என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம மக்கள்"

    • கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அவதிப்பட்டு வந்த கிராம மக்கள் தொடர்ந்து புகார்களை தெரிவித்து வந்தனர்.
    • போலீசார் கிராம மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    ஈரோட்டை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் பிரபல பால் பண்ணையின் தொழிற்சாலை அவல்பூந்துறை அடுத்த காதக்கிணறு பகுதியில் அமைந்துள்ளது. இங்கு பாலில் இருந்து தயிர், மோர், வெண்ணெய், பால் பவுடர் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

    இந்த தொழிற்சாலையில் முறையாக சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றுவதில்லை என பல ஆண்டுகளாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். ரசாயன கழிவுகளை சுத்திகரிக்காமல் வெளியேற்றுவதால் சுற்றுப்பகுதியில் உள்ள காதக்கிணறு, செம்மண் குழி, காட்டு வலசு, மின்னல் காட்டு வலசு உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக பொது மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

    இந்த நிலையில் நீர் மாசுவை தொடர்ந்து காற்று மாசுவும் இந்த ஆலை ஏற்படுத்துவதால் மூச்சு திணறல் ஏற்படுவதாக கிராமத்தினர் தெரிவித்தனர். கடுமையான நெடியுடன் துர்நாற்றம் வீசும் மாசு காற்று காரணமாக வீடுகளுக்குள் குடியிருக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் வீடு முழுவதும் கருந்துகள்கள் படிந்து சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் கூறினர்.

    கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அவதிப்பட்டு வந்த கிராம மக்கள் தொடர்ந்து புகார்களை தெரிவித்து வந்தனர். ஆனால் ஆலை நிர்வாகத்தின் தரப்பில் இருந்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் நேற்று நள்ளிரவு வீடுகளுக்குள் தூங்க முடியாமல் பரிதவித்த கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திடீரென ஆலை முன் திரண்டு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தையடுத்து அங்கு ஆலை நிர்வாகத்தின் சார்பில் வடமாநில தொழிலாளி ஒருவர் தமிழ் தெரியாத நிலையில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பின் தமிழ் தெரிந்த நிர்வாகிகள் அங்கு வந்து கிராம மக்களிடம் சமாதானம் பேசினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மொடக்குறிச்சி போலீஸ் ஆய்வாளர் மற்றும் போலீசார் கிராம மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதுவரை எத்தனை முறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தீர்கள், ஏன் இரவில் வந்து இதுபோன்ற போராட்டம் நடத்துகிறீர்கள், முதலில் சென்று மாவட்ட கலெக்டர் அல்லது மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் புகார் அளியுங்கள், எங்கும் புகார் தெரிவிக்காமல் இது போன்று போராட்டம் நடத்தக்கூடாது என பொது மக்களிடம் பேசினார்.

    மேலும் காவல் நிலையத்திற்கு நாளை நேரில் வாருங்கள் அங்கு வந்து புகார் அளித்தால் ஆலை நிர்வாகத்தின் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனை அடுத்து அங்கிருந்த கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    இதைத்தொடர்ந்து இன்று மதியம் மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ஆலை நிர்வாகம், பொது மக்கள் சார்பில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

    • மின்தடையால் விடிய விடிய பொதுமக்கள் கடும் அவதிபட்டு வந்தனர்.
    • மின்கம்பியை சரி செய்து சீரான மின்சாரம் வழங்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள கேர்மாளம் மலைகிராமங்களுக்கு சத்தியமங்கலம் ராஜன் நகர் பகுதியில் இருந்து ஆசனூர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட மலைகிராமங்களுக்கு திம்பம் மலைபாதை வழியாக மின்சாரம் வழங்கபட்டு வந்தது.

    நேற்று முன்தினம் காலை 10 மணி முதல் மின்தடை ஏற்பட்டு உள்ளதால் மலைகிராம மக்கள் அடர்ந்த வனப்பகுதியில் மின்சாரம் இல்லாமல் இரவு முழுவதும் அவதிப்பட்டு வந்தனர்.

    மூன்றாவது நாளாக இன்றும் மின்சாரம் இன்றி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். கேர்மாளம், திங்களூர் ஊராட்சிக்கு உட்பட்ட காடட்டி, சுஜில் கரை, கோட்டமாளம், பூதாளபுரம், தொட்டி என 50 மேற்பட்ட மலைகிராமங்களில் மின்தடை ஏற்பட்டு உள்ளது.

    மின்தடையால் விடிய விடிய பொதுமக்கள் கடும் அவதிபட்டு வந்தனர். மாணவ, மாணவிகள் தேர்வுக்கு படிக்க முடியாமலும் ஊராட்சிக்கு சொந்தமான ஆழ்குழாய் கிணறு மின்சாரம் இல்லாததால் இயக்கப்படாததால் குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    செல்போன் சார்ஜ் செய்ய முடியாமல் அவசர தேவைக்கு உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். சத்தியமங்கலத்தில் இருந்து கேர்மாளம் வரை உள்ள மின்கம்பிகள் மிகவும் பழைமையானதாக இருப்பதால் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக கூறுகின்றனர்.

    எனவே மின்கம்பியை சரி செய்து சீரான மின்சாரம் வழங்கவேண்டும் என மலைகிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நிசாலை சீரமைக்க ஒதுக்கப் பட்ட நிதியை கையாடல் செய்து, சாலை முழுமை பெற்று விட்டதாக எழுத்து பூர்வமாக அதி காரிகள் பதில் கூறினார்கள்.
    • நிதியை கையா டல் செய்த அதிகாரிகள் மீது முறையான நடவடி க்கை எடுத்து தண்டிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    காரைக்காலில் போடப்ப படாத சாலைக்கு ரூ.43.27 லட்சம் செலவு கணக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் காட்டப்பட்ட தால், நிதி மோசடி செய்த அதிகாரிகள் மீது நடவ டிக்கை எடுக்கக்கோரி, கிராம மக்கள் சாலையில் செடிகளை நட்டு போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    காரைக்கால் அம்மன் கோவில் பத்து பகுதியில் சுமார் 125 குடும்பங்களும், எம்.எம்.ஜி நகரில் 155 குடும்பங்களும், பறவை பேட்டில் 26 குடும்பங்களும் உள்ளன. இப்பகுதி சாலை கள் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வந்ததின் பேரில், கடந்த 2018-ம் ஆண்டு, 3 பகுதியையும் ஒருங்கிணைத்து, ஆதி திரா விடர் நலத்துறை சார்பில், ரூ.43.27 லட்சம் செலவில் சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்ப ட்டது.

    ஆனால், 26 வீடுகள் உள்ள பறவைபேட் பகுதி யில் மட்டும் சாலை சீரமை க்கப்பட்டது. கோரிக்கை விடுத்து 4 ஆண்டுகள் ஆகியும் சாலை சீரமைக்க ப்படாததால், எம்.ஜி.ஆர். நகரைச்சேர்ந்த பூங்கொடி என்பவர், காரைக்கால் பொதுப்பணி த்துறை, நகராட்சி மற்றும் ஆதிதிரா விடர் நலத்து றைக்கு, சாலையை சீரமைப்பு குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விபரம் கேட்டார்.

    இதில், பொதுப்பணி த்துறை, நகராட்சி தங்க ளுக்கு சம்பந்த மில்லை யென பதில் கூறிய நிலையில், ஆதிதிராவிட நலத்துறை மட்டும் 2018-ல் ரூ.43.27 லட்சத்தில் சாலை போடப்பட்டுவிட்டது என பதில் அளித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இது குறித்து புகார் மனு அளித்தனர்.

    அதில் சரியான பதில் வராத காரணத்தால், கிராம மக்கள் தங்கள் பகுதி சாலையில், செடிகளை நட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தின் போது, சாலை சீரமைக்க ஒதுக்கப் பட்ட நிதியை கையாடல் செய்து, சாலை முழுமை பெற்று விட்டதாக எழுத்து பூர்வமாக பதில் கூறிய அதி காரிகள், நிதியை கையா டல் செய்த அதிகாரிகள் மீது முறையான நடவடி க்கை எடுத்து தண்டிக்க வேண்டும்.

    இல்லையேல், தொடர் போராட்டம் நடத்துவோம் என வலியுறுத்தியுள்ளனர். இச்சமவம் நடிகர் வடிவேலுவின் கிணற்றை காணோம் என்ற புகார் நகைச்சுவை ஞாபகம்படுத்துவதாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் நகைத்து வருகின்றனர்.

    • ஓவர்சீஸ் வங்கியில் பணிபுரியும் ஒருவருக்கு தமிழ் பேசத் தெரியவில்லை இதனால் ஏழை மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.
    • தமிழ் பேசத் தெரிந்த மேலாளரை நியமிக்க வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டம்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே பெருந்தரக்குடி ஊராட்சிக்கு ட்பட்ட குளிக்கரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணிபுரியும் வேறு மாநிலத்தை சேர்ந்த மேலாளர் ஒருவர் பணி புரிந்து வருகிறார்.

    இவருக்கு தமிழ் பேசத் தெரியவில்லை.

    இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் சிரமம் அடைந்து வந்தனர்.

    இங்கு கிராமப் பகுதி என்பதால் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணம் பெறக்கூடியவர்களும் ஏழை, எளிய மக்களுமே இந்த வங்கியை பயன்படு த்துவதால் அவர்களுக்கு தமிழ் தெரிந்த ஊழியர்கள் இருந்தால்தான் எளிதாக தங்களது சேவையை பெற முடியும் என்ற நிலை உள்ளது.

    இதனால் அந்த மேலா ளரை மாற்றி விட்டு தமிழ் பேசத் தெரிந்த மேலாளரை நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி வங்கி முன்பு கிராம மக்கள் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெருந்தரக்குடி ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் குளிக்கரை, தியாகராஜபுரம், பெருந்தரக்குடி, தேவர்க ண்டநல்லூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விடுதலை சிறுத்தைகள் மதிமுக உள்ளிட்ட கட்சி மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தெலுங்கு மொழி பேசும் மேலாளரை மாற்றி விட்டு தமிழ் பேசத் தெரிந்த மேலாளரை நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி கண்டன முழக்கத்தை எழுப்பினர்.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆறு மாத காலமாக போராடி வருவதாகவும், இதனை நிறைவேற்றாவிட்டால் அடுத்து வங்கிக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் எனவும் போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    மேலும் எனவே உடனடியாக தமிழ் தெரியாத மேலாளரை மாற்றி விட்டு தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் மேலாளரை நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

    • அபிராமம் அருகே அடிப்படை வசதி இல்லாமல் கிராம மக்கள் தவிக்கின்றனர்.
    • கிராம மக்கள் வீடுகளில் வசூல் செய்து மண் அடித்து சாலையை சமன் செய்துள்ளனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள வங்காருபுரம் கிராமத்தில் 1200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    15 ஆண்டுகளுக்கு மேலாக வங்காருபுரம் கிராமத்தில் இருந்து வீரசோழன் செல்லும் பிரதான சாலை 100 மீட்டருக்கு அமைக்க ப்படாமல் எல்லையை காரணம் காட்டி அதிகாரிகள் அலட்சியப் போக்குடன் செயல்படுவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.

    கிராமத்திற்குள் செல்லும் அந்த சாலையை அபிராமம் ஊராட்சி ஒன்றிய அதிகா ரிகள் இந்த எல்லை பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது என்றும், பரமக்குடி ஊராட்சி சேர்ந்த அதிகாரிகள் அபிராமம் எல்லைக்கு உட்பட்டது என்றும் கூறி மக்களை அலைக்கழிக்கின்றனர்.

    ஆனால் சாலை அமைப்ப தற்கான முழு தொகையும் எடுத்துவிட்டு 100 மீட்டர் சாலை அமைக்காமல் விட்டு சென்றுவிட்டதாக தெரிவித்தனர். மேலும் அந்த சாலை குண்டு குழியுமாக காட்சியளிக்கிறது.

    மழைக்காலங்களில் தண்ணீர் முழங்கால் அளவுக்கு தேங்கி நிற்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.கிராம மக்கள் வீடுகளில் வசூல் செய்து மண் அடித்து சாலையை சமன் செய்துள்ளனர்.

    இரவு நேரங்களில் இந்த பகுதியில் தெருவிளக்குகள் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகம் உள்ளதாகவும் அச்சப்படுகின்றனர்.

    இதுகுறித்து அதிகாரி களுக்கு பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கிராமமக்கள் குற்றம் சாட்டினர் .

    ஒரே கிராமத்திற்குள் எல்லை பிரச்சினையை காரணம் காட்டி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யாமல் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

    • கடலூர் அருகே வெள்ளப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் குண்டு சாலையில் திரண்டனர்.
    • 15 பேரை அழைத்துச் சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து கோரிக்கைகள் தொடர்பாக பேச அழைத்து சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே வெள்ளப்பாக்கத்தில் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு குப்பை கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குப்பை கிடங்கு அமைப்பது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் கிராம பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பொதுமக்கள் குப்பை கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

    இன்று காலை கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதனை தொடர்ந்து கடலூர் அருகே வெள்ளப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் குண்டு சாலையில் திரண்டனர்.

    பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக நடந்து வந்து கடலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் வைத்திருந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது-

    வெள்ளப்பாக்கம் ஊராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மருதாடு, அழகியநத்தம், இரண்டாயிர விளாகம், நத்தப்பட்டு, முள்ளி கிராம்பட்டு பகுதியில் சுமார் 40 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றோம்‌. எங்களின் குடிநீர் ஆதாரமாகவும் மற்றும் கடலூர் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ள தென்பெண்ணை ஆற்றின் அருகே மாநகராட்சி குப்பையை கொட்டுவதால் குடிநீர் பாதிப்பு ஏற்படுவதோடு மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் விவசாயத்தையும் அதனை சார்ந்து வாழும் விவசாயக் கூலி மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்.

    மேலும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் இத்திட்டத்தினை உடனடியாக கைவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனை தொடர்ந்து போலீஸ் டிஎஸ்.பி. கரிகால் பாரிசங்கர், இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுவாக வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து 15 பேரை அழைத்துச் சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து கோரிக்கைகள் தொடர்பாக பேச அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் வருகிற 9-ந்தேதி நடக்கிறது.
    • அடிப்படை தேவைகளை ஊராட்சி நிர்வாகம் செய்வார்களா? என்று நாவினிப்பட்டி கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    மேலூர்

    மேலூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த நாவினிப்பட்டி ஊராட்சியில் குடிநீர், சாலை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரவில்லை என்று கூறி இந்த பகுதி பொதுமக்கள் ஏற்கனவே நடந்த கிராம சபை கூட்டத்தின் போது வலியுறுத்தினர்.

    மேலும் கிராமசபை கூட்டத்தில் இருந்து வெளியேறி மேலூர்- காரைக்குடி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவலறிந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். அதன் பின்பும் நடத்தி மறியலை கைவிட செய்தனர்.

    இருந்த போதிலும் தங்கள் பகுதிக்கு இன்னும் குடிநீர் முறையாக வழங்க வில்லை எனக்கூறி 6 மற்றும் 7-வது வார்டு கிராமமக்கள் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா குழுவின் செயலாளர் சுரேஷ்குமார் தலைமையில் மாவட்டத் தலைவர் சக்திவேல், மாவட்ட துணைத் தலைவர் மெய்யர் முன்னிலையில் வருகிற 9-ந்தேதி நாவினிப்பட்டி ஊராட்சியில் அனைத்து அடிப்படை தேவைகளும் நிறைவேற்ற கோரி மேலூர் யூனியன் அலுவலகம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

    அப்போதாவது தங்கள் பகுதிக்கு அடிப்படை தேவைகளை ஊராட்சி நிர்வாகம் செய்வார்களா? என்று நாவினிப்பட்டி கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • கருப்பர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை நாட்டார், நகரத்தார் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள செவரக்கோட்டையில் வில்லுகாபுலி கருப்பர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக 2 நாட்கள் கால பூஜைகளாக லட்சுமி, கணபதி, நவக்கிரக ஹோமங்கள், கோ, தன பூஜை போன்ற பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு பூர்ணா குதி தீபாராதனையுடன் கும்பாபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க அபிஷேக நீர் ஊற்றினர்.

    இதில் திரளான பக்தர்கள்கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டார், நகரத்தார் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    விழா குழு ஒருங்கிணைப்பு நிர்வாகிகளாக ஊர் அம்பலம் வ.டு. நாச்சியப்பன், நாட்டு கணக்கப்பிள்ளை குமரேசன், ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் செயல்பட்டனர்.

    • காட்டுமன்னார்கோவில் அருகே நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க கிராம மக்கள் கோரிக்கை
    • இக்கிராம மக்கள் தடம் எண் 257-ல் அரசு பஸ்சினை மீண்டும் இயக்க வேண்டுமென போக்குவரத்து துறையிடம் முறையிட்டனர்..

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகில் கொண்டசமுத்திரம் என்ற உட்கிராமம் உள்ளது. இங்குள்ள மாணவர்கள், நோயாளிகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், விவசாயிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் கிராமத்தில் இருந்து வெகு தூரம் நடந்து வந்து மாமங்கலம் பஸ் நிறுத்தம் வரை சென்று தான் பல ஊர்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தடம் எண் 257-ல் ஒரு அரசு பஸ் இக்கிராமத்திற்கு இயக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பஸ் காட்டுமன்னார்கோவிலில் இருந்து கொண்டசமுத்திரம் வழியாக திருமுட்டத்திற்கு சென்று வந்தது. தொடர் மழையின் காரணமாக இந்த ஊரின் பெரிய வாய்க்காலில் மழைநீர் ஓடியது. இதில் சாலையை இணைக்கும் சிறிய பாலம் மழைநீரில் மூழ்கியது. மேலும், இதற்கு அருகாமையிலேயே புதிய பாலம் கட்டும் பணியும் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

    இதையடுத்து இந்த பஸ் கொண்டசமுத்திரம் கிராமத்திற்குள் செல்லமுடியாததால் மாற்று வழியில் இயக்கப்பட்டது. தற்போது இந்த வாய்க்காலில் நீர் குறைந்து பாலம் தெரிகிறது. இந்த பாலத்தை சீரமைத்து போக்குவரத்திற்கு ஏற்றதாக மாற்றப்பட்டது. இதையடுத்து இக்கிராம மக்கள் தடம் எண் 257-ல் அரசு பஸ்சினை மீண்டும் இயக்க வேண்டுமென போக்குவரத்து துறையிடம் முறையிட்டனர். ஆனால் இந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால் இக்கிராம மக்கள் ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில் வந்து செல்ல நீண்ட தூரம் நடந்து வந்து மாமங்கலத்தில் பஸ் ஏறி செல்கின்றனர். எனவே, காட்டுமன்னார்கோவிலில் இருந்து மாமங்கலம் கொண்டசமுத்திரம் வழியாக திருமுட்டம் செல்லும் அரசு பஸ்சினை மீண்டும் இயக்கவேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் விரைந்து எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றகிராம மக்கள் கலெக்டரிடம் மனு,

    கடலூர்:

    காட்டுமன்னார்கோவில் பூர்த்தங்குடி, தெ.நெடுஞ்சேரி ஊர் பொதுமக்கள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த னர். அந்த மனுவில் கூறியி ருப்பதாவது   காட்டுமன்னார்கோயில் பெட்ரோல் பங்க் அரு காமையிலும், காட்டு மன்னார்கோயில் நெடுஞ்சாலை ஒரத்திலும் டாஸ்மாக் கடை மற்றும் பார் அமைந்துள்ளது. இங்கு வரும் மதுபான பிரியர்கள் சாலையிலேேய வாகனங்களை நிறுத்தி விடு கின்றனர். மேலும், குடித்து விட்டு மது போதையில் கூச்சலிடுகின்றனர்.  இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அருகாமையில் உள்ள குடியிருப்பு வாசிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மாலையில் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் மாணவ, மாணவியர்கள் பெரிதும் பாதிப்படை கின்றனர். இதனால் டி.நெடுஞ்சேரி முதல் கந்தகுமாரன் வரை அதிகளவில் வாகன விபத்துக்கள் நடக்கின்றன. இந்த மதுபான கடை டி.நெடுஞ்சேரி ஊராட்சி எல்லைக்கு உட்பட்டது. இடப்பற்றாகுறை காரண மாக பூர்த்தங்குடி ஊராட்சி யில் முறை கேடாக இயங்கி வருகின்றது. இந்த டாஸ்மாக் கடையை நிரந் தரமாக எங்கள் ஊராட்சியில் இருந்து இட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


    • 6 ஆண்டுகளுக்கு முன்பாக அண்டப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவில் இருந்த தரை பாலம் சேதமடைந்தது.
    • அவர்களது சொந்த பணத்தில் பாலத்தை கட்ட முடிவு செய்தனர்

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அண்டப்பட்டு கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக அண்டப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவில் இருந்த தரை பாலம் சேதமடைந்தது. இதையடுத்து அந்த பகுதி பொதுமக்கள் முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர், பி.டி.ஒ. அலுவலகங்களில் பல முறை புகார் தெரிவித்தனர். சேதம் அடைந்த பாலத்தை சரி செய்யவில்லை என கூறப்படுகிறது.மேலும், இந்த பாலம் வழியாக சென்ற 20-க்கும் மேற்பட்டோர் பாலத்தில் விழுந்து காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இந்த நிலையில் ஊர் பொதுமக்கள் ஒன்றிய கவுன்சிலர் எழிலரசனிடம் இதுகுறித்து மனு அளித்தனர். இதையடுத்து கீழ்கூடலூர் ஊராட்சி மன்ற தலைவர் ஈச்சேரி சேகர், கவுன்சிலர் எழிலரசன் ஆகியோர் அவர்களது சொந்த பணத்தில் பாலத்தை கட்ட முடிவு செய்தனர்.அதன்படி ரூ.12 லட்சம் செலவில் பாலத்தை கட்டும் பணியை கீழ்கூடலூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் ஆகியோர் தொடங்கினர். இதையறிந்து அங்கு வந்த அதிகாரிகள் பாலம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தினார். இதனால் அப்பகுதி கிராம மக்கள் அங்கு திரண்டு அதிகாரி களிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • காவிரி குடிநீருக்கு 10 ஆண்டுகளாக கிராம மக்கள் காத்திருக்கின்றனர்.
    • நீண்டநாள் கோரிக்கையான காவிரி குடிநீர் வருவதற்கு அதிகாரி கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமம் பகுதிக்கு உட்பட்ட தரைக்குடி, புனவாசல், வல்லகுளம் ஆகிய இடங்களில் 750-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி குடிநீர் வராததால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் கிராம மக்கள் காவிரி தண்ணீ ருக்காக தொடர்ந்து காத்திருக்கின்றனர். மேலும் குடிநீரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்.

    இது தொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் கூறும்போது, தரைக்குடி, புனவாசல், வல்லகுளம் பகுதிக்கு உட்பட்ட 15 கிராம மக்கள் தண்ணீர் குடம் ரூ.15 -க்கு வாங்கி வருகிறோம். டிராக்டரில் கொண்டு வரப்படும் குடிநீரை விலைக்கு வாங்கி குடித்து வருகிறோம். அதுவும் வராவிட்டால் குடிதண்ணீருக்கு மிகவும் சிரமம் ஏற்படும். இந்த குடிநீரை குடிப்பதால் முதி யோர்கள், குழந்தைகளுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகி றது.

    காவிரி குடிநீர் வராதது குறித்து பலமுறை புகார் செய்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.கிராமத்திற்கு வரும் காவிரி குடிநீர் குழாய்களில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி றது. எனவே நீண்டநாள் கோரிக்கையான காவிரி குடிநீர் வருவதற்கு அதிகாரி கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×