search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 121701"

    திருவாரூரில் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் கணவரை திருமணம் செய்து கொண்ட மாணவி பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் விஜயபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவருடைய மகள் சுவேதா (வயது22). இவர் நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 22-ந் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்ற சுவேதா மீண்டும் திரும்பி வரவில்லை. இது குறித்து குமார் திருவாரூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் சுவேதா தனது காதல் கணவருடன் திருவாரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அப்போது தன்னுடன் கல்லூரியில் பி.பி.ஏ. படித்து வந்த நாகை மாவட்டம் கீழ்வேளூரை சேர்ந்த குணசேகரன் மகன் ஆனந்த் என்பவரை காதலித்து வந்ததாகவும், பெற்றோர் எதிர்ப்பால் வீட்டை விட்டு சென்று இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறினார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் சுவேதா- ஆனந்தின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி காதல் ஜோடியை அனுப்பி வைத்தனர்.

    குமாரபாளையம் அருகே உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 7வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    குமாரபாளையம்:

    மத்திய அரசின் சார்பில் பவர்கிரிட் நிறுவனம் விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதற்கு பதிலாக சாலை ஓரங்களில் புதை வட கம்பிகளை பதிக்கும் திட்டத்தை செயல்படுத்திட வலியுறுத்தியும், ஏற்கனவே உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலத்தின் மதிப்பிற்கேற்ப முறையான இழப்பீடு உயர் மின் கோபுரங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு வருட வாடகையும் வழங்கிட வலியுறுத்தியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    குமாரபாளையம் அருகே உள்ள படைவீடு கவுண்டனூர் பகுதியில் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பில் உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான தொடர் போராட்டம் நேற்று 6-வது நாளாக நடைபெற்றது.

    கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் பெருமாள் தலைமையில் தொடங்கி உள்ள இப்போராட்டத்தில் ஈசன், முனுசாமி, குணசேகரன், தங்கவேல், எம்.சண்முகம், சுரேஷ், செல்வராஜ், ஏ.சண்முகம், சின்னதுரை ஆசிய 10 பேர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    போராட்டத்திற்கு ஆதரவாக பெண்கள் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைகளில் கருப்புக்கொடி ஏந்தியபடி மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்பாட்டம் செய்தனர். தொடர்ந்து அவரவர் விவசாய நிலங்கள், கிணறுகள், வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 7-வது நாளாக இந்த போராட்டம் நீடித்து வருகிறது.

    உயர்மின் கோபுர மின் கம்பிகள் கீழே, எந்தவித மின் இணைப்பும் இன்றி மின் காந்த அலைகளால் டியூப் லைட் எரிந்ததை விவசாயிகள் நிரூபித்தனர்.

    இது குறித்து விவசாய சங்க கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் ஈசன் கூறியதாவது:-

    உயர்மின் கோபுரம் வழியாக மின் கம்பிகள் செல்லும் இடங்களில் அருகில் இருக்கும் மனிதர்கள், கால்நடைகள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. புற்று நோய் உள்ளிட்ட 16 வகை நோய்கள் உண்டாகின்றன என உலக சுகாதார அமைப்புகள் கூறி உள்ளன.

    இதை தமிழக அரசு மறுத்து வருகிறது. இதை பொய்ப்பிக்கும் வகையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து தர்மபுரி மாவட்டம் பாலவாடி வரை உயர்மின் கோபுரம் வழியாக 400 கே.வி. மின்சார உயர் மின் அழுத்த கம்பிகள் செல்லும் இடத்தில் கம்பிகள் கீழே டியூப் லைட்டுகள் எவ்வித மின் இணைப்பும் இன்றி எரிவதையும், உடலில் டெஸ்டர் வைத்தால் அதுவும் எரிவதை நிரூபித்து காட்டினோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    குமாரபாளையம் அருகே உள்ள படைவீடு கவுண்டனூர் பகுதியில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று 7-வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது.
    குமாரபாளையம்:

    மத்திய அரசின் சார்பில் பவர்கிரிட் நிறுவனம் விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதற்கு பதிலாக சாலை ஓரங்களில் புதை வட கம்பிகளை பதிக்கும் திட்டத்தை செயல்படுத்திட வலியுறுத்தியும், ஏற்கனவே உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலத்தின் மதிப்பிற்கேற்ப முறையான இழப்பீடு உயர் மின் கோபுரங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு வருட வாடகையும் வழங்கிட வலியுறுத்தியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    குமாரபாளையம் அருகே உள்ள படைவீடு கவுண்டனூர் பகுதியில் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பில் உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான தொடர் போராட்டம் நேற்று 6-வது நாளாக நடைபெற்றது.

    கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் பெருமாள் தலைமையில் தொடங்கி உள்ள இப்போராட்டத்தில் ஈசன், முனுசாமி, குணசேகரன், தங்கவேல், எம்.சண்முகம், சுரேஷ், செல்வராஜ், ஏ.சண்முகம், சின்னதுரை ஆசிய 10 பேர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    போராட்டத்திற்கு ஆதரவாக பெண்கள் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைகளில் கருப்புக் கொடி ஏந்தியபடி மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்பாட்டம் செய்தனர். தொடர்ந்து அவரவர் விவசாய நிலங்கள், கிணறுகள், வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 7-வது நாளாக இந்த போராட்டம் நீடித்து வருகிறது.

    உயர்மின் கோபுர மின் கம்பிகள் கீழே, எந்தவித மின் இணைப்பும் இன்றி மின் காந்த அலைகளால் டியூப் லைட் எரிந்ததை விவசாயிகள் நிரூபித்தனர்.

    இது குறித்து விவசாய சங்க கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் ஈசன் கூறியதாவது:-

    உயர்மின் கோபுரம் வழியாக மின் கம்பிகள் செல்லும் இடங்களில் அருகில் இருக்கும் மனிதர்கள், கால்நடைகள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. புற்றுநோய் உள்ளிட்ட 16 வகை நோய்கள் உண்டாகின்றன என உலக சுகாதார அமைப்புகள் கூறி உள்ளன.

    இதை தமிழக அரசு மறுத்து வருகிறது. இதை பொய்ப்பிக்கும் வகையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து தர்மபுரி மாவட்டம் பாலவாடி வரை உயர்மின் கோபுரம் வழியாக 400 கே.வி. மின்சார உயர்மின் அழுத்த கம்பிகள் செல்லும் இடத்தில் கம்பிகள் கீழே டியூப் லைட்டுகள் எவ்வித மின் இணைப்பும் இன்றி எரிவதையும், உடலில் டெஸ்டர் வைத்தால் அதுவும் எரிவதை நிரூபித்து காட்டினோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஊத்துக்கோட்டை அருகே 6 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நடத்திய முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    ஊத்துக்கோட்டை:

    பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையிலிருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ரூ. 3200 கோடி செலவில் 136 கிலோ மீட்டர் தூரத்துக்கு 6 வழி சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இந்த சாலை கண்ணிகைப் பேர், பெரியபாளையம், தண்டலம், தும்பாக்கம், தொளவேடு, காக்கவாக்கம், பருத்திமேனிகுப்பம், பாலவாக்கம், சென்னங்காரணை, ஆலபாக்கம், பனபாக்கம், ஈன்றம்பாளையம், பேரண்டூர், மாம்பாக்கம், போந்தவாக்கம், சீதஞ்சேரி, வெங்களத்தூர், பிச்சாட்டூர் வழியாக சித்தூர் வரை செல்கிறது.

    இந்த கிராமங்கள்வழியாக 6 வழி சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த அளவிடும் பணிகளில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சாலை பணியால் ஆயிரக்கனக்கான ஏக்கர் விவசாய விளை நிலங்கள், நூற்றுக்கனக்கான வீடுகள், கிணறுகள், பம்ப் செட்டுகள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் 6 வழிச்சாலை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.

    இந்தநிலையில் தொளவேடு, காக்கவாக்கம், பருத்திமேனிகுப்பம் ஆகிய கிராமங்களில் நிலம் அளவிட அதிகாரிகள் வந்தனர்.

    இதனை அறிந்த 3 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தொளவேடு கிராமத்தில் ஒன்று திரண்டு அதிகாரிகளை முற்றுகையிட்டனர். தங்கள் கிராமங்களின் வழியாக 6 வழி சாலை அமைக்க விடமாட்டோம் என்று கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    பின்னர் திடீரென அவர்கள் பாலவாக்கம்- தொளவேடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் நிலம் அளவிடும் பணியை நிறுத்தி விட்டு அங்கிருந்து சென்றனர்.

    கடந்த 8-ந் தேதி சென்னங்காரணை, ஆலபாக்கம் கிராமங்களில் அதிகாரிகள் இரவு நேரங்களில் அளவு கற்கள் நட்டியதை கண்டித்து கிராம மக்கள் ஊத்துக்கோட்டை தாலுக்கா அலுவலகம் எதிரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடதக்கது. #tamilnews
    அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக இருக்கும் தலைவர்களான மு.க.ஸ்டாலின் மற்றும் கமல் ஹாசன் ஆகியோர் இன்று திருமண விழாவில் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்து உரையாடினர். #StalinMeetsKamal #TNPolitics
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி, தொகுதி பங்கீடு போன்றவை வெளிப்படையாக அறிவிக்கப்படாவிட்டாலும் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தையும் சேர்க்க காங்கிரஸ் விரும்புவதாக தகவல் வெளியானது.

    இதற்கிடையே தி.மு.க. பற்றி கருத்து தெரிவித்த கமல், அழுக்கு மூட்டை கட்சி என்றும் அதனுடன் கூட்டணி இல்லை என்றும் கருத்து தெரிவித்து உள்ளார். இதனால் கமலை கூட்டணியில் சேர்க்க தி.மு.க. விரும்புமா? என்று தெரியவில்லை.

    இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அழகிரி கூறும்போது, காங்கிரஸ் கூட்டணிக்கு கமல்ஹாசன் வந்தால் மிகவும் நல்லது என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் கமல்ஹாசனை கூட்டணிக்குள் இழுக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெறுவதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி  பேட்டி அளிக்கும்போது மேலும் கமல் தங்கள் கரத்தை வலுப்படுத்த வேண்டும் எனவும் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு கமல் வரவேண்டும் எனவும் அழைப்பு விடுத்து இருந்தார்.



    அதன்பின்னர், பாஜக, அதிமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காகத் தான் கூட்டணியில் சேர கமலுக்கு அழைப்பு விடுத்ததாகவும், கூட்டணிக்கு அழைப்பு விடுக்கும்போது, திமுகவை கமல் விமர்சனம் செய்தது தன் கவனத்திற்கு வரவில்லை என்றும் கூறினார் அழகிரி. அத்துடன், கமல் தேவையில்லாமல் திமுகவை விமர்சித்திருப்பதை கண்டிப்பதாகவும் கூறினார்.

    திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி தான் முடிவு செய்யும். மக்கள் நீதி மய்யத்தை கூட்டணியில் சேர்ப்பது குறித்து திமுக தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

    இதற்கிடையில் திமுக கட்சி நாளேடான முரசொலியில் கமலை விமர்சித்து கட்டுரை எழுதப்பட்டு இருந்தது. பூம் பூம் காரனின் மாடு என்ன செய்து விடும் என்ற தலைப்பில் அந்த கட்டுரை எழுதப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில்  சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற திமுக எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன் இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கமல் ஆகியோர் பங்கேற்றனர். அரசியல் விமர்சனங்களைத் தாண்டி ஸ்டாலின், கமல்ஹாசன் அருகருகே அமர்ந்து சகஜமான முறையில் உரையாடினர். இது அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்படுகிறது.  #StalinMeetsKamal #TNPolitics

    குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூர் டைரக்டர் அரிபம் ஷியாம் சர்மா பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்ப உள்ளார். #PadmaShri #AribamSyamSharma
    இம்பால்:

    வடகிழக்கு மாநிலமான மணிப்பூரை சேர்ந்தவர் அரிபம் ஷியாம் சர்மா (83). இவர் பிரபல மணிப்பூர் சினிமா டைரக்டராகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வருகிறார்.



    இவர் மத்திய அரசு தனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்ப உள்ளார். சமீபத்தில் மத்திய அரசு பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்ட மசோதா தாக்கல் செய்தது. அது மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

    இதற்கு டைரக்டர் அரிபம் ஷியாம் சர்மா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த சட்டம் அண்டை நாடுகளான வங்காள தேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2014 டிசம்பர் 31-ந்தேதிவரை இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்கு அதிவிரைவாக குடியுரிமை வழங்க வழி வகை செய்கிறது.

    இதற்கு மணிப்பூர், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து இந்த விருதை திரும்ப அனுப்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    டைரக்டர் சர்மா பல தேசிய விருதுகளை பெற்று இருக்கிறார். அவருக்கு மத்திய அரசு கடந்த 2006-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. #PadmaShri #AribamSyamSharma

    ஆதார் சட்ட திருத்த மசோதா நேற்று நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். #Aadhaar #AmendmentBill #LokSabha
    புதுடெல்லி:

    சமையல் கியாஸ் மானியம் உள்ளிட்ட அரசின் மானியங்களை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்று அறிவித்த மத்திய அரசு, வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும், செல்போன் இணைப்பு போன்றவற்றுக்கு ஆதார் எண் கட்டாயம் என்றும் அறிவித்தது. ஆதார் அட்டையில் தனிநபர்கள் பற்றிய விவரம் அடங்கி இருப்பதால், அவை தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும், எனவே பல்வேறு திட்டங்களுக்கும் ஆதார் எண் கட்டாயம் என்பதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அரசியல் சட்டப்படி ஆதார் செல்லும் என்றும், அரசின் சலுகைகளை பெற ஆதார் அவசியம் என்றும், ஆனால் செல்போன் இணைப்பு, நீட் தேர்வு, வங்கி கணக்குக்கு ஆதார் எண் கட்டாயம் அல்ல என்றும், கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு கூறியது. தனியார் நிறுவனங்கள் ஆதார் விவரங்களை பெறுவதற்கும் தடை விதிக்கப்பட்டது.

    இந்தநிலையில், ஆதார் சட்ட திருத்தம் தொடர்பான மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் நேற்று தாக்கல் செய்தார். தனிநபர்கள் தாங்களாக விரும்பி செல்போன் இணைப்பு, வங்கி கணக்கு ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்த சட்ட திருத்தம் வகை செய்கிறது.

    இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் உறுப்பினர் சசி தரூர் பேசுகையில், இந்த மசோதா சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிரானது என்பதால் உடனே வாபஸ் பெறவேண்டும் என்றார். இதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சவுகதா ராயும், இந்த சட்ட திருத்த மசோதா சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிரானது என்று கூறினார்.

    உறுப்பினர் என்.கே.பிரேமசந்திரன் (புரட்சி சோசலிஸ்டு) பேசுகையில், இந்த மசோதா தனிநபர்களின் உரிமையை பறிப்பதாக உள்ளது என்று குற்றம்சாட்டினார்.

    அதற்கு மந்திரி ரவிசங்கர் பிரசாத் பதில் அளிக்கையில், இந்த மசோதா சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு விரோதமானது அல்ல என்றும், தனிநபர்களின் உரிமை பறிக்கவில்லை என்றும் கூறினார்.

    அரசின் நேரடி மானிய திட்டங்களுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டதால் ரூ.90 ஆயிரம் கோடி சேமிக்கப்பட்டு இருப்பதாகவும், உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்றவை ஆதார் அட்டை திட்டத்தை வரவேற்று இருப்பதாகவும் அவர் அப்போது அவர் தெரிவித்தார்.

    இதற்கிடையே மாநிலங்களவையில் உள்துறை ராஜாங்க மந்திரி ஹன்ஸ்ராஜ் ஆகிர் நேற்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், கடந்த நவம்பர் மாதம் 30-ந் தேதி நிலவரப்படி இந்தியாவில் 122 கோடியே 90 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

    ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளவர்களில் 6 கோடியே 71 லட்சம் பேர் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என்றும், 29 கோடியே 2 லட்சம் பேர் 5 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அப்போது அவர் கூறினார்.  #Aadhaar #AmendmentBill #LokSabha 
    ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே உருவாக்கிய உடன்படிக்கைக்கு ஆளும்கட்சி எம்.பி.க்களின் கடும் எதிர்ப்பால் அவரது பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. #TheresaMay #Brexitdeal #Maynoconfidence
    லண்டன்:

    ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்துவிட்ட பிரிட்டன் தனிநாடாகவே பார்க்கப்படுகிறது.

    ஆனால், ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள 27 நாடுகளுடனான நிதி கொடுக்கல் - வாங்கல், எதிர்கால பரிவர்த்தனை, விசா மற்றும் குடியுரிமை தொடர்பாக இருதரப்பினரும் செய்துகொள்ள வேண்டிய எதிர்கால உடன்படிக்கையை பிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்து வந்தார்.

    இந்த செயல்திட்ட வரைவு அறிக்கையை ஆளும் கன்சர்வேட்டின் கட்சியை சேர்ந்த முதன்மை மந்திரிகளும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கடுமையாக எதிர்த்து வந்தனர். இதுதொடர்பாக தனிப்பட்ட முறையிலும் பாராளுமன்றத்திலும் சூடான விவாதங்கள் நடந்து வந்தது.

    இதற்கிடையில், சுமார் 500 பக்கங்களை கொண்ட ஒரு செயல்திட்ட அறிக்கையை ஐரோப்பிய யூனியன் தயாரித்துள்ளது.

    ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது தொடர்பாக தெரசா மே தயாரித்த செயல்திட்டத்தின் மீது அதிருப்தி அடைந்த சில மந்திரிகளும் சொந்தக் கட்சி எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு திட்டமிட்டு, இதற்காக ஆதரவு திரட்டி வந்தனர். எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி எம்.பி.க்களும் தெரசா மேவை வீழ்த்த தகுந்த தருணத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

    இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர் தெரசா மே சமர்ப்பித்த செயல்திட்ட அறிக்கைக்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. எனினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடனடியாக 4 மந்திரிகள் ராஜினாமா செய்தனர்.



    ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள 27 நாடுகளின் தலைவர்களும், ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜீன்-கிலாட் ஜங்கர் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் ஆகியோரும் 25-11-2018 அன்று புருசெல்ஸ் நகரில் தெரசா மே-வை சந்தித்தனர்.

    பின்னர், பிரிட்டன் அரசின் சார்பில் தெரசா மே முன்வைத்த உடன்படிக்கைக்கு ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள 27 நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளதாக  ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்தார்.

    இதற்கிடையில், பிரிட்டன் நாட்டின் ஆளும்கட்சியில் இடம்பெற்றுள்ள தெரசா மேவின் எதிர்ப்பாளர்கள் பாராளுமன்றத்தில் இந்த ஒப்பந்தத்தை தோற்கடிப்பதற்கு மறைமுகமாக முயற்சித்து வருகிறார்கள்.

    மேலும், பிரதமர் தெரசா மேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைக்கவும் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.க்கள் ரகசியமாக கையெழுத்து வேட்டை நடத்தி வருகின்றனர்.

    650 இருக்கைகளை கொண்ட பிரிட்டன் பாராளுமன்றத்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 315 உறுப்பினர்களும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கு 257 உறுப்பினர்கள் உள்ளனர். ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த 15 சதவீதம் (48) எம்.பி.க்கள் கையொப்பமிட்ட கடிதம் 1922 உயர்மட்டக்குழு உறுப்பினர்களை கொண்ட ஆளும்கட்சி குழு தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டால் பிரதமருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முடியும்.

    ஆளும்கட்சியை சேர்ந்த 315 எம்.பி.க்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் (210 உறுப்பினர்கள்) தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தால் தெரசா மே பதவியில் இருந்து விலக நேரிடும்.

    வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தால் அடுத்த 12 மாதங்களுக்கு பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை யாரும் கொண்டுவர முடியாது.

    இந்நிலையில், தெரசா மேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர 48 எம்.பி.க்களின் கையொப்பமிட்ட கடிதம் 18 உறுப்பினர்களை கொண்ட கன்சர்வேட்டிவ் கட்சியின் செயற்குழு தலைவர் கிரஹம் பிராடிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பிரிட்டன் ஊடகங்கள் நம்பகமாக தெரிவிக்கின்றன.

    இதுதொடர்பான தகவலை கிரஹம் பிராடி இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில் பிரதமர் தெரசா மேவுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு, இதில் வாக்கெடுப்பு நடத்தப்படுவது உறுதி என ஆளும்கட்சியில் உள்ள அவரது அதிருப்தி எம்.பி.க்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    இந்த வாக்கெடுப்பில் தெரசா மே தோல்வி அடைந்தால் கட்சியின் தலைவர் பதவியிலும் அவர் நீடிக்க மாட்டார். மறுமுறை தலைவர் பதவிக்கு போட்டியிடவும் முடியாது. அப்படி ஒருவேளை தெரசா மே பதவி விலகினாலும் புதிய பிரதமர் பதவி ஏற்கும்வரை 6 வார காலம்வரை அவர் காபந்து பிரதமராக நீடிக்க வாய்ப்புள்ளது.

    சமீபத்தில் பதவி விலகிய பிரெக்சிட் துறை மந்திரி டேவிட் டேவிஸ் லண்டன் நகர முன்னாள் மேயர் போரிஸ் ஜான்சன், சர்வதேச வர்த்தகத்துறை மந்திரி பென்னி மோர்டுவான்ட், பாகிஸ்தான் வம்சாவளியினரும் உள்துறை மந்திரியுமான சாஜித் ஜாவித், பிரெக்சிட் முன்னாள் செயலாளர் டோமினிக் ராப், உணவு மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரி மைக்கேல் கோவே மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெரெமி ஹன்ட் உள்ளிட்டோர் தெரசா மேவின் இடத்தை நிரப்புவதற்கும் ஆளும்கட்சிக்கும் ஆட்சிக்கும் தலைமையேற்பதற்காகவும் காத்திருப்போர் பட்டியலில் தயார் நிலையில் உள்ளனர்.

    இந்நிலையில், வாக்கெடுப்பு நடந்தால் தெரசா மே பதவி விலக நேரிடுமா? அல்லது தீர்மானம் தோல்வி அடையுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். #TheresaMay #Brexitdeal  #Maynoconfidence

    சேலம் விமான நிலைய விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காடையாம்பட்டி:

    சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்காக ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் பொட்டியாபுரம், தும்பிப்பாடி, சிக்கனம்பட்டி ஆகிய கிராமங்களில் சுமார் 570 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

    முதல்கட்டமாக அரசு புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்து கையகப்படுத்தப்பட்டுள்ளது. வீடுகளை வைத்துள்ள பொதுமக்கள் தாமாகவே முன்வந்து வழங்கிய நிலத்தில் அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலம் எடுப்பு தனி தாசில்தார் சாந்தி தலைமையில் நில அளவையர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் தும்பிப்பாடி கிராமத்திற்கு நில அளவீடு செய்வதற்காக சென்றனர்.

    அப்போது அங்கு திரண்டு வந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் விமான நிலைய விரிவாக்க பணிக்காக நிலத்தை ஒப்படைக்க மாட்டோம் என்று கூறியதோடு இங்கு ஆய்வு பணிகள் மேற்கொள்ளக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அப்போது சில விவசாயிகள் நிலத்தை அளவீடு செய்தால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்வோம் என கூறி அங்குள்ள கிணற்று திட்டில் இறங்கி மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து அதிகாரிகள் நிலத்தை அளக்காமல் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

    இந்த நிலையில் தாராபுரம் கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன் தீவட்டிப்பட்டி போலீசில் விவசாயிகள் மீது புகார் கொடுத்தார். அந்த புகாரில் விமான நிலைய விரிவாக்கத்திற்காக நில அளவீடு செய்ய சென்ற வருவாய்த்துறை அதிகாரிகளை அப்பகுதியைச் சேர்ந்த வினோத், கிருஷ்ணன், விஜய், சின்னப்பையன், குமரவேல், எல்லப்பன் உள்பட பலர் தடுத்து நிறுத்தினார்கள், அரசு பணிகளை செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து தீவட்டிப்பட்டி போலீசார் விவசாயிகள் மீது அரசு பணியை செய்யவிடாமல் தடுத்தல், மிரட்டுதல், அச்சுறுத்தும் வகையில் ஒன்றாக கூடுதல், கொலை மிரட்டல் விடுத்தல், ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    திண்டுக்கல் அருகே பாதுகாப்பு கேட்டு காதலியுடன் போலீஸ்காரர் தஞ்சமடைந்தார்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே நல்லமனார்கோட்டை சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் முருகேசன்(வயது35). இவர் திருப்பூர் ஆயுதப்படையில் 2-ம் நிலை போலீசாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் சுந்தரராஜபுரத்தை சேர்ந்த தேவிஸ்ரீ(19) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இது காதலாக மாறியது. காதல்ஜோடி பல்வேறு இடங்களுக்கு சென்று தங்கள் காதலை வளர்த்தனர். இந்த விவகாரம் இருவீட்டு பெற்றோருக்கும் தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்வதென முடிவு செய்தனர். அதன்படி திண்டுக்கல் பகுதியில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு வடமதுரை போலீசில் தஞ்சமடைந்தனர்.

    போலீசார் இருதரப்பு பெற்றோரை அழைத்து சமரசம் பேசினர். ஆனால் அவர்கள் இதற்கு உடன்படவில்லை. இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி போலீசார் அனுப்பி வைத்தனர்.

    மயிலாடுதுறையில் எதிர்ப்பை மீறி போலீஸ் பாதுகாப்புடன் 2 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

    மயிலாடுதுறை:

    உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் 13 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டன. தொடர்ந்து மீண்டும் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு முயற்சித்தது. மக்களின் போராட்டத்தால் மயிலாடுதுறையில் டாஸ்மாக் கடைகளை திறக்க முடியவில்லை.

    இந்நிலையில் மயிலாடுதுறை நகரில் நேற்று 2 டாஸ்மாக் மதுபானக்கடைகள் அதிரடியாக திறக்கப்பட்டன. ஸ்டேட் பேங்க் ரோடு மற்றும் ரெயிலடி ஆகிய இடங்களில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு 4 டி.எஸ்.பிக்கள் தலைமையில், 6 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 100 போலீசாரின் பாதுகாப்புடன் விற்பனை தொடங்கியது.

    ரெயிலடியில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் உள்ள கடைகளை அடைத்து போராட்டம் நடத்திய வணிகர்கள் மற்றும் பா.ம.க.வினர் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தகவல் அறிந்து வந்த தி.மு.க.வினர் புதிய டாஸ்மாக் மதுபானக்கடைகளை மூடவில்லை என்றால் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர் 1-வது வார்டு தண்ணீர்பந்தல் பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் அனைத்து கட்சியினர் மனு அளித்துள்ளனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் 1-வது வார்டு தண்ணீர்பந்தல் பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க, தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, பாரதிய ஜனதா கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்தனர்.

    திருப்பூர் 1-வது வார்டுக்குட்பட்ட தண்ணீர்பந்தல் காலனியின் பிரதான சாலையான கொச்சி-மீன்கரை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் புதிய டாஸ்மாக் கடை ஒன்று திறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சாலை மிகவும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலையாகும். மேலும் அருகில் கருப்பராயன், கன்னிமான் மற்றும் ஆதிபராசக்தி உள்ளிட்ட வழிபாட்டு தலங்களும் உள்ளன.

    மேலும் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இந்த சாலை வழியாக மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். டாஸ்மாக் கடை இந்த பகுதியில் திறக்கப்பட்டால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் நிலை உள்ளது.

    இதனால் இந்த பகுதியில் டாஸ்மாக் கடையை திறப்பதற்கான முயற்சியை கைவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
    ×