search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குண்டுவெடிப்பு"

    • குப்பை அள்ளும் தொழிலாளி படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    • பிளாஸ்டிக் பையில் இருந்தே வெடித்ததாக சம்பவத்தின்போது அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவின் மத்திய பகுதியில் ப்லோக்மான் தெருவில் [Blochmann Street] உள்ள எஸ்.என்பானர்ஜி சாலையில் சிறிய அளவிலான திடீர் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. சாலையோரம் பிளாஸ்டிக் பையில் இருந்த மர்ம பொருள் வெடித்ததில் அங்கு வசித்து வந்த குப்பை அள்ளும் தொழிலாளி படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    குண்டுவெடிப்பு ஏற்பட்ட இடத்தை போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் அப்பகுதியில் சோதனை நடத்தி வருகின்றனர். பிளாஸ்டிக் பையில் இருந்தே குண்டுவெடிப்பு ஏற்பட்டதாக சம்பவத்தின்போது அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். பெண் டாகடர் கொலையை கண்டித்து ஜூனியர் மருத்துவர்கள் கொல்கத்தாவில் போராட்டம் நடத்தி வரும் வேளையில் இந்த குண்டுவெடிப்பு அரங்கேறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அமெரிக்க ராணுவம் பயன்படுத்திய தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
    • குண்டுவெடிப்பில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள விமான நிலையம் அருகே உள்ள அமெரிக்க ராணுவ தள வளாகத்தில் நள்ளிரவில் குண்டுவெடித்தது. அமெரிக்க ராணுவம் பயன்படுத்திய தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் இன்று பாக்தாத்துக்கு வர உள்ள நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. குண்டுவெடிப்பில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    ஈரான் ஆதரவு ஈராக்கிய போராளிகள் ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் தளங்களை அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மொகடிஷு ஓட்டலில் கார் வெடிகுண்டு வெடித்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.
    • இந்த குண்டு வெடிப்பில் சுமார் 20 பேர் காயமடைந்தனர்.

    யூரோ 2024 கோப்பை இறுதிப் போட்டியை காண்பதற்காக சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள ஒரு ஓட்டலில் ரசிகர்கள் குவிந்திருந்தனர்.

    ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டியை இளைஞர்கள் பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென சக்திவாய்ந்த கார் வெடிகுண்டு வெடித்ததில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பில் சுமார் 20 பேர் காயமடைந்தனர்.

    வில்லா சோமாலியா என அழைக்கப்படும் ஜனாதிபதி மாளிகை வளாகத்திற்கு அருகில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • சாலையோரத்தில் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடிக்க தொடங்கின.
    • படுகாயம் அடைந்த 2 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    டமாஸ்கஸ்:

    தென்மேற்கு சிரியாவின் டரா மாகாணம் அருகே சாலையில் குழந்தைகள் சிலர் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கே சாலையோரத்தில் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடிக்க தொடங்கின. பயங்கர சத்தத்துடன் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்தன.

    இந்த வெடிகுண்டு விபத்தில் சிக்கி 7 குழந்தைகள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 2 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    • பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் மார்ச் 1-ந்தேதி குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது.
    • பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அளிக்கப்படும் - என்.ஐ.ஏ

    பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் மார்ச் 1-ந்தேதி நடைபெற்ற குண்டுவெடிப்பு குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். அவர்களுடன் இணைந்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அளிக்கப்படும் என என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், மூன்று மாநிலங்களில் நடத்திய சோதனையின் எதிரொலியாக பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான முசாமில் செரிப் ஹுசைன் கைது செய்யப்பட்டார் என என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.

    இதனிடையே கடந்த வாரம் ஷிவமோகா பகுதியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சோதனை நடத்தியதில் 2 இளைஞர்களை கைது செய்தனர்.

    இந்நிலையில் அவர்களின் செல்போன்கள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது பாஜக நிர்வாகியான சாய் பிரசாத் என்பவர் உடன் இருவரும் அடிக்கடி தொடர்பில் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது.

    இதனையடுத்து, பெங்களூரு ராமேஸ்வரம் கபே உணவக குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பாஜக நிர்வாகி சாய் பிரசாத் என்பவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஈரானில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் அரங்கேறின.
    • குண்டுவெடிப்பில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு.

    ஈரானின் கெர்மான் பகுதியில் உள்ள முன்னாள் தளபதி சுலைமானின் கல்லறை அருகே அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. நேற்று நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிக்கி நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறது.

    இது தொடர்பாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

     


    அதில், "ஈரானின் கெர்மன் நகரில் ஏற்பட்ட கொடூரமான குண்டுவெடிப்பு சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியடைந்தோம். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது."

    "இந்த கடினமான சூழ்நிலையில், ஈரான் அரசு மற்றும் பொது மக்களிடம் எங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம். எங்களின் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் காயமுற்றோர் மற்றும் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தாருடனேயே உள்ளது," என குறிப்பிட்டுள்ளார். 

    • வாகனங்கள் தீப்பிடித்ததால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது.
    • தீயணைப்பு படையினர் வாகனங்களில் பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    மிலன்:

    இத்தாலியின் மிலன் நகரின் மத்திய பகுதியில் இன்று குண்டு வெடித்ததுபோன்ற பயங்கர சத்தம் கேட்டது. சாலையோரம் பார்க்கிங் செய்யப்பட்டிருந்த ஒரு வேன் வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களும் தீப்பிடித்தன. இதனால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது.

    தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் வாகனங்களில் பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரம் வெளியாகவில்லை. வேன் பற்றி எரியும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது.

    • இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சந்தீப் குமாருக்கு மனைவி மற்றும் ஒரு வயது மகன் உள்ளனர்.
    • சம்பவம் குறித்த உண்மைகளை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அசாம் மாநிலம் தர்ராங் களத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது குண்டுவெடித்து சந்தீப் குமார் என்கிற ராணுவ வீரர் உயிரிழந்தார். நேற்று ரேஞ்சில் காவல் பணியில் அவர் ஈடுபட்டிருந்தபோது இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    குண்டுவெடி விபத்தில் சந்தீப் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து, ரேஞ்சில் இருந்த மருத்துவ அதிகாரி மூலம் அவருக்கு உடனடியாக மருத்துவ முதல் உதவி வழங்கப்பட்டது.

    பின்னர் அவர் குவாஹாட்டியில் உள்ள மருத்துவமனைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சந்தீப் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சந்தீப் குமாருக்கு மனைவி மற்றும் ஒரு வயது மகன் உள்ளனர்.

    ராணுவ வீரரை இழந்து வாடும் குடும்பத்தினருடன் உறுதுணையாக இருப்பதாகவும், சம்பவம் குறித்த உண்மைகளை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் காவல்துறை பயங்கரவாத எதிர்ப்பு துணை அதிகாரிகள் என்று ஹயாத் கூறினார்.
    • படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள காவல் நிலையத்தில் (பயங்கரவாத எதிர்ப்பு துறை) நேற்று இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. இதில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

    அலுவலகத்தில் பழைய வெடி மருந்து இருப்பு இருந்ததாகவும், அது வெடிப்புச் சம்பவங்களுக்குக் காரணமா அல்லது பயங்கரவாதத் தாக்குதலா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக அம்மாகாண காவல்துறைத் தலைவர் அக்தர் ஹயாத் கூறினார்.

    மேலும், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் காவல்துறை பயங்கரவாத எதிர்ப்பு துணை அதிகாரிகள் என்று ஹயாத் கூறினார்.

    படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    வெடிவிபத்துக்கான காரணத்தை அறிய போலீசார் மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகளும் விசாரணை நடத்தி வருவதாக உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா தெரிவித்தார்.

    • காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
    • மேற்கொண்டு அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம், திட்குமார் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் இன்று வெடிகுண்டு வெடித்தது. இதில் ஒருவர் பலியானார். 2 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    திட்குமார் கிராமத்தைச் சேர்ந்த மணிருல் கான் என்பவரது வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்துக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும், மேலும் அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

    • வடமத்திய நைஜீரியாவில் கால்நடை மேய்ப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.
    • குண்டு வெடிப்பை நிகழ்த்தியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நைஜீரியாவின் வட மத்திய பகுதியில் உள்ள நசராலாபெனு மாகாணங்களுக்கு இடையே குண்டு வெடித்தது. இதில் கால் நடை மேய்ப்பவர்கள், பொதுமக்கள் என 54 பேர் பலியானார்கள்.

    இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியது யார் என்பது தெரியவில்லை. வடமத்திய நைஜீரியாவில் கால்நடை மேய்ப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுதொடர்பாக நசராலா மாகாண கவர்னர் அப்துல்லாஹி கூறும் போது, "இந்த சம்பவத்தால் ஏற்படக்கூடிய பதட்டத்தை தணிப்பதை உறுதி செய்வதற்கு பாதுகாப்பு நிறுவனங்களை சந்தித்து வருகிறோம்" என்றார்.

    • கடிதத்தில் பஸ்வான் என்ற பெயருடன் கூடிய ஒரு தொலைபேசி எண் இருந்தது.
    • போலீசார் நடத்திய விசாரணையில் மிரட்டல் கடிதம் அனுப்பியது உத்தரபிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தை சேர்ந்த பஸ்வான் என்பது தெரிய வந்தது.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் அகமதாபாத் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று ஒரு கடிதம் வந்தது.

    அதில், குடியரசு தினத்தன்று (இன்று) அகமதாபாத் ரெயில் நிலையம் மற்றும் கீதா மந்திர் பஸ் நிலையம், பலியதேவ் கோவில் ஆகிய இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் நடத்தப்படும். உங்களால் முடிந்தால் அதை தடுத்து நிறுத்துங்கள் என கூறப்பட்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸ் அதிகாரிகள் மாநகரம் முழுவதும் கண்காணிப்பை பலப்படுத்தி, தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    மேலும் அந்த கடிதத்தில் பஸ்வான் என்ற பெயருடன் கூடிய ஒரு தொலைபேசி எண் இருந்தது. அந்த எண்ணில் தொடர்பு கொண்டபோது செல்போன் 'சுவிட்ச்ஆப்' ஆகி இருந்தது.

    எனினும் அந்த நம்பரில் இருந்து கடைசியாக பேசிய இடத்தை கண்டுபிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் மிரட்டல் கடிதம் அனுப்பியது உத்தரபிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தை சேர்ந்த பஸ்வான் என்பது தெரிய வந்தது.

    உடனடியாக அகமதாபாத் போலீசார், உத்தரபிரதேச போலீசாரை தொடர்பு கொண்டு பேசி, மிரட்டல் கடிதம் எழுதிய பஸ்வானை பிடித்தனர்.

    விசாரணையில், மன நலம் பாதிக்கப்பட்ட அவரும், அவரது மனைவியும் சேர்ந்து அந்த கடிதத்தை எழுதியது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×