search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 132908"

    கும்பகோணம் நகரில் இன்று ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நால்ரோடு அய்யப்பன் நகர் பகுதியில் ஒலைபட்டினம் வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்கால் பகுதிகளை ஒட்டி சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்தனர். இந்நிலையில் நீர் நிலை பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து வசித்து வரும் மக்களை அப்புறப்படுத்த ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இதனால் கும்பகோணம் நகராட்சி சார்பில் ஒலைபட்டினம் வாய்க்கால் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து வசித்து வரும் மக்களுக்கு உடனடியாக காலிசெய்ய எச்சரிக்கை விடப்பட்டது.

    இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நகராட்சி சார்பில் இந்த பகுதி மக்களுக்கு கொற்கை பகுதியில் பட்டாவுடன் வீட்டு மனை வழங்கப்பட்டது.

    இதையடுத்து கொற்கை பகுதியில் ஆக்கிரமிப்பு மக்கள் குடியேற வேண்டும் என்றும், ஒலைப்பட்டினம் வாய்க்கால் பகுதியை விட்டு வீடுகளை காலி செய்ய வேண்டும் என்றும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நகராட்சி சார்பில் முறைப்படி நோட்டீசு வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் கும்பகோணம் நகராட்சி ஆணையாளர் உமாமகேஸ்வரி, ஆர்.டி.ஓ. வீராசாமி, தாசில்தார் ஜானகிராமன், மற்றும் டி.எஸ்.பி. செங்கமல கண்ணன் மற்றும் போலீசார் நால்ரோடு ஒலைப்பட்டினம் வாய்க்கால் பகுதிக்கு வந்தனர்.

    பின்னர் அங்கு இருந்த மக்களிடம் வீடுகளை காலி செய்யுமாறு கூறினார். இதையடுத்து அங்கு வசித்தவர்கள் உடனடியாக தங்களது வீடுகளில் இருந்த டி.வி., கட்டில் மற்றும் பாத்திரங்கள் தளவாட சாமான்களை எடுத்து கொண்டு அவசர அவசரமாக வெளியேறினர்.

    இதையடுத்து நகராட்சி சார்பில் ஜெ.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    மாதவரத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட விநாயகர் கோவிலை பொக்லின் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    மாதவரம்:

    மாதவரம் பால்பண்ணை கேகே தாழை சிவபாலன் 1-வது தெருவில் சாலையை ஆக்கிரமித்து 400 சதுர அடியில் விநாயகர் கோயில் கட்டப்பட்டு பொதுமக்கள் சாமி கும்பிட்டு வந்தனர். இந்த கோவில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    இதனை அகற்றக்கோரி ஒருவர் சென்னைஉயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட் டிருந்த விநாயகர் கோவிலை அகற்ற நீதிமன்றம் சென்னை மாநகராட்சி மாதவரம் 3.வது மண்டல அதிகாரிக்கு உத்தரவிட்டனர்.

    இந்த உத்தரவின் பேரில் சென்னை மாநகராட்சி மாதவரம் 3-வது மண்டல அதிகாரி விஜயகுமார் தலைமையில் இன்று காலை மண்டல செயற்பொறியாளர் ராமமூர்த்தி உதவி செயற்பொறியாளர்கள் தேவேந்திரன், சதீஷ், கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் விநாயகர் சிலையை அகற்ற சென்றனர்.

    இதனை அறிந்த அப்பகுதி மக்கள், இந்து முன்னணியினர் கோவில் முன் திரண்டு கோயிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். மாதவரம் போலீஸ் உதவி கமி‌ஷனர் ராமலிங்கம் தலைமையில் பால்பண்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோவிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த இந்து முன்னணியினர் 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். பின்னர் மண்டல அதிகாரிகள் பொக்லின் இயந்திரம் மூலம் விநாயகர் கோவிலை இடித்தனர்.

    இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட இந்து முன்னணியினர் பால் பண்ணையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை அடையாறு மற்றும் கூவம் ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றாத தமிழக அரசுக்கு ரூ.2 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. #TNGovt #NationalGreenTribunal
    சென்னை:

    சென்னை அடையாறு, கூவம் ஆற்றிலும் பக்கிங்காம் கால்வாயிலும் ஏராளமான வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால் மழை காலங்களில் வெள்ள நீர் வீதிகளுக்கு வந்து விடுகிறது.

    இதனால் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும், தொழிற்சாலை கழிவுகளை கொட்டுவதை தடுக்க கோரியும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த வழக்கு நீதிபதி ஆகாஸ்குமார் கோயல் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது அடையார் கூவம் ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தமிழக அரசு மெத்தனமாக நடந்து கொள்வதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக தமிழக அரசின் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் அளித்துள்ள அறிக்கை தெளிவற்று உள்ளதாக நீதிபதிகள் கூறினர். இதில், பிரச்சனைகளை குறைப்பதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்காமல் இருப்பதையும் அறிய முடிகிறது என்று தெரிவித்தனர்.

    பருவமழை முன்னேற்பாடு பணிகளுக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.603 கோடி நிதியில் ரூ.80 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாகவும் அந்த தொகையில் கூட ஆற்றில் மிதக்கும் கழிவுகள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

    25,892 ஆக்கிரமிப்புகள் இன்னும் அகற்றப்படாததை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், வழக்குகள் இருப்பதால்தான் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தாமதம் ஏற்படுவதாக தமிழக அரசு கூறுவதை ஏற்க முடியாது என்றனர்.

    எனவே ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நேரடியாக பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிபடுத்த வேண்டும் என்று நீதிபதிகள் ஆணையிட்டனர்.

    இந்த விவகாரத்தில் மெத்தனமாக இருந்த தமிழக அரசுக்கு ரூ.2 கோடி அபராதம் விதித்த நீதிபதிகள் இந்த தொகையை பொதுப்பணித்துறை அடுத்த 15 நாட்களுக்குள் தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் கட்ட வேண்டும் என்று ஆணையிட்டனர். #TNGovt #NationalGreenTribunal
    பள்ளிக்கரணை அருகே உள்ள சித்தாலபாக்கம் பகுதியில் ஆக்கிரமித்து கட்டிய 10 கடைகள் மற்றும் ஒரு வீட்டை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
    சோழிங்கநல்லூர்:

    பள்ளிக்கரணை அருகே உள்ள சித்தாலபாக்கம் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து 10 கடைகள், வீடு கட்டப்பட்டு இருந்தது.

    இதனை அகற்ற ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிகாரிகள் ஏற்கனவே நோட்டீஸ் வழங்கினர். ஆனால் அவர்கள் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றவில்லை.

    இந்த நிலையில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற தாசில்தார் கல்யாணி தலைமையில் அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர்.

    அவர்கள் ஆக்கிரமித்து கட்டி இருந்த 10 கடைகள், ஒரு வீட்டை இடித்து அகற்றினர். பள்ளிக்கரணை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    கூடலூர் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து தேயிலை தோட்டம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த நிலத்தை வருவாய் துறையினர் மீட்டனர்.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்ட பழங்குடியினர் நலத்துறை மூலம் ஆதிவாசி மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆதிவாசி மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக முன்னேற்றம் பெறவும் கோழிப்பண்ணைகள் அமைக்கப்பட்டு வருகிறது. கூடலூர் தாலுகா பகுதியில் ஆதிவாசி மக்களுக்கு கோழிப்பண்ணை வைக்க இடம் தேர்வு செய்யும் பணியில் வருவாய் துறையினர் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் கூடலூர் அருகே செருமுள்ளி புழம்பட்டி பகுதியில் சுமார் 2 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது வருவாய் துறையினருக்கு தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் வருவாய் துறையினர் ஆய்வு நடத்தினர். அப்போது அரசு நிலத்தை ஆக்கிரமித்து தேயிலை தோட்டங்கள் அமைத்து இருந்தது உறுதி செய்யப்பட்டது.

    இதனால் அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற தாசில்தார் மகேந்திரன் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மண்டல துணை தாசில்தார் சித்தராஜ், வருவாய் ஆய்வாளர் செந்தில், கிராம நிர்வாக அலுவலர் ஸ்வேதா உள்ளிட்ட வருவாய் துறையினர் நேற்று செருமுள்ளி புழம்பட்டியில் அரசு நிலம் 1 ஏக்கர் அளவில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதற்காக அப்பகுதியில் பயிரிட்டு இருந்த தேயிலை செடிகளை வெட்டினர். பின்னர் மீட்கப்பட்ட 1 ஏக்கர் அரசு நிலத்தை பழங்குடியினர் நலத்துறை வசம் ஒப்படைத்தனர்.

    இது குறித்து வருவாய் துறையினர் கூறும்போது, ஆதிவாசி மக்களுக்கு கோழிப்பண்ணை வைக்க அரசு நிலம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. இதில் செருமுள்ளி புழம்பட்டி பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலம் 1 ஏக்கர் மட்டும் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது, என்றனர்.


    ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் கலெக்டர் வீரராகவராவ் அதிரடி சோதனை மேற்கொண்டு ஆக்கிரமிப்பு கடைகளுக்கு அபராதம் விதித்து எச்சரித்தார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேற்று காலை புதிய பஸ் நிலையத்திற்கு திடீரென சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். புதிய பஸ் நிலைய பகுதியில் நகரசபை நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகள், சுகாதார மேம்பாடு, ஆக்கிரமிப்புகள் அகற்றம் போன்ற பணிகளை ஆய்வு செய்தார். பஸ் நிலைய பகுதிகளில் முழுமையாக ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் மாடி பகுதிக்கு சென்று கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டார். பஸ் நிலைய பகுதியில் பொதுமக்கள் நிற்க கூட முடியாத அளவிற்கு கடைக்காரர்கள் ஆக்கிரமித்து வைத்திருந்ததை கண்ட கலெக்டர் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

    மேலும், பாலூட்டும் தாய்மார்கள் அறையை மறைத்து அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த பழக்கடைகளை அகற்றவும் உத்தரவிட்டார். மக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த கடைகளில் இருந்து பழங்கள், பேக்கரி உணவுகள் போன்றவற்றை நகரசபை வண்டிகளில் அள்ளி அப்புறப்படுத்துவதற்கு பதிலாக பயனுள்ள வகையில் அப்பகுதியில் இருந்த பொதுமக்களுக்கு இலவசமாக அள்ளிக்கொடுத்தார். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதன்பின்னர் அங்கிருந்து வேறு பகுதிகளுக்கு சென்ற கலெக்டர் திரும்பி வந்து பார்த்தபோது மீண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் வைத்திருந்ததை கண்டு ஆத்திரமடைந்த அவர் நகராட்சி குப்பை வண்டிகளை வரவழைத்து ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அள்ளிச்செல்ல உத்தரவிட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த முறை ஆய்வின்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டிருந்த போதும் மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததாலும், தொடர் புகார்கள் வந்திருந்ததாலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியிருந்த கடைக்காரர்களுக்கு தலா ரூ.1000 வீதம் 10 கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    அதன்பிறகு கலெக்டர் வீரராகவராவ் கூறியதவாது:- ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம், மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய டெங்கு, மலேரியா போன்ற வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி என அனைத்து உள்ளாட்சி அமைப்புகள் சார்ந்த அலுவலர்கள் மூலமாக அந்தந்த பகுதிகளில் மழைநீர் தேங்காமல் சுத்தமாக பராமரித்து சுற்றுப்புற தூய்மை பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.

    ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் தொடர் புகார்கள் வந்ததன் அடிப்படையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய கால அவகாசம் வழங்கப்பட்டது. இருப்பினும் சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமைதாரர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய நிலையிலேயே இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் நகரசபை நிர்வாகத்தின் மூலம் தலா ரூ.1000 வீதம் 10 கடைகளுக்கு மொத்தம் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் நகரசபை அதிகாரிகள் கவனமாக கண்டிப்புடன் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

    தொடர்ந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும். அடுத்தமுறை ஆய்வின்போது ஆக்கிரமிப்பு கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடைக்காரர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு மறு டெண்டர் விடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது நகரசபை துப்புரவு ஆய்வாளர் இளங்கோவன் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர். 
    ராவல் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள பிரதமர் இம்ரான் கான் வீடு மீது தலைநகர் வளர்ச்சி ஆணையம் முதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Imrankhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் புறநகர் பானிகாலா பகுதியில் ராவல் ஏரி உள்ளது. அதை ஆக்கிரமித்து வசதி படைத்தவர்கள் ஆடம்பர மாளிகைகள் கட்டியுள்ளனர்.

    இதனால் ராவல் ஏரி மாசு அடைந்துள்ளது. எனவே பானிகாலா பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மாளிகைகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இதில் விசே‌ஷம் என்னவென்றால் இப்பகுதியில் பிரதமர் இம்ரான்கானின் 5 படுக்கை அறைகள் கொண்ட ஆடம்பர மாளிகையும் உள்ளது. அது சரிவர திட்டமிடாமலும், ஆக்கிரமித்தும் கட்டப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

    இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி சாகிப் நிஷார் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள பிரதமர் இம்ரான் கான் வீடு மீது தலைநகர் வளர்ச்சி ஆணையம் முதல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமித்து கட்டிய குற்றத்துக்காக இம்ரான்கான் உரிய அபராத தொகையை செலுத்த வேண்டும்.

    அதன்பின்னர் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மற்ற வீடுகள் மீது நடவடிக்கையை தொடங்க வேண்டும் என தலைமை நீதிபதிகள் நிஷார் உத்தரவிட்டார். அதற்கு பதில் அளித்த இம்ரான் கான் வக்கீல் பாபர் அவான் தலைநகர் வளர்ச்சி ஆணையத்தின் நடவடிக்கைக்கு இம்ரான் கான் ஒத்துழைப்பார் என உறுதி அளித்தார். #Imrankhan
    சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு செய்துள்ள கட்டிடங்களுக்கு விரைவில் சீல் வைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இன்னும் ஒரு வாரத்துக்குள் இந்த பணி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். #SastraUniversity
    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த திருமலை சமுத்திரத்தில் சாஸ்திரா நிகர்நிலை பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகம், அரசு நிலம் 58 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டதாக புகார்கள் எழுந்தது.

    அதாவது திறந்தவெளி சிறைச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்ட அரசு நிலத்தில் 28 கட்டிடங்கள் கட்டியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த நிலையில் சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்க கோரி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்த நிலையில் சாஸ்திரா ஆக்கிரமிப்பு வழக்கு ஐகோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அக்டோபர் 3-ந் தேதிக்குள் அங்குள்ள கட்டிடங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். தமிழக சிறைத்துறை நிர்வாகம் அந்த இடத்தில் வேலி அமைத்து 24 மணி நேர பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

    இந்த உத்தரவை எதிர்த்து சாஸ்திரா பல்கலைக்கழகம் சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் வகுப்பறைகள், ஆய்வக கட்டிடங்கள், மாணவிகள் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த நிலத்தை எங்களுக்கே அளிக்க வேண்டும். அதற்கான அரசு நிர்ணயித்த தொகையை செலுத்த தயாராக உள்ளோம். திறந்தவெளி சிறைச்சாலையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. மேலும் அரசிடம் அணுகி பரிகாரம் தேடி கொள்ளலாம் என்று நீதிபதி தெரிவித்தார்.

    இந்த நிலையில் ஐகோர்ட்டு அளித்த காலக்கெடுவுக்குள் (அக்டோபர் 3-ந் தேதி) கட்டிடங்களை காலி செய்ய தஞ்சாவூர் தாசில்தார் சாஸ்திரா நிர்வாகத்துக்கு நோட்டீஸ் வழங்கினர்.

    இதையடுத்து நோட்டீசு பெற்றுக்கொண்ட பல்கலைக் கழக நிர்வாகத்தினர், அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ள 3 மாணவிகள் விடுதிகளில் 2500 மாணவிகள் தங்கி படித்துள்ளனர். இதனால் தற்போது இடத்தை காலி செய்ய இயலவில்லை என்ற காரணத்தை தெரிவித்தனர். மேலும் மற்ற கட்டிடங்களை ஒப்படைக்க தயாராக இருப்பதாக தெரிவித்தனர். மேலும் திறந்தவெளி சிறையை வேறு இடத்துக்கு மாற்றி விட்டு அந்த இடத்தை தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.

    இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய்த் துறை மற்றும் நில அளவைத்துறை அலுவலர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை அளவீடு செய்தனர்.

    இதனால் சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு செய்துள்ள கட்டிடங்களுக்கு விரைவில் சீல் வைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இன்னும் ஒரு வாரத்துக்குள் இந்த பணி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். #SastraUniversity
    பழனி அருகே எரமநாயக்கன்பட்டியில் உள்ள பட்டிகுளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி விவசாயிகள் போராட்டம் செய்ய போவதாக அறிவித்துள்ளனர்.
    பழனி:

    பழனி அருகே உள்ள எரமநாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்ட பகுதியில் பட்டிகுளம் உள்ளது. இக்குளம் சுமார் 60 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இக்குளத்தின் மூலம் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும், இக்குளத்தில் உள்ள நீரின் மூலம் எரமநாயக்கன்பட்டி, கணக்கன்பட்டி, பச்சள நாயக்கன்பட்டி, பொட்டம் பட்டி, ராசாபுரம்புதூர் உள்ளிட்ட கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன. இக்கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் இக்குளத்தில் உள்ள நீரின் அளவை பொறுத்ததே ஆகும்.

    குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கு அடிப்படையாக விளங்கும் இக்குளத்தின் நீர்பிடிப்பு பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவு நிலம் தற்போது ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். நேற்று பட்டிகுளம் பாசன விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் இக்குளத்தின் மேல் ஏறிநின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்

    இது குறித்து உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து கூறியதாவது, பட்டிகுளம் 6 கிராமங்களின் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்திற்கு அடிப்படையானது. இக்குளத்தின் நீர்பிடிப்பு பகுதி நாளுக்குநாள் ஆக்கிரமிப்பில் சிக்கி வருகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. குடிநீருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை ஒன்றுதிரட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    வாரச்சந்தை பஸ் நிலையம் வரை ஆக்கிர மிக்கப்பட்டுள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதைத் தவிர்க்க வாரச்சந்தையை இடம் மாற்ற வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சாயல்குடி, செப். 15-

    சாயல்குடியில் வாரச்சந்தை ஒவ்வொரு சனிக் கிழமையும் நடைபெற்று வருகிறது. சாயல்குடி பஸ் நிலையத்திற்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் இடையே சந்தை நடை பெற்று வருகிறது.

    வளர்ந்து வரும் நகரமான சாயல்குடியில் வாரச் சந்தையில் அதிகமான வாடிக்கையாளர்கள் கூடுவதாலும், மிக அதிகமாக வெளியூர் வியாபாரிகள் கடை அமைப்பதாலும் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் கருதி சாயல்குடி பேரூராட்சி நிர்வாகத்தினர் குடிநீர் வடிகால் வாரியத்திற்கும் சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும் இடையே வாரச் சந்தைக்காக இடம் ஒதுக்கி தீர்மானம் இயற்றினர். எனினும் இத்தீர்மானம் ஏட்டளவிலேயே உள்ளது.

    அங்கு பேரூராட்சி நிர்வாகத்தினரால் அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டும் வாரச்சந்தையை மாற்ற வியாபாரிகள் மறுத்து சாயல்குடி பேருந்து நிலையம் அருகிலேயே வாரச் சந்தையை இயக்கி வருகின்றனர்.

    இங்கு போதுமான இடவசதி இல்லாததால் பஸ்கள் நிற்கும் இடம் வரை கடைகளை பரப்பி வைக்கின்றனர்.

    பஸ்கள் முன்பின் இயக்கும் பொழுது விபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும் அருகாமையிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் சாலையையும் ஆக்கிரமித்து வாரச்சந்தை கடையை விரித்து வியாபாரம் செய்கின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு சாயல்குடியில் வாரச்சந்தை அமைவிடத்தை மாற்றிய மைத்து விபத்து அபாயத்தை தவிர்க்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.

    முருங்கப்பாக்கத்தில் பொதுஇடத்தை ஆக்கிரமிப்பு செய்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கர்ப்பிணி பெண் தாக்கப்பட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை முருங்கப்பாக்கம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது33). வீட்டிலேயே ஊதுபத்தி தயாரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த ராமலிங்கம். வீட்டுக்கும் இடையே பொதுஇடம் இருந்தது. இதனை இருவரும் பயன்படுத்தி வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த இடத்தை முழுவதையும் ஆக்கிரமித்து ராமலிங்கம் கர்ஷெட் அமைத்தார். இதனை வெங்கடேசன் தட்டிக்கேட்ட போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் நேற்று ராமலிங்கம் அமைத்திருந்த கார்ஷெட் மீது யாரோ கல்வீசி எறிந்ததாக கூறப்படுகிறது. இதனை வெங்கடேசன்தான் செய்ததாக கருதி ராமலிங்கமும், அவரது மருமகனும் சேர்ந்து வெங்கடேசனை தாக்கினர். இதனை தடுக்க முயன்ற வெங்கடேசனின் கர்ப்பிணி மனைவியான லதாவையும் அவர்கள் தாக்கி ஆடைகளை கிழித்து மானபங்கம் செய்தனர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த லதா ராஜீவ்காந்தி அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்து வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சிவகங்கையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வர்த்தகர்கள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை நகரின் முக்கிய வர்த்தக வீதியான நேருபஜார் பகுதியில் ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் இருந்தது. இதனால் ஆக்கிரமிப்புகளை வர்த்தகர்கள் முன்வந்து உடனடியாக அகற்ற வேண்டும், இல்லையென்றால் அதிகாரிகள் அகற்றுவார்கள் என்று நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. பின்னர் கடந்த 28-ந்தேதி நேருபஜாரில் கடைகளின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினார்கள். அப்போது அதிகாரிகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றும் செயலுக்கு அந்த பகுதி வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உரிய அவகாசம் தராமல் திடீரென்று அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் அந்த வீதியில் இருந்த ஆக்கிரமிப்பு முழுவதையும் அதிகாரிகள் அகற்றினர். மேலும் நகரின் மற்ற பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்தநிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சிவகங்கை வர்த்தகர்கள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனையொட்டி நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் அவதியுற்றனர்.

    மேலும் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் சிவகங்கை அரண்மனை வாசலில், சங்க தலைவர் அறிவுதிலகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் கந்தசாமி, மதி, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பைசல், அ.ம.மு.க. நகர செயலாளர் அன்புமணி, காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் சண்முகராஜன், தி.மு.க. சார்பில் அயூப்கான், ஜெயகாந்தன், வர்த்தகர் சங்க செயலாளர் வடிவேல், பொருளாளர் சுகர்னொ, துணைத்தலைவர் முகமது இலியாஸ், முன்னாள் நகர் மன்ற தலைவர் அர்ச்சுனன், த.மா.கா. நகரச் செயலாளர் செல்வரங்கன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் துணைச் செயலாளர் வெள்ளையப்பன் நன்றி கூறினார்.
    ×