என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பசுமை தீர்ப்பாயம்"

    • 1672 டன் குப்பைகளை அகற்ற குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் தனியார் நிறுவனத்திடம் ரூ.27.9 லட்சம் செலுத்தியது.
    • ஒரு மாதத்திற்குள் நிலம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு கிருஷ்ணா நதிநீர் திட்டத்துக்காக சென்னை குடிநீர் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னை அய்யப்பன் தாங்கல் ஆயில் மில் சாலையில் காலி நிலம் உள்ளது. இது கிருஷ்ணாநதி நீர் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிலம் ஆகும். இங்கு குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் தேங்கும் குப்பைகள் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டு வருகிறது. 450 தெருக்களில் இருந்து 12.5 டன் குப்பைகள் இந்த நிலத்தில் கொட்டப்பட்டன.

    இதனால் இந்த இடம் சுகாதார சீர்கேடாக மாறி யது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்ப வர்கள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புகார் அளித்தனர். அய்யப்பன் தாங்கல் மட்டுமின்றி குன்றத்தூர் பஞ்சாயத்து எல்லைக்கு உள்ளிட்ட கெருகம்பாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளி லும் இதேபோன்று குப்பைகள் கொட்டும் பிரச்சினைகள் குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன் வந்து விசாரணை நடத்தியது.

    இந்நிலையில் சுற்றுச் சூழலை மாசுப்படுத்தியதற்காக உள்ளாட்சி அமைப்பு ரூ.42 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. இதையடுத்து அடுத்த சில மாதங்களில் ஆயில்மில் சாலையில் கொட்டப்பட்ட 1672 டன் குப்பைகளை அகற்ற குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் தனியார் நிறுவனத்திடம் ரூ.27.9 லட்சம் செலுத்தியது.

    இதையடுத்து இங்கு 90 சதவீத குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. இன்னும் ஒரு மாதத்திற்குள் நிலம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு கிருஷ்ணா நதிநீர் திட்டத்துக்காக சென்னை குடிநீர் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், "ஆயில்மில் சாலையில் குப்பைகள் அகற்றப்பட்டாலும், தற்போது அதற்கு இணையாக உள்ள பொன்னியம்மன் கோவில் தெருவில் குப்பைகளை கொட்ட தொடங்கியுள்ளனர். இந்த நிலமும் கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின் ஒரு பகுதியாகும்" என்றனர்.

    • சமுதாய அக்கறையுள்ள அரசு என கூறும்போது, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டியதும் உங்களது வேலைதானே? என்று தெரிவித்தனர்.
    • தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம், குருவிமலை அருகே வளத்தோட்டம் பகுதியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

    இதையடுத்து பட்டாசு ஆலை விபத்தில் பலியான குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் நிவாரணத்தொகை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

    இதேப்போல் காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணத்தொகையை பிரதமர் நரேந்திர மோடியும் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில் காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய தேசிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 20 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 10 லட்சமும் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் எனவும் இந்த தொகையை பட்டாசு குடோன் உரிமையாளரிடம் இருந்து மாநில அரசு வசூலிக்கலாம், அதில் தீர்ப்பாயம் எந்த நிபந்தனையும் இல்லாமல் அனுமதி வழங்குகிறது என்றும் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டு இருந்தது.

    பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனு தொடர்ந்தது.

    இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது.

    அப்போது நீதிபதிகள் இத்தகைய பட்டாசு ஆலைகள் ஒழுங்காக செயல்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டியது அரசின் வேலையாகும்.

    மேலும், சமுதாய அக்கறையுள்ள அரசு என கூறும்போது, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டியதும் உங்களது வேலைதானே? என்று தெரிவித்தனர்.

    தமிழக அரசு தரப்பில் கூறும்போது, இழப்பீடு வழங்குவதில் எந்த தயக்கமும், பிரச்சனையும் இல்லை. ஆனால் அதை எவ்வளவு வழங்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறுவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதை நிர்ணயம் செய்யவும் முடியாது.

    அவ்வாறு இழப்பீட்டை நிர்ணயம் செய்ய தொடங்கினால், இதுதொடர் பழக்கமாக மாறிவிடும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. தமிழ்நாடு அரசு மனுதாக்கல் செய்ததில் எந்த முகாந்திரமும் இல்லை எனவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    மேலும், சொத்து குவிப்பு வழக்கு தண்டனையை எதிர்த்து பொன்முடி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு வருகிற வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த வருடம் டிச.26-ந்தேதி இரவு திடீரென இந்த குழாயில் சேதம் ஏற்பட்டு, குழாயில் தேங்கியிருந்த வாயு வெளியேறத் தொடங்கியது.
    • தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளை முறையாக உர தொழிற்சாலை நிறுவனம் கடைபிடிக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான உரத் தொழிற்சாலை உள்ளது. இந்த உரத் தொழிற்சாலைக்கு துறைமுகத்தில் இருந்து அமோனியா திரவ வாயு கடலுக்கு அடியில் குழாய் பதிக்கப்பட்டு கொண்டு வரப்படுகிறது. அந்த அமோனியா திரவ வாயு தொழிற்சாலையில் உள்ள பெரிய கிடங்கில் சேமிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த வருடம் டிச.26-ந்தேதி இரவு திடீரென இந்த குழாயில் சேதம் ஏற்பட்டு, குழாயில் தேங்கியிருந்த வாயு வெளியேறத் தொடங்கியது. இதனால் வாயு காற்றில் கலந்து பரவத் தொடங்கியது. இதனால் மக்களுக்கு வாந்தி மயக்கம், கண் எரிச்சல் போன்றவை ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தொழிற்சாலையை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டது.

    இந்த நிலையில் அமோனியா வாயு கசிந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்ட வழக்கில் தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. அதில்,

    * தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளை முறையாக உர தொழிற்சாலை நிறுவனம் கடைபிடிக்க வேண்டும்.

    * சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து என்.ஓ.சி. பெற்றபின், ஆலை மீண்டும் இயங்க அனுமதிக்கலாம்.

    * எண்ணூர் கோரமண்டல் ஆலை மீண்டும் இயங்க தமிழக அரசின் அனுமதி அவசியம்.

    * மாசு கட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிடும் தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

    • கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை மூட்டை மூட்டையாக கொண்டு வந்து கொட்டுகின்றனர்.
    • தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    கேரள மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    கேரளாவில் இருந்து திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் லாரி லாரியாக இறைச்சி கழிவுகள், மருத்துவக் கழிவுகளை மூட்டை மூட்டையாக கொண்டு வந்து கொட்டுகின்றனர்.

    திருநெல்வேலி சீதபற்பநல்லூர் அருகே நடுக்கல்லூர், பழவூர் பகுதியில் நேற்று முன்தினம் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் கேரளாவில் இருந்து மருத்துவக் கழிகள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டு உள்ளன. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    இந்நிலையில், கேரள மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    கேரள மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உயர் அதிகாரிகள் நேரில் ஆஜராக தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழகத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை அகற்றும் செலவினை கேரள மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் வசூலியுங்கள் என்று தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    • 3 நாட்களுக்குள் கேரள அரசு பொறுப்பேற்று கழிவுகளை அகற்ற வேண்டும்- தேசிய பசுமை தீர்ப்பாயம்.
    • 8 பேர் கொண்ட அதிகாரிகள் குழு இன்று கொட்டப்பட்டு கழிவுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.

    கேரளா மாநில மருத்துவக் கழிவுகள், திடக்கழிவுகள் மற்றும் இறைச்சிக் கழிவுகள் தமிழக மாவட்டங்களில் கொட்டப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நெல்லை மாவட்டம் நடுக்கல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் கேரள கழிவுகள் கொட்டப்பட்டன.

    இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் 3 நாட்களுக்குள் கேரள அரசு பொறுப்பேற்று கழிவுகளை அகற்ற வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கேரள அரசு ஒரு குழுவை அமைத்து கழிவுகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கேட்டுக்கொண்டது.

    அதனைத்தொடர்ந்து 8 பேர் கொண்ட கேரள மாநில அதிகாரிகள் குழு இன்று கழிவுகள் கொட்டப்பட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டது. எந்த வகையான கழிவுகள் கொட்டப்பட்டன. அவைகள் அபாயகரமானதா? என்பது குறித்த தரவுகளை இந்த குழுவினர் சேகரித்தனர். இது தொடர்பாக அவர்கள் கேரள மாநில அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய இருக்கின்றனர்.

    இந்த நிலையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் குழு "மருத்துவக் கழிவுகளில் சோதனைக்குப் பயன்படுத்தப்படும் மாதிரிகளே அதிகம் உள்ளன. கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் அபாயகரமானது இல்லை. பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி கழிவுகளை அகற்றுவது பற்றி கேரள அரசு நடவடிக்கை எடுக்கும்" எனத் தெரிவித்துள்ளது.

    • மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்த பசுமை தீர்ப்பாயம் கெடு விதித்தது.
    • இன்றுடன் கெடு முடிவடையும் நிலையில், கேரள உயர்நீதிமன்றம் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

    கேரள மாநிலத்தின் மருத்துவக் கழிவுகள், திடக்கழிவுகள், கோழிக் கழிவுகள் இரு மாநில எல்லையில் உள்ள தமிழக பகுதிகளில் கேரள மாநிலத்தினர் கொட்டிவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் தொடர்ந்து இந்த சம்பவம் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.

    இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன் திருநெல்வேலி மாவட்டம், நடக்கல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் 6 இடங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டன.

    இது தொடர்பாக பல்வேறு அமைப்புகள் புகார் அளிக்க, தேசிய பசுமை தீர்பாயம் கழிவுகளை இன்னும் 3 நாட்களில் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் கேரள அரசுக்கு உத்தரவிட்டது. பசுமை தீர்ப்பாயத்தின் கெடு இன்றுடன் முடிவடைகிறது.

    பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவையடுத்து கேரள மாநில உயர்நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு இது தொடர்பாக விசாரண நடத்தியது.

    அப்போது மருத்துவக் கழிவுகளை கையாள்வதில் கேரள மாநில அரசு தோல்வியைடந்து விட்டது. மருத்துவக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என கண்டனம் தெரிவித்தது. அத்துடன் இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

    பசுமை தீர்பாயத்தியன் உத்தரவை தொடர்ந்து கேரள அரசு கொட்டப்பட்ட கழிவுகள் தொடர்பாக ஆய்வு நடத்த அதிகாரிகள் குழுவை அனுப்பியது. இந்த குழு ஆய்வு செய்த நிலையில் கொட்டப்பட்டுள்ள கழிவுகள் அபாயகரமானது அல்ல எனத் தெரிவித்தது. இந்த குழு அரசிடம் அளிக்கும் அறிக்கையை தொடர்ந்து கேரள அரசு நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கலாம்.

    • மெரினா கடற்கரையில் ஏராளமான குப்பைகள் ஆங்காங்கே தேங்கி கிடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
    • படித்தவர், படிக்காதவர் என எந்த வித்தியாசமும் இல்லாமல் அனைவரும் குப்பைகளை வீசி செல்கின்றனர்.

    சென்னை:

    கடந்த 16-ந் தேதி காணும் பொங்கலையொட்டி ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் மெரினா கடற்கரையில் குவிந்தனர்.

    இதனால், மெரினா கடற்கரையில் ஏராளமான குப்பைகள் ஆங்காங்கே தேங்கி கிடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த விவகாரத்தை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தது.

    அப்போது தீர்ப்பாயத்தின் நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா, மெரினா கடற்கரையில் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி கிடப்பது போன்று தனது செல்போனுக்கு வந்த இரு புகைப்படங்களை சுட்டிக்காட்டி, காணும் பொங்கல் பண்டிகையின் போது மெரினா கடற்கரை குப்பை கூளமாக காட்சி அளித்தது குறித்து கேள்வி எழுப்பினார்.

    கடற்கரையை எப்படி பாதுகாப்பது? என மக்களுக்கு தெரியவில்லை என வேதனை அடைந்த நீதிபதி, காணும் பொங்கலுக்கு விடுமுறை அளிப்பதால் தானே இதுபோன்ற செயல்களில் மக்கள் ஈடுபடுகின்றனர் என கடுமையாக சாடினார்.

    இதன்பின்பு, காணும் பொங்கல் தினத்தன்று விடுமுறை அளிக்கக்கூடாது என அரசுக்கு பரிந்துரைக்க உள்ளதாக தெரிவித்தார்.

    தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் டி.சண்முகநாதன், 'குப்பைகளை வீசி செல்வதை குற்றமாக கருதி அபராதம் விதிக்காவிட்டால் இதை தடுக்க முடியாது.

    படித்தவர், படிக்காதவர் என எந்த வித்தியாசமும் இல்லாமல் அனைவரும் குப்பைகளை வீசி செல்கின்றனர்' என்றார்.

    இதைத்தொடர்ந்து, மெரினா கடற்கரையில் குப்பைகளை வீசி செல்பவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் தினங்களில் சிறப்பு படைகளை அமைக்க அரசு வக்கீலுக்கு தீர்ப்பாயம் அறிவுறுத்தியது.

    மேலும், இதுசம்பந்தமாக சென்னை மாநகராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதில் அளிக்க உத்தரவிட்டது.

    • ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதை தாமதப்படுத்தி வருகிறது தமிழக அரசு.
    • குடும்பத்தின் ஒற்றை வாழ்வாதாரமாக விளங்கிய தந்தையை இழந்து பல குழந்தைகள் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த அச்சங்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீமாரியம்மாள் பட்டாசு ஆலையில் கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி நடந்த பயங்கர வெடி விபத்தில் 27 பேர் உயிரிழந்து நான்கு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னையில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வால் பிறப்பிக்கப்பட்டு, உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டத் தீர்ப்பு இன்னும் செயல்படுத்தப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் விவகாரத்தில் தமிழக அரசு இந்த அளவுக்கு அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது.

    ஸ்ரீமாரியம்மாள் பட்டாசு ஆலையில் நடந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்த நிலையில், 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.3 லட்சமும், மத்திய அரசின் சார்பில் ரூ.2 லட்சமும் மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்ட நிலையில், இந்த விபத்து குறித்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.15 லட்சமும் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அதே ஆண்டு ஜூன் மாதத்தில் தீர்ப்பளித்தது. ஆனால், அதை ஏற்க மறுத்த திமுக அரசு, அத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், பசுமைத் தீர்ப்பாயம் ஆணையிட்டவாறு இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

    ஆனால், ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதை தாமதப்படுத்தி வருகிறது தமிழக அரசு. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக அரசு மனிதநேயமின்றி செயல்படக்கூடாது. அந்த விபத்தில் தாய், தந்தை ஆகிய இருவரையும் இழந்த நந்தினி என்ற 15 வயது சிறுமி எதிர்காலத்தை எப்படி எதிர்கொள்வது என்பது தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். குடும்பத்தின் ஒற்றை வாழ்வாதாரமாக விளங்கிய தந்தையை இழந்து பல குழந்தைகள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் நலனில் சிறிதும் அக்கறையில்லாமல் தமிழக அரசு செயல்படக்கூடாது.

    தேவையற்ற திட்டங்களுக்காக கோடிக்கணக்கில் செலவழிக்கும் தமிழக அரசு, 27 குடும்பங்களில் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் பசுமைத் தீர்ப்பாயம் ஆணையிட்டவாறு இழப்பீட்டை, கடந்த நான்கு ஆண்டுகளுக்கான வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் அடிக்கடி பட்டாசு விபத்துகள் ஏற்படும் சூழலில், அங்கு தீக்காயங்கள் மற்றும் வெடிமருந்து விபத்து காயங்களுக்கு மருத்துவம் அளிப்பதற்கான சிறப்பு மருத்துவமனை ஒன்றை உடனடியாக அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    • விநாயகர் சதுர்த்தியைப் போல காணும் பொங்கல் பண்டிகைக்கும் விதிமுறைகளை வகுக்க வேண்டும்.
    • காணும் பொங்கல் பண்டிகைக்கு ஒன்று கூடுவது தான் நம் கலாச்சாரம்.

    சென்னை:

    காணும் பொங்கல் தினத்தில் மெரினாவில் திரண்ட மக்களால் கடற்கரை குப்பை கூளமான விவகாரம் தொடர்பாக தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

    காணும் பொங்கலுக்கு திரளும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் போலீசார் நியமிக்கப்பட்டு, அறிவிப்புகள் அறிவிக்கப்படுவதைப் போல், குப்பை போட்டால் அபராதம் விதிக்கப்படும் என ஏன் அறிவிப்புகள் வெளியிடக் கூடாது எனக் கேள்வி எழுப்பிய தீர்ப்பாயம், விநாயகர் சதுர்த்தியைப் போல காணும் பொங்கல் பண்டிகைக்கும் விதிமுறைகளை வகுக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

    மேலும், காணும் பொங்கல் பண்டிகைக்கு ஒன்று கூடுவது தான் கலாச்சாரமே தவிர குப்பை போடுவது கலாச்சாரம் அல்ல எனத் தெரிவித்த தீர்ப்பாயம், இந்த விஷயத்தில் தமிழக அரசு முன் மாதிரியாக செயல்பட வேண்டும் எனக் கூறி, வழக்கு தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 5-ந் தேதிக்கு தள்ளி வைத்தது.

    ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் மீது பசுமை தீர்ப்பாயம் விதித்த அபராத தொகையை விரைந்து செலுத்த தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #Volkswagen



    ஃவோக்ஸ்வேகன் டீசல் வாகனங்களில் வெளிப்படும் மாசு அளவை குறைக்க சட்ட விரோதமாக செயல்பட்டதாக பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃவோக்ஸ்வேகன் நிறுவனம் மீது புகார் எழுந்தது. 

    இதைத் தொடர்ந்து பாதுகாப்பற்ற முறையில் மாசு வெளிப்படுத்தியதாக ஃவோக்ஸ்வேகன் மீது தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    இது தொடர்பாக விசாரணை நடத்திய தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி ஃவோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு எதிராக தீர்ப்பளித்தது. அதில் ஃவோக்ஸ்வேகன் நிறுவனம் செய்த குற்றத்திற்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.



    இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே அளித்த உத்தரவுபடி ஃவோக்ஸ்வேகன் நிறுவனம் நாளை (வெள்ளிக் கிழமை) மாலை 5 மணிக்குள் ரூ.100 கோடியை செலுத்த வேண்டும் என்று பசுமை தீர்பாயம் உத்தரவிட்டது.

    அதன்படி “நவம்பர் மாத உத்தரவை இதுவரை ஏன் பின்பற்றவில்லை? அபராத தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் நிறுவன தலைவர்கள் மீது கைது மற்றும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தெரிவித்தார். 
    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் விதித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் வக்கீல் முறையீடு செய்தார். #SterlitePlant #HCMaduraiBench
    மதுரை:

    தூத்துக்குடியில் இயங்கிய ஸ்டெர்லைட் ஆலையால் மாசு கழிவு ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்த ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மே மாதம் தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் ஊர்வலம், மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

    இந்த சம்பவத்தின் போது போலீஸ் தடியடி, துப்பாக்கிச்சூடு போன்றவை நடந்தது. இதில் 13 பேர் பலியானார்கள். இதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

    அரசின் உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் டெல்லியில் உள்ள பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்யப்பட்டது.

    இதனை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க வேண்டும், ஆலைக்கு தேவையான மின்சார வசதியை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை கடந்த வாரம் பிறப்பித்தது.

    இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தபோது தூத்துக்குடியைச் சேர்ந்த பாத்திமா சார்பில் வக்கீல் ஹென்றி டிபேன் ஆஜரானார்.

    ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். இந்த ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

    பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்ற பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று முறையிட்டார்.

    இதனை வழக்காக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். #SterlitePlant #HCMaduraiBench
    தூத்துக்குடியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #SterliteProtest #NGT

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசுப்படுவதால் ஆலையை மூடக்கோரி மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடந்த மே மாதம் 22-ந் தேதி நடந்த 100-வது நாள் போராட்டத்தில் பெரும் கலவரம் மூண்டது. கலவரத்தை அடக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள்.

    இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் 28-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனால் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது. ஆலையில் இருந்து ரசாயனங்கள் அகற்றப்பட்டு வந்தன.

    இந்தநிலையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆலை நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது.

    இந்த குழுவினர் ஸ்டெர்லைட் ஆலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். தூத்துக்குடி பகுதியில் பொதுமக்களை சந்தித்து கருத்துகளை கேட்டனர். இதன்பிறகு ஆய்வு அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தனர். அதில் 25 நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதற்கு தூத்துக்குடி மக்களிடைய கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக அரசு சார்பிலும் இதை எதிர்த்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    நேற்று பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் பிறப்பித்த உத்தரவுகள் ரத்து செய்யப்பட்டதாகவும், தருண் அகர்வால் குழு அறிக்கையில் கூறிய பரிந்துரைகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் அமல்படுத்த வேண்டும், ஆலையின் கழிவுகளை வெளியேற்ற மத்திய மற்றும் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் இணைந்து நெறிமுறைகள் உருவாக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான அனுமதியை புதுப்பித்து 3 வாரங்களுக்குள் அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டது.

     


    மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் பணிகள் தொடரும் வகையில் மீண்டும் மின் இணைப்பை வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் கூறினர்.

    பசுமை தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவு தூத்துக்குடி மக்களிடையே கடும் அதிர்ச்சி மற்றும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தூத்துக்குடியில் மீண்டும் பதட்டமான நிலை உருவாகி உள்ளது.

    ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம், நகர மத்திய வியாபாரிகள் சங்கம், மாவட்ட நாட்டுபடகு கட்டுமர மீனவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    ஏற்கனவே ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்திய அ.குமரெட்டியாபுரம், பண்டாரபுரம் உள்ளிட்ட சுற்றுப்பகுதி மக்கள் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என அறிவித்தார்கள்.

    இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். தூத்துக்குடி நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    எதிர்ப்பாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டால் அதனை தடுத்து கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

    கண்ணீர் புகை குண்டுகளை வீசும் வஜ்ரா, தண்ணீரை வேகமாக பீய்ச்சி அடிக்கும் வருண் போன்ற கலவர தடுப்பு வாகனங்களும், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

    தூத்துக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 1800 போலீசார் குவிக்கப்பட்டுள்ளார்கள். தேவைப்பட்டால் வெளி மாவட்ட போலீசாரும் வர வழைக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

    போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா மற்றும் போலீஸ் அதிகாரிகள் தூத்துக்குடி நகர் பகுதியில் ரோந்து சுற்றிவந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். முக்கிய வீதிகள் மற்றும் பதட்டமான பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றிவர அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வேறு பணிகளுக்கு சென்ற போலீசார் மீண்டும் வரவழைக்கப்பட்டுள்ளனர். #SterliteProtest #NGT

    ×