என் மலர்
நீங்கள் தேடியது "shops"
- பூக்கடை முன்பு நின்று பூஜை பொருட்களை வாங்கி செல்வதால் விபத்து.
- தரை கடைகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், திட்டையில் வசிஷ்டேஸ்வரர் கோயில் உள்ளது.
இந்த கோவிலின் அருகே உள்ள நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து சாலையோரம் சிலர் பூக்கடைகள் அமைத்து பூ வியாபாரம் செய்து வருகின்றனர்.
இதனால் இந்த சாலையில் செல்லும் ஏராளமான வாகனங்களுக்கும், கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு இது இடையூராக உள்ளது.
தார்சாலையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து இந்த கடைகள் அமைக்கப் பட்டுள்ளன.
மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பூக்கடை முன்பு நின்று பூஜை பொருட்களை வாங்கி செல்வதால் விபத்துகளை சந்திக்கும் நிலை உள்ளது.
எனவே போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் அமைக்கப்பட்டுள்ள தரை கடைகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கும், நெடுஞ்சாலைதுறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடந்த மாதம் 22-ந்தேதி முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் காமராஜர் மார்க்கெட்டை திறந்து வைத்தார்.
- சாவிகள் ஒப்படைக்கப்பட்டதையடுத்து உடனடியாக கடைகள் செயல்பாட்டுக்கு வரும்.
தஞ்சாவூர்:
தஞ்சை அரண்மனை வளாகத்தில் காமராஜர் காய்கனி மார்க்கெட் கடந்த 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் இருந்த கட்டிடங்களை இடித்து விட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக மார்க்கெட் கட்ட முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து காமராஜர் காய்கனி மார்க்கெட் தற்காலிகமாக குழந்தையேசு கோவில் அருகே உள்ள இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து ரூ.20.26 கோடி செலவில் மார்க்கெட் கட்டி முடிக்கப்பட்டது. அதன்படி 4.1 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் 87 பெரிய கடைகளும், 201 சிறிய கடைகளும் கட்டப்பட்டன. இது தவிர வாகனங்கள் நிறுத்துமிடம், ஏ.டி.எம். மையம், கழிவறை வசதிகளும் கட்டப்பட்டுள்ளன.
இதையடுத்து கடந்த மாதம் 22-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் காமராஜர் மார்க்கெட்டை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து கடைகள் ஏலம் விடப்பட்டன. இருப்பினும் பல்வேறு இடையூறுகள் காரணமாக கடைகள் திறக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் வியாபாரிகள் கலந்து பேசி சுமூக தீர்வு ஏற்பட்டது.இதையடுத்து ஏலம் எடுத்த கடை வியாபாரிகளுக்கு, சாவிகள் ஒப்படைக்கப்பட்டன. சாவிகள் ஒப்படைகக்ப்பட்ட தையடுத்து உடனடியாக கடைகள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வியாபாரிகள் மார்கழி மாதம் என்பதால் தயக்கம் காட்டினர்.
இந்த நிலையில் வருகிற 1-ந்தேதியான ஆங்கில புத்தாண்டு தினம் முதல் மார்க்கெட்டை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது என வியாபாரிகள் முடிவு செய்தனர். இதற்கான பணிகளில் வியாபாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி குழந்தையேசு கோவில் அருகில் உள்ள தற்காலிக மார்க்கெட்டில் செயல்பட்ட காய்கனி மார்க்கெட் வருகிற 1-ந்தேதி முதல் அரண்மனை வளாகத்தில் உள்ள புதிய கட்டிடத்தில் செயல்படும் என காமராஜர் மார்க்கெட் காய்கனி வர்த்தக நல சங்கத்தினர் தெரிவித்தனர்.
- மதுரை பஸ் நிலைய கடைகளில் கோடிக்கணக்கில் வரி பாக்கி செலுத்தாதது தகவல் அறியும் சட்டத்தில் அம்பலமானது.
- அதிகபட்சமாக ரூ.20 லட்சம் முதல் வரி பாக்கி வைத்துள்ளது
மதுரை
மதுரை மாநகராட்சியில் மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பனகல் சாலை ஆகிய 3 இடங்களில் பஸ் நிலையங்கள் செயல்படுகிறது. இங்கு மாநகராட்சிக்கு சொந்தமாக 317 கடைகள் உள்ளன.
இதில் அரசு போக்கு வரத்து கழக அலுவலகம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, ஏ.டி.எம். மையம் உட்பட 277 கடைகள் இயங்கி வருகின்றன. மதுரை 3 பஸ் நிலையங்களில் உள்ள சுமார் 277 கடைகள் வாடகை, வரி செலுத்துகிறதா? என்பது தொடர்பாக சமூக ஆர்வலர், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மாநகராட்சியிடம் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு மாநகராட்சி தகவல் தொடர்பு அதிகாரி பதிலளித்துள்ளார். அதில், மேற்கண்ட 3 பஸ் நிலையங்களில் உள்ள வியாபார கடை உரிமையாளர்கள் ரூ.1 கோடியே 69 லட்சத்து 87 ஆயிரத்து 370-க்கு வரி பாக்கி வைத்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
3 பஸ் நிலையங்களில் ஒரே நபருக்கு 3, 4 கடைகள் வாடகைக்கு வழங்கப்பட்டிருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மதுரை பஸ் நிலையங்களில் செயல்படும் சில கடை உரிமையாளர்கள் அதிகபட்சமாக ரூ.20 லட்சம் முதல் வரி பாக்கி வைத்துள்ளது இந்த சட்டத்தின் வாயிலாக தெரிய வந்துள்ளது.
வரி பாக்கி வைத்து உள்ள வியாபாரிகளிடம் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து பாக்கியை வசூல் செய்ய வேண்டும். அல்லது அவர்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்
- மதுரை மண்டல தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
- 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு பெரிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி கலெக்டரிடம் மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
மதுரை
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை நாடார் மகாஜன மேன்சன் மினி அரங்கத்தில் நடந்தது. மண்டல தலைவர் மைக்கேல்ராஜ் தலைமை தாங்கினார்.
ஜெயக்குமார், பிரபாகரன், சுவீட்ராஜன் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ், மோட்டார் உதிரி பாக விற்பனையாளர் சங்கம் கண்ணழகன், மாநில துணைத்தலைவர் சூசை அந்தோணி, சில்வர் சிவா, கரண்சிங், கார்த்தி, காந்தி, செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பேசினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
வணிக வரித்துறையி னரால் நடத்தப்படும் "டெஸ்ட் பர்ச்சேஸ்" என்ற அடிப்படையில் கடைகளில் நடைபெறும் அத்துமீறலை ரத்து செய்யவேண்டும்.
வாகன விதி மீறல் என்ற பெயரில் நடைபெறும் அதிரடி நடவடிக்கையை தடை செய்யவேண்டும்.
மின்சார கட்டணம், பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் போன்ற எரிபொருளின் விலை உயர்வால் ஏழை மக்களின் வாழ்வாதாரம், வாகன ஓட்டிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மின் கட்டணத்தை மாதம் ஒருமுறை கணக்கிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறோம்.
கப்பலூர் சுங்கச் சாவடியை அகற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.யின் தியாகத்தை போற்றும் வகையில் 100 அடி வெண்கல சிலை அமைத்து கப்பலில் நிற்பது போல் வடிவமைத்து சென்னை, தூத்துக்குடி, குமரி கடற்கரையில் நிறுவ தமிழக அரசை கேட்டுக்கொள்வது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேற்கண்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கலெக்டர் அலுவலகம் முன்பு பெரிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி கலெக்டரிடம் மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் கண்ணன், பழம், ரவிச்சந்திரன், முத்துராஜ், சுருளி, கோகுலம் கணேசன், பெருமாள், ஜெயராஜ், கணேசன், செந்தில்குமார், மகளிரணி விக்டோரியா, பாக்கியலட்சுமி, கோகிலா, சித்தலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை மாவட்ட துணை தலைவர் குட்டி என்ற அந்தோணி ராஜ் செய்திருந்தார்.
- அனைத்து வணிகர்களும் டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறையை எதிர்த்து கடைக்கு முன் போஸ்டர் ஒட்டியும் தமிழ்நாடு முழுக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
- டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறை குறித்து முறைப்படி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரை நடைமுறை படுத்த மாட்டோம்
சுவாமிமலை:
அனைத்து வணிகர்களும் டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறையை எதிர்த்து மாநில தலைவர் ஏ.எம். விக்ரமராஜா அறிவுறுத்தலின்படி சட்டையில் பேட்ச் அணிந்து மற்றும் கடைக்கு முன் போஸ்டர் ஒட்டியும் தமிழ்நாடு முழுக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
முதல் கட்ட ஆர்ப்பாட்டத்தின் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ. எம். விக்கிரமராஜாவை அழைத்து பேசி டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறை குறித்து முறைப்படி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரை அதை நடைமுறைப்படுத்த மாட்டோம் எனவும், சிறு குறு வணிகர்களையும் எவ்வகையிலும் பாதிக்க மாட்டார்கள் எனவும் உறுதி அளித்துள்ளார்கள்.
இதற்காக டெல்டா வணிகர் நல சங்க கூட்டமைப்பின் தலைவர்முகமது சுகைல், செயலாளர் உதயகுமார், பொருளாளர் ரகுராமன், கௌரவ தலைவர்அசோகன், முதன்மை துணைத் தலைவர்கள் ஜமால்முகமது, பாரதி, பாலமுருகன், ஹாஜாமைதீன் , துணைத் தலைவர்கள் சரவணன், செல்வசேகர், ஜாகிர் உசேன், கணேசன்மூர்த்தி, துணைச் செயலாளர்கள், ரவிச்சந்திரன், செல்வகுமார், அக்பர் அலி, இணைச் செயலாளர்கள், பிரபாகரன்,பாலமுருகன், கரிகாலன், ஒருங்கிணை ப்பாளர்,சந்திரசேகர், துணை ஒருங்கிணைப்பாளர் குமார், இணை ஒருங்கிணைப்பாளர், கருணாகரன், செய்தி தொடர்பாளர், லுக்மான் உமர், ஆகியோர் சார்பாகவும் மற்றும் வணிக அனைத்து உறுப்பினர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரமைப்பின் மாநில தலைவர் ஏ. எம். விக்கிரமராஜா ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொண்டனர்.
- வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை), வடலூர் ராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு, அன்று அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் பார்களை மூட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டள்ளது.
- விதிமுறைகளை மீறி, மதுக்கடைகள் மற்றும் பார்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்மந்தப்பட்ட வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை), வடலூர் ராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு, அன்று அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் பார்களை மூட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டள்ளது.
இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபா
னக்கடைகள் மற்றும் பார்களை 5-ந் தேதி முழுமையாக மூட வேண்டும். விதிமுறைகளை மீறி, மதுக்கடைகள் மற்றும்
பார்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை
செய்தாலோ சம்மந்தப்பட்ட வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- 6 கடைகளை கொண்ட தனியார் வணிக வளாகம் உள்ளது.
- திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீசார் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் கொள்ளையர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் :
திருப்பூர் கே.வி.ஆர். நகர் பகுதியில் மேற்கு பிரதான சாலையில் 6 கடைகளை கொண்ட தனியார் வணிக வளாகம் உள்ளது. இதில் மளிகை கடை, துணிக்கடை, பேன்சி கடை, இ சேவை மையம் மற்றும் முடி திருத்தகம் என 5 கடைகள் செயல்பட்டு வருகிறது .ஒரு கடை காலியாக உள்ளது.
இதே வீதியில் திருப்பூர் மத்திய காவல் நிலையம் சிறிது தூரத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 5 கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் கல்லாப்பெட்டியில் வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர் .இதில் மளிகை கடையில் விலை உயர்ந்த சாக்லேட்டுகளை எடுத்து சாப்பிட்டு விட்டு குப்பைகளை அங்கேயே போட்டு விட்டு சென்றுள்ளனர். மேலும் கடைகளில் இருந்த விலையுயர்ந்த பொருட்களை அள்ளிச் சென்றுள்ளனர்.
இன்று காலை கடையை திறக்க உரிமையாளர்கள் வந்த போது அனைத்து கடையின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு கொள்ளை போனது தெரியவந்தது .
இதனையடுத்து கடை உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீசார் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் கொள்ளையர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். மத்திய காவல் நிலையம் அமைந்துள்ள அதே வீதியில் சிறிது தூர இடைவெளியில் நடைபெற்றுள்ள இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- பல ஆண்டுகள் பழமையான கடைகள் என்பதால் முழுமையாக இடிக்கப்பட்டது.
- எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
வல்லம்:
தஞ்சை அருகே உள்ள வல்லம் கடைவீதியில் மேலப்பள்ளிவாசல் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த பள்ளிவாசல் வளாகத்தை சுற்றி பள்ளிவாசல் நிர்வாகத்தின் கீழ் 14 கடைகள் உள்ளன. இதில் ஹோட்டல், எலக்ட்ரிக்கல், பேன்ஸி கடைகள் இருந்து வந்தது.
தற்போது வல்லம்-திருச்சி சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மழைநீர் வடிகால் வாய்க்கால் மற்றும் சாலை விரிவாக்கம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைப்பதற்காக வல்லம் பஸ் நிலையத்தில் இருந்து கடைவீதி வழியாக சுமார் 2 கி.மீட்டர் தொலைவிற்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
அதே போல் வல்லம் கடைவீதி பள்ளிவாசல் எதிரே அமைந்துள்ள கடைகளில் முன்பகுதி இடிக்கப்பட்டது. பல ஆண்டுகள் பழமையான கடைகள் என்பதால் அதனை முழுமையாக இடிக்கப்பட்டது.
இதில் இரண்டு கடைகளில் வாடகைக்கு இருந்த வாடகைதாரர்கள் இருவர் கடை சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
ஆகையால அந்த இரண்டு கடைகள் மட்டும் பாதி நிலையில் இடிக்கப்பட்டு நிலேயிலே உள்ளன. அந்த கடைகளில் வாடகைக்கு இருந்தவர்கள் கடைக்கு வெளியே சிறிய கதவுகள் அமைத்து பூட்டு போட்டு வைத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை பூட்டப்பட்டு இருந்த ஒரு ஓட்டல் கடையின் உள்ளே திடீரென தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தஞ்சையில் இருந்து வந்த தீயணைப்பு துறையினர் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வல்லம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர்.
இது குறித்து போலீசார், கடையில் தீ பற்றியதற்கான காரணம் என்ன? தீயை மர்ம நபர்கள் யாரேனும் பற்ற வைத்தனரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடைகளின் டெண்டர் மார்ச் 10ஆம் தேதி விடப்படும் என அறிவிக்கபட்டிருந்தது.
- டெண்டர் எடுத்தவரிடம் வியாபாரிகள் பழைய முறையிலேயே வாடகை களை வசூலிக்க வேண்டும்.
திருப்பூர் :
பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர் திருவிழா வருகின்ற வெள்ளிக்கிழமை தொடங்கி ஏப்ரல் 4-ம் தேதி குண்டம் மற்றும் தேர் திருவிழா நடைபெற உள்ளது.திருவிழாவை முன்னிட்டு தற்காலிக கடைகளின் டெண்டர் மார்ச் 10ஆம் தேதி விடப்படும் என அறிவிக்கபட்டிருந்தது.குறிப்பிட்ட தொகை வராத காரணத்தினால் 10ம் தேதி நடக்க இருந்த டெண்டரை மீண்டும் 20 ஆம் தேதி மாற்றி வைத்தனர்.
இந்த நிலையில் வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோவில் நிர்வாகமே கடைகளை வாடகைக்கு விட வேண்டும் .டெண்டர் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று மனு அளித்திருந்தனர்.நேற்றுகாலை 10 மணி அளவில் டெண்டர் நடைபெறும் என்று அறிவிக்க ப்பட்டிருந்த நிலையில் மீண்டும் மாலை 4 மணிக்கு மாற்றி வைக்கப்பட்டது. வியாபாரிகள் டெண்டர் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து செயல் அலுவலக அலுவலர் அலுவலகம் முன்பு கூடியதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் கோவில் தக்கார் பெரிய மருதுபாண்டி ஆய்வாளர் ஆதிரைகோவில் செயல் அலுவலர் காளிமுத்து ஆகியவர்கள் முன்னிலையில் டெண்டர் நடைபெற்றது. இந்த டெண்டரை ஈட்டு வீராம்பாளையம் ஊராட்சி சேர்ந்த பொன்னுச்சாமி என்பவர் ரூ 7லட்சத்து பத்தாயிரத்திற்கு டென்டரை எடுத்தார்.மேலும் டெண்டர் எடுத்தவரிடம் வியாபாரிகள் பழைய முறையிலேயே வாடகை களை வசூலிக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளனர்.
- பரமத்திவேலூர், சேந்தமங்கலம், மோகனூர், ராசிபுரம் ஆகிய ஊருக்கு செல்லக்கூடிய டவுன் பஸ் நிறுத்தும் இடத்தில், நிழல் கூடம் அமைக்கப்பட்டு உள்ளது.
- இந்த நிழல் கூடத்தில் பயணிகள் இருக்கைகள் அகற்றப்பட்டு அந்த இடத்தில் பெண்கள் வளையல் கடைகள் வைத்துக் கொண்டு பஸ் பயணிகளுக்கு இடையூறு செய்து வருகின்றனர்டிஸ் .
நாமக்கல்:
லாரி தொழில் மற்றும் முட்டை உற்பத்தியில் நாமக்கல் முதலிடம் வகிக்கிறது. இதனால் தினமும் நாமக்கல்லுக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள்.
நாமக்கல் பஸ் நிலையத்தி லிருந்து மதுரை, கும்பகோணம், திருச்சி, கோவை, ஓசூர், சேலம் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும். இதனால் பஸ் நிலையத்தில் பயணிகள் நிற்க வசதியாக நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பரமத்திவேலூர், சேந்தமங்கலம், மோகனூர், ராசிபுரம் ஆகிய ஊருக்கு செல்லக்கூடிய டவுன் பஸ் நிறுத்தும் இடத்தில், நிழல் கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிழல் கூடத்தில் பயணிகள் இருக்கைகள் அகற்றப்பட்டு அந்த இடத்தில் பெண்கள் வளையல் கடைகள் வைத்துக் கொண்டு பஸ் பயணிகளுக்கு இடையூறு செய்து வருகின்றனர். இதனை போலீசாரும், அதிகாரிகளும் இதுவரை கண்டு கொள்ளவில்லை.
இதனால் பயணிகள் தினமும் தற்போது அடிக்கும் வெயிலில் தவித்து வருகி றார்கள். இதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பஸ் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- வருகிற 4-ந் தேதி மகாவீர் ஜெயந்தி ஆகும்.
- மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருகிற 4-ந் தேதி (செவ்வாய்கிழமை) மகாவீர் ஜெயந்தி ஆகும்.
இதனை முன்னிட்டு அன்றைய தினம்தஞ்சை மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபான கடைகள், அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற விடுதிகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்பட மாட்டாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மதுரை மாநகராட்சி பகுதிகளில் மகாவீர் ஜெயந்தியையொட்டி 4-ந் தேதி இறைச்சி கடைகள் அடைக்கடுகின்றன.
- சுகாதாரச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரை
மதுரை மாநகராட்சி அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மகாவீர் ஜெயந்தியையொட்டி நாளை மறுநாள் (4-ந்தேதி) அனைத்து விதமான இறைச்சி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நாளில் ஆடு, மாடு, கோழி மற்றும் இதர உயிரினங்கள் உள்ளிட்டவற்றின் இறைச்சி விற்பனை செய்யக்கூடாது. இறைச்சி விற்பனை கடைகளை திறந்து வைக்க வும் கூடாது.
தடையை மீறி செயல்படு வர்களின் கடைகளில் உள்ள இறைச்சியை பறிமுதல் செய்வதுடன் பொது சுகாதாரச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.