search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல்வர்"

    • இன்று காலை முதலே பிஷ்ணுபுர் மாவட்டத்தில் கிளர்ச்சிக்காரர்கள் ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர்
    • இந்த இடம் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் தலைமையகம் அமைத்திருந்த இடத்துக்கு 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

    மணிப்பூர் முன்னாள் முதல்வரும் மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவருமான மைரேம்பாம் கொய்ரெங்[Mairembam Koireng] வீட்டின் மீது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 13 வயது சிறுமி உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். இன்று காலை முதலே பிஷ்ணுபுர் மாவட்டத்தில் கிளர்ச்சிக்காரர்கள் ராக்கெட் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மொய்ரங் [Moirang] மதியம் முன்னாள் முதல்வர் வீட்டு காம்பவுண்டுக்குள் ராக்கெட் பாய்ந்துள்ளது.

    இந்த இடம் இந்திய தேசிய ராணுவத்தில் தலைமையகம் அமைத்திருந்த இடத்துக்கு 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இம்பாலில் இருந்து 45 கிமீ தொலைவில் அமைந்துள்ள மலைப்பகுதிகளிலிருந்து இந்த ராக்கெட்டுளை கிளர்ச்சிக்காரர்கள் ஏவி வருகின்றனர். மேலும் துப்பாக்கிகளாலும் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு பற்றமான சூழல் நிலவுகிறது.

    பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் முன்னாள் முதல்வர் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மைரேம்பாம் கொய்ரெங் 1963 மற்றும் 1969 ஆகிய காலகட்டத்திற்கு இடையில் 3 முறை முதல்வராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • 2019 முதல் 2024 வரை முதல்வர் அலுவலகத்துக்காக ரூ.3.62 கோடிக்கு முட்டை பப்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளது,
    • முட்டையின் ஓடு உடைந்து குஞ்சு பொரிவது போல ஜெகன் பற்றிய உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவருவதாகத் தெலுங்கு தேசம் விமர்சித்துள்ளது.

    தற்போதைய ஆந்திர மாநில அரசியலில் முட்டை பப்ஸ் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ஆம்.. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் இருந்த சமயத்தில் முதல்வர் அலுவலகத்துக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 993 முட்டை பப்ஸ்கள் வாங்கப்பட்டு வந்துள்ளது என்று தெலுங்கு தேசம் குற்றம் சாட்டியுள்ளது.

    ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 2019 முதல் 2024 வரை ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சியில் இருந்தது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலோடு ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலும் நடந்த நிலையில் என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்ற சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியிடம் படுதோல்வி அடைந்து ஆட்சியை இழந்தார் ஜெகன்.

    சந்திரபாபு நாயுடு முதல்வர் ஆனது முதல் தன்னை பழிவாங்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளதாக ஜெகன் குற்றம் சாட்டி வருகிறார். இந்த நிலையில் தான், ஜெகன் மோகன் ஆட்சிக்காலத்தில் 2019 முதல் 2024 வரை முதல்வர் அலுவலகத்துக்காக ரூ.3.62 கோடிக்கு முட்டை பப்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளது, வருடத்துக்கு ரூ.72 லட்சதுக்கு முட்டை பப்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளது என்று தெலுங்குதேசம் கட்சி கூறியுள்ளது.

    மக்கள் பணத்தை ஜெகன் மோகன் அனைத்து வகையிலும் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாகவும் முட்டையின் ஓடு உடைந்து குஞ்சு பொரிவது போல ஜெகன் பற்றிய உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவருவதாகத் தெலுங்கு தேசம் விமர்சித்துள்ளது.

    • பயிற்சியாளர்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்தும் இப்படிப்பட்ட தவறுகள் நடக்கின்றன
    • வினேஷ் போகத் நிச்சயம் தங்கம் வென்றிருப்பார்

    பாரீஸ் ஒலிம்பிக்கில் நேற்றிரவு நடைபெற்ற மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை குஸ்மானை வீழ்த்தி இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றார்.

    இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார். இந்த நிலையில், வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

    இதனையடுத்து, வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து அவரது மாமா மகாவீர் போகத் கண்ணீர் மல்க பேசினார்.

    "நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. வினேஷிடம் இருந்து தங்கத்தை நாடே எதிர்பார்த்தது. போட்டியில் விதிகள் உள்ளன, ஆனால் ஒரு மல்யுத்த வீரர் 50-100 கிராம் அதிக எடையுடன் இருந்தால் வழக்கமாக அனுமதிப்பார்கள். வேதனையடைய வேண்டாம் என மக்களைக் கேட்டுக் கொள்கிறேன், ஒரு நாள் அவர் நிச்சயம் ஒரு பதக்கத்தைக் கொண்டு வருவாள். அடுத்த ஒலிம்பிக்கிற்கு அவரை தயார் செய்வேன்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், இன்று பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மான் வினேஷ் போகத்தின் மாமா மகாவீர் போகத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

    இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை நான் அரசியலாக்க விரும்பவில்லை. ஆனால் பயிற்சியாளர்களுக்கும், பிசியோதெரப்பி நிபுணர்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்தும் இப்படிப்பட்ட தவறுகள் நடக்கின்றன. பயிற்சியாளர்கள் பாரிஸுக்கு சுற்றுலா சென்றிருக்கிறதா?

    வினேஷ் போகத் விளையாடிய அரையிறுதி போட்டியை நான் பார்த்தேன். அவர் நிச்சயம் தங்கம் வென்றிருப்பார்" என்று வேதனையுடன் தெரிவித்தார். 

    • ஓபிசி கிரீமி லேயர் வருமான உச்சவரம்பு வருடத்துக்கு ரூ.8 லட்சம் எனவும் அதிகரிகரிக்கப்பட்டுள்ளது.
    • அரியானாவில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அரசின் இந்த முடிவை முக்கியத்துவம் வாய்ந்த நகர்வாக பார்க்கமுடிகிறது.

    அரியானா மாநிலத்தில் அரசுப் பணிகளில் சேர்வதற்கான ஓபிசி இட ஒதுக்கீட்டை ஆளும் பாஜக அரசு அதிரடியாக அதிகரித்துள்ளது. குரூப் A மற்றும் குரூப் B பணிகளில் சேர்வதற்கான இடஒதுக்கீடு 15 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓபிசி கிரீமி லேயர் வருமான உச்சவரம்பு வருடத்துக்கு ரூ.8 லட்சம் எனவும் அதிகரிகரிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பை வெளியிட்டு பேசிய அம்மாநில முதல்வர் நயாப் சிங் சைனி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஓபிசி பிரிவினரின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்த்தவர்கள் குரூப் A மற்றும் B பணிகளில் பின்தங்கியுள்ள நிலையில் அவர்களுக்கென மாநிலம் முழுவதும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என்றும் அரியானா அரசு அறிவித்துள்ளது.

     

    இந்த வருட இறுதியில் அரியானாவில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அரசின் இந்த முடிவை முக்கியத்துவம் வாய்ந்த நகர்வாக பார்க்கமுடிகிறது. மாநிலத்தில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை அதிகரித்து முன்னேற்றப் பணிகளில் கவனம் செலுத்தி, ஏழைகள், விவசாயிகள் மற்றும் பெண்களின் நலனில் அக்கறை கொண்ட அரசாக இருந்துவருவதால் தாங்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிப்போம் என்று முதல்வர் சைனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    முன்னதாக புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்த போராட்டங்களில் அரியானா விவசாயிகள் அதிகளவில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 



     


    திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்முத்தரசனை தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்த முதல்வர்

    திருச்சி,  

    திருச்சியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று முன்தினம் திருச்சிக்கு வந்தார்.

    இந்த நிலையில் அவருக்கு திடீரென காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மிளகுபாறையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார்.

    ஆனாலும் காய்ச்சல் குறையாததால் திருச்சி அரசு மருத்துவமனையல் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் 2 நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தினர்.

    இதையடுத்து அவர் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்ைச அளிக்கப்பட்டு வருகிறது.

    2 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் முத்தரசனை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் இன்று அழைத்து நலம் விசாரித்தார்.

    • சாகிர் உசேன் கல்லூரியில் புதிய முதல்வர் பதவியேற்றார்.
    • முதல்வராக பணியாற்றிய அப்பாஸ் மந்திரி பணிஓய்வு பெற்றார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் முதல்வராக பணியாற்றிய அப்பாஸ் மந்திரி பணிஓய்வு பெற்றார். இதையடுத்து வேதியியல் துறைத்தலைவர் ஜபருல்லாஹ் கான் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாஹ் கான் மற்றும் உறுப்பினர்கள் அபுபக்கர் சித்திக், உஸ்மான் அலி ஆகியோர் முன்னிலையில் ஆட்சிக்குழு தலைவர் அகமது ஜலாலுதீன் புதிய முதல்வர் பணிநியமன ஆணையை வழங்கினார்.

    கல்லூரி துணைமுதல்வர், சுயநிதி பாடப்பிரிவு இயக்குநர், டாக்டர் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வர், துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • திட்டங்களை செயல்படுத்துவதில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும் செயல்படுத்தி வருகிறார்.
    • தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வர் என்று மானாமதுரை தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ. கூறினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியில் உள்ள இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு தமிழக அரசு சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ஏராளமான திட்டபணிகள் நடைபெற்று வருகிறது.

    மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர்-முன்னாள் அமைச்சர் ஆ.தமிழரசி ரவிக்குமார் கூறியதாவது:- தாயுள்ளம் கொண்ட நமது தமிழக முதல்வர் இந்தியாவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாகவும், திட்டங்களை செயல்படுத்துவதில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும் செயல்படுத்தி வருகிறார்.

    மகளிர் முன்னேற்றத்தில்மிகவும் அக்கறையுடன் கட்டணமில்லா பஸ்பயணம், உயர் கல்வி கற்கும் மாணவிகளுக்குமாதம் ரூ.1000 திட்டம், வரும்பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம், வீடுதேடிவரும்மருத்துவம், இல்லம் தேடி கல்வி திட்டங்களும் பொது மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

    இதுதவிர மாதந்தோறும் மாவட்டங்களில் திட்டங்கள் செயல்படுத்துவது பற்றி கள ஆய்வு பணி, உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் நிறைவேற்றப்படாத வளர்ச்சி பணிகள் நமது மானாமதுரை தொகுதியில் இளையான்குடி பேரூராட்சிக்கு தற்போது ரூ.9 கோடி மதிப்பில் திட்டப்பணிகள், மானாமதுரை வைகை ஆற்றில் புதிய பாலம், நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்களுக்கு புதிய அலுவலக கட்டிடங்கள், உயர் நிலை-மேல்நிலை பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், புதிதாக நெல்கொள்முதல் நிலையங்கள், மானாமதுரையில் புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டிடம், திருப்புவனம் ஒன்றியம் லாடனேந்தல், செல்லப்பனேந்தல் இடையே வைகைஆற்றில் புதிய பாலம், மானாமதுரை வைகைஆற்றில் குடிநீர்திட்டத்திற்காக தடுப்பணைகள், கிராமங்கள் முழுவதும் புதிதாக பஸ் வசதி, மானாமதுரையில் புதிய அரசினர் தொழிற்பயிற்சி மையம்,சொட்டதட்டி- பனையூர் சுற்றுசாலை திட்டம், தற்போது உலகமே வியக்கும் கீழடி, கொந்தகை, மணலூர்அகழ்வாராய்ச்சி பணிகள் முடிக்கப்பட்டு இன்று ரூ.18 கோடி மதிப்பீட்டில் தமிழக செட்டிநாடு கலையில் 2600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நமது பண்டைய தமிழர்களின் வாழ்வியல் முறைகளையும், அகழ்வாராய்ச்சி பணியில் கிடைத்த பல அரிய பொருட்களை தமிழக மக்கள் எளிதாக பார்த்து பயன் அடையும் வகையில் எதிர்கால நமது தலைமுறைக்காக கீழடியில் அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகத்தை தாயுள்ளம் படைத்த நமது தமிழக முதல்வர் திறந்து வைக்கிறார் என்பது தமிழக மக்களுக்கு பெருமை ஆகும்.

    மதுரை-ராமேசுவரம் சாலையில் இருந்து எளிதாக கீழடிஅருங்காட்சியகம் வருவதற்காக புதிய சர்வீஸ் சாலை மற்றும் சாலையை கடக்க நடைபாலம் அமைக்கவும், சட்டமன்ற கூட்டத்தில் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    • செப்டம்பர் 10ந் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக ஐ.நா சபை அறிவித்தது.
    • தற்கொலை செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது.

    திருப்பூர் :

    உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக கல்லூரி நுழைவாயிலில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமை தாங்கினார். மாணவ செயலர் பூபதிராஜா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் முருகேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் கூறுகையில் , செப்டம்பர் 10 ந் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக ஐ.நா சபை அறிவித்தது, இந்தாண்டின் மையக்கருத்தாக "செயல்பாடுகள் மூலம் நம்பிக்கையை உருவாக்குதல்" உள்ளது. தற்போது எந்த பிரச்சனையாக இருந்தாலும் சர்வ சாதாரணமாக தற்கொலை செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. வீட்டில் உள்ளவர்கள் பேசினாலும், அறிவுரைகள் சொன்னாலும், காதல் தோல்வி, தேர்வில் தோல்வி, கடன் பிரச்சனை இப்படி எண்ணற்ற காரணங்களை முன்வைத்து தற்கொலை முடிவுகளை இளைஞர்கள் எடுக்கிறார்கள், அரிது அரிது மானிடனாக பிறப்பது அரிது, இன்பம் இருக்கும் இடத்தில் துன்பங்களும் இருக்கும் .அதை ஆராயந்து வாழ வேண்டுமே தவிர தற்கொலை தீர்வாகாது. இப்படியான தற்கொலைகளை தடுக்க வேண்டும் என்பதே உலக தற்கொலை தடுப்பு தினத்தின் நோக்கம் ஆகும்.

    முடிந்த அளவிற்கு தனிமையில் இருந்து வெளியே வர வேண்டும். பிரச்சனைகளை மனதிற்குள் கொண்டு செல்லக்கூடாது. மாணவர்கள் பெற்றோரிடம் மனம் விட்டு பேசவேண்டும்.தற்கொலை எண்ணங்களை தடுக்கவும், தற்கொலை முயற்சி செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து, அவர்களை மீண்டும் இந்த முயற்சியில் ஈடுபடாமல் தடுத்து மாற்றுப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். வாழ்க்கை என்பது நமக்கு கிடைத்த வரம். அதை அனுபவித்து வாழ வேண்டும் என்றார்.

    மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளர் மருத்துவர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில் ,பள்ளி கல்லூரிகளில் ஆலோசனை குழுக்களை ஏற்படுத்தி அதன் மூலம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கலாம் என்றார். பிறகு மாணவ செயலர்கள் அருள்குமார், பூபாலன், அரவிந்தன் ஆகியோர் தலைமையில் மாணவ மாணவிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் தற்கொலை தடுப்பு ரிப்பன் அணிவிக்கப்பட்டது.தற்கொலை தடுப்பு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    வாழ்க்கை என்பது வாழ்வதற்கே, வெற்றி தோல்வி இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை என்ற உறுதிமொழியை எடுத்து விழிப்புணர்வினை ஏற்படுத்தினர். இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • கழிவறைக்குள் வைத்து பூட்டுவேன் என பள்ளிக் குழந்தைகளை மிரட்டிய நபர்.
    • சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவை அடுத்து நடவடிக்கை.

     பல்லியா:

    உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை கழிவறையை சுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டது தொடர்பான வீடியோ ஒன்று வெளியானது.

    அந்த வீடியோவில் பள்ளி குழந்தைகள் பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்வதும், ஒரு நபர் அவர்களை திட்டுவதும் இடம் பெற்றுள்ளது. சொன்னபடி செய்யா விட்டால் கழிவறைக்குள் வைத்து பூட்டி விடுவேன் என்றும் அந்த நபர் மிரட்டுவது அதில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, அந்த பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    இது குறித்து தெரிவித்துள்ள மாவட்ட கல்வி அதிகாரி மணிராம் சிங், சோஹான் பிளாக்கில் உள்ள ஆரம்பப் பள்ளியில் இந்த வீடியோ பதிவு நடந்துள்ளது என்றும், இது தொடர்பாக அந்த பகுதி கல்வி அதிகாரி நடத்திய விசாரணையின் அடிப்படையில் பள்ளி முதல்வர் மிருத்யுஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்றும் கூறினார். தலைமையாசிரியர் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

    • 19 சதவீதம் கூலி உயர்வு பெற்று விசைத்தறி தொழிலை நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.
    • 15 நாட்கள் கூட தொழிலை நடத்த முடியாத நிலையில் உள்ளது.

    மங்கலம் :

    அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கோவை, திருப்பூர் ஆகிய இரு மாவட்டங்களில் விசைத்தறி தொழிலை நம்பி சுமார் 2 லட்சம் குடும்பங்கள் நேரடியாகவும் ,மறைமுகமாகவும் இருக்கின்றன. கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் கூலி உயர்வு பெறாமல் சென்ற மார்ச் மாதம் தான் தமிழக அரசு முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் 19 சதவீதம் கூலி உயர்வு பெற்று விசைத்தறி தொழிலை நடத்திக் கொண்டு இருக்கின்றனர். மேலும் வரலாறு காணாத பஞ்சுவிலை ஏற்றத்தால் மாதம் 15 நாட்கள் கூட தொழிலை நடத்த முடியாத நிலையில் உள்ளனர்.ஏற்கனவே கடும் நெருக்கடியில் உள்ள இந்த தொழிலுக்கு மின்கட்டண உயர்வு பேரிடியாக அமைந்துள்ளது.

    விவசாயத்திற்கு அடுத்த படியாக உள்ள ஜவுளித்தொழில் ஏற்கனவே கடும் நெருக்கடியில் இயங்கிகொண்டு உள்ளது.குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களும் இரவு பகல் பாராமல் உழைத்தும் பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். விசைத்தறி தொழில் கஷ்டங்களை கருத்தில் கொண்டு ஏற்கனவே தமிழக அரசு விசைத்தறிக்கு தனியாக சாதா விசைத்தறி என டேரிப் பிரித்து மானியமாக 750 யூனிட் மின்சாரம் வழங்கி வருகிறது. இந்த நிலையில் விசைத்தறிக்கு சுமார் 30சதவீத மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இவ்வளவு வருடம் செய்து வந்த தொழிலை விட்டு கூலி வேலைக்கு செல்லும் நிலை ஏற்படும் . எனவே அழிந்து வரும் இத்தொழிலையும் நேரடியாகவும் ,மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறும் சுமார் 10 லட்சம் நபர்களின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் . இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    • வளர்ந்த நாடுகளில் ஏழைகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.
    • மக்கள் நலனுக்கு மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்கிறது.

    ஜெய்பூர்

    பல்வேறு மாநில அரசுகள் செயல்படுத்தும் இலவச திட்டங்களை பிரதமர் மோடி அண்மையில் விமர்சனம் செய்திருந்தார். இது நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது என்று அவர் கூறியிருந்தார்.

    இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவால் ஆகியோர் பிரதமர் மோடியின் கருத்துக்கு பதில் அளித்திருந்தனர். இதைத் தொடர்ந்து மக்களுக்கான நலத்திட்டத்தை இலவச திட்டம் என்று கூற முடியாது என ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டும் குறிப்பிட்டுள்ளார்.

    சுதந்திர தினத்தையொட்டி சவாய் மான் சிங் மைதானத்தில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் பேசிய அவர், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவது மாநில அரசின் பொறுப்பு என்றார். வளர்ந்த நாடுகளில் ஏழைகள் மற்றும் முதியோர்களுக்கு வாரம்தோறும் நிதி உதவி வழங்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    மக்கள் நலனுக்கு மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்கிறது என்றும், ராஜஸ்தானில், ஒரு கோடி பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது, இதுபோன்ற திட்டங்களை இலவசம் என்று கூற முடியாது என அவர் விளக்கம் அளித்தார்.

    மதத்தைப் பற்றி பேசுபவர்கள், சமத்துவமின்மை மற்றும் தீண்டாமையை எப்படி அகற்றுவது என்பதில் கவனம் செலுத்துவார்கள் என்று நம்புவதாகவும், மதத்தின் பெயரால் தேசத்தை கட்டமைக்க நினைப்பவர்களுக்கு பாகிஸ்தான் ஒரு உதாரணம் என்றும் என்றும் கெலாட் குறிப்பிட்டார்.

    • 10 முதல் 20 தறிகள் வரை வைத்து நெசவு தொழில் செய்து வருகிறோம்.
    • 750 யூனிட் இலவசம் மின்சாரம் பெற்று வருகிறோம்.

    பல்லடம் :

    மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி முதல்வருக்கு விசைத்தறியாளர்கள் பதிவுத் தபால் அனுப்பும் நிகழ்வை தொடங்கினர்.

    இதுகுறித்து திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், திருப்பூர், கோவை மாவட்டங்களில், 10 முதல் 20 தறிகள் வரை வைத்து நெசவு தொழில் செய்து வருகிறோம். பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., பஞ்சு நூல் விலை உயர்வு, கூலி உயர்வு பிரச்னை என அடுத்தடுத்த பிரச்னைகளால் எண்ணற்ற பாதிப்புகளை சந்தித்தோம்.கூலி அடிப்படையில் 24 மணி நேரமும் உற்பத்தி நடந்து வரும் இத்தொழிலில் மாதம், 25 - 30 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். இதில் 10 ஆயிரம் ரூபாய் வரை மின் கட்டணத்துக்கேசென்றால் எவ்வாறு குடும்பம் நடத்த முடியும்? நலிந்து வரும் விசைத்தறி தொழிலுக்காக, 750 யூனிட் இலவசம் மின்சாரம் பெற்று வருகிறோம்.

    கடந்த 2012ல் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட போது கோரிக்கையை ஏற்று ரத்து செய்யப்பட்டது. தற்போது 36 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தால் ஒட்டுமொத்த விசைத்தறி தொழிலும் அழிந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொழிலின் நிலையை கருத்தில் கொண்டு, விசைத்தறிக்கான மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.இந்த கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர் மற்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு 2 ஆயிரம் தபால்கள் அனுப்பும் நிகழ்வை துவங்கியுள்ளோம் .இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×