என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை திருமணம்"

    • குழந்தை திருமணம் நடத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
    • குழந்தை திருமணம் நடைபெறுவது தெரியவந்தால் 1098 என்ற குழந்தைகள் நல உதவி எண்ணிற்கு தெரிவிக்கலாம்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குழந்தை திருமணம் நடத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். அட்சய திருதியை போன்ற விழா காலங்களில் அதிக எண்ணிக்கையில் குழந்தை திருமணம் நடப்பது தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கவனத்திற்கு வருவதால் அதை தடுக்குமாறு அறிவுறுத்துகிறது.

    18 வயதுக்கு மேற்பட்ட ஆணாக இருந்து குழந்தை திருமணத்தை ஒப்பந்தம் செய்வது, எந்தவொரு குழந்தை திருமணத்தையும் நடத்துபவர், இயக்குபவர் அல்லது தூண்டுபவர், பெற்றோர் அல்லது பாதுகாவலர் அல்லது சட்டப் பூர்வமாக தூண்டுபவர், பெற்றோர் அல்லது பாதுகாவலர் அல்லது சட்ட விரோதமான வேறு எந்த நபரும், திருமணத்தை ஊக்குவிக்கும் எந்தவொரு செயலையும் செய்பவர் அல்லது அதை நடத்த அனுமதிப்பவர், குழந்தை திருமணத்தில் கலந்து கொள்வது அல்லது பங்கேற்பது குற்றமாகும்.

    குழந்தை திருமணம் நடத்துவதை தடுக்க தவறினால் 2 ஆண்டுகள் வரை கடுமையான ஜெயில் தண்டனை விதிக்கப்படும். மேலும் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    எனவே அட்சய திருதியை முன்னிட்டு குழந்தை திருமணம் நடைபெறுவது தெரியவந்தால் 1098 என்ற குழந்தைகள் நல உதவி எண்ணிற்கு தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 28-ந் தேதி காடாம்புலியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது.
    • மகளிர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர் :

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல்மாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜ்மோகன் (வயது25), இவருக்கும் புதுப்பாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 28-ந் தேதி காடாம்புலியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. பெற்றோர்கள் பாலு கருணாநிதி, ராஜ்மோகன் ஆகியோர் மீது குழந்தை திருமணம் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு சமூக நல அலுவலர் தனபாக்கியம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனை தொடர்ந்து மகளிர் போலீசார் 3பேர் மீது வழக்கு பதிந்து சிறுமியை கடலூரில் உள்ள மகளிர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாரம்பரிய உணவு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி மசினகுடி பள்ளியில் நடைபெற்றது.
    • தானியங்கள், கீரைகள், காய்கறிகளில் செய்யப்பட்ட பாரம்பரிய உணவுகள் மற்றும் ஊட்டச்சத்து பலகாரங்களை சாப்பிட்டார்.

    ஊட்டி,

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாரம்பரிய உணவு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி மசினகுடி பள்ளியில் நடைபெற்றது.

    இதில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவி ஏ.எஸ்.குமாரி கலந்து கொண்டு பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்ட பாரம்பரிய உணவு அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் தானியங்கள், கீரைகள், காய்கறிகளில் செய்யப்பட்ட பாரம்பரிய உணவுகள் மற்றும் ஊட்டச்சத்து பலகாரங்களை சாப்பிட்டு அதன் சுவையை உணர்ந்து பாராட்டு தெரிவித்தார்.

    தொடர்ந்து பழங்குடியின மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    குழந்தைகள் பாதுகாப்பு பின்னர் மகளிர் ஆணைய மாநில தலைவி ஏ.எஸ்.குமாரி பேசும்போது கூறியதாவது:- ஆதிவாசி மக்கள் தங்கள் பெண் குழந்தைகளை சிறு வயதில் திருமணம் செய்து வைக்கக் கூடாது.

    அறிவியல் ரீதியாக 18 வயதை கடந்த பின்னரே பெண் திருமணம் செய்து கொள்வதற்கான பருவத்தை அடைகிறாள். தமிழகத்தை விட மற்ற மாநிலங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்து உள்ளது. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக பல்வேறு சட்டங்கள் உள்ளது.

    ஆனால் அது முறையாக செயல்படுத்தப்படுகிறதா என கண்காணிப்பதற்காக மகளிர் ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆதிவாசி மக்கள் மட்டுமின்றி பெண்கள், குழந்தைகள் சிறுதானியங்கள், பாரம்பரிய உணவு முறைகளை சாப்பிட வேண்டும்.

    தொடர்ந்து இருமல் இருந்தால் ஆங்கில மருந்துகளை பயன்படுத்துவதை கைவிட்டு ஓமம் உட்கொண்டால் இருமல் வராது. பாரம்பரிய மருந்துகள் கொரோனா காலத்தில் ஊட்டச்சத்து, பாரம்பரிய மருந்துகள் தான் உடல் நலனை பாதுகாத்தது. இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி, கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்தனா,மசினகுடி ஊராட்சி தலைவர் மாதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆதிவாசி குழந்தைகளின் பாரம்பரிய நடனம் உள்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது

    • சத்துணவு திட்டத்தில் அழுகிய முட்டைகள் வழங்கப்படுவதாக பா.ஜ.க.வினர் தவறான பிரசாரம் செய்து வருகிறார்கள்.
    • இதுவரை 9 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    நெல்லை:

    கர்ப்பிணி பெண்களுக்கு அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நெல்லை மாவட்டம் மானூர் யூனியன் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பேசினார்.

    நிகழ்ச்சியில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் செல்வலட்சுமி அமிதாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தின் முக்கியத்துவம் குறித்தும், ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுப்பதை குறித்தும் உணர்த்திடும் வகையில் அரசு சார்பில் இந்த விழா நடத்தப்பட்டு வருகிறது.

    குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் வளரும் விதமாக தமிழகம் முழுவதும் 36 லட்சம் அங்கன்வாடிகளில் முதல்-அமைச்சரின் ஊட்டச்சத்து உறுதி செய்யும் திட்டத்தின் கீழ் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதுவரை 9 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்கும் வகையில் சத்தான உணவு வழங்க ஆலோசனை வழங்கப்பட்டு, அதனை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    45 ஆயிரம் குழந்தைகளுக்கு இதயத்தில் ஓட்டை, காது செவித்திறன் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் உள்ளது. அவர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை மூலமாக உயர்தர சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதை தாய்மார்களே அறிந்திடாத நிலையில் தமிழக அரசு சார்பில் அவர்களுக்கு தரமான ஊட்டச்சத்து மற்றும் உயர்தர சிகிச்சை வழங்கப்படுகிறது.

    சத்துணவு திட்டத்தில் அழுகிய முட்டைகள் வழங்கப்படுவதாக பா.ஜ.க.வினர் தவறான பிரசாரம் செய்து வருகிறார்கள். காலம் காலமாக, அழுகிய முட்டைகளை தண்ணீரில் போட்டு கண்டுபிடித்து அதனை திருப்பி அனுப்புவதற்காக தனியாக சேமித்து வைக்கப்படும். இந்த நடைமுறை 1996-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறது.

    திருப்பி அனுப்ப வைக்கப்பட்டிருந்த முட்டைகளை போட்டோ எடுத்து பா.ஜ.க.வினர் அவதூறு பரப்பி வருகிறார்கள். இதுகுறித்து அவர்களுக்கு புரிதல் இல்லாமல் உள்ளது. தமிழகத்தில் எந்த ஒரு இடத்திலும் அங்கன்வாடிகளுக்கு அழுகிய முட்டை வழங்கப்படவில்லை.

    தமிழகத்தில் குழந்தை திருமணங்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 55 திருமணங்கள் முடிந்த நிலையில் சட்ட ரீதியான மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • விவரம் தெரியவந்தால் ‘காதல் திருமணம்’ என்று கூறி பெற்றோர்களும் தப்பி விடுகின்றனர்.

    திருப்பூரில் :

    திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவில் குழந்தை திருமணம் நடப்பது தடுக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் திருப்பூரில் 61 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 55 திருமணங்கள் முடிந்த நிலையில் சட்ட ரீதியான மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் வெளிமாவட்ட மக்கள் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடத்த நினைக்கின்றனர். 18 வயது பூர்த்தியாகாத பெண்ணுக்கு திருமணம் நடந்தால் குறிப்பாக மணமகனுக்குதான் பாதிப்பு அதிகம் என்பதை உணர வேண்டும். மணமகள் வயது 18-க்கு குறைவாக இருந்து, அந்த விவரம் தெரியவந்தால் 'காதல் திருமணம்' என்று கூறி பெற்றோர்களும் தப்பி விடுகின்றனர். எனவே திருமண வயது இளைஞர்கள் மற்றும் பெண்ணுக்கு பூர்த்தியாகிவிட்டதா என்பதை உறுதி செய்த பிறகே திருமண ஏற்பாடுகளை தொடங்க வேண்டும்' என்றனர்.

    • ஒரே நாளில் 1,800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • குழந்தை திருமணம் சட்ட விரோதம்.

    கவுகாத்தி :

    நமது நாட்டில் ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21, பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18. இந்த வயதுக்கு கீழே உள்ள ஆண்கள், பெண்கள் திருமணம் செய்வது குழந்தை திருமணம் ஆகும். இந்த குழந்தை திருமணம் சட்ட விரோதம். அப்படி செய்வது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.

    அசாம் மாநிலத்தில் சட்ட விரோதமாக குழந்தை திருமணங்கள் நடைபெறுவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    குழந்தை திருமணங்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அதிரடி நடவடிக்கை எடுப்பது, குற்றவாளிகளை கைது செய்வது, விரிவான வகையில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வது என்று கடந்த 23-ந் தேதி முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் கூடிய மாநில மந்திரிசபை முடிவு எடுத்தது.

    இதுபற்றி முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா சில கடுமையான அறிவிப்புகளை வெளியிட்டார். அவை:-

    * 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்வோர் மீது போக்சோ சட்டம் பாயும், 14-18 வயது பிரிவு சிறுமிகளை திருமணம் செய்கிறவர்கள் மீது குழந்தை திருமண தடை சட்டம், 2016 பாயும். இந்த திருமணங்கள் செய்வோர் கைது செய்யப்படுவார்கள், அவர்களது திருமணங்கள் சட்டவிரோதமானவை என அறிவிக்கப்படும்.

    * 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் திருமணம் செய்தால் அவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த முடியாது என்ற நிலையில், சீர்திருத்த இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    * இப்படிப்பட்ட திருமணங்களை நடத்தி வைக்கிற மத குருமார்கள், குடும்பத்தினர் மீதும் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் அறிவித்தார்.

    இந்த நிலையில் குழந்தை திருமண விவகாரத்தில் அசாம் போலீசார் நேற்று ஒரே நாளில் 1,800-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளதாக முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், " மாநிலம் முழுவதும் குழந்தை திருமண தடுப்பு நடவடிக்கை முடக்கி விடப்பட்டு, கைது செய்யும் படலம் அதிகாலை முதல் தொடங்கி விட்டது. இந்த நடவடிக்கை இன்னும் 3 அல்லது 4 நாட்களுக்கு தொடரும்" என குறிப்பிட்டார்.

    இந்த மாநிலத்தில் குழந்தை திருமணங்கள் தொடர்பாக 4 ஆயிரத்து 4 வழக்குகள் 15 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    அதிகபட்சமாக தூப்ரியில் 370 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 136 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதையொட்டி முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா டுவிட்டரில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டார்.

    அந்தப் பதிவில் அவர், " மாநிலத்தில் குழந்தை திருமண அச்சுறுத்தலை முடிவுக்கு கொண்டு வருவதில் அரசு உறுதியாக உள்ளது. இதுவரை அசாம் போலீஸ் மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்து 4 வழக்குகள் (குழந்தை திருமணம்) பதிவு செய்துள்ளது. இனி வரும் நாட்களில் போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும். வழக்குகள் மீதான நடவடிக்கை 3-ந் தேதி முதல் (நேற்று) தொடங்கும். அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என கூறி உள்ளார்.

    • போலீசாரின் கைது நடவடிக்கையால் ஆத்திரமடைந்த பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • துப்ரி மாவட்டத்தில் காவல் நிலையம் முன்பு நடந்த போராட்டத்தின்போது போலீசார் தடியடி நடத்தினர்.

    கவுகாத்தி:

    அசாமில் குழந்தை திருமணம் அதிகரித்து வருவதை தடுக்க, மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. குழந்தை திருமணத்தில் ஈடுபடுவோர், திருமணத்தை நடத்தி வைப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்தார். அதன்படி போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    கடந்த 2 நாட்களில் மட்டும் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில் 4004 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, 2,257 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 51 நபர்கள் மத குருக்கள் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போலீசாரின் கைது நடவடிக்கையால் ஆத்திரமடைந்த பெண்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட கணவன் மற்றும் மகன்களை விடுவிக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர். துப்ரி மாவட்டத்தில் காவல் நிலையம் முன்பு நடந்த போராட்டத்தின்போது, பெண்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் உருவானது.

    அடுத்த 6 நாட்களுக்கு இந்த அதிரடி நடவடிக்கை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 8000 பேர் குழந்தை திருமணம் தொடர்பாக குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    • கடந்த 2 நாட்களில் மட்டும் 2,257 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • குழந்தை திருமணத்திற்கு எதிரான அசாம் அரசின் நடவடிக்கையை அசாதுதீன் ஒவைசி கண்டித்துள்ளார்.

    ஐதராபாத்:

    அசாமில் குழந்தை திருமணம் அதிகரித்து வருவதை தடுக்க மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. குழந்தை திருமணத்தில் ஈடுபடுவோர், திருமணத்தை நடத்தி வைப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்தார். அதன்படி போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    கடந்த 2 நாட்களில் மட்டும் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில் 4,004 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, 2,257 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 51 நபர்கள் மத குருக்கள் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போலீசாரின் கைது நடவடிக்கையால் ஆத்திரமடைந்த பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட கணவன் மற்றும் மகன்களை விடுவிக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

    இந்நிலையில், குழந்தை திருமணத்திற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பேசிய அசாதுதின் ஒவைசி, கணவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு திருமணம் செய்து கொண்ட சிறுமிகளை யார் கவனிப்பார்கள் என கேள்வி எழுப்பினார்.

    • தேசிய அளவில் குழந்தை திருமண சராசரி 6.8 சதவீதமாக இருந்து வருகிறது. ஆனால் அசாமில் இந்த இது 11.7 சதவீதமாக உள்ளது.
    • 2026-ம் ஆண்டுக்குள் அசாமில் குழந்தை திருமணத்தை முற்றிலும் ஒழிப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.

    கவுகாத்தி:

    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த 2019-2020-ம் ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட தேசிய குடும்ப நல ஆய்வில் அசாமில் குழந்தை திருமணங்கள் மிக அதிகமாக இருப்பது தெரிய வந்தது.

    தேசிய அளவில் குழந்தை திருமண சராசரி 6.8 சதவீதமாக இருந்து வருகிறது. ஆனால் அசாமில் இந்த இது 11.7 சதவீதமாக உள்ளது. இதனால் அசாமில் அதிகளவில் குழந்தை திருமணங்கள் நடப்பதும், இதன் காரணமாக அதிக குழந்தைகள் இறப்புக்கு முக்கிய காரணமாக இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியது.

    இந்த அறிக்கையை மையமாக கொண்டு அசாமில் குழந்தை திருமணங்களை தடுக்க மாநில அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.

    அம்மாநிலத்தில் 2026-ம் ஆண்டுக்குள் அசாமில் குழந்தை திருமணத்தை முற்றிலும் ஒழிப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் அமைச்சரவை கூட்டம் கடந்த 23-ந் தேதி நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து குழந்தை திருமணங்கள் செய்தவர்கள் மீது அடுத்தடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 14 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளை திருமணம் செய்தவர்கள் மீது போக்சோ வழக்கு, 14 முதல் 18 வயதுடைய சிறுமிகளை திருமணம் செய்தவர்கள் மீது குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    அந்த வகையில் கடந்த 15 நாட்களில் மட்டும் 4 ஆயிரத்து 74 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், இதுதொடர்பாக கடந்த 3 நாட்களில் மட்டும் 2,273 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் திருமணம் செய்து வைத்த மத குருமார்கள் 51 பேர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாமில் பல்வேறு இடங்களில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் கணவன்மார்களை கைது செய்ததால் குடும்பத்தை நடத்த வருமானம் இல்லை எனக்கூறி இளம் பெண்கள் பலர் தங்களது குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சில இடங்களில் போலீஸ் நிலையங்களை முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் ஐதராபாத் எம்.பி.யும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவருமான அசாதுதீன் ஓவைசி அளித்த பேட்டியில், அசாம் அரசின் இந்த நடவடிக்கையை சாடி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், திருமணம் செய்து கொண்ட பெண்களின் நிலை என்ன? அவர்களை யார் கவனித்து கொள்வார்கள்? 4 ஆயிரம் வழக்குகளை அசாம் அரசு பதிவு செய்துள்ளது. அவர்கள் ஏன் புதிய பள்ளிகளை திறப்பது இல்லை? அசாமில் உள்ள பா.ஜனதா அரசு முஸ்லீம்களுக்கு எதிராக பாரபட்சமாக செயல்படுகிறது.

    மேல் அசாமில் உள்ள நிலம் இல்லா மக்களுக்கு இலவச நிலங்களை கொடுக்கின்றனர். ஆனால் கீழ் அசாமில் உள்ள மக்களுக்கு இந்த சலுகை வழங்கப்படவில்லை என்றார்.

    இந்தநிலையில் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா கூறுகையில், குழந்தை திருமண தடுப்பு நடவடிக்கையில் பின்வாங்க போவதில்லை. பிற்போக்கு நடைமுறையான குழந்தை திருமணங்களை தடுக்கும் 5 ஆண்டு நடவடிக்கைகளில் ஒரு பகுதி இது ஆகும். 2026-ம் ஆண்டுக்குள் மாநிலத்தில் குழந்தை திருமணத்தை முற்றிலும் ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    குழந்தை திருமணத்தில் இருந்து லட்சக்கணக்கான 19 வயதிற்குட்பட்ட சிறுமிகளை காப்பாற்றவும், இந்த தலைமுறையை துன்பத்தில் இருந்து காப்பாற்றவும் குழந்தை திருமணத்திற்கு எதிரான நடவடிக்கை தொடரும். அனுதாபம் என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. அசாமில் குழந்தை திருமணங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

    • குழந்தை திருமணம் ஒரு குற்றம்.
    • மக்களும் அரசோடு இணைய வேண்டும்

    புதுடெல்லி :

    2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் கைலாஷ் சத்யார்த்தி. இவர் குழந்தைகள் அறக்கட்டளை நடத்தி வருகிறார். இந்த அமைப்பு சார்பில் குழந்தை திருமணங்களை தடுப்பது தொடர்பான தேசிய அளவிலான கருத்தரங்கை டெல்லியில் நேற்று நடத்தினார்.

    இதில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, "குழந்தை திருமணம் ஒரு குற்றம். அதை நாம் முழுமையாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

    குழந்தை திருமணத்தை முற்றிலும் நிறுத்தி சரித்திரம் படைப்போம். 23 சதவீதமாக இருக்கும் குழந்தை திருமணங்களை பூஜ்ஜியமாக குறைக்க வேண்டும். இதற்கு அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது. குழந்தை திருமணத்தை தடுக்க சட்டம் தன் கடமையை செய்கிறது. ஆனால் மக்களும் அரசோடு இணைய வேண்டும்" என்று கூறினார்.

    • சிறுமியின் வயதை அறிந்த மருத்துவமனை நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • திருமணம் செய்து வைத்தது தொடர்பாக தந்தை, கணவர் மாமியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பாப்பாரபட்டி அருகேயுள்ள எருமையாம்பட்டியை சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது 15 வயது மகளுக்கு கடந்த 2021-ம் ஆண்டு எச்.புதுபட்டியை சேர்ந்த கலைஞன் (வயது 25) என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

    கர்ப்பிணியான அந்த சிறுமி பிரசவத்துக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிறுமியின் வயதை அறிந்த மருத்துவமனை நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து அரூர் அனைத்து மகளிர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்து வைத்தது தெரிய வந்தது.

    அதன்பேரில் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தது தொடர்பாக அவரது தந்தை சின்னசாமி, கணவர் கலைஞன், மாமியார் காந்தா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சிறைதண்டனை 1 லட்சம் ரூபாய் அபராதம்
    • தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும்

    பெரம்பலூர்,

    நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது பெண் கல்வி. பெண் கல்விக்கு தடையாக இருப்பது குழந்தை திருமணம். குழந்தை திருமணத்தை நடத்துபவர்கள், குழந்தை திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் ஆகிய அனைவருக்கும் குழந்தை திருமண தடைச்சட்டம் 2006 பிரிவு 11-ன்படி, 2 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனையோ அல்லது ரூ.1 லட்சம் வரையிலான அபராதமோ தண்டனையாக விதிக்கப்படும். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் பற்றி தகவல் தெரிந்தால் சைல்டு லைனை 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மாவட்ட சமூக நல அலுவலரை 9944350988 என்ற செல்போன் எண்ணிலும், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலரை 8668092093 என்ற செல்போன் எண்ணிலும், மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலரை 9443391931 என்ற செல்போன் எண்ணிலும், குழந்தை நலக்குழுவை 6369018347 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×