என் மலர்
நீங்கள் தேடியது "Seal"
- செங்கோட்டையை அடுத்த பிரானூர் பார்டர் அருகே மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது.
- அரசு அனுமதித்த அளவை விட அதிகமாக 549 யூனிட் மது இருப்பது தெரியவந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டையை அடுத்த பிரானூர் பார்டர் அருகே மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது. அரசு அனுமதி பெற்று நடத்தப்பட்டு வரும் இந்த மன்றத்தில் சில முறைகேடுகள் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக் தலைமையிலான சிறப்பு தனிப்படை அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தியது. அப்போது அரசு அனுமதித்த அளவை விட அதிகமாக 549 யூனிட் மது இருப்பதும், உரிமம் இல்லாத 30-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அதன் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யவும், அந்த மன்றத்திற்கு சீல் வைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
- வரி செலுத்தாதவா்களின் பெயா் பட்டியல் பொது இடங்களில் காட்சிக்கு வைக்கப்படும்.
- காங்கயம் நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காங்கயம் :
வருகிற 30 ந் தேதிக்குள் சொத்துவரியை செலுத்தாவிட்டால் வணிகக் கட்டடங்கள் பூட்டி சீல் வைக்கப்படும் என காங்கயம் நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் வெங்கடேஷ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காங்கயம் நகராட்சி பகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீா்க் கட்டணம் செலுத்தாத 33 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்பு கடந்த ஒரு வாரத்தில் துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது.மேலும் சொத்துவரி செலுத்துவதற்கு இம்மாதம் 30 ந் தேதி கடைசி நாளாகும். அதற்குள் சொத்துவரியை செலுத்தாவிட்டால், எந்தவித முன்னறிவிப்புமின்றி குடிநீா் இணைப்பு துண்டிப்பு மற்றும் வணிக கட்டடங்கள் பூட்டி சீல் வைக்கப்படும். தவிர, வரி செலுத்தாதவா்களின் பெயா் பட்டியல் பொது இடங்களில் காட்சிக்கு வைக்கப்படும்.எனவே மேற்கண்ட நடவடிக்கைகளை தவிா்ப்பதற்கு காங்கயம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை உரிய நேரத்தில் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
- செந்துறை இ-சேவை மையத்துக்கு சீல் வைக்கப்பட்டது
- முறைகேடு புகாரை தொடர்ந்து
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டாட்சியர் அலுவலகம் அருகே பிரபு என்பவர் நடத்தி வரும் தனியார் இ பொது சேவை மையத்தில், பிறப்பு, இறப்பு, பட்டா மாற்றம், பட்டா உட்பிரிவு உட்பட பல்வேறு அரசு சார்ந்த பணிகளுக்கு இணையதளத்தில் மக்கள் விண்ணப்பிக்க செலுத்தும் பணத்தை முறையாக அரசுக்கு செலுத்தாமல், முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக எழுந்த குற்றச்சாட்டில், வட்டாட்சியர் பாக்கியம் விக்டோரியா ஆய்வு மேற்கொண்டார். இதில், முறைகேடு நடைபெறுவது உண்மை என்பது தெரியவந்தது. இதையடுத்து, செந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், அந்த இ சேவை மையத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
- மாநகராட்சிக்கு இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் கடைகள் இயங்கியதால் நடவடிக்கை.
- திருவல்லிக்கேணி, ஜி.பி.சாலை, பாரதிசாலை, செல்லப்பிள்ளையார் கோவில் தெருக்களில் உள்ள கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் தொழில் வரி செலுத்தாமல் இருந்த 125 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். குறிப்பாக, திருவல்லிக்கேணி, ஜி.பி.சாலை, பாரதிசாலை, செல்லப்பிள்ளையார் கோவில் தெருக்களில் உள்ள கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.
தொழில் வரி செலுத்தாமல் மாநகராட்சிக்கு இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் கடைகள் இயங்கியதாக மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- ஜவ்வரிசி தொழிற்சாலை கிட்டங்கிக்கு சீீல் வைக்கப்பட்டது
- தடை செய்யப்பட்ட இரசாயனம் ஹைப்போ சொலூசன் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது
உப்பிலியபுரம் :
உப்பிலியபுரம் பகுதிகளில் திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள தளுகை ஊராட்சி வெள்ளாளப்பட்டி பகுதியில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான ஜவ்வரிசி தொழிற்சாலையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது உணவு பொருள் தயாரிக்க, தடை செய்யப்பட்ட இரசாயனம் ஹைப்போ சொலூசன் பயன்படுத்தியது கண்டறியப்பட்டு சுமார் 3725 லிட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அங்கு தயார் செய்யப்பட்டு , பொட்டலமிடப்பட்ட ஜவ்வரிசி 5445 கிலோ உணவு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. உணவு மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006ன் படி பிணைபத்திரம் பெறப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட இரசாயணம் மற்றும் உணவு பொருள்களை தொழிற்சாலையிலேயே உள்ள கிட்டங்கில் வைத்து சீலிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கண்ட தொழிற்சாலையில் வெளியேறும் இரசாயணக் கழிவுகள் அருகில் உள்ள வாய்க்காலில் கலப்பதை முன்னிட்டு மேல் நடவடிக்கைகாக மாவட்ட மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு தெரியபடுத்தும் வகையில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு கோப்பு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலையில் சேகரிக்கப்பட்ட உணவு மாதிரிகளின் பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டம் 2006ன் படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என நியமன அலுவலர் ரமேஷ்பாபு தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் பாதுகாப்பற்ற முறையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் குறித்து புகார் அளிக்க விரும்பினால் 9944959595, 9585959595 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் அவ்வாறு புகார் அளிக்கும் பொதுமக்களின் விபரம் ரகசியம் காக்கப்பட்டு அந்த கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்.
- கடையில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்து கடைக்கு சீல் வைத்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரி பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் திட்டச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஆண்டனி பிரபு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் டென்னிசன் ஆகியோர் திட்டச்சேரி, மரைக்கான்சாவடி பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மரைக்கான்சாவடி மெயின் ரோட்டில் ராஜசேகர் மனைவி கோமதி (வயது 31) என்பவரின் கடையில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது.
இதையடுத்து உணவு பாதுகாப்புதுறை அதிகாரி கடைக்கு 'சீல்' வைத்தார்.மேலும் கடைகளில் வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
- நகராட்சி கமிஷனர் போலீசாருடன் வந்து கடைகளை இழுத்து பூட்டி சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
- கடை வைத்திருந்த ராஜா என்பவர் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.
முசிறி:
திருச்சி மாவட்டம் முசிறியில் நகரப் பேருந்து நிலையம் சுமார் 50 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்த பேருந்து நிலைய வளாகத்தில் வணிக நிறுவன கடைகள் ஏராளமாக செயல்படுகிறது.
இதற்கிடையே நகரப்பேருந்து நிலையத்தின் கடைகளை இடித்து அகற்றிவிட்டு அங்கு வாரச் சந்தை கட்டுவதற்காக நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
இதற்காக அங்கு கடை வைத்திருப்பவர்களிடம் கடையை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று நகராட்சி கமிஷனர் போலீசாருடன் வந்து கடைகளை இழுத்து பூட்டி சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கடை உரிமையாளர்கள் கடைகளை காலி செய்ய மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு கடை வைத்திருந்த ராஜா என்பவர் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். உடனடியாக விரைந்து செயல்பட்ட அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி தடுத்தனர். அப்பகுதி பொதுமக்கள் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ளே பேருந்துகள் வந்து செல்லும் என்பதையும், பேருந்துகள் இங்கு நிற்கும் என்பதையும் நகராட்சி நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு நகராட்சி தரப்பில் எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை. இதனால் நகராட்சி நிர்வாகத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமும் பரபரப்பும் ஏற்பட்டது.
நகர பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை இடித்து அப்புறப்படுத்துவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நகராட்சி நிர்வாகம் பிடிவாதமாக இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த சில தினங்களுக்கு முன்பாக வரி கட்டாத தனியார் வங்கிக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
- வீதியில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் ரூ. 97,596 வரி பாக்கி இருந்ததால் திண்டிவனம் நகராட்சி அதிகாரிகள் கடைக்கு சீல் வைக்க வந்தனர்
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி அதிகாரிகள் தீவிர வரி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக வரி கட்டாத கடைகளுக்கு சீல் வைத்தும் ஜப்தி செய்தும் வருகின்றனர். மேலும்கடந்த சில தினங்களுக்கு முன்பாக வரி கட்டாத தனியார் வங்கிக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். திண்டிவனம் நேரு வீதியில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் ரூ. 97,596 வரி பாக்கி இருந்ததால் திண்டிவனம் நகராட்சி அதிகாரிகள் கடைக்கு சீல் வைக்க வந்தனர்.நகராட்சி அதிகாரிகள் போலீஸ் உதவியுடன் கடை உரிமையாளர் மற்றும் பணியாளர்களை வெளியேற்ற முயன்றனர். அப்போது கடைக்காரர் என்னை கைது செய்தால் மட்டுமே கடைக்கு சீல் வைக்க முடியும் என அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- உரிமம் புதுப்பிக்காத கல்குவாரிக்கு கலெக்டர் சீல் வைத்தார்.
- கல்குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் செங்குன்றாபுரம் பகுதியில் ஆய்வுக்காக சென்றார். அவர் அங்கிருந்த கல்குவாரி ஒன்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த குவாரிக்கான உரிமம் 2022-ம் ஆண்டே முடிந்து விட்டதும், உரிமத்தை புதுப்பிக்காமல் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கல்குவாரிக்கு உடனடியாக சீல் வைக்கவும், அங்கிருந்த எந்திரங்கள் மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் தாசில்தார் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் அந்த கல்குவாரிக்கு சீல் வைத்தனர். இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி செயல்படும் கல்குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- ராமச்சந்திரன் நடத்தி வரும் மருந்தகத்தில் அனுமதி இல்லாமல் சிகிச்சை அளிப்பதாக புகார் வந்தது.
- வீ.கே. புதூர் தாசில்தார் தெய்வசுந்தரி உள்ளிட்ட அதிகாரிகள் மருந்தகத்தில் ஆய்வு செய்தனர்.
சுரண்டை:
தமிழக அரசு உத்தரவை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் போலி டாக்டர்களை கண்டுபிடிக்கும் பணியில் அரசு துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தென்காசி மாவட்ட கலெக்டருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், கீழப்பாவூர் வணிகர் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது42) என்பவர் சுரண்டை அருகே உள்ள இடையர்தவணையில் நடத்தி வரும் மருந்தகத்தில் பொதுமக்களுக்கு உரிய அனுமதி இல்லாமல் சிகிச்சை அளிப்பதாக வந்த புகாரை தொடர்ந்து வீ.கே. புதூர் தாசில்தார் தெய்வசுந்தரி, சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரேமலதா, தேசிய சுகாதாரக் குழும ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் அறிவுடைய நம்பி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார், ஆலங்குளம் சரக மருத்துவ ஆய்வாளர் பவித்ரா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஸ்ரீ மூல நாதர், வருவாய் ஆய்வாளர் கண்ணன், வி.ஏ.ஓ. உமா மகேஸ்வரி, சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணியன், சுதாகர் உள்ளிட்டோர் மருந்தகத்தில் ஆய்வு செய்தனர். பின்னர் பொதுமக்களிடம் விசாரணை நடத்தி மருந்தகத்துக்கு சீல் வைத்தனர்.
- ரூ.60 லட்சம் மதிப்புள்ள 120 டன் பொட்டாஷ் உரம் மாயமானது.
- கடத்தல் பொருட்களை பதுக்கி வைத்த குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் கப்பல் மூலம் ஏராளமான உணவு பொருட்களும் மற்றும் பல்வேறு பொருட்களும் கொண்டு வரப்படுகிறது. அவைகளை நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் தினசரி குடோன்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் சேமித்து வைக்கப்படுகிறது.
இதில் கடத்தல் கும்பல்கள் ஈடுபட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்து வருவதாகவும், இவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவியாக இருந்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.
இந்நிலையில் ரஷியாவில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்ட 33 ஆயிரம் டன் பொட்டாஷ் உரத்தை பல்வேறு குடோன்களுக்கு பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றது. இதில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள 120 டன் பொட்டாஷ் உரம் மாயமானது.
இதனை முத்தையாபுரம் பகுதியில் உள்ள தனியார் குடோனில் பறிமுதல் செய்த முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் -இன்ஸ்பெக்டர் சுந்தர் மகாராஜன், தனிப்பிரிவு காவலர்கள் ஜான்சன், செல்வின் ராஜா, மற்றும் அருணாச்சலம் உள்ளிட்ட போலீசார் கடத்தலில் ஈடுபட்ட மாதவன், மதியழகன் ஆகிய 2 பேரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தலைமறைவான 3 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.
கடத்தல் நடவடிக்கைகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி டி.எஸ்.பி. சத்யராஜ் நேரடியாக விசாரணை நடத்தி வருகின்றார். இதற்கிடையே கடத்தல் பொருட்களை பதுக்கி வைத்த குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
- தஞ்சாவூரில் பாரில் மதுபானம் வாங்கி அருந்திய 2 பேர் பலியாகினா்.
- 4 குழுவினா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
திருப்பூர் :
தஞ்சாவூரில் பாரில் மதுபானம் வாங்கி அருந்திய 2பேர் பலியாகினா். இதனைத் தொடா்ந்து தமிழக முழுவதும் சட்டவிரோதமாக செயல்படுகிற பாா்கள் மற்றும் போலி மது விற்பனை செய்கிற பாா்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் அதிகாரிகள் சிறப்பு சோதனையில் ஈடுபட்டனா்.
திருப்பூா் மாவட்டத்திலும் சென்னையில் இருந்து வந்த அதிகாரிகள் மற்றும் மாவட்டத்தை சோ்ந்த அதிகாரிகள் என 4 குழுவினா் பிரிந்து சென்று அவிநாசி, தாராபுரம், காங்கேயம், திருப்பூா் உள்ள மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வின்போது பாா்களில் விற்பனை செய்யப்படுகிற மது வகைகள் மற்றும் பாா்கள் சட்டப்படியும், விதிகளுக்கு உள்பட்டும் இயங்குகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனா். அதிகாரிகள் சோதனைகளுக்கு வருவது அறிந்து தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல பாா்கள் மூடப்பட்டிருந்தன. இதனால் அந்த பகுதிகளுக்கு சோதனைக்கு சென்ற அதிகாரிகள் திரும்பி வந்தனா். மாவட்டம் முழுவதும் நடைபெற்ற சோதனையில் சட்டவிரோதமாக செயல்பட்ட பாா்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளா் சுப்பிரமணியன் கூறியதாவது:- தமிழக அரசின் உத்தரவுப்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 4 குழுக்களாக சென்று சட்டவிரோதமாகவும், முறைகேடாகவும் பாா்கள் செயல்படுகிறதா என ஆய்வு செய்தோம். இதில் 30 பாா்கள் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இந்த பாா்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து பல்வேறு பகுதிகளில் பாா்கள் திறக்கப்படவில்லை. இந்த பாா்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த பாா்களிலும் சோதனை மேற்கொள்ளப்படும். இதில் முறைகேடு உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.