என் மலர்
நீங்கள் தேடியது "slug 103897"
- ஒரத்தநாடு பஸ் நிலையத்தின் எதிரில் மாவட்ட தலைவர் டாக்டர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் மாவட்ட பொதுச்செயலாளர் மோகன்ராஜ் வரவேற்றார்.
தஞ்சாவூர்:
அக்னிபத் திட்டத்தை கண்டித்து தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக ஒரத்தநாடு பஸ் நிலையத்தின் எதிரில் மாவட்ட தலைவர் டாக்டர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட பொதுச்செயலாளர் மோகன்ராஜ் வரவேற்றார். இதில் மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்கள் மன்னை மதியழகன், குணா பரமேஸ்வரி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் டி.எஸ்.ஆர். சிவசங்கரமூர்த்தி, வட்டார காங்கிரஸ் தலைவர்கள் அய்யப்பன், பாண்டித்துரை, ரவிச்சந்திரன், நாராயணசாமி, மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் பிரபு மண்கொண்டார், சிவாஜி சமூக பேரவைத்தலைவர் சதா வெங்கட்ராமன், மாவட்ட விவசாயப்பிரிவு தலைவர் கக்கரை சுகுமாறன், ஒரத்தநாடு நகரத்தலைவர் சுப்பு தங்கராஜூ, கண்ணுக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் வைத்தியநாதன், மனோகரன், சிவாஜி, சம்பத் வாண்டையார், இளைஞர் காங்கிரஸ் ஜெயசூரியன், ஜீவா, விநாயகம், ராமலிங்கம், அப்பாத்துரை, ஆடிட்டர் விஸ்வநாதன், மீனாட்சி சுந்தரம், பெருமகளுர் அய்யப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- சீர்காழி பழைய பஸ் நிலையத்தில் அக்னிபத் திட்டத்தை கைவிட கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி மாநில பொது செயலாளர் கே.பி.எஸ்.எம். கணிவண்ணன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி மாநில பொது செயலாளர் கே.பி.எஸ்.எம். கணிவண்ணன் தலைமை வகித்தார்.
சீர்காழி:
சீர்காழி பழைய பஸ் நிலையத்தில் அக்னிபத் திட்டத்தை கைவிட கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி மாநில பொது செயலாளர் கேபிஎஸ்எம்.கணிவண்ணன் தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சி நகர செயலாளர் லட்சுமணன், வட்டாரத் தலைவர் ஞானசம்பந்தம், பாலகுரு, பாலசுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன், முன்னாள் இளைஞர் அணி தலைவர் சரவணன்,முன்னாள் மாநில இளைஞரணி காங்கிரஸ் செயலாளர் கமல் மணிரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரியகுமார், மாவட்ட பொருளாளர் சிவராமன், மாவட்ட பொது செயலாளர் தியாக கார்த்திகேயன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 8 வழிச்சாலை வந்தே தீரும் என்று நேற்று பேட்டியின் போது கூறினார். அவர் கூறும் போது போக்குவரத்து அதிகமாக உள்ளதால் விபத்துகளை தடுக்க சாலை விரிவாக்கம் அவசியம் தேவை. இதற்காக சேலம்-சென்னை 8 வழி சாலை வந்தே தீரும் என்று கூறினார்.
இதை தொடர்ந்து முதலமைச்சரின் பேட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் புதுப்பட்டி கிராமத்தில் 8 வழிச்சாலை எதிர்ப்புக் குழுவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
விவசாயிகள் கூறுகையில், எங்கள் உயிர் போனாலும் விவசாய நிலத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம். அரசியல்வாதிகள் தேர்தலுக்கு முன்பு ஒரு சொல்லும், தேர்தலுக்கு பின்பு ஒரு சொல்லும் மாறி, மாறி பேசுகின்றனர். எனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் சிறிது நேரத்தில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொன்பரப்பியில் நடந்த தாக்குதல் கட்சிகளுக்கிடையில் நடந்த வழக்கமான தேர்தல் வன்முறையல்ல. சாதியின் பெயரால் தலித் மக்களுக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்ட பாசிச ஒடுக்குமுறையாகும்.
தலித்துகளின் வாக்குரிமையைப் பறிப்பது, வன்முறை வெறியாட்டம் நடத்துவது, வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுவது, கள்ள வாக்குகள் போடுவது போன்ற சட்டவிரோத, சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அனைத்துத் தரப்பு எளியோரையும் அச்சுறுத்தும் அடக்குமுறை போக்காகும்.
இருபத்தோராம் நூற்றாண்டிலும் அரசியல் ஆதாயத்திற்காக சாதியின் பெயரால் எளிய மக்களின் வாக்குரிமையைத் தடுப்பது, அம்மக்களின் மீது வன்முறை வெறியாட்டம் நடத்துவது போன்ற வெட்கக்கேடான கொடூர ஒடுக்குமுறைகள் தொடர்வது ஜனநாயகத்துக்கு நேர்ந்த பேரிழிவாகும். இந்திய தேசத்துக்கே நேர்ந்த பெரும் தலைக்குனிவாகும்.
இந்நிலையில், இத்தகைய காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டிக்கவும், பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு உரிய இழப்பீடு, பாதுகாப்பு மற்றும் நீதி கிடைக்க வலியுறுத்தவும், சாதிய மதவாத சக்திகளுக்கு உரிய தண்டனையளிக்க வற்புறுத்தவும் கோரி, விடுதலைச்சிறுத்தைகளின் ஒருங்கிணைப்பில் தி.மு.க. தலைமையிலான மதசார் பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள், நாளை (24-ந்தேதி) சென்னையிலும் 25-ந்தேதி அரியலூரிலும் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சென்னை:
பொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து அரியலூரில் நாளை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இது தொடர்பாக காங்கிரஸ் எஸ்.சி துறை தலைவர் கு.செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் பொன்பரப்பி கிராமத்தில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன.
இந்த தாக்குதலில் பலர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதல் கண்டனத்துக்குரியது. வன்முறையாளர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய பாதுகாப்பும், தகுந்த இழப்பீடும் வழங்க வேண்டும்.
இந்த சம்பவத்தை கண்டித்து நாளை மாலை அரியலூர் கலெக்டர் அலுவலகம் அருகே காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மாவட்ட எஸ்.சி. பிரிவு தலைவர் ரத்தினம் தலைமை தாங்குகிறார். நானும், காங்கிரஸ் நிர்வாகிகளும் பங்கேற்கிறோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #congress #ponparappiissue
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெரியார் சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதனை கண்டித்து தி.க. சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.
தஞ்சையில் இன்று பழைய பஸ் நிலையம் முன்பு தி.க.வினர் திரண்டனர். அவர்கள் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் அமர்சிங் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்யகோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான தி.க.வினர் கலந்து கொண்டனர்.
இதேப்போல் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் தி.க. நகர தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. நகர செயலாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர் இளையபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அனைத்திந்திய இளைஞர் மற்றும் மாணவர் பெருமன்றம் சார்பில், பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மீது கூட்டு பாலியலில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓசூர் ரெயில் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளரும், தளி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டி.ராமச்சந்திரன், மாநிலக் குழு உறுப்பினர் லகுமய்யா ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
மேலும் இதில் இளைஞர் மற்றும் மாணவர் பெருமன்ற நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
பெண்கள் மீதும், சிறுமிகள் மீதும் இதுபோன்ற பாலியல் வன்கொடுமை தொடராமல் இருக்க கடுமையான சட்டங்கள் கொண்டுவர வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது. #pollachiissue
கரூர்:
பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தை கண்டித்து கரூர் மாவட்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஜீவானந்தம், ஜோதிபாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பொள்ளாச்சியில் மாணவிகள், இளம் பெண்கள் மீது பாலியல் வன்முறை சம்பவங்களை அரங்கேற்றிய நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கிட வேண்டும். இதில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா? என விசாரித்து அவர்கள் மீதும் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகார பின்னணியில் உள்ளவர்களை காவல்துறை தப்பிக்க விடக்கூடாது என வலியுறுத்தப்பட்டது. இதில் ராஜாமுகம்மது, காதர்பாட்ஷா, நிர்மல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல், கரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், பொள்ளாச்சி பெண்கள் மீதான பாலியல் தாக்குதலை கண்டித்து மாவட்ட தலைவர் மகாவிஷ்ணன் தலைமையில், கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில துணை தலைவர் சுப்ரமணி, மாவட்ட செயலாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். #pollachiissue

மாற்றுத்திறனாளிகளை சித்தரித்து அரசியல் கட்சி தலைவர்கள் பேசுவதை கண்டித்து கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் லட்சிய முன்னேற்ற சங்கம் சார்பில் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் சந்தோஷ் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் சண்முகம், மாவட்ட பொருளாளர் தட்சிணா மூர்த்தி, பண்ருட்டி தலைவர் தனுஷ் பத்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் விருத்தாச்சலம் தலைவர் அமரேசன், மாவட்ட மகளிரணி தலைவர் சித்ரா, நிர்வாகிகள் பாலமுருகன், கொளஞ்சிநாதன், மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைத் தாக்குதலில், துணை ராணுவப் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

அவ்வகையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அருகில் இந்தியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று புல்வாமா தாக்குதலைக் கண்டித்தும், பாகிஸ்தானுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர்.
பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்தை ஊக்குவிக்கக் கூடாது, பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும், சர்வதேச பயங்கரவாதியான மசூத் அசாரை ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். #PulwamaAttack #IndianCommunityProtest