என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "school students"

    • சிவகங்கை மாவட்ட பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறன், பொது அறிவை மேம்படுத்த நடவடிக்கை
    • இந்த தகவலை சிவகங்ககை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு பயனுள்ளவகையில், மாவட்ட நூலகத்தில் தொடங்கி வைக்கப்ப ட்டுள்ள, வாசிப்புத்திறன் மற்றும் பொதுஅறிவு மேம்பாடு ஆகியவை தொடர்பான நிகழ்வு நடந்தது.

    கலெக்டர் மதுசூதன் ரெட்டி இதை நேரடியாக பார்வையிட்டு, பள்ளி மாணவிகளிடம் கலந்துரையாடினார்.

    அப்போது கலெக்டர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கல்வி கற்பது மட்டுமன்றி, எதிர்காலத்திற்கு பயனுள்ள வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் உண்டு உறைவிட மாதிரிப்பள்ளிகள் போன்றவைகள் ஏற்படுத்தப்பட்டு, அவர்களை ஊக்குவிக்குப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும், பள்ளி மாணவர்கள் கலை, இலக்கியம், அரசியல் உள்ளிட்ட தாங்கள் விரும்பும் பல்வேறு வகையான அறிவு சார்ந்த புத்தகங்கள் மற்றும் தமிழ், ஆங்கில தினசரி நாளிதழ்கள் ஆகியவைகளை ஒரே இடத்தில் படிப்பதற்கு ஏதுவாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களை, ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 50 மாணவர்கள் வீதம், விடுமுறை நாட்களை தவிர்த்து, தினந்தோறும் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களின் துணை யோடு அழைத்து வந்து, காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை அரசு பள்ளி மாணவர்களுக்கும், பிற்பகல் 1.30 மணி முதல் 4.30 மணி வரை தனியார் பள்ளி மாணவர்களுக்கும் தேவையான புத்தகங்களை படிப்பதற்கான நடவடி க்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக சிவகங்கை மற்றும் மானாமதுரை ஆகிய ஒன்றியங்களுக்குட்பட்ட 28 பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    மாணவர்கள் தாங்கள் விரும்பும் புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச்சென்று, ஓய்வு நேரங்களில் படிப்பதற்கு ஏதுவாகவும், அவர்களை நூலக உறுப்பினர்களாக இணைப்பதற்கும், அதற்கான சந்தாத்தொகையினை மாவட்ட நிர்வாகம் மற்றும் வாசகர் வட்டத்தின் சார்பில் செலுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது.

    இங்கு வரும் மாணவர்கள் முதலில் நூலகத்தில் எந்தெந்த வகையான புத்தகங்கள் உள்ளது என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டும். சிவகங்கை மாவட்ட நூலகத்தில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட பல்வேறு வகையான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

    இதில் குடிமைப்பயிற்சி மையம் அமைக்கப்பட்டு, அதற்கான புத்தகங்களும், பயனுள்ள வகையில் இடம் பெற்றுள்ளது.

    மாணவர்களுக்கு பயனுள்ள வகையில். மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகளை, பள்ளி மாணவர்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொண்டு, பொதுஅறிவுத்திறன் மற்றும் புத்தக வாசிப்புத்திறன் ஆகியவற்றை வளர்த்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • குழு விளையாட்டு போட்டிகளை தொடர்ந்து மாவட்ட தடகள போட்டி நடத்த வேண்டும்.
    • பண்டிகை விடுமுறையில் மாணவர்களும் போட்டியில் பங்கேற்க ஆயத்தமாகினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட விளையாட்டு போட்டி கடந்த 17ந் தேதி முதல் நடந்து வருகிறது. குழு விளையாட்டு போட்டிகளை தொடர்ந்து மாவட்ட தடகள போட்டி நடத்த வேண்டும்.

    குறுமைய அளவில் தடகள போட்டி நடத்திய போதும், பெற்றோர், பள்ளி நிர்வாகங்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்ததால் மாவட்ட தடகள போட்டிக்காக தேதி, நடத்துமிடம் முடிவு செய்வதில் இழுபறி நீடித்தது.பிற போட்டிகள் நடக்குமிடம், நாள் முடிவு செய்யப்பட்ட நிலையில், தடகள போட்டி குறித்து அறிவிப்பு பின்னர் வெளியாகுமென தெரிவிக்கப்பட்டது.தீபாவளிக்கு முன்பு 27, 28ந்தேதிகளில் அனைத்து பிரிவினருக்கான மாவட்ட தடகள போட்டிகள் அனுப்பர்பாளையத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பண்டிகை விடுமுறையில் மாணவர்களும் போட்டியில் பங்கேற்க ஆயத்தமாகினர். ஆனால் அறிவித்தப்படி போட்டி நடக்கவில்லை.

    இது குறித்து மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் (பொறுப்பு) முருகேஸ்வரி கூறுகையில், தடகள போட்டி நடத்த தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தது. 2 நாள் மண்டல மேலாண்மை குழு அலுவலர்கள் பள்ளிகளில் ஆய்வு பணி மேற்கொள்ள உள்ளதாக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அதனால், தடகள போட்டி தேதி நவம்பர் முதல் வாரத்துக்கு மாற்றப்பட்டது. நவம்பர் 3, 4-ந் தேதி அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட தடகள போட்டி நடத்தப்படும் என்றார்.

    • நாசரேத் தூய யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது
    • மொத்தம் 220 மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது

    நாசரேத்:

    நாசரேத் தூய யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. பேரூராட்சி தலைவி நிர்மலா ரவி தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் சாந்தகுமாரி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை மாசில்லா வரவேற்றார். மொத்தம் 220 மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.

    இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர் ரவி செல்வக்குமார், பேரூராட்சி துணைத்தலைவர் அருண் சாமுவேல் என்ற தம்பு, வார்டு கவுன்சிலர்கள் அதிசய மணி, சாமுவேல், காமா ஜெபக்குழு நிறுவனர் சாமுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா தலைமை தாங்கினார்.
    • மாணவர்கள் தூய்மை பணி உள்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டனர்.

    கடையம்:

    வெங்கடாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மாதாபட்டணம் ச.ச.வி. மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தலைமை தாங்கினார்.

    ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சித்ரா பாபு, பள்ளி நிர்வாக அதிகாரி அருள் அந்தோணி மிக்கேல், தலைமையாசிரியை அமிர்த சிபியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் பீட்டர் ராஜ் வரவேற்று பேசினார். தொழிலதிபர் ரவி, ஒன்றிய கவுன்சிலர் சங்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முகாமில் மாணவர்கள் தூய்மை பணி உள்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டனர். முகாமானது தொடர்ந்து 7 நாட்கள் நடைபெற இருக்கின்றது. முடிவில் உதவி திட்ட அலுவலர் செபஸ்டியன் நன்றி கூறினார். இதில் ஊராட்சி செயலர் பாரத், பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் மாநகர் அதிக அளவிலான தொழிலாளர்கள் நிறைந்த பகுதி.
    • குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெரும்பாலும் அரசு நகர பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் அதிக அளவிலான தொழிலாளர்கள் நிறைந்த பகுதி இவர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெரும்பாலும் அரசு நகர பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனர். மாணவர்களும் இலவச பேருந்து பயண அட்டை பெற்றுள்ளதால் அரசு பேருந்தில் செ ல்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    இந்நிலையில் திருப்பூர் ஊத்துக்குளி சாலை வழியாக திருப்பூர் வரும் அரசு நகர பேருந்தில் பள்ளி மாணவர்கள் படியில் தோன்றியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்வதை கண்ட நபர் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இது பெற்றோர் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல ஒரு சில பேருந்துகள் மட்டுமே இருக்கும் காரணத்தால் அந்த நேரத்தில் பள்ளிக்கு தாமதம் ஏற்படும் என ஒரே பேருந்தில் ஏராளமான மாணவர்கள் பயணம் செய்கின்றனர். இதனால் பேருந்துகளில் போதிய இடவசதி இல்லாமல் மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    பெரும்பாலான வழித்தடத்தில் மாணவர்கள் இதுபோன்று படியில் தொங்கி பயணம் செய்யும் நிலை உள்ளதாகவும் குறிப்பிட்ட பள்ளி நேரத்தில் அதிக அளவிலான அரசு பேருந்துகளை இயக்கி மாணவர்கள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதுடன் பாதுகாப்பான பயணத்தி னை உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பல்வேறு போட்டிகளில் தேர்வு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது
    • சேகரகுருவும் பள்ளி தாளாளருமான ஜான்சாமுவேல் ஆரம்ப ஜெபம் செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்

    உடன்குடி:

    உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங் தலைமை தாங்கி பல்வேறு போட்டிகளில் தேர்வு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினார்.

    மேலும் வேதக்கோட்டைவிளை, நேசபுரம், கொட்டங்காடு, ராமசாமிபுரம், ஞானியார்குடியிருப்பு, கந்தபுரம், ஆகிய கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நவீன புத்தகப்பைகள், கல்வி உபகரணங்களை வழங்கினார். தனியார் நிதி நிறுவன மண்டல மேலாளர் சேது மனோகரராயன், அதிகாரிகள் செந்தில்குமார், ஜான்சார்லஸ், வட்டார கல்வி அலுவலர் ஜெயவதி ரத்னாவதி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சாந்தி, ஆதியாக்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சேகரகுருவும் பள்ளி தாளாளருமான ஜான்சாமுவேல் ஆரம்ப ஜெபம் செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.தலைமையாசிரியை கிரேனா புக், ஆதியாக்குறிச்சி ஊராட்சி துணைத்தலைவர் பவுல், சபை ஊழியர்கள் ஜெனோ, ஜெஅபி எள்ளுவிளை தி.மு.க. கிளை செயலர் மோகன் மற்றும் வான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வண்ணாரப்பேட்டை, கரம்பை, சிவகாமிபுரம் ஆகிய கிராமங்களில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமலும், பள்ளி முடிந்து வீடு திரும்ப முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
    • மாணவ- மாணவிகள் இன்று காலை தஞ்சை 8ம் கரம்பை பகுதியில் தஞ்சை- திருவையாறு புறவழி சாலையில் ஒன்று திரண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை கிராமத்திற்கு நாள் தோறும் 43 எண் உள்ள பஸ் 7 முறை சென்று வந்தது. இந்த நிலையில் தற்போது காலை 8.30 மற்றும் மாலை 5.30 ஆகிய இரு நேரங்களில் மட்டுமே இந்த பஸ் இயக்கப்படுகிறது.

    இதனால் வண்ணாரப்பேட்டை, கரம்பை, சிவகாமிபுரம் ஆகிய கிராமங்களில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமலும், பள்ளி முடிந்து வீடு திரும்ப முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    எனவே கூடுதல் நேரங்களில் பஸ்கள் இயக்கக் கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த மாணவ- மாணவிகள் இன்று காலை தஞ்சை 8ம் கரம்பை பகுதியில் தஞ்சை-திருவையாறு புறவழி சாலையில் ஒன்று திரண்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை வழி மறித்து நிறுத்தி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க கோரி கோஷங்கள் எழுப்பினர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    இதனை ஏற்றுக்கொண்டு சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியலால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • விக்கிரமசிங்கபுரம் பி.எல்.டபிள்யூ.ஏ. மேல்நிலைப் பள்ளியின் என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம் பாபநாசத்தில் 7 நாட்கள் நடைபெற்றது.
    • முகாமில், பேரிடர் மேலாண்மை, மூலிகை மருத்துவம், முழு சுகாதாரம் பேணுதல், நுகர்வோர் பாதுகாப்பு, இளைஞர் நலன் பாதுகாப்பு போன்ற கருத்தரங்குகள் நடைபெற்றன.

    அம்பை:

    விக்கிரமசிங்கபுரம் பி.எல்.டபிள்யூ.ஏ. மேல்நிலைப் பள்ளியின் என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம் பாபநாசத்தில் 7 நாட்கள் நடைபெற்றது. நிறைவு விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சகாயராஜ் தலைமை தாங்கி மாணவர்கள் ஆளுமை பண்பை வளர்த்து கொள்வது குறித்து எடுத்துரைத்தார். ஆசிரியை ஆனந்தி முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சுரேஷ்பாபு வரவேற்று திட்ட அறிக்கை அளித்தார்.

    முகாமில், பேரிடர் மேலாண்மை, மூலிகை மருத்துவம், முழு சுகாதாரம் பேணுதல், நுகர்வோர் பாதுகாப்பு, இளைஞர் நலன் பாதுகாப்பு போன்ற கருத்தரங்குகள் நடைபெற்றன. மேலும் பாபநாசம் சாரண, சாரணிய பயிற்சி மையத்தில் மரக்கன்றுகள் நடுதல், எயிட்ஸ் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி, பாபநாசம் கோவில் வெளி வளாகம் சுத்தம் செய்தல், தெப்பக்குளக்கரை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட பணிகள் நடைபெற்றது. சிறப்பு முகாமில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. நாட்டு நலப்பணி மாவட்ட தொடர்பு அலுவலர் ஆறுமுகசாமி முகாமை பார்வையிட்டு என்.எஸ்.எஸ்.மாணவர்களை பாராட்டினார். முடிவில் தேசிய பசுமைப் பொறுப்பாளர் பார்த்தசாரதி செல்வகணேசன் நன்றி கூறினார். விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட நுண் உயிர் உரக்குடில், கழிவு நீர் மேலாண்மை நிலையம் போன்றவற்றை மாணவர்கள் பார்வையிட்டனர். அப்போது சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜ் குப்பையிலிருந்து உரம் தயாரிப்பது குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் செல்வசுரேஷ் பெருமாள், நகராட்சி ஆய்வாளர் கண்மணி, எஸ்.பி.எம். மேற்பார்வையாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • காவல்துறையில் உள்ள நடைமுறைகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.
    • போக்குவரத்து விதிகள், அதை பின்பற்ற வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தப்பட்டது.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நடவடிக்கைகள் குறித்து அவினாசியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர். காவல்துறையில் உள்ள நடைமுறைகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன.

    பல்வேறு வகையான குற்றங்கள், கைது நடவடிக்கைகள், சமூகத்தில் நடைபெறும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும், அந்த குற்றங்களில் இருந்து பள்ளி குழந்தைகள் தங்களை தற்காத்து கொள்ளும் வழிமுறைகள், போக்குவரத்து விதிகள், அதை பின்பற்ற வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தப்பட்டது.

    சைபர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணசாமி, பல்வேறு வகையான சைபர் குற்றங்கள் பற்றி அறிவுரை வழங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    • திருக்கனூர் லயன்ஸ் சங்கம் சார்பில் மண்ணாடிப்பட்டு, திருக்கனூர், கூனிச்சம்பட்டு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி அந்தந்தபள்ளி வளாகங்களில் நடந்தது.
    • இந்த விளை யாட்டு உபகரணங்களை பயன்படுத்திமாணவர்கள் கல்வி மட்டுமல்லாது உடல் ஆரோக்கியத்தையும் பேணி காக்க வேண்டும்.என லயன்ஸ் சங்க நிர்வாகிகள் கூறினர்.

    புதுச்சேரி:

    திருக்கனூர் லயன்ஸ் சங்கம் சார்பில் மண்ணாடிப்பட்டு, திருக்கனூர், கூனிச்சம்பட்டு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி அந்தந்தபள்ளி வளாகங்களில் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு திருக்கனூர் லயன்ஸ் சங்க தலைவர் தமிழ்மணி, செயலாளர் அசாருதீன், பொருளாளர் இளங்கோவன் ஆகியோர் தலைமைதாங்கினர். மாவட்ட தலைவர் ஜானகிராமன், பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள கிரிக்கெட் மட்டை , கேரம் போர்டு, இறகுப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.

    இந்த விளை யாட்டு உபகரணங்களை பயன்படுத்திமாணவர்கள் கல்வி மட்டுமல்லாது உடல் ஆரோக்கியத்தையும் பேணி காக்க வேண்டும்.என லயன்ஸ் சங்க நிர்வாகிகள் கூறினர்.

    நிகழ்ச்சியில் திருக்கனூர் லயன்ஸ் சங்க நிர்வாகிகள்சையது, சேகர் செல்வகுமார், சலீம், லட்சுமணன், பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீவில்லி. லயன்ஸ் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
    • ஆசிரியர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்துர்

    தமிழ்நாடு ரோடு சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்றது. போட்டிகளில் ஸ்ரீவில்லி புத்தூர் லயன்ஸ் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சாதனை படைத்தனர்.

    சைக்கிளிங் போட்டியில் 12 வயதுக்குட்பட்ட மாணவர்க

    ளுக்கான பிரிவில் லயன்ஸ் பள்ளி 6-ம் வகுப்பு மாணவன் அறிவுப்புகழேந்தி முதல் பரிசும், கிருஷ்ணசாமி 3-ம் பரிசும் பெற்றனர். மாணவி களுக்கான போட்டியில் லயன்ஸ் பள்ளி 6-ம் வகுப்பு மாணவி தீபிகா 2-ம் இடம் பெற்றார்.

    14-வயதுக்குட்பட்ட போட்டியில் 9-ம் வகுப்பு மாணவன் சுஜன் 2-ம் இடம் பெற்றார். 16-வயதுக்குட்ட போட்டியில் மாணவி சுவாதிகா முதல் பரிசு பெற்றார். 18-வயதுக்குட்ட போட்டியில் 11-ம் வகுப்பு மாணவன் ஆனந்த் 3-ம் இடம் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் பள்ளிக்குப் பெருமையைத் தேடித் தந்த மாணவர்களையும், உடற்கல்வி ஆசிரியர் தர்மராஜ், சக்திவேல், பள்ளித் தாளாளர் வெங்கடாசலபதி லயன்ஸ் சங்க உறுப்பினர்கள், லயன்ஸ் பள்ளி நிர்வாகத்தினர், பள்ளி முதல்வர் முருகன், துணை முதல்வர் ஜெயராம கிருஷ்ணன், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு களைத் தெரிவித்தனர்.

    • மாவட்ட காவல்துறையினர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு, போதை பொருள் தீமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
    • சங்கர் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

    நெல்லை:

    நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் அறிவுரையின் படி மாவட்ட காவல்துறையினர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு, போதை பொருள் தீமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

    அதன்படி இன்று தாழையூத்து, பகுதியில் உள்ள சங்கர் மேல்நிலை பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் காவல்துறையினர் சாலை பாதுகாப்பு குறித்தும், போதை பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், குறித்தும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைபேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், காவல் உதவி செயலி மற்றும் குழந்தை திருமணம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

    ×