என் மலர்
நீங்கள் தேடியது "செல்போன் திருட்டு"
- கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 36 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டது.
- கைது செய்யப்பட்ட 7 பேரும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த வெள்ளியின்று நடந்த ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே., ஆர்.சி.பி. இடையேயான போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியின்போது போட்டியை காண வந்த ரசிகர்களின் செல்போன்கள் திருட்டு போனது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் செல்போன்களை திருடிய வட மாநிலத்தை சேர்ந்த 4 சிறுவர்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 36 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 7 பேரும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
பிளாக்கில் டிக்கெட் வாங்கி மைதானத்திற்குள் சென்று செல்போன்களை திருடி உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் இருந்து சென்னை வந்து அறை எடுத்து தங்கி, ஐ.பி.எல். போட்டியை காண வந்த ரசிகர்களிடம் கைவரிசை நடத்தி உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருடிய செல்போன்களுடன் வேலூர் சென்று அங்கிருந்து பஸ் மூலம் ஜார்க்கண்ட் செல்ல இருந்தவர்களை, திருவல்லிக்கேணி ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் வேலூர் பஸ் நிலையத்தில் சுற்றி வளைத்து பிடித்தனர்.
- கடந்த ஒரு வருடமாக ஆட்டோவில் ஏறி அவசரமாக போன் செய்ய வேண்டும் என்று கூறி ஆட்டோ ஓட்டுநர்களை ஏமாற்றி செல்போன் திருடியுள்ளனர்.
- திருடிய செல்போன்களை தங்களது நண்பர்கள் தெரிந்தவர்களிடம் விற்று பணத்தை ஜாலியாக செலவு செய்துள்ளனர்.
ராயபுரம்:
ஆட்டோ ஓட்டுநர்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து செல்போன் திருடி வந்த ஆவடி காமராஜர் நகரை சேர்ந்த சபீர் (28) அவரது நண்பர் உஸ்மான் அலி (23) ஆகியோரை வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் இருவரும் சேர்ந்து சிந்தாதிரிப்பேட்டை, செம்பியம், புரசைவாக்கம், பெரியமேடு, திருவல்லிக்கேணி என சென்னை நகரின் பலபகுதிகளில் கடந்த ஒரு வருடமாக ஆட்டோவில் ஏறி அவசரமாக போன் செய்ய வேண்டும் என்று கூறி ஆட்டோ ஓட்டுநர்களை ஏமாற்றி செல்போன் திருடியுள்ளனர். கடந்த ஒரு வருடமாக போலீசிடம் சிக்காமல் தப்பி வந்த இவர்களை வடக்கு கடற்கரை போலீசார் தற்போது கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.
திருடிய செல்போன்களை தங்களது நண்பர்கள் தெரிந்தவர்களிடம் விற்று அந்த பணத்தை ஜாலியாக செலவு செய்துள்ளனர் என போலீசார் விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களில் சபீர் மீது ஆவடியில் ஒரு செல்போன் திருட்டு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
- அஜித்குமார் சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் செல்போன் கடை நடத்தி வருகின்றார்.
- மர்ம நபர் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள போனை திருடி சென்றது தெரியவந்தது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் வள்ளலார் தெருவை சேர்ந்தவர் அஜித் குமார் (வயது 28). இவர் சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் செல்போன் கடை நடத்தி வருகின்றார். சம்பவத்தன்று கடைக்கு செல்போன் வாங்க ஒருவர் வந்துள்ளார். பழைய செல்போன் வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது அவரது தந்தை செல்லத்துரை கடையில் இருந்துள்ளார்.
அவர் செல்போன் வாங்க வந்தவரிடம் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை காண்பித்துள்ளார். அதற்குள் இன்னொரு வாடிக்கையாளர் வரவே அவரிடம் விற்பனை செய்து கொண்டிருக்கும் போது மர்ம நபர் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள போனை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை வைத்து திருவேங்கடம் என்.ஜி.ஓ. காலனி என்ஜிஓ காலனியை சேர்ந்த முருகன் மகன் அருண்பாண்டியன் (19) என்பவரை கைது செய்தனர்.
- செல்போனை பறிகொடுத்தவர் அதே எண்ணில் தொடர்பு கொண்டபோது, அவரிடம் போலீசார் விவரங்களை தெரிவித்து போலீஸ் நிலையம் வரவழைத்தனர்.
- தாம்பரம் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில் போலீசாரும் காளீஸ்வரியை சால்வை அணித்து பாராட்டினர்.
தாம்பரம்:
சென்னையை அடுத்த தாம்பரம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீசாக பணியாற்றி வருபவர் காளீஸ்வரி. இவர், தாம்பரம் பஸ் நிலைய பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கூடுவாஞ்சேரி செல்லும் அரசு பஸ்சில் ஏறிய வடமாநில வாலிபர், சிறிது நேரத்தில் கீழே இறங்கினார். இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த பெண் போலீஸ் காளீஸ்வரி, அந்த வாலிபரிடம் விசாரிக்க முயன்றார். ஆனால் அந்த வாலிபர், தப்பி ஓடினார். உடனே காளீஸ்வரி விரட்டிச்சென்று அந்த வாலிபரை மடக்கிப்பிடித்து சோதனை செய்தார். அதில் அந்த வாலிபரின் சட்டை பையில் விலை உயர்ந்த செல்போன் இருந்தது.
அவரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று நடத்திய விசாரணையில் அவர், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சோட்டோ (வயது 19) என்பதும், கூடுவாஞ்சேரி அரசு பஸ்சில் இருந்த பயணி ஒருவரின் விலை உயர்ந்த செல்போனை திருடியதும் தெரிந்தது.
இதற்கிடையில் செல்போனை பறிகொடுத்தவர் அதே எண்ணில் தொடர்பு கொண்டபோது, அவரிடம் போலீசார் விவரங்களை தெரிவித்து போலீஸ் நிலையம் வரவழைத்தனர். விசாரணையில் அவர் ஆண்டிமடத்தை சேர்ந்த மாயவேல் (30) என தெரியவந்தது. அவர் அளித்த புகாரின்பேரில் தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்போனை திருடிய சோட்டோவை கைது செய்து சிறையில் அடைத்தனர். துரிதமாக செயல்பட்டு செல்போன் திருடனை விரட்டிப்பிடித்த பெண் போலீஸ் காளீஸ்வரிக்கு பொதுமக்கள் பலரிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. தாம்பரம் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில் போலீசாரும் காளீஸ்வரியை சால்வை அணித்து பாராட்டினர்.
- யுவராஜ் சினிமாத்துறையில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.
- மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் திடீரென யுவராஜின் விலை உயர்ந்த செல்போனை பறித்து சென்று விட்டனர்.
மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ். சினிமாத்துறையில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று இரவு பணி முடிந்து அதே பகுதி எம்.ஜி.சக்ரபாணி நகர் வழியாக செல்போனில் பேசியபடியே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் திடீரென யுவராஜின் விலை உயர்ந்த செல்போனை பறித்து சென்று விட்டனர்.
இது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனது மோட்டார் சைக்கிளில் ரூ.2 லட்சம் மற்றும் 2 செல்போன்களை வைத்து சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பணம் மற்றும் செல்போன் திருடுபோயிருந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
தேனி:
தேனி அருகே கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் சரண்யா (வயது32). இவர் புதிதாக நாட்டுச்சர்க்கரை தொழிற்சாலை திறக்க உள்ளதால் அதற்கு தேவையான பொருட்களை வாங்க பழனிசெட்டிபட்டி வந்தார். அங்கு தனது மோட்டார் சைக்கிளில் ரூ.2 லட்சம் மற்றும் 2 செல்போன்களை வைத்து சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பணம் மற்றும் செல்போன் திருடுபோயிருந்தது.
இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தை சேர்ந்தவர் குணசீலன் (34). இவர் மதுரையில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அவரது உறவினர் மோட்டார் சைக்கிளை பெற்றுக் கொண்டு தாமரைக்குளம் வந்தார்.
சம்பவத்தன்று வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து தென்கரை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
- வேலூரில் 2 பேர் கைது
- 4 செல்போன்கள் பறிமுதல்
வேலூர்:
வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த ஆஸ்பத்திரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டாக்டர்கள் ஓய்வு அறை மற்றும் வாகன நிறுத்தும் இடங்களில் நிறுத்தப்பட்ட கார்களில் இருந்த செல்போன்கள் திருடு போனது.
இதுகுறித்து வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் தனியார் ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் 2 பேர் குல்லா மற்றும் மாஸ்க் அணிந்து வந்து டாக்டர்கள் அறை மற்றும் கார்களில் செல்போன் திருடியது. மற்றும் ஆஸ்பத்திரியில் உள்ள குழந்தைகள் வார்டு பகுதியில் நடமாடியது பதிவாகி இருந்தது.
இதன் மூலம் குற்றவாளிகளை போலீசார் அடையாளம் தெரிந்து கொண்டனர். இது குறித்து தனியார் ஆஸ்பத்திரியில் உள்ள காவலர்களுக்கும் படங்களை அனுப்பி கண்காணிக்க உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் செல்போன் திருடர்கள் இருவரும் தனியார் ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் புகுந்தனர்.
அவர்களை அடையாளம் கண்ட ஆஸ்பத்திரி காவலர்கள் இருவரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த கார்த்தி (வயது 22) ராணிப்பேட்டையை சேர்ந்த ரவி (45) என்பது தெரிய வந்தது.
மது போதைக்கு அடிமையான இவர்கள் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் செல்போனை திருடி ரூ.1000 முதல் 2000 வரை விற்பனை செய்துள்ளனர். அந்த பணத்தில் மது குடித்து உல்லாசமாக இருந்துள்ளனர். பணம் தீர்ந்து விட்டதால் மீண்டும் அவர்கள் இருவரும் ஆஸ்பத்திரிக்கு செல்போன் திருட வந்த போது பிடிபட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 4 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ரவி கார்த்தி இருவரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
- செல்போன் திருடியதால் தலையில் கல்லை போட்டு ரவுடியை அவரது கூட்டாளியான மற்றொரு ரவுடி கொலை செய்துள்ளார்.
- குடிபோதையில் அவரிடம் பிரச்சினை செய்ததாக தெரிகிறது.
மதுரை
மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள அரசினர் மாணவர் விடுதி வளாகத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் பிணமாக கிடந்தார். அந்த நபர் தலையில் பாறாங்கல்லை போட்டு மர்மநபர் கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த நாகமலை புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராஜா ராம் என்பவரின் மகன் உதயகுமார் என்ற கொக்கி குமார் என்பது தெரியவந்தது. பிரபல ரவடியான இவர் மீது வழிப்பறி, கொள்ளை, கொலை முயற்சி போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளன.
கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசா ரணையில் கொக்கி குமாரை அவரது கூட்டாளியான மற்றொரு ரவுடி கொலை செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
நாகமலை புதுக்கோட்டை யை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் மீது போலீஸ் நிலை யங்களில் பல்வேறு வழக்கு கள் உள்ளன. இவரும், கொலையான கொக்கி குமாரும் அந்த பகுதியில் ரவுடியாக வலம் வந்துள்ள னர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்னேசின் செல்போனை கொக்கி குமார் திருடி விட்டதாக தெரிகிறது. இதை அறிந்த விக்னேஷ் அவரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று கொக்கி குமார் அரசு மாணவர் விடுதி வளாகத்தில் இருப்பதை அறிந்த விக்னேஷ் குடிபோதையில் அங்கு சென்று அவரிடம் பிரச்சினை செய்ததாக தெரிகிறது. இதில் 2 பேருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
போதையில் இருந்த விக்னேஷ், கொக்கி குமாரை கீழே தள்ளி அருகில் இருந்த பாறாங்கல்லை தலையில் போட்டுள்ளார். இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தி லேயே கொக்கி குமார் பரிதாபமாக இறந்தார்.
மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து தலைமறை வாக உள்ள விக்னேஷ் போலீ சார் தேடி வருகின்றனர். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
- அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் விகர்வூ வளசரவாக்கம் சவுத்ரி நகரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
- விகர்வூ நேற்று இரவு வீட்டின் அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டார்.
போரூர்:
வளசரவாக்கம் பாலாஜி அவின்யூ பகுதியை சேர்ந்தவர் சாந்தி. அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று இரவு ஆலப்பாக்கம் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் திடீரென சாந்தியின் செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் விகர்வூ (வயது 21) வளசரவாக்கம் சவுத்ரி நகரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று இரவு வீட்டின் அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் திடீரென விகர்வூவின் கைப்பையை பறித்து தப்பி சென்றுவிட்டனர். அதில் ரூ.500 ரொக்கம் மற்றும் ஏ.டி.எம். கார்டு இருந்தது.
கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் தனது சட்டை பையில் வைத்திருந்த செல்போன் மாயமாகி இருப்பது கண்டு ராஜேந்திரன் அதிர்ச்சி அடைந்தார்.
- கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்தது.
போரூர்:
செங்குன்றம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். தலைமை செயலகத்தில் பாதுகாப்பு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று மாலை மனைவி, மகளுடன் மருத்துவ சிகிச்சைக்காக கே.கே.நகர் வந்தார். பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக அசோக் நகர் உதயம் தியேட்டர் பஸ் நிறுத்தத்தில் இருந்து மாநகர பஸ்சில் (எண்113) ஏறினார். பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் தனது சட்டை பையில் வைத்திருந்த செல்போன் மாயமாகி இருப்பது கண்டு ராஜேந்திரன் அதிர்ச்சி அடைந்தார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்தது.
இதுகுறித்து கே.கே நகர் போலீசில் ராஜேந்திரன் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தனியார் டி.வி.யில் ஒளிபரப்பாகும் ஆனந்த ராகம் சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
- செல்போன் திருட்டு தொடர்பாக அழகப்பன் திரு.வி.க. நகர் போலீசில் புகார் செய்தார்.
கொளத்தூர்:
புழுதிவாக்கம், வில்லேஜ் சாலையைச் சேர்ந்தவர் அழகப்பன். தனியார் டி.வி.யில் ஒளிபரப்பாகும் ஆனந்த ராகம் சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். நேற்று பெரம்பூர், மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது அழகப்பன் தனது விலை உயர்ந்த செல்போனை அங்கிருந்த மேஜை மீது வைத்து இருந்தார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது செல்போன் திருடுபோய் இருந்தது.
கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது ஜவுளி வாங்க, வாடிக்கையாளர் போல் வந்த 2 இளம்பெண்கள், நடிகர் அழகப்பனின் செல்போனை திருடி செல்வது பதிவாகி இருந்தது. இதுகுறித்து அழகப்பன் திரு.வி.க. நகர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சியை வைத்து நடிகரின் செல்போனை திருடிய பெண்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஆழ்வார்திருநகர் பகுதியில் புதிதாக கட்டிட கட்டுமான பணி நடைபெற்று வருகிறது
- தொழிலாளர்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து வளசரவாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.
போரூர்:
வளசரவாக்கம், அடுத்த ஆழ்வார்திருநகர் பகுதியில் புதிதாக கட்டிட கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இங்கு தொழிலாளர்கள் முதல் தளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்த மர்ம வாலிபர் ஒருவர் தொழிலாளர்கள் கீழே வைத்திருந்த செல்போன்களை திருடினார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து வளசரவாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிம்மாச்சலம் என்கிற சிவா (வயது23) என்பது தெரிந்தது. அவனை போலீசார் கைது செய்தனர். சிவா மீது ஏற்கனவே பாண்டி பஜார், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கிண்டி ஆகிய போலீஸ் நிலையங்களில் திருட்டு மற்றும் போக்சோ வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.