என் மலர்
நீங்கள் தேடியது "போலீஸ் கமிஷனர்"
- தனியார் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களின் ஆலோசனைக்கூட்டம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது.
- 50 தனியார் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் பங்கேற்றனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் சந்தேகப்படும்படியான நபர்களை கண்காணிப்பதற்கு வசதியாக திருப்பூர் மாநகர எல்லைக்குள் உள்ள தனியார் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களின் ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது. போலீஸ் கமிஷனர் பிரபாகரன் தலைமை தாங்கினார். இதில் 50 தனியார் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கமிஷனர் பிரபாகரன் பேசியதாவது:-
லாட்ஜிகளில் உள்ளே வருபவர்கள் மற்றும் வெளியே செல்பவர்களின் பதிவேடு முறையாக பராமரிக்க வேண்டும். தினமும் தங்கி செல்பவர்களின் விவரங்களை சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அளிக்க வேண்டும்.அறையில் தங்கக்கூடிய அனைத்து வாடிக்கையாளர்களின் விபரங்களை வாங்கி சேமித்து பராமரிக்க வேண்டும்.வாடிக்கையாளர்கள் அளிக்கும் தொலைபேசி எண் சரியானதுதானா எனஉறுதி செய்ய வேண்டும்.
லாட்ஜ் வரவேற்பு அறையில்வாடிக்கையாளர்கள் முகம் தெளிவாக பதிவாகும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்தவேண்டும்.
அதேபோல் வாகன நிறுத்தும் இடங்களில் உள்ளகேமரா வாகன எண் தெளிவாக பதிவு செய்யும் வகையில் பொருத்தவேண்டும். 24x7 என்ற வகையில் கண்காணித்து பதிவுகளை பாதுகாத்து வைக்க வேண்டும்.லாட்ஜிற்கு வரும் வாடிக்கையாளர்கள் கொண்டு வரும் உடைமைகளைசோதனை செய்ய Baggage Scanner பொருத்த வேண்டும்.தனியார் தங்கும் விடுதிகளில் தங்கும் நபர்களின் முழுவிவரங்களையும் பதிவு செய்வது அவசியம். அவர்களின்அடையாள அட்டைகளைபெற வேண்டும். அதேபோல்லாட்ஜில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்கள், வேலையாட்கள்விவரங்களை அடையாள அட்டையுடன் வாங்கி வைத்து பராமரிக்க வேண்டும்.
தங்கும் விடுதிகளில் தவிர்க்க வேண்டியவை
லாட்ஜில் (சீட்டாட்டம், விபச்சாரம் மற்றும் மது அருந்த அனுமதிஅளித்தல்) ஆகிய சட்ட விரோதமான செயல்கள் எதையும் அனுமதிக்ககூடாது.லாட்ஜில் தங்கக்கூடிய நபரின் அடையாள அட்டை மட்டுமே வாங்கவேண்டும். வேறு ஒரு நபரின் அடையாள அட்டை வாங்கி வைக்ககூடாது.உரிய அடையாள அட்டை அளிக்காத நபர்களை தங்க அனுமதிக்க கூடாது.வாடிக்கையாளர்கள் லாட்ஜில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள்எதையும் வைத்திருக்க அனுமதிக்க கூடாது. இது போன்ற விதிமுறைகளை கடைபிடிக்காத லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பேசினார்.கூட்டத்தில் துணைகமிஷனர்கள், உதவிகமிஷனர்கள் பங்கேற்றனர்.
- மின்வாரியத்திலிருந்து குறுந்தகவல்களோ, போன் அழைப்புகளோ வராது.
- பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை :
சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சமீப காலமாக 'சைபர் கிரைம்' குற்றவாளிகள் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தில் புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அதன்படி பொதுமக்களின் செல்போன் எண்ணுக்கு தங்கள் வீட்டு மின் இணைப்பு இன்று இரவோடு துண்டிக்கப்படும். சென்ற மாத பில் கட்டணம் 'அப்டேட்' செய்யப்படவில்லை. உடனே மின்வாரிய அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளுங்கள் என்று ஒரு செல்போன் எண்ணையும் சேர்த்து குறுந்தகவலாக (எஸ்.எம்.எஸ்.) அனுப்புவார்கள்.
பொதுமக்களிடம் அவர்கள் செல்போனில் ரிமோட் அக்சஸ் அப்ளிகேஷன்களான Quick Support அல்லது Any Desk போன்ற செயலிகளை பதிவிறக்கம் (டவுன்லோட்) செய்ய சொல்லுவார்கள். அதன் மூலம் எதிர்முனையில் இருக்கும் பொதுமக்களின் செல்போனில் உள்ள விவரங்களை 'சைபர்' குற்றவாளிகள் எளிதாக பார்க்க முடியும். பின்னர் ரூ.10-க்கு குறைந்த அளவில் 'ரீசார்ஜ்' செய்ய சொல்லுவார்கள். அப்போது பொதுமக்கள் உள்ளிடும் வங்கி தொடர்பான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டுகளை பயன்படுத்தி குற்றவாளிகள் தங்களுக்கு தேவையான வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பிவிடுவார்கள்.
இந்த செயலிகள் மூலம் பொதுமக்களின் செல்போன் எண்ணிற்கு வரும் ஓ.டி.பி. எண்களையும் குற்றவாளிகளால் எளிதில் கண்டறிய முடியும். இதன் மூலம் வங்கி கணக்கிலிருந்து பணத்தை கொள்ளையடிப்பார்கள். எனவே பொதுமக்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று வரும் போலியான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். அந்த செல்போன் எண்களை தொடர்பு கொள்ள வேண்டாம். மின்வாரியத்திலிருந்து இதுபோன்ற குறுந்தகவல்களோ, போன் அழைப்புகளோ வராது. எனவே பொதுமக்கள் இதுபோன்ற சம்பவங்களில் கவனமுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- போலீசாரும் சமூகத்தின் ஒரு பகுதியினரே. சமூகத்தின் குறைபாடுகள், குணாதிசயங்கள் அனைத்தும் போலீ சாரிடமும் இருக்கவே செய்யும்.
- போலீசாரை மட்டும் தனியாக பிரித்துப் பார்த்து அவர்களை மட்டும் குறை சொல்வது சரியல்ல.
கோவை
போலீஸ் குடும்பத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா கோவையில் நடந்தது. இதில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.
அவர் கூறியதாவது:-
போலீசாரும் சமூகத்தின் ஒரு பகுதியினரே. சமூகத்தின் குறைபாடுகள், குணாதிச யங்கள் அனைத்தும் போலீ சாரிடமும் இருக்கவே செய்யும். அது தான் இயற்கை.
அதில் போலீசாரை மட்டும் தனியாக பிரித்துப் பார்த்து அவர்களை மட்டும் குறை சொல்வது சரியல்ல. ஒரு குழந்தையிடம் இருக்கும் எதிர்மறையான விஷயங்களையே மீண்டும், மீண்டும் சுட்டிக்காட்டி சொல்லி கொண்டிருந்தால் அந்த குழந்தை உளவியல் ரீதியாக பாதிக்கப்படும். செயல் திறனும் நிச்சயம் பாதிக்கும்.
நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தில் ஒரு விஷயம் எனக்கு வருத்தம் அளிப்பதாக இருந்தது. அந்த சம்பவம், 1980-களில் நடந்தது. அந்த படத்தில் இடம்பெற்றிருந்த சம்பவம், எந்த காலக்கட்டத்தில் நிகழ்ந்தது என்பதை குறிக்கும் வரலாற்று கண்ணோட்டத்துடன் படம் எடுத்திருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். அதை விடுத்து எப்போதோ நடந்த ஒரு விஷயத்தை இன்றைய காலக்கட்டத்தில் நடப்பது போல ஒரு பிரமையை ஏற்படுத்துவது, மக்களை நம்ப வைப்பது எவ்வளவு பெரிய மோசடி என்பதை நாம் உணர வேண்டும்.
இவ்வளவு கொடுமையானதா போலீஸ் துறை என்றும் இன்னும் மாறவே இல்லையா என்றும் பலருக்கு தோன்றுகிறது. இத்தகையாக தவறான எண்ணம் ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மதுரையில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 100 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
- போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆகியோர் பாது காப்பு பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
மதுரை
ஆங்கில புத்தாண்டுக்கு 13 நாட்களே உள்ளன. இதையொட்டி மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆகியோர் பாது காப்பு பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
ஆங்கில புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு பழைய குற்றவாளிகள் மீண்டும் குற்ற சம்பவங்க ளில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
மதுரை மாவட்டத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறியில் தொடர்புடைய சுமார் 1000 பேர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. அவர்கள் ஜாமீனில் விடு தலை செய்யப்பட்டுள்ள னர். அவர்கள் மீண்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபடு கின்றனரா? என்பதை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு தினத்தில் குற்ற சம்பவங்க ளில் மீண்டும் ஈடுபட தயா ராகி வரும் ரவுடிகளில் பலரை கைது செய்ய போலீசார் முடிவு செய்த னர்.
இதற்கான பணி கடந்த ஒரு மாதமாக தொடங்கி நடந்து வருகிறது. மதுரை மாவட்டம் ஒத்தக்கடை, கருப்பாயூரணி, வாடிப்பட்டி, திருமங்கலம், டி.கல்லுப்பட்டி, மாநகரில் தல்லாகுளம், செல்லூர், தெப்பக்குளம் உள்பட பல்வேறு போலீஸ் நிலை யங்களில் இருந்து சுமார் 100 ரவுடிகள் இதுவரை கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்கு கள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர தப்பி ஓடிய மேலும் பலரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
- ஆவடி போக்குவரத்து பிரிவு கூடுதல் கமிஷனராக பணியாற்றிய விஜயகுமாரி சேலம் மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
- சேலம் மாநகர காவல் துறையில் பணிபுரியும் பெண்கள் இடையே வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்:
சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா நேற்று முன்தினம் சென்னை தலைமை இட ஆவடி போக்குவரத்து பிரிவு கூடுதல் கமிஷனராக மாறுதல் செய்யப்பட்டார். ஆவடி போக்குவரத்து பிரிவு கூடுதல் கமிஷனராக பணியாற்றிய விஜயகுமாரி சேலம் மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
சேலம் மாநகர காவல்துறையில் முதல் கமிஷனரான ஜெகநாதன் தொடங்கி அடுத்தடுத்து ஆண்களே கமிஷனராக நியமிக்கப்பட்டனர். 2006-ல் முதல் பெண் கமிஷனராக சீமா அகர்வால் நியமிக்கப்பட்டார்.
அவருக்கு பின், 13 ஆண்கள் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் சேலம் மாநகர போலீசில், 2-ம் முறையாக, 16 ஆண்டுகளுக்கு பிறகு, ஆவடி போக்குவரத்து, தலைமை இட கூடுதல் கமிஷனர் விஜயகுமாரி, சேலம் மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது சேலம் மாநகர காவல் துறையில் பணிபுரியும் பெண்கள் இடையே வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.
- மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், மனவளக்கலை பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
- மெஜஸ்டிக் குழும நிர்வாக இயக்குனர் கந்தசாமி உட்பட பலர் பேசினர்.
திருப்பூர்:
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி, உலக சமுதாய சேவா சங்கம், சாமுண்டிபுரம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், மனவளக்கலை பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். ரவீந்திரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாநகர் போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு சிறப்புரை ஆற்றினார் அப்போது அவர் பேசியதாவது:-
''ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு தினமும், 30 நிமிடமாவது யோகா பயிற்சி செய்ய வேண்டும், யோகாவால் மனமும், உள்ளமும் துாய்மையாகும்; ஞாபகசக்தியை அதிகரிக்கும். பயிற்சி முடித்த மாணவர்கள் யோகா பயிற்சி எடுக்க தவறக்கூடாது என்றார்.
அதன்பின், பயிற்சி முடித்த, 650 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மெஜஸ்டிக் குழும நிர்வாக இயக்குனர் கந்தசாமி உட்பட பலர் பேசினர்.
என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், பேராசிரியர் சங்கமேஸ்வரன் நிகழ்வை ஒருங்கிணைத்தனர். பேராசிரியர் பாரதி நன்றி கூறினார்.
- சென்னை காவல்துறையை நவீனப்படுத்த பல்வேறு புதிய திட்டங்கள் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
- டிரோன் மூலமாக போக்குவரத்து நெரிசலை கண்காணித்து,சரி செய்யும் வசதியும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
சென்னை:
சென்னையில் டிரோன் கேமரா மூலம் போக்குவரத்து நெரிசலை கண்காணித்து சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் தெரிவித்தார்.
சென்னையில் ரிமோட் மூலம் செயல்படும் நவீன சிக்னல்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் நேற்று தொடங்கி வைத்தார்.சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் சந்திப்பில் நடந்த இந்த விழாவில் அவர் பேசுகையில்,சென்னை போக்குவரத்து போலீசுக்கு பல்வேறு நவீன வசதிகள் விரைவில் செய்து கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.அவர் கூறியதாவது:-
சென்னை காவல்துறையை நவீனப்படுத்த பல்வேறு புதிய திட்டங்கள் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.அதில் ஒரு திட்டம்தான் ரிமோட் மூலம் இயங்கும் சிக்னல் ஆகும்.அவசர வேளைகளில் சாலையில் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் வரும்போது,சிக்னலை மாற்றி வழி விடவேண்டும்.போக்குவரத்து போலீசார் அருகில் இல்லாதபோது,சிக்னலை மாற்றுவதில் சிரமம் ஏற்பட்டது.இதனால் இதுபோன்ற நேரத்தில் ரிமோட் மூலம் சிக்னலை உடனே மாற்றி விடலாம்.அதனால் இந்த வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.இது தவிர கார்,மோட்டார்சைக்கிள் போன்ற வாகனங்கள் அதிவேகமாக சென்றால்,அவற்றின் வேகத்தை கணக்கிட்டு அபராத தொகை தொகை விதிக்கும் 6 கருவிகளின் திரைகளும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் டிரோன் மூலமாக போக்குவரத்து நெரிசலை கண்காணித்து,சரி செய்யும் வசதியும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. திருட்டு வாகனங்களை கண்டுபிடிக்கும் நவீன வசதியும் வரப்போகிறது. கோடைகாலம் தொடங்கி விட்டதால், போக்குவரத்து போலீசாருக்கு இலவசமாக குளிர்ச்சியான மோர் தினமும் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் கபில்குமார் சி சரத்கர்,இணை கமிஷனர் மயில்வாகனன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
- சென்னையில் 4 உதவி போலீஸ் கமிஷனர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- தலைமை அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் புலனாய்வு உதவி கமிஷனராக பணிபுரியும் கண்ணன் வேப்பேரி போலீஸ் உதவி கமிஷனராகவும் மாற்றப்பட்டு உள்ளார்.
சென்னை:
சென்னை போலீஸ் காவல் ஆணையரகம் விடுத்து உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை போலீஸ் கமிஷனர் எல்லைக்கு உட்பட்ட தரமணி உதவி கமிஷனராக பணியாற்றும் ஜீவானந்தம் தெற்கு பகுதி தீவிர குற்றத் தடுப்புப் பிரிவு உதவி கமிஷனராகவும், தாமஸ் மவுண்ட் உதவி கமிஷனர் அமீர் அகமது தரமணிக்கும், சிலை கடத்தல் பிரிவு உதவி போலீஸ் கமிஷராக (சி.ஐ.டி.) இருக்கும் மோகன் ராயப்பேட்டை உதவி கமிஷனராகவும் தலைமை அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் புலனாய்வு உதவி கமிஷனராக பணிபுரியும் கண்ணன் வேப்பேரி போலீஸ் உதவி கமிஷனராகவும் மாற்றப்பட்டு உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- பள்ளிகளின் அருகே காலை மற்றும் மாலையில் பள்ளி நேரங்களில் போக்குவரத்து காவலர்கள் பணியமர்த்தப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்படும்.
- சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் சாலை விதிகளை பின்பற்றி சாலையின் ஒரமாக பாதுகாப்பாக செல்ல வேண்டும்.
திருநின்றவூர்:
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. 45 நாட்கள் நீண்ட விடுமுறைக்கு பின்னர் பள்ளிக்கு செல்வதால் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இன்று காலை வழக்கமான உற்சாகத்தில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். அவர் களை பள்ளி ஆசிரியர்-ஆசிரியைகள் வரவேற்றனர்.
ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பள்ளிகள் திறப்பையொட்டி போக்குவரத்து நெரிசலை சரி செய்ய போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டு உள்ளார். மேலும் மாணவர்கள் பஸ்களின் படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். பாதுகாப்பாக சாலையை கடக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக ஆவடி போலீஸ் கமிஷனர் அருண் கூறியதாவது:-
ஆவடி பெருநகரக் காவல் எல்லைக்குட்பட்ட முக்கிய பிரதான சாலைகள் மற்றும் இதர உட்புற சாலைகளில் 478 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கிவருகின்றன.
பள்ளிகளில் இயங்கி வரும் வாகனங்களின் தற்போதைய இயக்கநிலை குறித்தும் வாகனங்களின் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் பொறுத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராக்களின் செயல்பாடுகள், வேகக்கட்டுபாடு, அவசர வழி கதவுகள் ஆகியவைகள் காவல்துறை மற்றும் போக்குவரத்து துறையினரால் ஆய்வு செய்யப்பட்டு பள்ளி நிறுவனங்களுக்கு தக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிகளின் அருகே காலை மற்றும் மாலையில் பள்ளி நேரங்களில் போக்குவரத்து காவலர்கள் பணியமர்த்தப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்படும்.
இதர உள் சாலைகளில் இயங்கிவரும் பள்ளிகளுக்கு அப்பள்ளிகளில் செயல்பட்டுவரும் ஆர்.எஸ்.பி. மற்றும் பெற்றோர் ஆசிரியர்கள் சங்கத்தினர் மூலம் பள்ளி நேரங்களில் பள்ளி மாணவ மாணவிகள் பாதுகாப்பாக சென்றுவர போக்குவரத்தினை சீர்செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றிச்செல்லும் தனியார் ஆட்டோக்கள், வேன்களின் ஓட்டுநர்களுக்கு பள்ளி மாணவ-மாணவி களை பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்துச் சென்று வரவேண்டும் என்றும் சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் பஸ்களில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்த்தும், சாலைகளில் பாதசாரிகள் கடக்கும் இடத்தில் மட்டும் சாலையை கடந்தும் பாதுகாப்பாக பள்ளி சென்று வர வேண்டும். சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் சாலை விதிகளை பின்பற்றி சாலையின் ஒரமாக பாதுகாப்பாக செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாநகர போலீஸ் கமிஷனர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
- கடந்த 6 மாதங்களில் மட்டும் 28 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையிலும் கஞ்சா விற்பனையை முற்றிலும் தடுக்கும் வகையிலும் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ஆண்டிபாளையம் பகுதியில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ததாக சரவணன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.இவர் தொடர்ந்து பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருவதால் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவிட்டார். அதன்படி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான ஆணையை கோவை சிறையில் உள்ள சரவணனிடம் வழங்கப்பட்டது.
திருப்பூர் மாநகரில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 28 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- 20-க்கும் மேற்பட்ட போலீஸ் சோதனை சாவடிகளை பார்வையிட்டார்.
- முக்கிய பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்கள் உபயோகத்தில் உள்ளனவா? என்று கேட்டறிந்தார்.
திருநின்றவூர்:
ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர். இவர் நேற்று இரவு 11 மணி முதல் இன்று அதிகாலை வரை ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். அம்பத்தூர் பஸ் நிலையத்தில் தொடங்கி அதிகாலை 3 மணி வரை விடிய, விடிய 20-க்கும் மேற்பட்ட போலீஸ் சோதனை சாவடிகளை பார்வையிட்டார்.
ஆவடி, அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, செங்குன்றம், பூந்தமல்லி, நெமிலிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கமிஷனர் சங்கர் ரோந்து பணியில் ஈடுபட்டு போலீசாரின் இரவுநேரக காவல் பணியை பார்வையிட்டார்.
அப்போது பணியில் இருந்த போலீசாரிடம் பாதுகாப்பு மற்றும் குறைகள் குறித்து கமிஷனர் கேட்டறிந்தார். மேலும் முக்கிய பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்கள் உபயோகத்தில் உள்ளனவா? என்று கேட்டறிந்தார்.
சமீபத்தில் செங்குன்றம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட போலீஸ் பூத்தில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என்று கமிஷனர் சங்கர் உத்தரவிட்டார். கமிஷனர் சங்கரின் இரவு நேர ஆய்வு காரணமாக போலீசார் விடிய, விடிய பரபரப்பாக காணப்பட்டனர்.
- போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- காளிமுத்து என்பவர் குட்கா வியாபாரிகளிடம் தொடர்பு வைத்துள்ளதாக புகார் எழுந்தது.
திருச்சி:
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக காமினி பொறுப்பேற்றது முதல் பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் சமூக விரோத செயல்களை தடுக்கவும், சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வரும் காளிமுத்து என்பவர் குட்கா வியாபாரிகளிடம் தொடர்பு வைத்துள்ளதாக புகார் எழுந்தது.
அதைத் தொடர்ந்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் காமினி போலீஸ்காரர் காளி முத்துவை அதிரடியாக சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.