search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    பண்டிகை காலத்தை முன்னிட்டு 6 ஆயிரம் சிறப்பு ரெயில்கள் இயக்கம்
    X

    பண்டிகை காலத்தை முன்னிட்டு 6 ஆயிரம் சிறப்பு ரெயில்கள் இயக்கம்

    • நவம்பர் 7 மற்றும் 8-ந் தேதிகளில் ‘சத் பூஜை’ கொண்டாடப்படுகிறது.
    • கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் 4 ஆயிரத்து 429 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.

    புதுடெல்லி:

    அக்டோபர், நவம்பர் மாதங்களில் அடுத்தடுத்து பண்டிகைகள் அணிவகுத்து வருகின்றன. அக்டோபர் 9-ந் தேதி துர்கா பூஜை தொடங்குகிறது. அக்டோபர் 31-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    நவம்பர் 7 மற்றும் 8-ந் தேதிகளில் 'சத் பூஜை' கொண்டாடப்படுகிறது. பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இப்பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படும். 4 நாட்கள் விரதம் இருந்து புனித நீராடி சூரிய கடவுளை வழிபடுவது இதன் முக்கிய அம்சம் ஆகும்.

    துர்கா பூஜை, மேற்கு வங்காளத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும்.

    அதனால், இந்த பண்டிகை காலத்தில், பீகார், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களில் பயணிகள் நிரம்பி வழிவது வழக்கம்.

    இதை கருத்தில்கொண்டு, பண்டிகை காலத்தை முன்னிட்டு சுமார் 6 ஆயிரம் சிறப்பு ரெயில்களை இயக்க இந்திய ரெயில்வே முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் 4 ஆயிரத்து 429 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் இதுவரை 5 ஆயிரத்து 975 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதன்மூலம் 1 கோடிக்கு மேற்பட்ட பயணிகள் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல முடியும்.

    இதுதவிர, பயணிகள் நெரிசலை சமாளிக்க 108 ரெயில்களில் கூடுதலாக பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், 12 ஆயிரத்து 500 பெட்டிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×