என் மலர்
நீங்கள் தேடியது "பள்ளிகள்"
- ராமநாதபுரம்- விருதுநகர்-சிவகங்கை மாவட்டங்களில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது.
- 100-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டது.
ராமநாதபுரம்
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்த நிலையில் நடுநிலை,உயர்நிலை, மேல்நிலை மாணவ-மாணவிகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப் பட்டு வகுப்புகள் தொடங்கின.
ராமநாதபுரம் மாவட்ட த்தில் ராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம் ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. ராமநாதபுரம், பரமக்குடி, திருப்புல்லாணி, மண்டபம், முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, போகலூர், நயினார் கோயில், ஆர்.எஸ். மங்கலம், திருவாடானை ஆகிய ஊராட்சி ஒன்றி யங்களில் 157 ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகள், 36 அரசு உதவிபெறும் நடுநிலை பள்ளிகள், 22 தனியார் நடுநிலை பள்ளிகள் உள்ளன.
66 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 13 அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி கள், 27 தனியார் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 70 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 36 அரசு உதவி பெறும் மேல் நிலை பள்ளிகள், 56 தனி யார் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.
இங்கு படித்த மாணவ-மாணவிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. கடந்த வாரம் பள்ளி திறக்கப்பட்ட இருந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம் நீடித்ததால் இன்று (12-ந் தேதி) பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது.
அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. ஒரு மாத காலம் விடுமுறை முடிந்து மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். அவர்கள் தங்கள் நண்பர்களை பார்த்து நலம் விசாரித்தனர். முதல் நாளில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் அறிமு கப்படுத்தி கொண்டனர்.
இதேபோல் விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களிலும் இன்று 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்தது. 2 மாவட்டங்களிலும் 100-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டது.
வருகிற 14-ந்தேதி அன்று 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது.
- நாளை மறுநாள் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
- பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் ஒரு மாதம் கோடை விடுமுறைக்கு பிறகு 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் இன்று முதல் தொடங்கின.
இன்று 6 முதல் 12-ம் வகுப்பு பள்ளிகள் திறக்கப்பட்டன.
நாளை மறுநாள் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
ஒரு மாதத்திற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால், ஆர்வமுடன் வந்த மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.
ஏற்கனவே கடந்த வாரம் அந்தந்த பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து இன்று பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் மாணவர்கள் வித்தியாசமான முறையில் வரவேற்கப்பட்டனர்.
தஞ்சை கல்யாண சுந்தரம் மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகள் நாதஸ்வரம் ,தவில் உள்ளிட்ட இன்னிசை மேளங்கள் முழங்க பேரணியாக அழைத்து வரப்பட்டு, உற்சாகமாக வரவேற்கப்பட்டனர்.
- டி-ஷர்ட் வாங்க ரூ.62 லட்சத்தை மாநகராட்சி நிர்வாகம் ஒதுக்கியுள்ளது.
- மாணவர்களுக்கான டி-ஷர்ட் வழங்கும் ஆர்டர், தமிழ்நாடு ஜவுளிக் கழகத்திடம் வழங்கப்பட்டு உள்ளது.
சென்னை:
சென்னை மாநகராட்சியில் 281 பள்ளிகள் இருந்தன. தற்போது மாநகராட்சி எல்லையில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகங்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த 139 பள்ளிகளும் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மாநகராட்சி பள்ளிகளின் எண்ணிக்கை 410 ஆக உயர்ந்துள்ளது.
இவற்றில் 46 உயர்நிலைப் பள்ளிகள், 35 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்த முள்ள 81 பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக 4 குழுக்களாகப் பிரித்து, அவர்களுக்கு அரக்கு நிறம், பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய வண்ணங்களில் டி-ஷர்ட் கொள்முதல் செய்து வழங்கப்படும் என்று நடப்பாண்டு பட்ஜெட்டில் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா அறிவித்திருந்தார்.
அதைச் செயல்படுத்தும் விதமாக மாநகராட்சி நிர்வாகம், மொத்தம் உள்ள 81 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துள்ளது. அதன்படி தற்போது 29 ஆயிரத்து 258 பேர் படித்து வருகின்றனர்.
இவர்களுக்கு டி-ஷர்ட் வாங்க ரூ.62 லட்சத்தை மாநகராட்சி நிர்வாகம் ஒதுக்கியுள்ளது. மாணவர்களுக்கான டி-ஷர்ட் வழங்கும் ஆர்டர், தமிழ்நாடு ஜவுளிக் கழகத்திடம் வழங்கப்பட்டு உள்ளது. இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், விரைவில் மாணவர்களுக்கு வண்ண டி-ஷர்ட் வழங்கப்பட இருப்பதாக மாநகராட்சி கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- பெற்றோர் தங்களது குழந்தைகளை கவனமாக வளர்க்க வேண்டும்.
- பெற்றோர்கள் பெண்குழந்தையை வளர்ப்பதில் சிறந்த நண்பராக இருக்க வேண்டும்.
வல்லம்:
தஞ்சாவூர் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில் ஆலக்குடி கிராமத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஜெசிந்தா மார்ட்டின் தலைமையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது அவர் மரக்கன்றுகள் நட்டு வைத்து பேசியதாவது:-
பெற்றோர்கள் குழந்தைகளை வளர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும். பள்ளிகளுக்கு செல்லும் பெண்குழந்தைகளிடம் வெளியில் நடக்கும் விஷயங்களை தாமாக முன்வந்து ஒரு நல்ல நண்பரை போல் அணுகி விசாரிக்க வேண்டும்.
தற்போதுள்ள சமூக சூழலில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகிறது.
பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர் போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையாக தண்டிக்கபடுவார்கள். பெற்றோர்கள் பெண்குழந்தையை வளர்ப்பதில் சிறந்த நண்பராக இருக்க வேண்டும் .
பொதுமக்களுக்கு உண்டான பிரச்சனைகள் சட்டம் மற்றும் சட்டம் சார்ந்த பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் மாவட்ட மற்றும் தாலுக்கா அளவிலுள்ள மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவில் மனு அளித்தால் என்ன பிரச்சனையாக இருந்தாலும் உடனடியாக தீர்வு கிடைக்கும். பொதுமக்கள் அனைவரும் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் செயலர் மற்றும் சார்பு நீதிபதி இந்திராகாந்தி, அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சுந்தரராஜன், வக்கீல் பிரகாஷ், சமூக ஆர்வலர் கோவிந்தராசு உள்ளிட்ட பலர் பேசினர்.
இம்முகாமில் 100- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்து பயன்அடைந்த னர். முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் சந்தோஷ்குமார் செய்திருந்தார். முடிவில் ஆலக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சாந்திசாமி நன்றி கூறினார்.
- பள்ளிகள் இடையிலான கலைப்போட்டிகள் வருகிற 30-ந் தேதி நடக்கிறது.
- மதுரை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மதுரை மாவட்ட பள்ளிகள் இடையே நடத்தப்படும் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் வருகிற 30-ந்தேதி உலக தமிழ்ச் சங்க கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகளில் அனைத்து அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம்.
போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை தாங்கள் படிக்கும் பள்ளி யின் தலைமை ஆசிரியர் ஒப்புதலுடன் மதுரை மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்திற்கு நேரிலோ அஞ்சல் மூலமாகவோ மின்னஞ்சல் மூலமாகவோ வருகிற 27-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
போட்டிகள் நடைபெறும் அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.7ஆயிரம், 3-வது பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
மாவட்ட அளவில் முதல் பரிசு பெறும் மாணவர்கள் மட்டும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள பரிந்துரை செய்யப்படுவர்.
போட்டி களுக்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் சுசீலா செய்து வருகிறார்.
இந்த தகவல் மதுரை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஒரு பள்ளிக்கு குறைந்தபட்சம், 25 பேரின் விபரங்கள் பதிவேற்ற வேண்டும்.
- எந்தவகையில் வேண்டுமானாலும், மாணவர்கள் தாங்கள் படித்த அரசுப்பள்ளிக்கு உதவலாம்.
திருப்பூர்:
பள்ளி செயல்பாடுகளில் முன்னாள் மாணவர்களை ஈடுபடுத்தும் வகையில் அவர்களின் அடிப்படை தகவல்களை இம்மாத இறுதிக்குள் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளிகளில் படித்த, முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து நிதிசார்ந்த, கற்றல், தொழில்நுட்ப உதவிகளை பெறும் வகையில் தகவல்கள் திரட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு பள்ளிக்கு குறைந்தபட்சம், 25 பேரின் விபரங்கள் பதிவேற்ற வேண்டும். பெரும்பாலான தொடக்க, நடுநிலைப்பள்ளிகள், முன்னாள் மாணவர்களின் விபரங்களை பதிவேற்றாதது தெரியவந்துள்ளது.
மாவட்ட வாரியாக முன்னாள் மாணவர் விபரங்கள் பதிவேற்றாத பள்ளிகளுக்கு மீண்டும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன. இம்மாத இறுதிக்குள், முன்னாள் மாணவர்களின் பெயர், படித்த ஆண்டு, பள்ளிக்கான எந்த வகை சேவையில் ஈடுபட விருப்பம் குறித்த தகவல்கள் பெற்று பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், முன்னாள் மாணவர்கள் குறித்த தகவல்கள் பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து தலைமையா சிரியர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. வாட்ஸ்-ஆப் குழுக்கள் உருவாக்கி முன்னாள் மாணவர் செயலியின் லிங்க் பகிர்ந்து, தகவல்கள் பதிவேற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி சார்ந்த செயல்பாடுகள் மட்டுமல்லாமல், சிறப்பு வகுப்பு எடுத்தல், போட்டிகளுக்கு பயிற்சி அளித்தல், தொழில்நுட்ப ரீதியாக உதவுதல் என எந்தவகையில் வேண்டுமானாலும், மாணவர்கள் தாங்கள் படித்த அரசுப்பள்ளிக்கு உதவலாம். இம்மாத இறுதிக்குள் தகவல்கள் பதிவேற்ற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றனர்.
- பள்ளியில் மாணவர் சின்னத்துரை தொடர்ந்து சக மாணவர்கள் சிலரால் சாதிய அடக்குமுறைகளுக்கு ஆளாகி வந்துள்ளார்.
- பள்ளிகள் தான் மாணவர்களை வாழ்க்கைக்குத் தயார்ப்படுத்தும் நாற்றங்கால்கள்
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அரசு பள்ளி மாணவர் சின்னத்துரை அவரது வீட்டில் வைத்து 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டப்பட்டதும், அதை தடுக்க முயன்ற அவரது சகோதரி சந்திரா செல்வினும் வெட்டுக்காயங்களுக்கு ஆளாகி உயிருக்குப் போராடுவதும் வேதனையளிக்கின்றன. பள்ளியில் ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ள செய்திகள் மனதிற்கு மிகுந்த கவலையளிக்கின்றன.
பள்ளியில் மாணவர் சின்னத்துரை தொடர்ந்து சக மாணவர்கள் சிலரால் சாதிய அடக்குமுறைகளுக்கு ஆளாகி வந்துள்ளார். அது குறித்து பள்ளி நிர்வாகத்தில் புகார் செய்ததன் காரணமாகவே அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிக்கிறது. மாணவர் சின்னத்துரை மீது ஏவப்பட்ட அடக்குமுறைகள் தொடக்கத்திலேயே தடுக்கப்பட்டிருந்தால், அவருக்கும், அவரது சகோதரிக்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. அவர்கள் தாக்கப்பட்ட அதிர்ச்சி தாளாமல் அவர்களின் தாத்தா கிருஷ்ணன் உயிரிழந்ததும் நடந்திருக்காது.
பள்ளிகள் தான் மாணவர்களை வாழ்க்கைக்குத் தயார்ப்படுத்தும் நாற்றங்கால்கள். அங்கு சாதி வெறிக்கு இடமளிக்கப்படக் கூடாது. அவை சமூகநீதிக் கூடங்களாக திகழ வேண்டும். அதற்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமோ, அவை அனைத்தையும் ஒட்டு மொத்த சமுதாயமும் மேற்கொள்ள வேண்டும்.
நாங்குநேரியில் நடந்தது போன்ற கொடூரம் இனி தமிழ்நாட்டில் எங்கும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கொடிய குற்றத்தில் தொடர்புடையவர்கள் மீதும், அதன் பின்னணியில் உள்ளவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பழுதடைந்துள்ள சுற்றுச்சுவர் பகுதிகளைச் சுற்றி வேலி அல்லது தடுப்புகளை ஏற்படுத்திட வேண்டும்.
- பழுதடைந்த சுவிட்சுகள் உள்ள இடங்களில் மழைக்காலங்களில் மின்சாரம் செல்வதை தடைசெய்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்துவகை பள்ளிகளிலும் மழைக்காலங்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் விபத்துகளில் இருந்து பாதுகாப்பதற்கென உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள, அவ்வப்போது பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் பள்ளி பாதுகாப்பிற்கென, ஆய்வு அலுவலர்களும், பள்ளித்தலைமை ஆசிரியர்களும் கூடுதல் கவனம் செலுத்திடும் பொருட்டு, கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.
1. மாணவர்கள் விடுமுறை நாட்களில் ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் குளிப்பதற்கு பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது என பெற்றோர்களுக்கு அறிவுரைகள் வழங்கிட தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
2. கடற்கரையோரம் உள்ள மாணவர்களின் பெற்றோர்களுக்கும் மேற்கூறிய அறிவுரைகள் வழங்கிட தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
3. மாணவர்கள் மிதிவண்டிகளில் பள்ளிக்கு வரும்போது பாதுகாப்பாக வர அறிவுரை கூறவேண்டும்.
4. மழைக் காலங்களில் மாணவர்களும், அவர்தம் உடைமைகளும் மழையில் நனையாமல் இருக்கும் பொருட்டு மழைக் கோட்டுகளையோ அல்லது குடைகளையோ பயன்படுத்த அறிவுரை வழங்கவேண்டும்.
5. தொடர் மழை காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே, சுற்றுச்சுவர் உறுதி தன்மையை கண்காணிக்க வேண்டும். பழுதடைந்துள்ள சுற்றுச்சுவர் பகுதிகளைச் சுற்றி வேலி அல்லது தடுப்புகளை ஏற்படுத்திட வேண்டும்.
6. மழையின் காரணமாக பள்ளியின் சில வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் பாதிக்கப்பட்டிருப்பின் அத்தகைய வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் பயன்படுத்தாமல் பூட்டிவைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
7. அனைத்து மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா என்றும், மின் கசிவு, மின்சுற்று கோளாறுகள் ஏதேனும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிபடுத்திடவும், தேவையெனில் மின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்துவைக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. இத்தகைய நேர்வுகளில் மின்வாரிய பொறியாளரை உடனடியாக தொடர்புகொண்டு இதனை சரிசெய்திட அறிவுறுத்தப்படுகிறது.
8. மின் மோட்டார்கள் அமைந்துள்ள இடங்கள் பாதுகாப்பாக உள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
9. பள்ளி வளாகத்தில் உள்ள நீர்தேக்கப் பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டி, மற்றும் தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை மூடப்பட்ட நிலையில் உள்ளனவா என்று உறுதி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.
10. மழைக்காலங்களில் ஏரிகள், ஆறுகளில் நீர்ப்பெருக்கு அதிகம் உடைப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், விடுமுறை காலங்களில் மாணவர்கள் வெளியே செல்வதை தவிர்க்கவும், குறிப்பாக காட்டாற்று வெள்ளம் ஏற்படும் அபாயமுள்ள நீர்நிலைகளுக்கு அருகே வேடிக்கை பார்க்க அனுமதிக்கக்கூடாது என பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்குவதுடன், பெற்றோர்களுக்கும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமையாசிரியர்கள் கோரப்படுகிறார்கள்.
11. பழுதடைந்த அல்லது அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை மாணவர்கள் தொடுவதோ அல்லது மின்கம்பி வடம் பதிப்பதற்கான பள்ளம் தோண்டியுள்ள பகுதிகளுக்கு அருகாமையில் செல்வதோ கூடாது என பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமையாசிரியர்கள் கோரப்படுகிறார்கள்.
12. மழைக்காலங்களில் இடி, மின்னல் போன்வற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மாணவர்கள் மரங்களின் கீழ் ஒதுங்குவது கூடாது என பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமையாசிரியர்கள் கோரப்படுகிறார்கள்.
13. மாணவர்கள் சாலையில் மழைநீர் கால்வாய்கள் பாதாள சாக்கடைக் குழிகள் இருக்கும் இடங்களில் கவனமாக செல்வதுடன் அதனை தவிர்க்க பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமையாசிரியர்கள் கோரப்படுகிறார்கள்.
14. பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள் ஏதேனும் இருப்பின் அதனை உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும்.
15. பள்ளி வளாகத்தில் ஆபத்தானநிலையில் உள்ள உயர்மின் அழுத்தமுள்ள மின்கம்பங்கள், மற்றும் அறுந்து தொங்கக்கூடிய மின்கம்பிகள் இருப்பின் அவைகளை உடனடியாக மின்வாரியத்தின் துணையுடன் அகற்றப்படவேண்டும்.
16. சுவிட்சுகள் (switches) சரியாக உள்ளனவா, மழைநீர் படாதவண்ணம் உள்ளனவா என்பதையும் தலைமையாசிரியர்கள் ஆய்வு செய்யவேண்டும். பழுதடைந்த சுவிட்சுகள் உள்ள இடங்களில் மழைக்காலங்களில் மின்சாரம் செல்வதை தடைசெய்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
17. பள்ளியில் உள்ள அனைத்துக் கட்டிடங்களின் மேற்கூரைகள், கைப்பிடிச்சுவர்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் சன்னல், கதவுகளுக்கு மேல் உள்ள கைப்பிடிச் சுவர்கள் உறுதியாக உள்ளனவா என்று அவ்வப்போது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேற்கூரையில் நீர் தேங்காவண்ணம் உடனடியாக தேங்கியுள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
18. பள்ளி வளாகத்தில், கட்டிட பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெறும் இடங்களில் பள்ளங்களை சுற்றி பாதுகாப்பான தடுப்பு அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.
19. பருவகால மாற்றங்களால் மாணாக்கர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களிலிருந்து (குறிப்பாக டெங்கு, சிக்குன்குனியா போன்ற காய்ச்சல்களிலிருந்து) பாதுகாத்துக் கொள்வதற்கான தேவையான அறிவுரைகளை வழங்குவதுடன் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளபடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளவேண்டும். மேலும், மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பின் காலதாமதம் இல்லாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை/ ஆரம்ப மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள
சுகாதார நிலையங்களுக்கு சென்று அறிவுறுத்தவேண்டும்.
20. மாணவர்கள் வசிக்கும் வீடுகளிலும் சுற்று வட்டாரங்களிலும் மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். மழை நீர் தேங்குவதினால் கொசுக்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம் என்பதை உணர்த்த வேண்டும்.
21. பள்ளிகளில் இடிக்கக்பட வேண்டிய கட்டடங்கள் இருப்பின் மாவட்ட ஆட்சியரை தொடர்ப்பு கொண்டு இடித்திடல் அவசியம். இல்லையெனில் அக்கட்டடத்திற்கு அருகில் செல்லாமல் இருக்க மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
22. பள்ளிகளில் கனமழையால் நீர் தேங்கும் காலங்களில் நீர் இறைக்கும் இயந்திரம் (மின்மோட்டார்) வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் இதர அலுவலகங்களில் உள்ளதா என்பதை தலைமையாசிரியர்கள் உறுதி செய்து வைத்தல் அவசியம்.
23. மழைக்காலங்களில் சுட வைத்த நீரைப் பருக அறிவுறுத்த வேண்டும்.
24. கடலோர பகுதிகள் கொண்ட, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், கடும் மழை அல்லது புயலினால் மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்கள் கடலோர பகுதியின் அருகாமையில் உள்ள பள்ளிகளில் தங்கவைப்பதற்கான உரிய இடவசதி இருப்பின் உரிய முன்னேற்பாடுளை தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட வேண்டும். மேலும் மாவட்ட ஆட்சியரின் அறிவுரைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றி தலைமை ஆசிரியர்கள் செயல்படுவதை, அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளிப்பார்வை மற்றும் ஆய்வின்போது கண்காணிக்க வேண்டும் எனவும், தெரிவிக்கப்படுகிறது.
- மின் இணைப்புகளை மாணவர்கள் தொடாத வகையில் வகுப்பறையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
- பராமரிப்பு நிதி ஒதுக்கியிருப்பதால், இத்தொகை கொண்டு அத்தியாவசிய பணிகளை முடிக்க வேண்டும்.
தாராபுரம்:
வடகிழக்கு பருவமழை இம்மாத இறுதியில் இருந்து துவங்குகிறது. பள்ளிகளுக்கு முதற்கட்ட பராமரிப்பு நிதி ஒதுக்கியதால் மழை துவங்கும் முன்பே பராமரிப்பு வேலைகள் செய்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதோடு பயன்படுத்தாத, இடியும் நிலையில் உள்ள கட்டடங்கள் அருகில் மாணவர்கள் செல்லாத வகையில் தடுப்பு அமைத்தல், தொங்கும் நிலையில் மின் வயர்கள் இருந்தால் அப்புறப்படுத்துதல் அவசியம். மின் இணைப்புகளை மாணவர்கள் தொடாத வகையில் வகுப்பறையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தண்ணீர் தேங்கும் வகையில், பள்ளங்கள் இருந்தால் அதை சமன் செய்வதோடு, பள்ளி வளாகத்திற்குள் கிணறு, ஆழ்துளை கிணறு போன்ற அமைப்புகள் இருந்தால், மூடி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கழிவறைகளை தினசரி சுத்தம் செய்வதோடு, குடிநீர் தொட்டி சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், பள்ளி கட்டடங்களின் அருகில் மரங்கள் இருந்தால், அதன் காய்ந்த இலைகள், குச்சிகள், மேற்கூரையில் இருக்கும் பட்சத்தில், மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. இதை அப்புறப்படுத்துவதோடு வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.பராமரிப்பு நிதி ஒதுக்கியிருப்பதால், இத்தொகை கொண்டு அத்தியாவசிய பணிகளை முடிக்க வேண்டும். தண்ணீர் தேங்காத வகையில் வளாகத்தை தூய்மைப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனர்.
- ரூ. 60 ஆயிரம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை வழங்கினார்.
- எடமணல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வீல்சேர், மெத்தை வழங்கப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி அருகே வைத்தீஸ்வ ரன்கோயில் அடுத்த புங்கனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக அருணாசலம் பணியாற்றி வருகிறார்.
இயல்பாகவே ஏழை, எளிய மக்களுக்கு உதவும் குணம் கொண்ட இவர், தான் கல்வி போதிக்கும் பள்ளி மாணவர்களுக்கு கணினி உபகரணங்கள், கல்வி உபகரணங்கள், உள்ளிட்ட உதவிகளையும், மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களிலும் இடர்பாடுகள் சிக்கிய மக்களுக்கும் உணவு, உடை உள்ளிட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.
இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க வேண்டும் என எண்ணிய அருணாச்சலம் அமெரிக்கா வாழ் இந்தியரான தனது நண்பர் மோகன் சுதிர் உடன் இணைந்து சுமார் ரூ.10 லட்சம் நிதி திரட்டி தற்போது 8 அரசு பள்ளிக்கு தலா 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கினார்.
அதேபோன்று இரண்டு அரசு மருத்துவமனைகளுக்கு கட்டில், மெத்தை, சக்கரநாற்கா லிகள் உள்ளிட்ட உபகர ணங்களை வழங்கினார்.
புங்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.
வட்டார கல்வி அலுவலர்கள் பூங்குழலி, நாகராஜ், கொள்ளிடம் வட்டார கல்வி அலுவலர் கோமதி, வட்டார மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி,பள்ளி தலைமை ஆசிரியர் ராஜா,ஊராட்சி மன்ற தலைவர் ஜூனைதா பேகம்கமாலூதீன் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து எம்.எல்.ஏ எம்.பன்னீர்செல்வம் பங்கேற்று அரசு பள்ளிக ளுக்கான குடிநீர் சுத்தகரிப்பு இயந்திரங்களை அந்தந்த பள்ளி தலைமைஆசிரியரிடம் வழங்கினார்.
அதேபோல் வைத்தீஸ்வரன்கோயில், எடமணல் அரசு ஆரம்ப சுகாதாரநிலையங்களுக்கு உரிய வீல்சேர், மெத்தை உள்ளிட்டபொ ருட்களையும் ஒப்படைத்தார்.
இதில் திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரன்,மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- திரைப்படம் வழியே, விலங்குகள், தாவரங்கள், சூழலை பாதுகாப்பதன் அவசியம், பங்களிப்பு முறை குறித்து, குழந்தைகளுக்கு புரியும் வகையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
- திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம், கதாபாத்திரங்கள் குறித்து விவாதித்து அறிக்கை வடிவில் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்ற ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பூர்:
கானுயிர்களின் வாழ்வியலை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட தமிழ் திரைப்படமான, தி ஜங்கிள் கேங் திரைப்படத்தை பள்ளிகளில் திரையிடுமாறு, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளி மாணவர்கள் மத்தியில் ஒளிந்திருக்கும், கலைத்திறனை வெளிக்கொணரும் வகையில் சர்வதேச, தேசிய விருதுகள் பெற்ற சிறந்த சிறார் திரைப்படங்கள், மாதந்தோறும் திரையிடப்படுகின்றன. இம்மாதத்திற்கான திரைப்படமாக 2012ல் தமிழில் வெளியான, தி ஜங்கிள் கேங் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு, பதிவிறக்குவதற்கான லிங்க் பள்ளி எமிஸ் இணையதளத்தில் அனுப்பப்பட்டுள்ளது.
இப்படத்தில் அனிமேஷன் கதாபாத்திரங்களான கருப்பு மான், வாத்து, தேவாங்கு ஆகியவை தங்கள் பயணத்தை வடகிழக்கு இந்தியாவில் இருந்து துவங்கி, மத்திய பகுதி வழியாக தென்னிந்தியாவை வந்தடைகின்றன.கதையில் காண்டாமிருகம், புலி, யானை, கரடி போன்ற விலங்குகளின் தகவல்கள் குழந்தைகளுக்கு புரியும் வகையில் சொல்லப்பட்டுள்ளன.
திரைப்படம் வழியே, விலங்குகள், தாவரங்கள், சூழலை பாதுகாப்பதன் அவசியம், பங்களிப்பு முறை குறித்து, குழந்தைகளுக்கு புரியும் வகையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.பல்வேறு விருதுகளை குவித்த இப்படத்தை பள்ளிகளில் திரையிடுவதோடு மாணவர்களை குழுக்களாக பிரித்து, திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம், கதாபாத்திரங்கள் குறித்து விவாதித்து அறிக்கை வடிவில் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்ற ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதத்தில் காலாண்டு தேர்வு, விடுமுறை அறிவிக்கப்பட்டு குறைந்த நாட்களே பள்ளி இயங்கியதால், நவம்பர் முதல் வாரத்திற்குள் இப்படத்தை மாணவர்களுக்கு திரையிட்டு காட்டுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தி கிட் திரைப்படத்தை பள்ளிகளில் திரையிட உத்தரவிடப்பட்டுள்ளது.
- இதைஎழுதி, இயக்கி, நடித்ததோடு, சார்லி சாப்ளினே இசையமைத்துள்ளார்.
திருப்பூர்:
நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் குழந்தைப்பருவ அனுபவங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட, தி கிட் திரைப்படத்தை பள்ளிகளில் திரையிட உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு, உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கற்பனைத்திறனை மேம்படுத்தவும், கலை ஆர்வத்தை தூண்டி, தனித்திறன்களை வெளிக்கொணரும் வகையிலும், மாதந்தோறும் ஒரு சிறார் திரைப்படம் திரையிடப்படுகிறது.
திரைப்படம் முடிந்த பிறகு மாணவர்களை குழுவாக அமர வைத்து, திரைப்படத்தின் மையக்கரு, பிடித்த கதாபாத்திரம் எது, குறிப்பிட்ட கதாபாத்திரத்தை ஏற்று நடித்தல், படத்தின் முடிவை மாற்றி அமைத்தல் குறித்து விவாதிக்க வைக்க வேண்டும். திரைப்படம் குறித்து மாணவர்கள் கலந்துரையாடியதை அறிக்கையாக தொகுத்து, எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றப்படுகிறது.
1921ல் வெளியான இத்திரைப்படம், நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் குழந்தைப்பருவ அனுபவங்களை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட மவுன திரைப்படம்.இதைஎழுதி, இயக்கி, நடித்ததோடு, சார்லி சாப்ளினே இசையமைத்துள்ளார். ஐக்கிய மாகாணங்களின் தேசிய திரைப்படப் பதிவேட்டில் பாதுகாக்கப்பட்டு வரும் இத்திரைப்படம் குழந்தைகளின் கற்பனைத்திறனை மேலும் விரிவாக்கும்.