என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புகைப்படம்"
- தமிழில் காதலில் விழுந்தேன் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுனைனா.
- இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகை சுனைனா புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
தமிழில் காதலில் விழுந்தேன் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுனைனா. தொடர்ந்து மாசிலாமணி, திருத்தணி, வம்சம், நீர்ப்பறவை, தெறி, கவலை வேண்டாம், , சில்லுக்கருப்பட்டி, தொண்டன், லத்தி உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.
இறுதியாக ரெஜினா என்ற திரைப்படத்தில் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார். அண்மையில் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான இன்ஸ்பெக்டர் ரிஷி என்ற இணைய தொடரிலும் சுனைனா நடித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகை சுனைனா புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இதைக் கண்ட ரசிகர்கள், சுனைனா காதலிப்பதாக பல செய்திகளை இணையத்தில் தெரிவித்து வந்தனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக தற்போது மீண்டும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் நடிகை சுனைனா, தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்ததாகவும், தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சோபிதா துலி பாலாவுடன் அடிக்கடி டேட்டிங் செல்வதாக தகவல்கள் பரவின.
- புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நாக சைதன்யா. இவர் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் ஆவார்.
நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யா அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
இதைத்தொடர்ந்து சமந்தா மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
நாக சைதன்யாவும் மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். புதிய படம் ஒன்றில் மீனவர் கதாபாத்திரத்தில் நடித்துவரும் நாக சைதன்யா பிரபல நடிகை சோபிதா துலி பாலாவுடன் அடிக்கடி டேட்டிங் செல்வதாக தகவல்கள் பரவின.
இந்த தகவலை இருவரும் ஏற்கவோ மறுக்கவோ இதுவரை இல்லை. இந்நிலையில் இருவரும் ஐரோப்பாவில் விடுமுறையை கொண்டாட சென்றுள்ளனர். அங்கு நாக சைதன்யாவும் சோபிதா துலி பாலாவும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- எஸ்பிஐ வங்கி கிளை ஒன்றிற்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவர் வங்கிக்குள் ஊழியர்கள் யாரும் இல்லாததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்
- பிரச்சனையை சரி செய்யாமல் பிரச்னையை சுட்டிக்காட்டிய நபருக்கு எச்சரிக்கை விடுப்பது ஏற்புடையது அல்ல என்று எஸ்பிஐ வங்கிக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
பொதுவாகாவே இந்தியாவில் உள்ள வங்கிகளில் வாடிக்கையாளர்களை அதிக நேரம் காக்க வைப்பதாகவும் வங்கி வேலைகள் ஆமை வேகத்தில் நகர்வதாகவும் சாமானிய மக்களிடம் பொதுக்கருத்து நிலவுகிறது. தமிழகம் உள்ளிட்ட ஹிந்தி அல்லாத மொழி மாநிலங்களின் வங்கி காசோலை மற்றும் பிற தகவல்கள் அம்மாநில மொழிகளில் அல்லாமல் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருப்பதாகவும் அவ்வப்போது குற்றசாட்டுகள் எழுந்து சர்ச்சையாவதுண்டு.
அந்த வகையில் இந்தியாவின் பிரதான பொதுத்துறை வங்கியாக விளங்கும் பாரத ஸ்டேட் வங்கி ஒன்று சர்ச்சையில் சிக்கியுள்ளது. எஸ்பிஐ வங்கி கிளை ஒன்றிற்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவர் வங்கிக்குள் ஊழியர்கள் யாரும் இல்லாததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துகலையாகக் கிடந்த வங்கி அலுவலகத்தை புகைப்படம் எடுத்து, மதியம் 3 மணிக்கு ஊழியர்கள் அனைவரும் இடைவேளைக்கு சென்றுள்ளனர் என்றும் உலகமே மாறினாலும் உங்கள் சேவைகளின் தரம் இந்த அளவில் தான் உள்ளது என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள எஸ்பிஐ, வங்கிக்குள் புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்றும், அந்த புகைப்படத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் அந்த நபருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரச்சனையை சரி செய்யாமல் பிரச்னையை சுட்டிக்காட்டிய நபருக்கு எச்சரிக்கை விடுப்பது ஏற்புடையது அல்ல என்று எஸ்பிஐ வங்கிக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. அந்த நபரின் பதிவுக்கு எஸ்பிஐ வங்கி அளித்த ரிப்ளையை டேக் செய்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். புகைப்படத்தில் உள்ள எஸ்பிஐ கிளை எங்கு உள்ளது என்ற தகவல் வெளியாகவில்லை.
இதற்கிடையில் சமீபத்தில் தேர்தல் பத்திர முறைகேடு விவகாரத்தில் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியவர்களின் பெயர்களை வெளியிட தாமதம் செய்ததால் எஸ்பிஐ வங்கி சர்ச்சையில் சிக்கியது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து நன்கொடையாளர்கள் பெயர்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
- பகத் பாசில். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படம் 'ஆவேஷம்'.
- திரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப், பகத் பாசிலின் அடுத்த படத்தை இயக்க இருக்கிறார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் பகத் பாசில். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படம் 'ஆவேஷம்'. இப்படத்தை ரோமஞ்சம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கினார். இப்படம் மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று ரூ.150 கோடியை தாண்டி வசூலித்துள்ளது.
சமீபத்தில் பகத் பாசிலின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி, திரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப், பகத் பாசிலின் அடுத்த படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தை இ4 எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இது மட்டுமல்லாமல் பகத் பாசில் புஷ்பா 2 திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், வயநாட்டில் நகைக்கடை திறப்பு விழாவில் பங்கேற்ற பகத் பாசில் ரசிகர்களைச் சந்தித்தார். இது குறித்தான புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிந்துள்ளார். நடிகர் விஜய் பாணியில் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். இதில் பகத் புதிய தோற்றத்தில் இருக்கிறார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இத்தோற்றம் அடுத்த படத்திற்கான லுக்காக இருக்குமோ என ரசிகர்களிடம் கேள்வி எழுந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இதுதொடர்பாக 3 புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
- அதே நேரம் வைரலான இந்த புகைப்படத்தால் பயனர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டு வருகின்றனர்.
பெங்களூரில் உள்ள காய்கறி கடை ஒன்றில் கோபம் அடைந்த பெண்ணின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நிகாரிகா என்ற பயனர் எக்ஸ் தளத்தில் இதுதொடர்பாக 3 புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில், காய்கறி கடையில் கோபம் அடைந்த பெண்ணின் புகைப்படம் உள்ளது. அதன் அருகில் ஒரு மரத்திலும் அந்த கோபக்கார பெண்ணின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
இந்த புகைப்படங்கள் எதற்காக அங்கு இடம்பெற்றுள்ளது என்ற விபரங்கள் வெளியாகவில்லை. அதே நேரம் வைரலான இந்த புகைப்படத்தால் பயனர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டு வருகின்றனர். இந்த புகைப்படத்தின் பின்னால் ஏதேனும் கதை உள்ளதா? என ஒரு பயனரும், இந்த படம் போட்டோஷாப் செய்யப்பட்டதா? என மற்றொரு பயனரும் கேள்வி எழுப்பி உள்ளனர். சில பயனர்கள் கேலியான பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.
- புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து ’ஊ சொல்றியா மாமா’ என்ற பாடலுக்கு நடனமாடினார்.
- இந்நிலையில் நடிகை சமந்தா சமூக வலை தளங்களில் பல்வேறு கவர்ச்சி புகைப்படங்கள் பகிர்ந்து வருகிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. விஜய், சூர்யா, சிம்பு, அல்லு அர்ஜூன், நானி போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்தார்.
விஜயுடன் சமந்தா ஜோடியாக நடித்த 'தெறி' 'கத்தி', 'மெர்சல்' போன்ற படங்கள் தொடர் வெற்றி அடைந்தது.
அதை தொடர்ந்து நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.திருமணமான 4 ஆண்டுகளில் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து 'ஊ சொல்றியா மாமா' என்ற பாடலுக்கு நடனமாடினார். இப்பாடல் மிகப்பெரிய ஹிட்டானது.
இதைதொடர்ந்து விஜய் தேவரகொண்டா திரைப்படத்தில் நடித்தார். உடல்நலக் குறையால் கடந்த ஆண்டு நடிப்பில் இருந்து தற்காலிக பிரேக் எடுத்துக் கொண்டார். இப்பொழுது மீண்டும் இந்தாண்டு நடிக்க தொடங்கவிருக்கிறார்.
இந்நிலையில் நடிகை சமந்தா சமூக வலை தளங்களில் பல்வேறு கவர்ச்சி புகைப்படங்கள் பகிர்ந்து வருகிறார். தற்பொழுது ஒரு புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பெருமளவு கவர்ச்சியாக போஸ் கொடுத்து மிரட்டியுள்ளார். கருப்பு கலர் கோட் சூட் அணிந்து அதில் காணப்படுகிறார். 'இட்ஸ் ஃபேஷன் பேபி' என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை எடுத்தவர் அகுலா மது. ஆடை வடிவமைப்பை ப்ரீத்தம் செய்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ரசிகர்கள் பலவிதமாக கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஹாலிவுட் நடிகர் எட்வெஸ்ட் விக்கை எமிஜாக்சன் காதலித்தார்.
- மகனுடன் சுற்றுலா செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.
மதராச பட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எமிஜாக்சன். தொடர்ந்து ஐ, தெறி, மிஷன் சாப்டர்-1 உள்பட தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து இருக்கிறார்.
இவர் ஜார்ஜ் பனயிட்டோவுடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். அவருக்கு 2019-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
அடுத்ததாக ஹாலிவுட் நடிகர் எட்வெஸ்ட் விக்கை எமிஜாக்சன் காதலித்தார். அவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது.
சமூக வலைதளங்களில் தீவிர ஆர்வம் கொண்ட எமிஜாக்சன் தனது காதலர் எட்வெஸ்ட் விக், மகனுடன் சுற்றுலா செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு எட்வெஸ்ட் விக்குடன் நடந்த நிச்சயதார்த்த விருந்து புகைப்படங்களை வெளியிட்டார்.
தற்போது மகனுடன் ஜாலியாக மரத்தில் ஏறி விளையாடும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் எமிஜாக்சன். புகைப்படத்தோடு அவர் வெளியிட்டுள்ள பதிவில் புதிய வீட்டில் இது எங்களின் முதல் வசந்தகாலம் என பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மர்ம நபர்கள் அவரது குழந்தையை கடத்திச் சென்றனர்.
- தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெல்லை:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா (வயது 34). கணவரை பிரிந்த இவருக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது.
சமீபத்தில் தூத்துக்குடி வி.இ. ரோட்டில் உள்ள அந்தோணியார் ஆலயம் அருகே யாசகம் எடுத்து பிழைப்பு நடத்திக் கொண்டி ருந்த சந்தியா அந்த பகுதியில் இரவில் குழந்தையுடன் தூங்கினார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் அவரது குழந்தையை கடத்திச் சென்றனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி தன் பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை தேடி வந்தனர். குழந்தையை திருடிய மர்ம நபர்கள் யார் என்பதை அறிய 150-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து வந்த நிலையில் தற்போது குழந்தையை கடத்திச் சென்ற 2 நபர்களின் புகைப்படங்களை தூத்துக்குடி மாவட்ட போலீ சார் வெளியிட்டுள்ளனர்.
போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் டவுன் உதவி போலீஸ் சூப்பிரண்டு கேல்கர் சுப்பிரமணியன் பாலச்சந்தர் தலைமையில் தென்பாகம் இன்ஸ்பெக்டர் உள்பட போலீசார் அடங்கிய தனிப்படை யினர் புகைப் படத்தை அடிப்படையாகக் கொண்டு 2 பேரையும் தேடி வருகின்றனர்.
மேலும் புகைப்படத்தில் உள்ள நபர்களை யாரேனும் பார்த்தால் தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
- திறப்பு விழாவில் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மறைந்த கேப்டன் விஜயகாந்த்தின் படத்திறப்பு விழா, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வரும் 24ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவர், புரட்சிக்கலைஞர் கேப்டன் அவர்கள் நினைவிடத்தில் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 24.01.2024 புதன்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- தென் சென்னையிலும், வட சென்னையிலும் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளத்தை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- இன்னமும் பல்லாயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்து அபாயகரமான அளவில் நிற்கிறது.
சென்னை:
மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட சென்னையில் மீட்பு பணிகளும், நிவாரண பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
வடசென்னை மற்றும் தென்சென்னை பகுதியில் மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய சென்னை பகுதியில் இயல்பு நிலை திரும்பி விட்ட நிலையில் தென் சென்னையிலும், வட சென்னையிலும் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளத்தை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மாதவரம், மணலி, எண்ணூர், கொரட்டூர், தாம்பரம், வேளச்சேரி, பீர்க்கங்கரணை, பெரும்பாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் இன்னமும் பல்லாயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்து அபாயகரமான அளவில் நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் இருப்பவர்களை படகுகளின் மூலம் மீட்கும் பணி இன்று 3-வது நாளாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மழை வெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தினரை போலீஸ் ஒருவர் பத்தித்திரமாக மீட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதில் காவலர் ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு கொஞ்சியபடி புன்னகையுடன் நடந்துவரும் காட்சி பதிவாகி இருக்கிறது. இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதுபற்றி தலைமை காவலர் தயாளன் கூறும்போது,
வெள்ளத்தில் சிக்கிய குழந்தையை மீட்டபோது, தூங்காமல் வேலைபார்த்த களைப்பு பறந்து போனது என்று கூறினார்.
- பெண்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் போது மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.
- வாட்ஸ்-அப், டி.பி.க்கள், முக நூலிலும் புகைப்படங்களை தவிர்க்கலாம்.
சென்னை:
சென்னை போலீசில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக 'அவள்' என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பெண்களுக்கான சட்ட உரிமைகள், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அவள் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பெண்களுக்கான சைபர்கிரைம் குறித்த விழிப்புணர்வு பயிலரங்கு சென்னையில் உள்ள மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இதில் சைபர் கிரைம் துணை கமிஷனர் கீதாஞ்சலி கலந்து கொண்டு பேசினார். 1,500 மாணவிகள் மத்தியில் சைபர் கிரைம் தொடர்பாக அவர் விளக்கி கூறியதாவது:-
இன்றைய கால கட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமூக ஊடகங்கள் மூலமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஏஐ தொழில்நுட்பம் மூலமாக போலியான ஆபாச வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு பரப்பப்படுகிறது. எனவே பெண்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் போது மிகவும் உஷாராக இருக்க வேண்டும். தேவையில்லாத பட்சத்தில் தங்களது புகைப் படங்களையோ, வீடியோக்களையோ பகிராமல் இருப்பதே நல்லது. வாட்ஸ்-அப், டி.பி.க்கள், முக நூலிலும் புகைப்படங்களை தவிர்க்கலாம்.
ஒருவேளை சமூக ஊடகம் மூலமாக யாராவது தேவையில்லாத செய்தி களை அனுப்பினால் உடனே மனம் உடைந்து போகாமல் போலீசாரை அணுக வேண்டும். மனதில் தவறான சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் தைரியமாக போலீசை அணுக வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அவள் திட்டம் கடந்த மார்ச் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு இதுவரை 1,500 பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
- மர்ம நபர் பைத்தியகாரத் தனமாக சிரித்தது என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
- வனிதாமீது தாக்குதல் நடத்திய சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:
நடிகர் விஜயகுமார் மகளும், நடிகையுமான வனிதா மர்மநபர் ஒருவர் திடீரென தாக்கியதாக வலைதளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
நான் பிக்பாஸ் நிகழ்ச்சி விமர்சனத்தை முடித்து விட்டு இரவு உணவு சாப்பிட்டுவிட்டு என் காரில் இறங்கி நடந்துசென்று கொண்டிருந்தேன். காரை என்னுடைய சகோதரி சவுமியா வீட்டு அருகே இருட்டான பகுதியில் நிறுத்தினேன்.
அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு மர்ம நபர் பிரதீப்புக்கு ரெட்கார்டு கொடுக்கிறீங்களா? என கேட்டார்.
அதுக்கு நீ வேற சப்போர்ட்டுக்கு வர்றியா? என சொல்லி என் முகத்தில் பலமாக தாக்கிவிட்டு ஓடிவிட்டார். இதனால் காயம் அடைந்து ரத்தம் வழிந்தது. நள்ளிரவு 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததால் என் அருகில் யாரும் இல்லை. என் சகோதரியை கீழே வரும்படி அழைத்த நிலையில் அவர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யும் படி தெரிவித்தார்.
ஆனால் நான் அவளிடம் போலீசில் புகார் தெரிவிப்பதில் நம்பிக்கை இல்லை என தெரிவித்தேன்.
காயத்திற்காக முதலுதவி செய்துவிட்டு கோபத்துடன் வெளியேறி தாக்கியவரை அடையாளம் காண நினைத்தேன். முடியவில்லை. அந்த மர்ம நபர் பைத்தியகாரத் தனமாக சிரித்தது என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
நான் திரையில் தோன்றும் அளவுக்கு உடல் நலத்துடன் இல்லாததால் ஓய்வு எடுத்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
வனிதாமீது தாக்குதல் நடத்திய சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ்-7 சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக நடிகர் பிரதீப் ஆண்டனி பங்கேற்றார்.
சவாலான போட்டியாளராக திகழ்ந்த பிரதீப் சக பெண்களின் பாதுகாப்பு பிரச்சினைக்கு காரணமாக இருந்ததாக கூறி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
இந்த விவகாரம் வலை தளத்தில் சர்ச்சை பொருளாக பதிவு செய்யப்பட்டு வந்தது.
பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து கருத்து தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்