என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரி விதிப்பு"

    • பரஸ்பர வரி விதிப்பை டொனால்டு டிரம்ப் 90 நாட்கள் நிறுத்தி வைத்துள்ளார்.
    • வரி தொடர்பாக இந்தியா- அமெரிக்கா இடையே ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2ஆவது முறையாக பதிவி ஏற்றதும், பரஸ்பர வரி விதிப்பை நடவடிக்கையை மேற்கொண்டார். ஏப்ரல் 2ஆம் தேதி இந்த பரஸ்பர வரி விதிப்பு நடைமுறைக்கு வந்தது. அவரது நடவடிக்கைக்கு பதிலடியாக சீனாவும் வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. மற்ற நாடுகள் ஆலோசனை நடத்தி வந்தது.

    இதனைத் தொடர்ந்து 90 நாட்கள் பரஸ்பர வரி விதிப்பை டொனால்டு டிரம்ப் நிறுத்தி வைத்தார். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 90 நாள் கெடு ஜூலை 9ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

    இந்த நிலையில் இந்த வரி விதிப்பு தொடர்பாக டொனால்டு டிரம்பிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அப்போது இந்தியாவுடனான வரி விதிப்பு பேச்சுவார்த்தை சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஒப்பந்தம் ஏற்படும் என நினைக்கிறேன்.

    இந்திய பிரதமர் மோடி இங்கே (அமெரிக்கா) வந்திருந்தார். ஒப்பந்தம் ஏற்பட அவர்கள் விரும்புகிறார்கள்" எனப் பதில் அளித்துள்ளார்.

    அமெரிக்காவின் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட், இந்தியாவுடனான ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா மிகவும் நெருங்கியுள்ளது எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் டொனால்டு டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    பரபஸ்பர வரி விதிப்பை 90 நாட்கள் நிறுத்தி வைத்திருந்தாலும் எஃகு, அலுமினியம் மீதான 25 சதவீத வரிகளைத் தவிர 10 சதவீதம் என்ற அடிப்படை வரி நடைமுறையில்தான உள்ளது.

    • சில நாடுகள் அமெரிக்கா மீது கூடுதல் வரியை விதித்தன.
    • அமெரிக்க பொருளாதாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நியூயார்க்:

    அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதில் பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்தார். இதற்கு பதிலடியாக சில நாடுகள் அமெரிக்கா மீது கூடுதல் வரியை விதித்தன.

    இந்த நிலையில் டிரம்ப் நிர்வாகத்தின் தேசிய வர்த்தக கொள்கைக்கு எதிராக அமெரிக்காவின் 12 மாகாணங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன. நியூ யார்க்கில் உள்ள அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் ஓரிகான், அரிசோனா, கொலராடோ, கனெக்டிகட், டெலாவேர், இல்லினாய்ஸ், மைனே, மினசோட்டா, நெவாடா, நியூ மெக்சிகோ, நியூயார்க் மற்றும் வெர்மான்ட் ஆகிய மாகாணங்கள் வழக்கு தொடர்ந்து உள்ளன.

    அதில் அதிபர் டிரம்ப் வகுத்துள்ள கட்டணக் கொள்கை சட்டவிரோதமானது, இது அமெரிக்க பொருளாதாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் அடிப்படையில் டிரம்ப் தன்னிச்சையாக வரிகளை விதிக்க முடியும் என்று கூறுவது தவறானது. வரிகளை விதிக்க பாராளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

    அவசரநிலை, வெளிநாட்டில் இருந்து அசாதாரண அச்சுறுத்தல் இருக்கும்போது மட்டுமே அதிபர் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தை செயல்படுத்த முடியும்.

    எனவே கட்டணங்களை சட்டவிரோதமானது என்று அறிவிக்கவும், அரசு நிறுவனங்கள் மற்றும் அதன் அதிகாரிகள் அவற்றைச் செயல்படுத்துவதைத் தடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அரிசோனா அட்டர்னி ஜெனரல் கிறிஸ் மேயஸ் கூறும்போது, டிரம்பின் கட்டணத் திட்டம் பைத்தியக்காரத்தனமானது. இது பொருளாதார ரீதியாக பொறுப்பற்றது மட்டுமல்ல சட்டவிரோதமானது என்றார்.

    • அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு சீனா பதிலடி கொடுத்தது.
    • அமெரிக்க பொருட்கள் மீது சீனா 34 சதவீத வரி விதித்தது.

    நியூயார்க்:

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

    கடந்த 2-ம் தேதி இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை அறிவித்து அதிர்ச்சி ஏற்படுத்தினார். இந்திய பொருட்களுக்கு 26 சதவீத வரி விதிக்கப்பட்டது.

    அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு சீனா பதிலடி கொடுத்தது. அமெரிக்க பொருட்கள் மீது 34 சதவீத வரி விதித்தது. இதனால் சர்வதேச பொருளாதார மந்தநிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், அதிபர் டிரம்ப் விதித்துள்ள பரஸ்பர வரிகளில் இருந்து ஸ்மார்ட்போன்கள் மற்றும் கணினிகள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட மின்னணு பொருட்களுக்கு விலக்கு அளித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்புத்துறை வெளியிட்ட அறிவிப்பில், இதுவரை 20 பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றில் அரை கடத்திகள் அடிப்படையிலான மின்னணு கருவிகள், தரவுகள் சேமிப்பு கருவிகள் உள்ளிட்ட பொருட்கள் இந்தப் பட்டியலில் உள்ளன.

    • சீனா 84 சதவீதம் வரி விதித்து அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்திருந்தது.
    • அதற்கு அமெரிக்கா 145 சதவீதம் வரியை உயர்த்தியது. இதற்கும் சீனா பதிலடி கொடுத்துள்ளது.

    அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப், அமெரிக்கா இறக்குமதி செய்யும் மற்ற நாடுகளின் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

    ஏப்ரல் தொடக்கத்தில் அதை நடைமுறைப்படுத்தினார். இந்திய பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதித்தார். அதேபோல் சீனா, ஐரோப்பிய நாடுகளுக்கும் வரி விதித்தார்.

    இந்தியா உள்ளிட்ட நாடுகள் இந்த வரி விதிப்புக்கு எதிர்வினையாற்றவில்லை. ஆனால், சீனா அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிப்பை அதிகரித்து வருகிறது.

    இதனால் கோபம் அடைந்த டொனால்டு டிரம்ப் சீனப் பொருட்களுக்கு 145 சதவீதம் வரி விதித்தார். இதற்கும் சீனா பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 125 சதவீதம் வரி விதித்துள்ளது.

    முன்னதாக 84 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 125 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக உலக வர்த்தக அமைப்பிடமும் சீனா முறையிட்டுள்ளது. ஹாலிவுட் படங்களுக்கு தடைவிதித்துள்ளது. இந்த விசயம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது.

    • கொரோனா வரும்போது மக்களை தட்டுகளை தட்டச் சொன்னார். மொபைல் போனில் லைட்டை ஆன் செய்ய சொன்னார்.
    • தற்போது பொருளாதார சூறாவளி வந்து கொண்டிருக்கிறது. கோடிக்காணக்கானவர்கள் இழப்பை சந்திப்பார்கள்.

    இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 26 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில், பிரதமர் மோடி இது தொடர்பாக வாய் திறக்காமல் உள்ளார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக ராகுல் காந்தி கூறியதாவது:-

    முன்னதாக இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது, டிரம்பை கட்டிப்பிடித்தார். இந்த முறை அவர்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தைப் பார்த்தீர்களா? அது எங்கே மறைந்துவிட்டது?

    பிரதமர் மோடி தனது நண்பர் என்று அழைக்கும் ஜனாதிபதி டிரம்ப், நாங்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடிக்க மாட்டோம், இந்த முறை நாங்கள் வரிகளை விதிப்போம் என்று அவருக்கு உத்தரவிட்டார். அவரால் (மோடியால்) ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. அவர் மறைந்துவிட்டார்.

    அமெரிக்க வரி விதிப்பு மீது மக்களின் கவனம் திரும்பாமல் இருக்க, பாராளுமன்றத்தில் இரண்டு நாட்கள் நாடகம் நடத்தி நள்ளிரவில் இரு அவைகளிலும் வக்பு திருத்த சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளனர்.

    ஆனால் உண்மை என்னவென்றால் பொருளாதார புயல் வந்து கொண்டிருக்கிறது. கொரோனா வரும்போது மக்களை தட்டுகளை தட்டச் சொன்னார். மொபைல் போனில் லைட்டை ஆன் செய்ய சொன்னார். தற்போது பொருளாதார சூறாவளி வந்து கொண்டிருக்கிறது. கோடிக்காணக்கானவர்கள் இழப்பை சந்திப்பார்கள். அவர் எங்கே, அவர் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    • லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோலுக்கு 13 ரூபாயும், டீசலுக்கு 10 ரூபாயும் கலால் வரி வசூலிக்கப்படுகிறது.
    • பண வீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசுக் கொள்ளை என்ற மற்றொரு பரிசு கொடுக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்கா உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர விதியை அமல்படுத்தியுள்ளது. இந்திய பொருட்களுக்கு 26 சதவீதம் பரஸ்பர வரி விதித்துள்ளார் டொனால்டு டிரம்ப். இதற்கு இந்தியாவின் எதிர்வினை என்ன என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

    இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளது.

    இதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் டொனால்டு டிரம்பின் வரி விதிப்புக்கு பிரதமர் மோடி கலால் வரியை உயர்த்தி பதிலடி கொடுத்துள்ளார் என ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார். பண வீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசுக் கொள்ளை என்ற மற்றொரு பரிசு கொடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் கார்கே "மோடி ஜி, கச்சா எண்ணெய் விலை கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதத்தை ஒப்பிடும்போது தற்போது 41 சதவீதம் குறைவாக உள்ளது. ஆனால் உங்கள் கொள்ளைடியக்கும் அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பதற்குப் பதிலாக மத்திய கலால் வரியை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

    லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோலுக்கு 13 ரூபாயும், டீசலுக்கு 10 ரூபாயும் கலால் வரி வசூலிக்கப்படுகிறது.

    • அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 2-ந்தேதி இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்தார்.
    • இந்தியா மீது 26 சதவீத வரி விதிக்கப்படுவதாக அறிவித்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 2-ந்தேதி இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்தார்.

    அமெரிக்கா மீது மற்ற நாடுகள் அதிக வரிகளை விதிப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்தியா மீது 26 சதவீத வரி விதிக்கப்படுவதாக அறிவித்தார்.

    இதற்கிடையே வரி விதிப்பு நடவடிக்கையில் சலுகை அளித்தால் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார்.

    இந்த நிலையில் டிரம்ப் அறிவித்துள்ள வரி விதிப்பு வருகிற 9-ந்தேதி அமலுக்கு வர உள்ள நிலையில் இந்தியா-அமெரிக்க அதிகாரிகள் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதால் இவ்விவகாரத்தில் தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்திய அதிகாரிகள் டிரம்ப் நிர்வாகத்துடன் தொடர்பில் உள்ளனர் என்றும் அவர்களின் பேச்சுவார்த்தைகள் வர்த்தகம், முதலீடுகள் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்களை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகின்றன என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    மேலும் அதிபர் டிரம்பின் மூத்த ஆலோசகர் ஒருவர் கூறும்போது, இந்தியா, வியட்நாம், இஸ்ரேலுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பாக டிரம்ப் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறும்போது, வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டோலாமுடன் மிகவும் பயனுள்ள ஒரு தொலைபேசி உரையாடலை நடத்தினேன்.

    அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தம் செய்ய முடிந்தால், வியட்நாம் தங்கள் வரிகளை பூஜ்ஜியமாகக் குறைக்க விரும்புகிறது என்று அவர் என்னிடம் கூறினார் என்று தெரிவித்துள்ளார். வியட்நாம் மீது 46 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா ஏப்ரல் 10-ந்தேதி முதல் அமெரிக்க இறக்குமதிகளுக்கு 34 சதவீத வரியை விதித்துள்ளது.

    இதுதொடர்பாக டிரம்ப் கூறும்போது, சீனா தவறாக விளையாடியது. அவர்கள் பீதியடைந்தார்கள் என்றார்.

    • டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
    • அமெரிக்கா மீது கூடுதல் வரிகளை விதிக்க தயாராகி வருகின்றன.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரி விதிப்பை அறிவித்தார்.

    அமெரிக்கா மீது மற்ற நாடுகள் அதிக வரி விதிப்பதாக கூறி இந்த நடவடிக்கையை அவர் எடுத்துள்ளார். இதில் இந்தியா மீது 27 சதவீத வரியை விதித்து உள்ளார்.

    டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அமெரிக்கா மீது கூடுதல் வரிகளை விதிக்க தயாராகி வருகின்றன.

    இந்த நிலையில் டிரம்பின் வரி விதிப்பு அறிவிப்புக்கு பிறகு அமெரிக்க பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டது. சா்வதேச பொருளாதாரச் சூழல் அடியோடு மாறி வருவதால் அமெரிக்க முதலீட்டாளா்கள் அச்சத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் செயல்பட்டனா்.

    இதனால் அந்த நாட்டுப் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியடைந்தது. பங்குச் சந்தையின் அனைத்து குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன. பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டும் பல லட்சம் கோடியை இழந்தன.

    அமெரிக்காவுக்கு சீனாவும், ஐரோப்பிய ஒன்றியமும் பதிலடி கொடுக்க உள்ளதாக கூறியதையடுத்து 2020-ம் ஆண்டுக்குப் பிறகு (கொரோனா காலம்) அமெரிக்க பங்குச் சந்தைகளில் மிகப் பெரிய சரிவை ஏற்படுத்தி உள்ளது.

    அதேபோல் உலக பங்குச்சந்தைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆசிய- பசிபிக் பிராந்தியத்தில் பங்குச் சந்தைகள் 2-வது நாளாக சரிந்தன.

    இந்த நிலையில் டிரம்ப் நிருபர்களிடம் அளித்த பேட்டியின் போது பங்குச்சந்தை வீழ்ச்சி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்தபோது, விரைவில் சந்தைகள் ஏற்றம் பெறப்போகின்றன. பங்குகள் ஏற்றம் பெறப்போகின்றன. நாடு ஏற்றம் பெறப்போகிறது.

    இந்த வரி விதிப்பு அறிவிப்பு உலகளவில் சந்தைகளை உலுக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்வது போன்ற ஒரு அறுவை சிகிச்சையை செய்து கொண்டிருக்கிறோம். அது மிகவும் நன்றாக நடக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

    வரிகளைத் தவிர்க்க அமெரிக்காவில் தங்கள் தயாரிப்புகளை தயாரிக்க விரும்பும் நிறுவனங்களிடமிருந்து டிரில்லியன் கணக்கான டாலர்கள் முதலீடு நமது நாட்டிற்கு வரும். ஒரு ஒப்பந்தத்தை முடிக்க ஏதேனும் வழி இருக்கிறதா என்று பல நாடுகள் பார்க்க விரும்புகின்றன.

    யாராவது அற்புதமான சலுகையை கொடுக்கத் தயாராக இருந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். அமெரிக்காவை மற்ற நாடுகள் நீண்ட கால மாக பயன்படுத்தி வருகின்றன. அதை நிறுத்த விரும்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு பக்கம் சீனா நமது நாட்டின் 4 ஆயிரம் ச.கி.மீ. பரப்பளவு நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளது.
    • மறுபக்கம் அமெரிக்கா திடீரென நம்மீது வரியை திணித்துள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு முறையை நடைமுறைப்படுத்தியுள்ளார். அதன்படி, இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

    இதனால் இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் என வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், எதிர்க்கட்சிகள் இந்த பாதிப்பை குறைக்கும் வகையில் பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கைகள் என்ன? இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

    இந்த நிலையில் அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு இந்தியாவின் பொருளாதாரத்தை முற்றிலும் சீரழிக்கும் என ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். மேலும் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார்.

    மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் (Zero Hour) ராகுல் காந்தி பேசும்போது கூறியதாவது:-

    சீனா நமது நாட்டின் 4 ஆயிரம் ச.கி.மீ. பரப்பளவு நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளது. நம்முடைய வெளியுறவுத்துறை செயலாளர் (விக்ரம் மிஸ்ரி) சீனா தூதரக அதிகாரியுடன் கேக் வெட்டியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

    கேள்வி என்னவென்றால்- சீனா கைப்பற்றிய 4,000 ச.கி.மீ. நிலப் பகுதியில் உண்மையில் என்ன நடக்கிறது? என்பதுதான். நம் நிலத்தை நாம் மீட்டெடுக்க வேண்டும். ஜனாதிபதியும் பிரதமரும் சீனாவுக்கு கடிதம் எழுதியிருப்பதும் எனது கவனத்திற்கு வந்துள்ளது.

    நம்முடைய மக்களிடம் இருந்து இந்த தகவலை நாங்கள் பெறவில்லை. சீனா தூதர் இந்திய மக்களிடம், உங்கள் ஜனாதிபதி, பிரதமர் எங்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். அதன்மூலம் தெரியவந்துள்ளது.

    ஒரு பக்கம் நாம் சீனாவுக்கு 4 ஆயிரம் ச.கி.மீ. நிலத்தை கொடுத்துள்ளோம். மறுபக்கம் அமெரிக்கா திடீரென நம்மீது வரியை திணித்துள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பு இந்திய பொருளாதாரத்தை முற்றிலும் சீரழிக்கும். குறிப்பாக வாகனம், மருந்து மற்றும் விவசாயத்துறைகளை பாதிப்படையும்.

    சீனா கைப்பற்றியுள்ள நமது நிலத்தை பற்றியும், நமது நட்பு நாடு நம் மீது விதித்துள்ள பரஸ்பர வரி பற்றியும் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

    • அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விஸ்கி மதுபானத்திற்கு வரி விதிக்க ஐரோப்பிய யூனியன் பரிந்துரை.
    • ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒயின்களுக்கு 200 சதவீதம் வரி விதிக்கப்படும்.

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து மெக்சிகோ, கனடா, சீனா, இந்தியா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதித்து வருகிறார். அதேவேளையில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் நாடுகள் தங்கள் நாட்டின் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கக்கூடாது என்கிறார்.

    குறிப்பாக ஐரோப்பிய நாடுகள், கனடா, சீனாவில் இறக்குமதி செய்யப்படும் இரும்பு, அலுமினியம் போன்றவற்றிற்கு அதிக வரி விதித்து உத்தரவிட்டுள்ளார். இதற்கு சீனா பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதித்துள்ளது.

    தற்போது டொனால்டு டிரம்பின் பார்வை மதுபானங்கள் மீது திரும்பியுள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் மதுபானங்களுக்கு இந்தியா 150 சதவீதம் வரி விதிக்கிறது எனத் தெரிவித்திருந்தார்.

    ஐரோப்பிய நாடுகளில் இருந்து இரும்பு, அலுமினியம் இறக்குமதிக்கு டிரம்ப் அதிக விரி விதித்துள்ளதால், அமெரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படும் விஸ்கி மதுபானத்திற்கு ஐரோப்பிய நாடுகள் வரிவிதிக்க பரிந்துரை செய்துள்ளது. ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஒயின்ஸ், ஷாம்பெயின், பிரான்ஸ் மற்றும் மற்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கு 200 சதவீத வரி விதிக்கப்படும். இது அமெரிக்காவின் ஒயின் மற்றும் ஷாம்பெயின் தொழிலுக்கு சிறப்பானதாக இருக்கும்" டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இதனால் அமெரிக்கா- ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் மதுபானம் விசயத்தில் வர்த்த போர் ஏற்படும் அபாயம் உள்ளது.

    • “மொத்த வணிகர்கள் அன்னிய வணிகர்களுடன் கைகோர்த்துக் கொண்டு சில்லறை வணிகத்தை சீரழிக்கிறார்கள்
    • நம் நாட்டு வணிகத்தை வளர்க்க வேண்டும். ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு சில்லறை வணிகத்திற்கு எதிரானதாகும். அரிசிக்கு வரி கொண்டு வந்து உள்ளார்கள்.

    நாகர்கோவில் :

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை பொதுக்குழு கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது.

    கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் டேவிட்சன் தலைமை தாங்கினார். அருள்ராஜ், பால்ராஜ், சலீம், ராஜாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

    மாநில பொதுச் செயலாளர் மணி, உயர் மட்ட குழு உறுப்பினர் கருப்பையா, பேரவை துணைத் தலைவர் ஜார்ஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மார்சல் அறிக்கை வாசித்தார். முடிவில் ஜாகிர் உசேன் நன்றி கூறினார்.

    இதைத்தொடர்ந்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது "மொத்த வணிகர்கள் அன்னிய வணிகர்களுடன் கைகோர்த்துக் கொண்டு சில்லறை வணிகத்தை சீரழிக்கிறார்கள். எனவே சில்லறை வணிகர்களை காப்பாற்ற வேண்டும். அன்னிய வணிகத்தை ஒழிக்க வேண்டும். நம் நாட்டு வணிகத்தை வளர்க்க வேண்டும். ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு சில்லறை வணிகத்திற்கு எதிரானதாகும். அரிசிக்கு வரி கொண்டு வந்து உள்ளார்கள்.

    இந்தியாவில் அநேக மாநிலங்களில் அரிசி, பருப்புக்கான வரியை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தனர். அரிசிக்கு வரி விதித்திருப்பதை ஏற்க முடியாது. ஏழை எளிய சாமானிய மக்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள். விலைவாசி உயரும்.

    எனவே இதை கருத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டும். மக்களை பாதிக்காத வகையில் வரி விதிப்புகள் இருக்க வேண்டும்" என்றார்.

    • ராமநாதபுரத்தில் பா.ஜ.க. அரசின் சாதனை விளக்க மாநாடு நடந்தது.
    • இதில் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்ட பா.ஜனதா கட்சியின் வர்த்தக பிரிவு சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால சாதனை விளக்க வணிகர்கள் மாநாடு ராமநாதபுரம் கேணிக்கரையில் உள்ள தனியார் மகாலில் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    மோடி ஆட்சியில் ரூ. 29 ஆயிரம் கோடி கொரோனா மருந்துகளை 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இலவசமாக கொடுத்துள்ளன. ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பல மாநிலங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளன. காஷ்மீர் மிகப்பெரிய சுற்றுலா தலமாக மாற்றப்பட்டுள்ளது. ஜி-20 நாடுகளுக்கு இந்தியா இன்று தலைமை ஏற்றுள்ளது. பிரதமர் மோடி இந்தியாவை உலகளவில் திரும்பி பார்க்க வைத்துள்ளார். ரூ. 4 லட்சம் கோடி அந்நிய செலா வணியை ஈட்டுத்தந்துள்ளது.

    காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மிக மோசமாக இருந்த சாலைகள் இன்று தரமானதாக மாற்றப்பட்டுள்ளது. ரூ. 29 லட்சம் கோடி ஜன்தன் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசை வரும் பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×