என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அ.தி.மு.க"

    • திமுக அரசுக்கு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
    • அதிமுக கொண்டு வந்த பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்தார்.

    திருவாரூர்:

    தமிழக அரசுஅண்மையில் உயர்த்தி உள்ள சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு காரணமாக மக்கள் மிகுந்த அல்லல் பட்டு வருவதாகவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதாகவும் கூறி திருவாரூர் மாவட்ட அதிமுக சார்பில், திருவாரூர் அருகே உள்ள புலிவலத்தில் ஒன்றியச் செயலாளர் மணிகண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் எம் எல் ஏ கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

    அப்போது திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி அனைத்தையும் மீறி விட்டதாகவும், ஒரு வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை என்றும், மாறாக அதிமுக கொண்டு வந்த பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்தார்.

    மின் கட்டண உயர்வு சொத்து வரி உயர்வு பால் விலை உயர்வு போன்ற பல்வேறு சுமைகளை மக்கள் மீது வைத்துள்ள திமுக அரசுக்கு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்தார்

    திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சரும் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினரான காமராஜ் சிறப்புரையாற்றினார் இதில் ஒன்றிய செயலாளர் மணிகண்டன் செந்தில் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர்.

    இதுபோல் நன்னிலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும் முன்னாள் அமைச்சர் இரா காமராஜர் எம்எல்ஏ கலந்து கொண்டார் இதில் ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன் குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கொரடாச்சேரி வெட்டாற்று பாலம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் அரங்க.சத்தியமூர்த்தி தலைமை வகித்தார்.

    மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் எஸ்.கலியபெருமாள் முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் சேகர், பாஸ்கர், கொரடாச்சேரி பேரூர் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் ஜெகநாதன், விஸ்வநாதன், தாழை.செல்லபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் விலைவாசி உயர்வுக்கு எதிராகவும், விலைஉயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

    • தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்றுள்ளது.
    • பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நான்கு ஆண்டுகள் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி செய்தார்.

    உடுமலை :

    திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டஅ.தி.மு.க. செயலாளர் மகேந்திரன் தலைமையில் உடுமலை சட்டமன்ற தொகுதி கண்ணமநாயக்கனூரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. சட்டமன்ற கொறடாவுமான எஸ். பி., வேலுமணி கலந்து கொண்டு பேசியதாவது:- அ.தி.மு.க. உருவாகி 50 ஆண்டுகள் ஆன நிலையில் இன்றும் தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்றுள்ளது .குறிப்பாக எம்ஜிஆர் கொண்டு வந்த திட்டங்களால்ஏழை எளிய மக்கள் அதிகம் பேர் பயன்பெற்றுள்ளனர். 17 லட்சம் உறுப்பினர்கள் மூலம் அ.தி.மு.க. தொடங்கப்பட்ட நிலையில் ஜெயலலிதாவின் மூலம் ஒன்றரை கோடி அதிமுக., தொண்டர்களுடன் கட்சி வீர நடை போட்டது. பின்னர் அம்மாவின் ஆசி பெற்ற தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நான்கு ஆண்டுகள் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி செய்தார்.

    திமுக. ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்படாத பல நல்ல திட்டங்களை எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றினார். தற்சமயம் திமுக. அரசு இரண்டு ஆண்டு சாதனை என பொதுக்கூட்டங்கள் நடைபெறும் நிலையில் பொதுமக்கள் இடையே கடும் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுக. ஆட்சி காலத்தில் எடப்பாடியார் கொண்டு வந்த திட்டங்களை முதல்வர் மு. க. ஸ்டாலின் செயல்படுத்தி வருகின்றார். மொத்தத்தில் எதுவும் தெரியாத முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் உள்ளார்.

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொரோனாவை முழுவதும் கட்டுப்படுத்தியது. அதிமுக. ஆட்சிக் காலத்தில் அத்திக்கடவு அவிநாசி திட்டம் ,ஆனைமலை நல்லாறு திட்டம் போன்ற முக்கியமான திட்டங்களை நிறைவேற்றியது. குறிப்பாக ஏழை எளிய மக்கள் மருத்துவரின் கனவு நிறைவேறாமல் இருந்த நிலையில் இட ஒதுக்கீடு அறிவித்த நிலையில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களும் தற்போது மருத்துவராகியுள்ளனர். சட்டமன்ற தேர்தலிலும் உள்ளாட்சி தேர்தலிலும் பல்வேறு தில்லுமுல்லு செய்து தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது .

    சட்ட மன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக. ஆட்சி அமைக்கப்படுவது உறுதி. பல்வேறு கட்ட சட்ட போராட்டத்தில் ஈடுபட்டு எடப்பாடியார் வெற்றி பெற்றுள்ளார். இதனால் அதிமுக.வில் இணைய பலரும் முன் வந்து உள்ளனர். திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேலாக உறுப்பினர்கள் சேர்க்கப்படும் என மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளதால் உறுப்பினர் சேர்க்கைையை தீவிர படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சார்பில் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் ,பேரூர் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. மாநாடு தமிழ்நாட்டிற்கு ஒரு திருப்பு முனையாக அமையும் என கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
    • 20 லட்சத்திற்கும் அதிகமானோர் மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.

    சிவகாசி

    அ.தி.மு.க. வீர வரலாற் றின் பொன்விழா எழுச்சி மாநாடு வருகிற 20-ந்தேதி மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற் பது குறித்து சிவகாசி சட்ட மன்ற தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நேற்று நடைபெற்றது. அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை தாங்கி பேசியதா–வது:-

    மதுரையில் நடைபெறும் வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாட்டில் எடப்பாடியார் பேச்சை கேட்க நாம் அனைவரும் அணி திரண்டு செல்ல வேண்டும். விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் இருந்து 20 ஆயிரம் பேர் கலந்து கொள்கிறோம். அனைவரும் பாதுகாப்பாக சென்று வர வேண்டும். அ.தி.மு.க. மாநாடு தமிழ்நாட் டிற்கு திருப்பு முனையாக அமையும். 20 லட்சத்திற்கும் அதிகமானோர் மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.

    நம்முடைய இயக்கத்தினு–டைய வளர்ச்சியை பார்த்து இன்றைக்கு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். அண்ணா திராவிட முன் னேற்ற கழகம் கட்டுக்கோப்பான ஒரு இயக்கம். ராணுவ கட்டுப்பாடோடு இயங்கும் ஒரு இயக்கம். எடப்பாடியார் தலைமையிலே 2 கோடிக்கு அதிகமான தொண்டர்களை உறுப்பினர்களை கொண்ட மாபெரும் இயக்கமாக இந்த இயக்கம் இன் றைக்கு வளந்திருக்கிறது. டெல்லியில் இருக்கின்ற அரசியல் தலைவர்களே வியக்கின்ற அளவில் நம்முடைய இயக் கத்தை எடப்பாடியார் மூன்றாவது அத்தியாயத் திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றார்.

    வரும் காலம் நமது காலம் என்பதை நிரூபிக்கின்ற வகையில், இந்த மாநாடு சிறக்க இருக்கின்றது. நாம் அத்தனை பேரும் வந்திருக் கின்ற ஒன்றிய, நகர, செயலாளர்கள் கட்சியினுடைய முக்கியஸ்தர்கள் பகுதி செயலாளர்கள், பொதுக் குழு உறுப்பினர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் தாங்கள் அழைத்துச் செல் கின்ற கழக நிர்வாகிகளை பொதுமக்களை அந்தந்த வண்டிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமித்து பத்திரமாக பாதுகாப்பாக அவர்களை அழைத்து செல்ல வேண்டும்.

    மாநாட்டிற்கு காலை யிலே 10 மணிக்கு கிளம்பிட வேண்டும். 10 மணிக்கு கிளம்பினால்தான் அங்கு சிரமமின்றி செல்லலாம். கட்சி பொறுப்பாளர்களை, கட்சித் தொண்டர்களை, கிராமத்து இளைஞர்களை, பெண்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று பாதுகாப்பாக திரும்பி அழைத்து வரவேண்டும். அவர்களுக்கு எந்த விதமான பிரச்சினைகளும் உருவாகக்கூடாது என்பதை பற்றி தான் அடிக் கடி மாவட்டச் செயலாளர் கூட்டங்களிலே நம்முடைய கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் சொல்லி வருகிறார்.

    அவருடைய அந்த வாக்கை வேத வாக்காக நினைத்து நாம் அனைவரும் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். விருது–நகர் மாவட்டத்தில் இருந்து பிரச்சினை இல்லாமல் வந்தார்கள், மாநாட்டில் கலந்து கொண்டார்கள், பொதுச்செயலாளர் எடப் பாடியார் பேச்சை கேட்டார்கள், ஊர்களுக்கு அமைதி–யாக திரும்பி சென்றார்கள் என்ற நிலைதான் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர் மன், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் மான்ராஜ், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரம–ணியன், மாவட்ட எம்.ஜி.–ஆர். மன்ற செயலாளர் எஸ்.என்.பாபுராஜ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலா–ளர் முத்துப்பாண்டி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளை–ஞரணி செயலாளர் பிலிப் வாசு, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் விஜய ஆனந்த்,

    மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுபாஷினி, மாநகர பகுதி கழக செயலா ளர் கிருஷ்ண–மூர்த்தி, சரவ ணக்குமார், கருப்பசாமி பாண்டியன், சாம் (எ) ராஜ அபினேஷ்வரன், ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கி யம், லட்சுமி நாராணயணன், கருப்பசாமி, வெங்கடேஷ், மாவட்ட இலக்கிய அணி தலைவர் மாரிமுத்து, மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், தலைவர் செல்வம், மாவட்ட மீணவ ரணி செயலாளர் ரெங்கபா ளையம் காசிராஜன், மாநகர கவுன்சிலர் கரைமுருகன்,

    கூட்டுறவு வங்கி தலைவர் ரமணா, பொதுக்குழு உறுப்பினர் பாலாஜி, மாவட்ட கழக பொருளாளர் தேன்ராஜன், ஒன்றிய துணை செயலாளர் விஸ்வ நத்தம் மணிகண்டன், ஒன்றிய இணை செயலாளர் இளநீர் செல்வம், பள்ள பட்டி ரமேஷ், வழக்கறிஞர் மாரீஸ்குமார், தலைமைக் கழக பேச்சாளர் சின்னத் தம்பி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.கே.பாண்டியன்,

    ஒன்றிய கவுன்சிலர் சுடர்வள்ளிசசிக்குமார், முன்னாள் நகர் மன்ற கவுன்சிலர் காமாட்சி, திருத் தங்கல் முன்னாள் நகர செயலாளர் முருகேசன், தொகுதி கணேசன், ஒன்றிய இளைஞரணி சங்கர், மாந கர இளைஞரணி கார்த்திக், மாநகர தகவல் தொழில்நுட்ப பிரிவு மாயாண்டி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண் டனர்.

    • பட்டாசுகள் வெடித்தும் பொது மக்க ளுக்கு இனிப்புகள் வழங் கியும் கொண்டாடினர்.
    • எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தியும் கோஷங்களை எழுப்பினர்.

    ஓசூர், அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் எடப்பாடி பழனிச் சாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல் முறையீட்டு மனு மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தர விட்டது. இதனை வர–வேற்று, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஓசூர்-ராயக்கோட்டை சாலை, தேர்ப்பேட்டை சந்திப்பு பகுதியில் அ.தி.மு.க. மாநகர பகுதி செயலாளர்கள் ராஜி, அசோக், மஞ்சுநாத் மற்றும் முன்னாள் நகர செயலாளரும், மாநகராட்சி எதிர்கட்சி தலைவருமான எஸ்.நாராயணன் ஆகியோர் தலைமையில், பட்டாசுகள் வெடித்தும் பொது மக்க ளுக்கு இனிப்புகள் வழங் கியும் கொண்டாடினர். . அப்போது கட்சியினர், உயர் நீதிமன்ற தீர்ப்பை வர வேற்றும், எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தியும் கோஷங்களை எழுப்பினர்.

    மேலும் இதில், வட்ட செயலாளர்கள் , மாநகராட்சி கவுன்சி லர்கள்,மற்றும் மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தொண் டர்கள் திரளாக கலந்து கொண்டனர்,.

    • பூத் கமிட்டி கூட்டத்தில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேச்சு
    • மணல் கொள்ளை, அமைச்சர்கள் கைது என்று தி.மு.க. மீது மக்கள் மத்தியில் வெறுப்பு ஏற்பட்டு உள்ளது.

    கன்னியாகுமரி :

    அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கொட்டாரத்தில் உள்ள ஒன்றிய கழக அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தாமரை தினேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் தம்பித்தங்கம் முன்னிலை வகித்தார்.

    இந்த கூட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு அதிகமான வாக்குகளை பெற நிர்வாகிகள் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். கட்சி தலைமை என்ன முடிவு எடுக்கின்றதோ அதற்கு நாம் கட்டுப்பட்டு பணியாற்ற வேண்டும். நமக்கு ஒரே எதிரி தி.மு.க தான்.

    மணல் கொள்ளை, அமைச்சர்கள் கைது என்று தி.மு.க. மீது மக்கள் மத்தியில் வெறுப்பு ஏற்பட்டு உள்ளது. நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி, கோவளம் போன்ற கடற்கரை கிரா மத்தை அ.தி.மு.க. மீண்டும் வென்றெடுத்து கன்னியா குமரி தொகுதி என்றைக்கும் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை நிரூபிக்கும். பூத் கமிட்டி நிர்வாகிகள் அமைக்கும் பணியை விரை வாக முடிக்க வேண்டும்.

    இவ்வாறு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேசினார்.

    கூட்டத்தில் தோவாளை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளரும், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவருமான முத்துக்குமார், அகஸ்தீஸ்வரம் பேரூர் அ.தி.மு.க செயலாளர் சிவபாலன், அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆ.கோ.ஆறுமுகம், முத்துசாமி, பார்த்தசாரதி, தங்க நாடார், வக்கீல்பாலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரத்தை குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக நியமனம் செய்த அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்-அமைச்சரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    மேலும் தென்தாமரைகுளம் பேரூர் கழக செயலாளராக பணியாற்றி வந்த தாமரை தினேஷை அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளராக நியமனம் செய்த எடப்பாடி பழனிசாமிக்கும், அதற்கு பரிந்துரை செய்த தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.வுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றிக்காக அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து வாக்குச்சா வடிகளிலும் பூத் கமிட்டி அமைத்து சிறப்பாக பணியாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது. மேற்கண்ட தீர்மானங்கள் உள்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறை வேற்றப்பட்டன.

    குளச்சல் :

    குளச்சல் நகர அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு கலந்துரையாடல் கூட்டம் நகர அலுவலகத்தில் நடைபெற்றது. குளச்சல் நகர செயலாளர் ஆண்ட்ரூஸ் தலைமை தாங்கினார். நகரத்தலைவர் சம்னுத்தீன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் ஆறுமுகராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் ஜெகன் ஆண்டனி, ஆனக்குழி சதீஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்வு, பால் விலை உயர்வு குறித்து நாட்டு மக்களுக்கு எடுத்து வைக்கும் வகையில் வாட்ஸ் அப் மூலம் பிரசாரம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    • அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தல்
    • 1 சென்ட் நிலத்தை கூட விற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது

    நாகர்கோவில், நவ.14-

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.விற்குட் பட்ட கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் ஆகிய 3 சட்டமன்ற தொகுதி களில் பூத் வாரியாக பூத் கமிட்டியினை விரைவாக அமைப்பது தொடர்பான ஆலோ சனை கூட்டம் நாகர் கோவிலில் நடைபெற்றது. அவைத்தலைவர் சேவியர் மனோகரன் தலைமை தாங்கினார். குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். முன் னாள் அமைச்சர் ராஜலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. விற்குட்பட்ட கன்னியா குமரி, நாகர்கோவில், குளச்சல் ஆகிய 3 சட்டமன்ற தொகுதி களில் பூத் வாரியாக பூத் கமிட்டியினை ஏற்கனவே கூறியபடி விரைவாக அமைத்து, பூத் கமிட்டி புத்த கத்தினை வருகிற 18-ந்தேதிக் குள் கட்சி தலைமைக்கு சமர்ப்பிப்பது, குமரி மாவட்ட பத்திரப்பதிவில் நிலத்திற்குரியவர்கள் 1 சென்ட் நிலத்தை கூட விற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஒரு வார காலத்திற்குள் இதற்கு தீர்வு காணப்படவில்லை என்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களையும், பொது மக்களை யும் திரட்டி கண்டன ஆர்ப் பாட்டம் நடத்துவது.

    தோவாளையில் கட்டப்பட்டு வரும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டப பணி களை விரைவில் முடிப்பதற்கு அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்ேவறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் அமைப்பு செயலாளர் பச்சைமால், இலக்கிய அணி மாநில இணை செயலாளர் சந்துரு, மாவட்ட துணை செயலாளர் சுகுமாரன், மாவட்ட இணை செயலாளர் சாந்தினி பகவதியப்பன், மாணவரணி செயலாளர் மனோகரன், குமரி மாவட்ட இளைஞரணி, இளம்பெண் பாசறை செய லாளர் அக் ஷயாகண்ணன், பகுதி செயலா ளர்கள் ஜெயகோபால், ஜெபின் விசு, ஸ்ரீலிஜா, அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெஸீம், தோவாளை தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துக் குமார், மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் ராஜாராம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ரபீக், குளச்சல் நகர செயலாளர் ஆண்ட்ரோஸ், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் பிரிவு செயலாளர் ஆறுமுகராஜா, நிர்வாகி பசலியான் நசரேத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    பகுதி செயலாளர் முருகேஸ்வரன் நன்றி கூறினார்.

    • தி.மு.க.வினர் வட்டச் செயலாளர் ஆனந்த் தலைமையில் பசலியான் நசரேத் முன்னிலையில் இன்று அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
    • 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 100 பேர் தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வடிவீஸ்வரம் ஊட்டுவாழ் மடம் பகுதியைச் சேர்ந்த தி.மு.க.வினர் வட்டச் செயலாளர் ஆனந்த் தலைமையில் பசலியான் நசரேத் முன்னிலையில் இன்று அ.தி.மு.க. குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில நிரவாகிகள் சந்துரு, ராஜன், அ.தி.மு.க. மாவட்ட அவை தலைவர் சேவியர் மனோகரன், துணை செயலாளர் சுகுமாரன், இளைஞரணி செயலாளர் அட்சயா கண்ணன், மண்டல செயலாளர்கள் ஜெயகோபால், ஜெவின் விசு, முருகேஸ்வரன் தொழிற்சங்க செயலாளர் வைகுண்ட மணி நிர்வாகிகள் வேலாயுதம், வெங்கடேஷ், ரபீக் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 100 பேர் தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர்

    • கூவத்தூரில் காசு கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் தான் இந்த எடப்பாடி பழனிசாமி
    • கூவத்தூர் விடுதியில் நடிகைகள் வேண்டும் என கேட்டவர் வெங்கடாச்சலம்" என சொல்லி பிரபல நடிகையின் பெயரைக் குறிப்பிட்டார்

    எந்த ஆதாரமும் இன்றி திரைத்துறையினர் மீது அவதூறு பரப்பும் சேலம் மேற்கு அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயக்குநர் சேரன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

    அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சேலம் மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு சமீபத்தில் கொடுத்த பேட்டி சர்ச்சையானது. அதில், "கூவத்தூரில் காசு கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் தான் இந்த எடப்பாடி பழனிசாமி என்றும், கூவத்தூர் விடுதியில் நடிகைகள் வேண்டும் என கேட்டவர் வெங்கடாச்சலம்" என சொல்லி பிரபல நடிகையின் பெயரைக் குறிப்பிட்டார். ஏ.வி.ராஜுவின் இந்த பேச்சு கடுமையான சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

    இந்நிலையில் இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் சேரன், "ஏ.வி.ராஜுவின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன். எந்த ஆதாரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவரை சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில், நடிகர் சங்க நிர்வாகிகளான விஷால், கார்த்தி ஆகியோரை டேக் செய்துள்ள சேரன், நடிகர் சங்கம் இதற்கு தகுந்த பதிலும் நடவடிக்கையும் எடுக்கும் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • கவன ஈர்ப்பிற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களை, திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது
    • ஏ.வி.ராஜு மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளா

    "கவன ஈர்ப்பிற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களை, திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது .இத்தகைய நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்" என த்ரிஷா தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சேலம் மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு சமீபத்தில் கொடுத்த பேட்டி சர்ச்சையானது. அதில், "கூவத்தூரில் காசு கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் தான் இந்த எடப்பாடி பழனிசாமி என்றும், கூவத்தூர் விடுதியில் நடிகைகள் வேண்டும் என கேட்டவர் வெங்கடாச்சலம்" என சொல்லி பிரபல நடிகையின் பெயரைக் குறிப்பிட்டார். ஏ.வி.ராஜுவின் இந்த பேச்சு கடுமையான சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

    இந்நிலையில், எந்த ஆதாரமும் இன்றி திரைத்துறையினர் மீது அவதூறு பரப்பும் சேலம் மேற்கு அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற தடத்த போட்டியில் 2017ல் கூவத்தூரில் நடந்ததாக நடிகை திரிஷா அவர்களை சம்மந்தப்படுத்தி ஒரு கூறியிருக்கிறார்.
    • கீழ்த்தரமான அவதூறுகளை திரையுலக பெண்கள் மீது சுமத்தாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.

    திரைத்துறை மற்றும் நடிகை திரிஷா தொடர்பான அதிமுக முன்னாள் நிர்வாகி A.V.ராஜூவின் பேச்சுக்கு பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்றைய சமூக வலைத்தளங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து நீக்கப்பட்ட திரு.A.V.ராஜீ என்பவர் திரைத்துறையை குறித்து சில தரமற்ற, அவதூறுகளை கூறியிருக்கிறார். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற தடத்த போட்டியில் 2017ல் கூவத்தூரில் நடந்ததாக நடிகை திரிஷா அவர்களை சம்மந்தப்படுத்தி ஒரு கூறியிருக்கிறார். அது மட்டுமில்லாமல் பல நடிகைகள் என்று பலரையும், நடிகர் திரு.கருணாஸ் அவர்களையும் சம்மந்தப்படுத்தி இந்த கீழ்தரமான செய்தியை வெளியிட்டுள்ளார்.

    அரசியலில் ஒருவரை, ஒருவர் தாக்கி கொள்வதற்கு அவர்களுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் உங்கள் அரசியல் பிரச்சனையில் தேவையில்லாமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை, கீழ்த்தரமான அவதூறுகளை திரையுலக பெண்கள் மீது சுமத்தாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.

    இத்தகைய அநாகரிகமான கீழ்த்தரமான செயலை, தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறோம்.

    பஞ்சாயத்து தலைவரிலிருந்து, சட்டமன்ற உறுப்பினர் முதல் பாரத குடியரசின் தலைவராக திருமதி.முர்மு அவர்கள் வரை ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற, இந்த பாரத தேசத்தில் "பெண்கள் மீதும் அவர்களின் பெண்மை மேலும் நடத்தப்படுகின்ற இம்மாதிரியான அவதூறு தாக்குதலை இரும்புக் கரம் கொண்டு களைய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்குப் பணிவன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கூவத்தூர் விவகாரத்தில் நடிகையை தொடர்புபடுத்தி அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு பேசியதற்கு நடிகர் மன்சூர் அலிகான் கண்டனம்
    • போகிற போக்கில் நடிகைகள் குறித்து கேவலமாக பேசியிருப்பது தனது மனதை நோகச் செய்கிறது.

    கூவத்தூர் விவகாரத்தில் நடிகையை தொடர்புபடுத்தி அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு பேசியதற்கு நடிகர் மன்சூர் அலிகான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    போகிற போக்கில் நடிகைகள் குறித்து கேவலமாக பேசியிருப்பது தனது மனதை நோகச் செய்கிறது. சமூகத்தை பாதிக்கும் ஆபத்தான செயல் என மன்சூர் அலிகான் ஆடியோ வெளியிட்டுள்ளார்.

    அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சேலம் மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு சமீபத்தில் கொடுத்த பேட்டி சர்ச்சையானது. அதில், "கூவத்தூரில் காசு கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் தான் இந்த எடப்பாடி பழனிசாமி என்றும், கூவத்தூர் விடுதியில் நடிகைகள் வேண்டும் என கேட்டவர் வெங்கடாச்சலம்" என சொல்லி பிரபல நடிகையின் பெயரைக் குறிப்பிட்டார். ஏ.வி.ராஜுவின் இந்த பேச்சு கடுமையான சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

    இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள திரிஷா, "கவன ஈர்ப்பிற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களை, திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது .இத்தகைய நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் சேலம் மேற்கு அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்குநர் சேரன் மற்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    ×