என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய ரெயில்வே"

    • நடப்பாண்டு சரக்கு ரெயில்கள் மூலம் ரூ.92,345 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
    • அக்டோபர் மாதத்தில் மட்டும் சரக்கு ரயில் வருவாய் 8% அதிகரிப்பு.

    மத்திய ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    நடப்பாண்டு ஏப்ரல் மாதம் முதல், அக்டோபர் மாதம் வரையிலான 7 மாதக் காலகட்டத்தில், சரக்கு ரெயில்கள் மூலம் மொத்தம் 855.63 மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 786.2 மெட்ரிக் டன்னாக இது இருந்தது. இதனால், சரக்குகள் கையாளுதல் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 9% அதிகரித்துள்ளது.

    இதேபோல் நடப்பாண்டு அக்டோபர் மாதம் சரக்கு ரெயில்கள் மூலம் ஈட்டப்படும் வருவாய் ரூ.92,345 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இதே அக்டோபர மாதம் வரை வருவாய் ரூ.78,921 கோடியாக இருந்தது. இதனால் சரக்கு ரெயில் வருவாய் 17% அதிகரித்துள்ளது.

    அதே போல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மட்டும் 117.34 மெட்ரிக் டன்னாக இருந்த சரக்குகள் கையாளுதல் இந்த அக்டோபர் மாதம் மட்டும் 118.94 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் அக்டோபர் மாதத்தில் மட்டும் சரக்கு ரயில் வருவாய் 8% அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பயணிகள் வருவாய் 61 சதவீதம் அதிகரித்து ரூ.63,300 கோடியை எட்டியுள்ளது.
    • ரெயில்வேயின் மூலதன முதலீடு ரூ.3,200 கோடியாக உயர்ந்துள்ளது.

    இந்திய ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    2022-23 நிதியாண்டில் இந்திய ரெயில்வேக்கு ரூ2.40 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் கிட்டத்தட்ட ரூ.49,000 கோடி அதிகமாகும். கடந்த 2022-23-ம் ஆண்டில், சரக்கு வருவாய் ரூ. 1.62 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 15 சதவீதம் அதிகமாகும்.

    பயணிகள் வருவாய் 61 சதவீதம் அதிகரித்து ரூ.63,300 கோடியை எட்டியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஓய்வூதியச் செலவினங்களை இந்திய ரெயில்வேயால் சமாளிக்க முடிகிறது. வருவாய் மற்றும் செலவின மேலாண்மையை சரி செய்ததன் மூலம் ரெயில்வேயின் மூலதன முதலீடு ரூ.3,200 கோடியாக உயர்ந்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் ரெயில்வே துறையின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடந்துள்ளது.
    • உடனடியாக ரெயில்வே துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சந்திப்புக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திரியும் மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம், மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    பின்னர் கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் ரெயில்வே துறையின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடந்துள்ளது. ரெயில்வேயில் புதிய நியமனங்கள் செய்யப்படாமல் ஊழியர்கள் பற்றாக்குறையால் டெக்னிக்கல், பைலட் பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகளிலும் ஊழியர்கள் பணி செய்யும் நேரம் அதிகரித்துள்ளது.

    எனவே உடனடியாக ரெயில்வே துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் புல்லட் ரெயில் விட நினைக்கும் மத்திய அரசு முதலில் ரெயில்வே துறையில் ரெயில்களின் வேகம் அதிகரிப்புக்கு தகுந்தவாறு கட்டுமானங்களையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி இந்திய ரெயில்வேயின் தரத்தை உயர்த்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • ரெயில்களின் முழு ரேக்குகளும் எல்.எச்.பி. பெட்டிகளாக இருக்கும்.
    • ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட எல்.எச்.பி. பெட்டிகள், விபத்துக்குள்ளானால் உயிரிழப்பு வாய்ப்புகளை முழுமையாக குறைக்கிறது.

    புதுடெல்லி:

    பீகார், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், அசாம், அரியானா மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பலர் பிழைப்பு தேடி பெரு நகரங்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் ரெயில் பயணத்தையே விரும்புகின்றனர்.

    இவர்கள் வசதிக்காக குறைந்த கட்டணத்தில் சிறப்பு ரெயில்களை அறிமுகப்படுத்த இந்திய ரெயில்வே திட்டமிட்டு உள்ளது. தற்போது உள்ள ரெயில் கட்டணம் ஏழை, நடுத்தர மக்களுக்கு சற்று அதிகமானதாக கருதப்படுவதால் ரெயில் நிர்வாகம் இதுபற்றி ஆய்வு செய்தது.

    இதை தொடர்ந்து படுக்கை வசதிகளுடன் கூடிய பொதுப்பெட்டிகளுடன் புதிய ரெயில்கள் குறிப்பிட்ட மாநிலங்கள் மற்றும் பல்வேறு பெரு நகரங்களுக்கு இடையே அறிமுகப்படுத்தப்பட உள்ளது. எல்.ஹெச்.பி. பெட்டிகளுடன் உருவாக்கப்படும் இந்த ரெயில்களின் கட்டணமும் சிக்கனமாக இருக்கும். இந்த ரெயில்களின் முழு ரேக்குகளும் எல்.எச்.பி. பெட்டிகளாக இருக்கும்.

    ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட எல்.எச்.பி. பெட்டிகள், விபத்துக்குள்ளானால் உயிரிழப்பு வாய்ப்புகளை முழுமையாக குறைக்கிறது. இந்த சிறப்பு ரெயில்கள் ஓரிரு ஆண்டுகளில் அறிமுகப் படுத்தப்படும் என்று தெரிகிறது. இந்த ரெயில்களில் குறைந்தது 25 சிறப்பு பொது படுக்கை வசதி பெட்டிகள் இருக்கும் என்று இந்திய ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • சுமார் 68 ஆயிரம் கிலோமீட்டர் பயண பாதையை இந்தியன் ரெயில்வே உள்ளடக்கியது
    • இவர் பங்களாதேஷ் ரெயில்வேயின் ஆலோசகராக பணி புரிந்தவர்

    இந்தியா முழுவதுமுள்ள பல்வேறு ரெயில்வே கட்டமைப்பகளை நிர்வகிப்பது இந்திய ரெயில்வே. இது இந்திய அரசாங்கத்தின் ரெயில்வே அமைச்சரவையின் கீழ் இயங்குகிறது.

    சுமார் 68 ஆயிரம் கிலோமீட்டர் பயண பாதையை உள்ளடக்கிய இந்திய ரெயில்வே, உலகிலேயே 4-வது பெரிய ரெயில்வே கட்டமைப்பை நிர்வகிக்கும் சிறப்பு பெற்றுள்ளது. மேலும் இது, கிட்டத்தட்ட ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் கோடி வருவாயை ஆண்டொன்றிற்கு ஈட்டி வருகிறது.

    இதன் தலைவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியுமாக செயல்படுபவரே இதன் ஒட்டு மொத்த நிர்வாகத்திற்கும் பொறுப்பானவர் என்பதால் இப்பதவி மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், பெருமைக்குரிய ஒன்றாகவும் கருதப்படுகிறது. தற்போது அனில் குமார் லஹோட்டி இப்பதவியை வகித்து வருகிறார்.

    விரைவில் ஓய்வு பெறும் இவருக்கு அடுத்து இந்த பதவிக்கான அதிகாரி நியமனம் குறித்து தேர்வு நடைபெற்று வந்தது. இந்திய ரெயில்வேயின் உச்சபட்ச முடிவெடுக்கும் அதிகாரம் படைத்த இந்த பதவிக்கு ஜெய வர்ம சின்ஹா என்பவரை இந்திய அரசாங்கம் தேர்வு செய்து நியமித்துள்ளது. இந்த உயர்ந்த பதவியை ஏற்கும் முதல் பெண்மணி ஜெய வர்ம சின்ஹா என்பது குறிப்பிடத்தக்கது.

    "இந்திய ரெயில்வேயின் செயலாக்கம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கான அமைப்பில் உறுப்பினராக இருக்கும் ஜெய வர்ம சின்ஹா, இந்திய ரெயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதனை அரசாங்கத்தின் நியமனங்களுக்கான கேபினெட் கமிட்டியும் உறுதி செய்துள்ளது" என இது குறித்து அரசு அறிவித்திருக்கிறது.

    செப்டம்பர் 1 அல்லது அதற்கு பிறகு பொறுப்பேற்க இருக்கும் ஜெய வர்ம சின்ஹா, 2024 ஆகஸ்ட் 31 வரை இந்த பதவியில் தொடர்வார். அக்டோபர் 1 அன்று இப்போது அவர் வகிக்கும் பதவியில் இருந்து ஓய்வு பெறும் ஜெய வர்மா, மீண்டும் புதிதாக அதே நாளில் தலைமை செயல் அதிகாரியாக பணியமர்த்தப்படுவார்.

    1988-ல் இந்திய ரெயில்வே டிராஃபிக் சேவையில் சேர்ந்த ஜெய வர்மா அலகாபாத் பல்கலைகழகத்தில் பயின்றவர். வடக்கு ரெயில்வே, தென்கிழக்கு ரெயில்வே மற்றும் கிழக்கு ரெயில்வே ஆகியவற்றில் பணிபுரிந்த அனுபவம் உள்ள இவர் இந்தியாவின் அண்டை நாடான வங்களாதேசத்தின் ரெயில்வே சேவைக்கு ஆலோசகராகவும் பணி புரிந்தார்.

    இந்தியாவின் கொல்கத்தாவில் இருந்து வங்களாதேச தலைநகர் தாகாவிற்கான மைத்ரி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை இவரது வங்களாதேச பணியின் போது தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • செப்டம்பர் 9 முதல் சென்னை-திருநெல்வேலி மார்க்கத்தில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது
    • வந்தே பாரத் ரெயிலின் பயண நேரம் 5 மணி 50 நிமிடங்களாக உள்ளது

    இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இந்திய ரெயில்வேயால் அறிமுகப்படுத்தப்பட்டது 'வந்தே பாரத்' ரெயில் சேவை. பகல் நேர ரெயில் சேவையான இதன் மூலம் ஒரு நாளுக்கும் குறைவான நேரத்தில் பயணிகள் நாட்டின் ஒரு நகரிலிருந்து மற்றொரு முக்கிய நகரத்தை அடைய முடியும். மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இந்த சேவை தமிழ்நாட்டிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை-மைசூரு மற்றும் சென்னை-கோயம்புத்தூர் ஆகிய மார்க்கங்களுக்கிடையே முன்னரே இந்த சேவை அறிமுகமான நிலையில் செப்டம்பர் 9 முதல் சென்னை-திருநெல்வேலி மார்க்கத்தில் 'வந்தே பாரத்' ரெயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

    ஆனால், இதன் காரணமாக ஏற்கெனவே இந்த மார்க்கத்தில் இயங்கி வந்த பிற ரெயில்களின் பயண நேரம் அதிகமாக தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

    அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் ரெயில்களின் புதிய பயண நேரப்படி மதுரை-சென்னை மார்க்கத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் பயண நேரம் 15 நிமிடங்கள் அதிகமாகவும், பாண்டியன் எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், முத்து நகர் எக்ஸ்பிரஸ் மற்றும் நெல்லை எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களின் பயண நேரம் 10லிருந்து 15 நிமிடங்கள் வரையும் அதிகரிக்கப்படுகிறது.

    'வந்தே பாரத்' ரெயிலின் பயண நேரம் (சென்னை-மதுரை) 5 மணி 50 நிமிடங்களாகவும், பிற அதி விரைவு (Super Fast) ரெயில்களின் பயண நேரம் 7 மணி 45 நிமிடங்கள் எனவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

    பத்து வருடங்களுக்கு முன்பு, சதாப்தி ரெயில்களில் பயணிப்பதை ஊக்குவிக்க அதே தடத்தில் பிற ரெயில்களின் பயண நேரங்களை அதிகரிக்க செய்த முயற்சியை போலவே பயணிகளால் இது பார்க்கப்படுகிறது.

    பெரும் பொருட்செலவில் ரெயில் பாதைகளை மேம்படுத்தி விட்டு அதன் பயன் மற்ற அதி விரைவு ரெயில் பயண கட்டணங்களை விட 15 சதவீதம் அதிகமுள்ள ரெயில்களுக்கு மட்டுமே பலனளிக்கும் வகையில் மாற்றியமைத்திருப்பது ஒரு வகையில் மக்களின் பணத்தை வீணடிப்பதாகும் என ரெயில் பயணிகள் விமர்சிக்கின்றனர்.

    • சுவிஸ் ரெயில்வே 5,200 கி.மீ. தட நீளத்துடன் சேவை செய்கிறது
    • இந்தியாவில் ஒரே ரெயில் நீண்ட தூர சேவை வழங்கும் கட்டமைப்பு உள்ளது

    உலகளவில் சிறப்பான ரெயில்வே சேவைக்கு சுவிட்சர்லாந்து புகழ் பெற்றது. சுவிட்சர்லாந்து நாட்டு ரெயில் சேவையின் காலந்தவறாமை மிகவும் பிரபலமானது.

    ஐரோப்பிய நாடுகளின் போக்குவரத்து கட்டமைப்புகளில், சுவிட்சர்லாந்தின் ரெயில் பாதை கட்டமைப்பு 5,200 கிலோமீட்டர் ஆகும்.

    சுவிட்சர்லாந்தின் ரெயில் கட்டமைப்பு "ஹப் அண்ட் ஸ்போக் மாடல்" (hub and spoke model) எனப்படும்.

    இந்த அமைப்பில் ஒரு நகர் "ஹப்" என இயங்கும். அந்த நகருக்கு ஒரே நேரத்தில் வெவ்வேறு ஊர்களில் இருந்து பல ரெயில்கள் பல தடங்களில் (spokes) வந்து சில மணி நேரங்கள் நிற்கும்.

    இதன் மூலம் ஒரே ரெயில் நிலையத்தில், ஒரே நேரத்தில், பயணிகள் வேண்டிய ரெயில்களில் ஏறவும், மாறி கொள்ளவும் முடியும்.

    பிறகு அனைத்து ரெயில்களும் ஒரே நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு செல்லும். இந்த வடிவத்தின் மூலம் பல பயணிகள் மிக சுலபமாக வெவ்வேறு இடங்களுக்கு மாறி செல்கின்றனர்.

    அந்நாட்டில் 6 ஹப்கள் மட்டுமே உள்ளன. இதனால் அனைத்து ரெயில்களும் நேரந்தவறாமல் சிறப்பாக இயங்குகின்றன.

    இதை தவிர, ஒவ்வொரு ஹப்-பில் இருந்தும் வேறொரு ஹப்-பிற்கு செல்ல சிறப்பான உள்ளூர் போக்குவரத்தும் உள்ளது.

    ஆனால், இதற்கு நேர்மாறாக இந்தியாவில் ஒரு ஊரிலிருந்து வெகு தொலைவில் உள்ள வேறொரு ஊருக்கு ஒரு ரெயில் எனும் வகையில் ரெயில்வே கட்டமைப்பு உள்ளது.

    இந்திய ரெயில்வே சேவையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் ஒரு பகுதியாக சுவிட்சர்லாந்து ரெயில்வே துறையிடம் தொழில்நுட்ப ஆலோசனைகளை பெற இந்தியா திட்டமிட்டுள்ளதாக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.


    உதாரணத்திற்கு, சுவிஸ் மாடலில் திருச்சி ரெயில் நிலையம் "ஹப்" போன்று இயங்கும்.

    சென்னை உட்பட பல ஊர்களில் இருந்து ரெயில்கள் ஒரே நேரம் திருச்சியில் வந்து நிற்கும். சில மணி நேரம் கழித்து, அங்கிருந்து வெவ்வேறு ஊர்களுக்கு ஒரே நேரம் ரெயில்கள் புறப்பட்டு செல்லும்.

    இத்திட்டத்தின்படி குறைந்த தூரத்திற்கு பல ரெயில்கள் இயக்க முடிவதால், ரெயில்களில் இடம் கிடைப்பதும் பயணிகளுக்கு சுலபமாக இருக்கும்.

    • பயணிகள் டிக்கெட் ரத்து செய்யும்போது அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும். அதை தனியாக கணக்கு வைத்துக்கொள்ளப்படாது.
    • 2018-19 முதல் 2022-23 வரை ரெயில்வேயின் மொத்த வருமானத்தில் தோராயமாக 5 சதவீதம் ஆகும்.

    பாராளுமன்றத்தில் சிபிஐ (எம்) எம்.பி. ஜான் பிரிட்டாஸ், ஃப்ளெக்சி கட்டணம், தட்கல் மற்றும் பிரீமியர் தட்கல், டிக்கெட் ரத்து ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள விரும்புவதாகவும், இந்த தகவல் கடந்த ஐந்தாண்டுகள் வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

    அதன்அடிப்படையில் மத்திய ரெயில்வேத்துறை மந்திரி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

    அதில் "ஃப்ளெக்சி கட்டணம், தட்கல், பிரீமியர் தட்கல் டிக்கெட்டுகள் மூலம் 2018-19 முதல் 2022-23 வரை ரெயில்வேயின் மொத்த வருமானத்தில் தோராயமாக 5 சதவீதம் ஆகும்.

    பயணிகள் டிக்கெட் ரத்து செய்யும்போது அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும். அதை தனியாக கணக்கு வைத்துக்கொள்ளப்படாது.

    ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுக்கும்போது காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் டிக்கெட்டுகள் தானாகவே ரத்து செய்யப்படும்போது கிளெர்க்கேஜ் சார்ஜ் தவிர்த்து முழுமையாக டிக்கெட் கட்டணம் திரும்ப வழங்கப்படும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் டிக்கெட்டுகளுக்கு 60 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது.

    • வாரத்திற்கு ஆறு நாள் சேவை கொண்டதாக நமோ பாரத் ரேபிட் ரெயில் இயக்கப்பட இருக்கிறது.
    • அகமதாபாத்- புஜ் நகரங்கள் இடையே 360 கி.மீட்டர் இடைவெளியில் இந்த ரெயில் இயக்கப்பட இருக்கிறது.

    குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து கட்ச் மாவட்டத்தில் உள்ள புஜ் என்ற இடத்திற்கு வந்தே மெட்ரோ ரெயில் இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்து இன்று மாலை இந்த ரெயில் சேவையை பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார்.

    இந்த நிலையில் வந்தே மெட்ரோ ரெயில் (Vande Metro Rail) நமோ பாரத் ரேபிட் ரெயில் (Namo Bharat Rapid Rail) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்திய ரெயில்வே, அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக அறிவித்துள்ளது.

    இது இந்தியாவின் முதல் நமோ பாரத் ரேபிட் ரெயில் சேவை ஆகும். இந்த ரெயில் 360 கி.மீட்டர் தூரம் கொண்ட அகமதாபாத்- புஜ் இடையே இயக்கப்பட இருக்கிறது.

    110 கி.மீ. வேகத்தில் இந்த ரெயில் செல்லக்கூடியது. அஞ்சார், காந்திதாம், பச்சாயு, ஹல்வாத், த்ரங்காத்ரா, விராம்காம், சந்த்லோதியா, சபர்மதி, அகமதாபாத்தில் உள்ள கலுபுர் ஆகிய ரெயில் நிலையங்கள் அடங்கியுள்ளன.

    வாரத்திற்கு ஆறு நாள் இந்த ரெயில் இயக்கப்படும். சனிக்கிழமை புஜ் நகரில் இருந்து புறப்படாது. ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் இருந்து புறப்படாது.

    இந்த ரெயில் மற்ற ஆறு நாட்களில் காலை 5.05 மணிக்கு புஜ் நகரில் இருந்து புறப்படும். காலை 10.50 மணிக்கு அகமதாபாத் சென்றடையும். மறுமார்க்கத்தில் அகமதாபாத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும். இரவு 11.20 மணிக்கு புஜ் நகரை சென்றடையும்.

    இந்த ரெயிலில் 1,150 பயணிகள் அமர்ந்து செல்லமுடியும். 2,058 பேர் நின்று கொண்டு பயணம் செய்ய முடியும். இந்த ரெயில் முழுவதும் ஏ.சி. வசதி கொண்டது.

    புஜ் நகரில் இருந்து அகமதாபாத்திற்கு செல்ல சுமார் 430 ரூபாய் ஆகும். குறைந்தபட்ச டிக்கெட் விலை 30 ரூபாய் ஆகும். தொடர்ந்து பணம் செய்பவர்கள் வாரம், இருவாரம், மாத சீசன் டிக்கெட் பெறும் வசதி உள்ளது.

    • நவம்பர் 7 மற்றும் 8-ந் தேதிகளில் ‘சத் பூஜை’ கொண்டாடப்படுகிறது.
    • கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் 4 ஆயிரத்து 429 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.

    புதுடெல்லி:

    அக்டோபர், நவம்பர் மாதங்களில் அடுத்தடுத்து பண்டிகைகள் அணிவகுத்து வருகின்றன. அக்டோபர் 9-ந் தேதி துர்கா பூஜை தொடங்குகிறது. அக்டோபர் 31-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    நவம்பர் 7 மற்றும் 8-ந் தேதிகளில் 'சத் பூஜை' கொண்டாடப்படுகிறது. பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இப்பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படும். 4 நாட்கள் விரதம் இருந்து புனித நீராடி சூரிய கடவுளை வழிபடுவது இதன் முக்கிய அம்சம் ஆகும்.

    துர்கா பூஜை, மேற்கு வங்காளத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும்.

    அதனால், இந்த பண்டிகை காலத்தில், பீகார், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களில் பயணிகள் நிரம்பி வழிவது வழக்கம்.

    இதை கருத்தில்கொண்டு, பண்டிகை காலத்தை முன்னிட்டு சுமார் 6 ஆயிரம் சிறப்பு ரெயில்களை இயக்க இந்திய ரெயில்வே முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் 4 ஆயிரத்து 429 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் இதுவரை 5 ஆயிரத்து 975 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதன்மூலம் 1 கோடிக்கு மேற்பட்ட பயணிகள் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல முடியும்.

    இதுதவிர, பயணிகள் நெரிசலை சமாளிக்க 108 ரெயில்களில் கூடுதலாக பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், 12 ஆயிரத்து 500 பெட்டிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரெயில்களில் வழங்கப்படும் உணவுகளின் தரம் தொடர்பாக ஜான் பிரிட்டாஸ் கடிதம்.
    • மத்திய இணை மந்திரி ரவ்நீத் சிங் இந்தியில் பதில் கடிதம்.

    பாராளுமன்றத்தில் உள்ள தென்இந்திய எம்.பி.க்கள் கேள்விகள் கேட்டு மத்திய மந்திரிகளுக்கு கடிதம் எழுதினால் அதற்கு ஆங்கிலத்தில் பதில் கடிதம் அனுப்புவது வழக்கமாகவும், முன்னுதாரணமாகவும் இருந்து வருகிறது. ஆனால் சமீப காலமாக தென்இந்திய எம்.பி.க்கள் மத்திய மந்திரிகளுக்கு கடிதம் எழுதினால் அதற்கு இந்தியில் பதில் கடிதம் அனுப்புவது அதிகரித்து வருகிறது.

    கேரள எம்.பி.க்.கு இந்தியில் பதில் கடிதம்

    அந்த வகையில்தான் கேரள மாநில மார்க்சிஸ்ட் கட்சி மாநிலங்களவை எம்.பி. ஜான் பிரிட்டாஸ்க்கு நடந்துள்ளது. ரெயில்களில் வழங்கப்படும் உணவுகளின் தரம் தொடர்பாக ஜான் பிரிட்டாஸ் மத்திய இணை மந்திரி ரவ்நீத் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதற்கு ரவ்நீத் சிங் இந்தியில் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

    இணை மந்திரி இந்தியில் கடிதம் அனுப்பியதை கண்டிக்கும் வகையில் ஜான் பிரிட்டாஸ் மலையாளத்தில் கடிதம் எழுதி பதிலடி கொடுத்துள்ளார்.

    தமிழக எம்.பி.-க்கும் இதுபோல் நடந்த சம்பவம்

    கடந்த மாதம் இதேபோல் இந்தியில் கடிதம் எழுதிய ரெயிலவே இணை அமைச்சருக்கு தி.மு.க.எம்.பி. அப்துல்லா தமிழில் பதில் அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இளைஞர், இளம்பெண் என எமர்ஜென்சி ஜன்னல் வழியாக அவர் ஏற்றிவிடுட்டு அவர்களின் லக்கேஜ்களையும் உள்ளே போடுகிறார்.
    • இந்த வீடியோ 2.5 மில்லியன் பார்வைகளை கடந்து கமெண்ட் செக்ஷனே களேபரமாக காணப்படுகிறது.

    மக்கள் வாழும் சமூகம், உயர் வகுப்பு, நடுத்த மற்றும் கீழ் வகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளதுபோல் ரெயில்களும் பணம் உள்ளவர் அல்லாதவர்களுக்கு என இரண்டு முகங்களை கொண்டு செயல்படுகிறது. அதிலும் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் அது கண்கூடாக வெளிப்படுகிறது.

    ஏசியுடன் மெத்தையில் படுத்துத் தூங்கி கண் விழிக்கும்போது சேர வேண்டிய இடம் வந்ததும் இறங்கி செல்வது ஒரு முகம் என்றால் அடித்து பிடித்து உள்ளே ஏறி, இடம் கிடைக்காமல் லக்கேஜ் வைக்கும் கம்பிகளிலும், கதவில் தொத்தியபடியும், பயோ டாய்லட் பாத்ரூமுக்கு உள்ளேயும் என கூட்டத்தோடு கூட்டமாக புதைந்துக்கொண்டு எப்படியாவது ஊர் போய் சேர்ந்தால் போதும் என்ற வெகு மக்கள் பயணிக்கும் முன்பதிவில்லா UNRESERVED பெட்டிகள் மற்றோரு முகமாகும்.

    இதற்கு மத்தியில் சமீப காலமாக வந்தே பாரத், ஏசி பெட்டிகள் அதிகரிப்பு என குறிப்பிட்டவர்களின் மீது மற்றும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அரசியல் ரீதியிலான விமர்சனம் எழுந்துள்ளது. ரெயிலில் கதவு வழியாக ஏற வழியில்லாமல் எமர்ஜென்சி ஜென்னல் வழியாக ஏறும் யுக்தி முன்பதிவில்லா பெட்டிகளில் சில துடுக்குத்தனமான நபர்களால் கையாளப்படும் ஒன்றாகும்.

    அந்த யுக்தியை ரெயில் நிலையத்தில் லக்கேஜ் தூக்கும் போர்ட்டர் கூலி ஊழியர் ஒருவர் பயன்படுத்தி லக்கேஜ்களை தூக்குவதுபோல் முன்பதிவில்லா பெட்டியில் பயணிகளை அலேக்காக உள்ளே ஏற்றிவிடும் வீடியோ இணையவாசிகள் இடையே ஹிட் அடித்து வருகிறது.

    சிகப்பு யூனிபார்முடன் இளைஞர், இளம்பெண் என எமர்ஜென்சி ஜன்னல் வழியாக அவர் ஏற்றிவிடுட்டு அவர்களின் லக்கேஜ்களையும் உள்ளே போடுவது வீடியோவில் பதிவாகி உள்ளது. எக்ஸ் தளத்தில் இந்த வீடியோ 2.5 மில்லியன் பார்வைகளை கடந்து கமெண்ட் செக்ஷனே களேபரமாக காணப்படுகிறது.

    பிரபல பாலிவுட் படம் கூலி நம்பர் 1 படத்துடன் ஒப்பிட்டு இணையவாசிகள் தங்கள் கமெண்ட்களை அள்ளி இறைத்து வருகின்றனர். இந்த சம்பவம் எங்கு எப்போது நடந்தது என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் தினம் தினம் ரெயில் நிலையங்களில் நடந்துகொண்டுதான் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. 

    ×