என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒருநாள் போட்டி"

    • பாகிஸ்தானுக்கு முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் மெதுவாக பந்து வீசியதற்காக ஐசிசி அபராதம் விதித்தது.
    • 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    பாகிஸ்தான் அணி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் முதலில் நடந்த டி20 தொடரை நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது.

    ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் மெதுவாக பந்து வீசியதற்காக ஐசிசி அபராதம் விதித்தது.

    இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியிலும் மெதுவாக பந்து வீசியதற்காக பாகிஸ்தான் அணிக்கு ஐந்து சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    • முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 292 ரன்கள் எடுத்தது.
    • பாகிஸ்தான் அணி 41.2 ஓவர்களில் 208 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    பாகிஸ்தான் அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்த டி20 தொடரை நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    அதனை தொடர்ந்து ஒருநாள் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 292 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் மிட்செல் 99 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்க முதலே விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் 114 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து ஃபஹீம் அஷ்ரஃப் மற்றும் நசீம் ஷா ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடினர்.

    ஃபஹீம் அஷ்ரஃப் 73 ரன்னிலும் நசீம் ஷா 51 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் பாகிஸ்தான் அணி 41.2 ஓவர்களில் 208 ரன்களில் ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் பென் சியர்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. கடைசி ஒருநாள் போட்டி வருகிற 5-ந் தேதி நடக்கிறது.

    • இன்றைய கால போட்டிகள் மிகவும் கணிக்கக்கூடிய வகையில் இருப்பதோடு, பந்துவீச்சாளர்களுக்கு அதிக சுமையையும் தருகிறது.
    • இரண்டு பந்துகள் பயன்படுத்தப்படுவதால் போட்டியில் ரிவர்ஸ் ஸ்விங் என்பதே தற்போது இல்லை.

    ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் சலிப்பை ஏற்படுத்துவதாகவும், அதில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் எனவும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சில பரிந்துரைகளை வழங்கியுள்ளார்.

    தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் நவீன கிரிக்கெட் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதன்படி, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் 3 நாட்களுக்கு எல்லாம் முடிந்து விடுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு சச்சின் அளித்த பதில்கள்:-

    டெஸ்ட் கிரிக்கெட் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். கிரிக்கெட் வீரர்கள் வெவ்வேறு விதமான மைதானங்களில் விளையாட வேண்டி உள்ளது. அது பவுன்சர் டிராக், வேகமான டிராக், மெதுவான டிராக், டர்னிங் டிராக் மற்றும் ஸ்விங் டிராக் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

    வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அணிகள் தங்களுக்கு சாதகமான சூழல் கிடைக்கும் என கருதுவதை விட, அனைத்து சூழலுக்கும் தயார் ஆவதே சிறந்த முடிவாக இருக்கும். என்னை பொருத்தவரை எந்த மாதிரியான மைதானங்களில் விளையாடுகிறோம் என்பதே முக்கியம். சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை சிறந்த பொழுதுபோக்கு மற்றும் நம்பர் ஒன் விளையாட்டாக மாற்ற முயற்சிக்கும்போது போட்டிகள் 3 நாட்களில் முடிவடைவதில் எந்த பாதிப்பும் இல்லை.

    ஐ.சி.சி., எம்.சி.சி. உள்ளிட்ட கிரிக்கெட் சம்மேளனங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை எப்படி நம்பர்-1 வடிவமாக தொடர்வது என்பது குறித்து ஆலோசிக்கின்றன. அதற்கு முதலில் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான சூழல் ஏதாவது இருக்க வேண்டும். பந்து வீச்சாளர்கள் ஒவ்வொரு பந்திலும் நெருக்கடியான சூழலை ஏற்படுத்த வேண்டும். அதனை பேட்ஸ்மேன்கள் சமாளித்து விளையாடினால் தான் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும்.

    தற்போது விளையாடப்பட்டு வரும் ஒருநாள் கிரிக்கெட் வடிவமானது சலிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஒவ்வொரு இன்னிங்சிற்கும் ஒரு புதிய பந்தை பயன்படுத்துவதால், போட்டியில் ரிவர்ஸ் ஸ்விங் என்பதையே நீக்கிவிட்டோம். போட்டியில் 40-வது ஓவரை வீசினாலும் அந்த பந்திற்கு அது 20-வது ஓவர் தான். ஆனால், பந்து 30-வது ஓவரில் தான் ஸ்விங் ஆகவே தொடங்கும். ஆனால், இரண்டு பந்துகள் பயன்படுத்தப்படுவதால் போட்டியில் ரிவர்ஸ் ஸ்விங் என்பதே தற்போது இல்லை.

    இன்றைய கால போட்டிகள் மிகவும் கணிக்கக்கூடிய வகையில் இருப்பதோடு, பந்துவீச்சாளர்களுக்கு அதிக சுமையையும் தருகிறது. 15-வது ஓவர் முதல் 40 ஓவர் வரையில் ஆட்டம் தனது போக்கையே இழந்து சலிப்பை ஏற்படுத்துகிறது.

    50 ஓவர் போட்டியை தக்கவைத்துக்கொள்வதில் எந்தத் தீங்கும் இல்லை என்றாலும், ஒவ்வொரு 25 ஓவர்களுக்குப் பிறகும் அணிகள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு இடையில் மாறி மாறி விளையாட வேண்டும். அதன்மூலம் டாஸ், பணி மற்றும் பிற நிலைமைகளில் எதிரணிக்கும் சம வாய்ப்புகள் கிடைக்கும். .

    அதன்படி, முதல் 25 ஓவர்கள் பேட்டிங் செய்யும் அணி அடுத்த 25 ஓவர்கள் பந்து வீச வேண்டும். அதைதொடர்ந்து, மீண்டும் 25 ஓவர்கள் பேட்டிங் செய்து விட்டு மீண்டும் எதிரணிக்கு பேட்டிங் வாய்ப்பை வழங்க வேண்டும். இதன் மூலம், இரு அணிகளும் முதல் மற்றும் இரண்டாவது பாதியில் பந்து வீசுகின்றன. வணிக ரீதியாகவும் இது மிகவும் சாத்தியமானது. ஏனெனில் இரண்டு இன்னிங்ஸ் இடைவெளிகளுக்கு பதிலாக மூன்று இன்னிங்ஸ் இடைவெளிகள் இருக்கும்.

    என சச்சின் கூறினார்.

    • சர்வதேச ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் 500 வெற்றி கண்டுள்ளது.
    • 594 வெற்றிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்தில் உள்ளது.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது.

    இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 288 ரன்கள் சேர்த்தது. டேரில் மிட்செல் பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.

    தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 48.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் 500 வெற்றி கண்ட மூன்றாவது அணி என்ற பெருமையை பாகிஸ்தான் பெற்றது.

    இந்த வரிசையில் 594 வெற்றிகளுடன் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், 539 வெற்றிகளுடன் இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது.

    • விதிமுறையை சோதனை செய்ய ஐ.சி.சி. முடிவு செய்தது.
    • கடிகாரத்தை பயன்படுத்தும் முறை கொண்டுவரப்படுகிறது.

    சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கடிகாரத்தை (Stop Clock) பயன்படுத்தும் முறையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. சோதனை அடிப்படையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கியது. 2024 ஏப்ரல் மாதம் வரை இந்த முறையை சோதனை செய்ய ஐ.சி.சி. முடிவு செய்திருந்தது.

    எனினும், இது தொடர்பாக போட்டிகள் முன்கூட்டியே முடிவடைந்துள்ளதாக போட்டிகளை நடத்தும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பந்து வீசும் அணியினர் இரு ஓவர்களுக்கு இடையில் 60 நொடிகளுக்கு மேல் நேரம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை சரிபார்க்கவே கடிகாரத்தை பயன்படுத்தும் முறை கொண்டுவரப்படுகிறது.

    இந்த சோதனையின் கீழ் போட்டிகளின் இடையில் ஓவர்களுக்கு இடையில் வீரர்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்களா என்று கண்காணிக்கப்படும். அதாவது ஒரு ஓவர் பந்து வீசியதும், அடுத்த ஓவரில் பந்து வீசுவதற்கு அந்த அணி 60 நொடிகளுக்குள் தயாராக வேண்டும்.

    இதற்கு உடன்பட மறுக்கும் வகையில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் பந்துவீசும் அணிக்கு இரண்டு முறை எச்சரிக்கை வழங்கப்படும். தொடர்ந்து பந்து வீச தாமதமாக்கும் பட்சத்தில் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்பட்டு விடும். சோதனை முறையில், இது போட்டிகளை விரைந்து முடிக்க உதவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதன் காரணமாக இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் ஐ.சி.சி. டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் இருந்தே கடிகாரத்தை பயன்படுத்தும் புதிய வழிமுறை அமலுக்கு வரும் என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து நடைபெறும் ஐ.சி.சி.யின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் அனைத்திலும் இந்த விதிமுறை பின்பற்றப்பட இருக்கிறது.

    புதிய விதிமுறை அமலுக்கு வரும் போது, மைதானத்தில் பெரிய திரையில் டிஜிட்டல் கடிகாரம் ஒளிபரப்பப்படும். அதில் ஓவர்களின் இடையில் 60 நொடிகள் தலைகீழாக செல்லும் காட்சிகள் இடம்பெறும். இவ்வாறு செய்யும் போது இரு அணி வீரர்களும் ஓவர்களின் இடையில் எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறோம் என்று பார்க்க முடியும். 

    • கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையிலும் சிறப்பாக செயல்பட்டார்.
    • விராட் கோலி 4-வது முறையாக சிறந்த வீரருக்கான ஐசிசி விருது வென்றுள்ளார்.

    நியூயார்க்:

    ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எனப்படும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட், டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது.

    விராட் கோலி கடந்த ஆண்டில் 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1,377 ரன்கள் குவித்தார். இதில் 6 சதம், 8 அரை சதம் அடங்கும்.

    கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையிலும் சிறப்பாக செயல்பட்டார்.

    ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி விளையாடிய 11 போட்டிகளில் மொத்தம் 765 ரன்கள் எடுத்தார்.

    இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 2023-ம் ஆண்டுக்கான ஒருநாள் கிரிக்கெட் சிறந்த வீரருக்கான விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது. விருதுக்கான கோப்பை மற்றும் தொப்பியை அவர் பெற்றுக் கொண்டார்.

    விராட் கோலி 4-வது முறையாக சிறந்த வீரருக்கான ஐசிசி விருது வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சமீப காலமாக ரவீந்திர ஜடேஜாவின் பார்ம் சரியில்லை.
    • பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சொதப்பி வருகிறார்.

    புதுடெல்லி:

    உலக அளவில் தலைசிறந்த ஆல்-ரவுண்டர்களில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜாவும் ஒருவர் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் அதிரடி காட்டி வருகிறார்.

    ஆனால், சமீப காலமாக ரவீந்திர ஜடேஜாவின் பார்ம் சரியில்லை. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சொதப்பி வருகிறார். பீல்டிங்கிலும் தடுமாறி வருகிறார் என்பது இந்திய அணிக்கு கவலை அளிக்கக்கூடிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

    நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத ரவீந்திர ஜடேஜா, இந்திய டி20 அணியில் இருந்து ஓய்வு அறிவித்துவிட்டார்.

    இந்நிலையில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் ரவீந்திர ஜடேஜா பெயர் இடம்பெறவில்லை.

    அக்சர் பட்டேல் சிறப்பாக பேட்டிங் செய்வதால் ஜடேஜாவின் இடத்தைப் பிடித்துள்ளார். வாஷிங்டன் சுந்தரும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். எனவே இவர்கள் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

    டி20 போட்டியில் ஜடேஜா ஓய்வை அறிவித்து விட்டதால், இனி ஒருநாள் போட்டிகளில் அவருக்கு இடம் கிடைப்பது கஷ்டம்தான். ரவிச்சந்திரன் அஸ்வின் போல டெஸ்ட் போட்டிகளில் மட்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது.

    • முதலில் ஆடிய வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 321 ரன்களை எடுத்தது.
    • 83 பந்துகளில் 103 ரன்கள் குவித்த அமீர் ஜாங்கே ஆட்ட நாயகனாக தேர்நதெடுக்கப்பட்டார்.

    வங்கதேசம் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

    இதனையடுத்து நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையிலான முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் வென்று தொடரைக் கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி செயிண்ட் கிட்சில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 321 ரன்களை எடுத்தது.

    இதையடுத்து, 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 45.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இதன்மூலம் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.

    இப்போட்டியில் அறிமுகமான வெஸ்ட் இண்டீஸ் வீரர் அமீர் ஜாங்கே தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். 83 பந்துகளில் 103 ரன்கள் குவித்த அமீர் ஜாங்கே ஆட்ட நாயகனாக தேர்நதெடுக்கப்பட்டார்.

    மேலும் இப்போட்டியில் 80 பந்துகளில் சதமடித்த அமீர் ஜாங்கே அறிமுக போட்டியில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    இதற்கு முன்னதாக 2018 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் ரீசா ஹென்ரிக்ஸ் 88 பந்துகளில் சதமடித்ததே அதிவேக சதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் ஆடிய நியூசிலாந்து 9 விக்கெட்டுக்கு 255 ரன்கள் குவித்தது.
    • ரச்சின் ரவீந்திரா 79 ரன்னும், சாப்மேன் 62 ரன்னும் எடுத்தனர்.

    ஹேமில்டன்:

    நியூசிலாந்து, இலங்கை இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹேமில்டனில் நேற்று நடந்தது. மழை காரணமாக 37 ஓவராகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 37 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 255 ரன்கள் குவித்தது. ரச்சின் ரவீந்திரா 79 ரன்னும், சாப்மேன் 62 ரன்னும் எடுத்தனர்.

    இலங்கை சார்பில் தீக்ஷனா 4 விக்கெட்டும், ஹசரங்கா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய இலங்கை 30.2 ஓவரில் 142 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 113 ரன்கள் வித்தியாசத்தி நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது ரச்சின் ரவீந்திராவுக்கு வழங்கப்பட்டது.

    இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த 7-வது இலங்கை பவுலராக சாதனை படைத்தார்.

    மேலும் சமிந்தா வாஸ் (2003), லசித் மலிங்கா (2007), துஷ்மந்தா மதுசங்கா (2018) ஆகியோருக்கு பின் வெளிநாட்டு மண்ணில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த 4-வது இலங்கை பவுலர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

    • ஒருநாள் தொடர் வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது.
    • முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் நடைபெறுகிறது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிய 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியும் 3-வது போட்டியில் இங்கிலாந்து அணியும் 4, 5-வது போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்று தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது.

    இதனையடுத்து ஒருநாள் தொடர் வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. இந்த தொடருக்கான முதல் போட்டி நாக்பூரில் நடைபெறுகிறது. இதற்காக இந்தியா, இங்கிலாந்து அணி வீரர்கள் நாக்பூர் வந்தடைந்தனர்.

    இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால், சுப்மன் ஆகியோர் நாக்பூர் விமான நிலையம் வந்தடைந்தனர். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஜோ ரூட் 69 ரன்கள் அடித்தார்.
    • அடுத்து களமிறங்கிய இந்தியா அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது.

    கட்டாக்:

    இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கட்டாக் மைதானத்தில் நடைபெற்றது.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 49.5 ஓவரில் 304 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்னும், பென் டக்கெட் 65 ரன்னும் அடித்தனர். இந்தியா சார்பில் ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    அடுத்து களமிறங்கிய இந்தியா அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ஜோ ரூட் அடித்த அரைசதம் ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது 56-வது அரை சதமாகப் பதிவானது.

    இதன்மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டிகளில் அதிக அரை சதங்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்தார்.

    இயன் மோர்கன் 55 அரை சதம் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அவரை முந்தி ஜோ ரூட் சாதனை படைத்துள்ளார்.

    அதிகபட்ச அரை சதம் கடந்தோர் பட்டியல்:

    ஜோ ரூட் - 56, இயன் மோர்கன் - 55, ஐயன் பெல் - 39, பட்லர் - 38, கெவின் பீட்டர்சன் - 34

    • முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றனர்.
    • இந்த போட்டியில் பாபர் அசாம் 29 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் முத்தரப்பு தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இரு அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஃபக்கர் ஜமான்- பாபர் அசாம் களமிறங்கினர்.

    ஃபக்கர் ஜமான் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷகீல் 8 ரன்னில் வெளியேறினார். பேட்டிங்கில் சொதப்பி வரும் பாபர் அசாம் இந்த போட்டியில் 29 ரன்னில் அவுட் ஆகி மீண்டும் ஏமாற்றம் அளித்தார். இருந்தாலும் அவர் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

    குறைந்த போட்டியில் விளையாடி 6000 ரன்கள் கடந்த தென் ஆப்பிரிக்கா வீரர் ஹசிம் அம்லா சாதனையை பாபர் அசாம் சமன் செய்துள்ளார். அந்த பட்டியலில் பாபர் அசாம், ஹசிம் அம்லா 123 போட்டிகளில் விளையாடி 6000 ரன்களை கடந்துள்ளனர்.

    இவர்களுக்கு அடுத்தப்படியாக விராட் கோலி (136 போட்டிகள்), கனே வில்லியம்சன் (139 போட்டிகள்), டேவிட் வார்னர் (139 போட்டிகள்), ஷிகர் தவான் (140 போட்டிகள்) ஆகியோர் உள்ளனர்.

    ×