என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விலை உயர்வு"

    • பால் விலை உயர்வு மே-1ந்தேதியான இன்று முதல் அமலுக்கு வருகிறது.
    • புதிய அறிவிப்பு இந்தியாவில் உள்ள அனைத்து மார்க்கெட்களில் விற்பனை செய்யப்படும் அமுல் பாலுக்கு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் பிரபல பால் பிராண்ட்டாக திகழும் அமுல் தனது பால் விலையை உயர்த்தியுள்ளது.

    அமுல் நிறுவனம் தனது பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வு மே-1ந்தேதியான இன்று முதல் அமலுக்கு வருகிறது.

    அமுல் நிறுவனம் அமுல் ஸ்டான்ர்டு பால், அமுல் கோல்டு பால், அமுல் டாஸா, அமுல் சிலிம் அண்டு டிரிம், அமுல் பசும்பால், அமுல் எருமைப்பால் உள்ளிட்ட பாலின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி உள்ளது.

    இந்த புதிய அறிவிப்பு இந்தியாவில் உள்ள அனைத்து மார்க்கெட்களில் விற்பனை செய்யப்படும் அமுல் பாலுக்கு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடைசியாக ஜூன் 2024-ல் அமுல் பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • கேஸ் விலையை உயர்த்தி அடித்தட்டு மக்களில் தலையில் இடியை இறக்கியுள்ளது ஒன்றிய பாஜக அரசு.
    • வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் ஏழை, எளிய மக்களின் துயரத்தை கண்டுகொள்வதே இல்லை.

    வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தி பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார்.

    இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த 2014ம் ஆண்டு முதல், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் 410 ரூபாயில் இருந்து தொடர்ந்து உயர்ந்து கொண்டே போய் தற்போது ரூ 820 என்ற அளவில் உயர்ந்துள்ளது.

    தினசரி பயன்படுத்தும் அத்தியாவசிய தேவையான காஸ் சிலிண்டர் விலையை இன்று ரூபாய் 50 என்ற அளவில் உயர்த்தி அடித்தட்டு மக்களில் தலையில் இடியை இறக்கியுள்ளது ஒன்றிய பாஜக அரசு.

    மேலும், வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் ஏழை, எளிய மக்களின் துயரத்தை கண்டுகொள்வதே இல்லை. நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து வரும் சூழலில், காஸ் சிலிண்டர் விலையையும் ஒன்றிய பாஜக அரசு உயர்த்தியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சாதாரண மக்களின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையில் மருந்துகளின் விலை அதிகரித்து வருகிறது.
    • கடந்த 5 ஆண்டில் 800-க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி எம்.பி.யான விஜய் வசந்த் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

    அதிகரித்து வருகின்ற அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளின் விலையினைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை வேண்டும் எனவும், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளேன்.

    சாதாரண மக்களின் அன்றாட பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையில் அத்தியாவசிய மருந்துகளின் விலை அதிகரித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 800-க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

    உயிர் காக்கும் மருந்துகளின் விலையும் கடந்த ஆண்டுகளில் மிகவும் அதிகரித்துள்ளது. புற்றுநோய்க்கான மருந்துகள் கடந்த 5 ஆண்டுகளில் 50 சதவீதம், நீரிழிவு நோய்க்கான மருந்துகள் கடந்த 3 ஆண்டுகளில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

    ஜெனரிக் மருந்துகள் நகர் மற்றும் கிராமப்புற மக்களைச் சென்றடைவதில் பல தடைகள் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு மருந்து நிறுவனங்களைக் கட்டுப்படுத்த தவறிய அரசின் செயல்கள் இந்த விலை உயர்வுக்கு ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது.

    உள்நாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் போதிய மருந்துகளைத் தயாரித்து விநியோகம் செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களும் ஒரு முக்கிய காரணமாகும்.

    ஆகவே மத்திய அரசு உடனடியாக தலையிட்டு புற்றுநோய், நீரிழிவு நோய், இதய நோய் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தும் அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகளின் விலையினைக் குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். உள்நாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களை ஊக்குவித்து அத்தியாவசிய மருந்துகளை இந்தியாவிலே தயாரிப்பதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களின் விலையுயர்ந்த மருந்துகளுக்கு மாற்றாக அமையும்.

    மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்வதைத் தடுக்க கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும்.

    ஜெனரிக் மருத்துகள் இந்தியாவின் அனைத்து கிராமங்களிலும் கிடைக்க வழிவகை செய்யவேண்டும். விலை நிர்ணயம் செய்வதின் காரணங்களை மக்களுக்கு எடுத்துக் கூறுவதன் மூலம் மக்களும் விழிப்படைவார்கள். இதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • நிறைகொழுப்பு பாலின் விற்பனை விலை லிட்டர் 80 ரூபாய் என்கிற இமாலய இலக்கை தொட்டிருக்கிறது.
    • தேனீர், காபி மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக உயரும்.

    தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க மாநில தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தனியார் பால் நிறுவனங்களின் பால் மற்றும் தயிரின் விற்பனை விலை உயர்வு அமலுக்கு வந்து ஒரு மாதமே ஆகும் நிலையில் தென்னிந்தியாவின் முன்னணி தனியார் பால் நிறுவனமான ஹட்சன் நிறுவனம் இன்று (13-ந் தேதி) இரவு முதல், நாளை (வெள்ளிக்கிழமை) காலை முதல் ஆரோக்யா பாலுக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 4 ரூபாயும், தயிருக்கான விற்பனை விலையை கிலோவுக்கு 3 ரூபாய் வரையிலும் உயர்த்துவதாக பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை வழங்கியுள்ளது.

    அதன்படி நிறைகொழுப்பு பால் 500 மிலி 38 ரூபாயில் இருந்து 40.00ரூபாயாகவும், ஒரு லிட்டர் 71.00ரூபாயில் இருந்து 75 ரூபாயாகவும், மற்றொரு வகை ஒரு லிட்டர் 78 ரூபாயில் இருந்து 82 ரூபாயாகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் 500 மிலி 33 ரூபாயில் இருந்து 34 ரூபாயாகவும், 1 லிட்டர் 63 ரூபாயில் இருந்து 65 ரூபாயாகவும், தயிர் 400 கிராம் 32 ரூபாயில் இருந்து 33 ரூபாயாகவும் உயர்கிறது.

    இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு அதிகளவில் பயன்படுத்தப்படும் நிறைகொழுப்பு பாலின் விற்பனை விலை லிட்டர் 80 ரூபாய் என்கிற இமாலய இலக்கை தொட்டிருக்கிறது.

    ஒரு மாத இடைவெளியில் இரண்டாவது முறையாக பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர்த்தும் ஹட்சன் நிறுவனத்தின் தன்னிச்சையான விற்பனை விலை உயர்வு அறிவிப்பிற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு இந்த விற்பனை விலை உயர்வு அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறது.

    ஏனெனில் உணவகங்கள், தேனீர் கடைகள் மற்றும் தனியார் அலுவலக கேண்டீன்கள் அனைத்தும் ஹட்சன் போன்ற முன்னணி தனியார் நிறுவனங்களின் பாலினை பயன்படுத்தி வருவதால் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்வதால் தேனீர், காபி மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக உயரும்.

    இதனால் மாதாந்திர ஊதியம் பெறும் பணியாளர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் என பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

    மேலும் கோடை காலம் தொடங்கவிருக்கும் தற்போதைய சூழலில் தமிழ்நாடு முழுவதும் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் பால் உற்பத்தி சற்றே சரிவடையத் தொடங்கி இருந்தாலும் கூட பால் கொள்முதல் விலையிலோ அல்லது மூலப்பொருட்கள் விலையிலோ எந்தவிதமான உயர்வோ அல்லது மாற்றங்களோ இல்லாத இந்த காலகட்டத்தில் ஹட்சன் நிறுவனத்தின் இந்த தன்னிச்சையான பால் விற்பனை விலை உயர்வானது பிற தனியார் பால் நிறுவனங்களின் பால் மற்றும் தயிர் விற்பனை விலை உயர்வுக்கும் வழி வகுக்கும் என்பதால் இந்த விற்பனை விலை உயர்வு அறிவிப்பை ஹட்சன் நிறுவனம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

    • சி.ஐ.டி.யூ. மாநில தலைவர் சவுந்தரராஜன் பேட்டி
    • நாகராஜா திடலில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    கன்னியாகுமரி:

    சி.ஐ.டி.யூ. மாநில தலைவர் சவுந்தரராஜன் கன்னியாகுமரியில் நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதா வது:-

    சி.ஐ.டி.யூ. மாநாடு நடைபெறுவதையொட்டி நாகர்கோவிலில் இன்று மாலை ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் செஞ்சட்டை பேரணி நடைபெறுகிறது. வெட்டூர்ணிமடத்தில் இருந்து தொடங்கும் இந்த பேரணி நாகர்கோவில் நாகராஜா திடலை சென்றடைகிறது. பின்னர் நாகராஜா திடலில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    கன்னியாகுமரியில் நடைபெற்ற சி.ஐ.டி.யூ.வின் 15-வது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் மத்திய அரசு நமது சமூகத்தில்அமைதியையும்பொருளாதாரத்தையும் அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறது. பல தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன.

    குறிப்பாக சிறு தொழிற்சாலைகள் அதிக அளவில் மூடப்படுகின்றன. நமது பண மதிப்பு வீழ்ந்து கொண்டே இருக்கிறது. அன்னிய செலாவணி வீழ்ச்சி அடைகிறது. இவையெல்லாம் மிக மோசமான அறிகுறி. இலங்கையில் இருந்த அறிகுறி கள் இப்போது இந்தியாவில் இருப்பது தெளிவாக தெரிகிறது. இது அபாயகரமானது என்று மத்தியஅரசை எச்சரிக்கிறோம். மத்திய அரசாங்கம் தன்னுடைய கொள்கைகளில் உடனடி யாக மாற்றம் செய்ய வேண் டும் என்று வலியுறுத்து கிறோம்.

    நவீன தொழிற்சாலை களில் செயற்கை மூளை, ரோபோக்கள் ஆகியவற்றை பயன்படுத்துவது அதிகரித்த காரணத்தினால் இருக்கிற வேலையும் பறிபோகிறது. உண்மைகளை மறைக்க கடுமையாக பொய் சொல்கி றார்கள். ஏன் ரூபாய் மதிப்பு குறைந்துவிட்டது என்று கேட்டால் ரூபாய் மதிப்பு குறையவில்லை டாலர் மதிப்பு கூடி விட்டது என்று நிர்மலா சீத்தாராமன் கூறுவதுபோல ஏராளமாக கூறுகிறார்கள்.

    மாநில அரசுக்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைக்க வில்லை. கல்வியில், சுகா தாரத்தில் என எல்லா வற்றிலும் தலையிடுகிறார் கள். அதே நேரத்தில் அவர்கள் மக்கள் மத்தியில் சாதி, மதம், மொழியைச் சொல்லி மடைமாற்றம் செய்கிறார்கள். தமிழ்நாட் டில் இந்தி திணிப்பு, அதை யொட்டி இங்கு எழும் எதிர்ப்பு இந்த பிரச்சனைகள் தான் விவாதத்துக்கு வர வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி விரும்புகிறது.

    மத்திய அரசு நமக்கு தரவேண்டிய பணத்தை தராமல் இருப்பது போன்ற வை விவாதத்துக்கு வரக்கூ டாது என்று நினைக்கி றார்கள். அதற்கு ஏற்ப பல்வேறு சதிகளை செய்கி றார்கள். கேரளத்திலும் இதை தான் செய்கிறார்கள். இது ஒருபக்கம் என்றால் தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் தேர்தல் அறிக் கையில் ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்தி ருந்தார்கள்.

    அந்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேறவில்லை.அரசாங்கத்தின் செயல் எங்களுக்கு திருப்தி அளிக்க விலலை என தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம். போக்கு வரத்தில் கடந்த ஆட்சியிலிருந்து இதுவரை 85 மாதங்களாக பஞ்சப்படி பாக்கி வைக்கப்பட்டுள்ளது. அதை கொடுப்போம் என்று சொன்னார்கள் அதை கொடுக்கவில்லை.

    பழைய ஓய்வூதியம் ஆட்சிக்கு வந்தால் கொடுப்போம் என்றார்கள். ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் கொடுத்து விட்டார்கள். 10 ஆண்டுகளாக ஒப்பந்த முறையில் ஒரு தொழிலாளி அரசுத்துறையில் பணி யாற்றி இருந்தால் நிரந்தப்ப டுத்துவதாக சொன் னார்கள் செய்யவில்லை. அங்கன்வாடி சத்துணவு பணியாளர்களை கால முறை ஊதியத்துக்கு கொண்டு வருவோம் என்று சொன்னார்கள் செய்ய வில்லை.

    தொழிற்சங்கம் அமைக் கும் உரிமையே கேள்விக் குள்ளாகிறது. இதுபோன்ற பிரச்சனைகளில் அர சாங்கம் தலையிட்டு முடி வுக்கு கொண்டு வர வேண்டும். தொழிலாளி கள் அவர்க ளது உரி மையை அனுபவிக்க அனுமதிக்க வேண்டும். அதைக் கெடுக்க முத லாளிகள் முற்பட்டால் அதில் அரசாங்கம் தலை யிட வேண்டும் என்பது எங்களது ஒரு கோரிக்கை.

    மின்சார கட்டணம், பால் விலை உயர்த்தப்பட்டதை நாங்கள் கடுமையாக ஆட்சேபிக்கிறோம். சொத்து மதிப்புகள் அவர் கள் போட்டிருக்கும் வரி மிகவும் மோசமானது. சென்னை போன்ற நகரங் களில் தண்ணீர் கட்ட ணத்தை கடுமையாக உயர்த்தியிருக்கிறார்கள். இவையெல்லாம் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது என்பதை மாநில அரசு புரிந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் நீட், மொழி, மாநில உரிமை போன்றவற்றில் மத்திய அரசு நடவடிக்கைக்கு எதிரான மாநில அரசின் நிலைபப்பாட்டுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்.

    மின்சார சட்டம் 2003-இன் படி கட்டணத்தை உயர்த்தாவிட்டால் கடன்தர மாட்டேன் என்று மத்திய அரசு கட்டாயப்படுத்துகிறது என்கிறார்கள். பல விசயங் கில் அப்படி கட்டாயப்ப டுத்துவார்கள் அது மக்க ளை பாதிக்குமா இல்லையா என்பதிலிருந்து மாநில அரசு முடிவு செய்ய வேண்டும். கட்டண உயர்வு அவசிய மற்றது செய்திருக்க கூடாது.

    அரசாங்கம் இதற்கு வேறு வழிகளை தேட வேண்டுமே தவிர மக்களிட மிருந்து வசூலிக்க கூடாது. உயர்வு கடுமையாகவும் இருக்கிறது. சொத்து வரி 150 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. ரூ.4 ஆயிரத்திற்கு பதிலாக இப்போது ரூ.27 ஆயிரம் கட்ட வேண்டும். ஆகவே இந்த பிரச்சனையில் அர சாங்கம் சற்று கனிவொடு பரிசீலிக்க வேண்டும். ஏழை மக்களை பாதிப்பிலிருந்து விடுவிக்கிற அளவுக்கு நிர்ணயிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஏழை மக்களை பாதிக்கும் பால் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு தென்னிந்திய பார்வர்டு பிளாக் வலியுறுத்தல் விடுத்துள்ளனர்.
    • இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கோரி தமிழகம் தழுவிய அறப்போராட்டத்தை தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி விரைவில் நடத்தும்.

    அவனியாபுரம்

    தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் கே.சி.திருமாறன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு ஆவின் பால் விலையை உயர்த்தி இருப்பது ஏழை, எளிய மக்களை கடுமையாக பாதிக்கிறது. இதனால் விலைவாசி உயர்வு ஏறும் நிலை ஏற்படுகிறது.

    ஏற்கனவே மின்சார கட்டண உயர்வு கடுமையாக பாதிக்கும் வேளையில் பால் விலை உயர்வும் மக்களை வறுமை சூழ்நிலைக்கு கொண்டு செல்லும். எனவே தமிழக அரசு உடனே போர்க்கால நடவடிக்கையாக பால் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

    தி.மு.க. அரசின் தேர்தல் அறிக்கையான குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ. ஆயிரம் தருவதாக கூறி இன்று வரை அதை தராமல் குடும்பத் தலைவிகளை ஏமாற்றியதை கண்டித்தும், பெண்களுக்கு கட்டணமில்லா பஸ் என்று கூறி சாதாரண கட்டண பஸ்களின் எண்ணிக்கையை குறைத்ததை கண்டித்தும், எளிய மக்களை பாதிக்கும் வகையில் வீட்டு வரி கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும், பத்திரப்பதிவு துறையில் உள்ள முறைகேடுகளை களையவும், தற்போது நடைமுறையில் உள்ள பத்திரப்பதிவின் கடினமான முறையை மாற்றி ரியல் எஸ்டேட் தொழிலை நம்பி வாழும் 1 கோடி நடுநிலையாளர்களை வாழ்வை பயன்பெறும் வகையில் பத்திரப்பதிவில் உள்ள நடைமுறை சிக்கல்களை எளிமை யாக்க வேண்டும் என்று பத்திரப்பதிவு துறை அமைச்சரை வலியுறுத்துகிறோம்.

    அன்றாடும் சாமானிய மக்களை பாதிக்கும் போக்குவரத்து துறையின் அபராத கட்டண உயர்வால் இந்த சட்டம் அமலுக்கு வந்த நாள் முதல் பல இடங்களில் பொது மக்களுக்கும், போக்கு வரத்து காவல்துறைக்கும் பிரச்சினை ஏற்பட்டு மக்கள் மற்றும் காவல் துறையில் இடையே முரண்பாடு ஏற்படுகிறது.

    இந்த முரண்பாடுகளை களைவதற்கு இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கோரி தமிழகம் தழுவிய அறப்போராட்டத்தை தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி விரைவில் நடத்தும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 61890 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • ஒரு ஹெக்டேரில் ஆண்டுக்கு 8336 தேங்காய் உற்பத்தியாகிறது.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தை பொறுத்தவரை 61890 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இதன் மூலம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தேங்காய் வெட்டப்பட்டு சந்தைகளுக்கும், கொப்பரையாகவும் பருப்பாக மாற்றப்பட்டு வியாபாரிகள் மற்றும் ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் மூலம் எண்ணெய் உற்பத்திக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் ஒரு ஹெக்டேரில் ஆண்டுக்கு 8336 தேங்காய் உற்பத்தியாகிறது. இது மற்ற மாவட்டங்களை காட்டிலும் சற்று குறைவான உற்பத்தியாக உள்ளது.

    திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட தேங்காய் உலர்களங்கள் உள்ளன. மேலும் 50க்கும் மேற்பட்ட எண்ணெய் ஆலைகள் மூலம் எண்ணெய் பிழியப் பட்டு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா மற்றும் வட மாநிலங்கள் பலவற்றுக்கும் டேங்கர் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்நிலையில் வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ.49 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை நடைபெற்றது. வெள்ளக்கோவில், லாலாபோட்டை, வாணியம்பாடி, முத்தம்பட்டி, திருச்சி, கரூர், வாகரை, தேவத்தூர் பகுதி விவசாயிகள் 140 பேர், 64 ஆயிரம் கிலோ எடை கொண்ட 1264 தேங்காய் பருப்பு மூட்டைகளை, வெள்ளகோவில் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

    விற்பனைக்கூட கண்காணிப்பாளர் முன்னிலையில் முத்தூர், வெள்ள கோவில், காங்கேயம், ஊத்துக்குளி பகுதி எண்ணெய் ஆலை உரிமையாளர்கள் 19 பேர் ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் தரமான முதல் தர பருப்பு கடந்த மாதத்தை காட்டிலும் ரூ.6 அதிகரித்து அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.86.40 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் ரூ.4 அதிகரித்து ஒரு கிலோ ரூ.60.80 ரூபாய்க்கும் ஏலம் நடைபெற்றது. மொத்தம் ரூ.49 லட்சது 11 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.

    தற்போது முகூர்த்த தினங்கள் வரவுள்ள நிலையில் தேங்காய் விலையும் தேங்காய் பருப்பு விலையும் கடகடவென சரிந்து வந்த நிலையில், இந்த வாரம் சற்றே விவசாயிகள் நிம்மதி அடையும் வகையில் விலை உயர்ந்துள்ளது. மேலும் எண்ணெய் விலைகளும் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் குண்டு மல்லிகை, முல்லைப்பூ, அரளி, சம்பங்கி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • இந்த நிலையில் கார்த்திகை மாதத்தில் பனிப் பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தி குறைந்துள்ளது.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் குண்டு மல்லிகை, முல்லைப்பூ, அரளி, சம்பங்கி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.

    இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர்.வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை ரூ.700-க்கும்,சம்பங்கி கிலோ ரூ.60-க்கும், அரளி கிலோ ரூ.150-க்கும், ரோஜா கிலோ ரூ.160-க்கும், முல்லைப் பூ ரூ.600-க்கும், செவ்வந்திப்பூ ரூ.100-க்கும், கனகாம்பரம் ரூ.600-க்கும் ஏலம் போனது.

    இந்த நிலையில் கார்த்திகை மாதத்தில் பனிப் பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தி குறைந்துள்ளது.இதனால் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏல‌த்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ.1200-க்கும், சம்பங்கி கிலோ ரூ100- க்கும், அரளி கிலோ ரூ.200- க்கும், ரோஜா கிலோ ரூ.200- முல்லைப் பூ கிலோ ரூ.900-க்கும், செவ்வந்திப்பூ ரூ.160- க்கும், கனகாம்பரம் ரூ.1200-க்கும் ஏலம் போனது. இந்த விலை உயர்வால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • ஆயிரம் ஏக்கரில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
    • கிழங்கு மில் ஆலைகளில் ஜவ்வரிசி மாவு தயாரித்து வெளி மாவட்டம், மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பு கின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கரில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இதில் குறிப்பாக முள்ளுவாடி, தாய்லாந்து, வருஷ வெள்ளை, 226 வெள்ளை, பர்மா குங்கும ரோஸ் உள்பட பல்வேறு ரகங்களில் அதிக அளவில் மரவள்ளி பயிரிட்டுள்ளனர். இங்கிருந்து வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்து புதுச்சத்திரம், செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, நாமகிரிப்பேட்டை, ஆத்தூர், மலைவேப்பன்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் சேகோ பேக்டரிகளுக்கு விற்பனை செய்கின்றனர்.

    கிழங்கு மில் ஆலைகளில் ஜவ்வரிசி மாவு தயாரித்து வெளி மாவட்டம், மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பு கின்றனர். ஆலை உரிமையாளர்கள் மரவள்ளி கிழங்கில் உள்ள மாவுச்சத்து புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்கின்றனர்.

    அதன்படி கடந்த சில நாட்களாக மரவள்ளி கிழங்கு டன் ஒன்று ரூ.7 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது டன்னுக்கு ரூ.1000 அதிகரித்து, ரூ.8 ஆயிரம் வரை விற்பனை ஆகிறது. சிப்ஸ் தயாரிக்கும் தொழிலுக்கு மரவள்ளி கிழங்கு ஒரு டன் ரூ.8,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மரவள்ளி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ள னர். இனிவரும் நாட்களில் மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • திருப்பத்தூர், நெற்குப்பையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • சொத்துவரி, மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், நெற்குப்பை ஆகிய பேரூராட்சி பகுதிகளில் உள்ள பஸ் நிலையம் முன்பு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் வழிகாட்டு தலின்படி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சொத்துவரி, மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாவட்ட அவைத் தலைவரும், மாவட்ட பாம்கோ சேர்மனுமான ஏவி.நாகராஜன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் ஏ.எல்.சிவானந்தம் (எ)போஸ், மாவட்ட சேர்மன் பொன்மணி.பாஸ்கரன், பொதுக்குழு உறுப்பினரும், மாவட்ட வேளாண் விற்பனை குழு தலைவருமான கரு.சிதம்பரம், ஒன்றிய செயலா ளர்கள் குணசேகரன், வடிவேல், செந்தில்.மா

    வட்ட பேரவை துணை செயலாளர் முருகேசன், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் ராஜா முகமது, மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் பிரேம்குமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் ஆசிப் இக்பால், மாவட்ட வக்கீல் பிரிவு அழகர்சாமி, ராபின் சையது முகமது, ராஜசேகர், நகர துணை செயலாளர் ரவீந்திரன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் சின்னையா, ஆறுமுகம்.

    நெற்குப்பை பேரூர் செயலாளர் அடைக்கப்பன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் நாகராஜன், மாவட்ட பேரவை பொருளாளர் நேரு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆலங்குளம் பூ மார்க் கெட்டில் மல்லிப்பூ இன்று ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனையானது.
    • விலை அதிகரித்து காணப்பட்டாலும் பொது மக்கள் பூக்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

    ஆலங்குளம்:

    முகூர்த்த நாட்கள் நாளை முதல் தொடர்ந்து 2 நாட்கள் வருவதை யொட்டி தென்காசி மாவட்டத்திலும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. ஆலங்குளம் பூ மார்க் கெட்டில் நேற்று ரூ.1,500-க்கு விற்கப்பட்ட மல்லிப்பூ இன்று ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனையானது.

    இதே போல் கிலோ ரூ.850-க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ இன்று ரூ.1,500-க்கு விற்பனையானது. விலை அதிகரித்து காணப்பட்டாலும் தேவை அதிகரிப்பால் வியாபாரிகளும், பொது மக்களும் பூக்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். சில இடங்களில் மல்லிகை பூ மற்றும் பிச்சிப்பூக்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    • வாடிப்பட்டி, அலங்காநல்லூரில் பால், மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நடந்தது.

    வாடிப்பட்டி

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஆண்டிபட்டி பங்களாவில் நடந்தது. ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் பரந்தாமன், செந்தாமரைக்கண்ணன் முன்னிலை வகித்தனர். இளைஞர் பாசறை மாவட்ட துணை செயலாளர் மணிமாறன் வரவேற்றார். நிர்வாகிகள் பிச்சை, பாண்டி, அழகர்சாமி உள்பட பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர். கோட்டைமேடு பாலன் நன்றி கூறினார்.

    அலங்காநல்லூர் கேட்டுகடையில் நடந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர்கள் அழகுராஜ், குமார், முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பையா, பேரூராட்சி கவுன்சிலர் சுந்தர், துணை செயலாளர் சம்பத், பாசறை மாவட்ட இணை செயலாளர் உமேஷ் சந்தர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் ரேவதி தொடங்கி வைத்தார். எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணைச்செயலாளர் ஜெயச்சந்திர மணியன், ஒன்றிய பொருளாளர் சுந்தரம் நன்றி கூறினர்.

    ×