search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    கோபிசெட்டிபாளையத்தில் நாளை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு 1000 போலீசார் பாதுகாப்பு
    X

    கோபிசெட்டிபாளையத்தில் நாளை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு 1000 போலீசார் பாதுகாப்பு

    • ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையத்தில் நாளை மதியம் 2 மணிக்கு ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடைபெற உள்ளது.
    • கோபி வாய்க்கால் மேடு ஸ்ரீவித்யா பள்ளியில் இருந்து ஊர்வலம் தொடங்கி பார்க் வீதி, அரசு மருத்துவமனை வீதி, கச்சேரி வீதி, ஈரோடு-சக்தி ரோடு மெயின் ரோடு வழியாக முத்து மஹாலில் ஊர்வலம் நிறைவடைகிறது.

    கோபி:

    தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் சென்னை உள்பட 45 இடங்களில் நாளை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த அந்த அமைப்பினர் முடிவு செய்துள்ளனர். இதற்கு போலீசார் கடும் நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளனர். திட்டமிட்டபடி நாளை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெற உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணிக்கு ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடைபெற உள்ளது. கோபி வாய்க்கால் மேடு ஸ்ரீவித்யா பள்ளியில் இருந்து ஊர்வலம் தொடங்கி பார்க் வீதி, அரசு மருத்துவமனை வீதி, கச்சேரி வீதி, ஈரோடு-சக்தி ரோடு மெயின் ரோடு வழியாக முத்து மஹாலில் ஊர்வலம் நிறைவடைகிறது.

    ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தையொட்டி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் 5 டி.எஸ்.பி.க்கள், ஒரு ஏ.டி.எஸ்.பி, 10 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதனால் நாளை கோபிசெட்டிபாளையம் பகுதி முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. முக்கியமான பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். மேலும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு போலீசார் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

    இது குறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் கூறியதாவது:-

    நீதிமன்ற உத்தரவுபடி ஈரோடு மாவட்டத்தில் நாளை கோபிசெட்டிபாளையத்தில் மட்டும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சட்ட- ஒழுங்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எனது தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் கோபிசெட்டிபாளையம் பகுதி முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இந்த ஊர்வலத்திற்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கு போலீஸ் சார்பில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதை அவர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×