search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 102485"

    • இதற்கான இடம் தேர்வு செய்து அதற்கான பணிகளை இன்று கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • தஞ்சையில் அடுத்த மாதம் 15-ந் தேதி புத்தக திருவிழா தொடங்குகி 25-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அரண்மனை வளாகத்தில் அடுத்த மாதம் புத்தக திருவிழா நடைபெற உள்ளது.

    இதற்கான இடம் தேர்வு செய்து அதற்கான பணிகளை இன்று கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரங்குகள் அமைக்கப்படும் இடம்? உள்ளிட்ட பலவற்றை குறித்து கேட்டறிந்தார்.

    இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சையில் அடுத்த மாதம் 15-ந் தேதி புத்தக திருவிழா தொடங்குகி 25-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஏராளமான புத்தக விற்பனையாளர்கள், வெளியீட்டாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் கருத்தரங்கு, சொற்பொழிவு, கவியரங்கம் நடைபெறும். 108 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

    கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் அனைவருக்கும் அதற்கான பயன்கள் கிடைக்கும். இந்த மாதம் 28 முதல் அடுத்த மாதம் 28-ந் தேதி வரை உழவன் ஆப் மூலம் பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    உரிமம் பெறாமல் வீட்டு உபயோக பூச்சி மருந்துகள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

    புதுக்கோட்டை:

    உரிமம் பெறாமல் வீட்டு உபயோக பூச்சி மருந்துகள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து கடைகளிலும் எலி மருந்துகள், கரப்பான்பூச்சி கொல்லி மருந்துகள் மற்றும் கொசு விரட்டி போன்ற வீட்டு உபயோக பூச்சி மருந்துகளை விற்பனை செய்யவும், இருப்பு வைக்கவும் பூச்சிமருந்து விற்பனை உரிமம் அவசியம்/ உரிமம் இல்லாமல் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும்பாலான பெட்டிக் கடைகள், மளிகை கடைகள், ஷாப்பிங்மால் போன்ற சூப்பர் மார்க்கெட்களில் எலி மருந்துகள், கரப்பான்பூச்சி கொல்லி மருந்துகள், கொசுவர்த்தி சுருள் போன்ற வீட்டில் பயன்படுத்தும் பூச்சிகொல்லி மருந்துகளை விற்பனை உரிமம் பெறாமல் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வரப்பெற்றுள்ளன.

    வீட்டில் பயன்படுத்தும் பூச்சி கொல்லி மருந்துகளுக்கும் கடைகளில் விற்பனை செய்ய உரிமம் பெறுவது அவசியமாகும். இதற்கு தேவையான உரிமத்தினை தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு பூச்சி மருந்துக்கு ரூ.500 வீதம் அதிகபட்சம் ரூ.7500- செலுத்தி உரிமம் பெற்றுக் கொள்ளலாம்.

    உரிமம் பெறாமல் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது பூச்சிமருந்து சட்டம் 1968ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.எனவே, அனைத்து பெட்டிக் கடை, மளிகைகடை மற்றும் சூப்பர் மார்க்கெட் விற்பனையாளர்கள் உடன் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும் . பூச்சி மருந்து சட்டம் 1968ன்படி உரிய பதிவேடுகள் மற்றும் ஆவணங்களையும் பராமரிப்பதோடு விற்பனை செய்வதற்கு உரிய பட்டியலையும் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    மேலும், விற்பனை நிலையங்களில் வீட்டில் பயன்படுத்தும் பூச்சி மருந்துகளை உணவு பொருட்கள் அருகில் வைத்து விற்பனை செய்யாமல் தனியாக இருப்பு வைத்து விற்பனை செய்யவேண்டும். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மேற்கண்ட வீட்டு உபயோக பூச்சி மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது.

    மேலும் இது குறித்த விபரங்களுக்கு வேளாண்மை உதவி இயக்குநர், புதுக்கோட்டை - 6381741240, கந்தர்வகோட்டை 9442275726, திருவரங்குளம் - 8072154306, கறம்பக்குடி - 9443826047, அறந்தாங்கி - 9442634852, ஆவுடையார்கோவில் - 9944669129, மணமேல்குடி - 9865012210, திருமயம் - 9843322167, அரிமளம் - 9486493224, பொன்னமராவதி - 9442684565, அன்னவாசல் - 9629500919, விராலிமலை - 9443839994, குன்றாண்டார்கோவில் - 9442933492 அலுவலர்களை தொடர்பு கொண்டு உரிமம் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சந்திரகிரியில் 5 வாக்குசாவடி மையங்களில் கள்ள ஓட்டு போடுவதற்கு துணையாக இருந்த 10 அதிகாரிகளை சஸ்பெண்டு செய்து சித்தூர் கலெக்டர் பிரத்யும்னா உத்தரவிட்டார்.

    திருமலை:

    ஆந்திர மாநிலத்தில் 175 சட்டசபை தொகுதிகளுக்கும், 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 11-ந் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

    சித்தூர் மாவட்டம், சந்திரகிரி சட்டப்பேரவை தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியினர் 5 வாக்குச்சாவடி மையங்களில் கள்ள ஓட்டு போட்டதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்தனர். இது போல் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசார் 2 வாக்குசாவடி மையங்களில் கள்ள ஓட்டு போட்டதாக தெலுங்கு தேசம் கட்சியினரும் புகார் அளித்தனர்.

    இதையடுத்து, சந்திரகிரி சட்டப்பேரவை தொகுதியில் உள்ள பாகாலா மண்டலம், புலிவருத்திப்பல்லி, ராமச்சந்திராபுரம் மண்டலம் என்.ஆர்.கம்மப்பல்லி, கொத்தகண்டிகை, கம்மப்பல்லி, வெங்கடராமாபுரம், கேலேபல்லி, குப்பம்பாதுரு ஆகிய 7 மையங்களில் கடந்த 19-ந் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.

    இந்தநிலையில் முதல் கட்டமாக புலிவருத்தி பல்லி, என்.ஆர்.கம்மப்பல்லி, கொத்தகண்டிகை, கம்மப்பல்லி, வெங்கடராமாபுரம் ஆகிய 5 வாக்குசாவடி மையங்களில் கள்ள ஓட்டு போட துணையாக இருந்ததாக அதிகாரிகள் முரளி கிருஷ்ணா, குணசேகர்ரெட்டி, செஞ்சய்யா, மகபூப்பாஷா, ஜானகிராம்ரெட்டி, மது, முரளிதர்ரெட்டி, ஸ்ரீதேவி, கங்காதரய்யா, வெங்கட்ரமணா மாதங்கி ஆகிய 10 பேரை சஸ்பெண்டு செய்து சித்தூர் கலெக்டர் பிரத்யும்னா உத்தரவிட்டார்.

    வயநாடு பகுதியில் கரையான் அரித்த வீட்டில் இருந்து ஆதிவாசி பெண் கலெக்டராவதை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். #AdivasiStudent #Wayanad
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் தொழுவண்ணா பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி கமலம். ஆதிவாசிகளான இவர்களது மகள் தன்யாஸ்ரீ (வயது 26). கரையான் அரித்த ஓலை கூரை வீட்டில் வசித்தபோதும் தன்யாஸ்ரீக்கு கலெக்டர் ஆகவேண்டும் என்று தீராத தாகம் இருந்தது. கல்வியை நன்கு கற்றுவந்தார். மகளின் ஆர்வத்துக்கு பெற்றோர் உறுதுணையாக இருந்தனர்.

    சிவில் சர்வீஸ் தேர்வு எழுத டெல்லி செல்ல வேண்டும். ஆனால் டெல்லி செல்ல பணம் இல்லை. தன்யாஸ்ரீயின் பெற்றோர் அக்கம் பக்கம் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி டெல்லிக்கு அனுப்பி வைத்தனர்.

    தேர்வு எழுதி விட்டு வந்த பின்னர் கூலிவேலை செய்து வந்தார் தன்யாஸ்ரீ. சமீபத்தில் மின்சாரம் தாக்கி தன்யாஸ்ரீ தூக்கி வீசப்பட்டார். இதில் அவரது இடது கை எலும்பு முறிந்தது.

    இந்தநிலையில் சிவில் சர்வீல் தேர்வு முடிவு வெளியானது. இதில் தன்யாஸ்ரீ 410 ரேங்க் பெற்று வெற்றி பெற்றார். வயநாடு பகுதியில் ஆதிவாசி பெண் கலெக்டர் ஆவது இதுவே முதல்முறை. இதனால் ஆதிவாசி மக்கள் தன்யாஸ்ரீயின் வெற்றியை கொண்டாடி வருகிறார்கள். #AdivasiStudent #Wayanad
    நாமக்கல் பாராளுமன்ற தேர்தல் சட்டமன்ற தொகுதிக்கான மண்டல அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பை கலெக்டர் பார்வையிட்டார்.

    நாமக்கல்:

    நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்திவேலூர், சங்ககிரி ஆகிய சட்டமன்ற தொகுதிக்கான மண்டல அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு சம்மந்தப்பட்ட சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் நடைபெற்றது.

    இந்த பயிற்சி வகுப்பினை கலெக்டர் ஆசியாமரியம் நேரில் பார்வையிட்டார். பின்னர் கூட்டத்தில் அவர் பேசுகையில் தெரிவித்ததாவது:-

    தேர்தல் பணிகளில் மண்டல அலுவலர்களுக்கான பணிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 10 முதல் 12 வரை வாக்கு சாவடிகள் ஒரு மண்டல அலுவலரின் கட்டுப்பாட்டு வரம்பில் இருக்கும். மண்டல அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்கு சாவடிகள் குறித்த விபரங்களையும் அதற்கான வழித்தடங்களையும் அறிந்து இருக்க வேண்டும். வாக்கு சாவடிகளில் உட்கட்டமைப்பு வசதிகள், இருக்கைகள், மின்சார வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட வசதிகளில் குறைபாடுகள் இருந்தால் மண்டல அலுவலர்கள் சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்.

    மண்டல அலுவலர்கள் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மாறுதல் செய்யப்பட்டுள்ள வாக்கு சாவடிகள் குறித்து அறிந்திருக்க வேண்டும்.

    மேலும் வாக்குசாவடிகளில் கைபேசி மற்றும் தொலைபேசி இணைப்பு இருப்பதை உறுதி செய்திட வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக அனுமதி இல்லாத ஊர்வலங்கள், வாகனங்கள், சுவர் விளம்பரங்கள், கொடிகம்பங்கள் ஆகியவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு சாவடிகளுக்கு அருகில் உள்ள தேர்தல் தொடர்பான அலுவலர்களின் தொலைபேசி எண் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    சம்பந்தப்பட்ட வாக்கு சாவடிக்கு மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் தொடர்பான இதர படிவங்கள் வந்து சேர்ந்துவிட்டதை உறுதி செய்து கொள்ள வேண்டும். வாக்கு சாவடிகளில் காவல் துறை துணை நிலை படையினர் வரப்பெற்றதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மின்னணு வாக்குபதிவு எந்திரத்தில் ஏதேனும் தொழில் நுட்ப கோளாறு ஏற்படும் பட்சத்தில் மாற்று மின்னணு வாக்கு பதிவு எந்திரம் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மின்னணு வாக்கு பதிவு எந்திரம் சரியான முறையில் சீல் இடப்பட்டதை உறுதிப்படுத்த வேண்டும். இறுதியாக காவல் துறை பாதுகாப்புடன் வாக்குபதிவு எந்திரங்களை சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் முறையாக ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். #tamilnews

    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியால் ஓட்டுப்பதிவு பாதிக்காது என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார். #ParliamentElection #ChitraPournami
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். மேலும் பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலை நகரில் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர்.

    கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகையன்றும், சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமியன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி வருகிற ஏப்ரல் மாதம் 18-ந் தேதி இரவு சுமார் 7 மணிக்கு தொடங்கி மறுநாள் 19-ந் தேதி மாலை சுமார் 5 மணியளவில் நிறைவடைகிறது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது கிரிவலம் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே தேர்தல் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கூறியதாவது:-

    இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டது. முன்னதாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்தபோது உரிய ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க கூறப்பட்டுள்ளது. கிரிவலப் பாதையிலும், திருவண்ணாமலை நகர பகுதியிலும் 250-க்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு மையங்கள் உள்ளது. இந்த வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவின் போது தடையோ, சிரமமோ, அபாயம் ஏற்படுமா? என்று பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்யப்பட்டது.



    காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். சித்ரா பவுர்ணமி கிரிவலம் இரவு 7 மணிக்கு தான் ஆரம்பிக்கிறது. அதனால் அங்குள்ள பொதுமக்கள் எந்தவித சிரமமின்றி வாக்குப்பதிவு செய்து கொள்ளலாம். நகரத்திற்குள் உள்ள வாக்குப்பதிவு மையங்கள் அதிகபட்சம் 2 கிலோ மீட்டரில் இருந்து 1½ கிலோ மீட்டர் இடைவெளியில் உள்ளது. அதனால் சித்ரா பவுர்ணமியின் போது வாக்குப்பதிவிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை.

    கிரிவலம் செல்வதற்காக வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் வருபவர்கள் பயண நேரத்தை கணக்கு செய்து வர வேண்டும்.

    2 வாக்கு எண்ணும் மையங்கள் கிரிவலப்பாதையில் உள்ளது. கிரிவலப் பாதையில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் இருந்து வாக்கு எண்ணும் மையத்திற்கு வாக்கு பொருட்களை கொண்டு செல்ல சிரமங்கள் உள்ளதா, மாற்று வழி உள்ளதா என்று காவல் துறையினருடன் இணைந்து ஆய்வு செய்து வருகிறோம். எதுவும் முடியாத பட்சத்தில் வாக்கு எண்ணும் மையங்கள் மாற்ற மாநில தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ParliamentElection  #ChitraPournami



    திருவண்ணாமலை தொகுதி பாராளுமன்ற தேர்தலை மாற்று தேதியில் நடத்த கோரி மாவட்ட இந்து முன்னணி தலைவரும் மத்திய அரசு வழக்கறிஞருமான சங்கர் கலெக்டர் கந்தசாமியிடம் மனு கொடுத்துள்ளார். #ParliamentElection #TiruvannamalaiGirivalam
    திருவண்ணாமலை:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடக்கிறது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான தேர்தல், அடுத்த மாதம் 18-ந் தேதி ஒரே கட்டமாக நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    அன்றைய தினம் மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறும் நிலையில் வாக்குப்பதிவு பாதிக்கும் என பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர். இது தொடர்பாக கோர்ட்டிலும் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தென்னிந்தியாவின் புகழ்மிக்க சிவாலயமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வர் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி கிரிவலம், பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18-ந் தேதி அமைந்திருக்கிறது.

    இதனால் திருவண்ணாமலை தொகுதியிலும் தேர்தலை மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இதுகுறித்து மாவட்ட இந்து முன்னணி தலைவரும் மத்திய அரசு வழக்கறிஞருமான சங்கர் கலெக்டர் கந்தசாமியிடம் திருவண்ணாமலை தொகுதி பாராளுமன்ற தேர்தலை மாற்று தேதியில் நடத்த கோரி மனு கொடுத்துள்ளார்.



    ஏப்ரல் 18-ந்தேதி தேர்தல் நடைபெறும் அன்று இரவு சித்ரா பவுர்ணமி வருவதால் அன்று திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இதனால் பொதுமக்கள் வாக்களிப்பதில் தவறும் நிலை உருவாகும்.

    மேலும் ஓட்டுபெட்டியை வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்வதிலும் மிகுந்த சிரமம் ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் திருவண்ணாமலை தொகுதி தேர்தலை மாற்று தேதியில் நடத்த ஆவன செய்ய வேண்டும்.

    இந்து மக்களின் தருமத்திற்கும், எண்ணங்களுக்கும் மரியாதை கொடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் மாற்று தேதியை ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.

    சித்ரா பவுர்ணமியன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம், ஏப்ரல் 18-ந் தேதி இரவு 7.05 மணிக்கு தொடங்கி, 19-ந்தேதி மாலை 5.35 மணிக்கு நிறைவடைகிறது. அதன்படி, 18-ந் தேதி இரவு, சுமார் 20 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வார்கள்.

    வாக்குப்பதிவு நடைபெறும் 18-ந் தேதி இரவு பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அமைந்திருப்பதால், அன்றைய தினம் திருவண்ணாமலை தொகுதியில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வெகுவாக பாதிக்கும் என தெரிகிறது.

    கார்த்திகை தீபத்திரு விழாவுக்கு இணையாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சித்ரா பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள்.

    சென்னை, வேலூர், சேலம், விழுப்புரம், காஞ்சிபுரம் உள்பட தொலைதூர நகரங்களில் இருந்து திருவண்ணாமலை வரும் பக்தர்கள், தங்களுடைய வாக்குகளை செலுத்திவிட்டு வருவதில் சிக்கல் தாமதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

    மேலும், திருவண்ணாமலை தொகுதியிலும் சித்ரா பவுர்ணமியன்று வாக்குப்பதிவு வெகுவாக பாதிக்கலாம். அதோடு, தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், 20 லட்சம் பக்தர்கள் வருகை தரும் சித்ரா பவுர்ணமி விழாவுக்கான பாதுகாப்பில் கவனம் செலுத்துவதிலும் சிக்கல் ஏற்படும்.

    அதேபோல், திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்கள், திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஆகியவற்றில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    எனவே, இரண்டு தொகுதிகளில் உள்ள 3,475 வாக்குச்சாவடி மையங்களில் இருந்து, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வாகனங்களில் கொண்டு வந்து, திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவல நெரிசலை கடந்து வாக்கு எண்ணும் மையங்களில் சேர்ப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

    எனவே, திருவண்ணாமலை தொகுதியில் தேர்தல் நடத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து, தேர்தல் ஆணையம் தனி கவனம் செலுத்த வேண்டும்.

    தேர்தல் ஆணையமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து சட்டரீதியான பரிசீலனை செய்து முன் கூட்டியே இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவண்ணாமலை பக்தர்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். #ParliamentElection #TiruvannamalaiGirivalam
    தஞ்சை மாவட்டத்தில் 104 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்று மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை காவல்துறை அதிகாரிகளுக்கு வாக்குச்சாவடி மற்றும் வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளுவது தொடர்பான பயிற்சி முகாம் தஞ்சை தீர்க்க சுமங்கலி மஹாலில் இன்று நடைபெற்றது பயிற்சியில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை கலந்துகொண்டு போலீசாருக்கு பயிற்சி வழங்கி பேசினார்.

    தஞ்சை மாவட்டத்தில் 2287 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் காவலர்கள் கண்காணிப்பு பணியை கண்ணும் கருத்துமாக கண்காணிக்க வேண்டும். மாவட்டத்தின் 104 பதட்டமான வாக்குச்சாவடிகள் ஆக கண்டறியபட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு அவசியம் ஏற்படுத்த வேண்டும்.

    மேலும் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படக்கூடிய வாக்குச்சாவடிகள் எவை எவை என்பதை முன்கூட்டியே கண்டறிந்து அங்கு தேவையான நடவடிக்கைகளை ஏற்படுத்த வேண்டும்.

    முன்னதாக வாக்குப்பதிவு நடைபெறும் 48 மணி நேரத்திற்கு முன்னதாக அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டிருக்கும் நிலையில் மொத்தமாக யாராவது மதுபானங்களை வாங்கி செல்வது தெரியவந்தால் அதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் நடைபெறும் சமயத்தில் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளின்படி 200 மீட்டருக்கு அப்பால்தான் அரசியல் கட்சியினர் இருக்க வேண்டும் என்பதை அவசியம் கடைபிடித்து யாரும் வரம்பு மீறாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். மாவட்டத்தில் 347 பேர் தொடர்ச்சியாக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவலை முன்கூட்டியே காவல்துறையினர் தெரிந்து கொண்டு அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திடீரென வாக்குச்சாவடி மையங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டால் அதை தீர்க்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வரும் மத்திய துணை ராணுவப் படையினர் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் அவர்களுக்கு வழிகாட்டுதல் செய்ய வேண்டும் அவர்களுக்கு தேவையான தங்குமிடம் வாகன வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் உள்ளூர் போலீசார் செய்து தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் மற்றும் அனைத்து சரகத்திற்கு உட்பட்ட உதவி துணை போலீஸ் சூப்பிரண்டுகள், மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    பாராளுமன்ற தேர்தலையொட்டி வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளிலும் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று கலெக்டர் ராமன் கூறினார்.

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்வது (விவிபேட்) குறித்து விழிப்புணர்வு மற்றும் நம்பகத்தன்மையை ஏற்படுத்த தொகுதி அளவிலான பயிற்றுனர்கள் மற்றும் விளக்க அலுவலர்களுக்கு செயல் விளக்க பயிற்சி வகுப்பு நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாராயணன், மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பயிற்சி வகுப்பை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளிலும் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஒவ்வொரு தொகுதியிலும் 4 வாக்குச்சாவடிகளை தேர்வு செய்து அங்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்திட வேண்டும். இதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் 6 முதல் 7 குழுக்கள் ஏற்படுத்த வேண்டும். அதில் 5 பணியாளர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு வாகனம் ஏற்பாடு செய்திட வேண்டும். ஒரு தொகுதிக்கு 7 வாகனங்கள் வீதம் 13 தொகுதிகளுக்கு 91 வாகனங்கள் இருத்தல் அவசியமாகும்.

    மாதிரி வாக்குச்சாவடியை அரசு அலுவலகம் அல்லது சமுதாய கூடங்களில் மட்டுமே நடத்த வேண்டும். தனியார் இடங்களில் நடத்தக்கூடாது. பணி முடிந்தவுடன் வாக்குப்பதிவு எந்திரங்களை தாலுகா அலுவலகத்தில் சேர்க்க வேண்டும். மாதிரி வாக்குப்பதிவு குறித்து பொதுமக்கள் அறியும் வகையில் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    மாதிரி வாக்குப்பதிவு குறித்து ஒரு தொகுதிக்கு 10 பேர் வீதம் 130 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கள் அனைவரும் மற்ற வாக்குச்சாவடிகளுக்கு சென்று அங்கு பணிபுரிபவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் பேசினார்.

    இதில், தேர்தல் தாசில்தார் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர் புதிய பஸ் நிலையத்தில் கலெக்டர் சிவஞானம் சாலை விபத்துக்களை குறைக்கும் வண்ணம் பாதசாரிகள் சாலைகளை எவ்வாறு கடக்க வேண்டும் என்பது குறித்து பள்ளி மாணவ -மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில், 30-வது சாலை பாதுகாப்பு வார விழா தொடங்கியது. விருதுநகர் புதிய பஸ் நிலையத்தில் கலெக்டர் சிவஞானம் சாலை விபத்துக்களை குறைக்கும் வண்ணம் பாதசாரிகள் சாலைகளை எவ்வாறு கடக்க வேண்டும் என்பது குறித்து பள்ளி மாணவ -மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.

    விருதுநகர் மாவட்டத்தில் சாலை விபத்துக்கள் குறைக்கும் வகையில் பாதசாரிகள் சாலைகளை எவ்வாறு கடக்க வேண்டும் என்பது குறித்தும், சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள ஜீப்ரா கிராஸிங் பயன்பாடு மற்றும் அதனை எவ்வாறு பயன்படுத்துவது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் தற்போது நடைபெற்று வரும் சாலைப் பாதுகாப்பு வார விழாவின் இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக விருதுநகர் பேருந்து நிலையத்திற்கு செல்லும் பாதசாரிகள் சாலையை கடந்து செல்வதற்காக புதிதாக ஜீப்ரா கிராஸிங் அமைக்கப்பட்டு, அதன் பயன்பாடு குறித்தும், அதனை பயன்படுத்தும் விதம் பற்றியும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிவஞானம் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    மேலும் மாவட்டத்திலுள்ள முக்கிய இடங்களில் உள்ள சாலை சந்திப்புகள் மற்றும் பள்ளி, கல்லூரி அமைந்துள்ள இடங்களில் சாலைகளை பாதசாரிகள் எளிதாக கடந்து செல்வதற்காக ஜீப்ரா கிராஸிங் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன் (விருதுநகர்), மோட்டார் வாகன ஆய்வளர் இளங்கோ, போக்கு வரத்து காவல் ஆய்வாளர் மரிய அருள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மைத் துறை சார்பில் நடந்த பயிர் விளைச்சல் போட்டியில் மேல்பென்னாத்தூரை சேர்ந்த விவசாயி முதல் பரிசு பெற்றார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மைத் துறை சார்பில் மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான விவசாயிகளுக்கு விதைகள் வழங்கி அவர்கள் அறுவடை செய்த விளைச்சல்கள் கணக்கிடப்பட்டன.

    இதில் செங்கம் அடுத்த மேல்பென்னாத்தூரை சேர்ந்த சின்னத்தம்பி கலந்து கொண்டார். தனது நிலத்தில் 1 ஏக்கரில் பரிந்துரை செய்திருந்த டி.எம்.வி.13 என்ற ரக விதையை கொண்டு நிலக்கடலையை பயிரிட்டிருந்தார்.

    வழக்கமாக 1 ஏக்கரில் 20 மூட்டைகள் மட்டுமே மகசூல் பெற முடியும் என்ற நிலையில் சின்னத்தம்பி 30 மூட்டை நிலக்கடலை சாகுபடி செய்து சாதனை படைத்தார். பயிர் விளைச்சல் போட்டியில் அவருக்கு முதல் பரிசு கிடைத்தது.

    விவசாயி சின்னத்தம்பிக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம் ரொக்கத்தையும், பாராட்டு சான்றிதழையும் கலெக்டர் கந்தசாமி வழங்கினார்.

    அப்போது வேளாண்மை இணை இயக்குநர் செல்வசேகரன், செங்கம் வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

    வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று திருப்பூர் கலெக்டர் அறிவித்துள்ளார்.

    திருப்பூர்:

    வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்தாண்டுகள் தொடர்ந்து புதுப்பித்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காத படித்த இளைஞர்களுக்கு மாதந்தோறும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள்(பொது) ரூ.200, (மாற்றுத்திறனாளி) ரூ.600, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் (பொது) ரூ. 300, (மாற்றுத்திறனாளி) ரூ. 600, பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் (பொது) ரூ. 400 (மாற்றுத்திறனாளி) ரூ.750.பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரிகள் (பொது) ரூ. 600, (மாற்றுத்திறனாளி) ரூ. 1000. வயது வரம்பு (உதவித்தொகை பெறும் நாளில்) ஆதி-திராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதிற்குள், இதர வகுப்பினர் 40 வயதிற்குள் மாற்றுத்திறனாளிகள் உச்சவயது வரம்பு ஏதும் இல்லை. பதிவு செய்து ஓராண்டு முடிந்திருக்க வேண்டும்.

    மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வருமானச்சான்று தேவையில்லை. மனுதாரர் பள்ளி அல்லது கல்லூரிப்படிப்பை தமிழகத்திலேயே முடித்து இங்கேயே 15 ஆண்டுகள் வசித்தவராக இருக்க வேண்டும். மனுதாரர் முற்றிலுமாக வேலையில்லாதவராக இருக்க வேண்டும்.கல்வி நிறுவனத்திற்கு தினமும் சென்று படிக்கும் மாணவ- மாணவிகளாக இருக்கக்கூடாது. ஆனால் தொலைதூரக்கல்வி மற்றும் அஞ்சல் வழிக்கல்வி கற்கும் மனுதாரர்கள் விண்ணப்பிக்கலாம். மனுதாரர் உதவித் தொகை பெறும் காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலகப்பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும்.

    மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவினை புதுப்பித்து 5 வருடங்கள் வேலையில்லாமல் காத்திருப்பவர் கீழ்கண்ட இணையதளம் வாயிலாகவும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலும் இப்படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பிப்ரவரிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து போட்டித்தேர்விற்கும் இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்வதற்கும், தேர்வு மையங்களுக்கு சென்று வருவதற்காகவும் இத்தொகை வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

    இந்த உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் உடனடியாக திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்படிவம் பெற்றுக் கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ×