search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இண்டிகோ"

    • தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மும்பையில் இருந்து கத்தார் செல்லவிருந்த இண்டிகோ விமானம் ரத்து
    • சுமார் 250 முதல் 300 பயணிகள் விமான நிலையத்தில் சிக்கித் தவிப்பதாக கூறப்படுகிறது.

    மும்பையில் இருந்து கத்தாரின் தோஹாவுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம், 5 மணிநேரத்திற்கு மேலாக தாமதம் ஆனதால் பயணிகள் விரக்தி அடைந்தனர்.

    அதிகாலை 3:55 மணிக்கு இந்த விமானம் புறப்பட இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் புறப்படவில்லை. விமானத்திற்குள் 5 மணிநேரம் பயணிகள் காத்திருந்தனர்.

    பின்னர் ஒருகட்டத்தில் பொறுமையிழந்த பயணிகள் விமானத்தை விட்டு கீழே இறக்கி விடுமாறு வாக்குவாதம் செய்துள்ளனர். பின்னர் பயணிகள் விமான நிலையத்தில் உள்ள ஒரு ஹோல்டிங் ஏரியாவில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.

    சுமார் 250 முதல் 300 பயணிகள் விமான நிலையத்தில் சிக்கித் தவிப்பதாக கூறப்படுகிறது. தங்களுக்கு தண்ணீர் மற்றும் உணவு எதுவும் வழங்கப்படவில்லை என்று விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    5 மணிநேர தாமதத்திற்கு பிறகு இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டது. விமானம் ரத்து செய்யப்பட்டதற்கு பயணிகளிடம் இண்டிகோ நிறுவனம் மன்னிப்பு கோரியது.

    வாடிக்கையாளர்களுக்கு ஹோட்டல் தங்குமிடங்கள் வழங்குவதாகவும் அவர்கள் செல்லும் இடங்களுக்கு மீண்டும் விமான டிக்கெட் முன்பதிவு செய்து தரப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • ராஜஸ்தான் மாநிலம் நாக்பூரில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
    • விமானத்தின் கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட காகிதத்தில் வெடிகுண்டு மிரட்டல்

    மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் இருந்து இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு தெலங்கானா தலைநகர் ஐதராபாத் நோக்கி வந்து கொண்டிருந்த 6E-7308 இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ராஜஸ்தான் மாநிலம் நாக்பூருக்கு திருப்பி விடப்பட்ட்டு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

    விமானத்திலும், பயணிகளிடத்திலும் முழுமையான சோதனை நடைபெற்று வருகிறது. விமானத்தின் கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட காகிதத்தில் வெடிகுண்டு மிரட்டல் செய்தி எழுதப்பட்டிருந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இருப்பினும் சந்தேகத்துக்குரிய பொருள் எதுவும் சோதனையில் சிக்கவில்லை என்று தெரிகிறது. இதனைத்தொடர்ந்து இன்று மதியம் 2 மணிக்கு மீண்டும் விமானம் தனது பயணத்தைத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • 1.47 பங்குகளை விற்பனை செய்கிறார். இது மொத்த பங்குகளில் 3.8 சதவீதம் ஆகும்.
    • 2022-ல் இருந்து தனது பங்குகளை குறைக்க தொட்ஙகினார் ராகேஷ் கங்வால்.

    இண்டிகோவின் தாய் நிறுவனமான இன்டர்குளோப் அவியேசன் லிமிடெட் (InterGlobe Aviation Ltd) நிறுவனத்தின் 1.47 கோடி பங்குகள் அல்லது 3.8 சதவீதம் பங்குகளை இண்டிகோ நிறுவனத்தின் இணை-நிறுவனரான ராகேஷ் கங்வால் விற்பனை செய்கிறார்.

    இந்த பங்குகளின் மொத்த மதிப்பு 804 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய பண மதிப்பில் சுமார் 6750 கோடி ரூபாய்) ஆகும். ஒரு பங்கின் விலை 4593 ரூபாய் ஆகும்.

    கங்வால் ஆதரவு பெற்ற குரூப் இன்டர்குளோப் அவியேசன் நிறுவனத்தின் 19.38 சதவீத பங்குகளை வைத்திருந்தது. கங்வால் 5.89 சதவீத பங்குகளை வைத்திருந்தார். இந்த விற்பனைக்குப் பிறகு கங்வால் ஆதரவு பெற்ற குரூப்பின் பங்கு சதவீதம் 15.58 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜே.பி. மோர்கன், கோல்டுமேன் சச்ஸ், மோர்கன் ஸே்டேன்லி இந்தியா ஆகியவை இந்த பங்கு விற்பனையை நடத்தும் எனத் தெரிகிறது.

    இன்டர்குளோப் அவியேசன் லிமிடெட் இண்டிகோவை இயக்கி வருகிறது. இந்தியா மிகப்பெரிய விமான சேவையை மேற்கொள்ளும் இந்த நிறுவனம் இந்திய பங்குசந்தையில் 62 சதவீத பங்குகளை வைத்துள்ளது. 16.9 சதவீத பங்குகளை வெளிநாட்டு மார்க்கெட்டில் வைத்துள்ளது.

    இண்டிகோ விமான நிறுவனம் ராகுல் பாட்டியா மற்றும் ராகேஷ் கங்வால் ஆகியோர் இணை நிறுவனர்கள். 2019-ல் இந்த பார்ட்னர்ஷிப் பிரிந்தது. 2022-ல் முக்கிய பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தனத பங்குகளை குறைக்க தொட்ஙகினார் ராகேஷ் கங்வால்.

    • இன்று உலகளவில் உள்நாட்டு விமான சந்தையில் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் ஆதிக்கம் செலுத்துகிறது.
    • 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் 74 விமான நிலையங்கள் இருந்தன. தற்போது அது 157 ஆக அதிகரித்துள்ளது.

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உள்நாட்டு விமான சந்தையில் 5 ஆம் இடத்தில் இருந்த இந்தியா இப்போது 3 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    10 ஆண்டுகளுக்கு முன்பு 80 லட்சம் இருக்கைகளை கொண்ட சிறிய உள்நாட்டு விமான சந்தையாக இந்தியா இருந்தது.

    அப்போது உள்நாட்டு விமான சந்தையில் இந்தோனேசியா 4 ஆம் இடத்திலும், பிரேசில் 3 ஆம் இடத்திலும் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் முதல் 2 இடங்களிலும் இருந்தது.

    இன்று உலகளவில் உள்நாட்டு விமான சந்தையில் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் ஆதிக்கம் செலுத்துகிறது.

    உள்நாட்டு விமான சந்தையில் இந்தோனேசியா, பிரேசில் நாடுகளை பின்னுக்கு தள்ளி 1.56 கோடி இருக்கைகளுடன் இந்தியா 3 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    உள்நாட்டு விமான சந்தையில் இந்தியா ஒவ்வொரு வருடமும் 6.9 சதவீத உயர்வை எட்டியுள்ளது. இது அபரிவிதமான வளர்ச்சியாகும்.

    கடந்த 10 ஆண்டுகளில், இண்டிகோ நிறுவனத்தின் சந்தை பங்கு கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது, 2014 இல் 32 சதவீதத்தில் இருந்து இன்று 62 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி, இந்தியாவில் உள்ள விமான நிறுவனங்களில் 4,56,910 உள்நாட்டு பயணிகளை பயணம் செய்துள்ளனர். கொரோனா நோய்த்தொற்றுக்கு பின்பு அதிக உள்நாட்டு பயணிகள் பயணம் செய்த நாள் இதுவாகும்.

    10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் 74 விமான நிலையங்கள் இருந்தன. தற்போது அது 157 ஆக அதிகரித்துள்ளது.

    91 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் டிஜி யாத்ரா செயலியை பயன்படுத்தி டிக்கெட்டை பெற்றுள்ளனர். 2023 ஆம் ஆண்டில் 35 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

    • நேற்று காலை 6.50 மணிக்கு 172 பயணிகளுடன் சென்னையில் இருந்து டெல்லி-க்கு புறப்பட்டது இண்டிகோ விமானமான 6E-5314.
    • ஒரே வாரத்தில் இண்டிகோ நிறுவனத்துக்கு இது இரண்டாவது மிரட்டலாகும்.

    நேற்று காலை 6.50 மணிக்கு 172 பயணிகளுடன் சென்னையில் இருந்து டெல்லி-க்கு புறப்பட்டது இண்டிகோ விமானமான 6E-5314. அதைத்தொடர்ந்து விமானத்தில் ஒரு ரிமோட் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது. இதனை அந்த விமானத்தின் விமானி மும்பை ஏர் டிராபிக் கண்ட்ரோலுக்கு தகவலை கூறினார்.

    இக்காரணத்தினால் விமானத்தை உடனடியாக அவசரமாக மும்பை நிலையத்தில் தலையிறக்கப்பட்டது. அதன் பிறகு அவசரமாக அனைத்து பயணிகளையும் விமானத்தில் இருந்து அப்புறபடுத்தி வெடிகுண்டு எதேனும் இருக்கிறதா என பாம்ப் ஸ்குவாட்-ஐ வைத்து பரிசோதித்தனர் ஆனால் விமானத்தில் சந்தேகிக்கும் அளவு எதுவும் தென்படவில்லை.

    ஒரே வாரத்தில் இண்டிகோ நிறுவனத்துக்கு இது இரண்டாவது மிரட்டலாகும். மே 28 ஆம் தேதி டெல்லியில் இருந்து வாரணாசிக்கு புறப்பட்ட விமானத்திலையும் இதேப் போல் வெடி குண்டு மிரட்டல் நடந்தது குறிப்பிடத்தக்கது.

    • ராம் பாபு மஹதே தலைமையிலான குழுசாத்தியக் கூறுகளை ஆய்வு செய்தனர்.
    • ஜூலை 1 முதல் இரு நகரங்களுக்கும் மீண்டும் விமானங்கள் இயக்கப்பட உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் இருந்து ஐதராபாத், பெங்களூரு நகரங்களுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தினசரி விமான சேவையை வழங்கி வந்தது.

    இதற்கிடையே இந்தாண்டு மார்ச் மாதம் முதல் தற்காலிகமாக விமான சேவை நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையே புதுச்சேரியில் இருந்து விமான சேவையை தொடங்க புதுச்சேரி அரசு பல்வேறு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தது.

    தொடர்ந்து இண்டிகோ-ஏர் நிறுவனம் புதுச்சேரியில் இருந்து ஐதராபாத், பெங்களூருவுக்கு விமானங்களை இயக்க முன் வந்துள்ளது.

    ஜூலை 1-ந் தேதி முதல் இந்த இரு நகரங்களுக்கு மீண்டும் விமானங்கள் இயக்கப்பட உள்ளது.

    இதன் ஒரு பகுதியாக இண்டிகோ நிறுவனத்தின் பிரதிநிதிகள் விமான நிலையத்தில் ஆய்வு நடத்தினர். விமான நிலையத் தின் முனைய கட்டிடம், ஓடுபாதை மற்றும் கட்டுப்பாட்டு கோபுரம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன் இண்டிகோ நிறுவனத்தின் மூத்த மேலாளர் ராம் பாபு மஹதே தலைமையிலான குழுவினரும் விமானங்களை இயக்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்தனர்.

    இதுகுறித்து புதுச்சேரி விமான நிலையத்தின் இயக்குநர் ராஜசேகர் ரெட்டி கூறியதாவது:-

    பயணிகள் முனைய கட்டிடம், ஓடுபாதை, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம், வானிலை ஆய்வுத்துறை அலுவலகங்கள், தீயணைப்பு, எரிபொருள் நிலையம் மற்றும் செயல்பாட்டு பகுதிகளை இந்த குழுவினர் பார்வையிட்டனர்.

    விமானங்களை இயக்குவதற்கான வசதிகள் இருப்பது குறித்து குழு திருப்தி அடைந்துள்ளது.

    அதன்படி ஜூலை 1-ந் தேதி முதல் புதுச்சேரியில் இருந்து பெங்களூரு மற்றும் ஐதராபாத் வரை விமான சேவைகளை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

    மேலும் சில வழித்தடங்களை இதில் சேர்க்க ஆபரேட்டர்கள் விரும்புகின்றனர். எந்தெந்த பகுதிக்கு என்பது விரைவில் முடிவு செய்யப்படும்.

    கவர்னர், முதல்-அமைச்சர் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் ஆகியோர் விமான சேவையை விரைவில் தொடங்கவும், புதுச்சேரியை அதிக இடங்களுடன் விமானத்தின் மூலம் இணைக்கவும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கொல்கத்தாவில் ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ஒரே ரன்வேயில் உரசிக் கொண்டன.
    • இந்தச் சம்பவத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயங்களின்றி உயிர் தப்பினர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தின் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து பீகாரின் தர்பங்கா நோக்கி இண்டிகோ விமானம் நேற்று புறப்பட்டது. அதேபோல், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று சென்னை நோக்கி புறப்பட்டது. பயணிகளுடன் சென்ற இரு விமானங்களும் ஒரே ரன்வேயில் சென்றதாகக் கூறப்படுகிறது.

    அப்போது இரு விமானங்களின் இறக்கைகளும் உரசியதாகவும், விமானிகள் சாதுரியமாக செயல்பட்டதால் விமானம் திசை திருப்பப்பட்டு விபத்து தவிர்க்கப்பட்டதும் தெரிய வந்தது. இச்சம்பவத்தின்போது விமானங்களில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர்.

    இரு விமானங்களின் இறக்கைகளும் சேதமடைந்ததால் பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டு, மாற்று விமானங்களால் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    கொல்கத்தா விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள விமான போக்குவரத்து இயக்குனரகம், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இண்டிகோ நிறுவனங்களின் ஊழியர்களிடமும் விரிவான விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தது.

    • சிவில் விமான பாதுகாப்பு அமைப்பு ரூ.1.20 கோடி அபராதம்.
    • சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ரூ.30 லட்சமும் அபராதம்.

    மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் விமான ஓடுபாதையில் பயணிகள் உணவருந்திய விவகாரத்தில் இண்டியோ நிறுவனத்திற்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

    இதில், சிவில் விமான பாதுகாப்பு அமைப்பு ரூ.1.20 கோடியும், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ரூ.30 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    • ஏர் இந்தியா 470 ஏர்பஸ் விமானங்களை வாங்க ஒப்பந்தம்
    • 2035-க்குள் வினியோகம் செய்யப்படும் எனத் தகவல்

    இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ, 500 ஏர்பஸ் (A320) விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. நேற்று இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

    ஒரே தவணையில் 500 ஏர்பஸ் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாவது வணிக விமான சேவை வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.

    ஏர்இந்தியா சில வாரங்களுக்கு முன் 470 ஏர்பஸ் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்தது. இந்த நிலையில் இண்டிகோ 500 விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.

    விமானத்தில் பயணிப்பவர்களின் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதாலும், உலகளாவிய மக்கள் தொகை அதிகரிப்பு ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ள விமான நிறுவனங்களிடையேயான போட்டிதான் இதற்கு காரணம் எனக் கருதப்படுகிறது.

    2030-2035-க்குள் இந்த விமானங்களை ஏர்பஸ் நிறுவனம் வினியோகம் செய்ய இருக்கிறது.

    • விமான நிறுவனங்களில் ‘இண்டிகோ’, 15-வது இடத்தைப் பெற்றுள்ளது.
    • ஜப்பானின் ஒசாகா சர்வதேச விமான நிலையம் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது.

    புதுடெல்லி :

    உலகளவில் நேரந்தவறாமல் இயங்கும் விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் பற்றிய பட்டியலை 'அபீஷியல் ஏர்லைன் கைட்ஸ்' எனப்படும் 'ஓஏஜி' நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலக பயண தகவல்களை வெளியிடும் நிறுவனமாகும் இது.

    நேற்று வெளியான இதன் பட்டியல்படி, உலகளவில் நேரந்தவறாமல் இயங்கும் முதல் 20 விமான நிலையங்கள் பட்டியலில் தமிழ்நாட்டின் கோவை விமான நிலையம் இடம்பெற்றுள்ளது. இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தால் இயக்கப்படும் இந்த விமான நிலையம், 13-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் ஜப்பானின் ஒசாகா சர்வதேச விமான நிலையம் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது.

    நேரந்தவறாத விமான நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான 'இண்டிகோ', 15-வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இந்தோனேசியாவின் கருடா இந்தோனேசியா விமான நிறுவனம் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது.

    நேரந்தவறாத விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவில் இருந்து கோவை விமான நிலையமும், இண்டிகோ விமான நிறுவனமும் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    இண்டிகோ விமான நிறுவனம் தொடங்கப்பட்டு 11-ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு செல்ல ரூ.1,212-க்கு சலுகை விலையில் டிக்கெட்டுகளை அறிவித்துள்ளது. #IndiGo
    மும்பை :

    இந்தியாவின் முன்னனி விமான சேவை நிறுவனமான இண்டிகோ கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. வரும் ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதியுடன் இண்டிகோ நிறுவனம் 12-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

    இந்நிலையில், இதை சிறப்பிக்கும் விதமாக 12 லட்சம் விமான டிக்கெட்டுகளை சலுகை விலையாக ரூ.1,212-க்கு விற்பனை செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    இந்த மெகா டிக்கெட் விற்பனை இன்று தொடங்கி வரும் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஜூலை 25-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 30-ம் தேதி வரையிலான விமான டிக்கெட்டுகளை இந்த சலுகை விலையில் முன்பதிவு செய்ய முடியும் என இண்டிகோ நிறுவனத்தின் தலைமை அதிகாரி வில்லியம் போல்டர் தெரிவித்தார்.

    உள்நாடு மற்றும் வெளிநாடு என 57 நகரங்களுக்கு செல்லும் இண்டிகோ விமானத்தின் டிக்கெட்டுக்களை சலுகை விலையில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. #IndiGo
    ×