என் மலர்
நீங்கள் தேடியது "respect"
- மருதுபாண்டியர் நினைவிடத்தில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க. வினர் மரியாதை செலுத்தினர்.
- கிராம மக்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து மருது சகோதரர்களின் சிலைக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைந்த மருது சகோதரர்களின் 221-வது நினைவு தினமான அக்டோபர் 24-ந் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அக்டோபர் 27-ந் தேதி (இன்று) காளையார் கோவில் உள்ள மருது சகோதரர்கள் நினைவிடத்தில் பொதுமக்களால் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதில் அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ., நாகராஜ், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் தமிழ் செல்வம், ஒன்றிய செயலாளர்கள் பழனிசாமி, சிவாஜி, ஸ்டீபன், கோபி, கருணாகரன், சேவியர், தசரதன், செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டு மருது சகோதரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
கிராம மக்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து மருது சகோதரர்களின் சிலைக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
- ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 6-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு தஞ்சையில் அ.தி.மு.க. ( ஓ.பி.எஸ் . அணி ) சார்பில் கரந்தை பகுதி செயலாளர் அறிவுடை நம்பி தலைமையில் தஞ்சை ஆற்றுப்பாலத்தில் இருந்து நிர்வாகிகள் ஊர்வலமாக ரயில் நிலையம் முன்பு வந்தனர்.
பின்னர் அங்குள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பகுதி செயலாளர்கள் ரமேஷ், சாமிநாதன், சண்முக பிரபு, ஒன்றிய செயலாளர்கள் துரை வீரணன், சாமிவேல் , பாவா என்ற ராமச்சந்திரன், திருச்சி மண்டலதகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வினுபாலன்,முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் அமுதா ரவிச்சந்திரன், தொகுதி செயலாளர் நாஞ்சி சத்யராஜ், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி தவமணி, பொதுக்குழு உறுப்பினர் ராஜா, மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் வீரராஜ், கரந்தை பகுதி துணை செயலாளர் சி.ஏ.தாஸ், குளிச்சப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் இளவரசி கலியமூர்த்தி, தஞ்சை சட்டமன்றத் தொகுதி இணை அமைப்பாளர் முரளி முருகன், கவுன்சிலர்கள் மணிகண்டன், சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது.
தஞ்சாவூர்:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 6-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று தஞ்சையில் அ.தி.மு.க. (இ.பி.எஸ். அணி) சார்பில் தஞ்சை சாந்தி கமலா தியேட்டர் அருகில் இருந்து மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை திருஞானம், பால்வளத் தலைவர் காந்தி ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் ஊர்வலமாக புறப்பட்டனர்.
பின்னர் தஞ்சை ரயில் நிலையம் முன்பு உள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அருகிலுள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கும் மரியாதை செய்தனர்.
இதில் எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராஜமாணிக்கம், அச்சகத் தலைவர் புண்ணியமூர்த்தி, நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் சரவணன், முன்னாள் மேயர் சாவித்ரி கோபால், முன்னாள் நகர செயலாளர் பஞ்சாபிஷேகன், சிறுபான்மை பிரிவு தலைவர் ஜாபர், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் நாகராஜன், முன்னாள் கவுன்சிலர் பூபதி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தம்பி என்ற சோம ரத்தினசுந்தரம், மாணவரணி முருகேசன், அம்மா பேரவை துணைச் செயலாளர் பாலை ரவி , கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகத்தி கலியமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கவிதா கலியமூர்த்தி, 51-வது வட்ட செயலாளர் மனோகரன், கவுன்சிலர்கள் கோபால், தட்சிணாமூர்த்தி, காந்திமதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- தஞ்சை மேலவீதியில் வைக்கப்பட்ட ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- பொது மக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு தஞ்சை மேல வீதியில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா படத்திற்கு மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை திருஞானம், பால்வளத் தலைவர் காந்தி ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுபின்னர் முன்னாள்மேயர் சாவித்ரி கோபால், கவுன்சிலர் கோபால் ஆகியோர் ஏற்பாட்டின்படி பொது மக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் எம்.ஜி.ஆர் மன்ற இணை செய லாளர் ராஜமாணிக்கம், கூட்டுறவு அச்சகத் தலைவர் புண்ணி யமூர்த்தி, பகுதி செயலா ளர் சாமிநாதன், மாண வரணி முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பெரியார்-எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு அ.தி.ம.மு.க. சார்பில் மரியாதை வருகிற 24-ந்தேதி நினைவு தினம் செலுத்தப்படுகிறது.
- அதைப் போல தமிழகம் முழுவதும் கட்சி சார்பில் பெரியார், எம்.ஜி.ஆர். ஆகியோரின் நினைவு தினத்தை கடைபிடித்திட வேண்டுகிறேன்.
மதுரை
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-
பகுத்தறிவு பகலவன், ஈரோட்டு வேங்கை மூட நம்பிக்கை எனும் முடைநாற்றத்தை அடியோடு ஒழித்த தந்தை பெரியார் அவர்களின் நினைவு தினமும், ஏழைகளின் ஒளி விளக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நினைவு தினமும் வருகிற 24-ந்தேதி அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த இருபெரும் தலைவர்களுக்கு வீர வணக்கமும், புகழ் அஞ்சலியும் அ.தி.ம.மு.க. சார்பில் கடைப்பிடிக்கப்படும், அவைத்தலைவர் தாஜுதீன் தலைமையில், துணைப்பொது ச்செயலாளர்கள் நெல்லை முத்துக்குமார், ஈரோடு செந்தில் குமார் ஆகியோர்கள் முன்னிலையில் கழகப் பொதுச்செயலாளாராகிய நானும், கழக தலைமை நிலையச் செயலாளர் முரளி ஆகியோர் சென்னையில் உள்ள பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் நினைவு அஞ்சலி செலுத்துவார்கள். பின்பு கொளத்தூரில் முதன்மைச் செயலாளர் அகரம் சீனிவாசன் ஏற்பாடு செய்துள்ள அன்னதான நிகழ்ச்சி நடத்தப்படும்,
பின்னர் பொருளாளர் பி.கே.மாரி ஏற்பாடு செய்துள்ள அன்னதான நிகழ்ச்சி சென்னை பூக்கடை பஜாரில் பகல் 12மணிக்கு நடத்தப்படும், அதன் பின்பு சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.தி.ம.மு.க. சார்பில் புகழ் அஞ்சலி செலுத்தப்படும்,
இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டுகிறேன், அதைப் போல தமிழகம் முழுவதும் கட்சி சார்பில் பெரியார், எம்.ஜி.ஆர். ஆகியோரின் நினைவு தினத்தை கடைபிடித்திட வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை-அன்னதானத்திற்கான ஏற்பாடுகளை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. செய்திருந்தார்.
- தொடர்ந்து அந்தப்பகுதியில் பொது மக்கள் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்பரங்குன்றம்
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் அ.தி.மு.க. நிறுவனத்தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவுநாள் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் இன்று அனுசரிக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாவட்ட செய லாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஏற்பாட்டின் பேரில் இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமையிலும், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து அந்தப்பகுதியில் பொது மக்கள் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் ஓம்.கே.சந்திரன், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், இலக்கிய அணி செயலாளர் மோகன்தாஸ், ஜெ பேரவை மாவட்ட பொருளாளர் பாண்டுரங்கன், கூட்டுறவு சங்க தலைவர் வேல்ராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் மாயி, துணைச்செயலாளர் செல்வ குமார், வட்டச் செயலாளர்கள் நாகரத்தி னம், பொன்.முருகன், பாலா, எம்.ஆர்.குமார், என். எஸ். பாலமுருகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- இன்று 35-வது நினைவு நாளை முன்னிட்டு மதுரையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
- முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் திரண்டனர்.
மதுரை
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி மதுரை மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் எம்.ஜி.ஆர். படத்திற்கு அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
எம்.ஜி.ஆரின் புகழை பரப்பு வகையில் அனைத்து பகுதிகளிலும் ஒலிபெருக்கி யில் பாடல்களும் ஒலிபரப்பு செய்யப்பட்டன.
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அந்த கட்சியினர் பனகல் ரோட்டில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் முன்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி னர்.
இதைத்தொடர்ந்து மதுரை கே.கே.நகர் ரவுண்டானா பகுதியில் உள்ள எம்.ஜி.ஆரின் முழு உருவ சிலைக்கு செல்லூர் ராஜூ தலைமையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றனர். முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பின்னர் பொதுமக்க ளுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவில் எம்.ஜி. ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அ.தி.மு.க.வினர் திரண்டனர் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப் பட்டன.
மதுரையில் ஓ பன்னீர் செல்வம் ஆதரவு அ.தி.மு.க.வினர் முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் தலைமையில் கே.கே.நகர் ரவுண்டானாவில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது பொது மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
- எம்.ஜி.ஆர். சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
- பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ராஜபாளையம்
ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ராமசாமி ராஜா சாலையில் உள்ள அவரது சிலைக்கு நகர வடக்கு அ.தி.மு.க. செயலாளர் வக்கீல் துரைமுருகேசன், தெற்கு செயலாளர் பரமசிவம், மாவட்ட பேரவை செயலாளர் எம்.என்.கிருஷ்ணராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எஸ். என். பாபுராஜ் தலைமையில் தெற்கு, மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எம்.குருசாமி, நவரத்தினம் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தென்காசி சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. இணைச் செயலாளர் அழகுராணி, மாவட்ட இளைஞரணி இணைச்செயலாளர் வனராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் யோகசேகரன், மேலப்பாக்கம் கரிசல்குளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அழகாபுரியான், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலர் சோலைமலை, முன்னாள் கவுன்சிலர் குருசாமி, சேத்தூர் பேரூர் செயலாளர் பொன்ராஜ் பாண்டியன், மகளிரணி நிர்வாகி ராதா கிருஷ்ணா ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- எம்.ஜி.ஆர். நினைவுநாளில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலம் நடத்தினர்.
- சிவகங்கை பஸ்நிலையம் முன்பு உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவி த்து மரியாதை செலுத்தினர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நகர செயலாளர் ராஜா ஏற்பாட்டில் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.
வுமான செந்தில்நாதன் தலைமையில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையில் அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலமாக வந்தனர்.
சிவகங்கை பஸ்நிலையம் முன்பு உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவி த்து மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் குணசே கரன், நாகராஜன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்பாஸ்கரன், முன்னாள் தலைவர் சிவதேவ்குமார், தேவகோட்டை நகர் மன்ற தலைவர் சுந்தர லிங்கம், ஒன்றிய செய லாளர்கள் கருணா கரன், அருள்ஸ்டிபன், பழனிச்சாமி, சிவாஜி, ஸ்ரீதரன், பாரதிராஜன் ஜெகசுவரன், சோனைரவி, தகவல் தொழில்நுட்ப மண்டல இணை செயலாளர் தமிழ்செல்வன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், வக்கீல் பாரதிகண்ணன், பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் சங்கர்ராமநாதன், குழந்தை, நகர, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
- தேவகோட்டையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பி.எஸ். அணியினர் மரியாதை செலுத்தினர்.
- மாவட்ட செயலாளர் அசோகன் உறுதிமொழி வாசிக்க அனைவரும் திரும்பக்கூறி எடுத்துக்கொண்டனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஆர்ச் பூங்கா அருகில் ஓ.பி.எஸ்.அணி அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆரின் 35-வது ஆண்டு நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் அசோகன், கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் தலைமை தாங்கினார்.
திருச்சி-ராமேசுவரம் சாலையில் சங்கரபதி அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் அசோகன், கொள்கை பரப்பு செயலா ளர் மருதுஅழகுராஜ் தலைமையில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்ப ட்டோர் தேவகோட்டை ஒன்றிய அலுவலகத்தில் இருந்து மவுன ஊர்வலமாக புறப்பட்டனர்.
திருப்பத்தூர் சாலை வழியாக தியாகிகள் அருகே அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் மாவட்ட செயலாளர் அசோகன் உறுதிமொழி வாசிக்க அனைவரும் திரும்பக்கூறி எடுத்துக்கொண்டனர்.
மாநில மாணவரணி செயலாளர் ஆசைத்தம்பி, நகர் செயலாளர்கள் ரவிக்குமார், பாலா, ஒன்றிய செயலாளர்கள் மருத்தாணி வினோத், தியாகராஜன், ராமசந்திரன், பாவாசி கருப்பையா, கண்ணங்குடி ஒன்றிய செயலாளர்கள் உலக்குடி பாலசுப்பிர மணியன், பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா சிலைகளுக்கு அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு
மதுரை
முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் வி.கே.எஸ்.மாரிச்சாமி, பி.எஸ்.கண்ணன் முன்னிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா சிலைகளுக்கு ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் சோலை குணசேகரன், மீனவரணி மாவட்ட செயலாளர் ராமநாதன், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் வையத்துரை மாரி, ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் சுந்தரா, இளைஞரணி மாவட்ட செயலாளர் சரவணன், குருசாமி, பாண்டி கோவில் பூசாரி கார்த்திகேயன்,முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயக்குமார்,கோச்சடை ராஜேந்திரன், ஒன்றிய செயலர்கள் யோகராஜ், ஜோதிமுருகன் மற்றும் முத்திருளாண்டி, துதிதிருநாவுக்கரசு, சோலை இளவரசன், ஆரைக்குடி முத்துராமலிங்கம், வேல்முருகன், கீழமாத்தூர் தங்கராஜ், குமரேசன், பொதுக்குழு உறுப்பினர் பஞ்சவர்ணம், சரோஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் 500 பேர் கண்தானம் செய்தனர்.
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படத்திற்கு மலர் துவியும் மரியாதை செலுத்தபட்டது.
நாகப்பட்டினம்:
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 126-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்வி நிறுவனங்கள் சார்பாக தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தியும், கண் தானம் செய்ய வலியுறுத்தியும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மாறன் தொடக்கி வைத்தார். பேரணி திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து தொடங்கி நகராட்சி அலுவலகம் வரை சென்றது.
இறுதியில் பேரணியை திருவாரூர் நகர இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் முடித்து வைத்தார்.
பேரணியில் திருவாரூர் மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்கள், மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், மகாத்மாகாந்தி, பண்டிதர் ஜவகர்லால் நேரு, மகாகவி பாரதியார், லால் பகதூர் சாஸ்திரி போன்ற தேச தலைவர்கள் வேடமிட்டு சென்றனர்.
கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் 500 பேர் கண்தானம் செய்தனர்.
முன்னதாக தேசிய கொடி ஏற்றியும், தேசபக்தி பாடல்கள் பாடியும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படத்திற்கு மலர் துவியும் மரியாதை செலுத்தபட்டது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் வெங்கட்ராஜு, செயலர் சுந்தர்ராஜ், முதன்மை செயல் அதிகாரி நிர்மலா ஆனந்த் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கல்வி குழுமத்தின் இயக்குநர் விஜயசுந்தாரம், நிர்வாக அலுவலர் சீதா கோபாலன், கல்லூரி மற்றும் பள்ளி முதல்வர்கள் சிவகுருநாதன், கலைமகள், சுமித்தரா மற்றும் துணை முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.