என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹெல்மெட்"

    • அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.
    • வரும் 1-ந் தேதி முதல் ஹெல்மெட் போட்டு வந்தால் தான் பெட்ரோல் வழங்குவோம் என்று பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன விபத்துக்கள் அதிகரித்து உயிர்பலி ஏற்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலோனார் முறையாக ஹெல்மெட் அணியாமல் செல்வதால் உயிரை பறிகொடுக்கும் நிலை ஏற்படுகிறது.

    இதையடுத்து இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்வதை வலியுறுத்தும் வகையில் போலீசார் பல்வேறு அமைப்புகளுடன் சேர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இதனை தீவிரப்படுத்த திருவள்ளூர் மாவட்ட போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    அதன்படி மாவட்ட காவல்துறை மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இணைந்து, விபத்துகளை குறைக்கும் முயற்சியாக வருகிற ஏப். 1-ந்தேதி முதல் பெட்ரோல் பங்க்குகளில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் சென்றால் பெட்ரோல் வழங்குவதில்லை என்பதை நடைமுறைப்படுத்த உள்ளனர்.

    இதனை தீவிரமாக செயல்படுத்த பங்க் உரிமையாளர்களுக்கு போலீசார் உத்தரவிட்டு உள்ளனர். இது தொடர்பாக அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள் கூறியதாவது:-

    பெட்ரோல் பங்க் உரிமையாளர்களிடம் கலந்தாலோசித்து விபத்துகளை குறைக்கும் முயற்சியாக வரும் ஏப்ரல் 1-ந்தேதி முதல் பெட்ரோல் பங்க்குகளில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றால் பெட்ரோல் வழங்குவதில்லை என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளோம்.

    முதற்கட்டமாக தற்போது திருவள்ளூர் நகர் பகுதிகளில் அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் 'நோ ஹெல்மெட், நோ பெட்ரோல்' என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு வாசகம் ஸ்டிக்கரை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதில் பங்க்குகளுக்கு பெட்ரோல் போட வரும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் வரும் 1-ந் தேதி முதல் ஹெல்மெட் போட்டு வந்தால் தான் பெட்ரோல் வழங்குவோம் என்று பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். ஏப்ரல் 1-ந் தேதி முதல் இதனை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குமரியில் ஒரே நாள் சோதனையில் ரூ.4 லட்சம் வசூல்
    • வாகன ஓட்டிகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் புதியதாக உயர்த்தப்பட்ட அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    நேற்று முன்தினம் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 317 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. நேற்றும் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி வாகன சோதனை மேற்கொண்டனர். வடசேரி பகுதியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தி னார்கள்.

    அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களுக்கு அபரா தம் விதிக்கப்பட்டது. பெண் கள் சிலரும் இந்த ஹெல்மெட் சோதனையில் சிக்கி இருந்தனர். ஹெல்மெட் அணியாமல் வந்தவர்க ளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அறிவுரைகளை வழங்கினார். ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து அவர்களுக்கு எடுத்துக் கூறினார்.

    அப்போது அவர் கூறிய தாவது:-

    ஹெல்மெட் உயிர் கவசமாகும். அதை கண்டிப் பாக அனைவரும் அணிய வேண்டும்.சாலை விதிமுறை களை கடைபிடித்தால் மட்டுமே விபத்துகளை தடுக்க முடியும். தற்பொ ழுது போக்குவரத்து விதிமீறல் அபராதங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.ஹெல்மெட் அணியா விட்டால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். பின்னால் ஹெல்மெட் அணியாமல் இருப்பவருக்கும் அபாரம் விதிக்கப்படும்.

    மது போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10000 செல் போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ரூ.1000 லைசென்ஸ் இல்லாவிட்டால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும்.அபராதம் விதிப்பது போலீசாரின் நோக்கம் அல்ல. சாலை விதிகளை பாதுகாத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கம் ஆகும். உங்களை தற்காத்துக் கொள்ள நீங்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    தக்கலை, குளச்சல், கன்னி யாகுமரி, நாகர்கோவில் சப்-டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளிலும் போலீசார் அதிரடி சோதனை மேற் கொண்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்த பலருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இருசக்கர வாகனங்களில் பின்னால் ஹெல்மெட் அணியாமல் இருந்தவர்களுக்கும் போலீ சார் அபராதம் விதித்தனர்.

    நேற்று ஹெல்மெட் அணி யாமல் வந்த 401 பேருக்கு அபராதம் விதிக் கப்பட்டது. இதன் மூலமாக ரூ.4 லட்சத்து 1000 வசூல் ஆகி உள்ளது. மேலும் சாலை விதிமுறைகளை கடை பிடிக்காத 199 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 600 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • போலீஸ் டி.எஸ்.பி.ராஜா அறிவுரை வழங்கினார்
    • இருசக்கர வாகன ஓட்டிகள் 50 பேருக்கு தலா ரூ.1000 வீதம் மொத்தம் ரூ.50ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறை சார்பில் கொட்டாரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான ஹெல்மெட் விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது.

    இதையொட்டி கொட்டாரம் சந்திப்பில் போக்குவரத்து போலீசார்அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்த100-க்கும்மேற்பட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விளக்கம் அளித்த னர்.

    இதில் கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா கலந்து கொண்டு ஹெல்மெட் அணிவது குறித்து விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் கன்னியாகுமரி போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜாய்சன், முருகன், கன்னியாகுமரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் மற்றும் போக்குவரத்து போலீஸ் ஏட்டு மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் கொட்டாரம் சந்திப்பு வழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு மற்றும் சாலை விபத்தினை தடுக்ககூடிய சிறந்த அறிவுரைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை போக்குவரத்து போலீசார் வழங்கினார்கள்.

    இது தவிர கடந்த 2 நாட்களில் கன்னியாகுமரி பகுதிகளில் போக்குவரத்து போலீசார் நடத்திய அதிரடி வாகன சோதனையின் போது ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் 50 பேருக்கு தலா ரூ.1000 வீதம் மொத்தம் ரூ.50ஆயிரம்அபராதமும் விதிக்கப்பட்டது.

    • பலமுறை ஹெல்மெட் அணிவது கட்டாயம், இல்லாவிட்டால் அபராதம் என போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டு செயல்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது.
    • மக்களின் எதிர்ப்பு, அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.

    புதுச்சேரி:

    விபத்துகளில் உயிரிழப்புகளை தடுக்க இருசக்கர வாகனங்களை ஓட்டுவோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சுப்ரீம்கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

    சுப்ரீம்கோர்ட் அறிவுறுத்தலின்படி அனைத்து மாநிலங்களிலும் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். நகர பகுதியில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கினாலும், கிராமப்பகுதியில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க முடியவில்லை.

    ஹெல்மெட் கட்டாயத்தை அமலுக்கு கொண்டுவந்தாலும், பல மாநிலங்களில் அதை தீவிரமாக கண்காணிப்பதில்லை. இந்தநிலையில் புதுவையில் கடந்த சில ஆண்டாக ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    பலமுறை ஹெல்மெட் அணிவது கட்டாயம், இல்லாவிட்டால் அபராதம் என போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டு செயல்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது. ஆனால் மக்களின் எதிர்ப்பு, அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.

    இப்போது மீண்டும் நாளை முதல் (செவ்வாய்க்கிழமை) ஹெல்மெட் அணிவது கட்டாயம் என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பல முறை அறிவிப்புகள் வெளியிட்டாலும், புதுவையில் ஹெல்மெட் கட்டாயம் சாத்தியமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. புதுவை நகரபகுதி சிறிய பகுதி. இங்கு காலையிலும், மாலையிலும் அரசு பணிக்கு செல்வோர், பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச்செல்லும் பெற்றோர் என போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளது.

    இதுமட்டுமின்றி விடுமுறை நாட்கள், பண்டிகை காலத்தில் சுற்றுலா பயணிகள் வருகையால் நகரம் முழுவதும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. பல நேரங்களில் நகர பகுதியில் அதிகபட்சமாக 40 கி.மீ. வேகத்தில் வாகனங்களை இயக்குவதே கடினமான செயலாக உள்ளது.

    இது மட்டுமின்றி சாலை ஆக்கிரமிப்புகள், குண்டும், குழியுமான சாலைகள் என வாகனங்களை இயக்க பல சிரமங்களும் உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றவும் கடும் எதிர்ப்புகள் கிளம்புகிறது. நாளை விடுதலை நாள் என்பதால் அரசு விடுமுறை. இதனால் மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும்.

    நாளை மறுநாள் கல்லறை திருநாள் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை. 3-ந்தேதி முதல் வழக்கமான போக்குவரத்து நகர் முழுவதும் இருக்கும். அரசு பணி, பள்ளிக்கு செல்வோரை மறித்து ஹெல்மெட் அணியாததற்கு அபராதம் விதிக்க நிறுத்துவது பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.

    பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம், மோதலை ஏற்படுத்தும். ஏற்கனவே அரசு ஊழியர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என அரசு சுற்றறிக்கை அனுப்பியும் பயனில்லை. இதனால் இந்த முறையும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்ற அறிவிப்பு எத்தனை நாள் நீடிக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    • அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படும் விதமாக கடந்த மூன்று மாதமாக கருங்கல்லில் ஹெல்மெட் வடிவமைத்தேன்.
    • ஒரே கருங்கல்லை பயன்படுத்தி அதை நன்கு செதுக்கி 8 கிலோ எடை அளவில் நேர்த்தியான ஹெல்மெட் வடிவமைத்துள்ளார்.

    அவினாசி

    திருப்பூர் மாவட்டம் அவினாசி கால்நடை மருத்துவமனை எதிரில் சிற்ப கலைக்கூடம் நடத்தி வருபவர் சரவணன் (வயது 32). இவர் பல்வேறு சிற்பங்களை செதுக்கியுள்ளார். இந்த நிலையில் ஒரே கருங்கல்லை பயன்படுத்தி அதை நன்கு செதுக்கி 8 கிலோ எடை அளவில் நேர்த்தி    யான ஹெல்மெட் வடிவமைத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர். ரூ.500 மதிப்புள்ள ஹெல்மெட் அணியாமல் செல்வதால் ரூ.1,000 அபராதம் கட்ட நேரிடுகிறது. மேலும் விபத்து ஏற்பட்டு விலைமதிப்பில்லாத உயிரை இழக்க நேரிடுகிறது. எனவே அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படும் விதமாக கடந்த மூன்று மாதமாக கருங்கல்லில் ஹெல்மெட் வடிவமைத்தேன். கொரோனா காலத்தில் கொரோனா உருவ பொம்மை, முக கவசம், சானி டைசர் பாட்டில் போன்றவற்றை கருங்கல்லால் செதுக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியிருந்தேன். அந்த வகையில் தற்போது ஹெல்மெட் அவசியத்தை வலியுறுத்துவதற்காக கருங்கல்லில் ஹெல்மெட் வடிவமைத்தேன் என்றார்.

    • பொதுமக்களை கட்டாயப்படுத்தி ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற எண்ணம் போலீசாருக்கு இல்லை.
    • பொதுமக்கள் தங்களது உயிரை பாதுகாத்துக் கொள்ள தாங்களாகவே முன்வந்து தலைகவசம் அணிய வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவையில் அதிகரிக்கும் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிர் பலியை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் போக்குவரத்து காவல் துறை சார்பில் ஹெல்மெட் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.

    ஹெல்மெட் அணியாதவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே, முதல் நாளான 1-ந்தேதி மழை காரணமாக ஹெல்மெட் அணியாதவர்களை போலீசார் கண்டுகொள்ளவில்லை.

    ஆனால் நேற்று முதல் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு கட்டாயம் அபராதம் வசூலிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே, எதிர்கட்சி தலைவர் சிவா முதல்- அமைச்சர் ரங்கசாமியிடம் ஹெல்மெட் அணிய கட்டாயப்படுத்தி, அபராதம் விதிக்க கூடாது என கோரிக்கை மனு அளித்தார்.

    இந்த நிலையில், போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு, மாறன், இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் போலீசார் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை பாராட்டி, அவர்களுக்கு பூங்கொத்து மற்றும் இனிப்பு வழங்கினர்.

    ஹெல்மெட் அணியாதவர்களுக்கும் இனிப்பு வழங்கி, ஹெல்மெட்டை அவர்களாக முன்வந்து அணியுமாறு அறிவுறுத்தினர். மேலும் ஒலிபெருக்கி மூலமும் ஹெல்மெட் அணியுமாறு வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்தினர்.

    இதனை தொடர்ந்து நிருபர்களிடம் போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் கூறியதாவது:- பொதுமக்களை கட்டாயப்படுத்தி ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற எண்ணம் போலீசாருக்கு இல்லை. பொதுமக்கள் தங்களது உயிரை பாதுகாத்துக் கொள்ள தாங்களாகவே முன்வந்து தலைகவசம் அணிய வேண்டும். போலீசாரின் முயற்சியால் தற்போது 30 சதவிகிதம் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர் இது ஒரு வெற்றியாகும்.

    சாலை விபத்துக்களில் அதிக உயிர்பலி தலைகவசம் அணியாததால் தான் ஏற்படுகிறது. நேரு வீதி இருவழி பார்க்கிங் கைவிடப்பட்டு, மீண்டும் பழைய முறைப்படி ஒருவழி பார்க்கிங் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் தற்போது சீராகி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஹெல்மெட் அணியவில்லை என ஆட்டோ டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    • போக்குவரத்து போலீசார் சார்பில் தகவல்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் சங்குத்திடல் 19-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் தீனதயாளன்(வயது 35). டிரைவரான இவர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் ஆட்டோ ஓட்டி வருகிறார். தீனதயாளன், தற்செயலாக தனது செல்போனில் பரிவாகன் மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் தனது ஆட்டோவின் எண்ணை பதிவிட்டு பார்த்துள்ளார். அதில், கடந்த மாதம் 7-ந் தேதி அவருக்கு போக்குவரத்து போலீசார் சார்பில் ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதில், சிக்னலில் விதிமுறை மீறல், ஹெல்மெட் அணியவில்லை மற்றும் போக்குவரத்து போலீசாரின் வாகன சோதனையின்போது ஓட்டுனர் உரிமத்தை காண்பிக்கவில்லை ஆகிய 3 காரணங்களை தெரிவித்து, ரூ.300 அபராதம் விதித்து, அதனை ஆன்லைனில் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தீனதயாளன் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் தனது மொபைல் செயலியில் இருந்து ஒரு நகல் எடுத்து அதனை தனது தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் சக ஆட்டோ டிரைவர்களிடம் காண்பித்தார். அதைக்கண்டு அவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது தொடர்பாக தீனதயாளன் கூறுகையில், நான் போக்குவரத்து விதிகளை மீறவில்லை. போக்குவரத்து போலீசார் எனது வாகனத்தை சோதனை மற்றும் ஆய்வு செய்யவில்லை. இருப்பினும் எனக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது. இதனால் கணக்கு காண்பிப்பதற்காக போக்குவரத்து விதிமுறை மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகிறதா? என்ற சந்தேகம் எழுகிறது. இருப்பினும் ஆட்டோ ஓட்டும் டிரைவருக்கு ெஹல்மெட் அணிவது அவசியமா?. போக்குவரத்து போலீசாரின் இதுபோன்ற நடவடிக்கையால், என்னை போன்ற தினமும் ஆட்டோ ஓட்டி வாழ்க்கை நடத்துபவர்கள் பாதிக்கப்படுகிறோம். இந்த அபராத தொகையை குறிப்பிட்ட தேதிக்குள் கட்டாவிட்டால், கூடுதல் தொகையை அபராதமாக செலுத்த நேரிடும். அல்லது அபராத தொகையை கட்டாமல் அலட்சியமாக இருந்துவிட்டால், வாகன தகுதிச்சான்று பெறும்போது சிக்கலாகிவிடும். எனவே தமிழக அரசு தலையிட்டு, ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், வாகன எண்ணை குறித்துக்கொண்டு இதுபோன்று வழக்குப்பதிவு செய்யப்படுவதை தடை செய்ய வேண்டும், என்றார்."

    • ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்லும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படு
    • பொதுமக்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டிய போலீசாரில் பெரும்பாலானோர், ஹெல்மெட் அணிவது இல்லை என, தெரிய வந்துள்ளது.

    சென்னை:

    'ஹெல்மெட்' அணியாமல், இருசக்கர வாகனத்தில் செல்லும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.

    தமிழகத்தில், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர், 'ஹெல்மெட்' அணிவது கட்டாயம். மீறுவோருக்கு, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால், சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில், 90 சதவீதம் பேர், ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுகின்றனர்.

    பின், இருக்கையில் அமர்ந்து செல்வோரில், 10 சதவீதம் பேர் தான் ஹெல்மெட் அணிகின்றனர் என, போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர். கிராமங்கள் மற்றும் அதை ஒட்டியுள்ள, சிறு நகர பகுதிகளில், ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

    பொதுமக்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டிய போலீசாரில் பெரும்பாலானோர், ஹெல்மெட் அணிவது இல்லை என, தெரிய வந்துள்ளது. இதனால், ஹெல்மெட் அணியாமல் பணிக்கு வந்த போலீசாரிடம், வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும். ஹெல்மெட் வாங்கிவந்து காண்பித்த பின் தான், வாகனத்தை ஒப்படைக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

     வாகன சோதனையில் ஈடுபடும், போக்குவரத்து மற்றும் சட்டம்-ஒழுங்கு போலீசாருக்கு, மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 'போலீஸ்' என்ற அடையாளத்தை காரணமாக கூறி, வாக்குவாதம் செய்வோர் மீது, வழக்கு பதிந்து, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'ஹெல்மெட் அணியாமல், இருசக்கர வாகனத்தில் செல்லும் போலீசார் மீது துறை ரீதியாக மட்டு மல்லாமல், வழக்கு பதிவும் செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

    • போக்குவரத்து காவல்துறை சார்பில் தலைக்கவசம் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

    உடுமலை : 

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் போக்குவரத்து காவல்துறை சார்பில் தலைக்கவசம் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.உடுமலை டிஎஸ்பி., தேன்மொழிவேல் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணி உடுமலை நகரில் குட்டை திடலில் புறப்பட்டு தளி ரோடு, பழைய பஸ் நிலையம் ,மத்திய பஸ் நிலையம், ராஜேந்திரா ரோடு என முக்கிய வீதிகளில் சென்று காவல் நிலையத்தில் நிறைவடைந்தது.நிகழ்ச்சியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

    • மயிலாடுதுறை பழைய பஸ் நிலையம் அருகே சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை நிறுத்தி தலைக்கவசம் உயிர்க்கவசம் என்பதை வலியுறுத்தியும் போலீஸ் சூப்பிரண்டு வலியுறுத்தினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை பழைய பஸ் நிலையம் அருகே சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில் போலீசார் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை நிறுத்தி தலைக்கவசம் உயிர்க்கவசம் என்பதை வலியுறுத்தியும் போலீஸ் சூப்பிரண்டு வலியுறுத்தினார்.

    ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்பு மற்றம் பேனா வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

    தொடாந்து விழிப்புணர்வு பேரணியை அவர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

    இப்பேரணியில் போக்குவரத்து மற்றும் சட்ட ஒழுங்கு போலீசார் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் நகரின் முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்து சாலை பாதுகாப்பு குறித்து விழிப்பணர்வு ஏற்படுத்தினர்.

    இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், இன்ஸ்பெக்டர் செல்வம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு.
    • கலெக்டர் ஆர்த்தி, காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன், மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ராஜ வீதிகள் வழியாக சென்று மீண்டும் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவலர் அரங்கத்தில் நிறைவு செய்தனர்.

    இந்நிகழ்ச்சியை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன், மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    • ஒரு உயிர் என்பது தனிப்பட்ட நபரின் உயிர் அல்ல, அது ஒரு குடும்பத்துக்கும் சமுதாயத்–துக்குமான இழப்பு.
    • பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் கண்டிப்பாக ‘ஹெல்மெட்’ அணிய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2022 -ம் ஆண்டில் மட்டும் 2,217 சாலை விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில் 537 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்தும், 2,327 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    ஒரு உயிர் என்பது தனிப்பட்ட நபரின் உயிர் அல்ல, அது ஒரு குடும்பத்துக்கும் சமுதாயத்–துக்குமான இழப்பு, இந்த இழப்பினால் அந்த குடும்பத்தின் பாது–காப்புக்கு உத்தரவாதம் இல்லை.

    பொருளாதார சிக்கலில் சிக்கி மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். இந்த இழப்பை வாகனம் ஓட்டும் போது 'ஹெல்மெட்' அணிவதன் மூலம் தவிர்க்கலாம். உங்களது பாதுகாப்புக்–காகவும், உங்கள் குடும்பத்தின் பாது–காப்புக்காகவும் இருசக்கர வாகனம் ஓட்டும்போது 'ஹெல்மெட்' அணிய வேண்டியது அவசியம்.

    வாகனம் ஓட்டுபவர் மட்டும் அல்லாது, பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் கண்டிப்பாக 'ஹெல்மெட்' அணிய வேண்டும். நாளை (வியாழக்கிழமை) முதல் ஏற்கனவே அமலில் உள்ள மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் விதிகளின்படி, தஞ்சை மாவட்டத்தில் 'ஹெல்மெட்' அணி–யாமல் செல்வோர் மீது பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    எனவே பொதுமக்கள் அனைவரும் 'ஹெல்மெட்' டினை பயன்படுத்தி தங்கள் உயிரையும், தங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×