search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெண்டர்"

    • கிராம மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கொள்கை ரீதியான ஒப்புதல் கிடைத்ததும் டெண்டர் வெளியிடப்படும்.

    காஞ்சிபுரம்

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. சுமார் 32 ஆயிரத்து 704 கோடி செலவில் 2 ஆயிரத்து 171 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைகிறது.

    இதில் 1386 ஹெக்டேர் விவசாய நிலம், 577 ஹெக்டேர் நீர் நிலைகள் மற்றும் 173 ஹெக்டேர் அரசு மற்றும் புறம்போக்கு நிலங்கள் ஆகும்.

    இதற்கான முறையான அனுமதி கிடைத்ததும் விமான நிலைய பணிக்கான டெண்டர் அடுத்த ஆண்டு (2025) தொடக்கத்தில் விடப்படும் என்று தெரிகிறது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, `விமான நிலையத்துக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்புகள் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கான தொழில்நுட்ப திட்ட பொருளாதார அறிக்கைகள் தயாரித்து மாநில அரசிடம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த அறிக்கை மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    விமான நிலைய பணிக்கு மத்திய அசிடம் இருந்து கொள்கை ரீதியான ஒப்புதல் கிடைத்ததும் டெண்டர் வெளியிடப்படும். விரைவில் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் டெண்டர் விட திட்டமிட்டுள்ளோம் என்றார்.

    இதற்குள் விமான நிலையத்துக்கு தேவையான நிலங்கள் அனைத்தையும் கையகப்படுத்தும் பணியை முழுமையாக முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதற்கான பணிகள் வேகம் எடுத்து உள்ளன.

    • புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பாக 7 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவினர் பரந்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர்.
    • நிலத்தடி நீர், மழை வெள்ள பாதிப்பு, நீர் நிலை பகுதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்து உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. சுமார் 4 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட இருக்கிறது.

    விமான நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் ஆயிரத்து 317 ஏக்கர் நிலம் மட்டுமே அரசு நிலம் ஆகும். 3 ஆயிரத்து 200 ஏக்கர் பட்டா நிலங்கள். 799 ஏக்கர் நீர் நிலைப்பகுதிகளாக உள்ளன.

    இதையடுத்து புதிய விமான நிலையத்திற்காக விவசாயம் மற்றும் நீர் நிலை நிலங்களை கையகப்படுத்த பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றுப்புறத்தை சேர்ந்த 13 கிராமமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் நிலங்களை கையகப்படுத்த தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் நிலங்களை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தை மதிப்பை விட 3.5 மடங்கு இழப்பீடு தொகை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.கடந்த நில நாட்களுக்கு முன்பு கிராமங்களில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பாக 7 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவினர் பரந்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் நிலத்தடி நீர், மழை வெள்ள பாதிப்பு, நீர் நிலை பகுதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்து உள்ளனர்.

    இந்த நிலையில் சென்னையின் 2-வது விமான நிலைய பணிக்கான டெண்டர்களை அடுத்த ஆண்டு இறுதிக்குள் அரசு வெளியிடும் என்று தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, பரந்தூர் விமான நிலையத்திற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணி முடிய இன்னும் ஒரு ஆண்டு ஆகும். இதன்பின்னர் அடுத்த ஆண்டு இறுதிக்குள் பணிகளுக்கான டெண்டர் விடப்படும். மத்திய அரசின் கொள்கை அடிப்படையிலான ஒப்புதலுக்காக மாநில அரசு காத்திருக்கிறது என்றார்.

    • தனியாக செயலி உருவாக்க டெண்டர் கோரிக்கை.
    • க்யூஆர் கோடு மூலம் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் பயணம் செய்யலாம்.

    சென்னையில் பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் அறிமுகம் செய்யப்படுகிறது.

    இதற்காக, தனியாக செயலி உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் கோரியுள்ளது.

    இந்த செயலியில் க்யூஆர் கோடு மூலம் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யலாம். 

    • ஒவ்வொரு பள்ளிகளிலும் ஹைடெக் லேப் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
    • 1 முதல் 5 வரை படிக்கும் மாணவர்களின் கல்வி ஆற்றலை பெருக்கும் வகையில் இந்த ஸ்மார்ட் வகுப்பு அமைய உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி கற்பித்தல் முறையில் கொண்டு வருவதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    பள்ளிகளில் அடிப்படையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வரும் நிலையில் வருகிற கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு மேலும் பல வசதிகளை செய்து கொடுக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

    தமிழகத்தில் உள்ள 7 ஆயிரம் அரசு நடுநிலைப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    ஒவ்வொரு பள்ளிகளிலும் ஹைடெக் லேப் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த பரிசோதனைக் கூடத்தை பராமரிக்க கம்ப்யூட்டர் ஆசிரியர் ஒருவரும் நியக்கப்படுகிறார்.

    இண்டர்நெட் வசதியுடன் இந்த ஹைடெக் லேப் அமைக்கப்பட உள்ளது. இதற்கு சுமார் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஒரு பள்ளிக்கு ஹைடெக் லேப் அமைக்க ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு விரைவில் இந்த பணி தொடங்கப்பட உள்ளது.

    இதைப் போல 20 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 1 முதல் 5 வரை படிக்கும் மாணவர்களின் கல்வி ஆற்றலை பெருக்கும் வகையில் இந்த ஸ்மார்ட் வகுப்பு அமைய உள்ளது.

    திரை மற்றும் புரஜெக்டருடன் கம்ப்யூட்டர் வசதியும் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு எளிதான முறையில் பாடங்களை கற்பிக்க முடியும்.

    இது தவிர தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 80 ஆயிரம் பேருக்கு கையடக்க கணினி (டேப்லெட்) வழங்கும் திட்டமும் ஜூன் மாதத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.

    இதன் மூலம் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிக்கும் திறனை வளர்க்க முடியும். ஸ்மார்ட் வகுப்பறையில் உள்ள திரையின் மூலம் மாணவர்கள் எளிதாக பாடங்களை புரிந்து கொள்ளலாம்.

    அந்த அடிப்படையில் தொடக்கக் கல்வித் துறையில் இந்த புதிய திட்டங்களை வருகிற கல்வியாண்டில் செயல்படுத்த டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த திட்டங்கள் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.

    இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:-

    தொடக்க கல்வித் துறை யின் தரத்தை உயர்த்தும் வகையில் டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது. மாணவர்களின் இடைநிற்றல் தவிர்க்கப்படுவதோடு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    எண்ணறிவும் எழுத்தறிவும் வளர்ச்சி அடைவதோடு மாணவர்களின் கல்வித் திறனும் உயரும். வருகிற கல்வியாண்டில் இந்த புதிய திட்டங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. அதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கிவிட்டன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் 73 டாஸ்மாக் கடைகளுக்கு பார் அமைக்க இ-டெண்டர் கோரப்பட்டு உள்ளது
    • நாளைக்குள் விண்ணப்பிக்க அழைப்பு

    பெரம்பலூர், 

    பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் செயல்படும் 81 (மதுபானம்) கடைகளில், 8 கடைகள் மதுக்கூடங்களுடன் இயங்கி வருகிறது. இதில் பார் இல்லாத 73 டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து மதுக்கூடங்களுக்கு இ-டெண்டர் மூலம் ஏலம் விடப்படுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணிவரை https://tntenders.gov.in.nicgep/app என்ற வலைத்தளத்தில் சென்று விண்ணப்பம் செய்யலாம். நாளை மாலை 4.30 மணியளவில் டெண்டர் திறக்கப்படும் என்று ஒருங்கிணைந்த பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கீழக்கரையில் டெண்டர் பணிகளை ஒப்பந்ததாரர்கள் விரைந்து முடிப்பதில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளது.
    • டெண்டர் எடுத்த பணிகள் குறைபாடு இருக்கிறது.

    கீழக்கரை

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளர் பாசித் இல்யாஸ் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத் திற்கு அரசு திட்டங்களை கண்காணிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தமிழக அரசு சார்பாக நியமிக்கப் பட்டுள்ளதை கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக வரவேற்கிறோம்.

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திட்ட பணிகளில் அதிக அளவு தேக்க நிலையில் இருக்கிறது டெண்டர் எடுத்த பணிகள் ஒப்பந்தக்காரர்கள் விரைந்து முடிப்பதில்லை யாரும் முறையான ஆய்வு செய்வதில்லை. பல இடங்களில் டெண்டர் எடுத்த பணிகள் குறைபாடு இருக்கிறது.

    கழிவுநீர் பைப் லைன் போட்ட இடங்களில் கழிவுநீர் வெளியே ஓடுகிறது.இதனால் மக்கள் வரி பணமும் சுகாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. இதற்கு முன்பு என்னென்ன டெண்டர் எடுத்த பணிகள் எல்லாம் குறைபாடு இருக்கிறது என்பதை ஆராய்ந்து மீண்டும் அதை முறைப்படுத்தி ஒப்பந்தம் எடுத்தவர்களை சரி செய்ய வலியுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

    மேலும் தமிழக அரசு சார்பாக எந்த வித திட்டப் பணிகளும் கீழக்கரையில் அமல்படுத்தவில்லை. உதாரணமாக கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் கீழக்கரை அரசு மருத்துவமனையை நம்பி உள்ளனர். ஆனால் அரசு சார்பில் குறைந்த நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே கூடுதல் நிதி ஒதுக்கி கீழக்கரை மருத்துவ மனையை மேம்படுத்த வேண்டும்.

    கீழக்கரையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை வேகமாக அமைக்க வேண்டும். கீழக்கரை கடற்கரையில் கழிவுநீர் சேராமல் தடுக்க சுத்திகரிப்பு திட்டம் அல்லது பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் சரியாக வருவதில்லை. அதனால் புதிய மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் முறையாக கிடைக்கச் செய்ய வேண்டும்.

    புதிதாக தண்ணீர் தொட்டிகள் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும். எரியாத நிலையில் உள்ள மின்விளக்கு களை மாற்றி புதிதாக வாங்கப்பட்ட எல்.இ.டி.விளக்குகளை பொருத்த வேண்டும். திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நகராட்சி ஆணையர், பொறியாளர், சுகாதார ஆய்வாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆன்லைன் டெண்டரை ரத்து செய்ய வலியுறுத்தி மனு
    • 46 பேரூராட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டத்தில் 51 பேரூராட்சிகள் உள்ளன. தற்போது பேரூராட்சியில் ஆன்லைன் டெண்டர் முறையே நடைபெற்று வருகிறது. இதனை ரத்து செய்யக்கோரி அனைத்து பஞ்சாயத்து தலைவர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

    இதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட பேரூராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக 51 பேரூராட்சிகளில் 46 பேரூராட்சி தலைவர்கள் சேர்ந்து பிரின்ஸ் எம்.எல்.ஏ. தலைமையில் அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    அனைத்து பேரூராட்சிகளிலும் ஆன்லைனில் டெண்டரை ரத்து செய்ய வேண்டும், அமர்வுப்படி உயர்த்தி தர வேண்டும், உள் குடிநீர் பணியாளர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் நேரு, ஆன்லைன் டெண்டரை ரத்து செய்து ரூ.10 லட்சம் வரை தளர்வு தரப்படும் என்றும், பேரூராட்சி தலைவர்களுக்கு அமர்வுப்படி ரூ.10 ஆயிரம், துணை தலைவர்களுக்கு ரூ.5 ஆயிரம், கவுன்சிலர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 500 வீதம் தருவதற்கு பரிசீலனை செய்யப்படும் என்றும் உறுதி அளித்ததாக பேரூராட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் குமரி மாவட்ட பேரூராட்சி கூட்டமைப்புகளின் தலைவர் எட்வின் ஜோஸ், செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் வாழ்வச்சகோஷ்டம் பேரூராட்சி தலைவர் ஜாண் டென்சிங், உண்ணாமலை கடை பேரூராட்சி தலைவி பமலா, நல்லூர் பேரூராட்சி தலைவி வளர்மதி கிறிஸ்டோபர் உட்பட 46 பேரூராட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.

    • சட்டவிரோதமாக செயல்ப டும் டெண்டர் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
    • சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    பட்டுக்கோட்டை:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில், பட்டுக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் திடீரென கால வரையறை யற்ற போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் ஒப்பந்த பணியாளர்களாக எங்களை பணியமர்த்த வேண்டும். சட்டவிரோதமாக செயல்ப டும் டெண்டர் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்,

    தனியாருக்கு டெண்டர் விடப்பட்டிருந்தால் அதற்கான நகலை காண்பி க்க வேண்டும், இந்த மாதம்5ம் தேதி இந்த சம்பளத்தை முழுமையாக வழங்க வேண்டும் போன்ற கோரி க்கைகளை வலியுறுத்தினர். இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு கவுன்சி லர் சதாசிவகுமார் தலைமை தாங்கினார்.

    இந்த திடீர் போராட்ட த்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து நகராட்சி பொறுப்பு ஆணையர் குமார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அதில் ஞாயிற்றுக்கிழமை அன்று டெண்டர் எடுத்த நபர் நேரில் வந்து துப்புரவு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவார் என உறுதி அளித்தார்.

    அதன் பிறகு போராட்டக்காரர்கள் அதுவரை தாங்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்வாயிலில் காத்திருப்பு போராட்டம் நடத்த போவதாகவும், இந்த டெண்டர் முறை தவறானது என்றும், ஒருவேளை சட்டப்படி டெண்டர் விடப்பட்டி ருந்தாலும் அதற்கான எந்த உத்தரவும் தங்களிடம் காண்பிக்கப்படவில்லை என்றும் கூறினர்.

    மேலும் எந்த உத்தரவும் இல்லாமல் டெண்டர் எடுத்த நபர் என கூறிக்கொண்டு பத்துக்கும் மேற்பட்ட சூப்பர்வைஸர்கள் தங்கள் மீது அதிகாரம் செலுத்துவதை தற்போது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினர்.

    பின்னர் போக்கு வரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் தற்பொழுது நகராட்சி அலுவலகத்திற்குள் பட்டுக்கோட்டை நகராட்சி துப்புரவு பணியாளர்களின் உள்ளிருப்பு வேலைநிறுத்த போராட்டம் தொட ர்பாக கூறி சென்றுள்ளனர்,தொடந்து அங்கு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் தி.நகரில் சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.
    • முதல்கட்டமாக தமிழகத்தின் 12 வட மாவட்டங்களில் நடைமுறைக்கு வரும்.

    சென்னை:

    தமிழகத்தில் தற்போது ஒவ்வொரு வீட்டிலும் எப்படி மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதை மின்வாரிய ஊழியர்கள் வீட்டுக்கு நேரில் வந்து மீட்டர் அளவீட்டை கணக்கிட்டு முடிவு செய்கிறார்கள்.

    அவர்கள் கணக்கிட்டு எழுதும் யூனிட் அடிப்படையில் பொதுமக்கள் மின்சார கட்டணம் செலுத்தி வருகிறார்கள்.

    இந்த நடைமுறைக்கு பதில் மின்சார பயன்பாடு அளவை மிக எளிதாக, துல்லியமாக கணக்கிட 'ஸ்மார்ட் மீட்டர்' இணைப்பு திட்டத்தை அமல்படுத்த தமிழக மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கு மறு சீரமைக்கப்பட்ட மின் வினியோக திட்டத்தின் கீழ் மானியம் வழங்குகிறது.

    தமிழகத்தில் முதலில் பரீட்சார்த்த அடிப்படையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் சென்னை தி.நகரில் செயல்படுத்தப்பட்டது. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் தி.நகரில் சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இது வெற்றிகரமாக அமைந்துள்ளது.

    இதையடுத்து தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் ஸ்மார்ட் மீட்டர் மின் இணைப்பை நடைமுறைக்கு கொண்டுவர தமிழ்நாடு மின்வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று (திங்கட் கிழமை) ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் வெளியிடப்படுகிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை 3 கட்டமாக செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    முதல்கட்டமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், தருமபுரி உள்பட தமிழகத்தின் 12 வட மாவட்டங்களில் நடைமுறைக்கு வரும். அதன் பிறகு 2-வது, 3-வது கட்டமாக ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும்.

    தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்துக்காக 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்கப்பட உள்ளன. இதில் முதல்கட்டமாக 13 மாவட்டங்களில் 1 கோடியே 17 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் பயன்படுத்தப்படும்.

    2-வது கட்டமாக 1 கோடியே 2 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களும், 3-வது கட்டமாக சுமார் 80 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களும் பயன்படுத்தப்படும்.

    இதற்கான டெண்டர் இன்று வெளியிடப்படும் நிலையில் அடுத்த 45 நாட் களில் இறுதி முடிவுகள் மேற்கொள்ளப்படும். குறிப்பிட்ட காலத்துக்குள் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்தினால் தான் மத்திய அரசின் மறுசீரமைக்கப்பட்ட மின் வினியோகத் திட்டத்தின் கீழ் மானியத்தை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மறுசீரமைப்பு பணிகளை ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் டெண்டர் பணிகளை செய்து வருகிறது.
    • ரெயில் நிலையத்தின் பழைய கட்டிடமும் புனரமைப்பு செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும்.

    சென்னை:

    பழமைவாய்ந்த எழும்பூர் ரெயில் நிலையம் ரூ.734.91 கோடியில் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்பட்டு மறுசீரமைப்பு செய்யப்பட திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

    இந்த மறுசீரமைப்பு பணிகளை ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் டெண்டர் பணிகளை செய்து வருகிறது.

    இதையொட்டி முதல் கட்டமாக ரெயில் நிலையத்தை அளவீடு செய்து காந்தி இர்வின் சாலை அருகே உள்ள ரெயில்வே குடியிருப்புகள், பின்புறம் பூந்தமல்லி சாலையில் உள்ள ரெயில்வேக்கு சொந்தமான குடியிருப்புகளை இடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இதுகுறித்து ரெயில்வே கட்டிட சிவில் என்ஜினீயர் ஒருவர் கூறியதாவது:-

    மறுசீரமைப்பு பணிக்காக வீடுகளை இடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. காந்தி இர்வின் சாலையில் அதிகாரிகள், ஊழியர்கள் என 45 குடியிருப்புகள் இடிக்கப்பட்டு வருகிறது. பூந்தமல்லி சாலையில் 120-க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    அடுத்தகட்டமாக மற்ற அலுவலக கட்டிடம் இடிக்கப்படும். இந்த பணிகள் முடிவடைந்தவுடன் உடனடியாக கட்டிட பணிகள் தொடங்க உள்ளது. இதற்கான பூமி பூஜையும் நடத்தப்பட்டுவிட்டது.

    1 லட்சத்து 35 ஆயிரத்து 406 சதுர மீட்டரில் கட்டிடம் அமைய உள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் 3 மாடி கட்டிடம் கட்டப்பட உள்ளது.

    பயணிகள் வருகை, புறப்பட்டு செல்வதற்கான தனி இடமும், நடை மேம்பாலம், காத்திருப்பு அறை, வாகன காப்பகங்கள், நடைமேடைகளுக்கு செல்ல லிப்ட் வசதி, எஸ்கலேட்டர் வசதி என பல்வேறு வசதிகளுடன் பிரமாண்டமாக அமைய உள்ளது.

    ரெயில் நிலையத்தின் பழைய கட்டிடமும் புனரமைப்பு செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும். மல்டி பிளக்ஸ் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படுகிறது. மேலும் தற்போதுள்ள ரெயில்வே பார்சல் பகுதி ரெயில்வே கட்டிடமாகவும் மாற்றப்படுகிறது. எதிர் காலங்களில் பெருகி வரும் போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு கட்டிட பணிகள் நடந்து வருகிறது.

    இருசக்கர, 4 சக்கர வாகனங்களில் தடையின்றி பயணிகள் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி உள்பட விமான நிலையத்தை போல அனைத்து வசதிகளுடன் அமைய உள்ளது. இந்த பணிகள் 3 வருடத்தில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    • குழித்துறை நகர்மன்ற கூட்டத்தில் முடிவு
    • 10-க்கும் மேற்பட்ட முக்கிய சாலைகள் அமைக்க கடந்த மாதம் ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டது

    கன்னியாகுமரி :

    குழித்துறை நகராட்சியில் தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பெருங்குளம்-கழுவன் திட்டை காலனி சாலை, நரியன் விளை- இடவிளாகம் சாலை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட முக்கிய சாலைகள் அமைக்க கடந்த மாதம் ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டது. இதில் 5 பேர் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் மக்க ளுக்கான அரசின் திட்ட பணிகளை செயல்படுத்துவதற்கு, தடை மற்றும் கால தாமதம் செய்யும் நோக்கில் ஒரு சில ஒப்பந்ததாரர்கள் செயல்பட்டு வந்ததால் வளர்ச்சி பணிகளை செய்வதில் நகராட்சிக்கு கால தாமதம் ஏற்பட்டது.

    இந்நிலையில் குழித்துறை நகராட்சி அவசர கூட்டம் நகர்மன்ற தலைவர் பொன். ஆசைத்தம்பி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் குறித்த காலத்தில் முடிக்க வேண்டிய மக்களுக்கான அரசின் திட்டபணிகளை செயல்படுத்த தடை மற்றும் காலதாமதம் செய்யும் நோக்கில் செயல்பட்ட 2 ஒப்பந்ததாரர்களை நகராட்சி டெண்டர்களில் கலந்து கொள்ள தடை விதித்தும் கறுப்பு பட்டி யலில் சேர்த்தும் ஒரு மனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    என்ஜினீயர் பேரின்பம், மேலாளர் நாச்சியம்மாள், அலுவலர் போஸ்கோ, கவுன்சிலர்கள் விஜூ, ரத்தினமணி அருள்ராஜ், ஆட்லின் கெனில், ரவி, லலிதா, ஜெயந்தி, மினி குமாரி, பெர்லின் தீபா, சாலின் சுஜாதா, ரோஸ்லெட், ரீகன், ஜலிலாராணி, ஞான புஸ்பம் உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

    • ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் கட்டிட டெண்டர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
    • கட்டிடங்களை இடிப்ப தற்கு கடந்த 8-ந் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவின் பேரில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பரமசிவன் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முழுவதும் குழந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்புத் திட்டம் 2022-23-ன் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் மிகவும் பழுதடைந்த ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி கட்டிடங்களை அப்புறப்படுத்தி புதிய பள்ளிக் கட்டிடங்களை கட்டுவதற்கும் கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்களை கட்டுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்ப டையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 77 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், 78 புதிய பள்ளி கட்டிடங்கள், 18 வகுப்பறைகள் கட்டுவதற்கு மாவட்ட கலெக்டரால் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    கோடைகால விடுமுறை முடிந்து ஜுன் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் துவங்கும் போது புதிய கட்டிடத்தில் இயங்கும் வகையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் பழுதடைந்த கட்டிடங்களுக்கு பதிலாக புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி 28.1.2022 அன்று வழங்கப்பட்டது. நல்லிருக்கை மற்றும் கொம்பூதி கிராமங்களில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் உள்ள பழுதடைந்த கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தவும் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்களை இடிப்பதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட பின்னரே பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நல்லிருக்கை மற்றும் கொம்பூதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடங்களை இடிப்ப தற்கு கடந்த 8-ந் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

    ஆனால் அதற்கு முன்பே இந்தப் பள்ளிகளில் கட்டிடங்கள் இடிக்கப்பட்டுவிட்டது. இதனால் அந்தப் பள்ளி கட்டிடங்களை இடிப்பதற்காக வழங்கிய ஒப்பந்தப்புள்ளி நிறுத்தம் செய்யப்பட்டு, திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் தொடர்புடைய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    ×