என் மலர்
நீங்கள் தேடியது "RSS rally"
- உள்ளரங்கு கூட்டமாக நடத்த சம்மதம் தெரிவித்தால் 23 இடங்களில் அனுமதி வழங்க தயார்.
- 24 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்க இயலாது.
தமிழகத்தில் கடந்த மாதம் 2-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்க காவல்துறை தரப்பில் மறுக்கப்பட்டதை எதிர்த்து அந்த அமைப்பை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழகத்தில் நவம்பர் 6-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், பல இடங்களில் அனுமதி வழங்கப்படவில்லை எனக் கூறி காவல்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆர்.எஸ்.எஸ். தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார். மற்ற 47 இடங்களில் அனுமதி வழங்கவில்லை, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் உளவுத்துறை அறிக்கையை காட்டி தமிழக அரசு தப்பிக்க பார்க்கிறது என்று அவர் வாதிட்டார்
காவல்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று செப்டம்பர் 30-ந்தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு பிறகு சூழல் வேறு மாதிரியாக உள்ளது என்றார். தமிழகத்தில் தற்போது பல இடங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டி உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் 3 இடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் விளக்கமளித்தார். மேலும் 23 இடங்களில் உள்ளரங்கு கூட்டமாக நடத்திக்கொள்வதாக இருந்தால் அதற்கு அனுமதி வழங்க காவல்துறை தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார். ஆனால் எஞ்சியுள்ள 24 இடங்களில் அனுமதி வழங்க இயலாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாநிலத்தின் பாதுகாப்பு விவகாரத்தை ஆர்.எஸ்.எஸ். தரப்பினர் அரசியலாக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, உளவுத் துறை அறிக்கையை பார்த்த பிறகு 47 இடங்களில் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து நவம்பர் 4ந் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக கூறி, வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தார்.
- கோவை, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ்.அணிவகுப்புக்கு அனுமதி இல்லை.
- உளவுத்துறை அறிக்கைகளை ஆய்வு செய்த பின் நீதிபதி உத்தரவு
தமிழகத்தில் கடந்த மாதம் 2-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். தரப்பில் அணிவகுப்பு நடத்த காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து அந்த அமைப்பை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழகத்தில் நவம்பர் 6-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், பல இடங்களில் அனுமதி வழங்கப்படவில்லை எனக் கூறி காவல்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு கடந்த 2ந் தேதி விசாரணைக்கு வந்த போது தமிழகத்தில் 3 இடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் 23 இடங்களில் உள்ளரங்கு கூட்டமாக நடத்திக் கொள்வதாக இருந்தால் அதற்கு அனுமதி வழங்க காவல்துறை தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 47 இடங்களில் அணி வகுப்பிற்கு அனுமதி வழங்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து நவம்பர் 4ந் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வரும் 6ந் தேதி தேதி கோவை, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர மற்ற 44 இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அணிவகுப்பு நடத்த காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிபதி இளந்திரையன் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
உளவுத்துறை அறிக்கைகளை ஆய்வு செய்த பின் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், நாகர்கோவில், அருமனை, பல்லடம் ஆகிய இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி இல்லை என்றும் மற்ற 44 இடங்களில் காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்றும் தமது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
- நெல்லை மாவட்டத்தில் அம்பை பகுதியில் அங்குள்ள ஒரு தியேட்டரில் தொடங்கி பல்வேறு பஜார் தெருக்கள் வழியாக ஊர்வலத்திற்கு அவர்கள் அனுமதி கேட்டனர்.
- தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை சென்னை உயர்நீதிமன்றம் சங்கரன்கோவிலில் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி வழங்கியது.
நெல்லை:
தமிழகம் முழுவதும் சமுதாய நல்லிணக்கத்திற்காக அணிவகுப்பு ஊர்வலம் நாளை நடைபெறுவதாக இருந்தது.
நெல்லை மாவட்டத்தில் அம்பை பகுதியில் அங்குள்ள ஒரு தியேட்டரில் தொடங்கி பல்வேறு பஜார் தெருக்கள் வழியாக ஊர்வலத்திற்கு அவர்கள் அனுமதி கேட்டனர். ஆனால் பிரச்சினை ஏற்படாத வண்ணம் அம்பையில் ஏதேனும் விளையாட்டு அரங்கம் அல்லது திருமண மண்டபங்களில் ஊர்வலத்தை நடத்தி கொள்ள வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதுவரை ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் அதற்கான இடத்தை தேர்வு செய்து தெரிவிக்கவில்லை. இதனால் நெல்லையில் ஊர்வலம் நடத்த வாய்ப்பில்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் வி.வி.டி. சிக்னல் அருகே காமராஜ் கல்லூரியில் இருந்து ஊர்வலம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அங்கும் ஊர்வலத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அனுமதி மறுத்தார்.
மாற்று இடத்தில் அங்குள்ள உள்விளையாட்டு அரங்கில் நடத்தி கொள்ளலாம் என்று அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் அதற்கு ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் அங்கும் நாளை ஊர்வலம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை சென்னை உயர்நீதிமன்றம் சங்கரன்கோவிலில் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி வழங்கியது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக சங்கரன்கோவில் பகுதியில் திறந்த வெளியில் ஊர்வலத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் அனுமதி மறுத்தார். இதனால் அங்கு நடைபெற இருந்து ஊர்வலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
- மதுரையில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
- தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். சார்பில் அக்டோபர் 2-ந் தேதி பேரணி அணிவகுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மதுரை
தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். சார்பில் அக்டோபர் 2-ந் தேதி பேரணி அணிவகுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழகத்தில் ஆளும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். பேரணி வேறு ஒரு நாளுக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பேரணி அணிவகுப்பு நடத்துவதற்காக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த கோர்ட்டு தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பேரணி நாளை (6-ந் தேதி) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் வண்டியூர் சீனிவாச பெருமாள் கோவிலில் இருந்து அண்ணா நகர் அம்பிகா தியேட்டர் வரை ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்துவதற்கான ஏற்பாடுகளில் நிர்வாகிகள் செயல்பட்டனர்.
ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் சீனிவாசன், மங்கள முருகன், மகேஷ், மாநிலச் செயலாளர் முத்துக்குமார், மாவட்ட தலைவர் அழகர்சாமி மற்றும் மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் சுசீந்திரன் உள்பட 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
இது தொடர்பாக மதுரை மாவட்ட இந்து முன்னணி தலைவர் அழகர்சாமி கூறுகையில், "மதுரை மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு மீண்டும் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
- அமைதியாக ஆர்.எஸ்.எஸ். பேரணி நடந்தது
- பெண்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்
பெரம்பலுார்:
பெரம்பலூரில் மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் விழா மற்றும் 75-வது சுதந்திர தின நிறைவு விழாக்களை முன்னிட்டு, ஆர்எஸ்எஸ் அமைப்பு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பேரணி மற்றும்பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரியிருந்தது. இந்த நிலையில் பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் பேரணி நடத்த அரசு அனுமதி அளித்தது. அதன்படி பெரம்பலூரில் பதசஞ்சலன் சீருடை அணிவகுப்பு நிகழ்ச்சி என்ற பெயரில் நடைபெற்ற இந்த பேரணியை திருவிநாயக வேல்முருக சித்தர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பேரணி ரோவர் ஆர்ச், சங்குபேட்டை , காமராஜர் வளைவு, கடைவீதி வழியாக மேற்கு வானொலி திடலில் பொதுக்கூட்ட மேடை அருகில் நிறைவடைந்தது. வழிநெடுகிலும் தொண்டர்களுக்கு பா.ஜ.க.வினர், ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த பெண்கள் மலர் தூவி வரவேற்றனர். மேலும் ஊர்வலத்தில் வந்து பாரதமாதா அலங்கார ஊர்த்திக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த ஊர்வலத்தில் 250க்கு மேற்பட்ட தொண்டர்கள் கலந்துகொண்டு அணிவகுத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து, மாலை 5 மணியளவில் வானொலி திடலில் ஆர்எஸ்எஸ் பொதுக்கூட்டம் நடந்தது.
- நிபந்தனைகள் விதித்ததால் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
- மற்ற அரசியல் கட்சிகளின் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மனு
சென்னை:
தமிழகத்தில் கோவை, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர மற்ற 44 இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அணிவகுப்பு நடத்த காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் உத்தரவு பிறப்பித்திருந்தார். உளவுத்துறை அறிக்கைகளை ஆய்வு செய்த பின் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், நாகர்கோவில், அருமனை, பல்லடம் ஆகிய இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி இல்லை என்றும் மற்ற 44 இடங்களில் உள்ளரங்கில் அணிவகுப்பை நடத்திக்கொள்ளலாம் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்தார். மேலும் பல நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. இவ்வாறு நிபந்தனைகள் விதித்ததால் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை 44 இடங்களில உள்ளரங்க நிகழ்வாக நடத்தலாம் என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும், ஊர்வலத்திற்கு அனுமதி கோரியும் ஆர்எஸ்எஸ் சார்பில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்ட காலத்தில் மற்ற அரசியல் கட்சிகளின் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கருத்து சுதந்திரம் உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொள்ளாமல் அணிவகுப்பை உள்ளரங்க நிகழ்வாக நடத்த தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார், என ஆர்எஸ்எஸ் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்.எஸ்.எஸ். பேரணி தொடர்பாக, தமிழக அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
- மனுவை நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன், பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
புதுடெல்லி:
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கான நிபந்தனைகளை தளர்த்திய சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த மனுவை நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன், பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த மனு மீது இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். பேரணி தொடர்பாக, தமிழக அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கான நிபந்தனைகளை தளர்த்திய விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
- ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி அளிக்காததால் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மீண்டும் ஐகோர்ட்டை நாடி கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தொடர்ந்தனர்.
- தமிழக அரசு, ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டது.
சென்னை:
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி அன்று நடத்துவதற்கு அந்த அமைப்பினர் திட்டமிட்டனர்.
தமிழகத்தில் சென்னை உள்பட 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை நடத்த முடிவு செய்யப்பட்டி ருந்தது. இதற்காக அனைத்து இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் போலீசாரிடம் உரிய அனுமதியை கேட்டு விண்ணப்பித்தனர்.
அதே நாளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் மனித சங்கிலி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இதையடுத்து போலீசார் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த ஐகோர்ட்டு தனி நீதிபதி 6 இடங்களை தவிர 44 இடங்களில் உள்ள அரங்குகளில் மட்டுமே ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதனை ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் ஏற்க மறுத்து விட்டனர். அவர்கள் சென்னை ஐகோர்ட்டில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்தனர். 2 நீதிபதிகள் அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. தனி நீதிபதிகளின் உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும் ஒழுக்கத்தை கடைபிடித்து பேரணி நடத்த வேண்டும் என்றும், பிறரை தூண்டும் வகையில் செயல்பாடுகள் இருக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தினர். இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி கிடைத்தது.
கடந்த செப்டம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வந்தது. கடந்த மார்ச் மாதம் வழக்கு விசாரணை நடைபெற்றபோது தமிழக அரசு சார்பில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? என்பது பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டது.
தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல்ரோத்தகி உளவுத்துறை தகவல் உள்ளிட்ட பல்வேறு தகவல்களின் அடிப்படையிலேயே ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தடை விதிக்கப்பட்டது என்றும், சென்னை ஐகோர்ட்டு பேரணிக்கு அனுமதித்ததை ஏற்க முடியாது என்றும் வாதிட்டார்.
பேரணியை அனுமதிப்பதா? வேண்டாமா? என்று முடிவெடுக்க அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதிட்டது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் ஆஜராகி வாதாடிய வக்கீல் மகேஷ் ஜெத்மலானி தமிழக அரசின் முடிவு ஒரு தனிப்பட்ட காரணம் என்றும், கூட்டணி கட்சிகளின் மனித சங்கிலிக்கு அனுமதி அளித்து விட்டு ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு மட்டும் தடை விதிப்பது எப்படி சரியாகும் என்று வாதிட்டார்.
இது தொடர்பான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த மே மாதம் 27-ந்தேதி இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட் டது.
இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று அனுமதி வழங்கியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு எதிரான தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதன் மூலம் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியுள்ளது. இதனால் விரைவில் தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் விரைவில் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுகிறது. இதன் பிறகு பேரணி தொடர்பான புதிய அறிவிப்பை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தப்படுகிறது.
- அனைத்து மாவட்டங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த போலீசார் அனுமதி அளிக்காததை தொடர்ந்து அந்த அமைப்பின் நிர்வாகிகள் ஐகோர்ட்டை நாடினர்.
இதையடுத்து ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு ஐகோர்ட்டு அனுமதி அளித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணியை நடத்த அனுமதி அளித்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
இதைதொடர்ந்து தமிழகத்தில் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணியை நடத்த போலீசார் இன்று அனுமதி அளித்துள்ளனர்.
இதையடுத்து வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தப்படுகிறது.
இதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த முறை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணி நடத்தப்போவதாக அறிவித்தபோது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மத நல்லிணக்க மனித சங்கிலி நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனால் சென்னை உள்பட அனைத்து இடங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த முறையும் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு போட்டியாக யாரும் பேரணி, ஆர்ப்பாட்டங்களை அறிவிக்க வாய்ப்பு உள்ளதா? என்பது பற்றியும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
பேரணி நடைபெறும் நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநகர பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுஉள்ளார்.
- ஊர்வலத்தில் செல்பவர்கள் மதம், மொழி, கலாச்சாரம் மற்றும் பிற குழுக்களின் உணர்வுகளை எந்த வகையிலும் புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது.
- பொதுச்சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் அதனை ஏற்கும் வகையில் ஊர்வல ஏற்பாட்டாளர்கள் உறுதி மொழி அளிக்க வேண்டும்.
சென்னை:
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு ஐகோர்ட்டு அளித்திருந்த அனுமதிக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு நேற்று முன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் சென்னை உள்பட 45 இடங்களில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த அந்த அமைப்பினர் முடிவு செய்தனர். இதற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர். இதையடுத்து திட்டமிட்டபடி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெற உள்ளது.
சென்னையில் 2 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெறுகிறது. கொரட்டூர் விவேகானந்தா பள்ளி மற்றும் ஊரப்பாக்கம் சங்கராபள்ளி ஆகிய இடங்களில் இருந்து ஊர்வலமாக செல்கிறார்கள். முடிவில் பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது.
இதையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு 12 நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளனர். இது தொடர்பாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், கமிஷனர் அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கடுமையான நிபந்தனைகள் இடம்பெற்றுள்ளன அதன் விவரம் வருமாறு:-
* ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தின் போது தனி நபர்களை குறிப்பிட்டோ சாதி, மதம் பற்றியோ எக்காரணம் கொண்டும் யாரும் தவறாக பேசக் கூடாது.
* இந்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக எந்தவித கருத்துக்களையும் வெளிப்படுத்தி பேசக்கூடாது. நமது நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஊறுவிளைவிக்கும் எந்த செயலையும் யாரும் செய்யக்கூடாது.
* பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தாத வகையில் ஊர்வலம் மற்றும் நிகழ்ச்சியை நடத்த வேண்டும்.
* ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் யாருக்கும் காயம் ஏற்படுத்தக்கூடிய வகையில் கம்பு மற்றும் ஆயுதங்கள் எதையும் கைகளில் ஏந்திச் செல்லக்கூடாது.
* ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்திருப்பவர்கள் குடிநீர் வசதி, முதல் உதவி, நடமாடும் கழிவறைகள், கேமராக்கள், தீயணைப்பு கருவிகள் போன்றவற்றை ஏற்படுத்திக்கொள்ள போலீசார் மற்றும் உள்ளாட்சி அமைப்பினருடன் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும்.
* அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இடதுபுறமாக மட்டுமே ஊர்வலமாக செல்ல வேண்டும். அனுமதிக்கப்பட்ட சாலையில் நான்கில் ஒரு பகுதியை மட்டுமே ஊர்வலத்துக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
* ஊர்வலத்தை நடத்தும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், ஊர்வலத்தில் செல்பவர்களை ஒழுங்குப்படுத்தவும் போலீசுக்கு உதவும் வகையில் போதுமான தன்னார்வலர்களை நியமித்திருக்க வேண்டும்.
* போலீஸ் அனுமதி அளித்துள்ள வழித்தடத்தில் மட்டுமே ஊர்வலமாக செல்வதை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
* பெட்டி வடிவிலான ஒலி பெருக்கிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒலி சத்தம் 15 வாட்சுகளுக்கு மிகாமல் இருப்பது அவசியம். கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக்கூடாது.
* ஊர்வலத்தில் செல்பவர்கள் மதம், மொழி, கலாச்சாரம் மற்றும் பிற குழுக்களின் உணர்வுகளை எந்த வகையிலும் புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது.
* பொதுச்சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் அதனை ஏற்கும் வகையில் ஊர்வல ஏற்பாட்டாளர்கள் உறுதி மொழி அளிக்க வேண்டும்.
* இந்த நிபந்தனைகள் எதையும் ஊர்வலத்தில் செல்பவர்கள் எக்காரணம் கொண்டும் மீறக்கூடாது. அப்படி மீறும் வகையில் செயல்பட்டால் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு போலீசார் கடுமையான கட்டுப்பாடுகளை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு விதித்துள்ளனர்.
காவல் துறை அலுவலகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள இந்த சுற்றிக்கையில் சென்னை ஐகோர்ட்டு விதித்துள்ள உத்தரவின் படியே மேற்கண்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையத்தில் நாளை மதியம் 2 மணிக்கு ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடைபெற உள்ளது.
- கோபி வாய்க்கால் மேடு ஸ்ரீவித்யா பள்ளியில் இருந்து ஊர்வலம் தொடங்கி பார்க் வீதி, அரசு மருத்துவமனை வீதி, கச்சேரி வீதி, ஈரோடு-சக்தி ரோடு மெயின் ரோடு வழியாக முத்து மஹாலில் ஊர்வலம் நிறைவடைகிறது.
கோபி:
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் சென்னை உள்பட 45 இடங்களில் நாளை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த அந்த அமைப்பினர் முடிவு செய்துள்ளனர். இதற்கு போலீசார் கடும் நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளனர். திட்டமிட்டபடி நாளை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெற உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணிக்கு ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடைபெற உள்ளது. கோபி வாய்க்கால் மேடு ஸ்ரீவித்யா பள்ளியில் இருந்து ஊர்வலம் தொடங்கி பார்க் வீதி, அரசு மருத்துவமனை வீதி, கச்சேரி வீதி, ஈரோடு-சக்தி ரோடு மெயின் ரோடு வழியாக முத்து மஹாலில் ஊர்வலம் நிறைவடைகிறது.
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தையொட்டி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் 5 டி.எஸ்.பி.க்கள், ஒரு ஏ.டி.எஸ்.பி, 10 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதனால் நாளை கோபிசெட்டிபாளையம் பகுதி முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. முக்கியமான பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். மேலும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு போலீசார் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளனர்.
இது குறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் கூறியதாவது:-
நீதிமன்ற உத்தரவுபடி ஈரோடு மாவட்டத்தில் நாளை கோபிசெட்டிபாளையத்தில் மட்டும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சட்ட- ஒழுங்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எனது தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் கோபிசெட்டிபாளையம் பகுதி முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இந்த ஊர்வலத்திற்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கு போலீஸ் சார்பில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதை அவர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னை உள்பட அனைத்து இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
- ஊர்வலம் நடைபெறும் இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி போலீசார் 12 கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை நடத்துவதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமது அளித்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெறுகிறது.
சென்னையில் 2 இடங்களில், ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை நடத்த அந்த அமைப்பினர் முடிவு செய்துள்ளனர். கொரட்டூர் மற்றும் ஊரப்பாக்கத்தில் ஊர்வலம் நடத்தப்படுகிறது.
இதேபோன்று தமிழகம் முழுவதும் மொத்தம் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை அந்த அமைப்பினர் செய்துள்ளனர்.
அனைத்து இடங்களிலும் மாலை 4 மணி அளவில் ஊர்வலத்தை தொடங்க திட்டமிட்டுள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சுமார் 1 மணி நேரத்துக்குள் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
சென்னை உள்பட அனைத்து இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு போட்டியாக யாரும் திடீரென எதிர் ஊர்வலங்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டுவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
ஊர்வலம் நடைபெறும் இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி போலீசார் 12 கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளனர். ஊர்வலத்தில் செல்பவர்கள் நிபந்தனைகளை முழுமையாக கடைபிடிக்கிறார்களா? என தீவிரமாக கண்காணிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.