search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காஷ்மீர்"

    • காஷ்மீரில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன.
    • 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நேற்று தொடங்கி உள்ளது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ம் ஆண்டில் மத்திய அரசு ரத்து செய்தது. அதோடு அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரித்தது. அங்கு தற்போது ஜனாதிபதி ஆட்சி நடந்து வருகிறது.

    காஷ்மீரில் தேர்தல் நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையம் அதற்கான ஏற்பாடுகளை செய்தது. ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள சட்டசபையில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு செப்டம்பர் 18, 25, மற்றும் அக்டோபர் 1-ந்தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 18-ந்தேதியும், 2-ம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு 25-ந்தேதியும், 3-ம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்டோபா் மாதம் 1-ந்தேதியும் தோ்தல் நடத்தப்பட உள்ளது.

    முதல் கட்ட தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. 24 தொகுதிகளிலும் போட்டியிட மொத்தம் 279 பேர் மனுதாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் நேற்று பரிசீலனை செய்யப்பட்டன.

    அப்போது 35 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் மீதமுள்ள 244 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. மனுக்களை வாபஸ் பெற இன்று பிற்பகல் வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

    இன்று கட்சி மாற்று வேட்பாளர்கள் வாபஸ் பெறுவார்கள். இறுதியில் எத்தனை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்பது இன்று மாலை தெரியவரும்.

    இந்த நிலையில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நேற்று தொடங்கி உள்ளது. கங்கன், ஹஸ்ரத் பால், லாக் சவுக், ஈத்கா, பத்காம், பீா்வா, கான்சாஹிப், குலாப்கா் (தனி), காலாகோட்-சுந்தா்பானி, நெளஷேரா, ரஜவுளரி (தனி), சுரன்கோட் (தனி), பூஞ்ச் ஹவேலி உள்பட இரண்டாம் கட்ட தோ்தல் நடைபெறும் 26 தொகுதிகளில் நேற்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

    2-ம் கட்ட தோ்தலில் மொத்த வாக்காளா்கள் 7.74 லட்சம் போ் உள்ளனா். கோடைகால தலைநகரான ஸ்ரீநகரில் உள்ள 8 தொகுதி களுக்கும் இந்த கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதன் பிறகு 3-ம் கட்ட தேர்தல் அக்டோபர் 1-ந்தேதி நடைபெறும்.

    பதிவாகும் வாக்குகள் அக்டோபா் 4-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    • அதிகாரிகளுக்கு தேர்தல் பணி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
    • தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

    புதுடெல்லி:

    மராட்டிய மாநில சட்ட சபையின் 5 ஆண்டு பதவி காலம் வருகிற நவம்பர் மாதம் 26-ந்தேதி நிறைவு பெற உள்ளது. அதுபோல அரியானா மாநில சட்டசபை யின் 5 ஆண்டு கால பதவி காலம் நவம்பர் 3-ந்தேதி நிறைவு பெறுகிறது.

    ஜார்க்கண்ட் மாநில சட்டசபையின் பதவி காலம் அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் 5-ந்தேதி முடிய உள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் சட்டசபை தேர்தலை நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    மராட்டியம், அரியானா, ஜார்க்கண்ட், காஷ்மீர் ஆகிய 4 மாநிலங்களிலும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் முதல் செய்ய தொடங்கியது.

    இதனால் இந்த 4 மாநிலங்களிலும் அரசியல் கட்சி தலைவர்களும், அதிகாரிகளும் சுறுசுறுப்பு அடைந்துள்ளனர். முதல் கட்டமாக இந்த 4 மாநி லங்களிலும் நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வரும் அரசு உயர் அதிகாரிகளை மாற்றம் செய்யும் பணி நடந்தது.

    இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையம் 4 மாநிலங்களிலும் அரசியல் சூழ்நிலையை ஆய்வு செய்தது. அதோடு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியை தீவிரப்படுத்தியது. அடுத்த கட்டமாக அதிகாரிகளுக்கு தேர்தல் பணி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    ஓட்டுப்பதிவை எப்போது நடத்தலாம் என்பதற்கான ஆலோசனை கூட்டங்கள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றன. இதற்காக தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் 4 மாநிலங்களுக்கும் சென்று வந்தனர்.

    குறிப்பாக காஷ்மீரில் பாதுகாபபு ஏற்பாடுகள் பற்றி கடந்த சில தினங்களாக தீவிர ஆய்வு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றன.

    இதையடுத்து 4 மாநில சட்டசபை தேர்தல் தேதி அட்டவணையை இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. இதனால் இந்த 4 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருகின்றன.

    இதையடுத்து 4 மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வை நடத்த தொடங்கி உள்ளன.

    இந்த 4 மாநிலங்களில் அரியானாவில் பா.ஜ.க. ஆட்சி உள்ளது. மராட்டி யத்தில் பா.ஜ.க.-சிவசேனா (ஷிண்டே அணி) கூட்டணி ஆட்சி உள்ளது. அங்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்ற உத்தவ் தாக்கரே காங்கிரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். ஆனால் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்பட வில்லை.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு காங்கிரசும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன.

    காஷ்மீரில் யூனியன் பிரதேச கவர்னர் மூலம் ஆட்சி நடந்து வருகிறது. இந்த 4 மாநிலங்களில் அரியானாவில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் மிக மிக தீவிரமாக உள்ளது. அங்கு தேர்தல் பிரசாரம் இப்போதே களை கட்ட தொடங்கி உள்ளது. அந்த மாநிலத்தில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க போகிறேன் என்று காங்கிரஸ் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தான் ராணுவத்தினர் சதித்திட்டம் தீட்டி இருப்பதாக தகவல்.
    • காஷ்மீர், பஞ்சாப் இரு மாநில அரசுகளும் உஷார் படுத்தப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து வழங்கும் வகையில் 370-வது சட்டப் பிரிவு அமலில் இருந்தது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான சட்டம்தான் இருக்க வேண்டும் என்ற நோக்கத் துடன் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி 370-வது சட்டப் பிரிவை மத்திய அரசு அதிரடியாக நீக்கியது.

    இதன் மூலம் காஷ்மீர் மாநிலம் அனுபவித்து வந்த சிறப்பு சட்ட சலுகைகள் பறிபோனது. இதற்கு காஷ்மீரில் உள்ள அனைத்துக் கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    370-வது சட்டப்பிரிவை நீக்கியதோடு காஷ்மீர் மாநிலத்தை லடாக், ஜம்மு என்று யூனியன் பிரேதசங்களாக பிரித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து தீவிரவாதிகளின் பயங்கரவாத செயல்கள் ஒடுக்கப்பட்டன.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது. அதை ஒடுக்குவதற்காக மத்திய அரசு தீவிர நட வடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதற்கிடையே காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட 5-வது ஆண்டு தினமான இன்று (திங்கட்கிழமை) காஷ்மீரிலும் பஞ்சாப் மாநிலத்திலும் மிகப்பெரிய தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு படை சதி திட்டம் தீட்டியிருப்பது தெரிய வந்துள்ளது.

    காஷ்மீர் எல்லையில் உள்ள தீவிரவாதிகள் அவர்களது இந்திய ஆதர வாளர்களுடன் தொலைபேசியில் பேசியதை ஒட்டு கேட்டு உளவுப்படை இதை உறுதிப்படுத்தி உள்ளது.

    சர்வதேச உளவு அமைப்புகளும் காஷ்மீரில் மிகப்பெரிய தாக்குதலுக் கான சதி திட்டம் நடந்து வருவதாக இந்தியாவை எச்சரித்துள்ளது. இதையடுத்து காஷ்மீர், பஞ்சாப் இரு மாநில அரசுகளும் உஷார் படுத்தப்பட்டுள்ளன.

    காஷ்மீரில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எல்லையில் கண்காணிப்பும், சோதனை யும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    காஷ்மீரில் இயல்பு நிலை பாதிக்காத வகையில் வாகன சோதனையும் நடந்து வருகிறது.

    • பாகிஸ்தான் எல்லையில் இருந்து பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்றனர்.
    • பயங்கரவாதிகள் கொண்டு வந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் கிரண் கிராமம் அருகே உள்ள சர்வதேச எல்லையில் எல்லை பாதுகாப்புப்படையினர் இன்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

    அப்போது பாகிஸ்தான் எல்லையில் இருந்து பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்றனர். இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட பாதுகாப்புப்படையினர், பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    மேலும், பயங்கரவாதிகள் கொண்டு வந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    • பயங்கரவாதிகள் குறித்து தகவல் கொடுத்தால் தலா 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவித்தனர்.
    • பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

    ஜம்மு காஷ்மீர்:

    ஜம்மு-காஷ்மீரில் மலைப்பாங்கான மாவட்டத்தில் ஜூன் 11-12 தேதிகளில் இரட்டை பயங்கரவாத தாக்குதலில் 6 பாதுகாப்பு வீரர்கள் காயம் அடைந்தனர். இரட்டை தாக்குதல்களுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினர் தங்கள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர். மற்றும் மாவட்டத்தில் ஊடுருவி செயல்படுவதாக சந்தேகிக்கப்படும் 4 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் குறித்து தகவல் கொடுத்தால் தலா 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவித்தனர்.

    இந்த நிலையில் தோடா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு இருந்து பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு பயங்கரவாதி பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.



    • பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
    • பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபோர் மாவட்டத்தில் உள்ள ஹடிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு இருந்து பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டதில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

    இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
    • துப்பாக்கி சூட்டில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் ரியாசி, கதுவா மற்றும் தோடா மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களில் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து 4 இடங்களில் தாக்குதல் நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். அப்போது 2 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து ஏராளமான வெடி மருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம் குறித்து டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷா உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், ஜம்மு காஷ்மீர்துணை நிலை கவர்னர் மனோஜ்சின்ஹா மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதலை அமித்ஷா வழங்கினார்.

    இந்நிலையில் வடக்கு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள அரகம் பகுதியில் நேற்றிரவு 2 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.

    இதில் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • திர்ப்பாளர்களை சமாதானப்படுத்த அரசாங்கம் பல கோடி ரூபாய் மானியத்தை அறிவித்தனர்.
    • படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    முசாபராபாத்:

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. எதிர்ப்பாளர்களை சமாதானப்படுத்த அரசாங்கம் பல கோடி ரூபாய் மானியத்தை அறிவித்தனர்.

    ஆனாலும் பொதுமக்கள் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், முசாபராபாத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

    துணை ராணுவ வீரர்களின் வாகன கான்வாய் முசாபராபாத் சென்றடைந்த போது, ஷோரன் டா நக்கா கிராமத்திற்கு அருகே பொதுமக்கள் கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். துணை ராணுவ வீரர்கள் பொதுமக்களை கலைந்து போகுமாறு வலியுறுத்தினர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

    இதில் பொதுமக்களில் 3 பேர் இறந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் சிலரது நிலைமை மோசமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அப்பகுதியில் இணைய சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    • மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
    • போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த தலைவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றை கண்டித்து மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

    இந்த போராட்டத்தை ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி குழு என்ற அமைப்பு தொடங்கியது. வர்த்தகர்களும் போராட்டத்தை குதித்தனர். மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் சுதந்திரம் தேவை என கோஷம் எழுப்பினர். இதில் முஷாபராபாத் உள்பட சில மாவட்டங்களில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு மோதல் உருவானது. பல வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. பேராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. சில இடங்களில் போலீசார், பாதுகாப்பு படையினரை மக்கள் தாக்கினார்கள். இதில் சில போலீஸ்காரர்களை பள்ளத்தில் தள்ளி விட்டனர்.

    இந்த மோதலில் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார். 90 பேர் காயமடைந்தனர். இதையடுத்து போலீசாரும்,துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டனர். அவர்கள் கண்ணீர் குண்டுகளை வீசினர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த தலைவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரம் அடைந்துள்ளது.

    • பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார்.
    • பிரதமர் பதவியில் இருப்பவர் அநாகரீகமான செயலில் ஈடுபடக்கூடாது.

    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலை வருமான பரூக் அப்துல்லா பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-

    பிரதமர் மோடி ஓட்டுக்காக இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். அவரை அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாரத்தில் இருந்து விரட்ட வேண்டும்.

    முஸ்லிம்கள், இந்துக்கள் மத்தியில் திட்டமிட்டு பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார். பிரதமர் பதவியில் இருப்பவர் இத்தகைய அநாகரீகமான செயலில் ஈடுபடக்கூடாது.

    பிரதமர் மோடி வெளி நாட்டுக்கு செல்லும் போது இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் அனைவருக்கும் அவர்தான் பிரதமர். ஆனால் அவர் உள்ளூரில் ஓட்டுக் கேட்கும் போது, அனைவரையும் மத ரீதியாக பிரிக்க முயற்சி செய்கிறார்.

    பிரதமர் மோடி எப்போ தும் ராமரை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு அவர் ராமரை பற்றி அதிகம் பேசியதில்லை. தேர்தல் என்றதும் ராமரை கையில் எடுத்துள்ளார்.

    ராமரை பிரதமர் மோடி அருகில் இருந்து பார்த்தது போலவே பேசுகிறார். ஓட்டுக்காக அவர் எந்த பொய்யையும் சொல்வார். கடந்த தேர்தலின் போது புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப் பட்ட விவகாரத்திலும் நிறைய சதி உள்ளது.

    வெடிகுண்டுகளுடன் அந்த பகுதியில் கார், 3 வாரங்களாக சுற்றிக்கொண்டே இருந்தது. குறிப்பிட்ட பகுதிக்கு வந்ததும் அப்பாவி மக்களை கொல்லும் வகையில் தாக்குதல் நடத்தப்பட்டது.

    பிரதமர் மோடி இந்த தாக்குதலுக்கு வெளி யாட்கள் தான் காரணம் என்றார். பிறகு பாகிஸ்தா னில் துல்லிய தாக்குதல் நடத்தியதாக கூறினார். இந்த பொய்யை சொல்லியே மோடி கடந்த முறை தேர்தலில் வெற்றி பெற்றார்.

    இப்போது மத ரீதியாக வெறுப்புணர்வை தூண்டி பேசி வருகிறார். காஷ்மீரில் 370-வது சட்டப் பிரிவு நீக்கப்பட்டதை ஏற்க இயலாது. இதற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.

    தற்போது இருப்பது காந்தியின் இந்தியாவில் அல்ல. மோடியின் இந்தியா. மோடி இந்தியாவில் முஸ்லிம்கள், இந்துக்கள் தனித்தனியாக இருக்க வேண்டும் என்கிறார்கள். அதை நாங்கள் ஏற்கமாட்டோம்.

    இவ்வாறு பரூக் அப்துல்லா பேசினார்.

    • ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் பனிப்பொழிவு மிகுதியாக உள்ளது
    • பனிமழை மற்றும் பனிக்காற்றால் ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது.

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இயல்பை விட அளவுக்கு அதிகமான வெப்பம் பதிவாகி வருகிறது. மேலும், ஒவ்வொரு நாளும் வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்றும், ஒவ்வொரு பகுதிக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதுமே கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    அதே சமயம் ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் பனிப்பொழிவு மிகுதியாக உள்ளது. பனிமழை மற்றும் பனிக்காற்றால் ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது.

    இந்நிலையில் காஷ்மீரின் சோனாமார்க் பகுதியில் உள்ள சர்பால் என்ற இடத்தில் பெரும் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவால் சேதம் எதுவும் இல்லை என முதற்கட்டத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பனிச்சரிவு காரணமாக வனப்பகுதியை ஒட்டியுள்ள 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
    • துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.

    பந்திபோரா:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அங்குள்ள சிந்திபந்தி கிராமத்தில் பாதுகாப்பு படையினர் வீடு வீடாக சென்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.

    இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, போலீசார் மற்றும் ராணுவத்தின் கூட்டுக் குழு பந்திபோராவில் சுற்றிவளைத்து பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

    ×