என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RSS"

    • அழைப்பிதழில் "இந்திய ஜனாதிபதி" என்பது "பாரத்தின் ஜனாதிபதி" என இருக்கிறது
    • அடுத்த 1000 வருடங்கள் நாடு பயணிக்கும் திசையை "அம்ருத் கால்" முடிவு செய்யும்

    இந்திய பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இம்மாதம் 18 தொடங்கி 22 வரை நடக்க இருக்கிறது.

    "அவசியமான சில மசோதாக்கள் தாக்கல் செய்வது உட்பட பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும். அவை குறித்து விரைவில் அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும்" என பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ஆகஸ்ட் 31-ம் தேதி தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், இக்கூட்டத்தொடரில் நமது நாட்டின் பெயரை "இந்தியா" என்பதற்கு பதிலாக "பாரத்" என மாற்றுவது குறித்து மசோதா தாக்கல் செய்யப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.

    தலைநகர் புது டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டிற்கு வரும் தலைவர்களுக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்தளிக்க உள்ளார். இதற்கான அழைப்பிதழில் அவரை குறிப்பிடும் இடத்தில், "இந்தியாவின் ஜனாதிபதி" என்பதற்கு பதிலாக "பாரத்தின் ஜனாதிபதி" என குறிப்பிடப்பட்டுள்ளதை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சுட்டி காட்டியுள்ளார். இவரது கருத்து இக்தகவலுக்கு வலு சேர்க்கும் விதமாக உள்ளது.

    "இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள், அதில் 'பாரத்' என்றும் 'இந்தியா' என்றும் 2 பேரையும் வைத்திருந்தது தவறு. 'பாரத்' என்பது நமது நாட்டின் தொன்மையான கலாசாரத்தை குறிப்பதாக உள்ளது. ஆனால் 'இந்தியா' என்பது நம்மை அவமானப்படுத்த பிரிட்டிஷ்காரர்களால் உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தை. அதை மீண்டும் 'பாரத்' என மாற்ற வேண்டும்" என பா.ஜ.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்நாத் சிங் யாதவும் கூறியுள்ளார்.

    "மக்கள் புரிந்து கொண்டாலும் புரிந்து கொள்ளவில்லை என்றாலும் நாம் 'இந்தியா' என நம் நாட்டை அழைக்க கூடாது. அதற்கு பதிலாக 'பாரத்' என அழைக்க தொடங்க வேண்டும்," என ராஷ்ட்ரீய சேவா சங்கம் எனப்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

    இதே விவகாரத்தை பா.ஜ.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் நரேஷ் பன்ஸால், மாநிலங்களவையில் எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    "வெள்ளையர்களின் ஆதிக்க ஆட்சியின் விளைவாக ஏற்பட்ட அடிமை மனப்பான்மை, சுதந்திரம் பெற்றும் நமக்கு நீங்கவில்லை. அதனை நீக்கும் முயற்சியாக பல முடிவுகளை எடுக்க வேண்டும். இந்த 'அம்ருத் கால்' காலகட்டத்தில் நாம் எடுக்கும் முடிவுகள் அடுத்த 1000 ஆண்டுகளுக்கான பயணிக்கும் திசையை நாட்டுக்கு காட்டுவதாக இருக்கும்" என சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தார். இதன் ஒரு பகுதியாகவே நாட்டின் பெயரை மாற்றும் திட்டம் கொண்டு வரப்படலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

    • சமூக அமைப்பில் சக மனிதர்களை நாம் பின்தங்க வைத்துள்ளோம்
    • அரசியலமைப்பு சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்

    மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியபோது கூறியதாவது:-

    சமூக அமைப்பில் சக மனிதர்களை நாம் பின்தங்க வைத்துள்ளோம். 2000 ஆண்டுகளாகத் இந்த நிலை தொடர்கிறது. நாம் அவர்களுக்கு சமத்துவத்தை வழங்கும்வரை, ஒதுக்கீடு போன்ற சில சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும்.

    எனவே, இத்தகைய பாகுபாடு இருக்கும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும். அரசியலமைப்பு சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதனை ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கும்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய வழக்கு 16-ந்தேதிக்கு ஒத்திவைத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    • ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

    மதுரை

    ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ்.) சங்க நிர்வாகி சேகர் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்த தாவது:-

    மதுரை, தேனி, திண்டுக் கல், திருச்சி, விருதுநகர், புதுகோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, கரூர், தென்காசி, தஞ்சாவூர், சிவ கங்கை, உள்ளிட்ட மதுரை ஐகோர்ட்டுக்கு உட்பட்ட 20 இடங்களில் வரு கின்ற விஜ யதசமி நாளன்று (22-ந் தேதி) ஊர்வ லம் மற்றும் பொதுக் கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

    அன்றைய தினம் ஆர்.எஸ்.எஸ். சார்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சீருடை யான காக்கி டவுசர், வெள்ளை சட்டை, தொப்பி, பெல்ட், பிளாக் ஷூ அணிந்து இசை வாத்தியம் முழங்க நகர் முழுவதும் மாலை 4 மணிக்கு பேரணி ஆரம்பித்து நகரின் பல்வேறு பகுதிகளை பேரணி ஊர்வ லமாக சுற்றி இறுதியாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்றும் அனுமதி கோரி சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் கடந்த மாதம் விண்ணப்பித் திருந்தும் இதுவரை சம் பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை.

    எனவே விஜயதசமி அன்று பேரணி, கூட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்க வேண் டும்.

    இவ்வாறு மனுவில் கூறி யிருந்தனர்.

    இந்த மனு நீதிபதி இளங் கோவன் முன் விசார ணைக்கு வந்தது. விசாரணை யின் போது நீதிபதி, இதே கோரிக்கைகளை வலியு றுத்தி பல்வேறு வழக்குகள் சென்னை ஐகோர்ட்டிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றார். இந்த வழக்குகளை வருகிற 16-ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவை பொறுத்தவரைக்கும், இங்குள்ள மதம், கலாசாரம் அனைத்து மதத்திற்கும், நம்பிக்கைக்கும் மரியாதை அளிக்கிறது
    • இது இந்துக்களின் நாடு. இதனால் மற்ற மதத்தினர் புறந்தள்ளப்படுகிறார்கள் என்று அர்த்தம் அல்ல

    நாக்பூரில் ஒரு பள்ளியில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 350-வது முடிசூட்டு விழா தொடர்பான நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார்.

    அப்போது மோகன் பகவத் பேசியதாவது:-

    இந்தியாவை பொறுத்தவரைக்கும் இங்குள்ள மதம், கலாசாரம் அனைத்து மதங்களுக்கும், நம்பிக்கைக்கும் மரியாதை அளிக்கிறது. அந்த மதம் இந்து. இது இந்துக்களின் நாடு. இதனால் மற்ற மதத்தினர் புறந்தள்ளப்படுகிறார்கள் என்று அர்த்தம் அல்ல. ஒருமுறை நீங்கள் இந்து என்று சொன்னவுடன், முஸ்லிம்கள் பாதுகாக்கப்பட்டார்கள் என்று கூற வேண்டிய அவசியம் இல்லை. இந்துக்கள் மட்டும் இதை செய்கிறார்கள். இந்தியா மட்டுமே இதைச் செய்கிறது. மற்றவர்கள் இதை செய்யவில்லை.

    எங்கு பார்த்தாலும் சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன் போர், ஹமாஸ்- இஸ்ரேல் போர் குறித்து நீங்கள் கேள்விபட்டு இருப்பீர்கள். இதுபோன்ற பிரச்சினை காரணமாக இந்தியாவில் ஒருபோதும் சண்டை நடைபெற்றதில்லை. மன்னர் சிவாஜி காலத்தில் நடந்த படையெடுப்பு இந்த வகையில்தான். ஆனால் இந்த பிரச்சினையில் நாங்கள் யாருடனும் சண்டை போட்டதில்லை. அதனால்தான் நாங்கள் இந்துக்கள்.

    இவ்வாறு மோகன் பகவத் குறிப்பிட்டார்.

    • கோர்ட்டு அனுமதித்தும் நீலகிரி மாவட்டத்தில் பேரணி நடத்த அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
    • 4 பேர் மீதும் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    இன்று மற்றும் 29-ந்தேதிகளில் 33 இடங்களில் பேரணி நடத்த அனுமதி கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நடத்துவதற்கு அனுமதித்தது. இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளது.

    கோர்ட்டு அனுமதித்தும் நீலகிரி மாவட்டத்தில் பேரணி நடத்த அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து ஆர்.எஸ்.எஸ். சார்பில் உள்துறை செயலாளர் அமுதா, போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால், நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், எருமாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. அந்த நோட்டீசில் பேரணிக்கு அனுமதி வழங்காததை ஐகோர்ட்டின் உத்தரவை மீறும் செயல் என்றும், உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். இல்லையென்றால் 4 பேர் மீதும் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • அணிவகுப்பில் புதுவை அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார், பா.ஜனதா மாநிலத் தலைவர் செல்வகணபதி எம்.பி. ஆகியோரும் பங்கேற்றனர்.
    • ஆர்.எஸ்.எஸ்.வட தமிழக அமைப்பு செயலர் சரவணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.

    புதுச்சேரி:

    புதுவை ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) சார்பில் அருட்பெருஞ்ஜோதி வள்ளலாரின் 200-ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் சுவாமி விவேகானந்தர், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோரின் தேசியச் சிந்தனைகள் நினைவூட்டல் விழா ஆகிய முப்பெரும் விழா வீராம்பட்டினத்தில் நடந்தது.

    விழாவை முன்னிட்டு வீராம்பட்டினம் செங்கழு நீரம்மன்கோவிலில் இருந்து ஆர்.எஸ்.எஸ்.ஊர்வலம் புறப்பட்டது. மகளிர் ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி வழியனுப்பினர். காக்கி, வெள்ளை சீருடை அணிந்த ஆர்.எஸ்.தொண்டர்கள் கையில் தடி ஏந்தியவாறு மேள, தாளம் முழங்க அணிவகுத்து வந்தனர்.

    அணிவகுப்பில் புதுவை அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார், பா.ஜனதா மாநிலத் தலைவர் செல்வகணபதி எம்.பி. ஆகியோரும் பங்கேற்றனர்.

    வீராம்பட்டினம் முக்கிய வீதிகளில் வந்த ஆர்.எஸ்.எஸ். பேரணி அரியாங் குப்பத்தில் நிறைவடைந்தது. பேரணி நிறைவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நாயர் தலைமை வகித்தார். தொழிலதிபர் ஆர்.துளசிராம் முன்னிலை வகித்தார். ஆர்.எஸ்.எஸ்.வட தமிழக அமைப்பு செயலர் சரவணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆர்.எஸ்.எஸ். புதுவை மாவட்டத் தலைவர் ஸ்ரீனிவாசன், கோட்டத்தலைவர் செல்வராஜ் ஆகியோர் செய்திருந்தனர். பொதுக் கூட்டத்தின்போது பேரவைத்தலைவர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • கோர்ட்டு உத்தரவிட்டும் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதிக்கவில்லை என்று வக்கீல் ரபு மனோகர் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்தார்.
    • வழக்கை அவசர வழக்காக இன்றே விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி ஜி.ஜெயச்சந்திரனிடம் கோரிக்கை விடுத்தார்.

    சென்னை:

    தமிழகத்தின் 33 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி கடந்த 16-ந்தேதி காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்நிலையில், கோர்ட்டு உத்தரவிட்டும் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதிக்கவில்லை என்று வக்கீல் ரபு மனோகர் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக இன்றே விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி ஜி.ஜெயச்சந்திரனிடம் கோரிக்கை விடுத்தார்.

    ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதி, ஊர்வலம் நடத்த அனுமதி கோரிய தேதிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறி பின்னர் விசாரிக்கப்படும் என்று தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆர்.எஸ்.எஸ்., தேசிய செயற்குழு கூட்டம், குஜராத் மாநிலம், புஜ் நகரில் நவம்பர் 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நடந்தது.
    • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம், ஜனவரி 22-ந் தேதி நடக்க உள்ளது.

    சென்னை:

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாநில தலைவர் குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆர்.எஸ்.எஸ்., தேசிய செயற்குழு கூட்டம், குஜராத் மாநிலம், புஜ் நகரில் நவம்பர் 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நடந்தது.

    ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டையொட்டி, ஜாதி வேறுபாடுகளை களைந்து, சமுதாய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது, குடும்ப அமைப்பை பாதுகாப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுதேசி வாழ்க்கை முறை, சமூக ஒழுக்கத்தை ஏற்படுத்துவது ஆகிய ஐந்து முக்கிய விஷயங்கள் குறித்து முடிவெடுக்கப்பட்டது.

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம், ஜனவரி 22-ந் தேதி நடக்க உள்ளது. அதை முன்னிட்டு ஜனவரி 1 முதல் 15-ந் தேதி வரை, வீடு, வீடாகச் சென்று ஸ்ரீராம ஜென்மபூமி படம், அயோத்தியில் பூஜிக்கப்பட்ட அட்சதையுடன் அழைப்பிதழ் கொடுக்க முடிவு செய்துள்ளோம்.

    உலகம் தழுவிய அமைப்பாக, ஆர்.எஸ்.எஸ்., வளர்ந்துள்ளது. தமிழகத்தில் பயிற்சி பெற்ற ஊழியர்கள், 20 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளனர்.

    ஆர்.எஸ்.எஸ்., அணி வகுப்புக்கு, கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது அனுமதி அளித்தார். ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி, கடந்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு நடந்தது.

    இந்த ஆண்டு காவல் துறை அனுமதி மறுத்ததால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி, வருகிற 19-ந் தேதி அணிவகுப்பு நடக்கவுள்ளது. இது தொடர்பாக, டி.ஜி.பி.,யை சந்தித்து பேசியுள்ளோம்.

    ஆகம பயிற்சி பெற்றவர்கள் யாராக இருந்தாலும், எந்த ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.,சின் நிலைப்பாடு. ஆனால், அவர்கள் முறையான ஆகம பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

    அதுபோல, கலப்பு திருமணத்தையும் ஆதரிக்கிறோம். ஆனால், திருமணத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, மதமாற்றம் போன்ற செயல்களில் ஈடுபடுவதை எதிர்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது, ஆர்.எஸ்.எஸ்., மாநிலச் செயலாளர் ஜெகதீசன், மாநில செய்தித் தொடர்பாளர் நரசிம்மன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • கம்பத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • ஏராளமான போலீசார் பாதுகாப்பான பணியில் ஈடுபட்டனர்.

    கம்பம்:

    கம்பத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ் தேனி மாவட்ட தலைவர் உதயகுமார் வரவேற்புரை வழங்கினார்.

    வ. உ .சி திடலில் தொட ங்கிய ஊர்வலத்திற்கு கட்டுமான ஒப்பந்ததாரர் துரை.தங்கமாயன் தலைமை தாங்கினார். ஊர்வலத்தினை தேனி மாவட்ட கம்பம் பள்ளதாக்கு விவசாய சங்க செயலாளர் ஜெய பாண்டியன், கம்பம் வேளாளர் மத்திய சங்க தலைவர் முருகேசன், கம்பம் இந்து நாடார் சங்க நிர்வாகி ராஜாராம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    ஊர்வலமானது வ.உ.சி திடலில் இருந்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெரு, பார்க்ரோடு, எல்.எப்.மெயின்ரோடு, சிலப்பதிகாரம் தெரு, நெல்லு குத்தி புளியமரம் தெரு, கூலத்தேவர் முக்கு, வேலப்பர் கோவில் தெரு, போக்குவரத்து சிக்னல், பழைய பஸ் நிலையம், வரதராஜபுரம், கொண்டித்தொழு வழியாக வழியாக வ.உ .சி திடலில் நிறைவடைந்தது. பொதுக் கூட்டத் திடலில் ஆர். எஸ். எஸ் பயிற்சி மையத்தில் பயின்று வருபவர்கள் யோகா, சிலம்பம், கராத்தே, ஒருங்கிணைந்த செயல்பாடு, சுய கட்டுப்பாட்டு திற ன்களை வெளிக்காட்டினர்.

    பின்னர் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றன. இதில் கோட்ட பொறு ப்பாளர் மகேஷ் சிறப்புரை யாற்றினார்.தேனி மாவட்டத்தில் இருந்து திரளான ஆர். எஸ். எஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.ஊர்வலத்தை முன்னிட்டு உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுக்குமாரி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பான பணியில் ஈடுபட்டனர்.

    • நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் காங்கிரசில் 50 சதவீத பெண்களை முதல்-மந்திரிகளாக ஆக்குவோம்.
    • பெண்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது தான் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரசுக்கு இடையேயான போராட்டம்.

    திருவனந்தபுரம்:

    காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய முன்னாள் தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி வயநாட்டில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

    மூன்றாம் நாளான நேற்று எர்ணாகுளம் மாவட்டம் கொச்சியில் கடந்த காங்கிரஸ் மாநில மகளிர் மாநாட்டை ராகுல் காந்தி தொடங்கிவைத்தார். அந்த மாநாட்டில் அவர் பேசியதாவது:-

    நமது கட்சியில் இன்று ஒரு பெண் முதல்-மந்திரி கூட இல்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியில் முதல்-மந்திரிகளாகும் நற்பண்புகள் கொண்ட பல பெண்கள் இருக்கிறார்கள். காங்கிரஸ் தனது கட்டமைப்புக்குள் பெண்களை தீவிரமாக ஊக்குவிக்க வேண்டும். நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் காங்கிரசில் 50 சதவீத பெண்களை முதல்-மந்திரிகளாக ஆக்குவோம்.

    பெண்கள் தாழ்ந்தவர்கள் அல்ல என்று காங்கிரஸ் அடிப்படையில் நம்புகிறது.ஆண்களை விட பெண்கள் பல வழிகளில் உயர்ந்த வர்கள். ஆண்களை விட அவர்களுககு பொறுமை அதிகம். அதிக உணர்திறன் மற்றும் இரக்கமுள்ளவர்கள். அதிகார கட்டமைப்பின் ஒரு பகுதியாக பெண்கள் இருக்க வேண்டும்.

    பெண்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது தான் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரசுக்கு இடையேயான போராட்டம். பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்ற போதிலும், அதை அமல்படுத்தாமல் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது.

    ஆர்.எஸ்.எஸ். அதன் முழு வரவலாற்றிலும் பெண்களை அதன் அணிகளில் அனுமதிக்கவில்லை. இதற்கு முன் இதை நான் இருமுறை கூறியபோது, தங்களிடம் பெண்கள் அமைப்புகள் இருப்பதாக ஆர்.எஸ்.எஸ். கூறியது. ஆனால் அவர்களிடம் பெண்கள் அமைப்புகள் இருக்கிறதா இல்லையா? என்பது கேள்வி அல்ல.

    ஆர்.எஸ்.எஸ்-ல் பெண்கள் அதிகாரத்தை பகிர்ந்து கொள்கிறார்களா? என்பது தான் கேள்வி. அந்த கேள்விக்கு முழுமையாக இல்லை என்பதே பதில். இந்திய அரசியலை ஆழமாக பார்த்தால் ஆர்.எஸ்.எஸ். மற்றும் காங்கிரசுக்கு இடையேயான உண்மையான சண்டை, அரசியலில் பெண்களின் பங்கை பற்றியது என்பதை நீங்கள் காணலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆளும் பா.ஜ.க.வின் பல நடவடிக்கைகளை ஆதரித்து வருபவர் கங்கனா
    • எந்த தொகுதி என்பது முடிவாகவில்லை என்றார் கங்கனாவின் தந்தை

    இந்தி திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கங்கனா ரனாவத் (36). இவர் 4 தேசிய விருதுகள், 5 பிலிம்ஃபேர் விருதுகள் வென்றவர்.

    நாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து சமூக வலைதளங்களில் தனது கருத்துக்களை பதிவு செய்து வரும் கங்கனா, ஆளும் பா.ஜ.க.வினரின் பல நடவடிக்கைகளையும், பிரதமர் நரேந்திர மோடியையும் ஆதரித்து வருபவர்.

    அடுத்த வருடம் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

    கங்கனாவிடம் தேர்தலில் போட்டியிடும் ஆர்வம் உள்ளதா என கேட்கப்பட்ட போது, "பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் ஆசி இருந்தால் போட்டியிடுவேன்" என தெரிவித்திருந்தார்.

    தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

    இந்நிலையில், "அடுத்த வருட பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வின் சார்பில் கங்கனா ரனாவத் போட்டியிடுவார். அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது தற்போது உறுதியாகவில்லை" என கங்கனாவின் தந்தை அமர்தீப் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த சில தினங்களுக்கு முன் ஹிமாச்சல் பிரதேச மாநில பிலாஸ்பூர் நகரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிகழ்ச்சியில் கங்கனா கலந்து கொண்டார். தனது கருத்துக்கள் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்துடன் ஒத்து போவதாக அப்போது அவர் தெரிவித்தார்.

    கடந்த 2008ல் தமிழில் வெளியான "தாம் தூம்" எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளைமறுதினம் திங்கட்கிழமை நடைபெறுகிறது.
    • காங்கிரஸ் கட்சி தலைவர்கள் புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. நாளைமறுதினம் கும்பாபிஷேக விழா நடைபெற இருக்கிறது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கமாட்டார்கள் என கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது.

    அரசியல் ஆதாயத்திற்காக அரசியல் திட்டமாக இதை பா.ஜனதா மற்றும் ஆர்எஸ்எஸ் உருவாக்கியுள்ளது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மணிப்பூர் முதல் மும்பை வரையிலான நடை பயணத்தை தொடங்கியுள்ளார்.

    ராமர் கோவில் கும்பாபிஷேக தினமான 22-ந்தேதி ராகுல் காந்தி எங்கே இருப்பார். அவரது நடைபயணம் எங்கே என்று கேள்வி எழுகிறது. அதற்கு அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் பதில் அளித்து கூறியதாவது:-

    ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழா நடைபெறும் 22-ந்தேதி ராகுல் காந்தி மற்றும் அவரது நடைபயணம் எங்கே? என ஒவ்வொருவரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். 22-ந்தேதி காலை ஸ்ரீ ஸ்ரீ சங்கர்தேவா பிறந்த இடமான அசாம் மாநிலம் படாத்ராவா தன் என்ற இடத்தில் இருப்பார் என்பதை சொல்ல விரும்புகிறேன். ஸ்ரீ ஸ்ரீ சங்கர்தேவா பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். இருந்தபோதிலும் இன்றும் பொருந்தக்கூடிய அவருடைய சித்தாந்தங்கள் கோடிக்கணக்கான மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது."

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    15-ம் மற்றும் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த துறவி, அறிஞர் உள்ளிட்ட பன்முக தன்மை கொண்டவரும், அசாம் காலாசாரத்தின் முக்கியத்துவம் வாய்ந்தவருமாக கருதப்பட்டவர் ஸ்ரீ ஸ்ரீ சங்கர்தேவா. அவர் பிறந்த இடத்தில் ராகுல் காந்தி வழிபாடு செய்கிறார்.

    ராகுல் காந்தியின் 3-வது நாளான நடைபயணம் இன்று அசாமில் தொடங்கியது. ராகுல் காந்தியுடன் ஜெய்ராம் ரமேஷும் நடைபயணத்தில் கலந்து கொண்டார்.

    ×