என் மலர்
நீங்கள் தேடியது "காட்டுத்தீ"
- காட்டுத்தீ காரணமாக நூற்றுக்கணக்கான கட்டமைப்புகள் சேதமடைந்தன.
- இதில் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்தர் கோவிலும் அடங்கும்.
சியோல்:
தென்கொரியாவின் தெற்கத்திய பகுதிகளில் காட்டுத்தீ கொளுந்து விட்டு எரிகிறது. வறண்ட வானிலை மற்றும் அதிவேகக் காற்று வீசுவதால் தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த காட்டுத்தீயில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 19 பேர் காயமடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
காட்டுத்தீ காரணமாக சுமார் 43,000 ஏக்கர் பரபரப்பளவு கொண்ட நிலம் பாதிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான கட்டமைப்புகள் சேதமடைந்தன. இதில் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்தர் கோவிலும் அடங்கும்.
காட்டுத்தீ பெரும்பாலும் அணைக்கப்பட்டு விட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். வறண்ட வானிலை மற்றும் அதீத காற்றோட்டத்தால் மீண்டும் காட்டுத்தீ பரவியது. காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். 130 ஹெலிகாப்டர்கள், நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 19 பேர் காயமுற்றதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- பொது மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
தென் கொரியாவின் தெற்கத்திய பகுதிகளில் காட்டுத்தீ கொளுந்து விட்டு எரிகிறது. வறண்ட வானிலை மற்றும் அதிவேக காற்று வீசுவதால் தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 19 பேர் காயமுற்றுள்ளனர் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காட்டுத்தீ காரணமாக அண்டாங் மற்றும் இதர தென்கிழக்கு நகரங்கள் மற்றும் டவுன்களில் வசிப்பவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். காட்டுத்தீ காரணமாக சுமார் 43 ஆயிரம் ஏக்கர் பரபரப்பளவு கொண்ட நிலம் பாதிக்கப்பட்டது. மேலும், நூற்றுக்கணக்கான கட்டமைப்புகள் சேதமடைந்தன. இதில் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்தர் கோவிலும் அடங்கும்.
அண்டாங் பகுதியில் வசிக்கும் 5500-க்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக தீயணைப்புத் துறையினர் காட்டுத்தீ பெரும்பாலும் அணைக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தனர். எனினும், வறண்ட வானிலை மற்றும் அதீத காற்றோட்டம் காரணமாக மீண்டும் காட்டுத்தீ பரவியுள்ளது.
காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் கிட்டத்தட்ட 9 ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், 130 ஹெலிகாப்டர்கள், நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
- மீட்பு பணியில் ஈடுபட்ட 2 தீயணைப்பு வீரர்கள் பலியாகி உள்ளனர்.
- காட்டுத்தீயை அணைக்கும் பணியில் 50-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
சியோல்:
தென்கொரியாவின் கியோங்சாங் மாகாணத்தில் கடந்த வாரம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. பலத்த காற்றால் இந்த காட்டுத்தீ மளமளவென வேகமாக பரவி வருகிறது. இதில் சுமார் 17 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகி உள்ளன. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
இதற்கிடையே அங்கு மீட்பு பணியில் ஈடுபட்ட 2 தீயணைப்பு வீரர்கள் பலியாகி உள்ளனர். தொடர்ந்து எரியும் காட்டுத்தீயால் தற்போது பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. எனவே அங்கு அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனையடுத்து அந்த பகுதியில் வசிக்கும் 600 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர். மேலும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் 50-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
- சுமார் 847 ஹெக்டேர் நிலம் எரிந்து நாசமானது.
- சான்சியோங்கை ஒரு சிறப்பு பேரிடர் பகுதியாக அரசு அறிவித்துள்ளது
தென் கொரியாவின் தெற்குப் பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக குறைந்தது 4 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மற்றும் நூற்றுக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். காட்டுத்தீ காரணமாக அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை சான்சியோங் கவுண்டியில் தொடங்கிய தீ, தற்போது மற்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளது. சனிக்கிழமை இரவு நிலவரப்படி, சான்சியோங் தீ 25% கட்டுப்படுத்தப்பட்டது. சுமார் 847 ஹெக்டேர் நிலம் எரிந்து நாசமானது.

சான்சியோங்கிலிருந்து 260க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் உல்சான் மற்றும் கியோங்சாங் மாகாணத்தில் காட்டுத் தீயில் இருந்து தப்பி சுமார் 620 பேர் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். கொரியா வனத்துறை தீயை கட்டுப்படுத்தும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது, மேலும் சான்சியோங்கை ஒரு சிறப்பு பேரிடர் பகுதியாக அரசு அறிவித்துள்ளது.

- நாடு முழுவதும் வெப்பக்காற்று காரணமாக 150க்கும் இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
- காட்டுத்தீயை அணைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சிலி நாட்டில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாக வெப்பக்காற்றுகள் வீசி காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. நாடு முழுவதும் வெப்பக்காற்று காரணமாக 150க்கும் இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மொத்தம் 34 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் காட்டுத்தீ பரவி உள்ளதாகவும், இதுவரை 65 காட்டுத்தீ சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். காட்டுத்தீயை அணைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- காட்டுத்தீ சிக்கி 500க்கும் மேர்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
- காட்டுத்தீயை அணைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சான்டியாகோ:
சிலி நாட்டில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாக வெப்பக்காற்றுகள் வீசி காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. நாடு முழுவதும் வெப்பக்காற்று காரணமாக 150க்கும் இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மொத்தம் 34 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் காட்டுத்தீ பரவி உள்ளதாகவும், இதுவரை 65 காட்டுத்தீ சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, நாடு முழுவதும் பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி 13 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது. மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். காட்டுத்தீயை அணைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சிலியில் காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. பயோபியா பகுதியில் 16 பேர், லா அருணாசியாவில் 5 பேர், நுபில் பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், 500க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 16 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஆங்காங்கே சில இடங்களில் காட்டு தீ ஏற்பட்டு வருகிறது.
- காட்டுத்தீ பற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெப்பம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அவ்வப்போது ஆங்காங்கே சில இடங்களில் காட்டு தீ ஏற்பட்டு வருகிறது. இதனை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை கூடலூர் அருகே உள்ள வனத்தில் காட்டுத்தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. அந்த பகுதி முழுவதும் தீ வேகமாக பரவியது. சுமார் 10 ஏக்கர் பரப்பளவு தீயில் எரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் வனத்திற்குள் இருக்கும் சிறிய வகை உயிரினங்கள் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது.
காட்டுத்தீ பற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- சித்தரேவு- பெரும்பாறை வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்தது.
- தாண்டிக்குடி, பெரும்பாறை வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர்.
பெரும்பாறை:
கொடைக்கானல் கீழ்மலைக் கிராமங்களான தாண்டிக்குடி, பெரும்பாறை வனப்பகுதியில் கடந்த சில வாரங்களாக சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் மலைப்பகுதியில் உள்ள புல்வெளிகள் கருகி வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. கோடைக்காலம் தொடங்கி விட்டால் வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிவது வழக்கமாக இருந்து வருகிறது.
அதன்படி நேற்று முன்தினம் மாலை சித்தரேவு- பெரும்பாறை வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வத்தலகுண்டு வனத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் வனப்பகுதியில் இருந்த அரிய மூலிகைகள், மரங்கள் எரிந்து சேதமாகின.
இந்தநிலையில் 2-வது நாளாக தாண்டிக்குடியில் உள்ள கரியமாள் கோவில், அழிஞ்சோடை வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றியது. சிறிது நேரத்தில் தீ மள மளவென பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்த வத்தலக்குண்டு வனச்சரகர் ராம்குமார் தலைமையிலான வனத்துறையினர் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தாண்டிக்குடி, பெரும்பாறை வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர்.
- சூரியன் மலைப்பகுதியில் வனத்துறை மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலங்களில் காடுகள் அமைந்துள்ளன.
- கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் பகல் நேரங்களில் கடும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மரங்கள், செடிகள் காய்ந்து இருந்ததால், நேற்று திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கின.
எடப்பாடி:
எடப்பாடியை அடுத்த தங்கையூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோணமோரி அரசு கலைக் கல்லூரியின் எதிர்புறம் சூரியன் மலைப்பகுதியில் வனத்துறை மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலங்களில் காடுகள் அமைந்துள்ளன. கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் பகல் நேரங்களில் கடும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மரங்கள், செடிகள் காய்ந்து இருந்ததால், நேற்று திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கின. அப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்த நிலையில் தீ மேலும் பல பகுதிகளுக்கு பரவியது. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதுகுறித்து எடப்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரமாக போராடி தீயிணை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் முகாமிட்டுள்ள எடப்பாடி வட்டாட்சியர் லெனின், காட்டுத் தீ மேலும் வேறு பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கும் வகையில் முன்னேற்பாடு பாதுகாப்புப் பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.
அப்பகுதியில் இருந்த சிறு செடி, கொடிகள் அகற்றப்பட்டு காற்றின் வேகத்தால் தீ வனப்பகுதியில் உள்ள மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுத்து நிறுத்தப்பட்டது.
அப்பகுதியில் முகாமிட்டுள்ள வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் காட்டுத் தீ வேறு எங்கேனும் பரவி உள்ளதா என தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கொங்கணாபுரம் போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த தீ விபத்து குறித்து எடப்பாடி வட்டாட்சியர் லெனின் கூறியதாவது:-
தற்போது கோடை காலம் ஆரம்பமாகும் நிலையில், எடப்பாடியின் தெற்கு எல்லைப் புரத்தில் உள்ள தேவண்ணகவுண்டனூர் மற்றும் சூரியன் மலையை ஒட்டிய வனப்பகுதியில் மரம், செடி, கொடிகள் அதிக அளவில் காய்ந்து தீப்பற்றக்கூடிய நிலையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய எந்தப் பொருளையும் வனத்தை ஒட்டிய பகுதிக்குள் எடுத்துச் செல்லவோ வைத்திருக்கவோ அனுமதி இல்லை. வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படும் வகையில் யாரேனும் அஜாக்கிரதையாக செயல்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள தீ அரசு ரப்பர் கழக பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது.
- வனப்பகுதிகளில் பற்றி எரியும் தீயினால் வன விலங்குகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
திருவட்டார்:
பேச்சிப்பாறையை சுற்றி உள்ள வனப்பகுதிகளான கோதையாறு, குற்றியாறு, மோதிரமலை, தச்சமலை போன்ற மலை பகுதிகள் பல உள்ளன. தற்போது கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் வனப்பகுதிகளில் திடீர் என்று தீ பற்றி எரிகிறது. இதை அணைத்து கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை குமரி மாவட்ட வனப்பகுதிகளில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து தீ எரிந்து வருகிறது.
இந்த தீ கோதையாறு, குற்றியாறு வனப்பகுதிகளில் அதிகமாக எரிகிறது. இதனால் விலை உயர்ந்த மரங்கள் தீயில் எரிந்து சேதமாகியுள்ளன. மேலும் வன விலங்குகள், மற்றும் பிராணிகள், மரங்களில் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் பறவையினங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வனப்பகுதிகளில் எரியும் தீயை வனத்துறையினர் தளைகளை வெட்டி அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் முழுமையான பலன் கிடைக்கவில்லை.
ஒரு புறம் தளைகளை வெட்டி அகற்றினாலும் மறுபுறம் தீ எரிகிறது. மேலும் உள்காடுகளில் சென்று தீயை அணைப்பதும் அவ்வளவு எளிதான செயல் அல்ல. வனத்துறையினர் கூடுதலாக வெளி மாவட்ட வனத்துறை ஊழியர்களை கொண்டு வந்து தீ அணைப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று வன ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள தீ அரசு ரப்பர் கழக பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது. இதனால் அதிக அளவு சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அரசு ரப்பர் கழகம் குற்றியாறு பிரிவு கூப்பு எண் 60 மற்றும் 61-ல் ஏராளமான ரப்பர் மரங்கள் மற்றும் ரப்பர் செடிகள் தீயில் கருகியுள்ளதாக ரப்பர் கழக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இதே போன்று நேற்று மோதிரமலை மேல்பகுதியில் தீ பரவியுள்ளதாகவும், பழங்குடி மக்களுக்கு தீயினால் பழங்குடி மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் நிலவுவதால் பழங்குடி மக்கள் தரப்பில் தெரிவித்தனர். இதனால் அதிக அளவில் பொருள் சேதமும், உயிர் சேதமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் ரப்பர் கழக பகுதிகள் மற்றும் பழங்குடி பகுதிகளில் யானைகள் மற்றும் வன விலங்குகளில் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் வனப்பகுதியில் தீ வைக்கப்பட்டதா எனவும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வனப்பகுதிகளில் பற்றி எரியும் தீயினால் வன விலங்குகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் குமரி வனப்பகுதிகளில் 5 நாட்களுக்கு மேலாக எரியும் தீ வனத்திற்கு பேரிழப்பாக அமைந்துள்ளதாகவே கூறப்படுகிறது. இந்நிலையில் தீ மேலும் பரவாமல் இருக்கும் வகையில் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி தீயை அணைக்க வனத்துறையினர் முன்வர வேண்டுமென்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் மலைவாழ் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்யும் என வானிலை அறிவிப்புகள் தெரிவித்த போதிலும் ஓரிரு துளிகளுடன் மழை நின்று விட்டது. கன மழை அல்லது சாரல் மழை பெய்திருந்தால் வனத்திற்குள் ஏற்பட்டுள்ள தீ அணையும் வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கும். எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து காட்டுக்குள் பரவி வரும் தீயை உடனே கட்டுபடுத்த வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்தனர்.
- காட்டுத் தீயால் பல ஏக்கா் பரப்பிலான புல்வெளிகள் மற்றும் தாவர வகைகள் எரிந்து சாம்பலானது.
- தடுப்பு நடவடிக்கை எடுத்திருந்ததால் விவசாய நிலங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.
ஊட்டி,
கூடலூா் வனச் சரகத்தில் உள்ள நம்பாலக்கோட்டை மஞ்சமூலா இடைப்பட்ட பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயால் பல ஏக்கா் பரப்பிலான புல்வெளிகள் மற்றும் தாவர வகைகள் எரிந்து சாம்பலானது.
கட்டுப்படுத்தமுடியாத நிலையில் பரவிய காட்டுத் தீ, மலை முழுவதையும் எரித்து சாம்பலாக்கியது. விவசாயிகள் தங்களது தோட்டத்துக்குள் தீ பரவாமல் இருக்க ஏற்கெனவே தடுப்பு நடவடிக்கை எடுத்திருந்ததால் விவசாய நிலங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.
- உதகை நகரம் முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது.
- காட்டுப் பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.
நீலகிரி:
நீலகிரியில் உள்ள கவர்னர் சோலை, பார்சன்ஸ்வேலியில் உள்ள வனப்பகுதிகளில் இன்று திடீரென தீப்பற்றியது. இந்த காட்டுத்தீ வேகமாக பரவி காய்ந்த செடிகொடிகள், மரங்கள் பற்றி எரிந்தன.
நகரின் முக்கிய பகுதிகள் அருகே உள்ள குப்பை குழி பகுதியிலும் தீ பரவியது. இதனால் மின்விநியோகம் தடைப்பட்டது. முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வாழைத்தோட்டம் பகுதியிலும் தீ பரவியது. வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த காட்டுத் தீயால் நீலகிரியில் 200 ஏக்கர் வனப்பகுதி சாம்பலானது. உதகை நகரம் முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது.
தீ பரவும் காட்டுப் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும், காட்டுத் தீ பரவ சமூக விரோதிகள் யாராவது காரணமாக இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.