என் மலர்
நீங்கள் தேடியது "share market"
- இன்று காலை 2 மணி நேரத்திற்குள் சென்செக்ஸ் 1,100-க்கு அதிக புள்ளிகள் சரிவு.
- வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்தது சரிவுக்கு முக்கிய காரணம்.
மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் சென்செக்ஸ் இன்று மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்து வர்த்தகம் ஆனதால் பங்கு முதலீட்டாளர்கள் சுமார் 7.37 லட்சம் கோடி ரூபாயை காலை 2 மணி நேரத்திற்குள் இழந்துள்ளனர்.
மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் சென்செக்ஸ் இன்று காலை 9.15 மணிக்கு தொடங்கியதில் நேர் தலைகீழாக இறங்கிய வண்ணமாகவே இருந்தது.
வெள்ளிக்கிழமை சிறப்பு வர்த்தகம் சென்செக்ஸ் 79724.12 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இன்று காலை 79713.14 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.
அதன்பின் தொடர்ந்து சரிவை சந்தித்தது. இன்று காலை 11.26 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 78.400.46 புள்ளிகளுடடன் வர்த்தகம் ஆகியது. சுமார் 1323.66 புள்ளிகள் சரிவை சந்தித்தது.
இதனைத் தொடர்ந்து 7.37 கோடி ரூபாய் அளவிற்கு பங்கு முதலீட்டாளர்கள் இழப்பை சந்தித்துள்ளனர். ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் வெளிநாட்டு முதலீட்டார்கள் தங்களுடைய பங்குகளை தடையின்றி விற்பனை செய்ததும், மெரிக்க அதிபர் தேர்தல் மற்றும் அடுத்த வாரம் அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் குறித்து முடிவு எடுக்க இருப்பது ஆகிய காரணிகள் இந்த வீழ்ச்சிக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
சன் ஃபார்மா, என்.டி.பி.சி., ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், அதானி போர்ட்ஸ், பவர் கிரிட், டாடா மோட்டார்ஸ், டைடன் மற்றும் டாடா ஸ்டீல் போன்றவை மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது.
அதேவேளையில் மகிந்திரா அண்டு மகிந்திரா, டெக் மகிந்திரா, ஹெ.சி.எல். டெக்னாலாஜிஸ் மற்றும் இந்தூஸ் இண்ட் பேங்க் பங்குகள் உயர்வை சந்தித்துள்ளன. வெளிநா்டு நிறுவன முதலீட்டாளர்கள் சுமார் 211.93 கோடி ரூபாய் அளவில் கடந்த வெள்ளிக்கிழமை பங்குகளை விற்றனர். அக்டோபர் மாதம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 94 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பங்குகளை விற்றுள்ளனர்.
+2
- கடந்த வாரம் கடைசி நாளான வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் சுமார் 2 ஆயிரம் புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் நிறைவு.
- இன்று காலை சென்செக்ஸ் 1076 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது.
தீபாவளி பண்டிகை, அமெரிக்க அதிபர் தேர்தல், அதானி மீது அமெரிக்க குற்றச்சாட்டு ஆகியவற்றின் காரணமாக கடந்த வாரம் வியாழக்கிழமை வரை மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் புள்ளிகள் சரிந்து வர்த்தகமானது.
கடந்த 21-ந்தேதி (வியாழக்கிழமை) 0.54 சதவீதம் குறைந்த மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் சென்செக்ஸ் 77,155 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.
கடந்த வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை சுமார் 1,961 சென்செக்ஸ் புள்ளிகள் (2.54 சதவீதம்) உயர்ந்து மும்பை பங்குச்சந்தை 79117.11 புள்ளிகளுடன் நிறைவடைந்தது.
இன்று காலை 9.15 மணிக்கு வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 1,076 புள்ளிகள் உயர்ந்து 80193.47 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. இன்று காலை அதிகபட்சமாக செக்செக்ஸ் 80452.94 புள்ளிகளில் வர்த்தகமானது. தற்போது 10 மணியளவில் சென்செக்ஸ் 80248 புள்ளிகளில் வர்த்தகமானது.

அதானிக்கு அமெரிக்கா நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையிலும், மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றதால் இரண்டு நாட்களாக பங்கு சந்தை உயர்ந்து காணப்படுவதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு நாட்களில் சுமார் சென்செக்ஸ் சுமார் 3,200 புள்ளிகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லார்சன், எம் அண்டு எம், ஐசிஐசிஐ உள்ளிட்ட நிறுவனங்களில் பங்குகள் உயர்வை சந்தித்துள்ளது.
- சென்செக்ஸ் 305.62 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது.
- நிஃப்டி 31.65 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது.
பங்குச் சந்தை இன்று காலை 9.15 மணிக்கு தொடங்கியதும் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை நிஃப்டி ஆகியவை உயர்வுடன் வர்த்தகமானது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 80,109.85 புள்ளிகளுடன் நேற்று வர்த்தகம் முடிவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 305.62 புள்ளிகள் உயர்ந்து 80,415.47 புள்ளிகள் வர்த்தகம் தொடங்கியது.
காலை 10.20 வரையில் வர்த்தமாக அதிகபட்சமாக சென்செக்ஸ் 80,482.36 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக சென்செக்ஸ் 79,912.57 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது.
அதேபோல் இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 31.65 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமானது. நேற்று நிஃப்டி 24,221.90 புள்ளிகள் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 24,253.55 புள்ளிகள் வர்த்தகம் தொடங்கியது.
இன்று காலை 10.20 வரையில் அதிகபட்சமாக நிஃப்டி 24,361.55 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக நிஃப்டி 21,160.24 புள்ளிகளும் வர்த்தகமானது.
- அதிக பட்சமாக 82,317.74 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.
- குறைந்த பட்சமாக 80,467.37 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 809 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு/ Share markets stock markets BSE sensex surge 809 point also nifty surgedமும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 81,182.74 புள்ளிகளுடன் இன்று காலை வர்த்தகம் தொடங்கியது. நேற்று சென்செக்ஸ் 80,956.33 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இன்று காலை பங்குச் சந்தை தொடங்கியதும் சென்செக்ஸ் புள்ளிகள் சற்று குறைந்து உயர்ந்து வர்த்தகம் ஆனது. மதியம் 12 மணியளவில் சட்டென சுமார் ஆயிரம் புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் ஆனது. பின்னர் அப்படியே உயர்ந்து அதிகபட்சமாக 82,317.74 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.
மதியம் 2.50 மணிக்கு சுமார் 900 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் ஆனது. சரிவை சந்தித்து உடனடியாக மார்க்கெட் உயரத் தொடங்கியது. இறுதியாக மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 81,765.86 புள்ளிகளில் வர்த்தம் நிறைவடைந்தது.
இன்று மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 809.53 புள்ளிகள் உயர்ந்துள்ள நிலையில் குறைந்த பட்சமாக 80,467.37 புள்ளிகளிலும், அதிக பட்சமாக 82317.74 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது.
இதேபோல் இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 50 240.95 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் நிறைவந்தது. நேற்று நிஃப்டி 24,467.45 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவந்தது. இன்று காலை நிஃப்டி 24,539.15 புள்ளிகளில் வர்த்தம் தொடங்கியது. இன்று குறைந்த பட்சமாக 24,295.55 புள்ளிகளிலும், அதிக பட்சமாக 24,857.75 நிஃப்டி வர்த்தகம் ஆனது.
டாலருக்கு நிகரான இந்திய பணமதிப்பு 84.72 ரூபாயாக உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு 84.75 ரூபாயாக இருந்த நிலையில் 84.72 ரூபாயாக உயர்ந்துள்ளது.
+2
- மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் இன்று காலை சென்செக்ஸ் 81,212 புள்ளிகளில் தொடங்கியது.
- குறைந்த பட்சமாக சென்செக்ஸ் 80, 082.82 புள்ளிகளிலும், அதிகபட்சமாக சென்செக்ஸ் 82,213.92 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது.
30 நிறுவனங்களின் பங்குகளை அடிப்படையாக கொண்டு இயங்கும் மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் நேற்று மதியம் 3.30 மணிக்கு சென்செக்ஸ் 81,289.96 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.
இன்று காலை வர்த்தகம் 9.15 மணிக்கு சென்செக்ஸ் 81,212 புள்ளிகளில் தொடங்கியது. சுமார் 10.30 மணியளவில் சென்செக்ஸ் புள்ளிகள் சரியத் தொடங்கின. காலை 10.45 மணிக்கு சுமார் 1,200 புள்ளிகள் சரிந்து சென்செக்ஸ் 80,082.82 புள்ளிகள் வர்த்தகம் ஆனது. அப்போது பாரதி ஏர்டெல் நிறுவன பங்கைத் தவிர மற்ற அனைத்து நிறுவன பங்குகளும் சரிவை சந்தித்தன. குறிப்பாக வங்கி பங்குகள் கடும் சரிவை சந்தித்தன.
சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் சரிந்த சிறிது நேரத்த்தில் வர்த்தகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. மெல்லமெல்ல சரிவில் இருந்து மீண்ட வர்த்தகம், பின்னர் உயர்வை நோக்கி சென்றது. அதன்பின் மிகப்பெரிய அளவில் சரிவை சந்திக்கவில்லை. இறுதியாக 3.30 மணிக்கு மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 843.6 புள்ளிகள் உயர்ந்து 82,133.12 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. குறைந்த பட்சமாக சென்செக்ஸ் 80, 082.82 புள்ளிகளிலும், அதிகபட்சமாக சென்செக்ஸ் 82,213.92 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது.
ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல், டாடா ஸ்டீல், இந்தூஸ்இன்ட் பேங்க் (Indusind Bank) ஆகிய நிறுவன பங்குகள் மட்டும் சரிவை சந்தித்தன.
பாரதி ஏர்டெல் பங்கு 4.42 சதவீதம், ஐ.டி.சி. பங்கு 2.04 சதவீதம், இந்துஸ்தான் யுனிலிவர் பங்கு 19.3 சதவீதம் ஏற்றம் கண்டன.
இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 50 இன்று 219.60 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் நிஃப்டி 24,768.30 புள்ளிகளில் நிறைவடைந்தது. நேற்று நிஃப்டி 24548.70 புள்ளிகள் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில் இன்று காலை 24498.35 புள்ளிகள் வர்த்தகம் தொடங்கியது.
இன்று குறைந்த பட்சமாக 24180.80 புள்ளிகளிலும், அதிகபட்சமாசக 24,792.30 புள்ளிகளிலும் வர்த்தகமானது.
- இன்று அதிகபட்சமாக சென்செக்ஸ் 82,166.44 புள்ளிகளில் வர்த்தகமானது.
- குறைந்தபட்சமாக 82,551.28 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 82,133.12 புள்ளிகளுடன் வர்த்தகம் கடந்த வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இன்று காலை மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 82,000.31 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று காலை சென்செக்ஸ் 132 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் தொடங்கியது.
அதன்பின் வர்த்தகத்தில் மிகப்பெரிய ஏற்றம் ஏதும் இல்லை. சரிவைத்தான் சந்தித்தது. இன்று அதிகபட்சமாக சென்செக்ஸ் 82,166.44 புள்ளிகளில் வர்த்தகமானது. குறைந்தபட்சமாக 82,551.28 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.
மதியம் 3.30 மணிக்கு சென்செக்ஸ் 81,748.57 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய சென்செக்ஸ் புள்ளிகளுடன் 384.55 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் நிறைவடைந்தது.
ஏற்றம் மற்றும் சரிவு கண்ட நிறுவனங்கள்
பஜாஜ் பைனான்ஸ், ஐ.டி.சி., ஐசிஐசிஐ வங்கி, மகிந்திரா அண்டு மகிந்திரா, ஆக்சிஸ் வங்கி, மாருதி சுசுகி, இந்துஸ்தான்இந்த் வங்கி பங்குகள் ஏற்றம் கண்டன.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டி.சி.எஸ்., ஹெச்.டி.எஃப்.சி., பாரதி ஏர்டெல், இன்போசிஸ், எஸ்.பி.ஐ., இந்துஸ்தான் யுனிலிவர், எல் அண்டு டி, ஹெச்.சி.எல். டெக்னாலாஜிஸ் பங்குகள் சரிவை சந்தித்தன.
இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 50
இந்திய பங்குச் சந்தை நிஃப்டியும் இன்று 100.05 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் முடிவடைந்தது. வெள்ளிக்கிழமை மதியம் வர்த்தகம் நிஃப்டி 24,768.30 புள்ளிகளில் நிறைவடைந்த நிலையில் இன்று காலை வர்த்தகம் நிஃப்டி 24,753.40 புள்ளிகளில் தொடங்கியது. இன்று நிஃப்டி அதிகபட்சமாக 24,781.25 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 24,601.75 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது.

இறுதியாக நிஃப்டி 100.05 புள்ளிகள் குறைந்த நிஃப்டி 24,668.25 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
ஏற்றம் மற்றும் சரிவு கண்ட நிறுவனங்கள்
அல்ட்ரா டெக் சிமெண்ட், என்.டி.பி.சி., விப்ரோ, ஓ.என்.ஜி.சி., டைட்டன், அதானி என்டர்பிரைசர்ஸ், டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ் பங்குகள் சரிவை சந்தித்தன.
கோல் இந்தியா, டிரென்ட், பாரத் எலக்ட்ரானிக்ஸ், ஹெச்.டி.எஃப்.சி. லைவ் இன்சூரன்ஸ் பங்குகள் ஏற்றம் கண்டன.
- மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் இன்று 1.30 சதவீதம் சரிவை சந்தித்தது.
- 30 நிறுவன பங்குகளும் சரிவை சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 384.55 சரிந்து 81,748.57 புள்ளிகளில் நேற்று வர்த்தகம் நிறைவடைந்தது. இந்த நிலையில் இன்று காலை மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 81,511.81 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. நேற்றைய புள்ளிகளை விட இன்று சுமார் 237 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் தொடங்கியது.
அதன்பின் தொடர்ந்து குறைந்து கொண்டே வர்த்தகம் ஆனது. இன்று அதிகபட்சமாக 81,613.63 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 80,612.20 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 80,684.45 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,064.12 புள்ளிகள் குறைந்தது. இது 1.30 சதவீதம் ஆகும்.
இதன்மூலம் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு சுமார் 4.92 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு சரிந்துள்ளது. மும்பை பங்கு சந்தையின் 30 நிறுவன பங்குகளில் இன்று சரிவை சந்தித்தன.
பாரதி ஏர்டெல், இந்துஸ்இந்த் வங்கி, ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஏசியன பெயின்ட்ஸ், லார்சன் அண்டு டூர்போ, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி பங்குகள் கடும் சரிவை சந்தித்தன.
இந்திய பங்குச் சந்தை நிஃப்டியும் இன்று 332.25 புள்ளிகள் சரிந்து 24,336.00 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
- மூன்று நாட்களில் சென்செக்ஸ் 1950.92 புள்ளிகள் சரிந்ததுள்ளது.
- நேற்று சென்செக்ஸ் 1,064.12 சரிவை சந்தித்த நிலையில் இன்று 502.25 புள்ளிகள் சரிந்தது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் இன்றுடன் தொடர்ந்து 3-வது நாட்களாக வர்த்தகம் சரிவை சந்தித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை (நேற்று முன்தினம்) சென்செக்ஸ் 384.55 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்று சென்செக்ஸ் 1,064.12 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது. இதனால் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு சுமார் 4.92 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு சரிந்தது.
இந்த நிலையில்தான் இன்றும் சரிவை சந்தித்துள்ளது. நேற்றைய வர்த்தகம் சென்செக்ஸ் 80,684.45 புள்ளிகளில் முடிவடைந்த நிலையில் இன்று காலை 80,666.26 புள்ளிகளில் வர்த்தகம் ஆரம்பமானது.
இன்று அதிகபட்சமாக 80,868.02 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 80,050.07 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது. இறுதியாக சென்செக்ஸ் 502.25 புள்ளிகள் குறைந்தது 80182.20 புள்ளிகள் வர்த்தகம் நிறைவடைந்தது. மூன்று நாட்களில் சென்செக்ஸ் 1950.92 புள்ளிகள் சரிந்துள்ளது.
ஏற்றம் மற்றும் இறக்கம் கண்ட நிறுவன பங்குகள்
ஹெச்.டி.எஃப்.சி., பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, எஸ்.பி.ஐ., எல்&டி பங்குகள் சரிவை எதிர்கொண்டன.
ரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ், டி.சி.எஸ்., இன்போசிஸ், ஐ.டி.சி, ஹெச்.சி.எல். டெக்னாலாஜிஸ், மஹிந்திரா அண்டு மஹிந்திரா பங்குகள் ஏற்றம் கண்டன.
இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 50
இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 50-யும் இன்று சரிவை சந்தித்தது. நிஃப்டி 137.15 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்று நிஃப்டி 24,336.00 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று நிஃப்டி 24,297.95 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. அதிகபட்சமாக 24,394.45 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 24,149.85 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது. இறுதியாக 24,198.85 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
- கடந்த மூன்று நாட்களாக பங்குச்சந்தை சரிந்து வந்ததால், முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்.
- அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் சரிந்து வருவதாக கூறப்படுகிறது.
இன்று தொடங்கிய இந்தியா பங்குச் சந்தை வர்த்தகம் ஆரம்பத்திலேயே 1000 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிந்து உள்ளதாக கூறப்படும் செய்தி செய்தி முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஆயிரத்து ஒரு புள்ளிகள் சரிந்து, 79 ஆயிரத்து 180 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 288 புள்ளிகள் சரிந்து, 23 ஆயிரத்து 909 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் எந்த ஒரு பெரிய நிறுவனத்தின் பங்குகளும் உயரவில்லை என்றும், கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் சரிந்து வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த மூன்று நாட்களாக பங்குச்சந்தை சரிந்து வந்ததால், முதலீட்டாளர்களுக்கு ஏராளமான நஷ்டம் அடைந்துள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் இன்று 1,176.46 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது.
- இந்த வாரம் முழுவதும் 4 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் புள்ளிகள் சரிந்து வர்த்தகம் ஆனது.
இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸ் இந்த வாரத்தின் ஐந்து நாட்களும் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்து இன்றைய வர்த்தகம் சென்செக்ஸ் 78,041.59 புள்ளிகள் நிறைவடைந்துள்ளது. கடந்த ஐந்து நாட்களில் சென்செக்ஸ் 3,932.86 புள்ளிகள் சரிந்துள்ளது.
நேற்று 79,218.05 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 79,335.48 புள்ளிகளில் வர்த்தம் தொடங்கியது. வர்த்தகம் தெடங்கிய சிறிது நேரத்தில் உயர்வை சந்தித்தது. 9.45 மணியளவில் 79,587.15 புள்ளிகள் வர்த்தகம் ஆனது.
இதனால் தொடர்ந்து உயர்வு இருக்கும் என முதலீட்டாளர்கள் நினைத்த நிலையில், உடனடியாக தலைகீழாக இறக்கம் கண்டனம். இன்று குறைந்த பட்சமாக 77,874.59 புள்ளிகள் வர்த்தகம் ஆனது. வர்த்தகம நிறைவடையும் நேரத்தில் சற்று உயர்வை சந்தித்து 78,041.59 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1176.45 புள்ளிகள் சரிந்தது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 82,133.12 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. திங்கட்கிழமை 82,000.31 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கி, 81,748.57புள்ளிகளில் நிறைவடைந்தது. அன்றைய தினம் 384.53 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் நிறைவடைந்தது.
செவ்வாய்க்கிழமை வர்த்தகம் 81,511.81 புள்ளிகளில் தொடங்கி 80,684.45 புள்ளிகளில் நிறைவடைந்தது. 1,064.12 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது.
புதன்கிழமை 80,666.26 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கி, 80,182.20 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. 502.25 புள்ளிகள் குறைந்த வர்த்தகம் நிறைவடைந்தது.
நேற்று வியாழக்கிழமை 79,029.03 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கி 79,218.61 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. 939.59 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் நிறைவடைந்தது.
இன்று 79,335.48 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. 78,041.59 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. 1176.46 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது.
- கடந்த ஐந்து நாட்களில் சென்செக்ஸ் 3,932.86 புள்ளிகள் சரிந்தது.
- வாரத்தின் 5-வது நாளிலும் இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் கடும் சரிவுடன் நிறைவடைந்தது.
இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸ் இந்த வாரத்தின் ஐந்து நாட்களும் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்து நேற்றைய வர்த்தகம் சென்செக்ஸ் 78,041.59 புள்ளிகள் நிறைவடைந்துள்ளது. கடந்த ஐந்து நாட்களில் சென்செக்ஸ் 3,932.86 புள்ளிகள் சரிந்தது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பது போன்ற காரணங்களால் வாரத்தின் 5-வது நாளிலும் இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் கடும் சரிவுடன் நிறைவடைந்தது.
இதே போல் மும்பை பங்குச்சந்தை எண் சென்செக்ஸ் 1,100 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு நேற்று ஒரே நாளில் சுமார் ரூ.9 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
- ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், பாரதி ஏர்டெல், எஸ்.பி.ஐ., ஐ.டி.சி., எல் அண்டு டி, மஹிந்திரா அண்டு மஹிந்திரா பங்குகள் ஏற்றம் கண்டன.
- டி.சி.எஸ்., ஹெச்.டி.எஃப்.சி., ஐசிஐசிஐ பேங்க், இன்போசிஸ், இந்துஸ்தான் யுனிலிவர் பங்குகள் சரிவை சந்தித்தன.
ஆண்டின் இறுதி நாளான இன்று (டிசம்பர் 31-ந்தேதி) இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸ் மற்றும் இந்திய பங்குச் சந்தை நிஃப்டி ஆகியவை சரிந்து வர்த்தகம் முடிவடைந்தது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் நேற்று 78,248.13 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 262.56 புள்ளிகள் குறைந்து 77,982.57 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.
பின்னர் இன்று குறைந்தப் பட்சமாக சென்செக்ஸ் 77,560.79 புள்ளிகளில் வர்த்தகமானது. அதிகபட்சமாக சென்செக்ஸ் 78,305.34 புள்ளிகளில் வர்த்தகமானது. இறுதியாக சென்செக்ஸ் 109.12 புள்ளிகள் குறைந்து சென்செக்ஸ் 78,139.01 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
அதேபோல் நிஃப்டி மிகப்பெரிய அளவில் உயர்வு மற்றும் சரிவு இல்லாமல் பாயிண்ட் 10 (.10) புள்ளிகள் மட்டுமே குறைந்து வர்த்தகம் நிறைவு பெற்றது.

இந்திய பங்குச் சந்தை நேற்று நிஃப்டி 23,644.90 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை நிஃப்டி 84.30 புள்ளிகள் சரிந்து நிஃப்டி 23,560.60 புள்ளிகளில் வர்த்தம் தொட்ங்கியது. குறைந்த பட்சமாக நிஃப்டி 23,460.45 புள்ளிகளில் வர்த்தகமானது. அதிகபட்சமாக நிஃப்டி 23,689.85 புள்ளிகளில் வர்த்தகமானது. இறுதியாக -.10 புள்ளிகள் குறைந்து 23,644.80 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், பாரதி ஏர்டெல், எஸ்.பி.ஐ., ஐ.டி.சி., எல் அண்டு டி, சன் பார்மாசெயுட்டிகள், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, கோடக் மஹிந்திரா பேங்க், அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா மோட்டார்ஸ் போன்ற பங்குகள் ஏற்றம் கண்டன.
டி.சி.எஸ்., ஹெச்.டி.எஃப்.சி., ஐசிஐசிஐ பேங்க், இன்போசிஸ், இந்துஸ்தான் யுனிலிவர், ஹெச்.சி.எல். டெக்னாலாஜிஸ், பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் பேங்க், டைடன் பங்குகள் சரிவை சந்தித்தன.