என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குஜராத் தேர்தல்"

    • குஜராத் மாநிலத்தின் சட்டசபை தேர்தல் தேதியை இன்று தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
    • தேர்தல் அறிவிப்பு தொடர்பாக இன்று பகல் 12 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்களை சந்திக்கிறார்.

    குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இமாச்சல பிரதேசத்தின் சட்டசபை தேர்தலுக்கான தேதியை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 14-ந் தேதி அறிவித்தது.

    அதன்படி இமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் டிசம்பர் 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    ஆனால் குஜராத் மாநிலத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இரு மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவதற்கு 40 நாட்கள் இடைவெளி உள்ளது.

    தேர்தல் விதிகளின்படி, ஒரு மாநில தேர்தலின் முடிவு மற்றொன்றை பாதிக்காத வகையில், இரண்டிற்கும் குறைந்தபட்சம் 30 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் சட்டசபை தேர்தல் தேதியை இன்று தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து இன்று பகல் 12 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்களை சந்தித்து அறவிக்க உள்ளார்.

    • குஜராத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படுகிறது.
    • ஆம் ஆத்மி கட்சி, இந்த முறை அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துகிறது.

    புதுடெல்லி:

    டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி கட்சி தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக அந்த மாநிலத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில் குஜராத்தில் வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி மற்றும் 5ம் தேதி என இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 8ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தல் தேதியை அறிவித்தவுடன் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.

    தனது கட்சி நிச்சயமாக வெற்றிபெறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்தார். அத்துடன் குஜராத் மக்களுக்கு தனது வேண்டுகோளையும் முன்வைத்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், "நான் உங்கள் சகோதரன், உங்கள் குடும்பத்தின் ஒரு அங்கம். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். இலவச மின்சாரம் தருகிறேன்; பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை கட்டுகிறேன். உங்களை அயோத்தியின் ராமர் கோயிலுக்கு அழைத்துச் செல்கிறேன்" என கெஜ்ரிவால் கூறி உள்ளார்.

    தற்போதைய சூழ்நிலையில், குஜராத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 90 முதல் 95 தொகுதிகள் வரை கைப்பற்றுவோம். மேலும் இந்த வேகம் தொடர்ந்தால் 140 முதல் 150 தொகுதிகள் வரை வெற்றி பெறுவோம் என ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் கூறியிருக்கிறார்.

    கடந்த தேர்தலில் 30 தொகுதிகளில் போட்டியிட்டு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத ஆம் ஆத்மி கட்சி, இந்த முறை அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துகிறது. 

    • குஜராத் தேர்தலில் வெற்றி பெறுவது என்பது அங்கு ஆளும் பா.ஜ.க.வுக்கு மானப்பிரச்சினை.
    • ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் குஜராத் இடம்பெறவில்லை

    அறிவிக்கப்பட்டாயிற்று, குஜராத் சட்டசபை தேர்தல் திருவிழா. நாளை வேட்புமனுதாக்கல் தொடங்குகிறது.

    திரைப்படங்களுக்கு பூஜை போடுகிற நாளிலேயே படம் விலை போய்விடுகிறமாதிரி, தேர்தல் அறிவிப்பு வெளியான சூட்டிலேயே வெற்றி யாருக்கு என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.

    182 இடங்களை கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவது என்பது அங்கு ஆளும் பா.ஜ.க.வுக்கு மானப்பிரச்சினை. இன்னும் ஒன்றரை ஆண்டு காலத்துக்குள் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், இங்கு வெற்றி வாகை சூடி, 1995-ம் ஆண்டு தொடங்கி சுவைத்து வருகிற வெற்றிக்கனியை மீண்டும் சுவைத்துவிட பா.ஜ.க. துடிக்கிறது.

    ஆட்சியை பறிகொடுத்து கால் நூற்றாண்டு கடந்து விட்டது, இந்த முறையாவது வெற்றி பெற்று, ஆட்சியைப்பிடித்து, அடுத்த பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அஸ்திவாரம் போட நினைக்கிறது காங்கிரஸ்.

    ஆனால் டெல்லி, பஞ்சாபில் வெற்றி பெற்று, இப்போது ஆம் ஆத்மியின் பார்வை குஜராத் பக்கம் திரும்பி இருக்கிறது. 2024 தேர்தலுக்கு பின்னர் இந்தியாவை ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக விஸ்வரூபம் எடுக்க வேண்டும் என்று கனவு வளர்த்து களத்தில் குதிக்கிறது, கெஜ்ரிவாலின் கட்சி.

    மும்முனைப் போட்டி தேர்தல் களத்தில் அனல் பறக்க வைக்கும் என்பதில் சந்தேகத்துக்கு அணுவளவும் இடம் இல்லை. இந்த மோதலில் வெற்றி யாருக்கு என்பதே நாட்டின் பேசுபொருளாக மாறப்போகிறது.

    "எங்கள் கட்சியே வெற்றி பெறும். இரட்டை என்ஜின் அரசு மீண்டும் அமையும். பிரதமர் மோடி தலைமையில் மாபெரும் வெற்றி பெறுவோம்" என்று தேர்தல் அறிவிப்பு வெளியான கணத்திலேயே மார் தட்டி இருக்கிறார், பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா.

    எந்தவொரு ஆட்சியும் 10 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கிறபோது, அதற்கு எதிரான மனநிலை மக்களிடம் ஏற்படுவது வாடிக்கை. இப்போது அந்த வகையில் குஜராத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராய் திரும்பியுள்ள பிரச்சினைகள் உண்டு.

    விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பில்கிஸ்பானு கும்பல் கற்பழிப்பு குற்றவாளிகள் விடுவிப்பு, மோர்பி பால விபத்து, அரசு வேலைவாய்ப்பு தேர்வு வினாத்தாள் கசிந்துவிடுவதும் தேர்வு ஒத்திவைப்பும், கடைக்கோடி பகுதிகளில் சுகாதார வசதி-அடிப்படை கல்வி வசதியின்மை, மழைவெள்ளத்தில் மூழ்கிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்காமை, சரியான சாலை வசதிகள் இன்மை, அதிகபட்ச மின்கட்டணம், அரசு திட்டங்களுக்கு நில எடுப்பில் அதிருப்தி... இப்படி பா.ஜ.க. அரசுக்கு எதிரான அம்சங்கள் அணிவகுக்கின்றன.

    குஜராத்தை சேர்ந்தவர் நாட்டின் பிரதமர் என்ற 'டிரம்ப் கார்டு' கை கொடுக்கும், மத்தியிலும், மாநிலத்திலும் இரட்டை என்ஜின் அரசு என்னும் பிரசாரம் வெற்றிதரும் என்று முழுமையாய் நம்புகிறது பா.ஜ.க.

    மீண்டும் ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் காங்கிரசின் கனவுக்கு காரணங்கள் உண்டு.

    காந்தி-நேரு குடும்பத்தில் இருந்து காங்கிரஸ் விடுவிப்பு, காங்கிரஸ் கட்சியின் தலைவராக அரை நூற்றாண்டுக்குப் பிறகு முதல்முறையாக மல்லிகார்ஜூன கார்கே பதவி ஏற்பு, இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் வாக்குவங்கி, 15 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வாக்குறுதி போன்றவை இந்த முறை கண்டிப்பாய் கைகொடுக்கும், வெற்றி தேடித்தரும் என்பது காங்கிரசின் நம்பிக்கை.

    ஆனால் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் குஜராத் இடம்பெறவில்லை; சோனியா-ராகுல் பிரசாரம் செய்வார்களா என்பது கேள்விக்குறி; முன்னிலைப்படுத்துவதற்கு கட்சியில் எழுச்சிமிக்க தலைவர்கள் குஜராத்தில் இல்லை என்பதெல்லாம் பின்னடைவுகள்.

    பா.ஜ.க., காங்கிரசுடன் மல்லு கட்டப்போகிறது, கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி. இந்தக் கட்சிக்கும் ஆட்சியை கைப்பற்றிவிடும் ஆசை இருக்கிறது. நாங்கள் மாறுபட்ட சக்தி என்னும் பிரசாரம், இலவச மின்சாரம்... வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்... 18 வயதான பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை என வாக்குறுதிகள் கைகொடுக்கும் என்று ஆம் ஆத்மி நம்புகிறது. இலவச வாக்குறுதிகளை குஜராத் மக்கள் வரவேற்பார்களா, மாட்டார்களா என்பது பட்டிமன்ற விவாதப்பொருள்.

    ஆனால் பிரதமர் மோடி தேர்தல் இலவசங்களுக்கு எதிராக உரத்த குரல் எழுப்பும்போது, மக்களிடம் இந்த இலவச வாக்குறுதிகள் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று மறுக்கவும் முடியாது. பொருளாதார ரீதியில் நலிவுற்ற மக்களிடம் இது வரவேற்பை பெற்று ஓட்டு வங்கியாக மாறுமா என்பதெல்லாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய அம்சங்கள்.

    அதே நேரத்தில் குஜராத் மாநில அரசியலில் ஆம் ஆத்மி கத்துக்குட்டி, குஜராத்தில் ஆம் ஆத்மியில் ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லை, ஓட்டு வங்கி பெயருக்குகூட இல்லை என்பது பாதகமான அம்சங்கள். ஆழம் தெரியாமல் காலை விட்டு தோல்வி அடைந்தால், அது ஆம் ஆத்மி இனி எடுக்கும் சோதனை முயற்சிகளுக்கு பின்னடைவுகளை ஏற்படுத்தி விடும் வாய்ப்பும் இருக்கிறது.

    வெற்றி யாருக்கு?

    மத்தியிலும் மாநிலத்திலும் இரட்டை என்ஜின் என்கிற பா.ஜ.க. வாதம், அந்தக்கட்சியின் வெற்றிக்கு அஸ்திவாரம். கட்சிக்கு தலித் தலைமை, வேலை வாய்ப்பு வாக்குறுதிகள், ஆட்சியைப் பறிகொடுத்து கால் நூற்றாண்டு என்ற அனுதாப அலை ஆகியவை காங்கிரசின் வெற்றிக்கு அஸ்திவாரமாக அமையலாம். ஆம் ஆத்மி மாற்றத்துக்கான அரசியல் என்ற வாதம் அதன் வெற்றிக்கு அஸ்திவாரமாக அமையக்கூடும்.

    கடைசி நேர மாற்றங்கள், அதிரடிகள், பிரசாரங்கள் என்ன விதமான அலையை ஏற்படுத்தும் என்பதையெல்லாம் கவனிக்க வேண்டியதிருக்கிறது.

    டிசம்பர் 8 தான் வெற்றியை தீர்மானிக்கும். ஆமாம். அன்றுதான் ஓட்டு எண்ணிக்கை.

    • குஜராத் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி கட்சி தீவிரம் காட்டி வருகிறது
    • தேர்தல் தேதியை அறிவித்தவுடன் ஆம் ஆத்மி கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.

    புதுடெல்லி:

    பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி மற்றும் 5ம் தேதி என இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படுகிறது. 8ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தல் தேதியை அறிவித்தவுடன் ஆம் ஆத்மி கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.

    குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி நிச்சயமாக வெற்றிபெறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்தார். இந்த முறை அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த உள்ளார். இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக இசுதன் காத்வி அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சி சார்பில் நடத்தப்பட்ட சர்வேயின் அடிப்படையில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி கட்சி தீவிரம் காட்டி வருகிறது.

    • குஜராத் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி கட்சியும் தீவிரம் காட்டி வருகிறது.
    • தேர்தல் தேதியை அறிவித்தவுடன் அரசியல் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.

    புதுடெல்லி:

    குஜராத் மாநிலத்தில் டிசம்பர் மாதம் 1 மற்றும் 5-ம் தேதி என இரு கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடத்தப்படுகிறது. 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தல் தேதியை அறிவித்ததும் அரசியல் கட்சியினர் உற்சாகமடைந்து உள்ளனர்.

    ஆம் ஆத்மி கட்சியின் முதல் மந்திரி வேட்பாளராக இசுதன் காத்வி அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சி சார்பில் நடத்தப்பட்ட சர்வேயின் அடிப்படையில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், குஜராத் மாநில தேர்தலில் போட்டியிடும் 43 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலம் குஜராத் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாளை பிற்பகல் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
    • மாலையில் பாவ் நகரில் நடைபெறும் வெகுஜன திருமண விழாவில் பங்கேற்கிறார்.

    அகமதாபாத்:

    பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. 8ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில், வல்சாத் மாவட்டத்தில் நாளை பிற்பகல் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றுகிறார். அதன்பின்னர், மாலையில் பாவ் நகரில் நடைபெறும் வெகுஜன திருமண விழாவிலும் பங்கேற்கிறார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பிரதமர் மோடி தனது சொந்த மாநிலத்திற்கு முதல் முறையாக பயணம் மேற்கொள்கிறார். இத்தகவலை பாஜக செய்தித் தொடர்பாளர் யக்னேஷ் தவே தெரிவித்துள்ளார்.

    • பா.ஜ.க. ஆளும் குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 என இரு கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
    • தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பிரதமர் மோடி சொந்த மாநிலத்திற்கு இன்று பயணம் மேற்கொள்கிறார்.

    அகமதாபாத்:

    பா.ஜ.க. ஆளும் குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய நாட்களில் இரு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

    இதற்கிடையே, முன்னாள் மந்திரியான ஜெய் நாராயண் வியாஸ் பா.ஜ.க.வில் இருந்து விலகினார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தினை மாநில பா.ஜ.க. தலைவருக்கு அனுப்பிவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலத்திற்கு முதல் முறையாக இன்று பயணம் மேற்கொள்கிறார்.

    இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளரான ஹிமான்ஷு வியாஸ் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.

    • குஜராத் மாநிலத்தில் அடுத்த அரசை ஆம் ஆத்மி கட்சி அமைக்கும்.
    • தேர்தலுக்கு முன்பாக பா.ஜ.க.வையும் பின்னுக்கு தள்ளி விடுவோம்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், 182 இடங்களை கொண்ட சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

    டிசம்பர் 1, 5-ந் தேதிகளில் நடைபெற உள்ள இந்த தேர்தலில் வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கி உள்ளது.

    இங்கு 1995-ம் ஆண்டு முதல் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பா.ஜ.க. இந்த முறையும் வெற்றி பெற துடிக்கிறது. காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை கைப்பற்ற போராடுகிறது.

    இந்த நிலையில், புதிதாக அரவிந்த் கெஜ்ரிவால் தனது ஆம் ஆத்மி கட்சியையும் இந்த தேர்தல் களத்தில் இறக்குகிறார். எனவே இப்போதே தேர்தல் களத்தில் சூடு பறக்கத்தொடங்கி உள்ளது.

    இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் டி.வி. சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்து இருக்கிறார். அந்த பேட்டியில் அவர் கூறி இருப்பதாவது:-

    ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகினால் டெல்லி முதல்-மந்திரி ஆக்குவதாகக்கூறி மணிஷ் சிசோடியாவிடம் பா.ஜ.க. பேரம் பேசியது. ஆனால் அவர் மறுத்து விட்டார்.

    இந்த நிலையில், அந்தக் கட்சியினர் இப்போது என்னை நாடினார்கள். குஜராத் சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடாமல் விலகிக்கொண்டால், நாங்கள் சத்யேந்தர் ஜெயின், மணிஷ் சிசோடியா ஆகிய இருவரையும் விட்டு விடுகிறோம். அவர்கள் மீதான எல்லா வழக்குகளையும் கைவிட்டு விடுகிறோம் என பேரம் பேசினார்கள்.

    யார் இந்த பேரத்தை பேசியது என கேட்கிறீர்கள். எனக்கு சொந்தமான ஒருவரின் பெயரையே.... நான் எப்படி சொல்ல முடியும்? அவர்கள் மூலமாகவே பேரம் வந்தது... பாருங்கள்... அவர்கள் நேரடியாக என்னை அணுகவில்லை. அவர்கள் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு, இன்னொருவருக்கு, இன்னொருவருக்கு என வந்து கடைசியில் ஒரு நண்பர் வழியாக வந்தார்கள். பின்னர் செய்தி உங்களுக்கு வந்தடைகிறது.

    குஜராத் சட்டசபை தேர்தலிலும், டெல்லி மாநகராட்சி தேர்தலிலும் தோற்றுவிடுவோம் என்று பா.ஜ.க.வுக்கு பயம் வந்து விட்டது. எங்கள் கட்சியைத் தோற்கடிக்க எல்லா முயற்சிகளையும் எடுத்துள்ளனர்.

    மணிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் என எங்கள் கட்சித்தலைவர்கள் இருவர் மீதும் போடப்பட்ட வழக்குகள், ஜோடிக்கப்பட்ட வழக்குகள் ஆகும்.

    குஜராத் மாநிலத்தில் அடுத்த அரசை ஆம் ஆத்மி கட்சி அமைக்கும். எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 5 இடங்களுக்கும் குறைவாகத்தான் கிடைக்கும்.

    எங்கள் கட்சி ஏற்கனவே 2-வது கட்சியாக முன்னிலை பெற்றுள்ளது. தேர்தலுக்கு முன்பாக பா.ஜ.க.வையும் பின்னுக்கு தள்ளி விடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கெஜ்ரிவாலின் இந்த குற்றச்சாட்டு, அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பாஜக எவ்வளவு சீட் வாங்க போகிறது என்பதை தீர்மானிக்கும் தேர்தல் அல்ல இது.
    • பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான மணிநகரில் பிரச்சாரம் செய்ய உள்ளேன்.

    மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாவது:-

    பிரதமர்  மோடி, 11ந் தேதி மதியம் 1.50 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார். பின்னர் பிற்பகல் 2.20 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார். பிரதமர் மோடிக்கு காந்தி கிராமத்தில் பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படும்.

    காந்தி கிராம பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று விட்டு 4.30 மணிக்கு பிரதமர் விசாகப்பட்டினம் புறப்பட்டு செல்கிறார். மகாத்மா காந்தி 75 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த இந்த கிராம பல்கலைக்கழகத்திற்கு வரவேண்டும் என்ற வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு பிரதமர் வருகிறார்.

    குஜராத் சட்டசபைத் தேர்தலில் இந்த முறை, பாஜக சரித்திரத்தில் எவ்வளவு சீட் ஜெயிச்சு இருக்கிறதோ அதை விட ஒரு சீட் அதிகமாக ஜெயிக்கும். தமிழக பாஜக தலைவர்கள் பிரச்சாரத்திற்கு குஜராத் செல்கிறார்கள். குறிப்பாக நான் பிரதமரின் சொந்த தொகுதியான மணிநகரில் பிரச்சாரம் செய்ய உள்ளேன். அகமதாபாத்தில் உள்ள அந்த தொகுதியில் 35 ஆயிரம் தமிழர்கள் உள்ளனர். பரோடா உள்பட பல்வேறு பகுதிகளிலும் பாஜக மூத்த தலைவர்களும் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

    இந்த முறை குஜராத் தேர்தலில் பாஜக இமாலய வெற்றி பெறும். அதேபோல் இமாச்சல் பிரதேசத்திலும் பாஜக மிகப் பெரிய வெற்றியை பெறும். குஜராத்தல் இரண்டாவது மூன்றாவது இடம் யாருக்கு என்பதுதான் இப்போது போட்டி. காங்கிரஸ் இடத்தை ஆம் ஆத்மி பிடிக்குமா? அதுவும் குறிப்பாக தற்போது நடைபெற்று முடிந்த 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பல தொகுதிகளில் காங்கிரஸ் டெபாசிட் வாங்கவில்லை.

    அதை பார்க்கும் போது காங்கிரஸ் எப்படி பின்னோக்கி சென்றிருக்கிறது என்பது தெரிகிறது. அதனால் குஜராத் தேர்தல் என்பது பாஜக எவ்வளவு சீட் வாங்க போகிறது என்பதை தீர்மானிக்கும் தேர்தல் அல்ல. பல ஆண்டு காலமாக அங்கு ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சிக்கு குஜராத் தேர்தலில் இடமிருக்கிறதா, இரண்டு மூன்று இடங்களிலாவது அவர்கள் ஜெயிப்பார்களா என்பதை இந்த தேர்தல் தீர்மானிக்கப் போகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இந்தாண்டு இறுதியில் குஜராத் மாநிலத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
    • குஜராத் தேர்தலுக்காக சி.ஏ.ஏ, என்.ஆர்.சியை பாஜக பயன்படுத்துகிறது என மம்தா பானர்ஜி குற்றம் சுமத்தினார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம், கிருஷ்ணாநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    தேர்தல் வரும் போது எல்லாம் பா.ஜ.க. சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி.யை அமல்படுத்துவோம் என்று பேசுகிறது. அடுத்த மாதம் குஜராத் மாநிலத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இன்றும் ஒன்றரை ஆண்டுகளில் பாராளுமன்ற தேர்தல் வர உள்ளது. எனவே பா.ஜ.க. மீண்டும் சி.ஏ.ஏ.வை பற்றி பேசுகிறது.

    நாட்டின் குடிமக்கள் யார் என்று முடிவு செய்வதற்கு பா.ஜ.க. யார்? மதுவா சமூகத்தினர் இந்தியாவின் குடிமக்கள் ஆவார்கள். பா.ஜ.க. மேற்கு வங்காளத்தின் வடக்கு பகுதிகளில் உள்ள ராஜ்பன்சீஸ் மற்றும் கூர்கா இனத்தவர்களை தூண்டிவிட்டு பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயல்கிறது. மேற்கு வங்காளத்தைப் பிரிக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

    வரும் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க.வால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. கடந்த 2019 ஆம் ஆண்டு நாட்டில் இருந்த அரசியல் சூழல், தற்போது மாறிவிட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு பா.ஜ.க. பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் ஆட்சியில் இருந்தது. ஆனால், இப்போது இல்லை. பல மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியில் இல்லை. பா.ஜ.க. பல மாநிலங்களில் ஏற்கனவே இறுதி நிலையை எட்டிவிட்டது. அதனால்தான் தற்போது எதிர்க்கட்சி தலைவர்களை அவதூறாகப் பேசி கைது செய்து வருகிறது என தெரிவித்தார்.

    • கோரிக்கை ஏற்கப்படாததால் அவர்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
    • ஆளும் பா.ஜ.க மற்றும் பிற கட்சிகளின் தலைவர்கள் பிரசாரம் செய்ய வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. அடுத்த மாதம் 1, 5 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. வாக்காளர்கள் வாக்களிக்கும் கடமையை தவறாமல் நிறைவேற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில், நவ்சாரி சட்டசபை தொகுதிக்குட்பட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். கிராம மக்கள் சார்பில் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில், 'ரெயில் இல்லை, ஓட்டும் இல்லை' என எழுதப்பட்டுள்ளது.

    இங்குள்ள அஞ்செலி ரெயில் நிலையத்தில் புறநகர் ரெயில்களை நிறுத்துமாறு கிராம மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தும் அவர்களது கோரிக்கை ஏற்கப்படாததால் அவர்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இதுமட்டுமின்றி, ஆளும் பா.ஜ.க மற்றும் பிற கட்சிகளின் தலைவர்கள் பிரசாரம் செய்ய வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ரெயில் நிலையத்தில் ரெயில் நிற்காததால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். கிராமத்தில் வசிக்கும் மாணவர்களும் படிப்பில் சிக்கல்களை எதிர்கொள்வதாகவும், பெரும்பாலும் அவர்கள் கல்லூரிக்குச் செல்வதற்கு தாமதமாகிறது. இதனால் கல்வி பாதிக்கப்படுகிறது என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். 

    • டிசம்பர் 1, 5-ம் தேதிகளில் குஜராத் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
    • இந்த தேர்தலுக்காக அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், 182 இடங்களை கொண்ட சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. டிசம்பர் 1, 5-ம் தேதிகளில் நடைபெற உள்ள இந்த தேர்தலில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

    இங்கு 1995-ம் ஆண்டு முதல் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பா.ஜ.க. இந்த முறையும் வெற்றி பெற துடிக்கிறது. காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை கைப்பற்ற போராடுகிறது. இதில்அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் இந்த தேர்தலில் களமிறங்குகிறது. எனவே தேர்தல் களத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

    குஜராத் சட்டசபைத் தேர்தலுக்காக அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், குஜராத் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து வாக்குகளை வீணடித்து விட வேண்டாம் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக கெஜ்ரிவால் கூறுகையில், குஜராத்தில் பா.ஜ.க.வுக்கு சவால் அளிக்கும் கட்சியாக ஆம் ஆத்மியே இருக்கும். இந்த இரு கட்சிகளுக்கும் இடையேதான் நேரடி போட்டி இருக்கப்போகிறது. எனவே காங்கிரசுக்கு வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை வீணடித்து விடாதீர்கள் என தெரிவித்தார்.

    ×