search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மும்பை"

    • இதுபோல பலமுறை அவர் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
    • லிவ் இன் டுகெதர் உறவை 11 மாதங்களுக்கு அதாவது ஆகஸ்ட் 1 2024 முதல் ஜூன் 30 ,2025 வரை தொடர பெண்ணுடன் ஒப்பந்தம் [MOU]

    பாலியல் பலாத்கார வழக்கில் லிவ் இன் டுகெதர் சாக்கை பயன்படுத்தி குற்றவாளி முன் ஜாமீன் பெற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியும் அந்தரங்க வீடியோக்களை காட்டி மிரட்டியும் பல முறை தன்னை 46 வயது நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக மும்பையை சேர்ந்த 29 வயது பெண் ஒருவர் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி போலீசில் புகார் அளித்திருந்தார்.

    கடந்த வருடம் அக்டோபர் மாதம் குற்றம்சாட்டப்பட்ட நபருடன் பெண்ணுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தங்களது உறவு வளர்ந்த நிலையில் அந்த நபர் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதும் அவர் ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் தங்களது உறவை முறித்துக்கொள்ள பாதிக்கப்பட்ட பெண் முற்பட்டுள்ளார். ஆனால் அந்த பெண்ணின் அந்தரங்க வீடியோக்களை வைத்து தங்களது உறவைத் தொடர அந்த நபர் மிரட்டியதாகத் தெரிகிறது. மேலும் இதுபோல பலமுறை அவர் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் கைது செய்யப்படாமல் இருக்க அந்த நபர் முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார். இருவருக்கு மிடையிலான லிவ் இன் டுகெதர் உறவை 11 மாதங்களுக்கு அதாவது ஆகஸ்ட் 1 2024 முதல் ஜூன் 30 ,2025 வரை தொடர அந்த பெண்ணுடன் தான் ஒப்பந்தம் [MOU] செய்துள்ள ஆதாரத்தை அந்த நபர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

     

    அந்த அக்ரிமென்டில் பெண்ணின் கையெழுத்தும் இடம்பெற்றுள்ளதாக அந்த நபரின் வக்கீல் நீதிமன்றத்தில் வாதாடினார். எனவே இதை ஆதாரமாக ஏற்றும், அந்தரங்க வீடியோக்களுக்கான ஆதாரங்களை அந்த பெண் சமர்ப்பிக்காததாலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. ஆனால் அந்தரங்க வீடியோகக்ளை வைத்து மிரட்டி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யத் தெரிந்த நபருக்கு லின் இன் அக்ரீமெண்ட்டில் கையெழுத்து வாங்க அதிக நேரமானது என்ற கருத்தையும் சிலர் முன்வைக்கின்றனர். 

    • பெங்களூருவை முதன்முறையாக பின்னுக்குத்தள்ளி பணக்காரர்களின் எண்ணிக்கையில் ஐதராபாத் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
    • பெங்களூரு 100 பணக்காரர்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

    ஆசியாவிலேயே அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நகரம் என்ற பெருமையை மும்பை பெற்றுள்ளது. இதன் மூலம் சீனாவின் தலைநகரான பெய்ஜிங் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

    ஹுருன் இந்தியா ரிச் லிஸ்ட் 2024 (Hurun India Rich Listers 2024) அறிக்கையின்படி, இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பை 'ஆசியாவின் பில்லியனர் தலைநகரம்' ஆக மாறியுள்ளது. சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கைப் பின்னுக்குத் தள்ளி இந்தப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

    மும்பையில் 58 கோடீஸ்வரர்கள் அதிகரித்து, பட்டியலில் அதன் மொத்த எண்ணிக்கை 386 ஆக உள்ளது.

    முதல் நகரங்களில் மும்பைக்கு அடுத்தபடியாக டெல்லி உள்ளது. இது 18 புதிய கோடீஸ்வரர்களை சேர்த்துள்ளது. அதன் பணக்கார பட்டியல் எண்ணிக்கை 217 ஆகக் கொண்டுள்ளது.

    இதற்கிடையில் ஐதராபாத் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து பெங்களூருவை முதன்முறையாக பின்னுக்குத்தள்ளி பணக்காரர்களின் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

    17 புதிய கோடீஸ்வரர்களின் வளர்ச்சியால் ஐதராபாத்தில் மொத்த எண்ணிக்கையை 104 ஆகக் கொண்டுள்ளது. பெங்களூரு 100 பணக்காரர்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

    முதல் 10 இடங்களில் உள்ள மற்ற நகரங்களில் சென்னை (82), கொல்கத்தா (69), அகமதாபாத் (67), புனே (53), சூரத் (28), குருகிராம் (23) ஆகியவை அடங்கும்.

    • விஜயவாடா போலீசில் பொய் புகார் கொடுத்தார்.
    • 3 நாட்கள் சித்ரவதை செய்தனர்.

    திருப்பதி:

    மும்பையை சேர்ந்த பிரபல நடிகை காதம்பரி ஜெத்வாணி. இவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,:-

    கடந்த ஆண்டு மும்பையை சேர்ந்த தொழிலதிபருக்கு எதிராக போலீசில் புகார் செய்தோம்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தனது நெருங்கிய நண்பரான ஆந்திர ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான குக்கல வித்யாசாகரை தொடர்பு கொண்டு எங்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து ஜெயிலில் அடைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    இதையடுத்து குக்கல வித்தியா சாகர் காதம்பரி ஜெத்வாணியின் செல்போனுக்கு வீடியோ காலில் ஆபாசமாக நின்று தொல்லை கொடுத்தார். பின்னர் விஜயவாடா போலீசில் பொய் புகார் கொடுத்தார்.

    போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 3-ந் தேதி மும்பைக்கு வந்தனர். எனது குடும்பத்தினரை சர்வதேச குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகளை போல் விமானத்தில் விஜயவாடாவிற்கு அழைத்து வந்தனர்.

    இப்ராகிம் பட்டினத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தடுப்பு காவலில் வைத்து 3 நாட்கள் சித்ரவதை செய்தனர்.

    எனது பெயரில் உள்ள சொத்து மற்றும் 18 வங்கி கணக்கில் இருந்த ரூ. 80 லட்சம் என ரூ. 6 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறித்துக் கொண்டனர்.

    பின்னர் எங்களை ஜெயிலில் அடைத்தனர். 48 நாட்களுக்கு பிறகு நாங்கள் ஜெயிலில் இருந்து வெளியே வந்தோம்.

    கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் மிரட்டுகின்றனர்.

    தற்போது முதல் மந்திரியாக உள்ள சந்திரபாபு நாயுடு எங்களுக்கு உதவி செய்து எங்களை காப்பாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி கண்ணீர் விட்டு அழுதார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • காட்சிகள் நெஞ்சை பதைபதைக்கும் வகையில் இருந்தது.
    • பள்ளி மாணவியை கண்மூடித்தனமாக தாக்கியதும் தெரியவந்தது.

    மும்பை:

    பள்ளி மாணவி சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சிறுமிகள், அவர்களது பெற்றோருக்கு போலீசார் சார்பில் கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ளது.

    மும்பையில் பள்ளி செல்லும் ஒரு மாணவியை சில சிறுமிகள் சேர்ந்து கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ காட்சிகள் கடந்த சில நாட்களாக சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    சிறுமிகள் கும்பலாக சேர்ந்து இரக்கமின்றி பள்ளி மாணவியை முடியை பிடித்து இழுத்து அடித்து, கீழே தள்ளி உதைக்கும் காட்சிகள் நெஞ்சை பதைபதைக்கும் வகையில் இருந்தது.

    சிறுமிகள், பள்ளி மாணவியை தாக்கிய சம்பவம் 2 வாரத்துக்கு முன் வெர்சோவா யாரி ரோடு பகுதியில் நடந்தது என்பது தெரியவந்தது.

    சமூகவலைதளத்தில் பரவிய வீடியோ தொடர்பாக வெர்சோவா போலீசார் தாமாக முன்வந்து விசாரணை நடத்தினர்.


    விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்ட சிறுமிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவி யாரி ரோடு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், சிறிய பிரச்சனை தொடர்பாக தங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அவர்கள் பள்ளி மாணவியை கண்மூடித்தனமாக தாக்கியதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் சம்பவத்தில் தொடர்புடைய பள்ளி மாணவி, சிறுமிகள் மற்றும் அவர்களின் பெற்றோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், போலீஸ் அதிகாரிகள் மூலம் கவுன்சிலிங் வழங்கினர்.

    பள்ளி மாணவியை சிறுமிகள் சேர்ந்து தாக்கிய சம்பவத்தை அடுத்து வெர்சோவா பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

    • அதிகாலை 3.30 மணியளவில் முகத்தில் காயங்களுடன் வந்த நபர் ஒருவருக்கு பணியிலிருந்த பெண் மருத்துவர் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார்.
    • அவர்களிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளும் முயற்சியில் பெண் மருத்துவருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள மருத்துவமனையில் பெண் மருத்துவரிடம் 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள சியான் [Sion Hospital] மருத்துவமனையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் முகத்தில் காயங்களுடன் வந்த நபர் ஒருவருக்கு பணியிலிருந்த பெண் மருத்துவர் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார்.

    காயங்களுடன் வந்த நபரும் அவருடன் வந்த மற்ற உறவினர்கள் 5 பேறும் குடிபோதையில் இருந்துள்ளனர். சிகிச்சையளித்துக் கொண்டிருந்த மருத்துவரிடம் அவர்கள் 6 பேறும் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றுள்ளனர். அவர்களிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளும் முயற்சியில் பெண் மருத்துவருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளது. உடனே அந்த இடத்திலிருந்து அவர்கள் 6 பேரும் தப்பிச் சென்று விட்டனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    கல்கத்தாவில் RG கர் மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திவரும் விலையில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசை வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகிறது. மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தால் நேற்று முழு தினமும் மருத்துவ சேவைகள் ஸ்தாபித்தன. இந்நிலையில் மும்பையில் பெண் மருத்துவர் இரவு டியூட்டியின்போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் மருத்துவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • திருவிழா வருகிற 29-ந்தேதி தொடங்கி நடைபெற உள்ளது.
    • சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.

    தஞ்சாவூர்:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்டம், வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் திருவிழா வருகிற 29-ந்தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    அதன்படி, மராட்டிய மாநிலம், மும்பையில் இருந்து வருகிற 26-ந்தேதி மதியம் 1 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணி வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.01161) மறுநாள் இரவு 11.50 மணிக்கு வேளா ங்கண்ணி வந்தடையும்.

    மறுமார்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து வருகிற 28-ந்தேதி காலை 3 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும் சிறப்பு ரெயில் (01162) மறுநாள் மாலை 4.20 மணிக்கு மும்பை சென்றடையும்.

    இதேபோல், மும்பையில் இருந்து அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி மதியம் 1 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணி வரும் சிறப்பு ரெயில் (01163) மறுநாள் இரவு 11.50 மணிக்கு வேளாங்கண்ணி வந்தடையும்.


    மறுமார்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி காலை 3 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும் சிறப்பு ரெயில் (01164) மறுநாள் மாலை 4.20 மணிக்கு மும்பை சென்றடையும்.

    மேற்கண்ட சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை (புதன்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆசம் ஷேக்கின் ரெயில் ஸ்கேட்டிங் ஸ்டண்ட் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
    • இதனை அடுத்து ரெயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் அவரைத் தேடி வந்தனர்.

    ஓடும் லோக்கல் ரெயிலில் ஸ்கேட்டிங் ஸ்டண்ட் செய்து வைரலான மும்பையை சேர்ந்த ஃபர்ஹத் ஆசம் ஷேக் என்ற இளைஞர் இதே போன்று மீண்டும் ஸ்டண்ட் செய்த போது நடந்த விபத்தில் தனது ஒரு கை மற்றும் காலை இழந்துள்ளார்.

    இம்மாத துவக்கத்தில் ஆசம் ஷேக்கின் ரெயில் ஸ்கேட்டிங் ஸ்டண்ட் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனை அடுத்து ரெயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் அவரைத் தேடி வந்தனர்.

    அப்போதுதான் ஏப்ரல் 14 அன்று மஸ்ஜித் ரயில் நிலையத்தில் ஸ்டண்ட் செய்ய முயற்சித்த போது ஷேக் தனது ஒரு கை மற்றும் காலை இழந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    ஜூலை 14 ஆம் தேதி வைரலான அந்த வீடியோ இந்தாண்டு மார்ச் 7 ஆம் தேதி செவ்ரி ரெயில் நிலையத்தில் தனது நண்பரால் பதிவு செய்யப்பட்டது என்று ஷேக் அதிகாரிகளிடம் கூறினார். இந்த ஸ்டண்ட் பின்னர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரின் கவனத்தை பெற்றுள்ளது.

    பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக வீடியோ ஒன்றை ரெயில்வே அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அதில், ஷேக் அவரது கை மற்றும் கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டார். யாரும் நான் செய்தது போல ஸ்டண்ட் செயல்களை செய்யவேண்டாம் என்று அவர் கோரிக்கை விடுத்தார். இத்தகைய செயல்கள் இது சட்டவிரோதமானது மட்டுமல்ல, உயிருக்கு ஆபத்தானது என்று அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அங்கு நின்றிருந்த முகமது பர்கானை கான்ஸ்டபிள்கள் இருவரும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
    • பர்கான் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் கண்டனங்களைக் குவித்து வருகிறது.

    பீகாரில் ரயில்வே போலீஸ் சரமாரியாக அடித்ததில் பயணியின் குடலே வெளியில் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன் தினம் வியாழக்கிழமை பீகாரில் உள்ள சீதாமாரி மாவட்டத்தில் உள்ள  பூப்ரி ரெயில் நிலையத்தில் மும்பைக்கு செல்லும் கர்மபூமி விரைவு ரெயிலில் உறவினரை ஏற்றி விடுதற்காக முகமது பர்கான் என்ற 25 வயது இளைஞர் வந்துள்ளார்.

    நடைமேடையில் ரெயில் வந்து நின்றதும் முன்பதிவில்லாத பெட்டிகளில் ஏறி சீட் பிடிப்பதற்கு அங்கு கூடிருந்த பயணிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் கூட்டநெரிசலைக் கட்டுப்படுத்த அங்கு வந்த ரெயில்வே போலீஸ் [GRP] கான்ஸ்டபிள்கள் இருவர் பயணிகள் மீது தடியடி நடத்தத்தொடங்கினர். அப்போது அங்கு நின்றிருந்த முகமது பர்கானை கான்ஸ்டபிள்கள் இருவரும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

    பார்கானின் வயிற்றில் பலமுறை அவர்கள் அடித்த நிலையில், அவரது குடல் வெளியே வந்தது. சில நாட்களுக்கு முன்பே பர்கானுக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை நடந்துள்ளதால் காவலர்கள் அடித்ததில் அவரது குடல் தையல் வழியாக வெளியே வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து பர்கான் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே எஸ்.பி உட்பட இரண்டு கான்ஸ்டபிள்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில் இந்த பர்கான் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் கண்டனங்களைக் குவித்து வருகிறது.

    • காவல் துறை சார்பில் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டு இருக்கிறது.
    • 24 மணி நேரத்தில் மட்டும் 44 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    மும்பையில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று காவல் துறை வலியுறுத்தி உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பைக்கு கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து காவல் துறை சார்பில் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டு இருக்கிறது.

    இது குறித்த எக்ஸ் தள பதிவில் இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பைக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பைவாசிகள் வீடுகளிலேயே இருக்க கேட்டுக் கொள்கிறோம். ஏதேனும் அவசர உதவிகளுக்கு 100, 112 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள் என மும்பை காவல் துறை குறிப்பிட்டுள்ளது.

    முன்னதாக கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக அருகாமை விமான நிலையங்களில் இருந்து மும்பை வரவேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மும்பையில் 44 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. புறநகர் பகுதிகளில் 90 மில்லிமீட்டர்களும் பதிவாகி உள்ளது.

    இதுதவிர கனமழை காரணமாக பூனேவில் மின்சாரம் தாக்கி நான்கு பேர் உயிரிழந்தனர். இருவர் தானேவில் உள்ள பார்வி அணையில் அடித்து செல்லப்பட்டதில் உயிரிழந்தனர்.

    • அடிக்கடி தனது நண்பர்களை வீட்டுக்கு அழைத்து கணவர் பார்ட்டி கொடுப்பார்
    • 5 வருட திருமண வாழ்க்கையில் பலமுறை இதுபோன்று நடந்துவந்துள்ளது.

    மும்பையில் வசிக்கும் 35 வயது திருமணமான பெண் ஒருவர் தனது கணவர் அவரது நண்பர்களின் முன் தன்னை  ஆடைகளை அவிழ்க்க கட்டயப்படுத்தியதாக புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் திரைப்பட VFX கலைஞராக பணியாற்றுவரும் அந்த பெண்  சர்வதேச ஏர்லைன் பைலட்டாக பணியாற்றிவரும் தனது கணவருடன் தனியாக வசித்து வருகிறார்.

    அடிக்கடி தனது  நண்பர்களை வீட்டுக்கு அழைத்து பார்ட்டி கொடுக்கும் கணவர் TRUTH OR DARE விளையாடி, தனது மனைவியை அவர்களின் முன் ஆடைகளை அவிழ்க்கும்படி நிர்பந்தம் செய்து வந்துள்ளார். அதற்கு மனைவி மறுத்ததால் அவரை பல்வேறு சமயங்களில் அடித்து துன்புறுத்தியுள்ளார்.

    இதனால் இருவருக்கும் இடையில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வந்துள்ளன. தங்களின் 5 வருடதிருமண வாழ்க்கையில் பலமுறை கணவர் இடகுபோன்று தன்னை  நண்பர்கள்  முன்னிலையிலும் தனியாக இருக்கும்போதும் அடித்து துன்புறுத்தினார் என்று அப்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக  எப்ஐஆர் பதிந்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

    • இந்த அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சில நாட்களுக்குப் பிறகு இன்ஸ்டாகிராமில் பரவியது.
    • மன உளைச்சலுக்கு ஆளான பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    மும்பையில் ஒரு பெண் தனது கணவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி பெண்ணை மிரட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட ஜோசுவா பிரான்சிஸ் இடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளது.

    பெண்ணின் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இந்த தம்பதியினர் சிறு சிறு பிரச்சனைகளுக்கு அவ்வப்போது சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். அதனால் தனது மனைவியை அவமானப்படுத்த அவர்கள் அந்தரங்கமாக இருக்கும் தருணங்களை அவர் புகைப்படம், வீடியோ எடுத்துள்ளார்.

    இந்த வீடியோ, புகைப்படங்களை அவர் தனது நண்பர் ஜோசுவா பிரான்சிஸ் இடம் கொடுத்துள்ளார்.

    பின்னர் பிரான்சிஸ் அந்தப் பெண்ணுக்கு போன் செய்து அவரது அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஒரு ஆபாச இணையதளத்தில் பதிவேற்றியதாக தெரிவித்து, ஆபாச தளத்தின் இணைய URL ஐ பகிர்ந்துள்ளார்.

    இந்த அந்தரங்க வீடியாக்களை நீக்க வேண்டும் என்றால் 50,000 ரூபாய் பணம் தரவேண்டும் என்று மிரட்டி அந்த பெண்ணிடம் இருந்து பிரான்சிஸ் பணம் வாங்கியுள்ளார்.

    ஆனால் இந்த அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சில நாட்களுக்குப் பிறகு இன்ஸ்டாகிராமில் பரவியது.

    அதனால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டோம்பிவலியில் உள்ள குளோப் ஸ்டேட் கட்டிடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
    • காவல்துறை விபத்து மரண அறிக்கையை (ADR) பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே தனது நண்பர்களுடன் ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மும்பையில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ள டோம்பிவலியில் உள்ள குளோப் ஸ்டேட் கட்டிடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    பாதிக்கப்பட்ட நாகினா தேவி மஞ்சிரம் என அடையாளம் காணப்பட்ட பெண், கட்டிடத்தில் இருந்து விழுந்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மணப்பாடா காவல்துறை விபத்து மரண அறிக்கையை (ADR) பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியுள்ளது.

    முதற்கட்ட விசாரணையின்படி, நேற்று நாகினா தேவி தனது நண்பர்களுடன் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் பிராங்க் செய்து விளையாடிக் கொண்டிருந்தபோது, தவறி விழுந்தார்.

    அவரது நண்பர்களில் ஒருவர் அதே சம்பவத்தில் இருந்து நூலிழையில் உயர் தப்பினார். இவை, அங்கு பொருத்தப்பட்டிருந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

    பரபரப்பான இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ×