என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Road Blockade Protest"

    • ஆறுமுகநேரியில் திடீர் சாலை மறியல் போராட்டங்களால் திருச்செந்தூர் - தூத்துக்குடி சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    • திடீர் சாலை மறியல் போராட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் கடந்த 2 மாதங்களில் அரசியல் கட்சி அல்லாத பல்வேறு தரப்பினரால் நடத்தப்படும் திடீர் சாலை மறியல் போரா ட்டங்களால் திருச்செந்தூர் - தூத்து க்குடி சாலையில் கடுமை யான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ஏற்கனவே இந்த வழியில் மிகுந்த போக்கு வரத்து நெருக்கடி உள்ள சூழ்நிலையில் இப்படி யான போராட்டங்க ளால் பயணிகளும் பொது மக்களும் பெரிதும் சிரமத் துக்கு ஆளாகி வரு கின்றனர்.

    இதனிடையே நேற்று மாலையில் ஆறுமுகநேரி மெயின் பஜார் சந்திப்பில் மேலும் மற்றொரு ' திடீர்' சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பிரபல அறக்கட்டளை நிறுவனர் பாலகுமரேசன் கடந்த டிசம்பர் மாதம் 29-ந் தேதி ஒரு கும்பலால் பயங்கரமாக தாக்கப்பட்டார்.

    இந்த வழக்கில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 2 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள தாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாலகுமரேசன் தாக்கப்பட்ட சம்பவத்தில் சதி திட்டம் தீட்டியதாக மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் உள்ளிட்ட தனி ப்படையினர் ஆறுமுகநேரி காமராஜபுரத்தை சேர்ந்த சாந்தன் மகன் ராஜேஷ் (28) என்பவரை மதுரையில் வைத்து நேற்று கைது செய்துள்ளனர்.

    இதனை கண்டித்தும் ராஜேஷ் மீது போலீசார் பொய் வழக்கு போட்டிருப்ப தாக கூறியும் அவரது மனைவி, தாய், அக்காள், அண்ணன் மற்றும் உறவினர்கள் திரண்டு ஆறுமுகநேரி மெயின் பஜார் சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து தடைப்பட்டு 4 சாலை களிலும் வெகு தூரத்திற்கு வாகனங்கள் நின்றன. உடனே அங்கு ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் செந்தில், ஆத்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்பட போலீ சார் விரைந்து வந்தனர். அவர்களிடம் போராட்ட குழுவினர் கடுமையாக வாக்குவாதம் செய்தனர்.

    ஆனால் போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

    இப்படியான திடீர் சாலை மறியல் போராட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • 20 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீா் வழங்கி வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனா்.
    • 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

    அவினாசி :

    திருமுருகன்பூண்டி நகராட்சி 4, 5, 8, 9 வாா்டுகளுக்கு உள்பட்ட துரைசாமி நகா், துரைசாமி நகா் விரிவாக்கம், விநாயகா காா்டன், விநாயகா காா்டன் விரிவாக்கம், தன்வா்ஷினி நகா், முல்லை நகா், மகாலட்சுமி காா்டன், எம்ஜிஆா் நகா், என்எஸ் பி நகா், ஏவிபி லட்சுமி அம்மாள் லே அவுட் உள்ளிட்ட பகுதிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.இப்பகுதி மக்களுக்கு தொடா்ந்து 6 மாதங்களாக 20 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீா் வழங்கி வருவதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனா். மேலும் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டனா்.

    இந்தநிலையில் 25 நாட்களுக்கு மேலாகியும் குடிநீா் வழங்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நகராட்சி ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது,3 நாட்களுக்குள் குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையா் அப்துல் ஹாரிஸ், நகர மன்றத் தலைவா் குமாா் ஆகியோா் உறுதியளித்தனா். 3 நாட்களுக்குள் குடிநீா் பிரச்சனைக்குத் தீா்வு ஏற்படாவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

    • தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் பழைய பஸ் நிலையம் முன்பு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 31 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.

    தூத்துக்குடி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பில் இடைக்கால தடை விதிக்கக்கோரி குஜராத் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை கண்டித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி. எஸ். முரளிதரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பழைய பஸ் நிலையம் முன்பு திரண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் சண்முகம், மகிளா காங்கிரஸ் துணை தலைவி கனியம்மாள், மாநில அமைப்புசாரா தொழிற்சங்க தலைவர் மகேஸ்வரன், கவுன்சிலர்கள் சந்திரபோஸ், எடிந்தா, கற்பக கனி, மண்டல தலைவர்கள் ராஜன், சேகர், செந்தூர் பாண்டி, மாவட்ட துணைத் தலைவர்கள் விஜயராஜ், பிரபாகரன், மார்க்கஸ், சின்ன காளை, சீனிவாசன், மாவட்ட பொதுச்செயலாளர் மைக்கில் பிரபாகர், மாவட்ட செயலாளர்கள் கோபால், கந்தசாமி, முனியசாமி, அந்தோணி குரூஸ், கிருஷ்ணன், வெங்கடசுப்பிரமணியன், சாமுவேல் ஞானதுரை, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆரோக்கியம், ஐ.என்.டி.யு.சி. மாநில அமைப்பு செயலாளர் சுடலை, அமைப்பு சாரா மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் ஜான்சாமுவேல், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், கலை பிரிவு மாவட்ட தலைவர் செல்வராஜ் மற்றும் தனுஷ், தாமஸ், மணி, கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 31 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    • டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
    • தற்போது மீண்டும் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு தீவிர முயற்சி செய்து வருகிறார்கள்.

    ஊத்துக்குளி : 

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம், வடுகபாளையம் கிராமம், கே.கே.நகர் பகுதியில் குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சார்பில் திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிரு ப்பதாவது:-

    ஊத்துக்குளி வட்டம், வடுகபாளையம் கிராமம், கே.கே.நகர் பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு சிலர் முயற்சித்து வருகிறார்கள். கடை எண் 3679ஐ இடமாற்றம் செய்து வடுகபாளையம் கிராமம், கே.கே.நகர் பகுதியில் அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதேபோல் ஏற்கனவே 2017-ம் ஆண்டு புதிய கடை அமைக்க முயற்சித்தபோது சென்னை உயர்நீதிமன்றத்தில் தடையாணை ெபறப்பட்டது. தற்போது மீண்டும் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு தீவிர முயற்சி செய்து வருகிறார்கள். டாஸ்மாக் கடை அமையும் பட்சத்தில் அங்கு வரும் குடிமகன்களால் பெண்களுக்கு மிகப்பெரிய தொல்லைகள் ஏற்படும். இது தவிர அருகாமையில் உள்ள விவசாய நிலங்கள், வழித்தடங்கள், காலி மனைகளில் குடிமகன்களால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. டாஸ்மாக் வருவதால் பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கே.கே.நகர் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என்று கூறியிருந்தனர்.

    மேலும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக கூறி அங்கு அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். எனவே டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது. உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்களது போராட்டம் தீவிரமாகும் என அப்பகுதி பொதுமக்கள் தெரி வித்துள்ளனர்.

    • சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக வந்து கலெக்டரிடம் மனு.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தாராட்சி, தாமரைக்குப்பம், பேரண்டூர், செஞ்சியகரம் ஆகிய நான்கு ஊராட்சிகளை பேரூராட்சியோடு இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதற்கு இந்த ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தங்கள் ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் தாராட்சி உள்பட 4 ஊராட்சியை சேர்ந்த ஊராட்சிமன்றத் தலைவர்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் ஊராட்சியை, பேரூராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் டோல்கேட் பகுதியில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக வந்து கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர்.

    அப்போது கலெக்டர் வெளியே சென்று இருந்ததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் திடீரென மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

    இதையடுத்து திருவள்ளூர் டவுன் போலீசார் எவ்வித அனுமதியும் இன்றி நெடுஞ்சாலையில் ஊர்வலமாக வந்து பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையுறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டதாக 100 பெண்கள் உள்பட 131 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுபற்றி மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    • ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.
    • மணிக்கூண்டு பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆத்தூர்:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை மற்றும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையை இழிவாக பேசியதாக கூறி பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆத்தூர் பஸ் நிலையம் மணிக்கூண்டு பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அர்த்தனாரி தலைமை தாங்கினார். இதில் ஏராளமான காங்கிரசார் கலந்துகொண்டு அண்ணாமலைக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

    மேலும் ஆட்டுக்குட்டியுடன் திடீரென அவர்கள் சாலை மறியல் போராட்டமும் நடத்தினர். மேலும் அண்ணாமலையின் உருவப்படத்தையும் எரிக்க முயன்றனர்.

    இதையடுத்து போலீசார் 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • குழந்தைகள், பள்ளி மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து சாலை மறியல் போராட்டம்.
    • அ.தி.மு.க. வினரும் மறியலில் பங்கேற்றனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு தற்போது திருமங்கலம்-ராஜபாளையம் சாலையில் பணிகள் நடைபெற்று வருகிறது.

    அதில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி கிராமத்தில் சாலையின் ஒரு புறம் அரசு பள்ளிக்கூடம், ரேஷன் கடை மற்றும் கூட்டுறவு கடன் சங்கம் அரசுடமையாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது.

    மறுபுறத்தில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் சாலையை கடந்து செல்லும்போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. 20-க்கும் மேற்பட்டோர் தற்போது வரை காயம் அடைந்து உள்ளனர்.

    எனவே சாலையை கடப்பதற்கு கிராமத்தில் சுரங்கப்பாதை ஏற்படுத்திக் கொடுத்து அதன் பின்னர் நான்கு வழிச்சாலை பணியை தொடங்க வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் குடியரசு தினத்தன்று நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தையும் புறக்கணித்தனர்.

    அதன் பிறகும் அதிகாரிகள் எந்த உத்தரவாதமும் அளிக்காததால் கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் இன்று திருமங்கலம்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் குழந்தைகள், பள்ளி மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தொடர்ந்து தங்களுக்கு சுரங்கப்பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்து கோசங்கள் எழுப்பினர். தங்களுக்கு உரிய முடிவு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என கிராம மக்கள் தெரிவித்தனர்.

    இதனிடையே பொது மக்களின் சாலை மறியல் குறித்து தகவலறிந்த சட்ட மன்ற எதிர்க்கட்சி துணை தலைவரும், தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.பி. உதயகுமார் சம்பவ இடத்திற்கு வந்தார். அப்போது பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கூறி அவரும், அ.தி.மு.க. வினரும் மறியலில் பங்கேற்றனர்.

    4 மணிநேரத்துக்கும் மேலாக சாலைமறியல் போராட்டம் நடைபெற்று வருவதால் திருமங்கலம்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இருபுறமும் வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணி வகுத்து நின்றன. இதனால் வெளியூர் செல்வோர், தொழிலாளிகள் என பல தரப்பினர் அவதி அடைந்தனர். மறியல் காரணமாக மாற்றுப் பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.

    போராட்டம் குறித்து ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் தற்போது நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. மற்ற ஊர்களில் எல்லாம் நான்கு வழிச்சாலை புறவழிச்சாலையாக கொண்டு செல்லப்படுகிறது.

    ஆனால் ஆலம்பட்டி கிராமத்தில் மட்டும் ஊருக்குள்ளே நான்கு வழி சாலை அமைவதால் நான்கு வழிச்சாலைக்காக இடம் கொடுத்தவர்கள், கிராம மக்கள் அனைவரும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

    சாலையின் ஒரு புறம் குடியிருப்புகளும் மறுபுறம் பள்ளிக்கூடம், ரேஷன் கடை உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கான அலுவலகங்கள் இருப்பதால் சாலையை கடந்து செல்லும்போது விபத்து ஏற்படக்கூடிய சூழல் உருவாகி உள்ளது.

    எனவே சாலையை கடக்க சுரங்கப்பாதை வசதி ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு பணியை தொடர வேண்டுமென கோரிக்கை வைத்து வருகின்றனர். கலெக்டர் உள்ளிட்டவர்களிடம் கோரிக்கை மனு அளித்தும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கிராம மக்கள் இன்று சாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நானும் அவர்களோடு அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். பொதுமக்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றார்.

    சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. நேரம் ஆகஆக அதிக அளவில் கூட்டம் கூடியது. இதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர்.

    இதையடுத்து 50-க்கும் மேற்பட்ட போலீசார், ஆர்.பி.உதயகுமார் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்து குண்டுகட்டாக தூக்கி வேனில்ஏற்றினர். மேலும் மறியலில் ஈடுபட்ட பெண்கள், மாணவ-மாணவிகளை வலுக்கட்டாயமாக இழுத்து போலீசார் அப்புறப்படுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    அப்போது போலீசாரும், பொதுமக்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக நடந்த மறியல் போராட்டம் போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பின் முடிவுக்கு வந்தது.

    ×