என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்காளர் பட்டியல்"

    • இறந்த நபர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு இனி முறையாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
    • பூத் சிலிப்பின் வடிவமைப்பை திருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது

    வாக்காளர் பட்டியலின் துல்லியத்தை மேம்படுத்தவும், சேவைகளை சீரமைக்கவும் இந்திய தேர்தல் ஆணையம் புதிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

    கடந்த மார்ச் மாதம், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற தலைமைத் தேர்தல் அதிகாரிகள் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டன

    இறந்த நபர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு இனி முறையாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

    இறந்த வாக்காளர்களின் விவரங்களை இந்திய பதிவாளர் ஜெனரலிடம் ஆன்லைன் மூலம் பெற இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

    இதன்மூலம், இறந்தவர்களின் விவரங்கள் பதிவாளர் ஜெனரலிடம் இருந்து உடனுக்குடன் பெறப்படும். அந்த விவரங்கள், வாக்குச்சாவடி மட்ட அதிகாரிகள் மூலம் நேரில் களஆய்வு செய்து உறுதி செய்யப்படும். இதன்பின் அந்த வாக்காளர்கள் பெயர் நீக்கப்படும்.

    மேலும் பூத் சிலிப்பின் வடிவமைப்பை திருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களின் பெயர்கள் மற்றும் வரிசை எண்கள் பெரிய எழுத்துக்களில் காட்டப்படும். இது வாக்குச் சாவடிகளை அடையாளம் காண்பதை எளிதாக்குகிறது மற்றும் அதிகாரிகள் பட்டியலில் உள்ள பெயர்களை எளிதாகக் கண்டறிய உதவுகிறது.

    அத்துடன், வீடு வீடாக செல்லும் வாக்குச்சாவடி மட்ட அதிகாரிகளுக்கு நிலையான புகைப்பட அடையாள அட்டை வழங்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    இதன்மூலம் அவர்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டு, அவர்களுடன் வாக்காளர்கள் தகவல்களை பகிர்ந்து கொள்வார்கள் என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது. 

    • வாக்காளர் பட்டியலில் போலி பெயர்கள் சேர்ப்பு, போலி வாக்காளர் அட்டைகள் ஆகிய பிரச்சனைகள் குறித்து பேசினார்.
    • இந்த நாட்டின் பெரும் பகுதி மக்களுக்கு அதன் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர்.

     தேர்தல் ஆணையம் ஒரு செயலற்ற மற்றும் தோல்வியுற்ற நிறுவனம் என்று மூத்த வழக்கறிஞரும் மாநிலங்களவை  எம்பியுமான கபில் சிபல் விமர்சித்துள்ளார்.

    இன்று டெல்லியில் செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த கபில் சிபல் பல்வேறு விசுஷயங்கள் குறித்து பேசினார்.

    அப்போது வாக்காளர் பட்டியலில் போலி பெயர்கள் சேர்ப்பு, போலி வாக்காளர் அட்டைகள் உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி  காட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவது குறித்த கேள்விக்கு கபில் சிபல் பதில் கூறினார்.

    அவர் பேசியதாவது, தேர்தல் ஆணையம் ஒரு செயலற்ற அமைப்பு. தேர்தல் ஆணையம் அதன் கடமைகளுக்கு ஏற்ப அதன் செயல்பாடுகளை நிறைவேற்றவில்லை. தேர்தல் ஆணையம் இன்று ஒரு தோல்வியடைந்த நிறுவனமாக உள்ளது. இந்த நாட்டின் பெரும் பகுதி மக்களுக்கு அதன் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர். இந்தப் பிரச்சினையை நாம் எவ்வளவு விரைவில் கையாள்கிறோமோ, அவ்வளவுக்கு ஜனநாயகம் உயிர்வாழும் வாய்ப்பு அதிகரிக்கும்.

     

    இதன்மூலம் எதிர்க்கட்சிகளுக்கு நான் சொல்ல விரும்புவது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் ஒருபுறம் இருக்க , தேர்தல் செயல்முறை ஊழல் நிறைந்தது என்பதைக் காட்டும் சில கடுமையான பிரச்சினைகள் இருக்கின்றன. நாம் ஒன்றாக இணைந்து அதனைத் தீர்க்க வேண்டும் என்று தெரிவித்தார் 

    இதற்கிடையே தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் சட்டமன்றத் தொகுதிகளில் நிலுவையில் உள்ள பூத் அளவிலான பிரச்சினைகளைத் தீர்க்க 4,000க்கும் மேற்பட்ட தேர்தல் அதிகாரிகள் அனைத்துக் கட்சிக் கூட்டங்களை நடத்தி வருவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஏப்ரல் 30-ந் தேதிக்குள் கருத்து தெரிவிக்கலாம்.
    • கட்சிகளின் தலைவர்களுக்கும் மூத்த உறுப்பினர்களுக்கும் அழைப்பு.

    புதுடெல்லி:

    போலி வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் பிரச்சனை நாடாளுமன்றத்தில் எதிரொலித்துள்ளது.

    இந்த விவகாரத்தை பாராளுமன்றத்தில் எழுப்பிய எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இது தொடர்பாக அவையில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது சில அரசியல் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் இதுதொடர்பாக கேள்விகளை எழுப்பினர்.

    இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி கோரிக்கை எழுப்பினார்.

    கடந்த சில ஆண்டுகளாக சுதந்திரமான, நேர்மையான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தவறி விட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.

    இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் வாக்காளர் பட்டியல் இந்திய பதிவு அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தலைமைத் தேர்தல் அதிகாரிகள் நிலையில் ஏதாவது தீர்க்கப்படாத பிரச்சனைகள் இருந்தால் அது குறித்து அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்துக்கு வரும் ஏப்ரல் 30-ந் தேதிக்குகள் ஆலோசனை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் அரசியல் கட்சிகளுக்கு தனித்தனியாக தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், சட்டப்படி தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பாக விவாதிக்க வருமாறு கட்சிகளின் தலைவர்களுக்கும் மூத்த உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

    தேர்தல் ஆணையம் கடந்த வாரம் நடத்திய கருத்தரங்கில் பங்கேற்ற தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், அரசியல் கட்சிகளுடன் அவ்வப்போது சந்திப்புகளை நடத்துமாறும் சட்டத்துக்கு உட்பட்டு பெறப்படும் ஆலோசனைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறும் அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.

    • சிறப்பு முகாம் அடுத்த மாதம் 12, 13, 26, 27-ந்தேதி ஆகிய 4 நாட்கள் நடைபெற உள்ளது.
    • மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குசாவடி மையங்களில் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், தொகுதிக்கு உள்ளேயே முகவரி மாற்றம் செய்தல் ஆகியவற்றுக்கான படிவங்களை பூர்த்தி செய்து அளிக்கலாம்.

    இதற்கான சிறப்பு முகாம் அடுத்த மாதம் 12, 13, 26, 27-ந்தேதி ஆகிய 4 நாட்கள் நடைபெற உள்ளது. அந்த மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குசாவடி மையங்களில் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இந்த சிறப்பு முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் அனுப்பி உள்ளார்.

    • நடப்பு ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் துவங்கியுள்ளது.
    • வருகிற 12, 13 மற்றும் 26, 27 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    திருப்பூர்:

    தேர்தல் கமிஷன் சார்பில் ஆண்டுதோறும் நவம்பர்- டிசம்பர் மாதங்களில் வாக்காளர் பட்டியல்திருத்தப்பணி நடைபெறுகிறது.முன்னதாக வரைவு பட்டியல் வெளியிடப்படும். தொடர்ந்து பெயர் சேர்த்தல், நீக்குதல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்த பணிகள் நடைபெறும். ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

    நடப்பு ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் துவங்கியுள்ளது. வருகிற 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.வரும் 2023 ஜனவரி 1-ந் தேதி, 18 வயது பூர்த்தி அடைந்தோர், தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம்.இதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தங்கள் பகுதி தாலுகா அலுவலகங்களில் உள்ள வாக்காளர் பதிவு அதிகாரியிடம் வழங்கலாம்.

    https://www.nvsp.in என்கிற வாக்காளர் சேவை போர்ட்டல்,voter Helplineஎனும் செல்போன் செயலி மூலமாகவும் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். பெயர் நீக்கம், முகவரி மாற்றம், தொகுதிக்குள் முகவரி மாற்றம் மேற்கொள்ளலாம்.

    மேலும் தொகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் சனி, ஞாயிறு தினங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி வருகிற 12, 13 மற்றும் 26, 27 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இதில் சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி 18 வயது பூர்த்தியானோர் வாக்காளர் பட்டியலில் தவறாமல் தங்கள் பெயர்களை சேர்க்கவும், வாக்காளர் பட்டியலில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், தொகுதி மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலா ம் என திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைத்திட படிவம்-6ல் பூர்த்தி செய்து வழங்கலாம்.
    • இந்த மாதம் 12, 13, 26, 27 சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பத்தை நேரில் வழங்கலாம்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் வரும் 2023 ஜனவரி 1-ந்தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணி தற்போது நடந்து வருகிறது.

    அன்றையதினம் 18 வயது பூர்த்தி அடையும் ஒவ்வொருவரும் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு படிவம்-6, பெயர்நீக்கம் செய்ய படிவம்-7ல் பூர்த்தி செய்யவும். வாக்காளர் பட்டியலில் உள்ள எழுத்து பிழை மற்றும் முகவரி மாற்றம் மற்றும் ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் ஒரே பாகத்தில் இருந்து மற்றொரு பாகத்திற்கு விலாசம் மாற்றி பதிவு செய்ய விரும்புவோர் படிவம்-8 போன்றவற்றை பூர்த்தி செய்து தங்களது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள வாக்குச்சாவடிகளில், வரும் 9-ந்தேதி முதல் படிவம் வழங்கலாம். மேலும் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைத்திட படிவம்-6ல் பூர்த்தி செய்து வழங்கலாம். மேலும் இந்த மாதம் 12, 13, 26, 27 சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பத்தை நேரில் வழங்கலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சிறப்பு முகாம் வருகின்ற 12, 13, 26 மற்றும் 27-ந்தேதி ஆகிய நாட்களில் நடைபெறுகின்றது.
    • வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகள், தொகுதி மாற்றம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8-ம் பதிவு செய்து வாக்குச்சாவடிகளில் அளிக்கலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணி நடைபெற்று வருகிறது. இதனால் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதியன்று 18 வயது பூர்த்தி அடையும் ஒவ்வொருவரும் இதுவரையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால் புதியதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

    அதன்படி பெயர் சேர்க்க படிவம் 6-ம், பெயர் நீக்கம் செய்ய படிவம் 7-ம், வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகள், தொகுதி மாற்றம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8-ம் பதிவு செய்தும் வாக்குச்சாவடிகளில் அளிக்கலாம்.

    இதற்கான முகாம் பகுதிகளில் அமைந்துள்ள கல்வி நிலையங்களில் வருகின்ற 12, 13,26 மற்றும் 27-ந் தேதி ஆகிய நாட்களில் நடைபெறுகின்றது. இதையொட்டி, முகாம்களுக்கு நேரில் வந்து மேற்கூரிய உரிய படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து உரிய சான்று ஆவணங்களுடன் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்பிக்க வேண்டும் இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை காஞ்சிபுரம் கலெக்டர் மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 21 லட்சத்து 72 ஆயிரத்து 922 வாக்காளர்கள் உள்ளனர்.
    • இறுதி வாக்காளர் பட்டியல் 2023 ஜனவரி 5-ந் தேதி வெளியிடப்படுகிறது

    சென்னை :

    நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்கள், குறைகளை சரி செய்யும் நோக்கில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு பணி கடந்த ஆகஸ்டு 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 21 லட்சத்து 72 ஆயிரத்து 922 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.15 கோடி பேர் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர்.

    ஆதார் இணைப்பு திட்டத்தை நிறைவு செய்யவும், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, நீக்கம் ஆகிய பணிகளை மேற்கொள்ள இம்மாதம் சிறப்பு முகாம்களை நடத்த தேர்தல் கமிஷன் முடிவெடுத்து உள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் (மாவட்ட தேர்தல் அதிகாரிகள்) தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கடிதம் எழுதியுள்ளார்.

    துணை மற்றும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கி, கடந்த 7-ந் தேதியோடு நிறைவடைந்தது. ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் வெளியிடப்படுகிறது. இந்த நாளின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில், இந்திய தேர்தல் ஆணையம், முறையான வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் தேர்தல் பங்கேற்பு (எஸ்.வி.இ.இ.பி.) என்ற விழிப்புணர்வு பேரணியை நடத்த முடிவு செய்துள்ளது.

    அந்தவகையில், சென்னையில் இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மயிலாப்பூரில் உள்ள செவித்திறன் குறைபாடுள்ள சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளியில் நடக்கும் பேரணியை, மாநில தலைமை தேர்தல் அதிகாரி அரசு முதன்மைச் செயலர் சத்யபிரதா சாகு கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மயிலாப்பூரில் முக்கிய வீதிகள் வழியாக செல்லும் இந்த பேரணியில் பொதுமக்கள் வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது.

    2023-ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிப்புக்கான சிறப்பு முகாம்கள் வருகிற 12, 13 மற்றும் 26, 27 (சனி, ஞாயிறு) ஆகிய 4 நாட்கள் நடத்தப்படுகிறது.

    சிறப்பு முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்கம் தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் பரிசீலனை டிசம்பர் 26-ந் தேதி நிறைவடைகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 5-ந் தேதி வெளியிடப்படுகிறது என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறினர்.

    • திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, திருத்தங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தல் பற்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    அ.ம.மு.க. மாநகர் மாவட்ட அவைத் தலைவர் பாலுசாமி தலைமை தாங்கினார். மாநில துணை பொதுசெயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.சண்முகவேலு, திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேசினார்கள். கூட்டத்தில் புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, திருத்தங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

    பொதுக்குழு உறுப்பினர் புல்லட் ரவி, தொழிற்சங்க பேரவை செயலாளர் பாலகிருஷ்ணன், மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் இறை வெங்கடேஷ், தொழிற்சங்க பேரவை தலைவர் கலியமூர்த்தி, பகுதி செயலாளர்கள் சுகம் வீர.கந்தசாமி, ராஜாங்கம், ஜெகதீஷ், நூல்கடை சிவக்குமார், நெருப்பெரிச்சல் பகுதி நிர்வாகி கருப்புசாமி, பாண்டியன்நகர் பகுதி இணை செயலாளர் ஷீபா பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாற்று கட்சிகளில் இருந்து 35 பேர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.

    • வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை வெளியிட்டார்.
    • அதன்படி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 14 லட்சத்து 30 ஆயிரத்து 953 பேர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை வெளியிட்டார். அதன்படி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 14 லட்சத்து 30 ஆயிரத்து 953 பேர். இதில் ஆண் வாக்காளர்கள் 6 லட்சத்து 94 ஆயிரத்து 631 பேர். பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 36 ஆயிரத்து 137 பேர். மற்றவர்கள் 135 பேர் அடங்குவர்.

    தொகுதி வாரியாக வாக்காளர்கள் விவரம் வருமாறு,

    ராசிபுரம் தனி தொகுதியில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 862 பேரும், சேர்ந்தமங்கலம் தனி தொகுதியில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 54 பேரும், நாமக்கல் தொகுதியில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 705 பேரும், பரமத்தி வேலூர் தோகுதியில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 729 பேரும், திருச்செங்கோடு தொகுதியில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 487 பேரும், குமாரபாளையம் தொகுதியில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 116 பேரும் உள்ளனர்.

    கடந்த 5-1-2022 முதல் 6591 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர். 27 ஆயிரத்து 868 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 14 லட்சத்து 52 ஆயிரத்து 230 வாக்காளர்கள் இருந்த நிலையில், இன்றைய தேதி படி வாக்காளர்கள் 14 லட்சத்து 30 ஆயிரத்து 953 ஆக உள்ளனர். இதனால் வாக்காளர் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது.

    மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 5-1-2022 முதல் 31-10-2022 வரை பொதுமக்களிடம் பெறப்பட்ட படிவங்களை விசாரணை செய்து வரைவு வாக்காளர் பட்டியல் ஆனது இன்று வெளியிடப்பட்டது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகம், சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சி யர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் பார்வையிடலாம்.

    வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டவர் களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் அஞ்சல் மூலமாக வழங்கப்படும்.

    இந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டின் தொடர்ச்சியாக இன்று முதல் 8-12-2022 வரை சிறப்பு சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடைபெற உள்ளது. பணியின் போது 1-1-2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக் கொள்ளாதவர்கள் திருத்தங்கள் செய்ய விரும்புபவர்களும் உரிய விண்ணப்பங்களை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அளிக்கலாம்.

    மேலும் வருகிற 12, 13-ஆம் தேதி மற்றும் 26, 27-ந் தேதிகளில் மாவட்டத்தில் உள்ள 686 வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அந்த நாட்களிலும் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பிசிங் தெரிவித்தார்.

    • 1.1.2023-ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடைபெற்று வருகிறது
    • 12, 13 மற்றும் 26, 27 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிக்காட்டுத லின்படி 1.1.2023-ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடைபெற்று வருவதன் தொடர்ச்சியாக தொகுதி வாரியான வரைவு வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

    எனவே சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தில் 18 வயது பூர்த்தியானவர்கள் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், பெயர் நீக்கம், தொகுதி- முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்தல் தொடர்பாக 8-12-2022 வரை கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளுக்கான படிவங்களான 6, 6ஏ, 6பி, 7 மற்றும் 8 வழங்கலாம்.

    மேலும் தங்களது பகுதியில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகளில் 12, 13 மற்றும் 26, 27 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. எனவே இந்த முகாமை குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னை மாவட்டத்தில் உள்ள 3723 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகின்றன.
    • வாக்காளர் அட்டையில் உள்ள திருத்தங்கள், முகவரி மாற்றம் போன்றவற்றையும் இம்முகாம்கள் மூலம் செய்து சரி செய்து கொள்ளலாம்.

    சென்னை:

    சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

    மொத்த வாக்காளர்கள் 38 லட்சத்து 92 ஆயிரத்து 457 பேர் உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து அனைத்து மண்டல அலுவலகங்கள், வாக்குசாவடி மையங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்கள் பெயரினை சேர்க்க சிறப்பு முகாம் இன்றும், நாளையும் (சனி, ஞாயிறு) நடைபெறுகிறது.

    புதிதாக பெயரை சேர்க்க படிவம் எண்.6, பெயரை நீக்கம் செய்ய படிவம் 7, சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே இடமாற்றம் செய்யவும் வேறு தொகுதிக்கு மாறியவர்கள் திருத்தம் செய்யவும் படிவம் எண்.8-ஐ பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும்.

    அதற்கான ஆவண நகலை இணைத்து வாக்குச்சாவடி மையங்களில் உள்ள அலுவலர்களிடம் வழங்க வேண்டும்.

    சென்னை மாவட்டத்தில் உள்ள 3723 வாக்குச்சாவடிகளில் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகின்றன. வாக்காளர் அட்டையில் உள்ள திருத்தங்கள், முகவரி மாற்றம் போன்றவற்றையும் இம்முகாம்கள் மூலம் செய்து சரி செய்து கொள்ளலாம்.

    இதனையடுத்து 26 மற்றும் 27ந்தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. மேலும் பொதுமக்கள் www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும் தங்களுடைய பெயர்களை சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    ×