search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லண்டன்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்று ஒரே நாளில் 6 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    ஆலந்தூர்:

    லண்டனில் இருந்து இன்று அதிகாலை 3.30 மணிக்கு சென்னை வரும் அதே விமானம் மீண்டும் அதிகாலை 5.35 மணிக்கு லண்டன் புறப்பட்டுச் செல்லும். அந்த விமானத்தில் இன்று லண்டன் செல்வதற்காக 284 பயணிகள், சென்னை விமான நிலையத்திற்கு வந்து காத்திருந்தனர்.

    ஆனால் லண்டனில் இருந்து வர வேண்டிய விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இயக்கப்படவில்லை. இதனால் இன்று அதிகாலை 5.30 மணிக்கு, சென்னையில் இருந்து லண்டன் செல்லும் விமானம் ரத்து செய்யப்ப டுவதாக அறிவிக்கப்பட்டது.

    அதில் பயணம் செய்ய இருந்த பயணிகள் சென்னையில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். லண்டன் செல்லும் விமானம் நாளை (புதன்கிழமை) அதிகாலை, சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இதைப்போல் சென்னையில் இருந்து இன்று காலை 7.45 மணிக்கு, அந்தமான் செல்ல வேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், பகல் 1.30 மணிக்கு, சென்னையில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டிய பயணிகள் விமானம், பெங்களூரில் இருந்து சென்னைக்கு இன்று காலை 7.05 மணிக்கு வரவேண்டிய பயணிகள் விமானம், மதியம் 1 மணிக்கு அந்தமானில் இருந்து சென்னை வரவேண்டிய விமானம் ஆகிய 4 விமானங்கள் இன்று திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    நிர்வாக காரணங்களுக்காக இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    இன்று ஒரே நாளில் சென்னை விமான நிலையத்தில் லண்டன், அந்தமான், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் வருகை, புறப்பாடு என மொத்தம் 6 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளதால், பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    • அண்ணாமலை நேற்று இரவு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டார்.
    • வருகிற நவம்பர் மாத இறுதியில் படிப்பை முடித்து சென்னை திரும்புகிறார்.

    லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சர்வதேச அரசியல் படிப்புக்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த 40 பேரை தேர்வு செய்துள்ளது.

    இதில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 12 பேரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் ஒருவர். அங்கு தங்கி படிப்பவர்களுக்கான செலவை பல்கலைக்கழகமே ஏற்றுக்கொண்டுள்ளது.

    இதற்காக அண்ணாமலை நேற்று இரவு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டார். 3 மாதங்கள் லண்டனில் தங்கி படிக்கும் அண்ணாமலை வருகிற நவம்பர் மாத இறுதியில் படிப்பை முடித்து சென்னை திரும்புகிறார்.

    இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை மேற்படிப்புக்காக லண்டன் சென்றுள்ளதை கிண்டலடிக்கும் விதமாகஅதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது எக்ஸ் பக்கத்தில்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர், "தமிழக பாஜகத் தலைவர் திரு அண்ணாமலை மேற்படிப்புக்காக லண்டன் சென்றதை ஒரு குறும்புக்கார் ஊடகத்தில் இப்படி போட்டு இருக்கார் நான் பார்தேன் நீங்களு பார்ப்பதற்காக !!!" என்று குறிப்பிட்டு, வீடீயோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், ஆடுகள் பாடம் படிப்பதை போன்று காட்சியளிக்கிறது.

    • சர்வதேச அரசியல் படிப்புக்காக லண்டன் செல்கிறார்.
    • நவம்பர் மாத இறுதியில் படிப்பை முடித்து சென்னை திரும்புவார்.

    சென்னை:

    லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சர்வதேச அரசியல் படிப்புக்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த 40 பேரை தேர்வு செய்துள்ளது.

    இதில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப் பட்டுள்ள 12 பேரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் ஒருவர். அங்கு தங்கி படிப்பவர்களுக்கான செலவை பல்கலைக்கழகமே ஏற்றுக்கொண்டுள்ளது.

    இதற்காக அண்ணாமலை நாளை (28-ந்தேதி) இரவு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு செல்கிறார்.

    3 மாதங்கள் லண்டனில் தங்கி படிக்கும் அண்ணாமலை வருகிற நவம்பர் மாத இறுதியில் படிப்பை முடித்து சென்னை திரும்புகிறார்.

    • அன்றைய இரவு சுமார் 1.30 மணியளவில் அந்த குழுவைச் சேர்ந்த விமானப் பணிப்பெண் ஒருவரின் அறைக்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார்.
    • அறையை விட்டுத் தப்பித்துச் செல்ல அந்த பெண் கதவை நோக்கி முன்னேறிய நிலையில் அவரை தரையில் தள்ளி தரதரவென இழுத்துச் சென்றுள்ளார்.

    இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஏர் இந்தியாவைச் சேர்ந்த ஹோஸ்டஸ் மர்ம நபரால் தாக்கப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை லண்டனில் ஹீத்ரோவ் பகுதியில் உள்ள ரெடிஷன் ரெட் ஹோட்டலில் ஏர் இந்தியா விமான பணிக்குழுவினர் தங்கியுள்ளனர். அன்றைய இரவு சுமார் 1.30 மணியளவில் அந்த குழுவைச் சேர்ந்த விமானப் பணிப்பெண் ஒருவரின் அறைக்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார்.

     

    தூக்கத்தில் இருந்த பெண் விழித்து அவரை பார்த்து அலறியுள்ளார். இதனால் பதற்றமான அந்த மர்ம நபர் பெண்ணை துணிகளை தொங்கவிடும் ஹேங்கர்களால் கடுமையாக தாக்கியுள்ளார். அறையை விட்டுத் தப்பித்துச் செல்ல அந்த பெண் கதவை நோக்கி முன்னேறிய நிலையில் அவரை தரையில் தள்ளி தரதரவென இழுத்துச் சென்றுள்ளார்.

    அந்த நபரின் பிடியை விடுவிக்க பெண் கடுமையாகப் போராடியுள்ளார். இதனால் பெண்ணுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது. பெண்ணின் அலறல் கேட்டு யாரும் வந்துவிடுவார்களோ என்று பயந்து அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அங்குள்ள போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல் நிர்வாகத்துக்கு ஏர் இந்தியா நிர்வாகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் விரைவில் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • பொது தேர்தலில் தொழிலாளர் கட்சி அபார வெற்றி பெற்றது.
    • தொழில் அதிபரான இவர் குஜராத்தை சேர்ந்தவர்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த பொது தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை வீழ்த்தி தொழிலாளர் கட்சி அபார வெற்றி பெற்றது.

    தொழிலாளர் கட்சி தலைவர் கீர் ஸ்டார்மர் புதிய பிரதமராக பதவி ஏற்றார். இந்த தேர்தலில் இது வரை இல்லாத வகையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 28 பேர் வெற்றி வாகை சூடினார்கள்.

    லீ செஸ்டர் கிழக்கு தொகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளி பெண்ணான ஷிவானி ராஜா (வயது 29) வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தொழிலாளர் கட்சி வேட்பாளர் ராஜேஷ் அகர்வால் தோல்வி அடைந்தார். இவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தான்.

    1987 -ம் ஆண்டு முதல் லீ செஸ்டர் கிழக்கு தொகுதி தொழிலாளர் கட்சியின் கோட்டையாக இருந்து வந்தது. 37 ஆண்டுகளுக்கு பிறகு இதனை தகர்த்து ஷிவானி ராஜா முதல் முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். தொழில் அதிபரான இவர் குஜராத்தை சேர்ந்தவர்.

    இங்கிலாந்து பாராளுமன்றத்தில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பு விழா நடந்தது. அப்போது ஷிவானி ராஜா பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவி ஏற்றுக்கொண்டார். இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாராளுமன்றத்தில் எம்.பி.யாக பதவி ஏற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
    • ஜெர்மனியின் ஸ்வெரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் செர்பியாவின் ஜோகோவிச் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் டென்மார்கின் ஹோல்கர் ரூன்னை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனியின் ஸ்வெரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 6-4, 7-6 (7-4), 6-4, 7-6 (7-3), 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார்.

    • இருவரும் தி ஆர்ச் சிஸ் என்ற படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர்.
    • இரவு விருந்தில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர்.

    இந்தி திரை உலகில் பிரபல நடிகரான அமிதாபச்சன் பேரன் அகஸ்தியா நந்தாவும், ஷாருக்கான் மகள் சுகானா காணும் நெருங்கிய நண்பர்கள்.

    இருவரும் பல இடங்களில் ஒன்றாக சுற்றி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தது. ஏற்கனவே இருவரும் தி ஆர்ச் சிஸ் என்ற படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர்.

    இந்நிலையில் இவர்களின் நண்பர் வேதாந்மகாஜன் பிறந்தநாள் லண்டனில் நடந்தது. இதையொட்டி நடந்த இரவு விருந்தில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர்.

    அவர்களுடன் அஜய் தேவ்கான், கஜோல் தம்பதியரின் மகள் நைசாவும் பங்கேற்று உள்ளார். இரவு விருந்து முடிந்து சுகானா காணும், அகஸ்தியா நந்தாவும் ஒரே காரில் திரும்பி சென்றனர்.

    இருவரும் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் பரவி வரும் நிலையில் லண்டன் விருந்தில் பங்கேற்றிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அமெரிக்காவை உளவு பார்த்தது, ராணுவ ரகசியங்களை வெளியிட்டது உள்ளிட்ட குற்றங்களை தான் ஒப்புக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
    • அசானஞ்சே தனது தாய்நாடான ஆஸ்திரேலியாவிற்கு சுதந்திர மனிதனாக திரும்புவார் என்று தெரிகிறது

    பிரபல ஆஸ்திரேலிய பத்திரிகையாளராரும் விக்கிலீக்ஸ் இணைய நிறுவனருமான ஜூலியன் அசாஞ்சே கடந்த 2010 ஆம் ஆண்டு ஈராக் மற்றும் ஆப்கனிஸ்தான் போரில் ஈடுபட்ட அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை வெளியிட்டு உண்மைகளை அம்பலப்படுத்தியதன் மூலம் உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியவர் ஆவார்.

    இதையடுத்து அவரை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்க அரசு அறிவித்தது. இதற்கிடையில் பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் சிக்கிய அசாஞ்சே கைது செய்யயப்படுவதில் இருந்து தப்பிக்க லண்டனில் உள்ள ஈகுவேடார் அரசின் தூதரகத்தில் தஞ்சமடைந்தார்.

    அசாஞ்சேவுக்கு அடைக்கலம் அளித்து வந்த ஈகுவேடார் அரசு கடந்த 2019 ஆண்டு அதை வாபஸ் பெற்றதை அடுத்து அதுவரை கைதில் இருந்து தப்பித்துவந்த அசாஞ்சேவை பிரிட்டிஷ் போலீசார் கைது செய்து லண்டன் சிறையில் அடைத்தனர். சிறையில் உள்ள அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்கா அரசு பிரிட்டனிடம் கேட்டு வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பிரிட்டன் அதற்கு ஒப்புதல் அளித்தது.

    ஆனால் இதை எதிர்த்து அசாஞ்சே தரப்பில் பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் அமெரிக்காவுக்கு அனுப்பாடாமால் இதுநாள்வரை வரை லண்டன் சிறையிலேயே அசாஞ்சே அடைபட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்து வந்த பிரிட்டன் நீதிமன்றம், அசாஞ்சேவை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் பட்சத்தில் ராணுவ ரகசியங்களை வெளியிட்ட குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை வழங்கக்கூடாது, குறைந்த பட்ச சிறை தண்டனையே வழங்க வேண்டும் என்ற உத்தரவாதத்தை அமேரிக்காவிடம் கோரியது. அசாஞ்சேவுக்கு ஆதரவாக சர்வதேச சமூகமும் குரல் கொடுத்து வந்தது.

     

    இந்த விவகாரம் இவ்வாறாக புகைந்து வந்த நிலையில் தற்போது அசாஞ்சே , தன்னை விடுதலை செய்வதாக உத்தரவாதம் அளித்தால் அமெரிக்காவை உளவு பார்த்தது, ராணுவ ரகசியங்களை வெளியிட்டது உள்ளிட்ட குற்றங்களை தான் ஒப்புக்கொள்வதாக தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் ஏற்கப்பட்டதை அடுத்து நேற்று இரவு லண்டன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள அசாஞ்சே இன்று அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.

     

    நாளை அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தில் அவர் தனது குற்றங்களை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பாக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து அவருக்கு அமெரிக்க நீதிமன்றம் குறைந்தபட்ச சிறை தண்டனை விதிக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அசாஞ்சே ஏற்கனவே லண்டனில் சிறை தண்டனை அனுபவித்ததால், அமெரிக்க நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியானதும், ஜூலியன் அசாஞ்சே தனது தாய்நாடான ஆஸ்திரேலியாவிற்கு சுதந்திர மனிதனாக திரும்புவார் என்று எதிர்பாக்கப்படுகிறது.  

    • மதுபானம், விமான நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை இவர் இந்தியாவில் நடத்தி வந்தார்.
    • நமது நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளில் இருந்து சுமார் ரூ, 9,000 கோடி கடன் பெற்றிருந்தார்.

    நமது நாட்டின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவராக இருந்தவர் விஜய் மல்லையா. மதுபானம், விமான நிருவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை இவர் இந்தியாவில் நடத்தி வந்தார். இவர் நமது நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளில் இருந்து சுமார் ரூ 9,000 கோடி கடன் பெற்றிருந்தார். இருப்பினும், அந்த கடனை திரும்ப அடைக்க முடியாமல் விஜய் மல்லையா நாட்டை விட்டே 2016ஆம் ஆண்டு வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிப் போய்விட்டார் விஜய் மல்லையா.

    நாட்டை விட்டுத் தப்பியோடிய விஜய் மல்லையா நிதி மோசடியாளர் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன் பிறகு அவர் அப்படியே பிரிட்டன் நாட்டில் பதுங்கினார். அவரை பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இப்போது வரை அவரை இந்தியாவுக்கு அழைத்து வர முடியவில்லை. இதில் சட்டச் சிக்கல்கள் தொடர்ந்து நிலவி வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்த வழக்கும் பிரிட்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    இவ்வாறு பெரிய பின்புலம் கொண்ட விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையாவிற்கு சில நாட்களுக்கு முன் லண்டனின் கோலாகலமாக திருமணம் நடைப்பெற்றது. 37 வயதான சித்தார்த் மல்லையா அவரது நீண்ட நாள் காதலியான ஜாஸ்மினை திருமணம் செய்துக் கொண்டார். இத்திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

    அவர்கள் திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். அதில் இருவரும் கை கோர்த்தபடி மிகவும் சந்தோஷமாக இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இத்திருமண விழாவில் பரிமாறப்பட்ட உணவுகளில் விஜய் மல்லையாவிற்கு சொந்தமான கிங் ஃபிஷர் பீர் பரிமாறப்பட்டத்து குறிப்பிடத்தக்கது. ஒரு தரப்பு மக்கள் சித்தார்த்தா மல்லையாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மற்றொரு தரப்பினர் கடன் வாங்கிவிட்டு தப்பியோடிய நபருக்கு இவ்வளவு ஆடம்பரமாக திருமணம் நடப்பதாக சாடினர்.

    • லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் சென்றது.
    • மோசமான வானிலையால் ஏற்பட்ட திடீர் குலுக்கலில் ஒருவர் உயிரிழந்தார்.

    லண்டன்:

    லண்டனில் இருந்து சிங்கப்பூருக்குச் சென்றுகொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மோசமான வானிலையால் கடும் குலுக்கலை எதிர்கொண்டது. நடுவானில் நிலைதடுமாறி குலுங்கிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர்.

    இதுதொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், போயிங் 777-300ER விமானத்தில் மொத்தம் 211 பயணிகளும் 18 பணியாளர்களும் இருந்தனர். விமானம் லண்டனின் ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் கடுமையான டர்புலன்ஸை சந்தித்தது. இதனால் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் சுவர்ணபூமி விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார் என தெரிவித்தது.

    இந்த விபத்தில் 30 பேர் காயம் அடைந்ததாகத் தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்தாலும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எத்தனை பேர் காயமடைந்தனர் என்பதைக் குறிப்பிடவில்லை.

    இந்நிலையில், கடந்த மாதம் நடந்த விமான குலுக்கலில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

    சிறிய காயங்கள் உள்ள பயணிகளுக்கு 10,000 டாலர் வழங்கப்படும். கடுமையான காயங்கள் உள்ளவர்கள் தங்கள் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பைப் பற்றி விவாதிக்கலாம். கடும் காயங்களுக்கு ஆளாகி இருப்பதாக மருத்துவ ரீதியாக மதிப்பிடப்பட்ட பயணிகளுக்கு நீண்டகால மருத்துவ பராமரிப்பு தேவை மற்றும் நிதி உதவி கோரும் அவர்களின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்ய 25,000 டாலர் முன்பணமாக வழங்கப்படும். பயணிகள் அனைவருக்கும் விமானச்சீட்டுக்கான முழுத்தொகை திருப்பித் தரப்படும் என தெரிவித்துள்ளது.

    • 10 நாள் பயணமாக லண்டன் சென்றிருந்தார்.
    • நேற்றிரவு சென்னை திரும்பினார்.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த பிறகு மே மாதம் 10 நாள் பயணமாக லண்டன் சென்றிருந்தார்.

    தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த காரணத்தால் முழுமையாக அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதால் அவர் லண்டன் சென்றதாக கூறப்பட்டது. அதன் பிறகு அவர் சென்னை திரும்பி னார்.

    இந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கை முடிந்த பிறகு கடந்த 4-ந் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மறுபடியும் லண்டன் புறப்பட்டுச் சென்றார். 5 நாள் பயணமாக லண்டன் சென்றிருந்த அவர் நேற்றிரவு சென்னை திரும்பினார்.

    • உடை என்பது ஒருவரின் அடையாளத்தை வெளிபடுத்தக் கூடியவற்றில் முதன்மையானது ஆகும்.
    • . இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் பார்வைகளை குவித்துள்ளது.

    உடை என்பது ஒருவரின் அடையாளத்தை வெளிபடுத்தக் கூடியவற்றில் முதன்மையானது ஆகும்.ஆள் பாதி ஆடை பாதி என்று பழமொழியே உள்ளது. இந்தியாவில் பெரும்பாலானோர் வெளிநாட்டு உடைகளுக்கு பழக்கப்பட்டு விட்டனர். முக்கியமாக தென்னிந்தியாவில் வீட்டில் அணிந்து கொள்ளும் லுங்கிக்கு பதிலாக தற்போதுள்ள இளைஞர்கள் ஷார்ட்ஸ் அணிவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

    ஆனால் இதற்கு மாறாக சமீபத்தில், இங்கிலாந்தின் தலைநகரான லண்டன் தெருக்களில் ஒரு பெண் லுங்கி அணிந்து நடந்து செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    பல ஆண்டுகளாக லண்டனில் வசிக்கும் இந்தியத் தமிழரான வலேரி, @valerydaania என்ற தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். வீடியோவில், வலேரி ஸ்டைலாக நீல நிற செக்டு லுங்கியும் டி-ஷர்ட்டும் அணிந்து லண்டன் தெருக்களில் நடந்து சென்று ஒருசூப்பர் மார்கெட்டுக்குள் நுழைகிறார். அவரின் வித்தியாசமான தோற்றத்தைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டு பார்க்கின்றனர்.

     

    இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் வலேரியின் முயற்சியை பாராட்டினர். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் பார்வைகளை குவித்துள்ளது.  

    ×