search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 179048"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாராளுமன்றம் என்பது அனைத்து தரப்பு மக்களுக்குமானதாகும்.
    • புதிய பாராளுமன்றம் திறக்கப்பட்ட தினத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கருப்பு தினமாக அறிவிக்கிறது.

    சிதம்பரம்:

    சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    உலகிலேயே 2-வது பெரிய ரெயில்வே ஸ்தாபனமான இந்திய ரெயில்வே துறையில் ஓடிசா ரெயில் விபத்தில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சி.ஐ.ஜி. எனப்படும் தணிக்கை துறையின் அறிக்கையை துரிதமாக செயல்படுத்தியிருந்தால் இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும். எனவே இந்த விபத்திற்கு பிரதமர் மோடி முழுப்பொறுப்பேற்க வேண்டும். மத்திய ரெயில்வே மந்திரி பதவி விலக வேண்டும், இது தொடர்பாக விசாரணை நடத்திட தனி ஆணையம் அமைக்க வேண்டும்.

    கடந்த காலத்தில் ரெயில்வே அமைச்சராக இருந்த மம்தாவால் செயல்படுத்தப்பட்ட கலாச்சி என்ற பெயரிலான விபத்து தடுப்பு திட்டம் செயல்படுத்தியிருந்தாலே இந்த விபத்து நிகழாமல் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. ரெயில் விபத்து தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.ஆயிரம் கோடி ஓதுக்கீடு செய்தும் இந்த விபதது நடந்துள்ளது உலக அரங்கில் இந்தியாவிற்கு தலை குனிவை ஏற்படுத்தியுள்ளது.

    ஸ்ரீராம், ஹரே ராம் என்று கோஷம் இடுபவர்களுக்கும், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு மட்டுமே பிரதமர் மோடி மந்திரி சபையில் இடம் தரப்படுகிறது, பாராளுமன்றம் என்பது அனைத்து தரப்பு மக்களுக்குமானதாகும். ஆனால், இங்கு ஒரு குறிப்பிட்ட மதத்தினரை அழைத்து திறப்பு விழா நடத்தியது தவறாகும். எனவே, புதிய பாராளுமன்றம் திறக்கப்பட்ட தினத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கருப்பு தினமாக அறிவிக்கிறது.

    விழுப்புரம் மெல்பாதி கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சென்றவர்களை தாக்கிய சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருந்தபோதும் அவர்கள் கைது செய்யப்படவில்லை. கடந்த 1947-ம் ஆண்டு ஆலய நுழைவு தனிச்சட்டம் இயற்றப்பட்டது. இருந்தபோதும் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான இந்து சமய அறநிலைத்துறை தொடர்பான கோவில்களில் சாதிய மறுப்பு நிகழ்வு நடைபெறுவது வெட்கக்கேடானது.

    பா.ம.க. போன்று சாதி வெறுப்பு அரசியலில் ஈடுபடும் அரசியல் வாதிகளாலேயே இது போன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் தொடர்கதையாக உள்ளது. இதற்கு எதிராக எனது தலைமையில் வருகிற 9-ந்தேதி சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இதேபோல மதுரை திருமோகூர் கோவிலில் நடைபெற்ற கலவரத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். 30-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளும், கார், கொடி மரம், பெயர்ப்பலகைகள் கலவரத்தில் அடித்து நொறுக்கப்பட்டது. இது தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டதே தவிர யாரும் கைது செய்யப்படவில்லை. இதனை கண்டித்து எனது தலைமையில் 12-ந்தேதி மதுரையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    சிதம்பரத்தில் நடந்த குழந்தை திருமணம் கண்டிக்கத்தக்கதாகும். குழந்தைகள் திருமண வயதை எட்டிய பின்னரே அவர்களுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்பதே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைபாடாகும்.

    தமிழகம் முழுவதும் சிறையில் 10 ஆண்டு நிறைவு செய்த தண்டனை கைதிகளை கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு விடுதலை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திய அரசு ரெயில்வே துறை, மின்சாரத்துறை போன்ற அரசு பொதுத்துறைகளை தனியாருக்கு தாரைவாக்கும் நோக்கில் செயல்படுகிறது.
    • தமிழக அரசு இரண்டு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை ஒடிசா மாநிலத்திற்கு அனுப்பி வைத்து நிலைமையை கண்டறிந்து உதவிகள் செய்திருக்கிறது.

    மதுரை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒடிசா ரெயில் விபத்து மிகவும் வருத்தத்திற்குறியது. வேதனை அளிக்கிறது. இந்த விபத்துக்கு காரணம் அதிநவீன பாதுகாப்பு கருவிகள் சரியாக இயங்காதது தான். இது இந்தியாவிற்கு பெரும் தலைகுனிவு.

    இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும். அப்படி விசாரிக்கும் போது தற்போதைய ரெயில்வே அமைச்சர் பதவியில் இருந்தால் அந்த விசாரணைக்கு இடையூறாக இருக்கும். எனவே இந்த விபத்திற்கு தார்மீக பொறுப்பேற்று ரெயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்.

    மத்திய அரசு ரெயில்வே துறை, விமானத்துறை, மின்சாரத்துறை போன்ற அரசு பொதுத்துறைகளை தனியாருக்கு தாரைவாக்கும் நோக்கில் செயல்படுகிறது. அதனால் தான் சரியான முறையில் அதிநவீன பாதுகாப்பு கருவிகளை பராமரிக்கவில்லை.

    இந்த ரெயில் விபத்து நடைபெற்ற உடனே தமிழக அரசு இரண்டு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை ஒடிசா மாநிலத்திற்கு அனுப்பி வைத்து நிலைமையை கண்டறிந்து உதவிகள் செய்திருக்கிறது. மேலும் தமிழக முதல்வர் இந்த நாளை துக்க நாளாக அனுசரித்து அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து இருக்கிறார்.

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு சென்று நிலைமைகளை நேரில் ஆய்வு செய்திருக்கிறார். இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி பாராட்டுகிறது.

    கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையே உயர் நீதிமன்றம் உறுதி செய்து இருக்கிறது. இந்த வழக்கில் அனைத்து சாட்சிகளும் பிறழ் சாட்சிகளாக மாறிய நிலையிலும், அதிநவீன தகவல் தொழில்நுட்பத்தை வைத்து, அதில் உள்ள தகவல்களை வைத்து வாதாடி உரிய நீதி பெற்று தந்த வழக்கறிஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற ஆணவ படுகொலைகளை தடுக்க தமிழக அரசு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

    மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர் கோவில் திருவிழாவில் தலித் மக்கள் தாக்கப்பட்டதை கண்டிக்கிறோம். மதுரை சுற்றுப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தலித் மக்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள்.

    அதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த தாக்குதல்களை கண்டித்து வருகிற 12-ந் தேதி மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தென்னிந்திய மாநிலங்களில் பா.ஜ.க. வினவருக்கு இறுக்கமான சூழல் நிலவுகிறது.
    • காங்கிரஸ் கட்சியா பாஜகவா என்றில்லாமல் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை அடிப்படையில் எதிர்க்கட்சியினர் ஒன்றிணைய வேண்டும்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுகள் வழங்கும் விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமையில் நடந்தது. விழாவுக்கு பொதுச்செயலாளர்கள் சிந்தனை செல்வன், துரை ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகுத்தனர்.

    ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி வரும் தலைவர்களை ஊக்குவிக்கும் விதமாக சமூகநீதி, சமத்துவம், பன்மைத்துவம், மத சார்பின்மை போன்றவற்றிற்காக பாடுபடும் சான்றோரை கவுரவிக்கும் வகையில் அம்பேத்கர் சுடர் விருது சி.பி.எம்.எம்.எல். பொதுச்செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யாவுக்கும், பெரியார் ஒளி விருது, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் ராஜாவுக்கும், காமராஜர் கதிர் விருது தமிழக சபாநாயகர் அப்பாவுக்கும் திருமாவளவன் வழங்கி பாராட்டினார்.

    காயிதே மில்லத் பிறை விருது பெங்களூரு சட்ட பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் மோகன் கோபாலுக்கும், செம்மொழி ஞாயிறு விருது தமிழறிஞர் தாயம்மாள் அறவாணனுக்கும் திருமாவளவன் வழங்கி கவுரவித்தார். விருதுகளுடன் ஒவ்வொருவருக்கும் ரூ.50 ஆயிரம் பொற்கிழியும் அவர் வழங்கினார்.

    கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது:-புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோலை வைப்பதற்கான தேவை என்ன இருக்கிறது? அந்த திறப்பு விழாவிற்கு தமிழ்நாட்டில் இருந்து ஆதீனங்களை வரவழைத்து தேவாரம் பாடலைப் பாட வைப்பதற்கான அவசியம் என்ன?

    தென்னிந்திய மாநிலங்களில் பா.ஜ.க. வினவருக்கு இறுக்கமான சூழல் நிலவுகிறது. கர்நாடகாவில் கூட மெல்ல மெல்ல முன்னேறி உள்ளனர், ஆனால் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் ஒன்று, இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே அவர்கள் திக்கு முக்காடுகின்றனர். எனவே திட்டமிட்டு அவர்கள் தென்னிந்தியாவில் ஊடுருவ முயற்சிக்கிறார்கள்.பா.ஜ.க.வினர் தமிழ்நாட்டை குறிவைத்து விட்டனர்.

    இந்திய தேசத்தை காப்பாற்ற நாம் ஒன்றிணைய வேண்டும். காங்கிரஸ் கட்சியா பாஜகவா என்றில்லாமல் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை அடிப்படையில் எதிர்க்கட்சியினர் ஒன்றிணைய வேண்டும்.

    பா.ஜ.க. சங்பரிவார் அமைப்புகள் அமைக்க நினைப்பது இந்த கஷ்டம் என்னும் தேசியமே. இந்து ராஷ்ட்ரம் என்பது பிராமண தேசம் என்பது தான் உண்மையான பொருள். இந்த அடிப்படை புரியாமல் மோடியும் அண்ணாமலையும் பிராமணர்களுக்கு எடுபிடி வேலை செய்து வருகின்றனர். இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடும் என்று அறிவித்திருக்கிறார்கள். மக்கள் தொகை அடிப் படையில் நாடாளுமன்ற உறுப்பினரின் எண்ணிக்கை கூடினால் அதனை வரவேற்கலாம்.

    ஆனால் பாஜகவினர் திட்டமிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வட மாநிலங்களில் மட்டும் உயர்த்தி அதன்பின் தேர்தல் வந்தாலும் மத அரசியலைத் தூண்டி தனக்கென தனி மெஜாரிட்டியை பெற்று தொடர்ந்து ஆட்சியில் இருக்கலாம் என்ற தொலை நோக்கு பார்வையுடன் திட்டமிட்டு இந்த அறிவிப்பை செய்து இருக்கிறார்கள். பா.ஜ.க.வினரை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும், கட்சிகள் இணையாவிட்டாலும் மக்கள் விரட்டி அடிப்பார்கள். 2024-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் நிகழும். ஆட்சி மாற்றம் நிகழும் போது திரவுபதி முர்மு நிச்சயமாக மரியாதை செய்யப்படுவார்.

    தமிழ்நாட்டில் 2 எம்.பி.க்கள் 4 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட சின்ன கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்க லாம், ஆனால் இந்திய அளவில் சனாதனத்தை எதிர்க்கும் வலிமையான கட்சி விடுதலை சிறுத்தைகள்.

    பா.ஜ.க.வை வீழ்த்துவது ஒன்றுதான் நம் முன்னால் இருக்கின்ற ஒற்றை சவால் என்கின்ற அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

    இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

    விழாவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுசெயலாளர் டி.ராஜா பேசியதாவது:-

    தலைவர்களின் பெயர்களில் விருதுகள் வழங்குவது, இந்தியாவை இடது பக்கம் திருப்புவது காலத்தின் தேவையாக இருக்கிறது என்பதை இந்த விழா உணர்த்துகிறது.

    இந்திய நாடு எந்த காலத்திலும் ஒரு மதம் சார்ந்த நாடாக போய் விடக்கூடாது என்று அம்பேத்கர் பேசினார், ஆனால் இன்று மோடி ஆட்சி காலத்தில் நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது?

    மோடி அரசு கார்ப்பரேட் முதலாளிகளுக்கான அரசு, ஏழைகளுக்கான அரசு அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்க வேண்டும். மைய அரசு அதிகாரங்களை குவித்துக் கொள்ளக் கூடாது. இந்திய பொருளாதாரம் சிக்கலில் உள்ளது.

    ஜனநாயகத்தின் தாய் வீடாக இந்தியா திகழ்ந்து வருகிறது. நாட்டின் முதல் குடிமகள் திரௌபதி முர்மு எங்கே? இந்த நாடு மாற்றத்தை எதிர்நோக்கி இருக்கிறது மாற்றத்திற்கான போர் குரலை மக்கள் எழுப்ப தொடங்கிவிட்டனர்.

    நாடு பாதுகாக்கப்பட வேண்டுமானால் பாசிச பா.ஜ.க. அரசு தூக்கி எறியப்பட வேண்டும். பா.ஜ.க. அரசு ஜனநாயகத்தையே தவிர்த்து வருகிறது. இதனை முறியடித்து நாடு, அரசியல் சட்டம், ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமானால் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் எம்.எல்.ஏ.க் கள் எஸ்.எஸ்.பாலாஜி, வூளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு, மாநில் நிர்வாகிகள் வன்னி அரசு, உஞ்சை அரசன், பாவரசு, பால சிங்கம், தயாளன், தகடூர் தமிழ் செல்வன், பாவலன், வீர ராஜேந்திரன், வக்கீல் பார்வேந்தன், பள்ளிக் கரணை ஆர்.பன்னீர்தாஸ், மாவட்ட செயலாளர்கள் வி.கோ.ஆதவன், இரா. செல்வம், செல்லத்துரை, அம்பேத்வளவன், ரவி சங்கர் மற்றும் நீல சந்திர குமார், முருகையன், சிறுத்தை வீ.கிட்டு, செம்பை வீரமுத்து, கே.சந்திரன், ஸ்டீபன், எழிலரசு, மயிலை குமரப்பா, ஆ.வேலாயுதம், ஜெயபாபு சோழன், கடலூர் துணை மேயர் தாமரை செல்வன், பாவேந்தன், நந்தன், ஆதிமொழி, சேலம் காயத்ரி, அருண்பிரேம், லைவ் கார்த்திக், பரம செல்வம், விடுதலை, தாமரை உள்ளிட்ட ஆயிரக்கணக் கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு திருப்தியாக இல்லை என்று தி.மு.க. கூட்டணி கட்சியில் உள்ள திருமாவளவன் கூறி இருப்பது வரவேற்கத்தக்கது.
    • தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது தான் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க தவறியது மற்றும் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டதை கண்டித்தும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் கலந்துகொண்ட முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு திருப்தியாக இல்லை என்று தி.மு.க. கூட்டணி கட்சியில் உள்ள திருமாவளவன் கூறி இருப்பது வரவேற்கத்தக்கது. ஏற்கனவே தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் மௌனமாக இருப்பதாக குற்றம் சாட்டியிருந்த நிலையில் தற்போது திருமாவளவன் வாய் திறந்து பேசி இருப்பது பாராட்டுதலுக்கு உரியது.

    தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது தான் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பை தி.மு.க.வினர் கொண்டாடுவதற்கு தார்மீக அடிப்படையில் உரிமை உள்ளதா, இல்லையா என்பது அவர்களின் மனசாட்சிக்கே தெரியும். ஜல்லிக்கட்டு தீர்ப்பு என்பது ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான தீர்ப்பு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 3 வருடத்திற்கு ஒரு முறை மாவட்ட நிர்வாகிகளை மாற்றுவது வழக்கம். ஆனால் 7 ஆண்டுகளாக மாவட்டச் செயலாளர்கள் நீடித்து வருகிறார்கள்.
    • விவேகத்துடன் வேகமாகவும் செயல்பட்டால் தான் கட்சியை மேலும் வலுப்படுத்த முடியும் என்று அண்ணனுக்கு நெருக்கமான தம்பிகள் ஆதங்கப்படுகிறார்கள்.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் மாவட்டச் செயலாளர்களை மாற்றம் செய்வதற்கான ஆயத்த பணிகளை 2 வருடத்திற்கு மேலாக கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மேற்கொண்டு வருகிறார்.

    இதற்கான பணியில் தலைமை கழக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு மாவட்டம் வாரியாக சென்று விண்ணப்பங்களை பெற்று பரிசீலனை செய்யப்பட்டது.

    ஆனாலும் இன்னும் மாற்றம் குறித்த அறிவிப்பை அவர் வெளியிடாமல் இருக்கிறார். 3 வருடத்திற்கு ஒரு முறை மாவட்ட நிர்வாகிகளை மாற்றுவது வழக்கம். ஆனால் 7 ஆண்டுகளாக மாவட்டச் செயலாளர்கள் நீடித்து வருகிறார்கள். தற்போது உள்ள பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்படுவது உறுதியாகி விட்டதால் புதிய மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை அறிவிப்பார் என்று கட்சி தொண்டர்கள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள். தற்போது பொறுப்பில் உள்ள மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்படுவதால் கட்சிப் பணியில் ஆர்வம் காட்டவில்லை.

    இதனால் போராட்ட களங்களில் உற்சாகமின்றி நிர்வாகிகள் செயல்படுகின்றனர். கட்சி தலைமை அறிவிக்கின்ற போராட்டங்களை முழுமையாக செய்ய தயங்குகின்றனர்.

    தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிடுவதில் திருமாவளவன் ஆர்வம் காட்டாமல் மவுனமாக இருப்பது ஏன்? என்ற கேள்வி கட்சி உயர்மட்ட நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை மேலோங்கி வருகிறது.

    திருமாவளவன் எதற்காக புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம் விஷயத்தை தாமதப்படுத்துகிறார் என்பது கட்சிக்குள் இப்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருமாவளவனின் மவுனம் கலைந்தால் யாருக்கு லாபம்? யாருக்கு பாதிப்பு? என்பது தெரிந்து விடும். விவேகத்துடன் வேகமாகவும் செயல்பட்டால் தான் கட்சியை மேலும் வலுப்படுத்த முடியும் என்று அண்ணனுக்கு நெருக்கமான தம்பிகள் ஆதங்கப்படுகிறார்கள்.

    • இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா நாளை மாலை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு திடலில் நடைபெறுகிறது.
    • விருது வழங்கும் விழாவில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்தும் நிர்வாகிகள், தொண்டர்கள் பஸ், கார், வேன்களில் வருகிறார்கள்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுகள் வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.

    ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காக பாடுபட்டு வரும் தலித் அல்லாத சான்றோரை போற்றும் வகையில் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரில் அம்பேத்கர் சுடர் என்னும் விருது 2007-ம் ஆண்டு வழங்கப்பட்டது.

    2008-ம் ஆண்டு முதல் அம்பேத்கர் சுடர் விருதுடன் பெரியார் ஒளி, அயோத்தி தாசர் ஆதவன், காமராசர் கதிர், காயிதே மில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகளுடன் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்து வரும் சான்றோருக்கு பாராட்டுப் பட்டயம், நினைவு கேடயம் ஆகியவற்றுடன் ரூ.50 ஆயிரம் பொற்கிழியும் வழங்கப்பட்டு வருகின்றன.

    2022-ம் ஆண்டு முதல் கார்ல்மார்க்ஸ் பெயரில் மார்க்ஸ் மாமணி என்னும் விருது வழங்கப்படுகிறது. இவ்விழா ஆண்டு தோறும் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு திடலில் நடைபெறுகிறது.

    விழாவிற்கு கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர்கள் சிந்தனை செல்வன், துரை.ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். அம்பேத்கர் சுடர் விருது சி.பி.ஐ.எம்.எல்-விடுதலை பொதுச்செயலாளர் பட்டாச்சார்யாவுக்கும், பெரியார் ஒளி விருது இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் ராஜாவுக்கும், காமராஜர் கதிர் விருது தமிழக சபாநாயகர் அப்பாவுக்கும் வழங்கப்படுகிறது.

    மார்க்சிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு மார்க்ஸ் மாமணி விருது, டெல்லி முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபால் கவுதமிற்கு அயோத்தி தாசன் விருது, காயிதே மில்லத் பிறை விருது பெங்களூரு சட்டப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர் மோகன் கோபாலுக்கும், செம்மொழி ஞாயிறு விருது தமிழறிஞர் தாயம்மாள் அறவாணனுக்கும் திருமாவளவன் வழங்கி கவுரவிக்கிறார்.

    விருது வழங்கும் விழாவில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்தும் நிர்வாகிகள், தொண்டர்கள் பஸ், கார், வேன்களில் வருகிறார்கள்.

    எம்.எல்.ஏ.க்கள் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் உஞ்சை அரசன், வன்னிய அரசு, பாவரசு, பாலசிங்கம், தயாளன், பாவலன், வீர.ராஜேந்திரன், சென்னை மாவட்ட செயலாளர்கள் இரா.செல்வம், ந.செல்லத்துரை, வி.கோ.ஆதவன், அம்பேத்வளவன் விசங்கர், கவுன்சிலர்கள் யாழினி உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகிய அனைவரும் தனித்தனி அணியாக பிரிந்து நிற்காமல் ஒன்று சேர்ந்து தி.மு.க.வை எதிர்க்க வேண்டும்.
    • மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்பட அனைவரும் சேர்ந்து அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெறுவதற்காக தேர்தல் பணியாற்றுவோம்.

    கன்னியாகுமரி:

    தமிழக சட்டமன்ற பா.ஜ.க. தலைவரும், நெல்லை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான நயினார் நாகேந்திரன் கன்னியாகுமரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் தலைமை அனுமதித்தால் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் நான் போட்டியிடுவேன். பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று மத்திய மந்திரி அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் ஏற்கனவே அறிவித்து இருக்கிறார்கள்.

    மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்பட அனைவரும் சேர்ந்து அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெறுவதற்காக தேர்தல் பணியாற்றுவோம்.

    கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவினால் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. பாராளுமன்ற தேர்தல் வேறு. சட்டமன்ற தேர்தல் வேறு. சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு முறையான வாக்குப்பதிவு நடைபெறும். பாராளுமன்றத்தை பொறுத்தமட்டில் யார் இந்த நாட்டினுடைய பிரதமராக வரவேண்டும் என்பதை பொறுத்து தான் வாக்கு வங்கி அமையும்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலை பொறுத்தமட்டில் தி.மு.க.வை எதிர்க்க கூடிய அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் சேர வேண்டும். அப்படி ஒன்றுபட்டு தேர்தல் களத்தை சந்தித்தால் தான் தி.மு.க.வை தோற்கடிக்க முடியும். ஆகையால் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகிய அனைவரும் தனித்தனி அணியாக பிரிந்து நிற்காமல் ஒன்று சேர்ந்து தி.மு.க.வை எதிர்க்க வேண்டும்.

    தி.மு.க.வை எதிர்க்கக் கூடிய அனைத்து கட்சிகளும் ஒரேஅணியில் இணைய வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம். திருமாவளவன் அ.தி.மு.க. கூட்டணியில் சேருவாரா? என்பது பற்றி அவர்தான் கருத்து சொல்ல வேண்டும்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் நரேந்திரமோடி தான் மீண்டும் பிரதமர் ஆவார். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. உலகத்தில் இருக்கிற மிகச் சிறந்த தலைவர் யார் என்று சொன்னால் இன்றைக்கு முதல் வரிசையில் இடம் பிடித்து இருப்பவர் பிரதமர் மோடி மட்டும் தான். எனவே இந்தியாவில் 3-வது முறையாக நரேந்திரமோடி பிரதமராக பொறுப்பு ஏற்பது உறுதி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்துத்துவா அமைப்புகள் தற்போது பின்பற்றும் வெறுப்பு அரசியலுக்கு விதை போட்டவர் சாவர்க்கர்.
    • ஜனநாயகத்தின் கோயில் என்று கருதப்படும் பாராளுமன்றக் கட்டிடத்தை இப்படியான ஒருவரது பிறந்தநாளில் திறப்பது இந்திய மக்களுக்குச் செய்யும் அவமதிப்பாகும்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகவும், ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் வகையிலும் பாராளுமன்றப் புதிய கட்டடத்தை பிரதமரே திறக்கிறார். குடியரசுத் தலைவர் மற்றும் மாநிலங்களவைத் தலைவரான குடியரசுத் துணைத்தலைவர் ஆகிய இருவரும் விழாவுக்கு அழைக்கப்படவில்லை.

    அது மட்டுமின்றி தீவிர சனாதன பாசிசப் பற்றாளர் சாவர்க்கரின் பிறந்தநாளில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது திட்டமிட்ட-உள்நோக்கத்துடன் கூடிய நடவடிக்கையே ஆகும்.

    இந்துத்துவா அமைப்புகள் தற்போது பின்பற்றும் வெறுப்பு அரசியலுக்கு விதை போட்டவர் சாவர்க்கர். சாவர்க்கரின் கருத்தியலால் ஈர்க்கப்பட்ட நாதுராம் கோட்சே என்பவன் துப்பாக்கியால் சுட்டு மகாத்மா காந்தியை படுகொலை செய்தான்.

    அந்தப் படுகொலை வழக்கில் சாவர்க்கரின் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அது குறித்து நேருவுக்கு 1948-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந்தேதி சர்தார் பட்டேல் எழுதிய கடிதத்தில் மகாத்மா காந்தியடிகளின் கொலையில் ஈடுபட்டது சாவர்க்கரின் கீழ் இயங்கும் நபர்கள்தான் எனக் குறிப்பிட்டிருந்தார். நேரடியாக சாவர்க்கரின் கீழ் இருந்த இந்து மகாசபையின் வெறித்தனமான பிரிவுதான் சதித்திட்டத்தை தீட்டி அதை நிறைவேற்றியது" என அதில் அவர் எழுதியிருந்தார்.

    பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அவர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது அவர் பிரிட்டிஷ் ஆட்சியாளருக்கு எழுதிய மன்னிப்புக் கடிதங்கள் புகழ் பெற்றவையாகும்.

    ஜனநாயகத்தின் கோயில் என்று கருதப்படும் பாராளுமன்றக் கட்டிடத்தை இப்படியான ஒருவரது பிறந்தநாளில் திறப்பது இந்திய மக்களுக்குச் செய்யும் அவமதிப்பாகும்.

    இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில்தான் புதிய பாராளுமன்றக் கட்டடம் திறக்கப்படும் மே 28-ம் நாளன்று விடுதலைச் சிறுத்தைகள் அனைவரும் இல்லந்தோறும் கறுப்புக்கொடி ஏற்றவேண்டும், கறுப்பு உடை அணிய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். இதில் உடன்பாடு உள்ள ஜனநாயக சக்திகளும் தமது கண்டனத்தைப் பதிவு செய்திட முன்வருமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
    • ஜனநாயக மரபை சிதைக்கிற வகையில் பிரதமர் மோடி நடந்து கொள்வது அதிர்ச்சியளிக்கிறது.

    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை வருகிற 28-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவை தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட 19 கட்சிகள் புறக்கணிக்க உள்ளது.

    அரசியலமைப்பு சட்டத்தின்படி பாராளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் அதிகாரப்பூர்வ தலைவர் குடியரசு தலைவர் தான். எனவே அவர் தான் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும். ஆனால் தன்னுடைய பெயர் வரலாற்றில் நிலைக்க வேண்டும் என்ற ஆசையால் ஜனநாயக மரபை சிதைக்கிற வகையில் பிரதமர் மோடி நடந்து கொள்வது அதிர்ச்சியளிக்கிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

    எனவே புதிய பாராளுமன்ற கட்டிடம் திறக்கப்படும் 28-ந்தேதியை துக்க தினமாக கடைபிடிப்போம். அந்த நாளில் கட்டிடத்தை திறப்பதற்கு உள்நோக்கம் இருக்கிறது. சவார்கரின் பிறந்த நாளன்று பாராளுமன்றம் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்றைய தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கறுப்பு கட்டை அணிந்து கருப்பு கொடி ஏந்துவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கள்ளச்சாராய மரணம் மிகப்பெரிய வேதனை அளிக்கிறது. முழு மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.
    • முழு மதுவிலக்கை வலியுறுத்தி மக்கள் இயக்கத்தை தொடங்க இருக்கிறோம்.

    திருச்சி:

    பெரம்பலூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. இன்று விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற இரு அவைகளுக்கும் குடியரசு தலைவர் தான் தலைவராக இருக்கிறார். அரசியலமைப்பு சட்டமே அதை தான் உறுதிப்படுத்துகிறது. புதிதாக பாராளுமன்ற கட்டிடம் கட்டியுள்ள நிலையில் அதன் திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவரை அழைக்காதது அதிர்ச்சி அளிக்கிறது.

    திட்டமிட்டே உள்நோக்கத்தோடு குடியரசு தலைவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது. ஜனநாயக மரபை சிதைக்கும் வகையில் மோடி அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது.

    புதிய பாராளுமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழாவின் போது அப்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. தற்போது குடியரசு தலைவரும் அழைக்கப்படவில்லை. இது திட்டமிட்டு செய்த நடவடிக்கை தான். அதுமட்டுமில்லாமல் மே 28-ந்தேதி என்பது சாவர்க்கரின் பிறந்த நாளாக உள்ளது. சனாதன தர்மத்தை நிலைநாட்ட பெரிதும் பாடுபட்டவர் சாவர்க்கர். அவர் பிறந்த நாளில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு காரணங்களுக்காக நாங்கள் பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டோம் என அறிவித்துள்ளோம்.

    இந்த விழாவிற்கு குடியரசு தலைவரும் அழைக்கப்பட வேண்டும், திறப்பு விழா தேதியும் மாற்றப்பட வேண்டும். கர்நாடக தேர்தல் முடிவுகள் அகில இந்திய அளவில் பிரதிபலிக்கும். மோடி அரசுக்கு கர்நாடக மக்கள் அளித்த தீர்ப்பு அவர்களின் வெறுப்பு அரசியலுக்கு எதிரான தீர்ப்பு. கர்நாடகத்தில் ஹிஜாப் பிரச்சினை, முஸ்லீம்கள் இட ஒதுக்கீடு ரத்து போன்றவற்றை செய்து மக்களை பிளவுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். அதன் காரணமாக இந்துக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு அளித்து இந்துக்கள் தான் பா.ஜ.க.வை தோல்வி அடைய செய்தார்கள். 2024 பாராளுமன்ற பொதுத்தேர்தலில் இது பிரதிபலிக்கும்.

    கர்நாடக அமைச்சரவை பொறுப்பேற்பு விழாவில் எங்களுக்கு அவமரியாதை நடக்கவில்லை. முறைப்படி தான் எங்களுக்கு நாற்காலிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. கள்ளச்சாராய மரணம் மிகப்பெரிய வேதனை அளிக்கிறது. முழு மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். முழு மதுவிலக்கை வலியுறுத்தி மக்கள் இயக்கத்தை தொடங்க இருக்கிறோம்.

    கள்ளச்சாராயத்தால் மரணம் அடைந்தவர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி அளித்திருப்பது முதலமைச்சர் அதை மனிதாபிமான அடிப்படையில் அணுகி இருக்கிறார் என்பதை தான் காட்டுகிறது. கள்ளசாராயத்தை ஊக்குவிக்கிறது என விமர்சிக்க கூடாது. பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தினால் அவர்களோடு நான் கைக்கோர்ப்பேன். பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணி அமையக்கூடாது, அது நாட்டுக்கு நல்லதல்ல, அது அமைந்தால் சனாதன வாதிகளுக்கு தான் வலு சேர்க்கும். ஜாதி பெயரில் பட்டங்கள் வழங்குவது விளம்பரத்திற்காக செய்யும் வேலை, தேவையில்லாத வேலை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக அரசியல் தலைவர்களில் மிக மிக நிதானமானவர் என்ற சிறப்பை பெற்றிருப்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.
    • மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாலும் சரி, வேதனையை வெளிப்படுத்தினாலும் சரி அவரிடம் ஒரு சமநிலையை எப்போதும் பார்க்கலாம்.

    தமிழக அரசியல் தலைவர்களில் மிக மிக நிதானமானவர் என்ற சிறப்பை பெற்றிருப்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன். எந்த ஒரு கூட்டத்திலும், எந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பிலும் அவர் வார்த்தைகளை நுணுக்கமாக அளந்து பேசுவார்.

    அவர் வைக்கும் பதில் உரைகள் ஆணித்தரமாக இருக்கும். ஆதாரங்கள் நிறைந்ததாகவும் இருக்கும். மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாலும் சரி, வேதனையை வெளிப்படுத்தினாலும் சரி அவரிடம் ஒரு சமநிலையை எப்போதும் பார்க்கலாம்.

    அத்தகைய பக்குவம் மிகுந்தவர் சமீபத்தில் சிதம்பரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் மைக் வேலை செய்யாததால் நிதானம் இழந்தார். மைக் இணைப்பில் அதிக சத்தம் வந்ததால் அவரது நிதானம் கட்டுப்பாட்டை இழந்தது. இதுபற்றி விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, 'தமிழகத்தில் எத்தனையோ தலைவர்கள் பொது இடங்களில் தங்களது நிலையை எண்ணிப்பார்க்காமல் நடந்துள்ளனர். எங்கள் தலைவர் மைக் வேலை செய்யாததால் சற்று ஆவேசமானார். இதில் எந்த குறையையும் சொல்ல முடியாது' என்றனர்.

    • 2009-ம் ஆண்டு மே 17-ந் தேதி உலகமே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் போது, முள்ளி வாய்க்கால் நிலப்பரப்பில் வைத்து தமிழினப்படுகொலை நடந்தது.
    • பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் நடத்திய போராட்டம் அறம் சார்ந்த இன விடுதலைப் போராட்டமாகும்.

    சென்னை:

    முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வீரவணக்கப் பொதுக்கூட்டம் கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரில் நாளை நடைபெறுகிறது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. பங்கேற்று பேசுகிறார்.

    இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் துணை பொதுச்செயலாளர் வன்னிஅரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2009-ம் ஆண்டு மே 17-ந் தேதி உலகமே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் போது, முள்ளி வாய்க்கால் நிலப்பரப்பில் வைத்து தமிழினப்படுகொலை நடந்தது.

    பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் நடத்திய போராட்டம் அறம் சார்ந்த இன விடுதலைப் போராட்டமாகும்.

    ஈழத்தந்தை செல்வா தலைமையிலான அறவழிப் போராட்டமாகட்டும், பிரபாகரன் தலைமையிலான ஆயுதவழி அறப்போராட்டமாகட்டும் எல்லாமே மக்களுக்கான விடுதலைப் போராட்டமே!

    ஆனால், இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தை தீவிரவாதமாக பார்த்து தடை செய்தது. தடைகளை மீறி போராட்டங்கள் தொடரத்தான் செய்கிறது.

    2010-ம் ஆண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் எமது தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் பேசும் போது,

    "கடைசி விடுதலைச் சிறுத்தைகள் இருக்கும் வரை, ஈழவிடுதலைக்காக போராடுவோம்-ஈழ விடுதலைப் போரை முன்னெடுப்போம்" என பிரகடனப்படுத்தினார்.

    எத்தனையோ அவதூறுகள், எத்தனையோ சாதிவெறித் தாக்குதல்கள்

    அத்தனையையும் முறியடித்து மக்களுக்காக நின்று களமாடி வருகிறோம்.

    இனப்படு கொலைகளுக்கு எதிரான களத்தில், எந்த சோர்வும் இல்லாமல் விடுதலைச் சிறுத்தைகளை வழிநடத்தி வரும். தமிழ்த்தேசியப் பெருந்தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில், நாளை மாலை 4 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்டம் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் நடைபெறுகிறது.

    இனப்படுகொலைகளுக்கு எதிராக களமாட உறுதி ஏற்போம்!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×