என் மலர்
நீங்கள் தேடியது "அரசு பள்ளி"
- இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அதிகாரிகளும் உத்தரவிட்டனர்.
- சிகிச்சை முடிந்ததும் ஆசிரியர் மோகனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.
சென்னை:
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மதுரவாயலை சேர்ந்த 13 வயது மாணவி ஒருவர் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வரும் மோகன் மாணவியை தவறான கண்ணோட்டத்திலேயே பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் மாணவி வகுப்பறையில் தனியாக இருந்த போது ஆசிரியர் மோகன் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார். இது பற்றி மாணவி பயந்து போய் வெளியில் சொல்லாமல் இருந்துள்ளார்.
ஆனால் அறிவியல் ஆசிரியர் மோகன் மாணவியிடம் காம லீலையில் ஈடுபட்டது பற்றி பள்ளியில் பணியாற்றி வரும் வேறு ஒரு ஆசிரியருக்கு தெரிய வந்தது. அவர் இது பற்றி பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியர் பள்ளிக்கல்வித்துறையில் புகார் அளித்தார்.
இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அதிகாரிகளும் உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து மாணவியின் பெற்றோருக்கும் தங்கள் மகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான தகவல் தெரியவந்தது. இதையடுத்து மாணவியின் தாயார் விருகம் பாக்கம் மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் ஆசிரியர் மோகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையின் போது ஆசிரியர் மோகன் திடீரென மறைத்து வைத்திருந்த 25 தூக்க மாத்திரைகளை எடுத்து விழுங்கினார். இதில் மயக்கம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக வானகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு ஆசிரியர் மோகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்ததும் ஆசிரியர் மோகனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கல்வி துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இந்த சம்பவம் விருகம்பாக்கம் அரசு பள்ளியில் படித்து வந்த சக மாணவிகள் மற்றும் பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- ஆசிரியரான லால் நவீன் பிரதாப் சிங், மது குடித்துவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார்.
- வகுப்பறையில் மாணவர்களுக்கு ஆசிரியர் மது ஊற்றி குடிக்க கொடுத்துள்ளார்.
மத்தியபிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர் ஒருவர் மது ஊற்றி குடிக்க கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு தொடக்க பள்ளி ஆசிரியரான லால் நவீன் பிரதாப் சிங், மது குடித்துவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார். பின்னர் வகுப்பறையில் மாணவர்களுக்கு மது ஊற்றி குடிக்க கொடுத்துள்ளார். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, உத்தரப் பிரதேசத்தில் சளி, இருமலுக்கு சிகிச்சை பெற வந்த சிறுவனை மருத்துவர் சிகரெட் பிடிக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
- அரசு பள்ளியில் பாடம் கற்பிப்பதால் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
- நூதன பிரசாரம் குழந்தைகளின் பெற்றோர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், ஏலூரு மாவட்டம், ஜிலு குமிலி அடுத்த முலகம் பள்ளியில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ரமேஷ்பாபு என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என தனது பைக்கில் ஒலிபெருக்கியை கட்டிக்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார்.
மேலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த போட்டோக்களை துண்டு பிரசுரமாக அச்சடித்து குழந்தைகளின் பெற்றோர்களிடம் வழங்கி வருகிறார்.
தனியார் மற்றும் கார்ப்ரேட் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளியில் பாடம் கற்பிப்பதால் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இவரது நூதன பிரசாரம் குழந்தைகளின் பெற்றோர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
- மாநிலம் முழுவதும் 1-ஆம் வகுப்பிற்கு 1,05,286 மழலையர் சேர்ந்துள்ளனர்.
- ஏனைய வகுப்புகளும் சேர்த்து மொத்தம் 1,17,310 மாணவச் செல்வங்கள் சேர்ந்துள்ளனர்.
தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் 2025- 2026-ஆம் ஆண்டிற்காக மாணவச் சேர்க்கையை மார்ச் 1-ஆம் தேதி சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அன்றிலிருந்து ஏராளமான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஆர்வமுடன் அரசுப்பள்ளிகளில் சேர்த்து வருகிறார்கள்.
சேர்க்கை தொடங்கியது முதல் கடந்த ஒரு மாதத்தில் மாநிலம் முழுவதும் 1-ஆம் வகுப்பிற்கு 1,05,286 மழலையர் உட்பட ஏனைய வகுப்புகளும் சேர்த்து மொத்தம் 1,17,310 மாணவச் செல்வங்கள் சேர்ந்துள்ளனர். அனைவருக்கும் வாழ்த்துகள்.
தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கல்வியின் துணை கொண்டு உலகை வெல்ல நம் அரசுப்பள்ளிகளே தலைசிறந்த முறையில் அடித்தளமிடும்.
இவ்வாறு அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
- குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் கிடக்கின்றன.
- பொதுமக்கள் அமரும் இடத்தில் உள்ள மேற்கூரையின் இரும்பு கம்பிகள் சிதிலமடைந்து கிடக்கிறது.
கே.பி.அக்ரஹாரா:
பெங்களூரு கே.பி.அக்ரஹாரா மாகடி ரோட்டில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தை பள்ளி மாணவ-மாணவிகள் மட்டுமின்றி கே.பி.அக்ரஹாரா, மாகடி ரோட்டை சேர்ந்த இளைஞர்களும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த மைதானத்தில் தினமும் ஏராளமானோர் விளையாடி வருகிறார்கள். இங்கு பொதுமக்கள் அமருவதற்காக இருக்கைகளும் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் தற்போது அந்த மைதானம் பராமரிப்பின்றி காணப்படுகிறது. அங்குள்ள இருக்கைகள் சேதமடைந்து கிடப்பதுடன், செம்மண் நிறத்தில் காட்சி அளிக்கிறது. மேலும் ஆங்காங்கே குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. இந்த குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.
மேலும் பொதுமக்கள் அமரும் இடத்தில் உள்ள மேற்கூரையின் இரும்பு கம்பிகள் சிதிலமடைந்து கிடக்கிறது. சில கம்பிகள் சரியான பிடிப்பு இல்லாமல் உள்ளன. இதற்கிடையில் இரவு நேரத்தில் சிலர் விளையாட்டு மைதானத்தில் அமர்ந்து மதுபானம் குடிப்பதுடன், கஞ்சா புகைக்கின்றனர். இதனால் கல்வி நிலையம், விஷமிகளின் கூடாரமாக மாறிவிட்டது. அங்கு கிடக்கும் மதுபான பாக்கெட்டுகள், சிகரெட்டுகளை பார்த்து மாணவர்கள் தவறான பாதைக்கு செல்லக்கூடும்.
எனவே மாநகராட்சி அதிகாரிகள் விளையாட்டு மைதானத்துக்குள் கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்றுவதுடன், இருக்கையையும் சீரமைத்து கொடுக்க வேண்டும். அதேபோல மைதானத்தில் அமர்ந்து மது குடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
- அரசு பள்ளியில் 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் நீட்டில் தேர்வில் தேர்ச்சி பெற்று எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்த, எடப்பாடி அரசு பள்ளி மாணவர்கள் சரண்ராஜ் ஹரி, பிரகாஷ் ஆகியோரை பாராட்டி பரிசுகள் வழங்கினர்.
- மேலும் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய காயத்ரி, குமரேசகனி, அருளாளன், மோகனவேல் ஆகியோரை பாராட்டியும் பரிசுகள் வழங்கப்பட்டது.
எடப்பாடி:
எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் சேலம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் நித்தியானந்தம், மாவட்ட செயலாளர் உமா காந்தன், மாவட்ட இணைச்செயலாளர்கள் இளையராஜ், சேகர், மணிமாறன், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் பூங்கோதை, ராஜா, பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் குப்புராஜ் வரவேற்றார்.
இதில், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலச் செயலாளர் கமலக்கண்ணன் மாநில பொதுச் செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு, அரசு பள்ளியில் 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் நீட்டில் தேர்வில் தேர்ச்சி பெற்று எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்த, எடப்பாடி அரசு பள்ளி மாணவர்கள் சரண்ராஜ் ஹரி, பிரகாஷ் ஆகியோரை பாராட்டி பரிசுகள் வழங்கினர்.
மேலும் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய காயத்ரி, குமரேசகனி, அருளாளன், மோகனவேல் ஆகியோரை பாராட்டியும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர், ஆசிரியை–கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகளில் குறைந்தபட்சம் 8 பட்டதாரி ஆசிரியர்களை பணி அமர்த்த வேண்டும். ஆசிரியர்களுக்கு என்று தனியாக பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- அதே வளாகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இரண்டு வகுப்பறைகள் கொண்ட கூடுதல் பள்ளி கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
- துணைத் தலைவர் செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள உகாயனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பொல்லிக் காளிபாளையம் அரசு தொடக்கப் பள்ளிக்கு 2 வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் சேமிப்பு நிதியிலிருந்து ரூ. 20 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை பொங்கலூர் வட்டார உதவி தொடக்க கல்வி அலுவலர் பூங்கொடி வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி கனகராஜ், துணைத் தலைவர் செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய பள்ளி கட்டிடத்தை பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ். குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் பாலசுப்ரமணியம், சிவாச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அதே வளாகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இரண்டு வகுப்பறைகள் கொண்ட கூடுதல் பள்ளி கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. ரூ.16 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் முன்னாள் மாணவர்கள் மற்றும் பள்ளி வளர்ச்சி குழு சார்பில் கட்டப்பட உள்ள இந்த பூமி பூஜை நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் ரத்தினசாமி, ஆசிரியர் சங்க தலைவர் ராஜேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர்கள் கிருஷ்ணவேணி,மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- காகித பூ, கப்பல், பல்வேறு வகையான பொம்மைகள் களி மண்ணால் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
- 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.
அவிநாசி :
அரசுப் பள்ளியில் களிமண் பொருள்கள் தயாரிப்பு பயிற்சியில் பங்கேற்ற அரசுப் பள்ளி மாணவா்கள்.
அவிநாசி ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி மாணவா்களுக்கு காகித வடிவமைப்பு, களிமண்ணால் பொருள்கள் தயாரிப்பு பயிற்சி ஆகியவை திங்கள்கிழமை அளிக்கப்பட்டன. அவிநாசி நல்லது நண்பா்கள் அறக்கட்டளை, சென்னை எழிலன் நண்பா்கள் மற்றும் களிமண் விரல்கள் கூட்டமைப்பு, நிலாப்பள்ளி அமைப்பு ஆகியவை சாா்பில் கலை பழகுதல் முகாம் அவிநாசியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், காகித பூ, கப்பல், பல்வேறு வகையான தொப்பிகள், மயில், கொக்கு டம்ளா் உள்ளிட்ட காகித வடிவமைப்பு, ஓவியங்கள் வரைதல், களி மண்ணால் பொம்மைகள் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து நினைவாற்றல் உருவாக்கும் திறன், மனதை ஒரு நிலைப்படுத்தல் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. இப்பயிற்சியில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.
- திருமங்கலம் அருகே அரசு பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
- முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வட்டார கல்வி மையத்தில் நேரில் சென்று குறைகளை கேட்டார்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 120 மாணவர்களுக்கு 4 ஆசிரியர்கள் மட்டுமே பணியில் இருப்பதால் கூடுதலாக 2 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பெற்றோர்கள் திருமங்கலம் வட்டார கல்வி மையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என தெரிவித்தனர்.
இதுபற்றி அறிந்த முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் வட்டார கல்வி மையத்தில் நேரில் சென்று இது தொடர்பாக கேட்டார். இதைத்தொடர்ந்து உடனடியாக புதிய ஆசிரியர்களை நியமிக்க ஆணையை பெற்று திருமங்கலம் அருகே சித்திரெட்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ஆணையை வழங்கினர்.
தொடர்ந்து ஆசிரியர்கள் 6,7,8-ம் வகுப்பிற்கு நிரந்தர பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதான கட்டிடங்களை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் மாவட்ட கல்வி அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
இதற்கு இடையே திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட அ.வலையப்பட்டி கிராமத்தில் மழைக்கு சேதம் அடைந்த வீடுகளை பார்வையிட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்றார். அப்போது வலையபட்டி உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து மழையால் வீடு இழந்த வர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து அரிசி மற்றும் காய்கறி, உதவித்தொகை ஆகியவற்றை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின் போது ஒன்றிய செயலாளர் அன்பழகன், பேரவை மாவட்ட செயலாளர் தமிழழகன், மாவட்ட பொருளாளர் திருப்பதி, யூனியன் சேர்மன்லதா, ஜெகன், மீனவரணி மாவட்ட செயலாளர் சரவணபாண்டி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளர் சிங்கராஜ்பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- பள்ளியில் கட்டிட வசதி இல்லாததால் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், கலெக்டருக்கும் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.
- பள்ளியில் கட்டிட பணி தொடங்கப்படாமல் உள்ளது.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கொம்பேறிப்பட்டி மலை கிராமப் பகுதியான செம்மணாம் பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. இங்கு 1 முதல் 5ம் வகுப்பு வரை பல்வேறு கிராமங்களில் இருந்து குழந்தைகள் கல்வி பயில வருகின்றனர்.
இப்பள்ளியில் சுமார் 70 மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு மற்ற தனியார் பள்ளிகள் எதுவும் இல்லாததாலும், பெரும்பாலும் விவசாய கூலித் தொழிலாளர்களே உள்ளதாலும் தங்கள் குழந்தைகளை இந்த பள்ளிக்கே ஆரம்ப கல்விக்காக அனுப்பி வந்தனர்.
ஆனால் பள்ளியில் கட்டிட வசதி இல்லாததால் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், கலெக்டருக்கும் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்காலிக ஏற்பாடாக அங்குள்ள கலையரங்கத்தில் பாடம் சொல்லிக் கொடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக அதே கலையரங்கில் கடந்த சில மாதங்களாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
ஆனால் பள்ளியில் கட்டிட பணி தொடங்கப்படாமல் உள்ளது. தற்போது கன மழை பெய்து வரும் சமயங்களில் கூட மாணவர்கள் வகுப்பறை வசதியின்றி திறந்தவெளி கலையரங்கில் கல்வி பயின்று வருகின்றனர். இதனால் அந்த குழந்தைகளுக்கு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
சுகாதாரமான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி இல்லாமல் உள்ளது. எனவே மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் கலெக்டர் இப்பிரச்சினையில் தலையிட்டு பள்ளி கட்டிடத்தை விரைந்து சீரமைக்கவும் மாணவர்களுக்கு பாதுகாப்பான இடத்தில் கல்வி பயில நடவடிக்கை எடுக்கவும் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- தொண்டியில் அரசு பள்ளியில் உணவுத்திருவிழா நடந்தது.
- நேரு பற்றி மாணவ-மாணவிகள் பேச்சு, பாடல்கள் மூலம் நினைவுகூர்ந்தனர்.
தொண்டி
தொண்டியில் உள்ள திருவாடானை பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு உணவுத் திருவிழா தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவஹர் அலிகான் தலைமையில் நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் உறுப்பினர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், தெற்கு தெரு ஜமாத்தார்கள், நண்பர்கள் அறக்கட்டளை, தன்னார்வலர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நேரு பற்றி மாணவ-மாணவிகள் பேச்சு, பாடல்கள் மூலம் நினைவுகூர்ந்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் கார்த்திக், ஆசிரிய பயிற்றுனர் தனலெட்சுமி, சுரேஷ்குமார் உட்பட பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதில் துரித உணவுகளின் தீமைகள், கலப்படமற்ற பாரம்பரிய இயற்கை உணவின் நன்மைகளை பற்றிய விழிப்புணர்வு குழந்தைகளுக்கு ஏற்படும் வகையில் பெற்றோர்கள் தானியங்களில் உணவுகளை தயார் செய்து கொண்டு வந்தனர். சிறந்த இயற்கை உணவுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
- விக்னேஷ் குடிபோதையில் வந்து மாணவிகளை கேலி செய்வது வழக்கம்.
- காயம் அடைந்த தலைமை ஆசிரியர் சேவியர் சந்திரசேகர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இதே போல பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் (வயது 17) என்பவர் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் அடிக்கடி குடிபோதையில் வந்து மாணவிகளை கேலி செய்வது வழக்கம். நேற்று காலையிலும் வழக்கம்போல் குடிபோதையில் வந்தார்.
இதனை தலைமை ஆசிரியர் சேவியர் சந்திரசேகர் கண்டித்தார். அப்போது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே சக ஆசிரியர்கள் மாணவனை கண்டித்து அனுப்பினர்.
நேற்று மாலை தலைமை ஆசிரியர் சேவியர் சந்திரசேகர் தனது அறையில் இருந்தார். அப்போது அங்கு வந்த மாணவர் விக்னேஷ் திடீர் என தலைமை ஆசிரியரை கண்மூடித்தனமாக தாக்கினார். இதில் அவருக்கு ரத்தம் கொட்டியது. இதில் காயம் அடைந்த தலைமை ஆசிரியர் சேவியர் சந்திரசேகர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் மாணவர் விக்னேசை பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.