என் மலர்
நீங்கள் தேடியது "Rocket"
- ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் ஏற்கனவே 2 ஏவுதளங்கள் உள்ளன.
- குலசேகரப்பட்டினத்தில் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை ஏவுவதற்கான ஏவுதளமும் கட்டப்பட்டு வருகிறது.
சென்னை:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஒரே நேரத்தில் 2 புதிய ஏவுதளங்களை உருவாக்கி திறன்களை விரிவுபடுத்த உள்ளது. குறிப்பாக, ஆந்திரா மாநிலம், திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் ஏற்கனவே 2 ஏவுதளங்கள் உள்ளன.
தற்போது 30 டன் எடையை தூக்கி செல்லும் ராக்கெட்டுகளை ஏவும் திறன் கொண்ட 3-வது ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது.
அதேபோல், தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை ஏவுவதற்கான ஏவுதளமும் கட்டப்பட்டு வருகிறது.
இந்த 2 ஏவுதளங்களும் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இஸ்ரோவின் வளர்ந்து வரும் ஏவுதளத்தின் சக்தியை அதிகரிப்பதுடன், திறன்களையும் மேம்படுத்த உதவும் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார்.
- இது இந்தியாவில் தனியாரால் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டாகும்.
- இந்த ராக்கெட்டை கடந்த 15-ந்தேதி விண்ணில் ஏவுவதாக இருந்தது.
சென்னை:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, முழுவதுமாக தனியாரால் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டை வருகிற 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணி அளவில் விண்ணில் ஏவுகிறது.
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் 'விக்ரம்-எஸ்' என்ற ராக்கெட் ஏவும் பணிக்கு 'மிஷன் பிரரம்ப்' என பெயரிடப்பட்டு உள்ளது. இது இந்தியாவில் தனியாரால் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டாகும். இந்த ராக்கெட்டை கடந்த 15-ந்தேதி விண்ணில் ஏவுவதாக இருந்தது.
ஆனால் அன்றைய தினம் மோசமான வானிலை காரணமாக ஏவப்படவில்லை. வருகிற 18-ந்தேதி வானிலை நன்றாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் அன்றைய தினம் ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட், வெளிநாட்டைச் சேர்ந்த செயற்கைக்கோள் உள்பட 3 செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது.
3 நிலைகளை கொண்ட ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள 480 கிலோ எடை கொண்ட 3 செயற்கைக்கோள்களும் பூமியின் மேற்பரப்பில் இருந்து 120 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்படும். பூமியில் இருந்து தகவல்களை திரட்டுவதற்கு அவை பயன்படுத்தப்படும் என்று விஞ்ஞானிகள் கூறினர்.
- ராக்கெட் விண்ணில் செல்வதை பார்க்க ஏராளமானோர் கடற்கரை மற்றும் சாலைகளில் திரண்டிருந்தனர்.
- விண்ணில் உள்ள கதிர் வீச்சுகளை மனித உடல்கள் எந்த அளவுக்கு தாங்குகின்றன என்பது இந்த மாதிரி பொம்மைகள் மூலம் அறியப்படும்.
நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு கழகமான நாசா முடிவு செய்தது. 2025ம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆர்டெமிஸ் என்ற திட்டத்தை வடிவமைத்தது.
முதற்கட்டமாக மனிதர்கள் இல்லாமல் ஆர்டெமிஸ்-1 என்ற ராக்கெட்டை நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்தன. இப்பணிகள் முடிவடைந்ததை அடுத்து ராக்கெட்டை விண்ணில் ஏவ கடந்த ஆகஸ்டு மாதம் முடிவு செய்யப்பட்டது.
ஆனால் என்ஜின் கோளாறு காரணமாக இரு முறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு நேற்று முன்தினம் (14ம் தேதி) ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று நாசா அறிவித்திருந்த நிலையில் சூறாவளி புயல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து 16ம் தேதி (இன்று) ஆர்டெமிஸ் ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று நாசா தெரிவித்தது.
அதன்படி நேற்று நள்ளிரவில் புளோரிடாவில் உள்ள கேப் கானவரல் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட்டை விண்ணில் செலுத்த தயாரான நிலையில் திடீரென்று ஹைட்ரஜன் வாயு கசிவு கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை சரிசெய்யும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். ராக்கெட்டை ஏவுவதற்காக கவுன்ட்- டவுன் நடந்தபோதும் மறுபுறம் வாயு கசிவை சரி செய்யும் பணி நடந்தது. இதனால் ஆர்டெமிஸ் ராக்கெட்டை விண்ணில் ஏவுவதில் தாமதம் ஏற்பட்டது. கோளாறை சரிசெய்தபின் இந்திய நேரப்படி இன்று மதியம் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. வாயு கசிவு காரணமாக ராக்கெட் தாமதமாக விண்ணில் ஏவப்பட்டது.
ராக்கெட் விண்ணில் செல்வதை பார்க்க ஏராளமானோர் கடற்கரை மற்றும் சாலைகளில் திரண்டிருந்தனர்.
நிலவுக்கு மனிதர்கள் செல்வதற்கான சூழல் இருப்பதை அறிய சோதனைக்காக மனித திசுக்களை பிரதிபலிக்கும் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட மனித உடல்களை போன்ற பொம்மைகள் ராக்கெட் மூலம் அனுப்பப்படுகிறது.
விண்ணில் உள்ள கதிர் வீச்சுகளை மனித உடல்கள் எந்த அளவுக்கு தாங்குகின்றன என்பது இந்த மாதிரி பொம்மைகள் மூலம் அறியப்படும்.
- இந்த ராக்கெட் 545 கிலோ எடை கொண்டது.
- 7 டன் உந்து சக்தியை கொண்டது.
சென்னை :
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, முழுமையாக தனியார் தயாரித்த ராக்கெட்டை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணிக்கு விண்ணில் ஏவுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும், 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' என்ற நிறுவனம் 'விக்ரம்-எஸ்' என்ற இந்த ராக்கெட்டை தயாரித்து உள்ளது. இந்தப்பணிக்கு 'பிரரம்ப்' என பெயரிடப்பட்டு உள்ளது. இது இந்தியாவில் தனியாரால் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டாகும்.
83 கிலோ எடையை தூக்கி செல்லும் இந்த ராக்கெட் 2 இந்திய செயற்கைகோள்கள், ஒரு வெளிநாட்டு செயற்கைகோள்கள் உள்பட 3 செயற்கைகோள்களை சுமந்து செல்கிறது.
ஒரே நிலையை கொண்ட இந்த ராக்கெட் 545 கிலோ எடையும், 6 மீட்டர் உயரமும், 0.375 மீட்டர் விட்டமும் கொண்டது. 7 டன் உந்து சக்தியை கொண்டது.
இந்த 3 செயற்கைகோள்களும் பூமியின் மேற்பரப்பில் இருந்து 120 கி.மீ. உயரத்தில் 300 வினாடிகளில் கொண்டு சென்று நிலை நிறுத்தப்படுகிறது. பூமியில் இருந்து தகவல்களை திரட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
- அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டில் சுற்றுலா செல்லலாம் என அறிவிக்கப்பட்டது.
- ராக்கெட் பயணத்தில் பங்கேற்க உள்ளோரின் விபரங்களை ஜப்பான் கோடீஸ்வரர் யுசாகு மசோவா அறிவித்தார்.
பூமியில் இருந்து ராக்கெட்டில் சென்று நிலவை சுற்றிவர விரும்புவோர் அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டில் சுற்றுலா செல்லலாம் என அறிவிக்கப்பட்டது.
கடந்த 2018-ம் ஆண்டு இந்த அறிவிப்பு வெளியானது. இதையடுத்து பலரும் நிலவை சுற்றி பார்க்க விருப்பம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு நிலவை சுற்றி பார்க்க செல்லும் ராக்கெட் பயணத்தில் பங்கேற்க உள்ளோரின் விபரங்களை ஜப்பான் கோடீஸ்வரர் யுசாகு மசோவா அறிவித்தார்.
இந்த சுற்றுலாவில் அமெரிக்க சினிமா தயாரிப்பாளர் பிரென்டன் ஹால், செக் கலைஞர் யெமி ஏடி, இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் என 8 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இதனை ஜப்பானை சேர்ந்த கோடீஸ்வரர் யுசாகு மசோவா அறிவித்து உள்ளார்.
- சிறிய ரக எஸ்.எஸ்.எல்.வி-டி2 ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது.
- ஏவப்பட உள்ள இ.ஓ.எஸ்.-7 செயற்கைக்கோள் 334 கிலோ எடை கொண்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் 1,750 கிலோ எடையும், ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் 4 ஆயிரம் கிலோ எடையும் கொண்ட செயற்கை கோளை விண்ணில் செலுத்த முடியும்.
சர்வதேச விண்வெளி சந்தையில் சிறிய செயற்கைக் கோள்களை ஏவுவதற்கான தேவை அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு எடை குறைந்த செயற்கை கோள்களை (500 கிலோ வரை) புவியின் தாழ்வட்ட சுற்றுப் பாதைக்கு கொண்டு செல்ல சிறிய ரக எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்களை இஸ்ரோ புதிதாக வடி வமைத்து வருகிறது. இதன் எடை 120 டன். இதற்கான செலவும் ரூ.30 கோடிக்குள் அடங்கி விடும்.
அதன்படி சிறிய ரக 2 செயற்கை கோள்களுடன் எஸ்.எஸ்.எல்.வி.-டி1 ராக்கெட் கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ந் தேதி விண்ணில் ஏவப்பட்டது.
ஆனால் ராக்கெட்டின் சென்சார் செயலிழந்து, தவறான சுற்றுப்பாதையில் செயற்கைக் கோள்கள் நிலைநிறுத்தபட்டதால் அந்த திட்டம் தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து எஸ்.எஸ்.எல்.வி. வகையில் புதிய ராக்கெட் தயாரித்து விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்து இருந்தது. அந்த வகையில் புதிதாக எஸ்.எஸ்.எல்.வி.-டி2 ராக்கெட் தற்போது வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்த ராக்கெட்டை இ.ஓ.எஸ்.-07 உள்ளிட்ட 3 செயற்கைக் கோள்களுடன் இந்த வாரம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்ட மிட்டுள்ளது.
இது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்போது, ராக்கெட் ஏவுதலுக்கான முன்தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. வானிலை சாதகமாக அமைந்தால் வருகிற 10-ந் தேதி ராக்கெட் விண்ணில் ஏவப்படும். இதில் ஏவப்பட உள்ள இ.ஓ.எஸ்.-7 செயற்கைக்கோள் 334 கிலோ எடை கொண்டது. புவி கண்காணிப்பு பணிக்காக அனுப்பப்பட உள்ளது என்றனர்.
முதல் முயற்சி தோல்வியில் முடிந்ததால் இந்த முறை கூடுதல் கவனத்துடன் திட்டத்தை செயல்படுத்த விஞ்ஞானிகள் முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- இஸ்ரோ மேம்படுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி. 2 ரக ராக்கெட்டை வடிவமைத்து உள்ளது.
- ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டமிட்ட இலக்கில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தவில்லை.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சிறிய செயற்கைக்கோள்களை சுமந்துசெல்லும் எஸ்.எஸ்.எல்.வி-01 ரக ராக்கெட்டை விண்ணில் ஏவியது.
இந்த ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டமிட்ட இலக்கில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தவில்லை. இதனால் இஸ்ரோ மேம்படுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி. 2 ரக ராக்கெட்டை வடிவமைத்து உள்ளது.
இதில் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளான இ.ஓ.எஸ்.07 மற்றும் கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டில் செலுத்தப்பட்டு தோல்வி அடைந்த செயற்கைக்கோள்களுக்கு பதிலாக தற்போது தயாரிக்கப்பட்ட ஆசாதி சாட்-2 மற்றும் ஜானஸ்-1 உள்பட 334 கிலோ எடை கொண்ட 3 செயற்கைக்கோள்களை பூமியில் இருந்து 356.2 கிலோ மீட்டர் உயரத்தில் 450 கிலோமீட்டர் புவிவட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வுமையத்தில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.18 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்து தயார் நிலையில் உள்ளது. இதனுடைய இறுதிகட்ட பணியான கவுண்ட்டவுன் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
- இஸ்ரோ மேம்படுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி - டி2 ரக ராக்கெட்டை வடிவமைத்துள்ளது.
- ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி- டி2 ரக ராக்கெட் விண்ணில் ஏவியது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சிறிய செயற்கைக் கோள்களை சுமந்துசெல்லும் எஸ்.எஸ்.எல்.வி- டி1 ரக ராக்கெட்டை விண்ணில் ஏவியது.
இந்த ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டமிட்ட இலக்கில் செயற்கைக் கோள்களை நிலைநிறுத்தவில்லை. இதனால் இஸ்ரோ மேம்படுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி - டி2 ரக ராக்கெட்டை வடிவமைத்துள்ளது.
இதில் பூமி கண்காணிப்பு செயற்கைக் கோளான இ.ஓ.எஸ்.07 மற்றும் கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டில் செலுத்தப்பட்டு தோல்வி அடைந்த செயற்கைக்கோள்களுக்கு பதிலாக தற்போது தயாரிக்கப்பட்ட ஆசாதி சாட்-2 மற்றும் ஜானஸ்-1 உள்பட 334 கிலோ எடை கொண்ட 3 செயற்கைக்கோள்களை பூமியில் இருந்து 356.2 கிலோமீட்டர் உயரத்தில் 450 கிலோமீட்டர் புவிவட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி- டி2 ரக ராக்கெட் இன்று காலை 9.18 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
- வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்து, நேபாள வான் பகுதிக்குள் வந்தபோது தீப்பிடித்தது
- இதேபோல் கடந்த 8ம் தேதி ஒரு ராக்கெட் டெக்சாஸ் மாநில வான் பகுதியில் தீப்பற்றி எரிந்தது,
காத்மாண்டு:
உளவு செயற்கைக் கோளை அனுப்புவதற்கு பயன்படுத்தப்பட்ட சீன ராக்கெட், நேபாள வான் பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. இத்தகவலை ஐக்கிய நாடுகள் கடற்படை நிறுவனம் கூறி உள்ளது.
மத்திய சீனாவில் இருந்து செலுத்தப்பட்ட சாங் செங் 2டி லாங் மார்ச் என்ற அந்த ராக்கெட், உளவு செயற்கைக் கோள்களை விடுவித்தபின்னர் சுமார் 200 நாட்கள் விண்வெளியில் இருந்த பிறகு, கடந்த சனிக்கிழமையன்று வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்தது. அப்போது நேபாள வான் பகுதிக்குள் நுழைந்தபோது, ராக்கெட் தீப்பற்றியதாக வானியல் விஞ்ஞானி ஜோனாதன் மெக்டோவல் கூறியிருக்கிறார்.
இதே மத்திய சீனாவில் இருந்து அனுப்பப்பட்ட ராக்கெட், தென் சீனக் கடலை கண்காணிப்பதற்கான மூன்று உளவு செயற்கைக் கோள்களை விடுவித்தபின், கடந்த 8ம் தேதி அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில வான் பகுதியில் தீப்பற்றி எரிந்தது குறிப்பிடத்தக்கது.
- ஒன் வெப் விண்வெளி செயற்கை கோள்களில் 2-வது மற்றும் கடைசி தொகுதி செயற்கை கோள்களை இது சுமந்து செல்கிறது.
- ஏவப்படும் 36 செயற்கை கோள்களின் மொத்த எடை சுமார் 5805 கிலோ ஆகும்.
சென்னை:
இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் 36 செயற்கை கோள்களுடன் நாளை (26-ந் தேதி) விண்ணில் பாய்கிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது தளத்தில் இருந்து நாளை காலை 9 மணிக்கு விண்வெளிக்கு புறப்படுகிறது.
ஒன் வெப் விண்வெளி செயற்கை கோள்களில் 2-வது மற்றும் கடைசி தொகுதி செயற்கை கோள்களை இது சுமந்து செல்கிறது.
தற்போது ஏவப்படும் 36 செயற்கை கோள்களின் மொத்த எடை சுமார் 5805 கிலோ ஆகும். எல்.வி.எம்.3 ராக்கெட்டுகள் 8 டன் எடை வரை சுமந்து செல்லும் திறன் கொண்டது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தை தலைமையகமாக கொண்ட ஒன் வெப், இங்கிலாந்து அரசு மற்றும் இந்தியாவின் பாரதிய நிறுவனத்தின் ஆதரவுடன் அதிவேக தாமதமில்லா உலகளாவிய தொலை தொடர்பு மற்றும் இணைய இணைப்பை வழங்குகிறது.
- ஜூஸ் மிஷன் என்று பெயரிடப்பட்ட இந்த ஆய்வுக்காக இன்று ஏரியன்-5 ராக்கெட் ஏவப் படுகிறது.
- 8 ஆண்டுகள் பயணம் செய்து 2031-ம் ஆண்டு வியாழன் கிரகத்தை சென்றடையும்.
பிரஞ்சு கயானா:
சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோளாக வியாழன் உள்ளது. இது பூமியை போல் 1,300 மடங்கு பெரியது. தூசித் துகள்களால் ஆன வளையங்களை கொண்ட வாயுக்களின் பனி நிலவில் உயிர்கள் வாழலாம் என்று ஏற்கனவே விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.
இதற்கிடையே வியாழன் கிரகத்தின் மூன்று பெரிய நிலவுகளில் உயிர்கள் வாழ உள்ளதா என்று ஆய்வு செய்ய ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டது.
அதன்படி ஜூஸ் மிஷன் என்று பெயரிடப்பட்ட இந்த ஆய்வுக்காக இன்று ஏரியன்-5 ராக்கெட் ஏவப் படுகிறது. பிரெஞ்ச் கயானாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இந்திய நேரப்படி இன்று மாலை 5.45 மணிக்கு ராக்கெட் ஏவப்படுகிறது.
ராக்கெட் ஏவப்பட்ட ஒரு நிமிடத்தில் அதிலிருந்து விண்கலம் பிரியும். அது 8 ஆண்டுகள் பயணம் செய்து 2031-ம் ஆண்டு வியாழன் கிரகத்தை சென்றடையும். பின்னர் வியாழன் கிரகம் மற்றும் காலிஸ்டோ, யூரோபா, கேனிமீட் ஆகிய மூன்று பெரிய நிலவுகளை கண்காணிக்கும்.
குறிப்பாக வியாழனின் நிலவில் புதையுண்ட கடல்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும் இந்த விண்கலம், வியாழனின் வளிமண்டலம், அமைப்பு, பனிக்கட்டி ஓடுகள், கலவைகள் மேற்பரப்புகள் மற்றும் பரந்த வியாழன் கிரகத்தின் செயல்பாடுகளை வகைப்படுத்தி ஆய்வு செய்யும். வியாழனில் பல மாதங்கள் சுற்றும் விண்கலம் இறுதியாக கேனிமீட் நிலவின் சுற்றுப்பாதையை அடையும். விண்கல் 10 சோலார் பேனல்களால் இயக்கப்படும். அதி நவீன கருவிகள், வியாழனின் நிலவுகளின் மேற்பரப்பு மற்றும் நிலப்பரப்பை ஆராய்வதற்கு ஒரு ரேடார் ஒலிப்பான் உள்ளிட்டவை உள்ளன. ஆய்வில் குறிப்பாக கேனிமீட் நிலவில் உயிர்கள் வாழ சாத்தியக்கூறு உள்ளதா என்று தீவிரமாக சோதனை செய்யப்படும்.
இதுகுறித்து ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் கூறும்போது, சூரிய குடும்பத்தில் உயிர்கள் தோற்றம் நமது பூமிக்கு தனித்தன்மை வாய்ந்ததா? அல்லது சூரிய குடும்பத்தில் அல்லது அதற்கு அப்பால் வேறு எங்காவது நிகழுமா? என்று ஆய்வு செய்யப்படும் என தெரிகிறது.
- இதற்கான 27½ மணி நேர 'கவுண்ட்டவுன்' இன்று தொடங்கியது.
- ராக்கெட்டில் எரிபொருட்கள் நிரப்பப்பட்டு ஏவுதளத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது.
சென்னை:
வழிகாட்டி செயற்கைகோளை சுமந்தபடி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை (திங்கட்கிழமை) காலை விண்ணில் பாய்வதற்கு 'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட் தயார் நிலையில் உள்ளது. இதற்கான 27½ மணி நேர 'கவுண்ட்டவுன்' இன்று தொடங்கியது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து, 'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட்டை நாளை (திங்கட்கிழமை) காலை 10.42 மணிக்கு விண்ணில் ஏவுகிறது.
இதில் 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட 'என்.வி.எஸ்.-01' என்ற வழிகாட்டி செயற்கைகோள், புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது.
செயற்கைகோளை உத்தேசித்துள்ள சுற்றுப்பாதைக்கு எடுத்துச்செல்ல அடுத்தடுத்த சுற்றுப்பாதையை உயர்த்தும் நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.
வாகனங்கள் வழிசெலுத்துவதற்கு திட்டமிடப்பட்ட 2-வது தலைமுறை செயற்கைகோள்களில் முதன்மையானது. அடுத்த தலைமுறைக்கான என்.வி.எஸ். வரிசை செயற்கைகோள்கள் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் தகவல்களை தக்கவைத்து மேம்படுத்தும். இந்த தொடர் சேவைகளை விரிவுபடுத்த கூடுதலாக 'எல்1 பேண்ட் சிக்னல்'களை உள்ளடக்கியது.
இதற்கான இறுதி கட்டப்பணியான 27.30 மணி நேர 'கவுண்ட்டவுன்' இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.12 மணிக்கு தொடங்கியது.
3 நிலைகளை கொண்ட இந்த ராக்கெட்டில் எரிபொருட்கள் நிரப்பப்பட்டு ஏவுதளத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது. ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மேற்கண்ட தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.