search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதலிடம்"

    • கால்பந்தாட்ட உலகில் 2 பெரும் ஜாம்பவான்களாக விளங்குபவர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றொருவர் லியோனல் மெஸ்ஸி.
    • 629 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்சைக் கொண்ட ரொனால்டோ, முக்கிய பிராண்ட்கள் மற்றும் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களின் மூலமும் அதிக வருவாய் ஈட்டுவதாகத் தெரிகிறது.

    கால்பந்தாட்ட உலகில் 2 பெரும் ஜாம்பவான்களாக விளங்குபவர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றொருவர் லியோனல் மெஸ்ஸி. இருவரையும் ஒப்பிட்டு ரசிகர்கள் அவ்வப்போது விவாதங்களில் ஈடுபடுவது வழக்கம். விளையாட்டைத் தாண்டி இவ்விருவர் உலக ஐகானாக விளங்குகின்றனர். இந்நிலையில் ரொனால்டோவின் வருமானம் மெஸ்ஸியை விட 2 அதிகம் என்று தெரியவந்துள்ளது. 

     

    பிரபல ஃபோர்ப்ஸ் இதழின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், கிறிஸ்டியானோ ரொனால்டோ நான்காவது முறையாக அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் 260 மில்லியன் டாலர் வருவாயுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஸ்பெயின் கோல்ப் வீரர் ஜான் ரஹம் சவுதி இரண்டாம் இடத்தில் உள்ளார். பட்டியலில் லியோனல் மெஸ்ஸி 135 மில்லியன் டாலர் வருவாயுடன் 3 ஆம் இடம் பிடித்துள்ளார்

    39 வயதான ரொனால்டோவின் மொத்த வருவாயான 260 மில்லியன் டாலர்கள் பிராந்தியத்தில் இதுவரை ஒரு கால்பந்து வீரர் ஈட்டும் உட்சபட்ச வருவாயாகும். 629 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்சைக் கொண்ட ரொனால்டோ, முக்கிய பிராண்ட்கள் மற்றும் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களின் மூலமும் அதிக வருவாய் ஈட்டுவதாகத் தெரிகிறது. 

    • மாவட்டத்தில் 9,565 பேர் தேர்வு எழுதினர்.
    • தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் சிறிய மாவட்டங்கள் தான் முதல் 2 இடங்களை பிடித்துள்ளது.

    10-ம் வகுப்பு தேர்வில் அரியலூர் மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ளது. அந்த மாவட்டத்தில் 9,565 பேர் தேர்வு எழுதினர். இதில் 9,308 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 97.31 சதவீதமாகும்.

    சிவகங்கை மாவட்டத்தில் தேர்வு எழுதிய 17,707 பேரில 17,179பேர் வெற்றி பெற்று 2-வது இடத்தையும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 15,692 பேர் தேர்வு எழுதியதில் 15,121 பேர் வெற்றி பெற்றனர். இது 95.17 சதவீதம் தேர்ச்சி பெற்று 3-வது இடத்தையும் பெற்று உள்ளது.

    தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் சிறிய மாவட்டங்கள் தான் முதல் 2 இடங்களை பிடித்துள்ளது.

    மாவட்டம் வாரியாக தேர்ச்சி விவரம் வருமாறு:-

    அரியலூர்97.31, சிவகங்கை 97.02, ராமநாதபுரம்96.36, கன்னியாகுமரி96.24, திருச்சி95.23, விருதுநகர்95.14, ஈரோடு95.08, பெரம்பலூர்94.77, தூத்துக்குடி94.39, விழுப்புரம்94.11, மதுரை94.07, கோவை94.01, கரூர்93.59, நாமக்கல்93.51, தஞ்சாவூர்93.40, திருநெல்வேலி93.04, தென்காசி92.69, தேனி92.63, கடலூர்92.63, திருவாரூர்92.49, திருப்பூர்92.38, திண்டுக்கல்92.32, புதுக்கோட்டை91.84, சேலம்91.75, கிருஷ்ணகிரி91.43, ஊட்டி90.61, மயிலாடுதுறை90.48, தர்மபுரி90.49, நாகப்பட்டினம்89.70, சென்னை88.21, திருப்பத்தூர் (வி)88.20, காஞ்சீபுரம்87.55, செங்கல்பட்டு87.38, கள்ளக்குறிச்சி86.83, திருவள்ளூர்86.52, திருவண்ணாமலை86.10, ராணிப்பேட்டை85.48, வேலூர்82.07, காரைக்கால்78.20, புதுச்சேரி91.28.

    • உலகின் பணக்கார குடும்பங்களின் பட்டியலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் குடும்பம் முதலிடத்தில் உள்ளது.
    • இந்த குடும்பத்திடம் 700 சொகுசு கார்கள் 8 ஜெட் விமானங்கள் உள்ளது.

    அபுதாபி:

    உலகின் பணக்கார குடும்பங்களின் பட்டியலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் குடும்பம் முதலிடத்தில் உள்ளது.

    அல் நஹ்யான் 2022-ம் ஆண்டு ஒட்டுமொத்த ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவராக பொறுப்பேற்றார். ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் உள்ள கஸ்ர் அல்-வதன் மாளிகையில் நஹ்யான் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ரூ.4,078 கோடி மதிப்பில் இந்த மாளிகை அமைந்துள்ளது. இங்கு அல் நஹ்யானின் 18 சகோதரர்கள், 11 சகோதரிகள், 9 குழந்தைகள், 18 பேரக் குழந்தைகள் என 56 பேர் வசிக்கின்றனர். இந்த மாளிகையில் 3,50,000 படிகங்களால் ஆன சர விளக்கு, மதிப்புமிக்க வரலாற்று கலைப்பொருட்கள் உள்ளன.

    இந்த குடும்பத்திடம் 700 சொகுசு கார்கள் மற்றும் 8 ஜெட் விமானங்கள் உள்ளது.

    உலகின் மொத்த எண்ணெய் வளத்தில் நஹ்யான் குடும்பத்தின் வசம் மட்டும் 6 சதவீதம் உள்ளது. உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் இக்குடும்பத்தினர் முதலீடு செய்துள்ளனர். பாடகி ரிஹானாவின் அழகுசாதன நிறுவனமான பென்டி, எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் என பிரபல நிறுவனங்களில் முதலீடு மேற்கொண்டுள்ளனர். அதிபரின் சகோதரரான தஹ்னூன் பின் சயீத் அல் நஹ்யான், குடும்பத்தின் தலைமை முதலீட்டு நிறுவனத்திற்கு தலைமை தாங்குகிறார். இதன் மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 28 ஆயிரம் சதவீதம் உயர்ந்துள்ளது. இந்நிறுவனம் விவசாயம், எரிசக்தி, பொழுதுபோக்கு மற்றும் கடல்சார் வணிகங்களை செய்துவருகிறது.

    இங்கிலாந்தின் பிரபலமான கால்பந்தாட்ட குழுவான மான்செஸ்டர் சிட்டியை ரூ.2,122 கோடிக்கு அல் நஹ்யான் குடும்பம் 2008-ம் ஆண்டு வாங்கியது.

    ஐக்கிய அரபு எமிரேட்சை தவிர துபாய், பாரிஸ் மற்றும் லண்டன் உள்பட உலகம் முழுவதும் ஆடம்பர சொத்துக்களை வைத்திருக்கிறார்கள்.

    • அமெரிக்காவை தவிர, சீனாவிலும் ஜெர்மனியிலும் டெஸ்லா உற்பத்தி செய்து வருகிறது
    • தொடக்கத்தில் பிஒய்டி, பேட்டரி தயாரிப்பில் மட்டுமே ஈடுபட்டு வந்தது

    கடந்த 2003ல், அமெரிக்காவை சேர்ந்த உலகின் நம்பர் 1 கோடீசுவரரான எலான் மஸ்க் (Elon Musk), தொடங்கிய பேட்டரி கார் நிறுவனம், டெஸ்லா (Tesla).

    அமெரிக்காவில் பெருமளவு உற்பத்தி ஆனாலும், பெருகி வரும் வாடிக்கையாளர்களின் தேவைக்காக, இந்நிறுவனம் கார் உற்பத்தியை சீனாவிலும், ஜெர்மனியிலும் நடத்தி வருகிறது.


    2023 வருட மூன்றாம் காலாண்டில் மட்டும் 4,30,488 மின்னணு கார்களை உற்பத்தி செய்தது.

    கார்கள் விற்பனை மூலம் 2022-ஆம் வருட வருமானமாக டெஸ்லா, $81,462 பில்லியன் அமெரிக்க டாலர் ஈட்டியது.

    இந்நிலையில், சீனாவின் ஷென்சன் (Shenzen) பகுதியை சேர்ந்த மற்றொரு முன்னணி மின்னணு கார் தயாரிப்பு நிறுவனமான பிஒய்டி (BYD), உலகளவில் முதல் இடத்தை பிடிக்க உள்ளது.

    பிஒய்டி, 2023-ஆம் ஆண்டின் கடைசி 3 மாதங்களில் 5,26,000 கார்களை தயாரித்துள்ளது. 2023 முழு ஆண்டில் 3 மில்லியன் கார்களுக்கு மேல் உற்பத்தி செய்துள்ளது.

    1995ல் சீனாவின் ஷென்சன் பகுதியில் வேங் சுவான் ஃபு (Wang Chuanfu) என்பவர் தொடங்கிய பிஒய்டி, முதலில் ஸ்மார்ட்போன், மடிக்கணினி உட்பட பல மின்னணு சாதனங்களுக்கு பேட்டரி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தது. விலை உயர்ந்த ஜப்பானிய பேட்டரிகளை விற்பனையில் முந்திய பிஒய்டி பிறகு கார் தயாரிப்பிலும் கால் பதித்தது.


    ஒரு மின்னணு கார் அல்லது இரு சக்கர வாகனத்திற்கு முக்கிய பாகமாக கருதப்படுவது அதனை இயக்கும் பேட்டரிதான். பேட்டரி தயாரிக்கும் தொழிலில் மிகுந்த அனுபவம் உள்ள நிறுவனம் என்பதாலும், தங்கள் பேட்டரியை வைத்தே தங்கள் கார்களை தயாரிப்பதால் பெருமளவு செலவினங்கள் குறைவதால், விலை குறைவான கார்களை பிஒய்டி-யால் தயாரிக்க முடிகிறது. குறைந்த செலவில் லாபம் ஈட்டி, அதிவேகமாக கார்களை பிஒய்டி தயாரிக்க இது முக்கிய காரணம் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    பல வருடங்களாக பேட்டரி கார் தயாரிப்பில் முதல் இடத்தை தக்க வைத்து கொண்டுள்ள டெஸ்லா, போட்டியை எவ்வாறு சமாளிக்க போகிறது என பொருளாதார நிபுணர்கள் கவனித்து வருகின்றனர்.

    • மும்பையை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் இந்த ஆண்டு ரூ.42.3 லட்சத்துக்கு உணவுகளை ஆர்டர் செய்து முதலிடத்தில் உள்ளார்.
    • சைவ உணவுகளில் நவராத்திரியின் போது 9 நாட்களிலும் மசாலா தோசையே முதலிடத்தை தட்டிச்சென்றது.

    சென்னை:

    இந்தியா முழுவதும் வீடுகளுக்கு டெலிவரி செய்யும் உணவுகளில் முதலிடத்தை பிடிக்கும் உணவு எது என்பதை பிரபல தனியார் உணவு டெலிவரி நிறுவனம் வருடந்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி தொடர்ந்து 8-வது ஆண்டாக வீடுகளுக்கு டெலிவரி செய்யும் உணவுகளில் தொடர்ந்து பிரியாணி முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டு வருகிறது.

    இதுகுறித்து தனியார் உணவு டெலிவரி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்த ஆண்டு வீடு தேடி வரும் உணவுகளில் பிரியாணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 8-வது ஆண்டாக பிரியாணியே தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. இந்த ஆண்டில் ஒரு வினாடிக்கு 2.5 பிரியாணி ஆர்டர்கள் பெறப்பட்டு உள்ளன. ஒவ்வொரு 5.5 சிக்கன் பிரியாணிக்கும் ஒரு வெஜ் பிரியாணி வீதம் ஆர்டர் பெறப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதி மட்டும் 4.30 லட்சம் பிரியாணிகள் வீடுகளுக்கு டெலிவரி செய்யப்பட்டன.

    மேலும் 6 பிரியாணிகளில் ஒரு பிரியாணி ஐதராபாத்தில் இருந்து ஆர்டர் பெறப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஐதராபாத் மக்களின் பிரியாணி மீதான மோகம் குறையவில்லை என்பது தெரிகிறது.

    உலக கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்ற கடந்த நவம்பர் 19-ந்தேதி நிமிடத்துக்கு 188 பீட்சாக்கள் ஆர்டர் பெறப்பட்டு உள்ளன. அதிகபட்ச பீட்சா ஆர்டர்கள் சென்னை, புதுடெல்லி, ஐதராபாத் ஆகிய நகரங்களில் இருந்து பெறப்பட்டு உள்ளன.

    மும்பையை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் இந்த ஆண்டு ரூ.42.3 லட்சத்துக்கு உணவுகளை ஆர்டர் செய்து முதலிடத்தில் உள்ளார்.

    துர்கா பூஜையின் போது இதுவரை முதலிடத்தில் இருந்த ரசகுல்லாவை குலோப் ஜாமூன் முந்தியது. அன்று மட்டும் 77 லட்சத்துக்கும் அதிகமான குலோப் ஜாமூன்கள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளன.

    சைவ உணவுகளில் நவராத்திரியின் போது 9 நாட்களிலும் மசாலா தோசையே முதலிடத்தை தட்டிச்சென்றது.

    பெங்களூரில் அதிக அளவில் கேக்குகள் ஆர்டர் பெறப்பட்டுள்ளன. சாக்லெட் கேக் மட்டும் 85 லட்சம் ஆர்டர் பெறப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது. டெலிவரி நிறுவன ஊழியர்கள் உணவு டெலிவரிக்காக இந்த ஆண்டில் மட்டும் ஒட்டு மொத்தமாக 16.64 கோடி கி.மீ. தூரம் பயணித்துள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    மாநிலஅளவில் முன்றாம் இடம் பெற்றதற்காக டாக்டர் தேன்மொழிக்கும் கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்க ப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படிமருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், பல்வேறு குடும்ப நல அறுவை சிகிச்சைகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில், கள்ளக்குறிச்சி மாவட்ட த்தில் அதிக அளவு குடும்ப நல அறுவை சிகிச்சை கள் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துமனை களில்மேற்கொ ண்டத ற்காக இப்பணியினை பாராட்டி மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வு துறை அமைச்சர் கள்ளக்குறிச்சி மாவட்ட துணை இயக்குநர்( சுகாதாரப் பணிகள்) ராஜா வுக்கும், அதிக அளவில் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்த எலவனா சூர்கோட்டை வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் மாநிலஅளவில் முன்றாம் இடம் பெற்றதற்காக டாக்டர் தேன்மொழிக்கும் கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்க ப்பட்டது. இதையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், கள்ளக்குறிச்சி மாவட்டம் மாநில அளவில் குடும்ப நல அறுவை சிகிச்சை அதிக அளவில் மேற்கொண்டமைக்காக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் ,கள்ளக்குறிச்சி துணைஇயக்குநர் (சுகா தாரப் பணிகள்) ராஜா மற்றும் எலவனா சூர்கோ ட்டைவட்டார மருத்துவர் தேன்மொழி அகியோருக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதனை மாவட்டகலெக்டர் ஷ்ரவன் குமாரிடம் காண்பித்து வாழ்த்துபெற்றனர். இந்நிகழ்வில், இணை இயக்குநர் ( சுகாதார பணிகள்) டாக்டர் ராமு மற்றும் அரசுஅலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தஞ்சாவூர் மாநகரில் 4 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்குகின்றன.
    • கல்லுக்குளம் நகர்ப்புற சுகாதார நிலையம் தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்தது.

    தஞ்சாவூர்:

    தமிழக அளவில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கல்லுக்குளம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முதலிடம் பெற்றுள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் 312 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இதில், தஞ்சாவூர் மாநகரில் கல்லுக்குளம், கரந்தை, மகர்நோன்புசாவடி, சீனிவாசபுரம் ஆகிய 4 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்குகின்றன.

    தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை ஏப்ரல் மாதம் முதல் ஆரம்ப சுகாதார நிலைய செயல்பாடுகள் அடிப்படையில் தரவரிசை பட்டியலை மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது.

    புற நோயாளிகள் வருகை, உள்நோயாளி அனுமதி, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் பிரசவ எண்ணிக்கை, ஆய்வக பரிசோதனைகள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மார்பக புற்றுநோய், கருப்பைவாய் பரிசோதனை, கர்ப்பிணி தாய்மார்களின் பதிவு, கருத்தரித்தவுடன் 12 வாரத்துக்குள் கர்ப்பிணி தாய்மார்களின் பதிவு, இரும்பு சத்து மாத்திரை வழங்குதல், குழந்தை பிறப்பின்போது 2.5 கிலோவுக்கும் அதிகமான எடை இருத்தல், குழந்தைகளுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு, 312 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

    இதில், அக்டோபர் மாதத்துக்கான தரவரிசை பட்டியலில் கல்லுக்குளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் தமிழ்நாடு அளவில் முதலிடத்தையும், கரந்தை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் இரண்டாமிடத்தையும், மகர்நோன்புசாவடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் நான்காமிடத்தையும், சீனிவாசபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஏழாமிடத்தையும் பெற்றுள்ளன.

    இது தொடர்பாக மருத்துவக் குழுவினருக்கு மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, மாநகர் நல அலுவலர் வீ.சி. சுபாஷ் காந்தி ஆகியோர் பாராட்டினர்.

    • வட்டார அளவிலான 14 வயதோருக்கான வட்டெறிதல் போட்டியில் துக்கியாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர் மு. சந்தோஷ்குமார் முதலிடம் பெற்றார்.
    • இந்த மாணவர்கள் அனைவரும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றனர்.

    வாழப்பாடி:

    தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் வாழப்பாடியில் நடைபெற்ற வட்டார அளவிலான 14 வயதோருக்கான வட்டெறிதல் போட்டியில் துக்கியாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர் மு. சந்தோஷ்குமார் முதலிடம் பெற்றார்.

    எட்டாம் வகுப்பு மாணவர் இ. தோர்னேஷ் மூன்றாமிடம் பிடித்தார். நீளம் தாண்டுதலில் ஒன்பதாம் வகுப்பு செ. சூரியா மூன்றாமிடமும், 14-வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான குண்டு எறிதல் போட்டியில் ஒன்பதாம் வகுப்பு மு.தீபிகா முதலிடமும், வட்டெறிதல் போட்டியில் இரண்டாமிடமும் பிடித்தார். இந்த மாணவர்கள் அனைவரும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றனர்.

    வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்பயிற்சி ஆசிரியர் பெ.மணிகண்டனையும், பள்ளி தலைமையாசிரியர் கு. வெங்கடாசலம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

    • கடந்த 3 ஆண்டுகளில் 2 கோடிக்கும் குறைவான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டன.
    • இந்தியாவுக்கு அடுத்தப்படியாக இந்தோனேசியா இருசக்கர வாகன பதிவில் 2-வது இடத்தில் உள்ளது.

    மோட்டார் சைக்கிள் பயன்பாட்டில் உலகில் இந்தியா தான் முதல் இடத்தில் உள்ளது. சாலை போக்குவரத்தின் வருடாந்திர புத்தகத்தின் தகவலின்படி இது தெரிய வந்துள்ளது. 2020-ம் ஆண்டு இந்தியாவில் 32.63 கோடி வாகனங்கள் இருந்தன. இவற்றில் கிட்டத்தட்ட 75 சதவீதம் இருச்சக்கர வாகனங்கள் ஆகும்.

    கடந்த 3 ஆண்டுகளில் 2 கோடிக்கும் குறைவான வாகனங்கள் பதிவு செய்யப் பட்டன. ஜூலை மத்தி வரை மொத்த எண்ணிக்கை 34.8 கோடியாக இருக்கிறது. இந்தியாவுக்கு அடுத்தப்படியாக இந்தோனேசியா இருசக்கர வாகன பதிவில் 2-வது இடத்தில் உள்ளது.

    கார்களின் எண்ணிக்கைகளில் இந்தியா 8-வது இடத்தில் உள்ளது. சீனா, அமெரிக்கா, ஜப்பான் முதல் 3 இடங்களில் உள்ளன.

    • உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
    • விருதுநகர் கலெக்டர் பெருமிதம் கொள்கிறேன் என்றார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி எஸ்.எப்.ஆர் கல்லூரியில் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் கடந்த கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர விண்ணப்பிக்காத மாணவ, மாணவி களுக்கு "உயர்வுக்கு படி" என்ற உயர்கல்விக்கான வழிகாட்டுதல் முகாமினை, சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் முன்னிலை யில் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

    பின்னர், இம்முகாமின் மூலம் 13 மாணவர்கள் அரசு தொழில்பயிற்சி மையத்திலும், 2 மாணவர்கள் அரசன் கணேசன் தொழில் நுட்ப கல்லூரியிலும், 10 மாணவர்கள் ஸ்ரீவில்லி புத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், 4 மாணவர்கள் சிவகாசி அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரியிலும், 13 மாணவர்கள் ஏ.ஏ.ஏ. பொறி யியல் கல்லூரியிலும், 22 மாணவர்கள் ஜெய் சாய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் என மொத்தம் 64 மாணவர்க ளுக்கு பல்வேறு கல்லூரிகளில் உயர்கல்வி பயில்வ தற்கான சேர்க்கை ஆணை களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    நான் முதல்வன் என்ற திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு உலகின் சிறந்த வேலை வாய்ப்புகளை பெறுவதற்காக திறன்களை வளர்ப்பதற்கும், பள்ளி மாணவர்களுக்கு இந்திய அளவில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கான உயர் கல்வி வாய்ப்புகள் குறித்தும், புதுமைப் பெண் என்ற திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு உயர்கல்வி முடிக்கும் வரை மாதந் தோறும் ரூ.1000 ஊக்கத் தொகையும், உயர்வுக்கு படி என்ற திட்டத்தின் மூலம் பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்கள் கல்லூரிகளில் சேர வழிகாட்டுதலும் வழங்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டில் நமது விருதுநகர் மாவட்டம் 12-ம் வகுப்பில் அதிக தேர்ச்சி விகிதங்கள் பெற்று கல்வியில் முதன்மை மாவட்டமாக திகழ்கிறது. மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள 7226 மாணவர்களும் 100 சதவீதம் உயர்கல்விக்கு சேர வேண்டும் என்ற நோக்கத் தில் அருப்புக்கோட்டை, சிவகாசி மற்றும் சாத்தூர் ஆகிய இடங்களில் முகாம் கள் நடத்த திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி, ராஜ பாளை யம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் சிவகாசி பகுதிகளில் இது வரை கல்லூரியில் சேர விண்ணப்பிக்காத 193 மாணவ, மாணவிகளில் 136 மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு வழிகாட்டுதல் அளிக்கும் வகையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் "உயர்வுக்கு படி" என்ற உயர்கல்விக்கான வழி காட்டுதல் முகாம் நடைபெற்றது.

    இந்திய அளவில் உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதன்மையிடத்தில் உள்ளது. அதிகமான மாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கை பெற்று, தமிழகத்திற்கும் நமது மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்து தர வேண்டும்.

    இதற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் தகுதிக்கேற்ப அவர்களின் திறன் அடிப்படையில் உயர்கல்விக்கான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில், சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன், சிவகாசி மாநகராட்சி துணை மேயர் விக்னேஷ் பிரியா, சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் விவேகன்ராஜ், வட்டாட்சியர், அரசு அலுவ லர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்தனர்.
    • உதவித் தலைமையாசிரியர் எம்.புரோஸ்கான் நன்றி கூறினார்.

    பரமக்குடி

    கடந்த மார்ச், ஏப்ரலில் நடந்த 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 99 சதவீத தேர்ச்சியும்,பிளஸ்-1 வகுப்பில் 97 சதவீத தேர்ச்சியும் பெற்று பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி நகரில் முதலிடத்தைப் பெற்றது.

    முதலிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. தாளாளர் என்.ஷாஜஹான் தலைமை தாங்கினார். கீழ முஸ்லிம் ஜமாத் சபை தலைவர் எம்.சாகுல் ஹமீது, செயலாளர் எம்.சாதிக் அலி, பொருளாளர் ஏ.லியாகத் அலிகான் மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் எம்.அஜ்மல்கான் வரவேற்றார். 10-ம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளான எம்.தீபிகா தர்ஷினி, ஹெச்.ரோஹித் கிருஷ்ணா, ஜெ.முகம்மது தஸ்பிக் ராஜா, எம்.சவுரா பிளஸ்-1 வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள் எஸ்.பிரேமா, எஸ்.சுல்தானா ஜாஸ்மின், எஸ்.அபிராமி ஆகியோருக்கு பொன்னாடையும் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. உதவித் தலைமையாசிரியர் எம்.புரோஸ்கான் நன்றி கூறினார்.

    • எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் அரசு பள்ளியில் மாநில அளவில் சிவகங்கை மாவட்டம் முதலிடம் பிடித்தது. இ
    • தனை கலெக்டர் கேக் வெட்டி கொண்டாடினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 8 ஆயிரத்து 702 மாணவர்க ளும், 9 ஆயிரத்து 30 மாணவி களும் என மொத்தம் 17 ஆயிரத்து 732 பேர் தேர்வு எழுதினர். இதில் 8 ஆயிரத்து 390 மாணவர்களும், 8 ஆயிரத்து 904 மாணவிகளும் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 2-ம் இடம் பிடித்து 97.53 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

    அதேபோல் அரசு பள்ளி களில் 3 ஆயிரத்து 493 மாணவர்களும், 4 ஆயிரத்து 105 மாணவிகளும் தேர்வு எழுதினர். இதில் 3 ஆயிரத்து 311 மாணவர்களும், 4 ஆயிரத்து 12 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    சிவகங்கை மாவட்டம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அரசு பள்ளி அளவில் மாநில அளவில் 96.38 சதவீதம் பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்து உள்ளது.

    இதனை கொண்டாடும் விதமாக சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் கலெக்டர் மதுசூ தன்ரெட்டி தலைமையில் கல்வி அலுவலர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

    ×