என் மலர்
நீங்கள் தேடியது "புதின்"
- உக்ரைன் ரஷியா இடையில் போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா பேச்சுவார்த்தை.
- 30 நாள் போர் நிறுத்தம் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து 3 வருடங்களுக்கு மேல் ஆகியும் இரு நாடுகளுக்கு இடையிலான சண்டை இன்னும் முடிவடையவில்லை. இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது.
30 நாள் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்கா உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய இரண்டு நாடுகளிடம் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், ரஷிய அதிபர் புதினும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கான நிலையை வலுவாக்கிக் கொள்ள ரஷியா புதிய ராணுவ தாக்குதலை தொடங்க வாய்ப்புள்ளதாக உக்ரைன் கருதுகிறது.
இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில் "ரஷியா பேச்சுவார்த்தையை இழுத்தடித்து, இன்னும் அதிகமான நிலங்களை ஆக்கிரமிக்க முயற்சி செய்கிறது. புதின் வலுவான நிலையில் இருந்து பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார்" எனத் தெரிவித்துள்ளார்.
- போர் நிறுத்தத்துக்கு இருநாடுகளும் கொள்கையளவில் ஒப்புக்கொண்டாலும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
- உள்கட்டுமானகளை குறிவைத்து ஒன்றையன்று தாக்கி வருகிறது.
உக்ரைன்-ரஷியா இடையிலான போர் சுமார் 3 ஆண்டாக நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.
சவுதி அரேபியாவில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் 30 நாட்கள் தற்காலிக போர்நிறுத்தம் கொண்டு வரும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
உக்ரைனுடனான போர் நிறுத்தத்துக்கு அதிபர் புதின் பல்வேறு நிபந்தனைகளுடன் ஒப்புதல் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தத்துக்கு இருநாடுகளும் கொள்கையளவில் ஒப்புக்கொண்டாலும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனவே இறுதி முடிவை ஈட்டுவதில் இழுபறி நீடித்து வருகிறது. இதற்கிடையே ரஷியா - உக்ரைன் இரு தரப்பும் டிரோன் தாக்குதலை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் சவுதி அரேபியாவின் ரியாத்தில் வைத்து ரஷியா மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஒரு நாள் முன்னதாக உக்ரைன் பிரதிநிதிகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் நேற்று தனியே ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
மின்சக்தி மற்றும் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதலில் முழுமையாக நிறுத்த அமெரிக்கா வலியறுத்தி உள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரயில்வே மற்றும் துறைமுகங்கள் பாதுகாக்கப்படவேண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இரு நாடுகளும் தற்போது மின்சக்தி உள்ளிட்ட உள்கட்டுமானகளை குறிவைத்து ஒன்றையன்று தாக்கி வருகிறது. எனவே போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போதைக்கு சாத்தியமற்ற ஒன்றாவே இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
- இதில் 14 வயது சிறுமியும் அவளது பெற்றோரும் உயிரிழந்துள்ளனர்
- இடிபாடுகளுக்கிடையில் காயடைந்தவர்களை மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
உக்ரைன் மீது ரஷியா நடத்திய டிரோன் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். உக்ரைனிய நகரமாக ஜபோரிஷ்யாவில் நேற்று இரவு ரஷிய டிரோன்கள் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் உக்ரைனின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் மீது நடந்த ரஷிய டிரோன் தாக்குதல்களில் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜாபோரிஷ்யா மீது 10 முறை தாக்குதல் நடந்ததகவும், இதில் 14 வயது சிறுமியும் அவளது பெற்றோரும் உயிரிழந்துள்ளனர் என்றும் மேலும் ஒரு கைக்குழந்தை உட்பட 12 பேர் காயமடைந்தனர் என அந்நகரின் ஆளுநர் இவான் பெட்ரோவ் தெரிவித்துள்ளார். இடிபாடுகளுக்கிடையில் காயடைந்தவர்களை மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் வடகிழக்கில் உள்ள சுமி (Sumy) பகுதியில் உள்ள கிராமத்தில் ரஷியா குறைந்தது 6 குண்டுகளை வீசியதாகவும், இதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் கிழக்கில் உள்ள டோன்ட்ஸ்க் (Donetsk) பகுதியில் நடந்த தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் என்றும் 9 பேர் காயமடைந்தனர் என்றும் அம்மகானை ஆளுநர் தெரிவித்தார்.

இதனையடுத்து ரஷியாவின் வோரோனிஸ், பெலோகிராட் ரோஸ்டோவ் வோலோகிராட் உள்ளிட்ட பகுதிகள் மீது உக்ரைன் ஏவிய 47 டிரோன்களை இடைமறித்து அளித்ததாகவும், மொத்தம் 6 பேர் காயமடைந்ததாகவும் ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த வியாழக்கிழமை போர் நடைபெறும் எல்லையில் இருந்து 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரஷியாவின் ஏங்கல்ஸ் ராணுவ விமானத் தளம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியிருந்தது.
சோவியத் காலத்திலிருந்தே ஏங்கல்ஸ் தளத்தில், வைட் ஸ்வான்ஸ் என்று அழைக்கப்படும் டுபோலேவ் டு-160 அணுசக்தி திறன் கொண்ட கனரக குண்டுவீச்சு விமானங்கள் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்தில் உக்ரைன் நடத்திய தாக்குதலின் வீடியோவும் வைரலாகியது.
2022 முதல் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டுள்ளார்.
முதற்கட்டமாக 30 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து ரஷிய அதிபர் புதினுடன் டிரம்ப் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் ரஷியாவும், உக்ரைனும் பரஸ்பர டிரோன் தாக்குதல் நடத்தி வருவது நிலைமையை மோசமாக்கியுள்ளது.
- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர முழுமையாக அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட தயார்.
- போர் நிறுத்தத்தை பயன்படுத்தி உக்ரைன் ஆயுதங்களை குவிக்க கூடாது.
உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது. உக்ரைனின் பெரும்பாலான இடங்களை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பின்னர் உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் ராணுவ உதவி வழங்கியன. இதனால் உக்ரைன் ரஷியாவுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்த தொடங்கியது. ரஷியா பல இடங்களில் பின்வாங்கியது. இருநாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் உக்ரைன் பகுதிகளை ரஷியா ஆக்கிரமித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் 3 வருடங்களை தாண்டி சண்டை நடைபெற்று வருகிறது. சண்டை நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் உக்ரைன்- ரஷியா இடையிலான சண்டையை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
30 நாட்கள் கொண்ட போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷியா இடையே அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏறக்குறைய இரு நாடுகளும் சம்மதிக்கும் நிலையில்தான் உள்ளது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் தொலைபேசியில் பேசியிருப்பதாவது:-
உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு புதின் நிபந்தனை வைத்துள்ளார்.
அதில் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர முழுமையாக அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட தயார்.
உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை நிறுத்த வேண்டும்.
போர் நிறுத்தத்தை பயன்படுத்தி உக்ரைன் ஆயுதங்களை குவிக்க கூடாது.
ஒவ்வொரு புதன்கிழமையும் 175 உக்ரைன் ராணுவ கைதிகளை விடுவிக்கப்படும்.
உக்ரைன் மீதான தாக்குதலை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த ரஷிய அதிபர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார்.
- இன்று மாலை டொனால்டு டிரம்பும், புதினும் டெலிபோனில் உரையாட உள்ளனர்.
- ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தின் எந்தப் பகுதியையும் நாங்கள் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டோம்.
ஐரோப்பாவின் நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் உறுப்பினராக சேர முயல்வதைக் கண்டித்து கடந்த 2022 பிப்ரவரியில் ரஷியா போர் தொடுத்தது. கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த முடிவும் எட்டப்படாமல் போர் தொடர்ந்து வருகின்றது. கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்தினார்.
அதன்படி முதற்கட்டமாக 30 நாட்கள் போர் நிறுத்தம் கொண்டுவருவது குறித்த முன்மொழிவு வழங்கப்பட்டது. இதற்கு உக்ரைன் சம்மதித்த நிலையில் ரஷிய அதிபர் புதினும் சம்மதிப்பாக மேலோட்டமாக தெரிவித்தார்.
போரை நிறுத்த புதின் விரும்பவில்லை என்றும் பேச்சுவார்த்தையைத் தள்ளிப்போட புதின் தந்திரம் செய்கிறார் என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியிருந்தார். இந்நிலையில் இன்று மாலை டொனால்டு டிரம்பும், புதினும் டெலிபோனில் உரையாட உள்ளனர்.
இதற்கிடையே டெல்லியில் நடந்துவரும் ரைசினா மாநாட்டில் இன்று கலந்துகொண்டு பேசிய உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா போர் நிறுத்தம் குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, ரஷியாவுடனான மோதலுக்கு அமைதியான தீர்வையே உக்ரைன் விரும்புகிறது, ஆனால் எங்கள் பிராந்திய ஒருமைப்பாட்டில் சமரசம் செய்ய மாட்டோம்.
டொனால்டு டிரம்ப் மற்றும் விளாடிமிர் புதின் இடையேயான டெலிபோன் உரையாடலுக்குப் பிறகு, முன்மொழியப்பட்ட போர்நிறுத்தம் குறித்த தெளிவான நிலைப்பாடு வெளிப்படும். ரஷியாவுடனான 30 நாள் போர்நிறுத்தம் குறித்த அமெரிக்க முன்மொழிவை உக்ரைன் ஏற்றுக்கொண்டது, அமைதி முயற்சியை உக்ரைன் எதிர்க்கவில்லை.
அதே நேரத்தில், உக்ரைன் அதன் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பில் சமரசம் செய்யாது. ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தின் எந்தப் பகுதியையும் நாங்கள் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டோம். உக்ரைனைத் தாக்குவதன் மூலம் ரஷ்யா எந்த மூலோபாய இலக்குகளையும் ரஷியா அடையவில்லை என்று தெரிவித்தார்.
- உக்ரைன் படைகள் ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ளனர்
- அழுத்தம் கொடுப்பதற்கான முற்றிலும் அரசியல் சதி என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
2022 பிப்ரவரியில் நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணைய முயற்சிப்பதை கண்டித்து அந்நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்தது. 4 ஆண்டுகளை கடந்தும் போரானது நடந்துகொண்டிருக்கிறது. கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபர் பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப் இரு நாடுகளிடையேயும் பேச்சுவார்த்தைக்கு முயற்சி மேற்கொண்டார்.
அதன்படி சவுதியில் அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. டிரம்ப் - புதின் அலைபேசி உரையாடல் நிகழ்ந்தது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அமெரிக்காவுக்கு அழைத்து சத்தம் போட்டார் டிரம்ப். இந்நிலையில் முதற்கட்டமாக 30 நாள் போர் நிறுத்தம் செய்ய அமெரிக்கா முன்மொழிந்த ஒப்பந்தத்துக்கு உக்ரைன் உடன்பட்டது.
ரஷிய அதிபர் புதினும் நேற்று முன் தினம் மாஸ்கோவில் அளித்த பேட்டியில், போர் நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொள்கிறேன். உக்ரைன் படைகள் ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ளனர். இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படுவதற்கு முன்னால் அங்கிருக்கும் படையினர் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதள பதிவில், உக்ரைன் வீரர்கள் மிகவும் மோசமான சூழ்நிலையில் சிக்கியுள்ளதாகவும், ரஷிய துருப்புகளால் சூழப்பட்ட ஆயிரக்கணக்கான உக்ரேனிய வீரர்களின் உயிர்களை புதின் காப்பாற்ற வேண்டும் என்றும் பேசியிருந்தார். குறிப்பிட்டு கூறாவிட்டாலும், குர்ஸ்க் பகுதியையே டிரம்ப் குறிப்பிடுகிறார். புதினிடம் தான் அவர்களை காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டதாக அவர் மேலும் கூறுகிறார்.
இதனையடுத்து உக்ரைன் நேற்று ஒரு அறிக்கை விட்டது. அதாவது, கடந்த ஒரு நாளில் போர் சூழ்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. குர்ஸ்க் பிராந்தியத்தில் எங்கள் இராணுவப் படைகளால் போர் சிறந்த முறையில் நடத்தப்படுகிறது. எங்கள் வீரர்கள் நல்ல நிலையில் உள்ளனர் மற்றும் எதிரியின் நடவடிக்கைகளை சிறப்பாக எதிர்கொள்கின்றனர்.
எங்களிடம் உள்ள அனைத்து ஆயுதங்களுடனும் நாங்கள் போராடுகிறோம் என்று அந்த அறிக்கை விவரிக்கிறது. மேலும் இவை அனைத்தும் உக்ரைன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் மீது அழுத்தம் கொடுப்பதற்கான முற்றிலும் அரசியல் சதி என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்த சூழலுக்கு மத்தியில் ரஷிய அதிபர் புதின் வாய்திறந்துள்ளார். அதாவது, அதிபர் டிரம்ப் விடுத்த வேண்டுகோளுக்கு நாங்கள் அனுதாபம் தெரிவிக்கிறோம். உக்ரைன் வீரர்கள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டு சரணடைந்தால், அவர்களுக்கு உயிரும், நிம்மதியாக வாழும் உரிமையும் உறுதி செய்யப்படும் என்று கூறியுள்ளார் புதின்.
குர்ஸ்க் பகுதியில் இருக்கும் உண்மை நிலை குறித்து அந்தந்த நாடுகள் தங்கள் தரப்பு பார்வைகளைக் கூறி வருவதால் உண்மை நிலை என்ன என்பது மர்மமாகவே உள்ளது. அரசியல் சித்து விளையாட்டுகள் முடிவடைந்து 30 நாள் போர் நிறுத்தம் ஏற்படுமா, உக்ரேனியர்களுக்கு விடிவுகாலம் பிறக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
- இந்தியப் பிரதமர், பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர்கள் ரஷியா -உக்ரைன் போரை தீர்க்க நிறைய நேரம் ஒதுக்குகிறார்கள்.
- புதினிடமிருந்து மிகவும் சூழ்ச்சிகரமான வார்த்தைகளை இப்போது நாம் அனைவரும் கேட்டிருக்கிறோம்.
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து 4 வருடங்கள் முடிவடைந்த நிலையிலும் இரண்டு நாடுகளுக்கு இடையில் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை.
தற்போது டிரோன்கள் மூலம் கட்டமைப்புகள் குறிவைத்து தாக்கப்படுகின்றன. கடந்த ஒரு வாரத்திற்குள் உக்ரைன் மீது ரஷியாவும், ரஷியா மீது உக்ரைனும் பயங்கர டிரோன் தாக்குதல் நடத்தின.
இதற்கிடையில் உக்ரைன் உடன் அமெரிக்கா 30 நாள் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தை சவுதி அரேபியாவில் நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் 30 நாள் போர் நிறுத்த முன்மொழிவை உக்ரைன் ஏற்றுக் கொண்டது.

இந்நிலையில் நேற்று மாஸ்கோவில் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ உடன் சேர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஷிய அதிபர் புதின், நம் அனைவருக்கும் போதுமான உள்நாட்டு விவகாரங்கள் உள்ளன. ஆனால் சீன அதிபர், இந்தியப் பிரதமர், பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர்கள் உட்பட பல நாடுகளின் தலைவர்கள் இந்தப் பிரச்சினையைத்(ரஷியா -உக்ரைன் போரை) தீர்க்க நிறைய நேரம் ஒதுக்குகிறார்கள்.
அதற்காக அவர்கள் அனைவருக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். ஏனெனில் இந்த செயல்பாடு ஒரு உன்னதமான பணியை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. விரோதம் மற்றும் உயிர் இழப்பை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கம்.
போர் நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொள்கிறேன். விரைவில் இவ்விவகாரம் பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் ஒரு தொலைபேசி உரையாடலை எதிர்நோக்கியுள்ளேன். உக்ரைன் படைகள் ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ளனர். இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படுவதற்கு முன்னால் அங்கிருக்கும் படையினர் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய வேண்டும்.
அமைதி ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்கான வலுவான புரிதல் ஏற்படுத்தப்பட வேண்டும். மொத்தத்தில் இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தமானது நீண்ட கால அமைதிக்கு வித்திடுவதாக இருக்க வேண்டும். நெருக்கடியின் மூல காரணங்களை அகற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
அதிபர் புதின் போர் நிறுத்தத்துக்கு பச்சைக்கொடி காட்டியுள்ள நிலையில் இதுகுறித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மாஸ்கோவில் புதினின் அறிக்கையை முழுமையற்றது. ஆனால் ரஷியா சரியானதைச் செய்யும். முன்மொழியப்பட்ட 30 நாள் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளும் என்றும் தான் நம்புவதாகக் கூறினார்.
இதற்கிடையே புதினின் போர் நிறுத்த கருத்துக்கள் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது, புதினிடமிருந்து மிகவும் சூழ்ச்சிகரமான வார்த்தைகளை இப்போது நாம் அனைவரும் கேட்டிருக்கிறோம். உண்மையில் அவர் இப்போது போர் நிறுத்தத்தை நிராகரிக்கத் தயாராகி வருகிறார்.

இந்தப் போரைத் தொடர விரும்புவதாகவும், உக்ரேனியர்களைக் கொல்ல விரும்புவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்பிடம் புதின் நேரடியாக சொல்ல பயப்படுகிறார்.
அதனால்தான் மாஸ்கோவில் அவர்கள் போர் நிறுத்தத்திற்கான முன் நிபந்தனைகளை விதிக்கிறார். அந்த நிபந்தனைகள் போர் நிறுத்தத்தை சாத்தியமற்றதாக்கும் அல்லது முடிந்தவரை ஒத்திவைக்கும் என்பதே அவரது திட்டம் என்று தெரிவித்தார்.
- அமெரிக்காவின் 30 நாள் போர் நிறுத்த முன்மொழிவை உக்ரைன் ஏற்றுக்கொண்டுள்ளது.
- உக்ரைன் மீதான ராணுவ உதவிக்கான தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது.
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து 4 வருடங்கள் முடிவடைந்த நிலையிலும் இரண்டு நாடுகளுக்கு இடையில் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. தற்போது டிரோன்கள் மூலம் கட்டமைப்புகள் குறிவைத்து தாக்கப்படுகின்றன. கடந்த ஒரு வாரத்திற்குள் உக்ரைன் மீது ரஷியாவும், ரஷியா மீது உக்ரைனும் பயங்கர டிரோன் தாக்குதல் நடத்தின.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க சுற்றுப் பயணத்தின்போது டொனால்டு டிரம்ப் உடனான பேச்சுவார்த்தையின்போது மோதிக் கொண்டதால், அமெரிக்க உக்ரைனுக்கு வழங்கிய ராணுவ உதவிகளை நிறுத்தியது. அத்துடன உளவுத்துறை தகவல் பகிர்வதையும் நிறுத்தியது.
இந்த நிலையில்தான் உக்ரைன் உடன் அமெரிக்கா 30 நாள் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தை சவுதி அரேபியாவில் நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் 30 நாள் போர் நிறுத்த முன்மொழிவை உக்ரைன் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் ரஷியா இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.
இதற்கிடையே உக்ரைன் மீதான ராணுவ உதவிகள் மற்றும் உளவுத்துறை தகவல் பகிர்வு ஆகியவற்றிற்கான தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது.
இந்த நிலையில் புதின்- டிரம்ப் இடையிலான பேச்சுவார்தை நடைபெற விரைவாக ஏற்பாடு செய்யப்படும் என ரஷியா தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் 20-ந்தேதி பதவி ஏற்றார். அதன்பின் பிப்ரவரி 12-ந்தேதி புதின் உடன் டெலிபோனில் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் இரு தலைவர்களும் பேசிக்கொள்ளவில்லை.
- அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் மாநாட்டில் பங்கேற்கிறார்கள்
- புதின் வரவில்லை என்ற முடிவு அனைவருக்கும் சிறந்தது என்று இந்தோனேசிய அரசு அதிகாரி கூறி உள்ளார்.`
ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் பாலியில் அடுத்த வாரம் ஜி20 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. செவ்வாய்க்கிழமை தொடங்கி 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிற உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதம் ரஷியா உக்ரைனை ஆக்கிரமித்தபிறகு முதல் முறையாக, அமெரிக்க அதிபர் பைடனும், ரஷிய அதிபர் புதினும் இந்த உச்சிமாநாட்டில் ஒன்றாக கலந்துகொள்வார்கள் என எதிர்பாக்கப்பட்டது.
ஆனால், ரஷிய அதிபர் புதின் இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் என இந்தோனேசிய அரசு அதிகாரி ஒருவர் கூறி உள்ளார். உக்ரைன் போர் விஷயத்தில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடனான மோதல் போக்கை தவிர்ப்பதற்காக இந்த மாநாட்டில் இருந்து புதின் ஒதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதின் வரவில்லை என்ற முடிவு அனைவருக்கும் சிறந்தது என்று ஜி20 நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக்குழு தலைவர் லஹட் பின்சார் பாண்ட்ஜைத்தான் கூறி உள்ளார்.
- புதின் உடல்நிலை மோசமாக இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.
- குண்டு வைத்து பாலத்தை சீரமைக்கும் பணி விரைந்து நடத்தி முடிக்கப்பட்டது.
மாஸ்கோ:
ரஷிய அதிபர் புதின், தலைநகர் மாஸ்கோவில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்தபோது மாடி படிக்கட்டில் இறங்கியபோது தவறி கீழே விழுந்ததாகவும், இதில் அவரது முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
மேலும் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் தனது உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதின் பொது வெளியில் தோன்றினார்.
கடந்த அக்டோபர் மாதம் ரஷியாவின் கிரீமியா பகுதியில் உள்ள பாலத்தில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் பாலத்தின் ஒரு பகுதி முற்றிலும் சேதமடைந்தது. பாலத்தை சீரமைக்கும் பணி விரைந்து நடத்தி முடிக்கப்பட்டது. இதையடுத்து அப்பாலம் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.
கிரீமியா பாலத்தை புதின் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பாலத்தில் காரை ஓட்டி சென்றார். பின்னர் பாலத்தின் பழுது பார்ப்பு பணிகள் குறித்த அறிக்கையை துணை பிரதமர் மராட் குஷ்னுலினிடம் கேட்ட புதின், கட்டுமான தொழிலாளர்களிடம் உரையாடினார்.
கிரீமியா பாலத்தை புதின் பார்வையிட்ட காட்சிகள் அரசு தொலைக்காட்சியில் காட்டப்பட்டன.
உக்ரைன் மீதான ரஷியா வின் போர் 10 மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் ரஷியாவுக்குள் இருக்கும் 2 ராணுவ தளங்களை உக்ரைன் ராணு வம் டிரோன் மூலம் தாக்கியதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
- எந்தவொரு சந்தர்ப்பத்திலும், ரஷிய அதிபர்தான் முடிவு செய்ய வேண்டும்.
- நாங்கள் எந்த ஒரு நிகழ்வையும் தவறவிட மாட்டோம்.
மாஸ்கோ:
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் காரணமாக அந்நாட்டுடனான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்தோனேசியாவில் அண்டையில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் புதின் பங்கேற்க அதிக வாய்ப்பு உள்ளதாக ரஷிய அதிபர் மாளிகையின் துணை தலைமை அதிகாரி ஸ்வெட்லானா லுகாஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரஷிய அரசு செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:
(ரஷிய அதிபர்) நிச்சயமாக ஜி20 உச்சி மாநாட்டிற்கு செல்வார் என்று நான் நம்புகிறேன். ஆனால் இது குறித்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அடுத்த உச்சி மாநாடு நடைபெற ஒரு வருடம் இருக்கும் போது, இது குறித்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாது.
நான் பார்க்கும் விதம் என்னவென்றால் இதற்கான வாய்ப்புகள் அனைத்தும் உள்ளன. நாங்கள் எந்த ஒரு நிகழ்வையும் தவறவிட மாட்டோம் என்று நான் நம்புகிறேன். அது ஒரு கருத்தரங்கு அல்லது மாநாடாக இருந்தாலும் ரஷியா தனது நிலைப்பாட்டை நிரூபிக்க, தனது கருத்துக்களை வெளிப்படுத்த எந்த நிகழ்விலும் பங்கேற்பது முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- துருக்கி அதிபர் எர்டோகன் போரை நிறுத்தி அமைதியை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
- ரஷிய அதிபர் புதினுடன், எர்டோகன் இன்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
மாஸ்கோ:
உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய ராணுவத்திற்கு உக்ரைன் வீரர்களும் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகின்றனர். ரஷிய படைகள் கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் முக்கிய பகுதிகளை ஆக்கிரமித்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளன.
இந்த போரில் உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளில் உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. எனவே போரை நிறுத்தும்படி உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக துருக்கி அதிபர் எர்டோகன் இரண்டு நாடுகளிடமும் நல்ல நட்புறவு வைத்திருப்பதால் போரை நிறுத்தி அமைதியை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார். சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பலமுறை புதினையும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியையும் துருக்கிக்கு அழைத்து வர முயற்சி செயதுள்ளார்.
அவ்வகையில், ரஷிய அதிபர் புதினுடன், துருக்கி அதிபர் எர்டோகன் இன்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என புதினிடம் எர்டோகன் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த புதின், ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ரஷிய பிராந்தியமாக உக்ரைன் ஏற்றுக்கொண்டால், உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக எர்டோகனிடம் கூறியிருக்கிறார். இத்தகவலை ரஷிய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
புதிய பிராந்தியங்கள் தொடர்பான உண்மை நிலையை கருத்தில் கொண்டு, உக்ரைன் அதிகாரிகளின் நிபந்தனையின் மீது தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பான ரஷியாவின் திறந்த நிலைப்பாட்டை புதின் மீண்டும் உறுதிப்படுத்தியிருப்பதாக அதிபர் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டோனெட்ஸ், லுகான்ஸ்க், ஜபோரிஜியா மற்றும் கெர்சன் ஆகிய பகுதிகளை முழுமையான கட்டுப்படுத்தாவிட்டாலும், அவற்றை இணைத்துவிட்டதாக ரஷியா கூறுகிறது.