என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடன் தொல்லை"

    • வலுக்கட்டாயமாக கடனை வசூலிக்கும்போது கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கடன் வழங்கிய நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படும்.
    • வலுக்கட்டாயமாக கடனை வசூலிக்கும்போது கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால் பிணையில் வெளிவர முடியாத சிறைத்தண்டனை.

    தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 26ஆம் தேதி கட்டாய கடன் வசூல் தடுப்பு மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

    பணக்கடன் வழங்கும் நிறுவனங்கள் கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 3 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்க இந்த மசோதா வழி வகை செய்கிறது.

    மேலும், வலுக்கட்டாயமாக கடனை வசூலிக்கும்போது கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கடன் வழங்கிய நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படும். வலுக்கட்டாய நடவடிக்கைகளில் கடனை வசூல் செய்தால் பிணையில் வெளிவர முடியாத அளவிற்கு சிறை தண்டனை விதிக்கப்படும் போன்றவை மசோதாவில் இடம்பெற்றுள்ளது.

    இந்த மசோதாவின்படி, கடன் பெறுவோருக்கும் கடன் வழங்கும் நிறுவனத்திற்கும் இடையே உள்ள பூசல்களை தீர்த்துவைக்க குறைதீர்ப்பாயரை அரசு நியமிக்கலாம்.

    • கடன் பெற்றவர்களை சில சமயங்களில் தற்கொலை செய்து கொள்வதற்கு தூண்டுதலாக அமைந்து விடுகிறது.
    • வலுக்கட்டாய நடவடிக்கைகளில் கடனை வசூல் செய்தால் பிணையில் வெளிவர முடியாத அளவிற்கு சிறை தண்டனை விதிக்கப்படும்.

    சென்னை:

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக சட்டசபையில் இன்று கடன் கொடுக்கும் நிறுவனங்கள் கட்டாய வசூலில் ஈடுபட்டு பொதுமக்களை துன்புறுத்துவதிலிருந்து பாதுகாக்கும் வகையில் சட்ட முன் வடிவு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினர், விவசாயிகள், பெண்கள், மகளிர் சுய உதவிகுழுவினர், கூலித் தொழிலாளிகள், கட்டிடத் தொழிலாளிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கடன் வழங்கும் நிறுவனங்களின் கவர்ச்சிகரமான கடன்களுக்கு அடிக்கடி இரையாகி தாங்க முடியாத கடன் சுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இது போன்ற நேரங்களில் ஏற்கனவே கடன் சுமையில் இருக்கும் இது போன்றவர்களை கடன் வழங்கும் நிறுவனங்கள் கடனை வசூலிப்பதற்கு முறையற்ற வழியை பின்பற்றுகிறார்கள்.

    அது துயரத்தில் இருக்கும் கடன் பெற்றவர்களை சில சமயங்களில் தற்கொலை செய்து கொள்வதற்கு தூண்டுதலாக அமைந்து விடுகிறது. இது போன்ற எண்ணங்களிலிருந்து அவர்களை பாதுகாக்கும் வகையில் ஒரு சட்டத்தை இயற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனை அளிக்கப்படும்.

    வலுக்கட்டாயமாக கடனை வசூலிக்கும் போது கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கடன் வழங்கிய நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படும்.

    வலுக்கட்டாய நடவடிக்கைகளில் கடனை வசூல் செய்தால் பிணையில் வெளிவர முடியாத அளவிற்கு சிறை தண்டனை விதிக்கப்படும்.

    இந்த சட்டத்திருத்தத்தின் படி, கடன் பெறுவோருக்கும் கடன் வழங்கும் நிறுவனத்திற்கும் இடையே உள்ள பூசல்களை தீர்த்துவைக்க குறைதீர்ப்பாயரை அரசு நியமிக்கலாம் .

    கடன் வழங்கிய நிறுவனம் கடன் பெற்றவரோ அல்லது அவரது குடும்பத்தினரையோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தவோ, மிரட்டவோ, பின் தொடரவோ, அவர்களது சொத்துக்களை பறிக்கவோ கூடாது. கடன் பெற்றவரிடமோ அல்லது அவரது குடும்பத்தினரிடமோ வலுக்கட்டாயமாக வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 5 லட்சம் ரூபாய் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். இச்சட்டமுன்வடிவின் படி தண்டனைக்குரிய குற்றங்களில் கைது செய்யப்படுவோர் ஜாமினில் வெளிவரமுடியாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இதில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்களும் கருத்துக்களை தெரிவித்தனர். அவைகளை எழுதிக் கொடுக்குமாறு சபாநாயகர் அப்பாவு கேட்டுக்கொண்டார்.

    • கடனுக்கு ஈடாக தனது வீட்டு பத்திரத்தையும் அடமானமாக கொடுத்துள்ளார்.
    • வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாததால் அவருக்கு சொந்தமான இரண்டு கடைகளையும் எழுதிக் கொடுக்குமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    மதுரை:

    மதுரையை அடுத்த கருப்பாயூரணி அருகே உள்ள கண்மாய் பகுதியில் இன்று காலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடப்பதாக கருப்பாயூரணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணமாக கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வந்தனர். முதற்கட்ட விசாரணையில் பிணமாக கிடந்தவர் மதுரை செல்லூர் அருகே உள்ள எஸ்.ஆலங்குளம் ராமலிங்க நகரை சேர்ந்த வேலு மகன் கணேசன் (வயது 46) என்பது தெரியவந்தது. அவருக்கு திருமணமாகி மேகலா என்ற மனைவியும், 12-ம் வகுப்பு படிக்கும் மகளும், 11-ம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர்.

    இவர் சிம்மக்கல் மற்றும் மாட்டுத்தாவணி பகுதியில் பழக்கடை வைத்து நடத்தி வந்தார். பழக்கடையை நடத்துவதற்காக திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட் டியை சேர்ந்த ஒரு வியாபாரியிடம் சுமார் ரூ.1 கோடி வரை கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதற்காக தினமும் சுமார் ரூ.3 லட்சத்துக்கும் மேல் வட்டியும் பல வருடங்களாக கட்டி வந்துள்ளார். தொடர்ந்து வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் வட்டி சரியாக கட்ட முடியாமல் பல நாட்களாக விரக்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    அத்துடன் கடனுக்கு ஈடாக தனது வீட்டு பத்திரத்தையும் அடமானமாக கொடுத்துள்ளார். பெரும்பாலான வட்டியை செலுத்திய நிலையில் கடன் கொடுத்தவர் அடமான பத்திரத்தை திருப்பித்தர மறுத்துவிட்டார்.

    மேலும் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாததால் அவருக்கு சொந்தமான இரண்டு கடைகளையும் எழுதிக் கொடுக்குமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த கணேசன், இன்று காலை வீட்டிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு கருப்பாயூரணி அருகே உள்ள கண்மாய் அருகே சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    வாங்கிய கடனுக்காக வட்டி கட்ட முடியாமல் பழக்கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • கடன் வாங்கிய நபர் இறந்து விட்டதால் அந்த கடனை மாதம் தோறும் தனது சம்பளத்தில் இருந்து ஜான் தேவராஜ் கொடுத்து அடைத்து வந்தார்.
    • பேசின் பிரிட்ஜ் போலீசார் வழக்கு பதிவு செய்து கடன் கொடுத்தவர்கள் யாரேனும் மிரட்டினார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெரம்பூர்:

    சென்னை புளியந்தோப்பு நரசிம்மன் நகரை சேர்ந்தவர் ஜான்தேவராஜ் (வயது33). பெரவள்ளூரில் உள்ள பூங்காவில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன.

    ஜான்தேவராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நண்பர் ஒருவருக்கு கடன் வாங்க உதவினார். அப்போது அவர் சாட்சி கையெழுத்து போட்டதாக தெரிகிறது. இதற்கிடையே கடன் வாங்கிய நபர் இறந்து விட்டதால் அந்த கடனை மாதம் தோறும் தனது சம்பளத்தில் இருந்து ஜான் தேவராஜ் கொடுத்து அடைத்து வந்தார். மேலும் இதற்காக வேறு நபர்களிடம் கடன் வாங்கியும் நண்பர் வாங்கிய கடனை செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடன் பிரச்சனையில் ஜான்தேவராஜ் சிக்கினார். அவரால் வாங்கிய கடன் தொகையை திருப்பி கொடுக்க முடியவில்லை. அவரிடம் கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து கடும் நெருக்கடி கொடுத்தனர்.

    இதனால் மனவேதனை அடைந்த ஜான் தேவராஜ் தற்கொலை செய்ய முடிவு செய்தார். வீட்டில் யாரும் இல்லாத போது வெளியில் சென்று இருந்த தனது மனைவி சுப்புலட்சுமியின் செல்போனுக்கு வீடியோ கால் செய்து பேசினார். அப்போது கடன் தொல்லையால் தற்கொலை செய்யப்போவதாக கூறி பேசியபடியே ஜான் தேவராஜ் தூக்கில் தொங்கினார்.

    இதனை கண்டு மனைவி சுப்புலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். அவர் விரைந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது கணவர் ஜான்தேவராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு கதறி துடித்தார். இதுகுறித்து பேசின் பிரிட்ஜ் போலீசார் வழக்கு பதிவு செய்து கடன் கொடுத்தவர்கள் யாரேனும் மிரட்டினார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மரக்காணம் அருகே கடனை திரும்ப கேட்டு மிரட்டியதால் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • ரூ. 5 லட்சம் கடன் வாங்கி தன் கணவர் விட்டுச் சென்ற கடன்களை அடைத்துள்ளார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்டது அனுமந்தை மீனவர் கிராமம். இப்பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50) . இவர் கடந்த 2 ஆண்டுக்கு முன் அதே பகுதியில் தீபாவளி சீட்டும் நடத்தி வந்துள்ளார். இதனால் ராஜேந்திரனுக்கு அதிக அளவில் கடன் ஏற்பட்டுள்ளது . எனவே அவர் 2 ஆண்டுக்கு முன் வீட்டை விட்டு வெளியில் சென்று உள்ளார். அதிலிருந்து அவர் வீடு திரும்பவில்லை. அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற விபரமும் உறவினர்கள் கூட இதுவரையில் தெரியவில்லை. இந்நிலையில் ராஜேந்திரனின் மனைவி மணிமேகலை அதே பகுதியை சேர்ந்த சீனிவாசனிடம் ரூ. 5 லட்சம் கடன் வாங்கி தன் கணவர் விட்டுச் சென்ற கடன்களை அடைத்துள்ளார். கடந்த 8-ந் தேதி சீனிவாச னின் மனைவி மணி மேகலையின் வீட்டிற்குச் சென்று நீங்கள் எங்களிடம் கடன் வாங்கியது 5 லட்சம் அதற்கு வட்டி இப்பொழுது 5 லட்சம் ஆகிவிட்டது.

    எனவே வட்டியும் அசலுமாக சேர்த்து எங்களுக்கு ரூ. 10 லட்சம் இப்பொழுது நீங்கள் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அப்போது மணிமே கலைக்கும் மதிக்கும் வாய் தகராறு ஏற்ப ட்டுள்ளது. இதனால் மதி மணிமேகலையை பார்த்து தகாத வார்த்தைகளால் பேசி அசிங்கப்படுத்தி உள்ளார். இதனால் மணமுடைந்த மணிமேகலை எலி மருந்தை சாப்பிட்டு சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். இதனைப் பார்த்த அவரது உறவினர்கள் புதுவை ஜிப்பர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு மணிமேகலை சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது உறவினர்கள் மரக்காணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • வங்கியில் தவணை செலுத்த முடியாததால் குமரேசன் மன வருத்தத்தில் இருந்துள்ளார்.
    • புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே குன்னத்தூர் பகுதி சாத்திர விளை என்ற இடத்தை சேர்ந்தவர் குமரேசன் (51).இவருக்கு ஜெயக்குமாரி என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். தொழிலாளியான குமரசேனுக்கு மதுப் பழக்கம் இருந்தது.

    இந்த நிலையில் அவர், வீடு கட்டுவதற்காக வங்கியில் இருந்து கடன் வாங்கி, கடன் சுமையால் அவதிப்பட்டுள்ளார். வங்கியில் தவணை செலுத்த முடியாததால் குமரேசன் மன வருத்தத்தில் இருந்துள்ளார்.

    நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்ற குமரேசன் அதே பகுதி பொற்றை என்ற இடத்தில் விஷம் குடித்து பிணமாக கிடந்தார். இதுகுறித்து புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குமரே சன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • . இவர் குடும்ப செலவுகளுக்காக பல்வேறு நிறுவனங்களில் இருந்து கடன் வாங்கி இருந்தார்.
    • ட்டில் தனிமையில் இருந்த தமிழ்செல்வன் மனைவியின் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே பரவலூர் கல்லரகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது26). இவர் குடும்ப செலவுகளுக்காக பல்வேறு நிறுவனங்களில் இருந்து கடன் வாங்கி இருந்தார்.

    கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாத நிலையில் தமிழ்செல்வன் மனம் உடைந்து காணப்பட்டுள்ளார்.நேற்று வீட்டில் தனிமையில் இருந்த தமிழ்செல்வன் மனைவியின் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இறந்த தமிழ்ச்செல்வனுக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அனுமந்தை ஊராட்சியில் சங்கம் அமைத்து நூற்றுக்கும் மேற்பட்ட குளிர்சாதன வேன்கள் இயக்கப்பட்டு வருகிறது.
    • பார்த்திபன் தனது வீட்டிற்கு தெரியாமல் எலிமருந்தை வாங்கி குடித்தார்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே அனுமந்தை, கீழ் பேட்டை, ஆட்சிக்காடு,ஆலப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கடற்கரை ஓரம் இறால் குஞ்சு பொரிப்பாக தொழிற்சாலைகள் உள்ளது இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியிடங்களுக்கு இறால் குஞ்சுகள் ஏற்றுமதி செய்ய அனுமந்தை ஊராட்சியில் சங்கம் அமைத்து நூற்றுக்கும் மேற்பட்ட குளிர்சாதன வேன்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த சங்கத்தைப் போல் ஆலப்பாக்கம் ஊராட்சியிலும் தற்போது சங்கம் அமைத்து வேன்கள் இயக்கப்படுகிறது இதன் காரணமாக அனுமந்தையில் உள்ள சங்கத்திற்கும் ஆலப்பாக்கம் ஊராட்சியில் உள்ள சங்கத்திற்கும் கடந்த மாதம் பிரச்சனை ஏற்பட்டது .இது சம்பந்தமாக இரண்டு சங்கத்தினர் தரப்பிலும் மரக்காணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் இரண்டு சங்கங்களையும் சேர்ந்த நிர்வாகிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர் மேலும் இரு தரப்பை அழைத்து சமாதான கூட்டம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்நிலையில் இரண்டு சங்கங்களுக்கும் மேற்பட்ட பிரச்சனையின் காரணமாக ஆலப்பாக்கம்ஊராட்சியில் உள்ள குளிர்சாதன வேன்கள் கடந்த 4 மாதமாக இயக்கப்படவில்லை. இதனால் ஆட்சிக்காடு பகுதியில் உள்ள வேன் உரிமையாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளதாக கூறுகின்றனர்.

    இந்நிலையில் ஆட்சிக்காடு கிராமம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் வயது( 48 )இவரும் இறால் குஞ்சுகளை ஏற்றி செல்லும் குளிர்சாதன வேன் வைத்துள்ளார். இந்த வேனை வேறு எந்த வேலைக்கும் பயன்படுத்த முடியாது. இதன் காரணமாக4 மாதத்திற்கு மேலாக பார்த்திபன் தனது வேனுக்கு கடன் கட்ட முடியாமல் தவித்து வந்துள்ளார். இதனால் அவர் மன உளைச்சலில் இருந்தார்.

    இதன் காரணமாக பார்த்திபன் தனது வீட்டிற்கு தெரியாமல் எலிமருந்தை வாங்கி குடித்துவிட்டு வீட்டின் அருகில் மயங்கி கிடந்து உள்ளார். இதனைப் பார்த்த அவரது உறவினர்கள் மரக்காணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு டாக்டர்கள் பார்த்திபனுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். இதனைத் தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர் .

    கடன் தொல்லையால் வேன் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த மரக்காணம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மரக்காணம் தாசில்தார் பாலமுருகன் தலைமையில் சமாதான கூட்டம் நேற்று முன் தினம் நடைபெற்றது .ஆனால் இரு சங்கங்களும் முட்டுக்கட்டை போட்டு பேச்சுவார்த்தைடிய ஒத்துக்கொள்ளாமல் புறக்கணித்தனர். இதனால் விழுப்புரம் கலெக்டர் பழனி தலைமையில் இரு சங்கங்களையும் அழைத்து பேசி சமரசம் செய்யப்படும் என மரக்காணம் தாசில்தார். கூறியுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.

    • புதிய வீடு கட்டியதால் கடன் தொல்லை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்

    வெம்பாக்கம்:

    வெம்பாக்கம் அடுத்த அப்துல்லாபுரம் கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 27). இவர் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி (23). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்கள் புதிய வீடு கட்டி வருகின்றனர். வீடு கட்டுவதற்காக சிலரிடம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் கடன் கொடுத்தவர்கள் கடனை திரும்ப கேட்டுள்ளனர். இந்த நிலையில் செந்தமிழ்ச்செல்வி காஞ்சிபுரத்தில் உள்ள அவரது தந்தைக்கு தொலைபேசி மூலம் எங்களை தேட வேண்டாம் என்று சொல்லிவிட்டு போனை சுவிட்ச் ஆப் செய்து உள்ளார்.

    இது குறித்து அவரது தந்தை அதே பகுதியில் வசிக்கும் மகனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தார். அப்போது வீடு திறந்த நிலையில் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தில் தேடி உள்ளார்.

    பின்னர் அவர்கள் எங்கு தேடியும் கிடைக்காததால் தூசி போலீஸ் நிலையத்தில் செந்தமிழ் செல்வியின் அண்ணன் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ராஜசேகர் மற்றும் குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.

    • கடன் தொல்லையால் பிளாஸ்டிக் கவரை முகத்தில் மூடி கொண்டு நைட்ரஜன் வாயுவை சுவாசித்து தாயும், மகனும் தற்கொலை செய்து கொண்டனர்.
    • பழனிவேல் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.

    தருமபுரி:

    தருமபுரி அருகே ஒட்டப்பட்டியில் உள்ள பழைய ஹவுசிங்போர்டு பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர்.

    இவரது மனைவி சாந்தி (வயது50). இவரது மகன் விஜயஆனந்த் (30). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    இவர் என்ஜினீரியங் படித்து முடித்து விட்டு நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் தனியார் நூற்பாலையில் வேலை செய்து வந்தார். அப்போது அவரது நண்பர்களுடன் சேர்ந்து அதே பகுதியில் தனியாக ஒரு நூற்பாலை ஒன்றையும் நடத்தி வந்தார். இதற்காக அவர் தனக்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளார்.

    இந்த நிலையில் அவர் நடத்தி வந்த நூற்பாலையில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால், அந்த நிறுவனத்தை மேலும் தொடர முடியாமல் இழுத்து மூடிவிட்டனர்.

    இந்த நிலையில் விஜயஆனந்திற்கு பணம் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு வந்தனர். ஆனால், நூற்பாலை மூடிவிட்ட காரணத்தினால் அவரால் கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வந்தார்.

    நூற்பாலையை மூடிவிட்டதால் அதில் முதலீடு செய்த பங்கு தொகையும், மேலும், அவர் சிலரிடம் கடனாக கொடுத்த பணமும் திரும்ப கிடைக்காததால் தனக்கு கடன் கொடுத்தவர்களிடம் கடன் தொகை முழுவதையும் திரும்ப கொடுக்க முடியாமல் அவதிக்குள்ளானார்.

    இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு விஜயஆனந்தை தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதனால் அவர் மிகவும் மனவேதனையுடன் காணப்பட்டார். இந்த விவரங்கள் அனைத்தும் தனது தாய் சாந்தியிடம் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் பழனிவேல் நேற்று காலை பாலக்கோட்டிற்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த தாய் சாந்தி, மகன் விஜயஆனந்த் ஆகிய 2 பேரும் வீட்டை பூட்டி கொண்டு அவர்களது முகத்தில் பிளாஸ்டிக் கவரால் மூடிவிட்டு டியூப் வழியாக நைட்ரஜன் வாயுவை சுவாசித்து தற்கொலை செய்துகொண்டனர்.

    இந்த விவரங்கள் ஏதும் அறியாத பழனிவேல் நேற்று இரவு வீட்டிற்கு வந்து கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரம் கதவை தட்டியும் யாரும் வராததால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது முகத்தில் பிளாஸ்டிக் கவர் மூடியபடி சாந்தியும், விஜயஆனந்தும் பிணமாக கிடப்பதை கண்டு கதறி அழுதார்.

    இதுகுறித்து பழனிவேல் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து பிணமாக கிடந்த 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தியதில் கடன் தொல்லை தாக்காமல் விஜயஆனந்த் தற்கொலை செய்து கொள்ளும்முடிவை எடுத்துள்ளார்.

    இதுகுறித்து தனது தாய்க்கு தெரிவித்தபோது ஒரே மகனை இழுந்து என்ன செய்வதென்று தெரியாததால் அவரும் தனது மகனுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து 2 பேரும் தங்களது முகத்தில் பிளாஸ்டிக் கவரால் மூடிக் கொண்டு நைட்ரஜன் வாயுவை சுவாசித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடன் தொல்லையால் தாய், மகன் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • வீட்டில் துர்நாற்றம் வீசியதை அடுத்து, போலீசார் சோதனை நடத்தினர்.
    • தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதில், பொறியாளர் ராஜேஷ், அவரது மனைவி லக்ஷயா, 10 வயது மகள் யக்ஷிதா, ராஜேஷின் தாயார் பிரேமா ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    வீட்டில் துர்நாற்றம் வீசியதை அடுத்து, போலீசார் சோதனை மேற்கொண்ட நிலையில் 4 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர்.

    இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ராஜேஷ் தூக்கிட்டும், மற்ற மூன்று பேர் விஷம் குடித்தும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

    மேலும், கடன் தொல்லை காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் ராஜேஷின் வீடு முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.
    • போலீசார் ராஜேஷின் மனைவிக்கு பணம் கொடுத்த ஆசிரியரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை வடவள்ளி வேம்பு அவென்யூவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது34). என்ஜினீயர்.

    இவரது மனைவி லக்ஷயா (29). பட்டதாரி. இவர் பிரெஞ்சு மொழியில் பட்டம் பெற்று உள்ளார். இவர்களுக்கு யக்சிதா (10) என்ற மகள் உள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இவர்களுடன் ராஜேஷின் தாய் பிரேமா (74) என்ப வரும் வசித்து வந்தார். 6 மாதங்களுக்கு முன்பு தான் இவர் குடும்பத்துடன் இங்கு வந்து குடியேறினார்.

    கடந்த 3 நாட்களுக்கும் மேலாக ராஜேசின் வீடு பூட்டப்பட்டு கிடந்தது. நேற்று மாலை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ராஜேஷ் தூக்கில் தொங்கிய நிலையிலும், லக்ஷயா, யக்சிதா, பிரேமா ஆகியோர் விஷம் குடித்த நிலையிலும் இறந்து கிடந்தனர்.

    போலீசார் ராஜேஷின் வீடு முழுவதும் சோதனை மேற்கொண்டனர். அப்போது அறையில் என்ஜினீயர் ராஜேஷ் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கைப்பட எழுதிய ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

    என்ஜினீயர் ராஜேஷின் மனைவி லக்ஷயாவுக்கு, சின்மயா நகரை சேர்ந்த ஆசிரியரின் நட்பு கிடைத்தது. 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

    இந்நிலையில் அந்த ஆசிரியரிடம் தனது தேவைக்காக லக்ஷயா பணம் கேட்டுள்ளார். அவர் அடிக்கடி அவருக்கு பணம் கொடுத்துள்ளார். மேலும் தன்னிடம் இருந்த பணம் மட்டுமின்றி தனது நண்பர் ஒருவரிடம் இருந்தும் பணத்தை வாங்கி லக்ஷயாவுக்கு கொடுத்தார். இதுவரை ரூ.31 லட்சம் கொடுத்துள்ளார்.

    இதற்கிடையே ஆசிரியருக்கு பணம் கொடுத்த அவரது நண்பர் பணம் கேட்கவே, 2 பேரும் லக்ஷயாவிடம் சென்று பணத்தை கேட்டுள்ளனர். அவர் சரியான பதில் சொல்லவில்லை என தெரிகிறது. இதையடுத்து 2 பேரும் லக்ஷயாவின் கணவர் ராஜேசை சந்தித்து, உனது மனைவிக்கு நாங்கள் பணம் கொடுத்துள்ளோம். அதற்கான ஆதாரம் என பணம் அனுப்பியதற்கான வங்கி பரிவர்த்தணையை காண்பித்தனர்.

    இதனால் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் பணம் கொடுத்தவர்கள், அதனை கேட்டு தொந்தரவு கொடுக்கவே, ராஜேஷ் தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ராஜேஷின் மனைவிக்கு பணம் கொடுத்த ஆசிரியரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆசிரியரின் நண்பரையும் விசாரிப்பதற்காக அவரையும் தேடி வருகின்றனர்.

    ×