன்னணி தோழர்களை ம.தி.மு.க.வில் இருந்து ராஜினாமா செய்யக்கூறியதுடன், அவர்கள் தி.மு.க.வில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுதான் உதயசூரியன் சின்னம் கொடுக்கப்பட்டது. அப்படி என்றால் ஏற்கனவே நாம் தி.மு.க.வில் இணைந்துவிட்டோம். இனி தனிக்கட்சி வைத்து நடத்தக்கூடிய சூழ்நிலை இல்லை.
வைகோவின் பேச்சாற்றல் 4 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்ததே தவிர தற்போது எதுவும் இல்லை. இனியும் ஒரு அமைப்பை வைத்து நடத்த முடியாது. தற்போது நான் அரசியல் வாழ்க்கையில் இருந்து ஒதுங்குகிறேனே தவிர பொது வாழ்க்கையில் இருந்து ஒதுங்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
- கன்னியாஸ்திரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
- ராஜினாமாவை போப்பாண்டவர் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோட்டயம் முள்ளக்கல்லை சேர்ந்தவர் பிராங்கோ முள்ளக்கல். இவர் ஜலந்தர் ஆயராக இருந்தார். அப்போது கன்னியாஸ்திரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. அப்போது இந்த பிரச்சினை கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பிராங்கோ முள்ளக்கல் ஜலந்தர் ஆயர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக தகவல் வெளியானது. அவரது ராஜினாமாவை போப்பாண்டவர் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
பாலியல் புகார் தொடர்பாக அவர் ராஜினாமா செய்யவில்லை என்றும், மறைமாவட்ட நன்மைக்காக ராஜினாமா செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
- செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவிலாங்குளம் ஊராட்சியில் நிர்வாகம் வெளிப்படையாக நடைபெறவில்லை.
- 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது.
மதுரை:
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக கலெக்டர் சங்கீதாவிடம் கொடுத்தனர்.
மதுரை மாவட்டம் கோவிலாங்குளம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் தனம், ஜெயலட்சுமி, ஜெயக்கொடி, பஞ்சு, தங்கசாமி, பாண்டியராஜன் ஆகியோர் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் சங்கீதாவை சந்தித்து தாங்கள் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக கூறி அதற்கான கடிதத்தை கொடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து கோவிலாங் குளம் ஊராட்சி மன்ற உறுப்பினர்களிடம் கலெக்டர் விளக்கம் கேட்டார். அவர்கள் ஊராட்சியில் வெளிப்படை தன்மை இல்லை எனக்கூறி ராஜினாமா செய்வதாக தெரிவித்தனர்.
ராஜினாமா கடிதம் கொடுத்த பின்பு ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் நிருபர்களிடம் கூறியதா வது:-
செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவிலாங்குளம் ஊராட்சியில் நிர்வாகம் வெளிப்படையாக நடைபெறவில்லை. 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து கேட்டால் உரிய பதில் இல்லை. வார்டுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுகிறார்கள். இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனை கண்டித்து நாங்கள் ராஜினாமா கடிதத்தை கலெக்டரிடம் கொடுத்துள்ளோம். அவர் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- விழுப்புரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராகவும் பதவி வகித்தவர் முரளி என்ற ரகுராமன்.
- ரகுராமன் தனது பதிவியை ராஜினாமா செய்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும் விழுப்புரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராகவும் பதவி வகித்தவர் முரளி என்ற ரகுராமன். இவரை நேற்று அ.தி.மு.க. வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி அ.தி.முக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து கடந்த 9 ஆண்டுகளாக விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக இருந்த முரளி என்ற ரகுராமன் தனது பதிவியை ராஜினாமா செய்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
கடந்த 35 ஆண்டுகளாக அதிமுக கட்சி பதவியில் வகித்து பல்வேறு கட்சி பணிகளை செய்து வந்தேன். எனது இளைய மகன் திருமணத்திற்கு புதுவை மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் வந்து கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் திண்டிவனத்தில் ஸ்ரீராம் அறக்கட்டளை சார்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் 39 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. இதனால் அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து எந்தவித அறிவிப்பும் இன்றி என்னை நீக்கியுள்ளனர் இவ்வாறு அவர் கூறினார்.அவரிடம் நீங்கள்பாஜக கட்சியில் இணைந்துள்ளீர்களா? என நிருபர்கள் கேட்டபோது இதற்கு பதில் கடவுளுக்கு மட்டுமே தெரியும் என்று கூறினார்.
- தனது ராஜினாமாவை இவ்வாறு ஒரு நீதிபதி அறிவிப்பது இது முதல் முறை
- டிசம்பர் 2025ல் அவர் பணியிலிருந்து ஓய்வடைய இருந்தார்
மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் பெஞ்சை சேர்ந்த உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி, ரோஹித் தியோ, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இத்தகவலை அவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களும், வழக்காடுபவர்களும் கூடியிருந்த போது, அனைவரும் அறியும்படி அறிவித்தார்.
ஒரு நீதிபதி இவ்வாறு தனது ராஜினாமாவை அறிவிப்பது இது முதல் முறை என தெரிகிறது.
நேற்று தனது ராஜினாமா குறித்து அறிவித்த நீதிபதி ரோஹித், சொந்த காரணங்களுக்காக பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.
அவர் அப்போது அறிவித்ததாவது:
நீதிமன்றத்தில் உள்ள உங்கள் ஒவ்வொருவரிடமும் நான் மன்னிப்பு கோருகிறேன். நான் உங்களை கடிந்து கொண்டிருக்கிறேன். ஆனால் அது நீங்கள் முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான்; உங்களை காயப்படுத்த அல்ல. உங்கள் அனைவரையும் என் குடும்ப உறுப்பினர்கள் போல்தான் நான் கருதுகிறேன். என் சுயமரியாதைக்கு எதிராக என்னால் பணி செய்ய முடியாது. நான் என் பதவியை ராஜினாமா செய்து விட்டேன். இதை உங்களிடம் வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு நீதிபதி ரோஹித் தெரிவித்தார்.
அவர் தனது ராஜினாமா கடிதத்தை இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவிற்கு அனுப்பி உள்ளார்.
ஜூன் 2017ல் மும்பை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி ரோஹித் டிசம்பர் 2025ல் பணியிலிருந்து ஓய்வடைய இருந்தார்.
உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரையின்படி உயர் நீதிமன்ற பதிவுத்துறை, நீதிபதி ரோஹித்தை அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இதற்கும் அவர் ராஜினாமாவிற்கும் சம்பந்தம் இல்லை எனத் தெரிகிறது.
- தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்றுக்கொண்டார்.
- பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ரேவந்த் ரெட்டி ராஜினாமா செய்துள்ளார்.
தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள எல்.பி. மைதானத்தில் புதிய மந்திரி சபை பதவி ஏற்பு விழா கடந்த 7ம் தேதி நடைபெற்றது. இதில் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.
அவருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து 20 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ரேவந்த் ரெட்டி ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ரேவந்த் ரெட்டி தாக்கல் செய்துள்ளார்.
- தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்துள்ளார்.
- குடியரசுத் தலைவரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.
பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை பன்வாரிலால் புரோகித் வழங்கியுள்ளார்.
நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்த நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளார்.
- அரசு நடத்தும் குழந்தைகள் இல்ல நிர்வாகி மீது பாலியல் துஷ்பிரயோக வழக்கு தொடரப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
- அதிபர் கடாலின் நோவக்குக்கு எதிர்ப்பு வலுத்தது. அவர் பதவி விலகக்கோரி போராட்டங்கள் நடந்தன.
ஹங்கேரி நாட்டுப் பெண் அதிபராக இருந்தவர் கடாலின் நோவக். இவர் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய நபருக்கு மன்னிப்பு வழங்கினார்.
அரசு நடத்தும் குழந்தைகள் இல்ல நிர்வாகி மீது பாலியல் துஷ்பிரயோக வழக்கு தொடரப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அந்த நிர்வாகிக்கு அதிபர் கடாலின் நோவக் மன்னிப்பு வழங்கி இருந்தார். இதற்கு நீதித்துறை மந்திரி ஜூடிட் லர்கா அனுமதி அளித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிபர் கடாலின் நோவக்குக்கு எதிர்ப்பு வலுத்தது. அவர் பதவி விலகக்கோரி போராட்டங்கள் நடந்தன.
இந்த நிலையில் கடாலின் நோவக் அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து ராஜினாமா செய்தார். இது தொடர்பாக அவர் தொலைக்காட்சியில் கூறும்போது நான் ஒரு தவறு செய்துவிட்டேன். குழந்தைகள் இல்ல நிர்வாகி, துஷ்பிரயோகம் செய்யவில்லை என்று நம்பி மன்னிப்பு வழங்க முடிவு செய்தேன்.
ஆனால் அதில் நான் தவறு செய்துவிட்டேன். இன்று நான் உங்களை அதிபராக சந்திப்பது கடைசி நாள் என்றார்.
அதேபோல் நீதித்துறை மந்திரி வர்காவும் பதவி விலகினார்.
- அசோக் சவான் சட்டசபை சபாநாயகர் ராகுல் நர்வேக்கரை சந்தித்து பேசினார்.
- பாராளுமன்ற தேர்தலை யொட்டி அசோக்சவான் பாரதீய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக தகவல்.
மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் அசோக்சவான். இவர் மராத்வாடா பகுதியில் உள்ள நான்டெட் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை மறைந்த சங்கர்ராவ் சவானும் மகாராஷ்டிராவின் முதல்வராக இருந்தார்.
மும்பையில் ஆதர்ஷ் வீட்டு வசதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி 2010-ம் ஆண்டு அசோக்சவான் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். 2014 முதல் 2019 வரை மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார்.
இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று விலகி உள்ளார். இது தொடர்பாக மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானாபடோலேவுக்கு அசோக்சவான் ராஜினாமா செய்வதாக கடிதம் எழுதி அனுப்பி உள்ளார்.
முன்னதாக இன்று காலை அசோக் சவான் சட்டசபை சபாநாயகர் ராகுல் நர்வேக்கரை சந்தித்து பேசினார்.
இன்று போகர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தனது சட்டமன்ற உறுப்பினர் (எம்எல்ஏ) பதவியை நான் சட்டமன்ற சபாநாயகர் ராகுல்ஜி நர்வேகரிடம் அளித்துள்ளேன்" என்று அசோக் சவான் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டு உள்ளார்.
மேலும் வருகிற பாராளுமன்ற தேர்தலை யொட்டி அசோக்சவான் பாரதீய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அசோக்சவான் பாஜகவில் சேரக்கூடும் என்ற தகவல் குறித்து மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடம் நிருபர்கள்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு அவர் கூறியதாவது:-
பல எதிர்க்கட்சித் தலைவர்கள் பாஜகவில் சேர விரும்புகிறார்கள். பல காங்கிரஸ் தலைவர்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்.
ஏனெனில் அவர்கள் தங்கள் கட்சியில் மூச்சுத்திணறல் அடைந்து உள்ளனர். ஆகவே அடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்து இருந்து பாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.