என் மலர்
நீங்கள் தேடியது "தடை"
- கோடை சீசனை வரவேற்க நீலகிரி மாவட்டம் ஊட்டி தயாராகி வருகிறது.
- தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான 7 பூங்காக்களில் படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஊட்டி:
கோடை சீசனை வரவேற்க நீலகிரி மாவட்டம் ஊட்டி தயாராகி வருகிறது. சீசனை அனுபவிக்க ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் மலர் கண்காட்சி, காய், கனி கண்காட்சி, ரோஜா கண்காட்சி என பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்பட உள்ளது.
ஊட்டி தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா என பூங்காக்களில் இந்த கண்காட்சிகள் நடைபெற உள்ளன. கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தொடங்கி நடப்பதால் பூங்காக்களில் சினிமா படப்பிடிப்பு நடத்த தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஜூன் 5-ந் தேதி வரை இந்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான 7 பூங்காக்களில் படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- 2 தனியார் உரக் கடைகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
- அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே அரசு விதிகளை பின்பற்றாத 2 தனியார் உரக்கடைகளுக்கு வேளாண் துறை அதிகாரிகள் தற்காலிக தடைவிதித்தனர்.
ஆலங்குடி அருகே உளள வடகாடு பகுதியில் உள்ள உரக்கடைகளில் விவசாயிகள் யூரியா உரம் வாங்க சென்றால், அதோடு அவர்கள் வழங்கும் பயிர் நண்ணூட்டமும் சேர்ந்து வாங்க வலியுறுத்துவதாக விவசாயிகள் தரப்பில் புகார் எழுந்தது. இதை தொடர்ந்து மாவட்ட வேளாண் துணை இயக்குநர் மோகன்ராஜ், உதவி இயக்குநர்(தரக் கட்டுப்பாடு ) மதியழகன், வேளாண் அலுவலர் புவனேஸ்வரி ஆகியோர் அப்பகுதியில் உள்ள உரக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அரசு விதிகளை முறையாக பின்பற்றாத 2 கடைகளில் உர விற்பனைக்கு த ற்காலிக தடைவிதித்தனர்.
- மழையால் ஆறுகளில் வெள்ளம்
- பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் வானம் மப்பும் மந்தாரமு மாகவே காட்சியளித்தது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது.
மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே மழையின் வேகம் அதிக மாக இருந்தது. இரணி யல், பாலமோர், கோழிப் போர்விளை, அடையா மடை, குருந்தன் கோடு, முள்ளங்கினா விளை, ஆணைக்கிடங்கு பகுதி களில் தொடர்ந்து மழை பெய்தது.
இரணியலில் 76 மில்லி மீட்டரும், பாலமோரில் 22.4 மில்லி மீட்டரும் பேச்சிப்பாறை, சிவலோ கம் பகுதிகளில் 19 மில்லி மீட்டரும் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது.
பேச்சிப் பாறை, பெருஞ்சாணி பகுதிகளில் பெய்து வரும் மழை யின் காரணமாக அணை களுக்கு நீர் வரத்து அதிகமாக உள்ளது. இதனால் உபரிநீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
பேச்சிப்பாறை அனையில் இருந்து மறுகால் திறந்துவிடப்பட்டு உள்ள தால் திற்பரப்பு அருவி யில் தண்ணீர் அர்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.
ஆனால் சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்ப தால் சுற்றுலா பயணி கள் அதிக அளவில் வந்திருந்த னர். அவர்கள் அருவியில் குளிக்காமல் வெளியில் இருந்து அருவியை சுற்றி பார்த்து சென்றனர். திற்பரப்பு பேரூராட்சி சார்பாக ஊழியர்கள் தடை உத்தரவு தட்டி போர்டு வைத்து இருக்கிறார்கள்.
மாவட்டம் முழுவதும் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை-19.2, பெருஞ்சாணி-16.2, சிற்றார்-1-18.8, சிற்றார்- 2-19.6, பூதப்பாண்டி-3.2, களியல்-24.2, கன்னிமார்- 3.6, குழித்துறை-18.2, நாகர்கோவில்-1, சுரு ளோடு-12.4, தக்கலை-2, இரணியல்-76, பால மோர்-22.4, மாம்பழத்து றையாறு-16.4, திற்பரப்பு- 24.8.
கோழிப்போர்விளை- 7.8, அடையாமடை-19.2, குருந்தன்கோடு-5.2, முள்ளங்கினாவிளை- 10.2, ஆணைக்கிடங்கு-15, முக்கடல்-2
பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 42.31 அடியாக உள்ளது. அணைக்கு 921 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 1016 கனஅடி உபரி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 70.04 அடியாக உள்ளது. அணைக்கு 930 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணை யில் இருந்து 1872 கன அடி தண்ணீர் வெளியேற் றப்படுகிறது.
சிற்றார்-1 அணை நீர்மட்டம் 14.07 அடியாக வும், சிற்றார்-2 அணை நீர்மட்டம் 14.17 அடியா கவும், பொய்கை நீர்மட் டம் 16 அடியாகவும், மாம்ப ழத்துறையாறு நீர்மட்டம் 40.60 அடியா கவும், முக்கடல் நீர்மட்டம் 13.60 அடியாகவும் உள்ளது.
- பறிமுதல் செய்யப்படும் செல்போன்களை மீண்டும் ஒப்படைக்க கூடாது என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- ஜீன்ஸ், டிசர்ட் அணிந்து கோவிலுக்குள் செல்ல கூடாது என பக்தர்களுக்கு அறிவுரை.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும், பறிமுதல் செய்யப்படும் செல்போன்கள் மீண்டும் ஒப்படைக்க கூடாது என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, செய்தியாளர்களைச் சந்தித்த கோயில் அறங்காவல் குழு தலைவர் அருள் முருகன், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட அனைத்து வழிமுறைகளும், திருச்செந்தூர் கோயிலில் மூன்று நாட்களில் அமல்படுத்தப் படும் என கூறினார்.
எடுத்தவுடன் பறிமுதல் செய்தால் பிரச்சினை ஏற்படும் என்பதால், செல்போன் கொண்டு செல்ல கூடாது என்று பக்தர்களுக்கு முதலில் அறிவுரை வழங்கப்படும் என்றார். மேலும் பக்தர்களின் செல்போன்களை வைப்பதற்கு பலகைகள் மற்றும் செல்போன்கள் குறித்து அறிவதற்கான ஸ்கேனிங் மெஷின் போன்றவை ஆர்டர் செய்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அதேபோல் பக்தர்கள் ஜீன்ஸ், டிசர்ட் அணிந்து கோயிலுக்குள் செல்ல கூடாது என்பது உள்பட உயர்நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தும் பக்தர்களிடம் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
- பேச்சிப்பாறையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் குறைப்பு
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக கொட்டி தீர்த்து வந்த மழை யின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது.
பேச்சிபாறை, பெருஞ் சாணி, சிற்றாறு அணைகள் நிரம்பி வழிகிறது. பாசன குளங்களும் நிரம்பியுள்ளது.இந்த நிலையில் தற்பொழுது மழை சற்று குறைந்துள்ளது. மழை குறைந்ததையடுத்து பேச்சிபாறை அணை யிலிருந்து வெளியேற்றப் பட்ட உபரிநீரின் அளவும் படிப்படியாக குறைக்கப் பட்டு வருகிறது.
இன்று பேச்சிபாறை அணையில் இருந்து 316 கன அடி உபரிநீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து வெளி யேற்றப்படும் உபரிநீரின் காரணமாக கோதை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோதை ஆற்றில் தொடர்ந்து வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதை யடுத்து இன்றும் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக் கப்பட்டு இருந்தது. விடு முறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளாவிலிருந்தும் ஏராள மான சுற்றுலா பயணி கள் திற்பரப்பு அருவிக்கு வந்திருந்தனர்.
ஆனால் அருவியில் தண்ணீர் அதிகமாக கொட்டி யதால் அருவியில் குளிப்ப தற்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற னர்.
பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 41.23 அடியாக இருந்தது. அணைக்கு 387 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 316 கன அடி உபரி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 69.73 அடியாக உள்ளது. அணைக்கு 356 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து 350 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
சிற்றார்-1 அணை நீர் மட்டம் 14.89 அடியாகவும், சிற்றார்-2 அணை நீர்மட்டம் 14.99 அடியாகவும், மாம்ப ழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 45.93 அடியாகவும் உயர்ந்துள்ளது.
- மாசுக் காற்றை சுவாசிப்பதால் நெஞ்சு எரிச்சல் மற்றும் மூச்சு திணறல் போன்ற பல உபாதைகள் ஏற்படுகிறது.
- விவசாய பயிர்கள் பாழடைகிறது. கால்நடைகள் பருகும் தண்ணீர் வீணாகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம், காங்கயம் சிவன்மலை சிக்கரசம்பாளையம், ஜீவா காலனி, ராமபட்டிணம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாங்கள் வாழும் பகுதிக்குஅருகில் இயங்கும் கல் குவாரிகள் செயல் பாடுகளால் அதீத வாழ்வியல்பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இக்குவாரிகளின் செயல் பாடுகள் விதிகளை மீறி சட்டத்திற்குப் புறம்பாக வெடிகளை பயன்படுத்துவதால் அதிக ரசாயன மாசு ஏற்படுகிறது.
மாசுக் காற்றை சுவாசிப்பதால் நெஞ்சு எரிச்சல் மற்றும் மூச்சு திணறல் போன்ற பல உபாதைகள் ஏற்படுகிறது. மேலும் முறையாக புகை மாசுகளை கட்டுப்படுத்தக் கூடிய எந்த ஒரு நடவடிக்கையும்மேற்கொள்ளாத காரணத்தால் அதிக மாசு மற்றும் குழந்தைகள் வெடிச்சத்தம் கேட்டு அழுது கொண்டும் விரக்தியிலும்உள்ளார்கள். விவசாய பயிர்கள் பாழடைகிறது. கால்நடைகள் பருகும் தண்ணீர் வீணாகிறது.கிணற்றின் சுற்றுச்சுவர்கள் சேதமடைகிறது. ஆகவே உடனடியாக நடவடிக்கைஎடுத்து மேற்கண்ட குவாரிகளில் இயக்கத்தை நிறுத்தி உரிமத்தை ரத்துசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
- 2 செல்போன்கள், ரூ.13ஆயிரம் பறிமுதல்
- கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் ஆன்லைன் மூலம் கேரளா மற்றும் பூட்டான் மாநில லாட்டரிகள் விற்பனை செய்து பணம் வசூலித்து வருவதாக கன்னியாகுமரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் தலைமையில் போலீசார் நேற்று கன்னியாகுமரி சர்ச் ரோடு சந்திப்பில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர் முகமது அசாருதீன் (வயது 23) என்பதும், தூத்துக்குடி பிரைன் நகரை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. மேலும் அவர் ஆன்லைன் லாட்டரிகளை விற்றது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீ சார் அவரை கைது செய்தனர். அவர் ஆன்லைன் லாட்டரி விற்பனைக்காக பயன்படுத்திய 2 செல்போன்கள் மற்றும் ரூ.13 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை போலீசார் அவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர். இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திருச்சி காவிரி பாலத்தில் இன்று நள்ளிரவு முதல் இருசக்கர வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது
- பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க கலெக்டர் வேண்டுகோள்
திருச்சி :
திருச்சி மாவட்ட கலெக் டர் மா.பிரதீப் குமார் வெளி–யிட்டுள்ள செய்திக்கு–றிப்பில் கூறியிருப்பதா–வது:-
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில் செல்லும் வழியில் உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட காவிரி பாலத் தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகி–றது.
இதனால் பாலத்தின் மேல் சென்ற வாகனங்களின் போக்கு–வரத்தை 10.09.2022 அன்று முதல் இருசக்கர வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் மாற்றுப் பாதை–யில் செல்ல அறிவுறுத்தப் பட்டது.
இந்நிலையில் பாலத்தூண் களின் மேல் அதிர்வு தாங்கி–கள் பொருத்தும் பணி ஒவ்வொறு தட்டுகளாக மேற்கொள்ளும் நிலையில் தட்டுகளின் தளமட்டம் மாறுபாட்டிற்கு உள்ளாகும் என்கிற காரணத்தால் இரு சக்கர வாகனங்கள் செல்ல இயலாத நிலை ஏற் பட்டுள்ளது.
எனவே இப்பணி வரும் நாளை 21.11.2022 முதல் துவங்க உள்ளதால் புனரமைப்பு பணியை விரைவில் முடிக்க இன்று நள்ளிரவு முதல் காவிரி பாலத்தில் செல்லும் இரு–சக்கர வாகனங்களின் போக்கு–வரத்து தடை செய் யப்பட்டுள்ளது. முன்னர் அறிவிக்கப்பட்டபடி இரு–சக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வித வாக–னங்களும் கீழ்கண்ட மாற்றுப்பா–தையில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட டுள்ளது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முதல் அண்ணா சிலை வழியாக ஸ்ரீரங்கம் செல்ல காவிரிப் பாலத்திற்கு முன்னதாக உள்ள ெரயில்வே மேம்பா–லத்திலிருந்து ஓயாமரி வழி–யாக (காவிரி தென் கரை சாலை) சென்று இடதுபுறம் திரும்பி சென்னை பைபாஸ் சாலை (சென்னை -திருச்சி திண்டுக்கல் சாலை) பழைய பாலத்தின் வழியாகச் சென்று இடதுபுறம் திரும்பி கும்பகோணத்தான் சாலை
சென்னை-திருச்சி திண் டுக்கல் சாலை) பழைய பாலத்தின் வழியாகச் சென்று இடதுபுறம் திரும்பி கும்பகோணத்தான் சாலை (காவிரி இடதுகரை சாலை) வழியாக ெரயில்வே மேம் பாலம் ஏறி திரு–வானைக் கோவில் அடைந்து ஸ்ரீரங்கம் செல்ல–லாம்.
ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தி–லிருந்து இடதுபுறம் உள்ள திருவானைக்கோவில் செல்லும் சாலையில் ெரயில்வே மேம்பாலத் தின் வழியாக திருவானைக் கோவில் வந்தடைந்து வலதுபுறம் திரும்பி டிரங்க் சாலை வழியாக ெரயில்வே மேம்பாலம் ஏறி இடதுபுறம் திரும்பி கும்பகோணத்தான் சாலை வழியாக வந்து திரும்பி சென்னை பைபாஸ் சாலை (சென்னை திருச்சி திண்டுக்கல் சாலை) பழைய பாலத்தின் வழியாக வந்து வலதுபுறம் திரும்பி ஓயாமரி வழியாக (காவிரி தென்கரை சாலை) அண்ணா சிலை வந்தடைந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்ல–லாம்.
திருச்சியிலிருந்து சென்னை செல்லும் வாகனங்கள் நகர வழி போக்குவ–ரத்தைத் தவிர்த்து புறவழிச்சாலை வழியாக சஞ்சீவி நகர் மார்க்கமாக காவிரி புதுப்பாலம் வழியாக நெம்பர் 1 டோல்கேட் அடைந்து சென்னை செல்ல–லாம். அவ்வாறே சென்னை–யிலிருந்து திருச்சி வரும் வாகனங்கள் நெம்பர் 1 டோல்கேட் அடைந்து காவிரி புதுப்பாலம் வழியாக வந்து புறவழிச்சாலை மார்க்கமாக திருச்சி அடையலாம்.
சத்திரம் பேருந்து நிலை–யத்திலிருந்து புறப்படும் புறநகர் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் அண்ணா சிலை வழியாக காவிரி பாலத்திற்கு முன்ன–தாக உள்ள ெரயில்வே மேம்பா–லத்திலிருந்து ஓயாமரி வழியாகச் சென்று இடது–புறம் திரும்பி சென்னை பைபாஸ் சாலை காவிரி பழைய பாலத்தில் சென்று நேராக நெம்பர் 1 டோல்கேட் சென்று செல்லலாம்.
கலெக்டர் வேண்டுகோள்
காவிரிப் பாலம் பரா–மரிப்புப் பணிகள் மேற் கொள்ளப்படவுள்ள–தை–யொட்டி மேற்கண்ட மாற்றுப் பாதை–யில் இரு சக்கர வாக–னங்கள் உள்ளிட்ட அனைத்துவித வாகனங்க–ளும் பயணம் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு நல்ஒத்துழைப்பு வழங்கிடும்படி பொது–மக்கள் கேட்டுக்கொள்ளப்ப–டுகிறார்கள்.
இவ்வாறு திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
- கீழூர், கெடமலை, மேலூர் என 3 கிராமங்கள் உள்ளன.இந்த கிராம மக்கள் பயன்பெறும் வகையில் சில வருடங்களுக்கு முன்பு மின் வசதி செய்யப்பட்டிருந்தது.
- 1 மாதமாக மின் விநியோகம் இல்லை என்று கூறப்படுகிறது. கெட மலையில் 500 பேருக்கு மேல் வசிக்கின்றனர். அதேபோல் மேலூரில் 450 பேர் வசிக்கின்றனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே போத மலையில் கீழூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் கீழூர், கெடமலை, மேலூர் என 3 கிராமங்கள் உள்ளன.இந்த கிராம மக்கள் பயன்பெறும் வகையில் சில வருடங்களுக்கு முன்பு மின் வசதி செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மேலூர் மற்றும் கெடமலைப்ப குதியில் சில தினங்களுக்கு முன்பு பெய்த கன மழையின் காரணமாக அங்குள்ள டிரான்ஸ்பார்மர்கள் செயல்படவில்லை. இதனால் 1 மாதமாக மின் விநியோகம் இல்லை என்று கூறப்படுகிறது. கெட மலையில் 500 பேருக்கு மேல் வசிக்கின்றனர். அதேபோல் மேலூரில் 450 பேர் வசிக்கின்றனர்.அங்குள்ள டிரான்ஸ்பார்மர்கள் சரிவர செயல்படவில்லை என்பதால் அங்கு மின் தடை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சரிவர மின் விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் குடிநீருக்காக 2 கிலோ மீட்டர் தூரம் வரை மலைப்பகுதியில் சென்று தண்ணீர் எடுத்து வருவதாகவும், பள்ளி மாணவர்கள் இரவு நேரங்களில் படிக்க முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாகவும், விவசாயத்திற்கு தண்ணீர் எடுத்து விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், போதமலையைச் சேர்ந்த மக்கள் தெரிவித்தனர்.
இது பற்றி மின்வாரிய அதிகாரி கூறியதாவது:-
சில தினங்களுக்கு முன்பு பெய்த கன மழை யால் கெடமலை மற்றும் மேலூர் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்துள்ளன. அவற்றை கீழே கொண்டு வருவதற்கு சாலை வசதி இல்லாததால் சிரமம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் உதவியுடன் தான் பழுதடைந்த டிரான்ஸ்பார்மர்களை கீழே கொண்டு வர முடியும். புதிய டிரான்ஸ்பார்மர்கள் தயார் நிலையில் உள்ளது. அங்குள்ள மக்கள் ஒத்துழைப்பு தந்தால் உடனடியாக புதிய டிரான்ஸ்பார்மர்களை அங்கு வைத்து மின் சப்ளை செய்ய முடியும். நாங்கள் எப்போதும் தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
- கலெக்டர் அரவிந்த் எச்சரிக்கை
- 9444042322 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் .
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டை பிளாஸ்டிக் இல்லா தமிழகமாக மாற்றும் முயற்சியாக, ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் தாள்கள் ஆகியவற்றை பயன்படுத்த 01.01.2019 முதல் தமிழக அரசு தடை விதித்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக மேற்குறிப்பிட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருளை பயன்படுத்துவது கன்னி யாகுமரி மாவட் டத்தில் நன்கு குறைந்து வருகிறது. இருப்பினும், சில உணவகங்கள், டீ கடைகள், மளிகை கடைகள், பேக்கரிகள், இனிப்பு மற்றும் காரவகைகள் தயாரிக்கும் கடைகள் ஆகியவற்றில் அரசின் தடை ஆணையை மீறி ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருளை பயன்படுத்துவது தெரியவருகிறது.
அனைத்து உணவகங்கள் டீ கடைகள் , மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட்கள், பேக்கரிகள், இனிப்பு மற்றும் காரவகைகள் முதலிய கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப் பட்ட ஒருமுறை பயன்ப டுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருளை பயன்படுத்தக்கூடாது என இதன்மூலம் எச்ச ரிக்கப்படுகிறது. ஆய்வின் போது, தடையை மீறி அவ்வாறு உபயோகப்படுத்துவது கண்டறியப்பட்டால் முதல்முறை ரூ.2 ஆயிரமும், 2-வது முறை ரூ.5 ஆயிரமும், 3-வது முறை ரூ.10 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்படுவதுடன் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்து கடை மூடி சீல் வைக்கப்படும் என்பது இதன்மூலம் தெரிவித்து கொள்ளப்படுகிறது.
செய்தித்தாள் முதலிய அச்சிடப்பட்ட தாள்களில் உணவுப்பொருட்களை பாதுகாக்கவோ, பொட்டல மிடவோ பயன்படுத்தக்கூ டாது. சூடான வடை, சம்சா போன்ற தின்பண்டங்களை செய்திதாளில் வைத்து எண்ணெய்யை பிழிந்து சாப்பிடும் பொழுது செய்தித்தாளில் படிந்தி ருக்கும், உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய கார்பன், காட்மியம் . தாலேட் போன்ற கடின உலோகங்களும் சேர்ந்து உண்ணும்பொழுது உடலுக்குள் செல்ல வாய்ப்புள்ளது.
அவை தொடர்ச்சியாக உடலில் சேரும்பொழுது ஜீரண மண்டலம், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன .
எனவே செய்தித்தாள் மற்றும் அச்சிடப்பட்ட தாள்களில் உணவுப்பொ ருள்களை சேமித்து வைப்பதோ , பொட்டலமிட்டு வழங்குவதோ மற்றும் உணவு பொருள்களை உண்ண வழங்குவதோ உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தால் தடை செய்யப்பட்டுள்ளது .
அவ்வாறு உபயோ கப்படுத்துவது கண்டறியப் பட்டால் அபராதம் விதிக்கப் படுவதுடன் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்து கடை மூடி சீல் வைக்கப்படும்.
டீ கடைகள், ஓட்டல்கள் மற்றும் பிற வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்டவை பயன்படுத்துவது, அச்சிடப் பட்ட தாள்களில் வடை, சம்சா கொடுப்பது போன்றவை தொடர்பாக பொதுமக்கள் 9444042322 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க லாம் .
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- குடோனுக்கு சீல் வைப்பு
- ஓவன் பிளாஸ்டிக் பைகள் அதிக அளவில் பயன்ப டுத்தப்பட்டு வருகிறது
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள் விற்பனையை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நாகர்கோவில் மாநகரப் பகுதியில் பிளாஸ்டிக் விற்பனையை கட்டுப்ப டுத்த மாநகராட்சி அதிகா ரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகி றார்கள். நாகர்கோவில் அலெக்சாண்ட பிரஸ்ரோடு பகுதியில் தடை செய் யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.
இதையடுத்து ஆணை யாளர் ஆனந்தமோகன் சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் தலைமையிலான குழுவினர் இன்று காலை அலெக்ஸ்சாண்டபிரஸ் ரோடு பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்ட னர்.அந்த பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் சோதனை செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மாநக ராட்சி ஊழியர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மாநக ராட்சி வண்டியில் ஏற்றி னார்கள். குடோனில் இருந்த சுமார் ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இதைத் தொடர்ந்து அந்த குடோனுக்கு சீல் வைக்கப் பட்டது.
இது குறித்து ஆணை யாளர் ஆனந்தமோகன் கூறுகையில், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஓவன் பிளாஸ்டிக் பைகள் அதிக அளவில் பயன்ப டுத்தப்பட்டு வருவதாகவும் அது தடை செய்யப்பட்ட பை என்பதால் அதனை பொதுமக்கள் யாரும் வாங்கி பயன்படுத்த வேண்டாம். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பதுக்கி வைத் தாலோ விற்பனை செய்தா லோ அவர்கள் மீதும் நடவ டிக்கை எடுக்கப்படும் என்றார்.
- பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று குமரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
- கைது செய்தவர்களை கோட்டார் பகுதியில் உள்ள ஒரு சமூக நலக் கூடத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர்.
நாகர்கோவில்:
பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று குமரி மாவ ட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் குமரி மாவட்ட அகில பாரத இந்து மகா சபாவினர், காசி, மது ராவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி நாகர்கோ வில் மீனாட்சிபுரம் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.
ஆனால் இதற்கு போலீ சார் அனுமதி மறுத்தனர். இருப்பினும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அந்த பகுதி யில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் பாலசுப்பிர மணியன் தலைமையில் நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைவர் ராஜேஷ், குமரி கோட்ட செயலாளர் ஸ்ரீகண்டன், குமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அமிர்தலிங்கம், மாவட்ட தலைவர்கள் ராஜ சேகர் (கிழக்கு), சபரி குமார் (மேற்கு) உட்பட பலர் மீனாட்சிபுரம் அரசு விரைவு போக்குவரத்து பணிமனை முன்பு திரண்டனர். போலீஸ் கூடுதல் சூப்பி ரண்டு ஈஸ்வரன், துணை சூப்பிரண்டு நவீன் குமார் தலைமையில் குவிக்கப்பட்டு இருந்த போலீசார், ஆர்ப்பாட்டத்திற்கு வந்த மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியம் உள்பட இந்து மகா சபா நிர்வாகிகளை கைது செய்தனர். கைது செய்தவர்களை கோட்டார் பகுதியில் உள்ள ஒரு சமூக நலக் கூடத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர்.